திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண்துழாய்த் தாமம்கா முற்றாயே?

    பொ – ரை : கூர்மை பொருந்திய அலகினையுடைய அன்றிற் பறவையே! கொள்ளப்பட்ட மனத்தினையுடையையாகி, நீண்டு செல்லுகின்ற நள்ளிரவிலும் படுக்கையிற்சேராது வருந்துகிறாய்; ஆதிசேஷ சயனத்தையுடைய இறைவனது திருவடிகளிலே பொருந்தியிருக்கின்ற திருத்துழாய் மாலையினை, அடிமைப்பட்ட யான் விரும்பியது போன்று நீயும் விரும்பினாயோ?

    வி – கு : ‘அன்றில்’ என்பது, ஒரு பறவை விசேடம்; இது நெய்தல் நிலத்தில் வாழுமியல்பினது. ‘ஆய், சேராது, இரங்குதி, என முடிக்க. யாமம் – நள்ளிரவு; இது, ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகை முடிய உள்ள காலம். ‘பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்’ (சிந். 1595) என்புழிக் ‘கள்’ அசைநிலை ஆயினவாறு போன்று, ஈண்டு ‘யாமங்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை. இனி, இதனை, பன்மை விகுதியாகக் கொண்டு, இரவின் கூறுபாடாகிய மூன்று யாமங்களையும் கூறுகின்றாள் என்று கோடலுமாம். ‘காமம் உற்றாய்’ என்பது ‘காமுற்றாய்’ என வந்தது, விகாரம்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லுகின்ற அளவிலே, அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது வாயலகு நெகிழ்த்தவாறே கூப்பிட்டது; அதனுடைய துன்பத்தைக் காட்டுகின்ற ஒலியைக் கேட்டு, ‘பாவியேன் என்னைப்போல நீயும் அகப்பட்டாயாகாதே!’ என்கிறாள்.

    கோள்பட்ட சிந்தையையாய் – கவரப்பட்ட மனத்தினையுடையையாகி; ஆயின், ‘கவரப்பட்ட மனம்’ என்று அறிந்தபடி என்?’ என்னில், அதனுடைய2 அடியற்ற ஒலிதான் ‘நெஞ்சு இழந்தது’ என்று தோற்ற நின்றதுகாணும் இவளுக்கு. கூர் வாய அன்றிலே – தனியராய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல ஒலியையுடைய அன்றிலே!3 வாய் – வார்த்தை. அன்றி, ‘கூர்த்த வாய் அலகினையுடைய அன்றிலே!’ எனலுமாம். சேண்பட்ட யாமங்கள் – இரவாய் நீண்டு செல்லாது, இரவின் கூறாகிய ஒவ்வொரு யாமமும் நீண்டு செல்லுகின்றது என்பாள், ‘சேட்பட்ட யாமங்கள்’ என்கிறாள். சேராது இரங்குதி -‘நெடுகுகிற யாமங்களில் படுக்கையிற்சேரா தொழியினும் தரித்திருக்கலாம்; அங்ஙனமும் செய்யாது வருந்துகிறாய்’என்பாள்,‘இரங்குதி’ என்கிறாள்.

    ஆள்பட்ட எம்மேபோல் நீயும் – ‘நெஞ்சு பறியுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவுபடுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்1 தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறுப்பாட்டையுடையதாகப்2 போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள். இனி, 3‘இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’ என்றும், ‘இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்,’ என்றும் ஓதினாய் இல்லை; 4மயர்வற மதிநலம் அருள’ப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம். அரவணை யான் தாள்பட்ட தண்துழாய் தாமம் காமம் உற்றாயே – மேல் 5திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே? ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள். ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள் என்றபடி. சுடர்முடிமேல் துழாய் ஒழிய, ‘அவர்கள் இருவரும் கூடத்துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள். புழுகிலே தோய்த்து எடுத்தாற்போன்று, பரிமளத்திலே தெரியும்6 ‘கலம்பகன் நாறும்; ஆதலின, ‘தண்துழாய்’என்கிறாள்7 ‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? 1சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறாவிடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், ‘காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.

அருகே நின்ற பனையிலே அன்றில் க்ரவ்ஞ்ச மிதுனம் –

நெகிழ்ந்தாலும் கத்த ஆரம்பிக்கும் -வால்மீகி -ஆரம்பம் –
முன்றில் பெண்ணை மேல் -அன்றில் -திரு மங்கை
வாய் அலகு நெகிழ் ந்தவாறே   ஆர்த்த தொனி கேட்டு நீயும் வருந்து கிறாயே
சேட்பட யாமங்கள் ஜாமம் -வெகு நாளிகை சேராமல் இறங்க -பெடையோடு -எம்பெருமான் உடன் ஆழ்வார் நினைக்க
ஆள் பட்ட எம்மே போல்
அரவு அணையான் தாள் பட்ட திரு துழாய் மாலை ஆசைப்பட்டு கதற .
அபகரிதமான மனசு -அடி அற்ற தொனி தான் -நெஞ்சு அபகரிக்கப்பட்ட சப்தம்
கதறும் பொழுது அர்த்தம் இன்றி குய்யோ
கூர்வாய அன்றில் -கூர்மை வாய் -வார்த்தை சப்தம்
தனியராக இருப்பாரை இரு துண்டாக ஆக்கும் படி தொனி
சேர்ந்த பொழுது குரல் இனிக்கும்
அன்றில் குரல் பாதகம் பிரிந்த பொழுது –
கூர்த்த வாய் அழகை உடைய -வாய் அலகு நெகிழ் தவாரே
நாழிகை நீண்ட சேட்பட்ட
இரவு  நீண்டு போக-யாமமே யுகமாய் போக அதிகம் துக்கம்
சிதிலையாக இருந்து -படுக்கையில் சேராது ஒழிந்தாலும் தரிக்கலாமே
நீயும் என்னை போலே தாஸ்ய பரிமளத்தில்  -ஆள் பட்டேன் –
சேஷிக்கு கைங்கர்யம் திருவடியில் தானே
கேசவ நம்பியை கால் பிடிப்பான் பேறு –
ஆள் பட்ட எம்மே போல் -நீயும் நாட்டாரில் வ்யாவ்ருத்தமாய் -போந்து இருக்கிற –
பொந்து இருக்கிறாய் -நீ -அரும் பொருள்-

 

உன் அகத்தில் இருக்கிற நீயும் -பொந்து
பதிம் விச்வச்ய அறிந்தேன் -ஈடுபட்டேன்
மயர்வற மதி நலம் அருளப் படவில்லை
நான் அகப்பட்டேன் -நீயுமா –
யசாஸ்மி -அறிந்து -நீயும் கூட இப்படி ஆவதே
திரு மாலால் முன்பு
அரவு அணையான் -இருவரும் இருப்பது படுக்கையில் தானே –
அவனும் அவளுமே துகைத்த -திரு துழாய் –
சுடர் முடி துழாய் விட்டு விட்டு -தாள் பட்ட துழாயில் ஆசை கொண்டாயோ
தாள் பட்ட திருத் துழாய் நமக்கு அன்றி நல்கான்
பரிமளத்தில் தெரியுமே
கலம்பகன் நாறுமே –
புனுகிலே தோய்த்து எடுத்தால் போலே –
கதம்பம் கலம்பகன் வாசனை இதில் தெரியுமே –
இருவரும் சேர்ந்து துகைத்து எடுத்த -பொன் தாமரை அடிக்கே வாசனை உண்டே
தாள் இணை தண் அம் துழாய் -தாயார் வார்த்தை
தாமமம் ஒளியும் மாலையும்
காமுற்றாய் -கிடைத்தால் அல்லது தரிக்காமல் இருப்பது காமம்
பெறில் ஜீவித்தல் பெறாவிடில் முடிதல்
முந்திய நிலை சங்கம் –
கிடந்தது கதறுகிறாயே

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading