கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள் –
எங்கனே என்னில் சொன்ன உக்தி செவி படுவதற்கு முன்னே உணருகையினாலே
உயர்வற உயர் நலம் உடையவன் என்னா –உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் என்னும் படியாலே-
மோஹித்த போது அறியாதே கிடக்கவும் , உணர்ந்தார் ஆகில் ,தம் உடைய பாழியான கிருஷ்ணா அவதாரத்தில் மண்டும் இத்தனை-
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21—வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
இவர் தாம் அங்கும் கூட நின்று இங்கும் கூட போந்தார் போல் காணும்
ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி-
பஞ்ச வடிக்கு போகும் வழியில் ஜடாயுவை கண்டால் போல் -வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி –
விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி-உத்தேசம் ஆகையாலே கூத்து -என்கிறார்–-
அம் கொம்போடே பொரலாம் ஆகில் , இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்-
அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-
————-
உங்களை புனம் காக்க இங்கன் கொண்டு வைத்த தார்மிகரோ என்கிறாள்
அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே
கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,-இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க
அவர்கள் நாங்கள் புனம் காக்க இருகிறோமோ உமக்கு மறு மாற்றம் சொல்ல இருகிறோமோ என் சொன்னீர் ஆனீர் என்கிறார்கள்–
தழை கொண்டு போகிறது என் என்னில் ஆச்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே ,காண் உன்னை பிரிந்து-நான் பட்டது என்று
தன் தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி–
இவன் உடைய கர ஸ்பர்சத்தாலே ,இது-சதசாகமாக பணைத்த படியை கண்டு ,உம்முடைய ஆற்றாமை அறிவிக்க வந்தீர் ஆகில் ,
கொம்பிலே நிற்கச் செய்தே காட்டா விட்டது என் என்கிறாள் –
பிறந்த இடத்தை விட்டு உம்முடைய பாடு வந்தாருக்கும் உண்டோ வாட்டம் –
உம்மை பிரிந்து பிறந்த இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் என்கிறாள் –
கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாட்
டம்பார் களிறு வினவுவதையர் ,புள் ளூரும் கள்வர்
தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22—நல்குரவும் செல்வமும் -6-3-
தழையை காட்டி ஜெயிக்கும் இடத்தே ,வில்லை காட்டி ஜெயிக்க ஒண்ணாது இறே-
லீலா விபூதியிலும் ,நித்ய விபூதி யிலும் அன்றியே உமக்கு என்ன ஓன்று எங்கனே சம்பாதித்த படி-என்கிறார்கள்
ஸ்வாபதேசம்-
எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குணங்களிலே ஈடு பட்ட ஆழ்வார் உடைய ஸ்வரூப ரூப குணங்களை-கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தைக்கு ஆழ்வார் வார்த்தை-
கொம்பார் தழை கை -ஐம்புலன் ஆசை விடாமல் உள்ளோர்
சிறு நாண் எறிவிலம் -பிரணவ மஹா மந்த்ரம் -வில்லின் -உச்சாரணமும் நாண் ஒலியும் இல்லாதவர்கள்
வேட்டை கொண்டாட்டு -காம க்ரோதங்களை மட்டும் -சம்சார காட்டில் உள்ள கொடிய விலங்குகளை -தொலைத்தோம் என்று இருப்பவர்கள்
அம்பார் களிறு வினவு-இந்திரியம் ஆகிய யானை சப்தாதி விஷயங்களில் போக பின் தொடர்வதே இவர்கள் செயல் –
ஐயர் -இவர்கள் செருக்கை இகழ்ந்த படி
புள்ளூரும் கள்வர்–தம்பாரகத் தென்று மாடாதனதம் மிற்கூடாதன-வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே
வேதமாகிய பிரபல பிரமாணம் எங்கும் பரவச் செய்து -யாவரும் அறியாமல் மறைந்து நின்று ரஷிக்கும் எம்பெருமான்
தத்வ ஞானமும் பிரபத்தி மார்க்கத்தில் இல்லாத போலி யான செருக்கு கொண்ட இவர்களை திருத்துவதற்கே இங்கனம் கூறியவாறு –
——————-
இவனை நோக்கி இவர்கள் சில வசோக்தி -நெஞ்சம் நிறைய அன்பை வைத்து கொண்டு தேவை அற்ற
வினாக்களை எழுப்புதல்–சொல்ல ,இவன் தானும் ,இவர்களை சில வசோக்திகள் சொல்கிறான்
புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23—கடல் ஞாலம் செய்தேனும் -5-6-
எங்கேனும் போகிலும் புனத்து அருகு அல்லது வழி இல்லை இறே இவனுக்கு-
இவர்கள் ஒழிந்த இடம் காடு முள்ளுமாய் இருக்கிற படி
பிள்ளை திரு நறையூர் அரையர் -உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க-திரு நகரி அருகே போக வேண்டும் பாபம் உண்டாவதே –
இது பாவம் ஆனால் இதற்க்கு எதிர் தட்டான பகவத் விஷயம் புண்ணியம்-
பகவத் விஷயத்தை சமாஸ்ரீயித்து கொண்டை மேலே காற்று அடிக்க திரியப் பெறாதே மீள ஒண்ணாத பாகவத சம்ச்லேஷத்தில்
இழிவதே-என்று-கொண்டை மேல் காற்று அடிக்க -என்றது தலைக்கு மேல் காற்று அடிக்க -அதாவது கவலை இன்றி இருத்தல்-
என் நெஞ்சை வளைக்கையும் ஜீவனம் இடாது ஒழிகையும்-கிட்டினவரை கீழ் சீரை அறுத்து கொண்டு அவர்களை
அநாதாரிக்குமா போலே நெஞ்சை அபகரித்து முகம்-கொடாதே இருக்கிற படி-
ஸ்வாபதேசம்-
ஆழ்வார் நித்ய விபூதியில் பிரவணராய் இருக்கும் இருப்பை கண்டு இவர் பக்கல் பிரவணராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-
நாயகன் ஏங்குவது இவளின் கடை கண் பார்வைக்கு -புனம் ஆகவாது இல்லாமல் போனேனே –
பிருந்தாவனம் செடி கொடி-மண் துகள் ஒன்றாக ஆசை பட்டது போல் இவனும் புவன் ஆக இல்லாமல் போனேனே பாவி என்கிறான்..
இவர்கள் இல்லாத இடம் எல்லாம் முள்ளாக தோற்றுகிறதாம்
—————
இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திரு தாயார் இது என்னைவாய் முடிகிறதோ என்கிறாள்-
இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24––கரு மாணிக்க மலை -8-9-
பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம்-பண்ணி இரு
என்று பழையவர்கள் நிர்வாகம் –மாலையை இட்டு திரு அடிகளை பிடித்து கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்
அஸி தேஷணா -இவர் தோளில் மாலை இட்டதுக்கு இவள் கண்ணாலே மாலை இட்ட படி-
நம்மாழ்வார் திருவிருத்தத்தில் திருவரங்கம் திருவேங்கடம் திருவெஃகா மூன்றையுமே மங்களா சாசனம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்று சிறப்பித்து கூறுவார்
எல்லா பாலை நிலங்களால் வந்த வெம்மையையும் போக்கி நமக்கு ரக்ஷகமான தேசம் திரு வெக்கா காண் அது
இந்தப் பாலை நிலம் அன்றிக்கே இன்னம் சில பாலை வனங்களும் கடக்கலாம் இந்நிலம் உண்டாக -என்பர் நம்பிள்ளை
அம் பூம் இளஞ்சோலை அப்பாலது -திருத் தண்கா -விளக்கொளி பெருமாள்
ஸ்ரீ விசுவாமித்திரர் உபதேசித்த பலை அபலை மந்த்ர வித்யைகள் போலே தலைவிக்கு தாபம் தணிக்கும் திருத் தண்கா –
ஸ்வாபதேசம்-
இப் பாட்டில் சம்சாரத்துக்கு இவர் உளர் என்று இருக்க ,இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான-அதி மாத்ர பிராவண்யத்தைக்
கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இவர் படியும் இப்படி ஆவது இது என்னை முடிய கடவது -என்று இருக்கிறபடி-
ஆழ்வார் சம்சாரம் தவிர்ந்தமையையும் -உகந்து அருளினை நிலங்களின் போக்யதையும்-சொல்வது
கோது -சம்சாரம் -பாலை வானம் போலே -நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் போக்யதை -ஷேமங்கரமான புகலிடம்-
—————-
பகவத் சமாஸ்ரண்யம் பண்ணினாரில் இப் பாடு பட்டார் உண்டோ என்கிறாள்
ஆரே துயர் அழுந்தார் துன்புற்றார் இத்யாதி–மூன்றாம் திரு அந்தாதி -27
எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25—மாயக் கூத்தா வாமனா -8-5—
ஸ்வாபதேசம்-
ஆழ்வார் உடைய தசையை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் சர்வேஸ்வரன் உடைய ரஷகத்வையும் அதி சங்கை
பண்ண வேண்டி இருக்கிற படி சொல்லிற்று-
————
புணர்ந்து உடன் போகிறான் ஒரு தலை மகனை -பாலை நிலத்தை கடந்து குளிர்ந்த நிலத்தே
புகுந்தோம் காண்-என்று ஆஸ்வசிப்பிகிறான்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26–மாலை நண்ணி -9-10-
வெக்காவுதம்–பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–திரு வெஃகா திவ்ய தேசம் அருகில்
திருத் தண்கா -ஸ்ரீ தேசிகன் திருவவதாரம் ஸூ சிதம்-இத்தால் என்பர்-
நித்ய ஸூரிகள் ஆனவர்கள் பூமியில்-இழிந்து ,திரு வெக்காவிலே தங்கள் உடைய அபிமத விஷயம் கிடைக்கை யாலே
பிரதஷிண -நமஸ்காராதிகளை பண்ணா நிற்பார்கள்-
ஸ்வாபதேசம்-
இத்தால் சம்சாரம் த்யாஜம் என்னும் இடத்தையும் பகவத் விஷயம் பிராப்யம் என்னும் இடத்தையும் அறிந்த இவர்க்கு
பிராப்தி தசை தாழ்ந்த படியாலே ,வந்த ஆற்றாமையை கண்ட-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
சம்சாரம் சென்று அற்றதாகில் உகந்து அருளின தேசங்கள் இங்கே ஆகில்-பிராப்திக்கு உள்ளே அன்றோ நீர் நிற்கிறது –
என்று ஆற்ற வேண்டும் படி இருக்கிறது-
சரணா கதி விளக்க வந்த பாசுரம் சம்சார வெக்கை தாங்காமல் சோலைகள்
சூழ்ந்த திரு வெக்கா சேர்ந்து சரண் அடைய அருளுகிறார்-
————–
நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் உடைய கிருபையே இவ் ஆத்மாவுக்கு ரஷை
இவன் கடாஷித்தாலிவ் அருகில் உண்டான பிரதி பந்தங்களும் தானே அனுகூலிக்கும்
ராஜா குமாரன் தட்டியில் இருந்த பொழுது ,பிரதி கூலித்தவர்கள் அபிஷிக்தன் ஆனவாறே-தாங்களே வந்து ,
அனுசரிக்குமா போலேயும் பிராட்டியை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணின-ராஷசிகள் அனுகூலித்தால் போலேயும் –
சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27—எல்லியும் காலையும்–8-6-
மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்
அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி-
தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-
துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்-அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய்
மாலையை ஸ்பர்சிக்க –சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா-ஸ்பர்சிக்கவே அமையும்
அவ் வாடை -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் –முன்பு அப்படி தடிந்து போன வாடை
ஈதோ வந்து தண் என்றதே –இப்படி வந்து குளிரா நின்றது-.ஈதோ வந்து தண் என்றது வையம் சொல்லும் மெய்யே-
பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன குண த்ரய
விசித்ர கர்ம ஸூ த்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்து எழுந்தும் சுழன்றும் உழன்றும் பறி பட்டும்
அற்ப சாரமாமாவையுமாய் மதீயம் என்னில் விட்டகலவும் ததீயம் என்னில் இகழ்வறவும் முனிவதும் இக்காலம் ஈதோ
என்னப்படும் பொங்கைம் புலனில் போக்யாதி ஸமூஹம் –ஆச்சார்ய ஹிருதயம் -இரண்டாம் பிரகாரணம் இறுதி சூர்ணிகை – -149 –
இதில் ஈதோ-இந்த பாசுரச் சொல் –
—————–
கீழ் உண்டான மானச அனுசந்தானம் விஷய வைலஷண்யத்தாலே அவ் வருகே ருசியை பிறப்பித்து ருசியின் உடைய அதிசயத்தாலே
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேஷை பிறந்து ,நினைத்த படி பரிமாற பொறாமையாலே விஸ்லேஷமாக தலை கட்டிற்று.
சம்ஸ்லேஷ தசையில் அனுகூலித்த-பதார்த்தங்களும் இப் பொழுது பிரதி கூலிக்க தொடங்கிற்று .
தத் யாவக உபாயதே பிரசாதாய ஜாதயே — என்று யாதோர் அளவிலே நிர்வாகன் ஆனவன் கோபித்தால்
அவன் பரிகரமும் அப்படியே நிற்கும் -திரு வெக்காவின் நின்றும் பிரசாதம் வந்தது என்ற போது வாடை காற்று குளிர்ந்து ..
அது தான் இப் பொழுது சுட தொடங்கிற்று –சோறும் கறியும் சமைத்த பின்பு இட பற்றாதால் போலே திரு வெக்காவின் நின்றும்
பிரசாதம் வந்தது என்ற அந்தரத்திலே உள்ளே புக்கு அணைக்க பெறாமையால் வந்த ஆற்றாமை-
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –வாள்வாய அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்ன –28–கங்குலும் பகலும் -7-2-
ராஜாக்கள் முனிந்தால் அவன் பரிகரமும் எதிரி யாம் போலே சர்வேஸ்வரன் நெகிழ்ந்த படியாலே-
அவன் உடைய அசாதாரண திரு துழாயும் நலிகிறது-
வாடையை சொல்லுகையாலே பூதங்களில் பிரதானத்தை எடுத்து ,பிரக்ருதிக்கு உபலஷணமாக சொல்லிற்று-
இவள் உடைய அவசய அதிசயத்தை கண்ட திரு தாயார் பெரிய பெருமாள் திரு அடிகளில் பொகட்டு-
நீ இங்கே கிடக்கிற கிடைக்கைக்கும் இவள் சோகத்துக்கும் சேர்த்தி கண்டிலோம் –
ஒரு ஸ்திரீ குற்றம் செய்தாள் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்து இவளை ஹிம்சிக்க வேணும் என்ன-
புறம்புள்ள எல்லா வற்றையும் விட்டு , இவ் ஊரிலே உத்தேசய்மாய் இருக்கிற இவளை எத்தை சொல்லி நாம் நசிவது என்று அருளி செய்தார்
வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க ,அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி ,
எம்பார் திரு அடிகளில் சரணம் புக ,ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய் இருக்க செய்தே
இவனையும் கை கொள்ள கடவதோ என்ன-நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்
சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-
சுத்த சத்வ மயமான ஆத்மாவை ஜடமான சம்சாரம் நலியாமே நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கு வந்து கிடக்கிறது
பகவத் பிரபாவமும் அறிந்து ,சம்ஸார ஸ்வாபத்தையும் அறிந்து ,சம்ஸார பய பீதனாய் இருப்பான்-ஒருவனை பெற்றால் அன்றோ
சர்வேஸ்வரனுக்கு மாசுசா என்னல் ஆவது –இப்படி மாசுச என்றால் அன்றோ இவனுக்கு ஸ்திதொஸ்மி என்னாலாவது
திரு அரங்கா -நீ இங்கு வந்து கிடக்கிறது உன்னுடைய கர்ம பல அனுபவம் பண்ணவோ –போக பூமி தேடியோ –
ஒரு குறைவாளர் இல்லையாமையோ –ருசி உடையார் இல்லாமையோ –நீ அருளாது ஒழிகிறது என்-
மதி நலம் அருளினன் என்றால் அதன் பயனான துயர் அறு சுடர் அடி தொழுது எழ பண்ண வேண்டாவோ-
அறிவு கலங்கினார்க்கு இப்படி அருளாது ஒழிகை அனாதியோ –இப்போது உண்டானது அத்தனையோ —
ஆர்த்தருக்கு பண்டு உதவினான் –என்னும் இடம் பிரசித்தம் அன்றோ –
திரௌபதிக்கு – கஜேந்த்ரனுக்கு-பிரகலாதனுக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு-காகத்துக்கு
—————
பொரு நீர் திரு அரங்கா அருளாய் என்ற இடத்தில் ,அருளுகிறேன் என்னுதல் -அருளேன் என்னுதல் சொல்லாதே
பேசாதே இருந்த படியால் -வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –
இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச சீர்மையில் அன்னங்களே –29—பொன்னுலகு ஆளீரோ -6-8-
இப்படி பட்ட தூது -தரித்து இருந்து விடுகிறது அன்று –போகத்துக்கு விடுகிறது அன்று -சத்தா தாரகமாக விடுகின்ற தூது-
அவன் தான் செய்ய கடவத்தை இவள் செய்த படி -அத்தலை இட்டு விட கடவது இது இறே இவள் தான் விடுகிறது-
உங்கள் பாடு குற்றம் உண்டோ ? அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-
நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் -பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ –நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே
சொல்லிற்று இலி கோள்
ஸ்வாபதேசம்-
பகவத் விச்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி-பிராப்திக்கு சக காரிகளாய் இருந்தவர்களையும்
கூட இன்னாதாக வேண்டும் படியான தசையை சொல்லுகிறது –
————
சிலரை தூது போக விட்டால் ,அவர்கள் வரும் அளவு செல்ல ,ஆறி இருந்து ,சூது சதுரங்கம் பொருது போது-போக்கும்
விஷயம் அல்லாமை யாலே கண்ணால் கண்டவர் எல்லாரையும் தூது போக விடுகிறாள்-
யாம் கபிநாம் சகஸ்ராணி ஸுப ஹூன்ய யுதானிச திஷு சர்வாசூ மார்கந்தே சேய மாயாதி தாமயா–சுந்தர காண்டம் -30-3-
என்று முதலிகள் எல்லாரும் கூட புஜித்தாலும் புஜி த்து முடிய ஒண்ணாத ப்ரீதியாலே தனியே அகப் பட்டேன் என்று-முதலிகள்
எல்லோரும் கூட மது வனத்தில் புகுந்த பொழுது ததி முக பிரப்ருதிகள் நலிய –
அஹம் ஆவார் யிஷ்யாமி யுஷ்மா கம்பரி பந்தின -சுந்தர காண்டம் 62-2—என்று உங்களுக்கு விரோதி ஆனவர்களை
நான் போக்குகிறேன் நீங்கள் அமுது செய்யுங்கோள் என்ன –
இப்படி மது வனம் அழிந்த படி யை மகா ராஜர் கேட்டு–இது வெறுமனே ஆக மாட்டாது –பிராட்டியை கண்டார்கள் –
த்ருஷ்டா தேவி -சுந்தர காண்டம் 63-17–என்று நிச்சயித்து ,அப்போது அவ் அருகுக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
வாலானது வளர்ந்து ருஷ்ய முக பர்வதத்திலே சென்று அமைந்தது –
அம் மது வனம் இன்றாகில் ராஜ புத்ரர்கள் முதுகோடே போம் -என்று பட்டர் அருளி செய்வார்-
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30—அஞ்சிறைய மட நாராய் -1-4-
தொழுது இரந்தேன்–காயிக வாசிக –மாநஸமும் உப லக்ஷணம் –
ஆற்றாமை மிக்கு அவனை மறந்து இருப்பதே நன்று என்று வெறுத்து நெஞ்சை கூப்பிடுகிறாள்-
ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-தூது போக கடவத்தை
உங்களை இரவா நின்றேன்- என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி–
கிடாம்பி ஆச்சானோடு நம்பி திரு வழுதி நாடு தாசரும் மற்றும் நம் முதலிகளும் இருந்து அந்யத் பூர்ணாத் ஸ்லோஹம்–
அந்யத் பூர்ணதபாம் கும்பாத் தந்யத் பாதாவநேஜனாத் அந்யத் குசல சம்ப்ரசனா அந் நசேச்சதி ஜனார்த்தன– -கேளா நிற்க
அந்யத் என்கிறது ஒரு கால் அமையும் என்கிறதோ என்ன அரை கால் அமையும்-என்று கிடாம்பி ஆச்சான் நியமித்தான்-
பிரியேன் என்ற போதே -பிரிந்தான் ஆய இருக்கிறது காணும் இவளுக்கு-பிரிவை பிரசங்கித்த போதே பிரிந்தானாம் அத்தனை இறே
நீர் இருக்க மட மங்கை மீர் கிளிகள் தாம் இருக்க மதுகரம் எலாம் நிறைந்து இருக்க மடவன்னமும் உன்ன நிரையாய் இருக்க யுரையாமல் யான்
ஆர் இருக்கிலும் என் நெஞ்சம் அல்லதொரு வஞ்சமற்ற துணை இல்லை என்று ஆதரத்தினோடு தூது விட்ட பிழை யார் இடத்து உரை செய்து ஆறுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேட அரிய திரு வரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை யுறை மார்பில் பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply