ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —
—————
பிராணாதிகரணம் –
கமகம்-சர்வே சப்தாகா பரப்ரஹ்மம் -ஒருவனையே குறிக்கும் –
ப்ரஹ்ம வித்யை வேற அதனால் தனி அதிகாரணம் -பிராண வித்யை இதில்
விஷய வாக்கியம் சித்தாந்தம் சொல்லி -பூர்வ பக்ஷம் சம்சயம் இவற்றை சொல்லாமல் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
சங்கதி தனியாகவும் இல்லை -பூர்வ அதிகரண சேஷம் என்பதால் –
ஓம் உக்தியாலே யோகி ஜென்மம் கடந்து -உத்கீதம் -நாத விசேஷம் -என்பர்
உத்கீதம் -உள்ளே புகுந்து -ஆழ்ந்த -ஊர்த்தம் -உபாசனம் –
யஜ்ஞம் ஞானம் உடனே தானே பண்ணுவது -ஞான விசேஷங்கள் ஆகாசம் பிராணன் இத்யாதி –
உஷாசி சங்கராயணர் சொல்லும் வித்யை -மூர்த்தா தேவி உபாஸ்யதே -தலை வெடிக்காது -பிரதான உத்தம அங்கம்
பரமாத்மா ஞானம் தான் பிரதானம் என்பதே தாத்பர்யம் என்று சுதாப்பிரகாசர் காட்டி அருளுகிறார் –
ஆகாச சப்தமானது பரமாத்மாவைதான் குறிக்கும். எந்த ஜீவாத்மாவையோ, பிரசித்தமான ஆகாசத்தையோ குறிக்காது என்று பார்த்தோம்.
அதே நியாயம் இந்த பிராணாதிகரணத்திலும் கையாள படுகிறது.
இதற்கு நியாய அதிதேசம் (applying same rule) என்று பெயர்.
இந்த பிராணாதிகரணத்தை தனி அதிகரணமாக அமைப்பான் என்? என்னில் இதில் சொல்லப்பட்ட பிரஹ்ம வித்தை வேறு என்பதால்.
என்றாலும் ஒரு அதிகரணத்துக்கு உண்டான அமைப்பான
விஷய வாக்கியம்
சம்சயம்
பூர்வ பக்ஷம்
ஆட்சேபம்,
சித்தாந்தம்
என்கிற நியதிப்படி இங்கு பேசப்பட வில்லை.
விஷய வாக்கியம், சித்தாந்தம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
எனவே இந்த அதிகரணம் ஆகாசாதிகரணத்தின் சேஷம் – தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது. எனவே சங்கதி தனிப்பட சொல்லவில்லை.
பூரவாதிகரணத்துடைய சங்கதியே இந்த பேடிகாவில் உள்ள மற்ற 3 அதிகரணத்துக்கும் பொருந்தும் என்பதால்.
விஷய வாக்கியம் ::
சாந்தோ. அத்.1 கண்ட.9 மந்திரம் 9.
ஓம் இத் ஏதது அக்ஷரம் உத்கீதம் உபாசீதா . . . .ஓம் இதி உத்காயதி ஏவம் தஸ்ய (அக்ஷரஸ்ய) உபவியாக்கியானம் என்று தொடங்கி
உபாஸனா ஸ்வரூப பலம் இப்படி இன்னது என்று விவரிக்கப் படுகிறது மேல்.
அகார உகார மகாரமிதி தான்ஏகதா சமபர ததா ஓம் இதி யமுக்த்வா முச்சதே யோகி ஜன்ம ஸம்சார பந்தநாத்
நாராயண மந்திரத்தோடு ஓம் என்கிற பிரணவத்தை சேர்த்துப் படிப்பதுபோல்
சிவ பஞ்சாக்ஷரத்தில் பிராம்மணர்கள் “ஓம்” என்கிற ஆக்ஷரத்தை சேர்ப்பதில்லை . வீர சைவர்கள் அத்தை ஷடாக்ஷரியாகப் படிப்பது சரியா என்றால், அது சரி இல்லை. காரணம்
அ = அகாரார்த்தோ விஷ்ணுஹு:
ம = ஜீவ:
உ = தத் சம்பந்தம் அநயோஹோ
என்று இருக்கிற படியால், பிரணவத்தால் சிவ பாரம்யம் சொல்ல வழி இல்லையாதலால்.
அத்வைதிகள் பிரணவத்தை மாத்திரம் தனித்து உச்சரிப்பது கூடும் என்ற விதத்தில் அதை அனுஷ்டிக்கின்றனர்.
அதில் நமக்கு உடன்பாடு இல்லை. காரணம் :
அஷ்டாக்ஷரியில் உள்ள, மந்திர சேஷாத்தின் ”ஆய ” என்கிற 4 ஆம் வெறுமை உருபு , பிரணவத்தின் ஏறிக் கழியும் . அதன்படி
அ + உ (+ஆய) + ம = அ + வுக்காகவே + ம = என்கிற லுப்த சதுர்த்தி எறிகழிந்த பிராணவத்தால் தேறுகிற அர்த்தம்
”ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்” என்பது.
இது அஹம்பிரஹ்மாஸ்மி என்பதை பிரஹ்ம பிரகாரோஸ்மி – பிரஹ்ம இஹ பவதி என்று படிப்பதோ டொக்கும் .
அப்படி அன்றிக்கே , தனிப் பிரணவம்
அ + உ + ம = அ + வே + ம = என்பதில் அஹம் பிரஹ்மைக பவதி என்பாதாக அத்வைதம் சித்திக்கும்.
எனவே தனிப் பிரணவம் நம்முடைய அனுசந்தானத்தில் இல்லை.
இப்படி பிரணவத்தை விளக்குகிற சந்தர்பத்தில், இந்த பிராண விதயா, ஆகாச வித்யா, அந்தர அஷி வித்யா போன்ற வித்யைகள்
படிக்கப்படுவதால் பிரணவ உபாசனம் இவைகளுக்கு அங்கமாகிறது.
உஷஸ்திசாக்ராயணருக்கும் ஒரு ராஜாவுக்கும் ஏதோ ஒரு யக்ஞம் செய்கிற சமயத்தில் நடந்த சம்வாதம்தான் இந்த பிராண வித்யா என்பது.
இதன் விஷயம் என்னவென்றால் ,
யஜ = தேவ பூஜாயாம் என்கிற தான்யங்களைக் கொண்டு செய்கிற யஜ்ஞத்தை விட
அந்தர் யஜ்ஞம் பற்றி தைத்ரீய உபநிஷத் 4வது ”அந்தஸி ” அத்யாயத்தில்
”தஸ்ய ஏவம் விதுஷோ யக்ஞஸ்ய ஆத்மா எஜமானன் ஷ்ரத்தா பத்தி சரீரம் . . . .என்பதாக யஜ்ஞத்தில் சேர்க்கக்கூடிய
நெய் – காமம்
பசு – மன்யு (கோபம்)
யாக அக்நியில் ஹவிசாக்கிச் செய்கிற
ஹோதா – பிராண
உத்காதா – ஸக்ஷுர்
பிரம்மா – மனஸ் என்றும்,
ஸ்ரேயான் திரவ்ய மயா யஜ்ஞாது ஞான யஜ்ஞ : என்று பகவத் கீதையிலும் சொல்லப்பட்டபடி-
ஞான யஜ்ஞம் திரவ்ய யஜ்ஞத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமானது.
பிரஹ்ம ஞானியாக இருப்பவன், யுக்தமான சிஷ்யனுக்கு வேண்டியும் பிரஹ்ம ஞானத்தை அளிக்காவிட்டால்,
அதேபோல் சிஷ்யன் ஒரு சதாசாரிய னிடமிருந்து பிரஹ்ம ஞானத்தைப் பெற்று அதைப் புரிந்துகொண்டு செயல் படாவிட்டால்,
அந்த ஞானம் , மூர்த்தாது வியபதிஷ்யதி (தலை அறுந்து விழும்) என்கிற கணக்கில் இருவருக்கும் காரியகரம் ஆகாது.
பிரஹ்ம ஞானம் சித்திக்காமல் போய்விடும். பரமாத்மா சாஷாத் காரம் ஏற்பட்டிருந்தாலும், அதற்கான பலன் கிட்டாது வியர்த்தமாய்ப் போய்விடும்.
என் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாசுதேவோ ந சிந்தியதே
ஸாஹாநிஹி , மஹத் துக்கம், ஸ : பிராந்திஹி ஸச விக்ரியா -என்கிற நிலையை –
மூர்த்தாது வியபதிஷ்யதி (தலை அறுந்து விழும்) – என்று சொல்வதாகக் கொள்ள அமையும்.
அத: ஏவ பிராண : சூத் . 1-1-24. (அதிக. – 9-24) –என்றவாறு
அதைப் போலவே பிராண ஸப்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி இதுக்கு விஷய வாக்கியம் பின் வருமாறு :
பிராண இதிஹோ வாச : ஸர்வாணி நவா இமானி பூதாநி பிரணமேவா அபிசம் விசந்தி பிராணம் அப்யுஜ்ஜுகதே
சைஷா தேவதா பிரஸ்தாவம் மன்வா எத்தா தான் சேத் வித்வான் பிரஸ்தோஷ்ய : மூர்தாது வியபதிஷ்தபோ தஸ்ய மயா இதி –
ஸர்வாணி இமானி பூதாநி பிராணத்திலிருந்து உண்டாகிறது. பிராணத்தாலேயே ஜீவிக்கிறது. பிராணத்திடமே போய் சேருகிறது.
அதிகா ஸங்கா :
பூத ஜாதமெல்லாம் பிராணாதீனம். பிராணன் இருக்கும் வரைதான் அவை உயிர் வாழும் என்பது தெரிந்ததே.
ந பிராணஓ வாயு மாத்திரம் . ந கிரியா . உள் இழுத்து வெளி விடும் வியாபாரம் அன்று.
தேஜஸ் போன்று அதுவும் ஒரு வஸ்துவா என்றால் அப்படியும் இல்லை ஆனால் திரவியம் .
நாக : கூர்மம் கிருதர: தேவதத்த தனஞ்ஜய : என்றும்,
பிராண, வியான, அபான, உதான , ஸமான : என்றும் அதனதன் இட சஞ்சாரங்களைப் பொருத்து நம் உடலில் நாட்டையாடும் வாயு 10 விதம்.
ஒருவர் இறந்து விட்டாரா அல்லது நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை அறிய, மூக்கருகில் நூல் பிடித்துப் பார்ப்பது வழக்கம்.
உஸ்வாச – நிஸ்வாசம் இல்லாதபோது இறந்து விட்டார் என்று அறிகிறோம்.
பிராணன் என்றால் என்ன? பிராணாபான சம்யோகம் என்றால் என்ன? இந்த பிராணன்தான் ஆத்மாவா அல்லது அதற்கும் மேற்பட பரமாத்மாவா ?
இவை எல்லாம் புரிந்து கொள்வது சுலபம் இல்லை.
சித்தாந்தம் :
எப்படி (கீழ் சூத்திரத்தில் சொல்லப்பட்ட) ஆகாச சப்தம் பிரஸித்த ஆகாசத்தைக் குறிக்காதோ , அதேபோல இந்த இடத்திலும்
பிராண சப்தம் பிரஸித்த பிராணனாகிற வாயு சஞ்சாரத்தைக் குறிக்காது –
பிரஸித்த பிராண வியதிருக்கத பரஸ்மின் ஏவ வர்த்ததே – காரணம்
தத் அசாதாரண நிகில ஜகத் பிரவேச, நிஷ்கிரமணாதி லிங்காத் பிரசித்தவந் நிர்தேச: –
ஸ்ருஷ்டி, ஸ்திதி லிங்கத்தை அசாதாரணமாக உடையது பிரஹ்மம் என்கிற பிரபலர் வாக்கியம்.
”தத் சிருஷ்டா ததேவ அனுப்பிராவிஸது” , ”பிரணமேவா அபிசம் விசந்தி” என்ற இந்த அடையாளங்கள்
பிராணனிடத்தில் உள்ளது என்றால், பிராண சப்தம் பரமாத்ம வாசி என்பதாகவே பொருள் படும்.
பரஸ்மின் ஏவ ப்ரஹ்மம் குறிக்கும் என்று சித்தாந்தம் –
பிராண-என்பது – வாயு மட்டும் இல்லை -க்ரியா ரூபமும் இல்லை -விலக்ஷணமான -பஹு வித உபக்ரியா-உத்க்ருஷ்டமான தத்வம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
யோகிகள் மட்டும் அறிவார்கள் -திவ்யம் -புலன்களால் அறிய முடியாத –
வாக் -மனஸ் -சம்பாத்தித்ததே –மனஸ் ப்ராணே -பிராணன் தேஜஸ் -தேஜஸ் பரஸ்யா-பரப்ரஹ்மம் இடம் லயம் –
சேதன ஸ்வரூபத்துக்கு மட்டும் -அசேதனத்துக்கு இல்லை –
ஹரணம் -அபஹரணம் -பிராணம்-எதிர்மறை -மன பிராணே தாது –
ஆகாசம் பிராணம் -ஜோதி இந்திர– நான்கும் -விபர்யயம் தவிர்த்து பர ப்ரஹ்மம் ஒன்றையே காட்டும் –
நிகில ஜகத் ஏக காரணன் -அபஹத பாப்மாத் -சர்வாதிகன் –சத்ய சங்கல்பாதி-
—————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply