திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்புஅற்று
ஒளிகொண்ட 2சோதியமாய் உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம் சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே.

    பொ – ரை : நினைத்த பொருள் கிடைக்கப் பெற்றமையால் உளதாகும் களிப்பும், அது கிடைக்கப்பெறாமையால் உளதாகும் துன்பமும் நீங்கி, இவை இரண்டற்கும் அடியான பிறப்பும், பிறப்புள்ள இடத்தே சென்று புகுகின்ற நோயும், வேறு ஒன்றால் நீக்க ஒண்ணாத முதுமையும்.இறப்பும் நீங்கி, பேரொளி மயமான திருமேனியினை உடையோமாய், மழையினைப் பெய்கிற ஆகாயத்தையும், பூமியையும், ஒளியுடன் கூடிய ஆழியினையும் சங்கினையும் ஏந்திக் காத்தருளுகின்ற ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் கொண்ட இறைவனைச் சார்ந்த நித்திய சூரிகளுடைய கூட்டத்தை ஒரு நீராம்படி உடன்பட்டுக் கூடுவது என்றோ?

  வி – கு : ‘வாசனையும் இந்நிலத்தையும், ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற பிரான் அடியார்கள் ருழாங்களை, அற்று அற்றுச் சோதியமாகி உடன் கூடுவது என்றுகொலோ’ எனக் கூட்டுக. ‘களிப்புக் கவர்ச்சிகளும் பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய்’ நிற்றலின், வீட்டினைப் ‘பேரா இயற்கை’ என்னும் விசேடவுரை இத்திருருப்பாசுரத்தைக் கொண்டு எழுந்ததாகும் (திருக்குறள். 370). சோதியம் – தனித்தன்மைப் பன்மை. ‘கொல், ஓ’ என்பன அசை நிலைகள்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘களித்தேனே’ என்றவர், மீண்டும், ‘இவ்வுலகமக்களோடு பொருந்தியிருத்தல் நீங்கி, இவ்வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய சூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்.

  களிப்பும் – சிற்றின்ப நுகர்ச்சியாலாய களிப்பும், கவர்வும் – ஆசைப்பட்டு அவை பெறாத போது வரும் துன்பமும், அற்று- நீங்கி, பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று –1இவை இரண்டற்கும் அடியான பிறப்பும், அது புக்க இடத்தே புகக் கூடிய நோயும், பின்னர் வருகின்ற முதுமையும், ‘இவற்றோடேயாகிலும் இருந்தால் ஆகாதோ?’ என்றுநினைத்திருக்கும் போதே வருகின்ற இறப்பும் ஆகிய இவ்வனைத்தும் நீங்கி. ஒளிக்கொண்ட சோதியமாய் – இராசசம் தாமசம் கலந்த இச்சரீரத்தைப் போன்றது அன்றியே, சுத்த சத்துவ மயமாய் எல்லையற்ற ஒளியுருவமான சரீரத்தையுடையோமாய். உடன் கூடுவது என்றுகொலோ –2‘நான், எனக்கது’-என்று அகல வேண்டாத இவ்வுடம்பை உடையார் திரளிலே போய்ப் புக்கு நெருக்குப் பெறுவது என்றோ!.   துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் – மழையினைப் பெய்கின்ற ஆகாயம், அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் 1கடற்கரை வெளியில் நோக்கியது போன்று, திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தையுடையவன். பரமபதத்தில் ஆபரணங்களாகக் காட்சி அளிக்கிற இவை இங்கு ஆயுதங்களாகக் காட்சி அளிப்பன ஆதலின், அளித்தற்குச் சுடர் ஆழியினையும் சங்கையும் கருவிகளாக ஒதினார்.

   அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ – ‘இவ்வாறு காக்கின்ற அக்காத்தல தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ்விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய், இறைவனுடைய நற்குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய், தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக்கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய சூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். 2‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப்புகப்பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச்செய்கின்றது.      

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தையருளிச்செய்யவேண்டும்,’
என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று
அருளினார். அவர்களும் ‘மணற்குன்றையும் காவற்காட்டையும் நினைத்திருக்கவோ?’
என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் புன்முறுவல் செய்து அருளிச்செய்தபடி:
‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படைவீடு செய்திருக்கும் போது ஸ்ரீவானரவீரர்கள்
இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே
நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி, இவர்கள்
கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித் திருக்கையிலே பிடித்த
சார்ங்கமும் திருச்சரமுமாய் இராமுற்றும் நோக்கின சக்கரவர்த்தி திருமகனுடைய
திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார். ஆகையால், ஸ்வ ரக்ஷண
சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக்கொண்டு ரஷிக்கும் என்றபடி’ என்ற
நம்பிள்ளையில் இத்திருவாக்கு ஈண்டு ஒப்பு நோக்குக.

இந்த திருவாய் மொழிக்கி -நிதான பாசுரம் இது 
மீண்டும் சம்சாரிகள் உடன் இன்றி அடியார்கள் குழாமுடன் கூடுவது என்று கொலோ –
களிப்பு சந்தொஷம்கவரவு துக்கம் 
பிறப்பு பிணி மூப்பு இறப்பு போய் 
ஒளிக் கொண்ட சோதியமாய் -அடியார் உடன் கூடுவது 
யார் அடியார் -எம்பெருமான் 
துளிக்கிற்ற 
வான் -சங்கு சக்கரம் கொண்டு காக்கும் –
சம்சாரம் -இதர விஷய அனுபவம்பெற்று இன்பம்கிடையாத போது துக்கம் 
பிறவி உடன் பிறந்தே கொள்ளும் வியாதி -சரி மூப்பு –
இவை அனைத்தும் தொழிந்து 
ரஜஸ் தமஸ் கலந்த இந்த சரீரம் 
அப்ராக்ருத சரீரம் 
யான் எனக்கு என்று இருக்கும் இங்கு போல் இன்றி 
அத் திரளிலே -வைஷ்ணவ சகவாசம் அஹங்காரம் இன்றி -அங்கெ –
துளிக்கின்ற வான் -வர்ஷிக்கும் ச்வாபவம் உடைய ஆகாசம் 
இந்நிலம் பூமி அனைத்தும் காக்கும் 
கடற்கரை வெளியிலே நோக்கினது போல் –
வானரங்களை -பெருமாள் –
இரவில் கண்  அவை அசர-தான் விழித்து கையும் வில்லுமாக -சுற்றி –
சுக்ரீவேச -கூடி  காத்தான் -அர்த்தம் இல்லை -சுக்ரீவன் கூடிய படையை ரஷித்தான்-பெருமாள் 
சுடர் ஆழி சங்கு ஏந்தி -அடியவர்களை ரஷிக்க 
சதா பஞ்சாயுதம்  விப்ரத் -விளம்பம் பட்டர் -சித்தமாக -பிரயோக சக்கரம் வேற நம் பெருமாள் 
ஆபரணமாய் கிடக்கும் அங்கெ இங்கே திவ்ய ஆயுதமாய் 
அடியார் -ரஷனத்தில் தோற்று இருப்பாரே 
அவனை போல் பிராப்யர் 
பகவத் குணம் தேசிகர் 
போதயந்த பரஸ்பரம் -துஷ்யந்தி ரமந்தி -கேட்டும் சொல்லியும் 
ஸ்ரோதா பக்தா -இரண்டு ஆனாந்தம் 
உடன் கூடுவது ==கலியர் கல அரிசி சோறு -தேடுவது போல் -தேடுகிறார் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading