கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே!
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண்துழாய்த் தாமம்கா முற்றாயே?
பொ – ரை : கூர்மை பொருந்திய அலகினையுடைய அன்றிற் பறவையே! கொள்ளப்பட்ட மனத்தினையுடையையாகி, நீண்டு செல்லுகின்ற நள்ளிரவிலும் படுக்கையிற்சேராது வருந்துகிறாய்; ஆதிசேஷ சயனத்தையுடைய இறைவனது திருவடிகளிலே பொருந்தியிருக்கின்ற திருத்துழாய் மாலையினை, அடிமைப்பட்ட யான் விரும்பியது போன்று நீயும் விரும்பினாயோ?
வி – கு : ‘அன்றில்’ என்பது, ஒரு பறவை விசேடம்; இது நெய்தல் நிலத்தில் வாழுமியல்பினது. ‘ஆய், சேராது, இரங்குதி, என முடிக்க. யாமம் – நள்ளிரவு; இது, ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகை முடிய உள்ள காலம். ‘பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்’ (சிந். 1595) என்புழிக் ‘கள்’ அசைநிலை ஆயினவாறு போன்று, ஈண்டு ‘யாமங்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை. இனி, இதனை, பன்மை விகுதியாகக் கொண்டு, இரவின் கூறுபாடாகிய மூன்று யாமங்களையும் கூறுகின்றாள் என்று கோடலுமாம். ‘காமம் உற்றாய்’ என்பது ‘காமுற்றாய்’ என வந்தது, விகாரம்.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1இப்படி நாரையைப் பார்த்து வார்த்தை சொல்லுகின்ற அளவிலே, அருகே நின்ற பனையிலே தங்கின அன்றிலானது வாயலகு நெகிழ்த்தவாறே கூப்பிட்டது; அதனுடைய துன்பத்தைக் காட்டுகின்ற ஒலியைக் கேட்டு, ‘பாவியேன் என்னைப்போல நீயும் அகப்பட்டாயாகாதே!’ என்கிறாள்.
கோள்பட்ட சிந்தையையாய் – கவரப்பட்ட மனத்தினையுடையையாகி; ஆயின், ‘கவரப்பட்ட மனம்’ என்று அறிந்தபடி என்?’ என்னில், அதனுடைய2 அடியற்ற ஒலிதான் ‘நெஞ்சு இழந்தது’ என்று தோற்ற நின்றதுகாணும் இவளுக்கு. கூர் வாய அன்றிலே – தனியராய் இருப்பாரை இரு துண்டமாக இட வல்ல ஒலியையுடைய அன்றிலே!3 வாய் – வார்த்தை. அன்றி, ‘கூர்த்த வாய் அலகினையுடைய அன்றிலே!’ எனலுமாம். சேண்பட்ட யாமங்கள் – இரவாய் நீண்டு செல்லாது, இரவின் கூறாகிய ஒவ்வொரு யாமமும் நீண்டு செல்லுகின்றது என்பாள், ‘சேட்பட்ட யாமங்கள்’ என்கிறாள். சேராது இரங்குதி -‘நெடுகுகிற யாமங்களில் படுக்கையிற்சேரா தொழியினும் தரித்திருக்கலாம்; அங்ஙனமும் செய்யாது வருந்துகிறாய்’என்பாள்,‘இரங்குதி’ என்கிறாள்.
ஆள்பட்ட எம்மேபோல் நீயும் – ‘நெஞ்சு பறியுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவுபடுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்1 தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறுப்பாட்டையுடையதாகப்2 போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள். இனி, 3‘இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’ என்றும், ‘இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்,’ என்றும் ஓதினாய் இல்லை; 4மயர்வற மதிநலம் அருள’ப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம். அரவணை யான் தாள்பட்ட தண்துழாய் தாமம் காமம் உற்றாயே – மேல் 5‘திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே? ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள். ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள் என்றபடி. சுடர்முடிமேல் துழாய் ஒழிய, ‘அவர்கள் இருவரும் கூடத்துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள். புழுகிலே தோய்த்து எடுத்தாற்போன்று, பரிமளத்திலே தெரியும்6 ‘கலம்பகன் நாறும்; ஆதலின, ‘தண்துழாய்’என்கிறாள்7 ‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? 1சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறாவிடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், ‘காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.
அருகே நின்ற பனையிலே அன்றில் க்ரவ்ஞ்ச மிதுனம் –
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply