ஶ்ரீசைலேச தயாபாத்ரம்–ஶ்ரீ அரங்கன் அருளிய தனியன் திரு நாள்: ஆனி மூலம்

ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்–ஸ்ரீ அரங்கன் அருளிய தனியன்
தனியன் திரு நாள்: ஸ்ரீ ஆனி மூலம்

ஶ்ரீ மணவாள மாமுனிகள் தனியன் சமர்பித்து, ஶ்ரீ மணவாள மாமுனிகளை குருவாய்க் கொண்ட
ஶ்ரீ அழகிய மணவாளன்-அரங்கநாதன்.

ஶ்ரீ அரங்கன் கேட்ட ஶ்ரீ மணவாள மாமுனிகளின் உபன்யாசம்
ஶ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீரங்க கோயில் நிர்வாகத்தை ஏற்று, ஶ்ரீ ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.
தன் ஆச்சாரியார் ஶ்ரீ திருவாய் மொழி பிள்ளையின் ஆணையின் பேரில் ஶ்ரீ ஆழ்வார் திருநகரியில்
ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட ஶ்ரீ யதிராஜ விம்சதி இயற்றினார் –
அதனால் இவரை யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டார் .

ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டு காலம் (1430 AD)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய ஸ்ரீ திருவாய்மொழிக்கு உபன்யாசம் நிகழ்த்தினார் .
அந்த ஓராண்டு காலத்திற்கும் உபன்யாசம் தடைபடாமல் இருக்க ஸ்ரீ கோயில் உத்சவங்கள் அனைத்தும் நிறுத்தப் பட்டிருந்தன.
ஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே ஓர் சிறுவன், வடிவில் வந்து ஸ்ரீ மா முனிகளின் திறமையை பாராட்டி
“ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்ற புகழ் பெற்ற தனியனை வழங்கினார்.
இந்த தனியனே ஸ்ரீ கோயில்களிலும், கோஷ்டிகளிலும் சேவிக்கப்படுகின்றது.

தனியன்
தனியன் என்பது ஸ்ரீ ஆழ்வார்கள்-ஸ்ரீ ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம்.
ஸ்ரீ ஆழ்வார்கள், ஸ்ரீ ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களை சேவிக்கும் முன், இந்த ஸ்தோத்ரத்தைச் சேவித்தே
தொடங்க வேண்டும் என்பதால் தனியன் எனப்படுகிறது.

ஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்→

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்–விளக்கம்-1
“ஶ்ரீசைலேசர், என்ற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை, ஆசார்யர்யின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்,……………
பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்……….
யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான,……………..
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்”

தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே.

5. ஶ்ரீசைலேச தயா பாத்ரம்-விளக்கம்-2

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீசைல மலையான, ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு அதிபதியாக, விளங்கிய
ஸ்ரீ மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமாக விளங்கியவன் சுக்ரீவன்.
ஆனால் அந்தச் சுக்ரீவனும், தகுந்த நேரத்தில் ஶ்ரீராமருக்கு உதவ வராததால், ஶ்ரீராமன் அவன் மேல் கோபப்பட நேர்ந்தது.
அந்தக் குறை தீர, இப்போது ஒரு சைலர் (ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் ஸ்ரீ திரு”மலை”ஆழ்வார்)
என்னும் ஆச்சாரியர் கருணைக்குப் பாத்திரமான ஸ்ரீ மணவாளமாமுனிகளின் மேல் அன்பு கொண்டான்..

தீபக்யாதி குணார்ணவம்
ஸ்ரீ ராமராக அவதரித்து, தீபம்-சமுத்திர ராஜனிடம், இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற வேண்டிய போது
ஸ்ரீ திருப்புல்லாணிக் கரையில், ஸ்ரீ தர்பசயண ராமராக, மூன்று நாட்களாகியும் அவன் வரவில்லை யாகியதால்
ஸ்ரீ ராமருக்குக் கோபம் வந்து வில்லெடுத்ததும் ஓடோடி வந்து, ஸ்ரீ ராமரிடம் சரணடைந்தான்.
ஆனால் எவ்விதக் குறையும் இல்லாத, நிறைகளே நிறைந்த ஸ்ரீ மணவாள மாமுநிகளைச் சரணடைந்தான்.

யதீந்திர ப்ரவணம்
ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ திருவேங்கடவனுக்கு, சங்கு, சக்கரம் வழங்கி, “அப்பனுக்குச் சங்காழி அளித்தர பெருமான்” என்று
ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தார். அவர் ஐந்து ஆசார்யர்களின் பொங்கும் பரிவுடையவர்,
குணங்கள் நிறைந்த மகாசமுத்திரம். அப்படியிருக்க அவரை, ஆசார்யராக அரங்கன் வரிக்கவில்லை.
ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதியைச் செவிமடுத்த ஸ்ரீ அரங்கன், ஸ்ரீ ராமானுஜர் காலத்திலேயே,
“தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோர்” என்ற பாசுரத்தின்படி, அவரை உற்று ஆட் செய்யும் தன்மையில்
மிகச் சிறந்தவரான ஸ்ரீ மாமுநிகளுக்காகக் காத்திருந்தார்.

வந்தே ரம்ய ஜாமாதர முநிம்-
எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவரை வணங்குகிறேன்

ஆதலால், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் குண விசேஷங்கள். அப்படிப் பாடும் பொழுது
ஸ்ரீ அரங்கன் முற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில ஏமாற்றங்களையும்,
இப்போது ஏற்பட்ட குறையொன்றுமில்லாத ஏற்றத்தையும் கூட்டிப் பாடியுள்ளார்:

ஸ்ரீ ராமவதாரத்தில் ஸ்ரீ விஸ்வாமித்திர முனிவரை குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய முழு வரலாறைக்
கேள்வியுற்ற ஸ்ரீ ராமருக்கு, அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ சாந்தீபினி முனிவரிடம், பயின்ற பின் அவர் குரு தட்சணையாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்
உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத் தர வேண்டுமென்ற
ஒரு சாதாரண பலனைக் கேட்டுப் பெற்றார். எனவே ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.

ஆனால் எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத மாமுனிவர் ஒருவர் உண்டேல்,
அவர் ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவர் மட்டுமே; என்வே அவரை வணங்குகிறேன்

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்-விளக்கம்-3:ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்யானம்
ஸ்ரீசைலேச தயா பாத்ரம்–சுக்ரீவன்
ஸ்ரீ இராமாவதாரத்தின்போது “சைலேச தயா பாத்ரன்” என்பவனிடம் ஸ்ரீ இராமன் புகுந்தான்.
சைலம்=ரிஷ்யமுக மலை. அதன் அதிபதி மாதங்க மஹரிஷி. அவரது கருணையைப் பெற்றவன் சுக்ரீவன்.
தனக்கு உதவும்படி ஸ்ரீ இராமன் சுக்ரீவனிடம் புகுந்தாலும், சுக்ரீவன் தான் ஸ்ரீ இராமனுக்குப் பட்ட கடனை
அடைக்கவில்லை என்பதால், அவனை ஸ்ரீ இராமன் கண்டிக்க வேண்டியதாயிற்று.
இது சரணாகதிக்கு விரோதமாக ஆனதால், சரணாகதி தவறியது என்று ஸ்ரீ இராமன் வருத்தம் கொண்டான்.
இக்குறை தீர உயர்ந்த ஒரு ஆசார்யனிடம் சிஷ்யனாக இருப்பதே சிறந்தது என்று எண்ணினான்.

தீபக்யாதி குணார்ணவம்– ஸமுத்ர ராஜன்
ஸமுத்ர ராஜனிடம் ஸ்ரீ இராமன் அடைந்தான். ஆனால், அவன் இராமனின் சொற்களுக்கு ஏற்ற மதிப்பு
அளிக்கவில்லை என்பதால், அவன் மீதும் இராமன் சீற்றம் கொள்ள வேண்டியதானது.

யதீந்த்ர ப்ரணவம்–இராமாநுசர்
ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதியின் 97-ஆவது பாசுரமான – தன்னை உற்றச் செய்யும் தன்மையின் ஓர் – என்பதை
ஸ்ரீ திருவரங்கன் கேட்டான். இந்தப் பாசுரத்தில் ஸ்ரீ எம்பெருமானாரின் சிஷ்யர்களின் மேன்மை கூறப்பட்டுள்ளது.
இதனைக் கேட்டவுடன், ஸ்ரீ எம்பெருமானாருக்கு சிஷ்யனாக இருப்பதைக் காட்டிலும்,
அவரது சிஷ்யனுக்கு சிஷ்யனாக இருப்பது மேலானது என்று முடிவு செய்தான்.

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்–
ஸ்வாமி, ஸ்ரீ மணவாளமாமுனிகள் விஷயத்தில் கடல் போன்ற ஞானம், அறிவு, பக்தி கொண்ட
ஸ்வாமியிடம் சரணம் அடைந்தான்.

ஸ்ரீ இராமனின் குருவான ஸ்ரீ விச்வாமித்ரரின் குறைகளை நாம் அறிவோம்.
ஸ்ரீ கண்ணனின் குருவான ஸாந்தீபநி முனிவரும், குரு தக்ஷிணையாக தனது பிள்ளையைக் கேட்டாரே அன்றி,
மோக்ஷம் கேட்கவில்லை.
ஆக தனது இரு குருவிடமும் எம்பெருமானுக்கு அந்த அளவு பிடிப்பு உண்டாகவில்லை.
எனவே குருவுக்கு இலக்கணமான ஒருவரைத் (ஸ்ரீ மணவாள மா முனிகள்) தேர்ந்தெடுத்தான்.

ஸ்ரீ அரங்கனின் சிஷ்ய-லட்சணம்
சீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்ய-லட்சணமான ஐந்து கடமைகளைச்
செம்மையாக நடத்தி-நடத்தும் அரங்கன்:

(i) தனியன் சமர்ப்பித்தல்

(ii) ஆசார்யன் கீர்த்தியை வையமெங்கும் பரப்புதல்:
எல்லா ஸ்ரீ திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன்னும்,
சாறறு முறை முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ‘ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்” சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்,
மடங்கள், கூடங்கள், ஶ்ரீ வைஷ்ணவர்கள், பாகவதர்களின் இல்லங்களிலும் தினம் தோறும்
முதலிலும், முடிவிலும் இந்தத் தனியன் சேவிக்கப் பட்டு வருகிறது.

(iii) சீடனுக்கு தனக்கென்று இல்லை
எந்த உடமையும் (சொத்தும்) தனக்கென்று இல்லையென்றும், எல்லாம் ஆசார்யனுடையவே,
தாம் அனுபவிப்பது அவர் கருணயால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும்.
எனவே தம் உடமைகளையெல்லாம் நிர்வகிக்கும், ஸ்ரீ ஆதி சேஷனையே ஸ்ரீ மா முநிகளுக்குக் கொடுத்துவிட்டார் ஸ்ரீ அரங்கன்.
அதனால் தான் ஸ்ரீ மணவாள மாமுனிகள் எங்கும், எப்பொழுதும் ஸ்ரீ சேஷ பீடத்திலேயே எழுந்தருளி யிருக்கிறார்.
ஸ்ரீ ஆதி சேஷ அவதாரமாகிய ஸ்ரீ ராமானுஜருக்கே இல்லாத சேஷாச-ஆசனத்தை ஸ்ரீ மாமுநிகளுக்குக் கொடுத்தருளினார்.

(iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும்.
ஸ்ரீ அரங்கனின் பெயரான ஸ்ரீ அழகிய மணவாளன் என்னும் பெயரே,
ஸ்ரீ மாமுநிகளுக்கு அவர் பெற்றோரால் சூடப்பட்டது.
ஸ்ரீ மாமுநிகள் துறவறம் மேற்கொண்ட போது, ஸ்ரீ சடகோப ஜீயர் என்னும் திருநாமத்தை ஏற்க விரும்பி
ஸ்ரீ அரங்கனிடம் வேண்ட, ஸ்ரீ அரங்கன் அதை ஏற்காமல், பழைய நாமத்துடனே இருக்கும்படி அருளினார்.
தம் ஆசார்யர் நாமம் அப்படியே இருந்தால் தான்,தாமும் ஆசார்யன் நாமத்துடன்(ஸ்ரீ அழகிய மணவாளன்)
என்று இருக்கு முடியும் என்று கருதியே இவ்வாறு ஸ்ரீ அரங்கன் நியமனம் ஆயிற்று

(v) ஆசார்யன் அவதார-திருநட்சித்திரத்தையும், ஸ்ரீ பரமபத-திதியையும் சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.
ஸ்ரீ அரங்கன் இவ்விரண்டையும் செவ்வனே நடத்தி வருகிறார்.
இரண்டு நாட்களிலும் அரங்கன் பிரசாதங்கள், மாலை, மரியாதைகள் மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீர்த்த திதியன்று, ஸ்ரீ அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, ஸ்ரீ மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார்.
ஸ்ரீ மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே, ஸ்ரீ அரங்கனுக்கு உச்சி கால நைவேத்யம்.அன்று
ஸ்ரீ அரங்கன் சுருளமுது (வெற்றிலை) கண்டருளுவதில்லை.

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading