ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -224..

ஆறாம் பத்தால்-

தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் -பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம்
தமக்கு தம் திரு அடிகளையே -நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க –
அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் –
தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து –
வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை அவன் பரிகரிக்க –
அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும்
பலித்தவாறே –பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி –
ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே
பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு –
விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து -பரம ஆர்த்தியோடே தமக்கு
உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை –
நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –
பத்துடை அடியவரிலே -தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் என்கிறார் .

—————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய்
அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும்
கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல்வெட்டாக்குகிற சரண்யன்
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள்
அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும்
அநந்ய கதித்வம் உடைய தமக்கு
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு
ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு
ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம்
உபாயத்தாலே அழிய
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க
பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
5-சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக்
கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க
நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று
ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று
பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை
யாவையும் ஒன்றே ஆக்கி
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ
முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
8-திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய்
அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல்கொள் திசை வையம்
விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
9-இணைத் தாமரைகள் காண இமையோரும்
வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே
கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
10-பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன
சாத்ய உபாய ஸ்ரவண
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம்
புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —

—————————————–

1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே
சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம்
கல் வெட்டாக்குகிற சரண்யன்
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10–என்று
ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும்
ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று
திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்-
வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-தன்னுடைய கிருபையாலே –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் –
சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் –
சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்)
சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் –
வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல்
தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் -முதல் திருவந்தாதி-26-என்றும் —
போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் –
கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற
வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித விசேஷ சேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –

————————————————

2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான்
புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு
அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்
பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி
ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –
(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது
அவனைத்தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று
ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –
உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-
பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –
(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்
என் நான் செய்கேன் -5-8-3–என்றும்
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று
ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –
சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –
மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில்
ஈடுபட்டு -உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –
இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –
உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –
எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –
முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –
நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –
மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —
தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி-
கீழ் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –
அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –
களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி
அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –
பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –

———————————————–

3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி
தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –
கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –
அடிமேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11என்றும் சொல்லுகிறபடி-
விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ
உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய்
திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு
வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்னுமதளவாக பெற்று அன்றி தரியாத
அதிமாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –
ததேக ரஷத்யத்வ வ்யவசாய ரகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –
உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய
யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான
யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –
விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய
இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான
பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –
போகு நம்பீ –
கழக மேறேல் நம்பீ -என்று
உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று -சிற்றில் இழைப்பது –
சிறு சோறு அடுவதாக -அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –
அழித்தாய் உன் திருவடியாலே -என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை
தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய
வைலஷண்யத்தாலே – குலைக்க -அவனோடு பொருந்தி –

—————————————————–

4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே
பிறந்தவாற்றிலே –அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –
தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-
நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -என்றும் –
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -என்றும் –
ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற -என்னும்படி
அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்
குரவை ஆய்ச்சியரிலே- என்ன குறை எனக்கு -என்று தொடங்கி –
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர் -என்று
ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி
அனுபவிக்கப் பெற்ற எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே –
–சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று
இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே -சித்த உபாய வர்ணம்
சக்ருதேவ -என்கிறபடியே -பிராப்த்திகாகவும் ஒருகால் பண்ண வேண்டும் என்று பார்த்து
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன்
ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச
சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம்
ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி
அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராண மாக சொல்லப் பட்ட –
பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –புராண வித்தகர் ஆகையாலே -பௌ ராணிகரான
ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் -இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான
சரண வரணத்தை பண்ணுகையாலும் –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —
இங்கன் அன்றிக்கே -இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் -அது தான்
புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –
புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் .
சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை
ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் -பிதரம் மாதரம்-என்று தொடங்கி –
சாஷரான்-என்னும் அளவாக -சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –
வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின
சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய உபாசங்களையும் -பிராபக உபாசங்களையும் –
இதில்-சர்வ தர்மாம்ச்ச -கீழ் -உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –
இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ள வற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு -ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும்
உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –
அவ்வளவு இன்றிக்கே -இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே –
ஸூயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —
ஸ்திரீயும் சஹா தர்ம சாரினியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –
புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான
பாபா விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் -தம்முடைய
வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-
இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –
உபாயாந்தர சக காரிகளுமாய் -பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே –
உபேய பூதருமாய் இருப்பார்கள் –
தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தை யே பிரவர்த்திப்பிக்கை யாலே – உபாயாந்தர சக காரியுமாய்-
அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்
குருக்கள் ஆகிறார்கள்- உபயாந் தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –
உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்
ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை
அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே
க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –
மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும்
மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே
சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –
அதில் சர்வ தர்மாம்ச்ச என்று கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –
சர்வ காமாம்ச்ச -ஐ கிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது
சாஷரான்-அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –
ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –
உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள்
உடைய மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை சித் அசித் பிராப்ய
பிராபக ஆபாசங்கள் என்கிறது –
அதவா -சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள்
ஆகையாலே -அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –
கை வலிந்து -இத்யாதிக்கு அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது
மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் -உபாய விரோதிகள் சர்வத்தையும் –
விஷயமாக உடைத்து ஆகையாலே -கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது
த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –
அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது
ஆக இப்படி இருந்துள்ள

————————————————

5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும்-
(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –
துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே )
நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –
இழந்தது சங்கே -6-6-1-என்றும் –
இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-
எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-
இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று
சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு -உறங்குவான் கைப் பண்டம் போலே –
பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போக கண்டும் –
சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே இவற்றை ஒன்றாக நினையாமல்
உபேஷித்து அகன்று போயும் –

ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்
இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-என்று
தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-

புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு
என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று உனக்கு அசலாம்படி
விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும்
நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி
அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே -விஷயங்களைக் காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும்
சொல்லுகையாலே -அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு

————————————————————

6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –
தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –
வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –
பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-
லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை
சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –
இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷயமொன்றுமாக நினைத்து

———————————————-

7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்றும் ,
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்றும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -என்றும் –
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்
ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –
பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –
சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –
திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக்
காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகுபோல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –
சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ -சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே
என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –
விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே !
மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே -உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-

——————————————

8-திரி விக்ரமனாய் குரல் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன்
கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று
வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –
உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே -வாத்சல்யமும் –
அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே -சௌலப்யமும் –
தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –
விபோ -என்கையாலே -ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –
த்ரி விக்கிரம உபதானத்திலே -ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –
உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –
தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-
மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-
அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-சர்வேஸ்வரனாய்-
ஆஸ்ரித வத்சலனான தான் –
திரு விக்கிரம உபாதானம் பண்ணு கைக்காக பெரு விலையனான அழகை-சிறாங்கித்து
அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு மகாபலி
யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து -தான் சொன்ன படியே அவன் செய்யும் படி
விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்-
காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று
நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று – லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –
அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-
வையம் அளந்த மணாளன் –6-6-1-
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-
ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று
விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –
தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி -எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட
சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –

————————————-

9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று -இத்யாதி படியே
திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும்
உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும்
அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை -என்று
திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –
அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –
திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான
திரு மலையிலே கண்டு –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –
நிகரில் புகழாய்-என்று தொடங்கி-
திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்களை
அடைவே அனுசந்தித்துக் கொண்டு –
புகல் ஓன்று இல்லா -என்றும்
அடியேன் -என்றும்
தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக
உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –
அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற
அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –
பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-

———————————————

10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு
(சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால்
பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு )- பத்துடை அடியவரிலே –
பிணக்கற அறு வகை சமயமமும் -என்கிற பாட்டிலே –
வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –
வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித்
தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –
அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி
அத்தாலே
-எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-
என்னான் செய்கேன் –5-8-3-
என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-

—————————————-

11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை
உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் .
அதாவது –
திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-
திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –
என்கிற தம்முடைய உக்தியாலும் –
(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு )
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –
என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் -தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான
நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading