ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்
1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்
———
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம்
செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
சூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை
-ந சூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
எனவே சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-
சம்ஸ்கார பராமர்சாத்-உபநயனம் செய்த பின்பே ப்ரஹ்ம வித்யைக்கு அதிகாரம் பிறக்கும்
தத பாவாபி லாபாத் ச -உபநயனம் சூத்ர்களுக்கு கிடையாது என்றும் சாஸ்திரம் சொல்லும்
ப்ரஹ்மோபதேசம் -ப்ராஹ்மணர் எட்டாவது -க்ஷத்ரியர் -12-வைஷ்யருக்கு -16-வயசில் என்று தர்ம சாஸ்திரம் சொல்லும் –
அப்பா -30000-காயத்ரி ஜபம் செய்தவனாக இருந்தால் தான் ப்ரஹ்மோபதேசம் செய்ய அதிகாரம் உண்டாகும் –
—————————————————————-
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
சூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்
ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் -எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –
அம்மா பல பேர் இடம் பரிசர்யை பண்ணிக் கொண்டு இருந்தேன் -யவ்வனத்திலே நீ பிறந்தாய் –
என்ன கோத்ரம் அறியேன் என்றாள்-அதர்ம ஸ்பர்சம் கூட இல்லை இங்கு –
திவ்யமான விஷயம் இது -தப்பான நடவடிக்கை மூலம் இல்லை என்றவாறு –
கௌசிகர் உடனே ப்ரஹ்ம வித்யை அருளினார் –
( சீதா )-அகல்யா- தாரா -மண்டோதரி- திரௌபதி குந்தி -பஞ்ச கன்யா –
தீப்தி யுக்தகா கன்யா -பரமாத்மா சாஷாத்காரம் அடைந்தவர்கள் –
——————————————————————-
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
சூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் சூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –
ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் -ஸ்ரவணம் -அத்யயனம் இரண்டிலும் அதிகாரம் இல்லை -என்றபடி
யஜ்ஜத்திலும் அதிகாரம் இல்லை -ஆகையால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை
——————————————————————–
1-3-39- ச்ம்ருதே ச-
ஸ்ம்ருதிகளும் சூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-
ச்ம்ருதே ச–ஸ்ம்ருதிகளும் இத்தையே சொல்லும் –
ஈயம் மெழுகு காய்ச்சி காதில் விட வேண்டும் -நாக்கை வெட்டணும் -சரீரம் வெட்டணும் –
தர்ம உபதேசம் பண்ணக் கூடாது -என்று தீவிரமான நிஷேதம் உண்டே –
discrimination வேறே differenticiation வேறே
உபாசனம் மானஸ கார்யம் தானே -எப்படி தடுக்க முடியும் –
பரிசர்யாதி கார்யம் செய்தாலே வர்ணாஸ்ரமம் செய்தவன் தானே எதற்கு நிஷேதிக்க வேண்டும் -பூர்வ பஷ வாதம் –
துர்லபம் -மனுஷ்யத்வம் -அதிலும் -அதி துர்லபம் -முமுஷத்வம் -அதிலும் துர்லபம் -மஹா புருஷ சம்ஸ்லேக்ஷம்-
வர்ணம் வேறே ஜாதி -வேறே /quality (ப்ராஹமணர் ராஷசர் -ராவணன்-வர்ணத்தால் ப்ராஹ்மணன் -ஜாதியால் ராக்ஷஸன் )
discrimination வேறே distinction வேறே –
வர்ண தர்மம் distinction போலே
ப்ராஹ்மணராக பிறந்தும் ப்ரஹ்ம வித்யை இல்லாதவர் சூத்ரர்களே –
வேத அத்யயனம் பண்ணாமல் வேறே ஏதாவதில் பிரவர்த்தித்தால் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–
பூ புவ சுவ மஹ- ஸத்யம் இத்யாதிகள் -அந்தரங்க ஸ்தலங்கள் –வ்யாஹரதி-ஞானியுடைய த்ருஷ்டியில் காணலாம் –
கோ ப்ரஹ்மம் -எழு சந்நிதிகளில் ப்ரஹ்ம ஞானிகள்
ஆர்த்ரயே கோத்ரம் ச கோத்ரம் -வேறே -வம்சம் -ஜென்மம் -கர்மம் மூலம் இவை /
ப்ராஹ்மண்யம் பெறுவது ஸ்ரமம் என்பதால் தாஸ்ய நாமம் -சூத்திரர்கள் போலே தானே –
மேலே ஏறிப்போய் ஆசை உண்டாக வேண்டும் -ப்ராஹ்மண்யம் அடைய வேண்டும்
விச்வாமித்ரர் உபாக்யானம் -தபஸ் பண்ணிய விஷயங்கள் -உண்டே –
ப்ரஹ்ம தேஜோ பலம் -சர்வ அஸ்திரம் -ப்ரஹ்மாஸ்திரம் கூட ப்ரஹ்ம தேஜஸ் ஸூக்குள் அடங்கும்
காம க்ரோதிகளை வென்று /திரிசங்கு வ்ருத்தாந்தம் -க்ரோதம் வெல்லாமை/
தபஸ் செய்து அப்பா தாத்தாவுக்கும் ப்ராஹ்மண்யம் வாங்கி கொடுத்தமை –
ஜாதி ப்ராஹ்மண்யனுக்கும் ஜாதி சூத்ரருக்கும் கொஞ்சம் வாசி -சரீர வாக்கு வேறே /
வனஸ்தை லதா -ஸ்தாவரங்களிலும் வாசிகள் உண்டே
ஜங்கமங்கள் -லோகங்களில் ஸ்வரங்களில்- வர்ண தர்மம் உண்டே
சம்புக உபாத்யாயம் ராமாயணத்தில் உண்டே -சம்புக சூத்ரன் தலை கீழாக தபஸ் செய்த கண்டு –
தலைச்சேதம் செய்து பிள்ளை பிழைத்ததே –
வ்ருத்தர்-பாலர்களுக்கு இறுதி சம்ஸ்காரம் செய்யாமல் தர்ம ராஜ்ஜியம் –
அர்த்தஜரதி நியாயம் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வாதம் பண்ணுவது –
சாதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் -மனுஷ்ய ஜென்மம் மட்டும் இல்லை -குரு –அஞ்ஞானம் போக்கும் /
சாம வேதம் ப்ராஹ்மண்ய -யஜுர் வேதம் ஷத்ரிய வேதம் ரிக் வேதம் வைஸ்ய வேதம் /
இப்படியும் உண்டே -/ஸ்வர பேதங்களும் /
ப்ராஹமணீய தர்மம் -hindu isam -என்று குறைக்கக் கூடாதே
ஏகலைவன் கதை -வேடர்குலப்பையன் / துரோணாச்சார்யார் தனுர் வித்யை/விக்ரஹம் வைத்து -கற்றான் /
வலது கை கட்டை விரல் தக்ஷிணை
ச கோத்ரா விவாகம் -தாயாதிகள் பங்காளிகள் -சகோதர பாவம் -/genatics இன்றும் கூடாது என்கிறார் –
in breeding கூடாதே -ஜாதி ஸங்க்ரஹம் –
பாரத தேசம் கர்ம பூமி -சாஸ்திரங்கள் இவர்களுக்காக -புருஷார்த்தம் மற்ற religion சொல்லாதே
விதி நிஷேதங்கள் இங்குள்ள மநுஷ்யர்களுக்காக -ஷோடச சம்ஸ்காரங்கள் இஹ லோக ஆமுஷ்மிக பாகங்கள் –
—————————————————————–
ப்ரமிதா அதிகரணம் சேஷம் –2-ஸூத்ரங்கள்
1-3-40-கம்ப நாத் –
அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-
தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –
இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-
பிரசங்க சங்கதி -incidental -என்றபடி -/ அதிகாரிகதாம்-பரி சமாப்த-அங்குஷ்டமாத்ர-பர ப்ரஹ்மமே -நியமிக்கிறவன் —
எஜதி நிஸ்ஸ்ருதம்- கம்பனம்-என்றபடி –
ஐஸ்வர்யம் –ஈசன் -நியமனம் -அனைத்தும் அவன் அதீனம்-
பயம் -பயாத் தபது ஸூர்ய– -அனைத்துக்கும் அபிமான தேவதைகள் வருணன் -அக்னி வாயு -இத்யாதி –
சாஸானா -அநு வ்ருத்தம்–கம்பனத்துக்கு காரணம் பர ப்ரஹ்ம-ஸ்வரூபம் அறிந்து -உபாசனம் செய்து -அம்ருதவம் கிட்டும்
—————————————————————————–
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –
அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –
கட உபநிஷத் -ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –
இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-
பரஞ்சோதி ஸ்வரூபம் -அத்புதமான மந்த்ரம் -அசாதாரணம் -சர்வ தேஜஸாம் காரண பூதம் –
ந தத்ர ஸூர்யோபாதி-சூர்யன் ஒளியும் இருட்டு போலே அன்றோ இவன் முன்னே –
அதே போலே சந்திரன் நக்ஷத்திரங்கள் மின்னல் -இப்படி இருக்கும் பொழுது
குதோயம் அக்னி-அக்னியைப் பற்றி கேட்க வேண்டுமோ -என்றவாறு
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி–ஸ்ரீ கீதை -ஆயிரம் இரவி போலே அன்றோ விஸ்வரூப தர்சனம் –
அவன் தேஜஸ் அநு சரித்தே அனைத்தும் –
பரம்ஜோதி உபசம்பத்தயே-/ சூழ்ந்து –பரம் நல் ஜோதிவோ–
——————————————————————————
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே
முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –
சாந்தோக்யம் -அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –
சித்தாந்தம் -ஆகாயத்தைக் கூறும் பொழுது -நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
-என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –
-அடுத்த அதிகரணம் -அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-
அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-ஆகாசம் பதத்தை விட்டு -முன்பே ஆகாச அதிகரணம் வந்தபடியால்
ஆகாச சப்தத்தால் நாமம் ரூபம் நிர்வாகம் -ஸ்திதி -விஷய வாக்கியம் -சாந்தோக்யம் -8-14-
நித்யமுக்தாத்மாவா -பரமாத்மாவான -விசாரம்
அநு பிரவேச நாம ரூப வியாக்ரவாணி முன்பே பார்த்தோம்
அவிநாம சம்பந்தம் -பெயர் இல்லாமல் வஸ்து இல்லையே -சப்தம் அர்த்தம் சம்பந்தம் –
பெயரையும் வஸ்துவையையும் சம்பந்தத்தையும் நிர்ணயம் அவன் ஒருவனே
இலக்கணம் இலக்ஷணம் -நாம -வியாகரணம் / வஸ்து-ரூப வியாகரணம்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -புண்ய பாபங்களை விட்ட முக்தாத்மா -முக்திக்கு அர்ஹமான ஆத்மா என்றபடி –
போக ஆயதநம் சரீரம் புண்ய பாபம் அனுபவிக்க ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே
ப்ரஹ்ம லோகம் அடைகிறான் -லோக சப்தத்தால் பர ப்ரஹ்மம் என்றவாறு –
நாம ரூபயோர் நிர்வஹிதா-உடையவன் -வஹு-என்பதற்கு இரண்டும் உண்டே -உடையவன் என்றும் நிர்மாணிப்பவன் என்றும்
முத்திக்கு அர்ஹமான ஆத்மாவுக்கு நாமமும் ரூபமும் இருந்ததே -அத்தை சொன்னவாறு என்பர் பூர்வ பஷி –
அம்ருதம் தத் ப்ரஹ்ம -சப்தங்கள் இவனுக்கும் பொருந்தும்
ஆகாச -சப்தத்தாலும் இவனைக் குறிக்கலாம் -பிரகாசிப்பதால் -பர ப்ரஹ்மம் போலே விபு
ஆ காசம் சம்பூர்ண பிரகாசம் என்றபடி-தர்மபூத ஞானமும் விபு தானே –
ஆகாசா -அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத்-பரமாத்மாவையே குறிக்கும் -வ்யபதேசாத்–என்பதால் –
நாம ரூப யோகம் நிர்வாணம் -உண்டு பண்ணி -ஸ்திதி -இத்யாதி இவன் ஒருவனே –
பத்த அவஸ்தை ஸ்வயம் கர்மம் அடியாக உள்படுகிறான் –
முக்த அவஸ்தை ஜகத் வியாபாரம் அசம்பவாத்–4-4-இறுதி அதிகரணம் -பரமம் சாம்யமானாலும் –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லயம் தன்மை இல்லை -ஜகத் வியாபாரம் வர்ஜம்-
———————————————————
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால் ஜீவன் வேறு பரம்பொருள் வேறு
பூர்வ பஷி -தத் த்வமசி–அஹம் பிரம்மாஸ்மி –நேஹ நா நாஸ்தி -என்பர்
சித்தாந்தம் -ப்ருஹத் உபநிஷத் -ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம்-
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்
ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்
எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-
உபாதியால்-ஜீவாத்மா –வேறே பரமாத்மா வேறே -அந்த சாயையில் -ஏகாத்ம வாதி -வரும் சங்கைக்கு இந்த சூத்ரம் –
ஐக்கிய உபதேசாத் -ஓன்று தான் இரண்டு இல்லை –சுத்த ஜீவனே பரமாத்மா பரமேஸ்வரன் –
ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –ஆழ்ந்த உறக்கத்துக்கும் மரணத்துக்கும் வாசி உண்டே –
ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷூப்தி துர்ய அவஸ்தைகள் -நான்கும் சொல்வது உண்டே
யுத்க்ராந்தி-சரீரம் புறப்படும் அவஸ்தை –
மார்க்க தர்சி- மார்க்கபந்து வாக இருந்தே – ஆத்தன் -ஆப்தன் -ஒருவனே –
ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி-ஸூ ஷூப்தியில் உள்ள ஆத்மா-ப்ராஜ்ஞே- சர்வஞ்ஞன் இல்லையே
இரண்டு இடத்திலும் சர்வஞ்ஞன் சம்பந்தம் -ஆகவே பரமாத்வாகவே இருக்க வேண்டும்
————————————————————-
1-3-44-பத்யாதி சப்தேப்ய —
பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல
ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-
பத்யாதி சப்தேப்ய –பதி-அதிபதி -அவன் ஒருவனே -ஈசானா இத்யாதி சப்தங்கள் பிரயோகம் –
ஸர்வஸ்ய அதிபதி-ஸர்வஸ்ய வஹி-வசத்தில் வைத்து -ஸர்வஸ்ய ஈசான ஸ்வாமி -ஏஷ சர்வேஸ்வர -அஜர அம்ருத –
பூத அதிபதி பூத பாலாக சேது இத்யாதி சப்தங்கள் -அந்நாதா வஸூ தான -ஐஸ்வர்யம் அளிப்பவன் –
அமர கோசம் -பர்யாயம் -கொஞ்சம் வாசி உண்டு சப்தங்களுக்குள்
அமரர்-மரணம் இல்லாமல் / நிர்ஜரா-மூப்பு இல்லாமல் /தேவா -பிரகாசிப்பவர் -திவு தாது பல அர்த்தங்கள் /
பதி -பா ரக்ஷணம் -ரக்ஷிப்பவர் /சஹா சாது கர்மணா -குணம் அவன் கிடைப்பதால் பெருமை போலே –
அது இது உது எல்லாம் / பெருமை கீழ்மை செயல்களை கொண்டு அழைக்கிறோம் லோகத்தில் -அவன் இடம் அது ஒவ்வாதே –
சகல இதர விலக்ஷணன்-
பேத அபேதங்களை சமன்வயப்படுத்தி ஸ்ரீ பாஷ்யகாரர் -உபாதான உபாதேய பாவம் –
மண் குடம் -ம்ருதயம் கட-வாசி இல்லாமல் -ஐக்யம்-மூல பூத தன்மையில் வாசி இல்லை –
அவஸ்தா பேதம் -மட்டுமே உண்டே -பிண்டத்தவம் அவஸ்தை மாறி கடத்தவம் அவஸ்தை – –
பிண்டத்தவா அவஸ்தா விசிஷ்டம் ம்ருத்வம் -கடத்தவா அவஸ்தா விசிஷ்டம் குடம் -வேறே வேறே தானே —
ச விசேஷ அத்வைதம் -தானே விசிஷ்டாத்வைதம் -கேவல த்வத வாதிகள் இல்லை —
துவைதம் -ஸர்வதா சம்மதம் இல்லை -நிமித்த காரணம் மட்டும் அவன் என்பர் —
அத்வைதத்துக்கு நெருங்கின சம்ப்ரதாயம் நம்மது -ஏக மேவ தத்வம் –
அத்வைதம் -த்வய பாவம் இல்லாமை தானே -வாசி உண்டு ஆனால் துவைதம் இல்லை –
ச விசேஷம் -விசிஷ்டம் என்றவாறு –
தர்சனம் பேத ஏவச–ஸ்ரீ பேர் அருளாளன் ஸ்ரீ ஸூ க்திகள் -ஜீவனுக்கும் பரமாத்வாவுக்கும் –
எப்படிப்பட்ட பேதம் என்று ஸ்ரீ பாஷ்யகாரர் காட்டி அருளி -அந்நயத்வம் -வேறு பட்டது இல்லை –
அபேத விவாகரா அவிரோதி பேதம் –
பிரகிருதி அதிகரணம் மேலே வரும் -ஒன்றாக சத்தாகவே -ச விசேஷம் அப்போதும் கூட -இருக்கும் –
சூஷ்ம சித்-அசித் விசிஷ்டம் நாம ரூப அனர்ஹத்வம்
—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply