திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

முன்னல் யாழ்பயில் நூல்நரம் பின்முதிர் கவையே!
பன்ன லார்பயி லும்பர னே!பவித் திரனே!
கன்ன லே!அமு தே!கார் முகிலே!என் கண்ணா!
நின்ன லால்இலேன் காண்;என்னை நீகுறிக் கொள்ளே.

    பொ – ரை : பழையதாய்ச் சிறந்ததாய் யாழ் விஷயமாகக் கற்கப் படுவதாய் உள்ள யாழ் நூல்களிற் பேசப்படுகின்ற இலக்கணத்தையுடைய நரம்பிலே பிரிந்த முதிர்ந்த சுவை போன்று இனியன் ஆனவனே! சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நித்தியசூரிகள் அனுபவித்தாலும் முடிவு பெறாத இன்பமயமானவனே! பரிசுத்தத்தையுடையவனே! கரும்பின் ரசம் போன்றவனே! அமுதம் போன்றவனே! கார்முகில் போன்றவனே! என் கண்ணா! உன்னை அல்லாமல் வேறு ஒரு கதியினை யுடையேன் அல்லேன்; ஆதலால், என்னை நீ நினைத்தல் வேண்டும்.

    வி – கு : பன்னலார் – ஒரு சொல். ‘பன் நல்லார்’ எனப் பிரித்தலுமாம். பவித்திரம் – தூய்மை; அதனையுடையவன் பவித்திரன், கன்னல் – கரும்பு, அஃது ஆகுபெயராய் அதன் சாற்றின் கட்டிக்கு ஆயிற்று.

    ஈடு : ஏழாம் பாட்டு. இப்படி, 1தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்; இவ்விஷயத்தினுடைய இனிமையையும் அநு சந்தித்தார்; அநுசந்தித்து, ‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று ஐயங்கொண்டு, ‘தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்; என்னைக் கைவிடாது ஒழியவேண்டும்,’ என்கின்றார்.

    முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவையே – சாஸ்திரத்தினுடைய பழமையதாய், அதுதான் சிறந்ததாய், யாழ் விஷயமாகக்கற்கப்படுவதாய் உள்ள நூல் உண்டு – சாஸ்திரம்; அந்நூலிற்கூறிய முறைப்படியே நரம்பிலே தடவப்பட்டு, அதிலே பிறந்த பண்பட்ட ரசத்தினைப் போன்ற இனிமையினை உடையவனே! மிடற்றினின்றும் பிறக்கும் இசையானது காலத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு விகாரங்களை அடையுமாதலின், மிடற்று ஒசையினைக் கூறாது, ‘நரம்பின் முதிர் சுவையே’ என்கிறார். இனி, ‘முன்னல்’ என்பதனை ஒரு மொழியாகக் கொண்டு, அதற்கு ‘நினைத்தல்’ என்று பொருள் கூறி ‘நினைத்தலாவது, யாழோசையின் இனிமையாலே ‘அது அது’ என்று வாய் புலற்றும்படி இருத்தல்’ என்று கூறலுமாம். இனி, ‘முன்னல்’ என்பதனை, முனல் என்ற சொல்லின் விகாரமாகவும், அந்த முனல் என்பதனை ‘முரல்’ என்ற சொல்லின் விகாரமாகவும் கொண்டு, முரல் என்பதற்கு ‘ஒலித்தல்’ என்று பொருள் கூறி, ஒலிக்கின்ற யாழ் என உரைப்பாரும் உளர்.

    இவ்வாறு இனிமை குறைவற்று இருந்தால் அவ்வினிமையினை நுகர்கின்றவர்கள் வேண்டும் அன்றே? அவர்களை அருளிச்செய்கிறார் மேல்: பன்னலார் பயிலும் பரனே- 1‘தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்’ என்கிறபடியே, தாம பலராய் இறைவனுடைய நற்குணங்கட்குத் தேசிகராய் இருக்கின்ற நித்தியசூரிகளால் அனுபவிக்கப்படுகின்றவனே! அயர்வு அறும் அமரர்கள் விடாது என்றும் நுகர்ந்தாலும் அதுகாறும் நுகர்ந்த பகுதி அளவுபட்டு, மேல் நுகரவேண்டிய பகுதிகளே மிக்கு இருப்பவன் ஆதலின், ‘பரனே’ என்கிறார். பவித்திரனே – பிறப்பிலே உழன்று திரிக்கின்றவர்களும், நித்திய சூரிகளைப் போன்று உன்னை அனுபவித்திற்குத் தக்கவர் ஆகும்படி அவர்கட்கும் சுத்தியைப் பிறப்பிக்குமவனே! இனி, ‘பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே’ என்பதனை ஒரே தொடராகக் கொண்டு, பன்னலார், -முமுக்ஷூக்கள்; ‘அவர்கள் எப்பொழுதும் அனுபவித்தாலும் தொலையாத இனிமையினையுடையையாய், அவர்கட்கும் உன்னை அனுபவித்தற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் சுத்தி யோகத்தையுடையவனே!’ என்று உரைத்தலும் ஆம்.

கார்முகிலே – வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார். என் கண்ணா – தன்னைக் கொடுத்தபடி. நின் அலால் இலேன் காண் – உன்னை ஒழிய அரைக்கணம் பிழைக்க மாட்டேன். இனி, இதற்கு, ‘உன்னை ஒழிய வேறு ரக்ஷகரை உடையேன் அல்லேன்’ என்று பொருள் கூறலுமாம். என்னை நீ குறிக்கொள் – உன்னை ஒழிந்த அன்று அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை, இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்; திருவுள்ளம் பற்றல் வேண்டும்’ எனலுமாம்.    கன்னலே – எனக்கு எல்லை அற்ற இனியன் ஆனவனே! அமுதே –2சாவாமல் என்னை உய்வித்துக்கொண்டு போகின்றவனே!

கை விடில் முடிவேன் -உளன் அல்லன்  ஆவேன் -என்கிறார் உடனே –

முதல் முன்னமே அடைந்தது -நித்தியமாக அவன் உடனே இருப்பதை தெரிவித்து

பெற்ற பேறு பெரியது –போக்யத்வம் வேறே –இது தம்மிடம் தங்குமோ சங்கை பிறந்தது –
அகலகில்லேன் இறையும் -பிராட்டி சொல்வது போல் -விஷய வை லஷண்யம் படுத்தும் பாடு ஆயத்து –
நீர் விட்டு போக கூடாது -போனால் தரித்து இருக்க மாட்டோம் –
தொங்காது போலிருந்தது அதி சங்கை பண்ணி
கை விடில் உளேன் ஆவேன் -யாழ் பயில் நூல் யாழினிசை வேதத்து இயல் சாம வேதம் சாஸ்திரம்
நரம்பின் -சப்த சுவை போல் இருப்பவனே -கான ஸ்வரூபி
பன்னலார் நித்யர் பயிலும் பரனே
பவித்ரன்
கன்னல் கருப்பஞ்சாறு –
நின் அலால்  இலேன் கான் என்னை குறிக்கோள்
முன்னல் ஒற்றைப் போக்கி -முன்னல் முனால் ஆக்கி -முறல் -முறலுதல் இசைத்தல் வண்டு முறலுகிறது
உன்னல் நினைத்தால் இனிமையால் அது அது என்று வாய் புலத்தல்
முன் பழமை நல் அதுவும் நன்றாய் -உயர்ந்த சாஸ்திரம் நூல்
யாழ் விஷயமாக அப்யசிக்கும் –
வியாகரண சித்தாந்தம் சுரத்தோடு  சொல்வார்கள் -அர்த்தம் சுரத்தோடு மாறுமே –
இந்திர சத்ரு வார்த்தைதா -யாகம் -இந்த்ரனை ஹிம்சிக்க -அவனால் கொல்லப்படுபவன் -இரண்டு அர்த்தம் –
த்ர்ஷ்டாந்தம் காட்டுவார்கள் சுரத்தின் முக்கியம்
பண் பட்ட ரசம் போல் போக்கியம் –
மிடத்தை சொல்லாது ஒழிந்தது -மிடறு தொண்டை -கர்மா அனுகுணமாக  போது செய்யுமது உண்டே
யாழ் -இந்த வாசி இல்லையே -குறை கிடையாது
போக்யதை நிறைய இருக்க போக்தாக்கள் வேண்டுமே
பன்னலார் -தெளியார் பலர் கை தோலும் தேவனார்
தாங்கள் பலராய் –கல்யாண குணம் அனுபவிக்கும் தேசிகர் -வல்லவர் நித்ய முக்தர்
பயிலும் -மீண்டும் மீம்டும் -சதா அனுபவம் செய்யா நின்றாலும் பரண்
அனுபூவிக்கும் வஸ்து -தான் பெரியது -அனுபவித்தது கை அளவு அனுபவிக்காதது கடல் அளவு
அனுபாவி அம்சம் பெருத்து
பவித்ரன் நித்ய சம்சாரிகளுக்கும்நித்ய சூரி போல் ஆக்கும் -சுத்தமாக ஆக்கி -அனுபவிக்க யோக்யதை கொடுப்பவன் –
அந்ய பரத்தை போக்கி உன் பக்கலி பிரவணர் ஆக்கி
சூதனாய் -கள்வன் -சூது –தெரிந்து பச்யதோ ஹரத்வம் -களவு -தெரியாமல் கொண்டு போவது –
ஆத்மா அபகாரமேபெரிய களவு -இது தூர்த்த சகவாசம் -ஆக்கி –
மாதரர் கயல் கண் வலையில் விழுந்து –கோயிலுக்கு போக =-அவளுக்கு அங்கு வேலை
போதரே என்று சொல்லி புந்தியில்
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனார் -சௌந்தர்யம் காட்டி ஈர்த்தான் –
அந்ய பரத்தை போக்கி தன பக்கலில் கொள்ளும் பவித்ரன் –
முமுஷுக்களை -பன்னலார் -எப்போது அனுபவித்தாலும் -அனுபவ விரோதி போக்கும் சுத்தி
நித்ய முக்த பக்தர் அனைவரும்
கண்ணாலே அமுதே சாவாமல் ஜீவிப்பித்து கொண்டு தரிக்க காரணம் பிரியாமல்
கார் முகில் -தன்னையே கொடுக்கும்
என் கண்ணா -இதை தொட்டு கொண்ட -தன்னை கொடுத்த படி
இவ்வளவும் இவரது சங்கா ஹேது -காரணம் இந்த தன்மைகள்
உன்னை ஒழிய அரை சகானாம்ஜீவிக்க மாட்டேன்
உன்னை தவிர வேறு ரஷகர் இல்லை
நீ கை விட்டால் வேறு யார் -துயி ரஷாதி-ரஷைய்சக்கி அன்யதி  தேசிகன் – வேறு யார் –
என்னை திரு உள்ளம் பற்ற வேண்டும் -உன்னை விட்டு பிரிந்தால் அசித் போல் இருக்கும் என்னை
நீ தாரகமாக
என்னை நீ என்றுமாம் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading