பட்டபோதுஎழு போதுஅறி யாள்;விரை
மட்டுஅலர் தண்துழாய் என்னும்; சுடர்
வட்டவாய்நுதி நேமி யீர்! நுமது
இட்டம் என்கொல்இவ் ஏழைக்கே?
பொ – ரை : ‘பேரொளியினையும் வட்டமான வாயினையும் கூர்மையினையுமுடைய சக்கரத்தைத் தரித்தவரே! சூரியன் மறைகின்ற காலத்தையும் தோன்றுகிற காலத்தையும் அறிகின்றிலள்; வாசனையோடு மலர்கின்ற தேனையுடைய குளிர்ந்த திருத்துழாய் என்று சொல்லுகிறாள்; அரியாமையினையுடைய இப்பெண்ணின் திறத்து நுமது எண்ணம் தான் யாதோ?’ என்றவாறு.
வி – கு : அலர் துழாய் – வினைத்தொகை. நேமீயிர் – விளிப்பெயர். ஏழை – அறிவில்லாதவள். இது, உயர்திணை இருபாற்கும் பொதுப் பெயர். ‘களி மடி மானி காமி கள்வன், பிணியன் ஏழை’ என்றார் நன்னூலார்
ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘இவள் ‘பட்டன’ என்கைக்கு என்பட்டாள்?’ என்ன, ‘படுவன எல்லாம் பட்டாள்; இனி, என் படல் வேண்டும்?’ என்கிறாள்.
பட்டபோது எழுபோது அறியாள் – 2உதித்ததும் மறைந்ததும் அறிகின்றிலள். ‘இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ?’ என்னில், விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் -‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று, திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். ஆக, 3‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே, நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று 4அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான ‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள். அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரவாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம் 5இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் ‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று. ஆக, 6‘அடைந்தவர் பகைவர்
என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி. 1‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர்தம்முடைய வார்த்தையும்? கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் 2இவர்கள். நுமது இட்டம் என் கொல் – 3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ? நித்தியசூரிகளைப் போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ? தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ? இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது என்? இவ்வேழைக்கே – சிறிதும் மனத்திட்பம் இல்லாதவளான 4இவள் விஷயத்தில் நீர் நினைத்திருக்கிறது என்?
Leave a Reply