திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

குறிக்கொள் ஞானங்க ளால்எனை ஊழிசெய் தவமும்
கிறிக்கொண்டு இப்பிறப் பேசில நாளில்எய் தினன்யான்
உறிக்கொண்ட வெண்ணெய்பால் ஒளித்துண்ணும் அம்மானபின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர்கடிந்தே.

    பொ – ரை : உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயினையும் பாலினையும் மறைந்திருந்து புசித்த இறைவனுக்குப் பின்னே அவன் சென்ற வழியே சென்று திரிகின்ற நெஞ்சை உடையேனாய்ப் பிறவயினது துன்பத்தைக் கடிந்தேன்; ஆதலால், இயமம் நியமம் முதலிய எண்வகை உறுப்புகளை மேற்கொண்டு செய்வதனால் உளவாய ஞானங்களால் பல காலங்களாக ஈட்டப்படுவதான பரபத்தியை இறைவனுடைய திருவருளாகிய நல்ல உபாயத்தைக் கொண்டு இப் பிறப்பிலேயே சில நாள்களில் யான் அடைந்தேன்.

    வி – கு : ‘நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்தேன்; ஆதலால், தவத்தின் பலத்தை இப்பிறப்பே சில நாளில் எய்தினன்’ என்று கூட்டுக. கடிந்து – முற்று. “கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம் வளங் கரப்பினும்’ (புறம். 203) என்புழிப் போன்று ஈண்டு, கடிந்து என்பதும் ‘கடிந்தேன்’ என்னும் பொருட்டாய் நின்றது, இனி, இதனை எச்சமாக்கி, ‘கடிந்து எய்தினன்’ என முடித்தலுமாம். ஈண்டுத் தவம் என்றது, தவத்தாற் பெறும் பேற்றினை; தவத்தாலாய பயனைத் தவம் என்றார். ‘குறி’ என்றது, இயமம் நியமம் முதலிய எட்டினை; குறித்துக்கொள்ளப்படுதலின் அவற்றைக் ‘குறி’ என்றார். குறித்தல் – கருதுதல். ‘எனை’ என்பது, ‘எத்தனை’ என்ற சொல்லின் மரூஉ. கிறி – உபாயம்.

ஈடு : எட்டாம் பாட்டு. 1‘என்னைக் குறிக்கொள்ளே’ என்றவாறே, அவன் குளிரக் கடா க்ஷித்தான்; அதனால் எல்லாத் துன்பங்களும் போய் அவனை அனுபவிக்கிறார்.

 

    குறிக்கொள் ஞானங்களால் –2இயமம் நியமம் முதலியவற்றிலே கருத்து ஊன்றியவர்களாய்க் கொண்டு சம்பாதிக்கவேண்டும் ஞான விசேஷங்களாலே. அவையாவன: 3கேட்டல் மனனம் உபாசனம்முதலிய நிலை விசேடங்கள். எனை ஊழி செய்தவமும் – பல கல்பங்கள் கூடிக் கேட்டலாய் மனனமாய்ப் பாவனையாய் இங்ஙனம் வரக்கூடிய தான தவத்தின் பயனை. கிறிக்கொண்டு -ஒரு முயற்சியும் இன்றியே இருப்பது ஒரு விரகைப் பெற்று. அதாவது, ‘அவன் தன்னையே கொண்டு’ என்றபடி. ‘ஆயின், ‘கிறி’ என்றால், இறைவனைக் காட்டுமோ?’ எனின்,4‘பெருங்கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே’ என்ற இடத்தில் இறைவனைக் ‘கிறியான்’ என்று ஓதியிருத்தல் காண்க. ‘இதுதான் எத்தனை பிறவிகள் கூடி?’ என்னில், இப்பிறப்பே – இந்தப் பிறிவியிலேயே. ‘இப்பிறவியின் வாழ்நாள்முழுதும் கூடியோ?’ என்னில், சில நாளில் – சில நாள்களிலே ‘அழகிது! நீர் அப்பேற்றினைப் பெறப் போகின்றவராய்

நிற்கின்றீரோ?’ என்ன, எய்தினன் – அடைந்தேன். யான் – இப் பேற்றுக்கு ஒரு முயற்சியும் செய்யாத நான்.

 

    உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் – உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் ‘தெய்வம் கொண்டதோ!’ என்னும்படி மறைந்து அமுது செய்த அச்செயலாலே நாட்டை1 எழுதிக்கொண்டவனுடைய. பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி – 3பின்னே சொன்னவழி என்றபடி.

 

    பிறவித் துயர் கடிந்து – பலத்தைக் கூறுகின்ற சரமச் சுலோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’ என்று தடையின் நீக்கமும் கூறப்பட்டிருத்தலின், இப்பாசுரத்திலும் பலத்தைக் கூறிப் ‘பிறவித்துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தையும் அருளிச்செய்கிறார். இனி, ‘உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்து’ என்றதனால், பாரதப் போரில் அருச்சுனனுக்குச் சோக நிலையினை உண்டாக்கி, பின்னர் அன்றோ உபாயத்தை உபதேசித்தது? இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு, 4அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப்பொருளும் தோன்றும். 

 

 இமயம் நியமம் முதலியவை எண்வகை யோக உறுப்புகள் எனப்படும். அவை, 
‘ஆதனம், இயமம், நியமம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி’
என்பன. இவற்றுள், இயமம் – கொல்லாமை, வாய்மை முதலியன. நியமம் – தத்துவ நூல்
ஆராய்ச்சி, தெய்வ வழிபாடு முதலியன. ஆதனம் – இருப்பு அது ஸ்வஸ்திகம் முதலாக
எண்வகைப்படும். பிராணாயாமம் – பிராணவாயுவை ரேசக பூரக கும்பகஞ்செய்தல்; இது
‘உயிர் நிலை, வளி நிலை’ எனப்படும். பிரத்தியாகாரம் – மன ஒருக்கம்; இது ‘தொகை
நிலை’ எனவும் படும். அது உபாதியை நீக்கி உள் நோக்கல். தாரணை – கண்டம்,
இதயம், நெற்றி, கபாலம், நாபி இவற்றுள் ஒன்றில் எப்பொழுதும் சிந்தையை வைத்தல்;
இது, ‘பொறைநிலை’ எனவும்படும். சமாதி – இந்திரியம் முதலிய தத்துவங்களின்
சேஷ்டைகளுக்கு ஏதுவாகிய உடம்பினுள் நின்று அவற்றோடு கூடினும் அவற்றில்
பற்றின்றி இருக்கும் ஆத்துமாவாகிய தன்னைத்தான் காண்டல்.

குளிர கடாஷித்தான் இதை கேட்டதும் -ப்ரீதராய் பேசுகிறார் 

விஸ்லேஷ சங்கை போலே நான் உபகரித்தேன் –
நீர் என்னயுன விச்லேஷத்துக்கு பிரசங்கமுண்டா 
அல்ப காலத்தில் இந்த ஜன்மத்தில் அயத்னம் இன்றி மிக்க புருஷார்த்தம் 
நிர்கேதுக கிருபை 
குறிக்கோள் ஞானம் -கிரிக் கொண்டு சில நாழி எய்தினேன் 
இப்பிறப்பே இன்றே இப்பழுதே 
ஆச்சார்யா ஹிருதயம் இந்த பாசுரம் காட்டுவர் 
உறிக் கொண்ட வென்னே பால் ஒளித்து உண்ணும் அம்மான் 
அவன் பின் போகும் நெஞ்சு கொண்டு பிறவி துயர் போக்கி கொண்டேன் 
குறிக் கொள் யம நியமம் -அஷ்ட -பக்தி யோக அங்கம் -இவை -த்யானம் சமாதி இடைவிடாமல் –
காமக்ரோதம் விட முடியாமல் -அவகிதராய் கவனம் கொண்டு சம்பாதிக்கும் பகவான் 
வேதனம் அறிவது த்யானம் நினைக்க உபாசனம் பிரீத்தி பூர்வகமாக 
ச்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாசவ்ய 
எனை ஊழி -அநேக கல்பம் காலம் கூடி சரவணம் -தப பலனை 
கிறி கொண்டு யத்னம் ஓன்று இன்றி கிறி அவனைக் காட்டுமோ 
பெரும் கிறியானை அல்லால் திரு விருத்தம் 
அல்பகாலத்தில் -எய்தினன் -அடைந்து விட்டேன் இறந்த  காலம் 
அடைய போக விஷயம் தபங்கள் மூலம் -அடைந்து விட்டேன் அவனை கொண்டே –
மாம் பழ கதை -கை மேல் பலன் -பிள்ளையார் பெற்றார் திருஷ்டாந்தம் –
கிரிக் கொண்டு இப்பிறப்பே சில நாளிலே பிராபித்தேன் 
யான் -இப் பேற்றுக்கு யத்னம் இன்றி 
தவம் எய்தினம் எதை -கிறி கொண்டு உபாயம் -உபேயம் உபாயம் 
அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சன் –
உறி கொண்ட வெண்ணெய் பால் -கள்ளகயிறு உருவி வைத்த வெண்ணெய்- 
சம்சார முடிச்சு அறுக்க அறிந்தவன் –
வெண்ணெய் பால் -தெய்வம் கொண்டதோ என்னும்படி மறைத்து களவு கொண்ட அச் செயல் 
முடிச்சு அப்படியே இருக்கு —
உளம் கொண்ட விளம் கனி போல் உள் மெலிய புகுந்து நலம் கொண்ட நாரணர் –ஆண்டாள் பாசுரம் 
-யானை ஓட்டை உடைக்காமல் ரசம் உண்ணுமா போல் உண்டானே 
அச் செயலாலே உலகத்தை எழுதிக் கொண்டவன் 
பின்னே நெறிப்பட நெஞ்சு –
ஐ ஸ்வர்யா வாசனை இன்றி -அவன் ஒழித்தாலும் இவர் அறிவாரே அதனால் பின்னேபோக 
ஆத்மா திருடி -நான் தான் பெரிய கள்வன்  
வெண்ணெய் களவு காண புக்க இடத்தில் சரம ஸ்லோகம் கேட்டாராம் 
அர்ஜுனன் தேர் தட்டில் கேட்டது போல் 
ரசொக்தியாக தாதி பாண்டன் போல் பிறவி துயர் அப்படி போக்கிக் கொண்டான் 
அம்மான் பின் -அடி மேல் அடி வைத்து -பெரிய கள்ளன் இந்த சின்ன கள்ள கண்ணன் பின் போய் –

 குளிர கடாஷித்தான் இதை கேட்டதும் -ப்ரீதராய் பேசுகிறார் 

விஸ்லேஷ சங்கை போலே நான் உபகரித்தேன் –
நீர் என்னயுன விச்லேஷத்துக்கு பிரசங்கமுண்டா 
அல்ப காலத்தில் இந்த ஜன்மத்தில் அயத்னம் இன்றி மிக்க புருஷார்த்தம் 
நிர்கேதுக கிருபை 
குறிக்கோள் ஞானம் -கிரிக் கொண்டு சில நாழி எய்தினேன் 
இப்பிறப்பே இன்றே இப்பழுதே 
ஆச்சார்யா ஹிருதயம் இந்த பாசுரம் காட்டுவர் 
உறிக் கொண்ட வென்னே பால் ஒளித்து உண்ணும் அம்மான் 
அவன் பின் போகும் நெஞ்சு கொண்டு பிறவி துயர் போக்கி கொண்டேன் 
குறிக் கொள் யம நியமம் -அஷ்ட -பக்தி யோக அங்கம் -இவை -த்யானம் சமாதி இடைவிடாமல் –
காமக்ரோதம் விட முடியாமல் -அவகிதராய் கவனம் கொண்டு சம்பாதிக்கும் பகவான் 
வேதனம் அறிவது த்யானம் நினைக்க உபாசனம் பிரீத்தி பூர்வகமாக 
ச்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாசவ்ய 
எனை ஊழி -அநேக கல்பம் காலம் கூடி சரவணம் -தப பலனை 
கிறி கொண்டு யத்னம் ஓன்று இன்றி கிறி அவனைக் காட்டுமோ 
பெரும் கிறியானை அல்லால் திரு விருத்தம் 
அல்பகாலத்தில் -எய்தினன் -அடைந்து விட்டேன் இறந்த  காலம் 
அடைய போக விஷயம் தபங்கள் மூலம் -அடைந்து விட்டேன் அவனை கொண்டே –
மாம் பழ கதை -கை மேல் பலன் -பிள்ளையார் பெற்றார் திருஷ்டாந்தம் –
கிரிக் கொண்டு இப்பிறப்பே சில நாளிலே பிராபித்தேன் 
யான் -இப் பேற்றுக்கு யத்னம் இன்றி 
தவம் எய்தினம் எதை -கிறி கொண்டு உபாயம் -உபேயம் உபாயம் 
அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சன் –
உறி கொண்ட வெண்ணெய் பால் -கள்ளகயிறு உருவி வைத்த வெண்ணெய்- 
சம்சார முடிச்சு அறுக்க அறிந்தவன் –
வெண்ணெய் பால் -தெய்வம் கொண்டதோ என்னும்படி மறைத்து களவு கொண்ட அச் செயல் 
முடிச்சு அப்படியே இருக்கு —
உளம் கொண்ட விளம் கனி போல் உள் மெலிய புகுந்து நலம் கொண்ட நாரணர் –ஆண்டாள் பாசுரம் 
-யானை ஓட்டை உடைக்காமல் ரசம் உண்ணுமா போல் உண்டானே 
அச் செயலாலே உலகத்தை எழுதிக் கொண்டவன் 
பின்னே நெறிப்பட நெஞ்சு –
ஐ ஸ்வர்யா வாசனை இன்றி -அவன் ஒழித்தாலும் இவர் அறிவாரே அதனால் பின்னேபோக 
ஆத்மா திருடி -நான் தான் பெரிய கள்வன்  
வெண்ணெய் களவு காண புக்க இடத்தில் சரம ஸ்லோகம் கேட்டாராம் 
அர்ஜுனன் தேர் தட்டில் கேட்டது போல் 
ரசொக்தியாக தாதி பாண்டன் போல் பிறவி துயர் அப்படி போக்கிக் கொண்டான் 
அம்மான் பின் -அடி மேல் அடி வைத்து -பெரிய கள்ளன் இந்த சின்ன கள்ள கண்ணன் பின் போய் –

 

அர்ஜுனனுக்கு  சொல்ல -கண்ணன் சொல்லி மொஹித்து நிற்கிறார் 
அந்த ரகஸ்யத்தை பின் சென்ற நெஞ்சன் 
அம்மான் உடைய பின் நெறி -பிரபத்தி பின்னே சொல்லிய நெறி பிரபத்தி -கொண்ட நெஞ்சினாய் பிறவித் துயர் 
பலத்தை சொல்லி விரோதி கழிந்ததும் 
பாரத சமரத்தில் அர்ஜுனனுக்கு ஒரு நிலை ஏற்படுத்தி பின்னே நெறி உபதேசித்தான் 
இவர் வெண்ணெய் களவு காண புக்கு -அடி ஒற்றி கொண்டு 
அவன் புகுந்த கிரகத்திலே படகை திருத்து வைத்து கையும் களவு –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி –
இப் பிறப்பில் சில நாளில் நான் எய்தினேன் 
ரசமான பாசுரம் 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading