ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –21-30-

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்
இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்
இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading