ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –108–அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும்-இத்யாதி –

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
ஸ்ரீ இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-100 –என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே விததே நம யச்மர்திஸ் சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
நிகமத்தில் –
கீழ் இரண்டு பாட்டிலும் ஸ்ரீ எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே
எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற படியையும் –
அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ வ்ர்த்திகளும்
பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய அபிமத்தை அருளிச் செய்து –
இப்பாட்டிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே
அலங்கரித்து ஸ்தாவர பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹ அதிசயத்தை கொண்டு
திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று
பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான
தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது –
ஸ்ரீ இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு– தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-
அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் –
அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
ஸ்ரீ அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார்

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பத உரை –
நெஞ்சே -மனமே
பக்தி யெல்லாம் –-பக்தி யானது முழுதும்
தங்கியது என்ன -நம்மிடமே குடி கொண்டு விட்டது என்று சொல்லும்படி
தழைத்து -செழித்து
பொங்கிய -விரிவடைந்த
கீர்த்தி -புகழ் வாய்ந்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அடிப்பூ-திருவடிகளாகிற மலர்
நம் தலை மிசை –நம்முடைய தலையின் மீது
மன்ன-பொருந்தி எப்பொழுதும் இருக்கும் படியாக
அம் கயல் -அழகிய மீன்கள்
பாய் -பாய்கிற
வயல் -வயல்களை உடைய
தென் அரங்கன் -அழகிய ஸ்ரீ திரு வரங்கத்தின் கண் உள்ள ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அணி ஆகம் -அழகிய திரு மார்பிலே
மன்னும் -எப்பொழுதும் பொருந்தி இருப்பவளும் –
பங்கயம் -தாமரை என்னும்
மா மலர் -சீரிய பூவிலே பிறப்பினை உடையவளுமான
பாவையை -பெண் மணியான ஸ்ரீ ரங்க நாச்சியாரை
போற்றுதும் -ஆஸ்ரயிப்போம்

வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது
(ப்ராப்ய ருசியை பக்தி என்கிறார் -கைங்கர்ய உபயோகி என்றபடி -போஜனத்துக்கு ஷூத்து போலே )
நிரவசேஷமாக -(மிச்சம் இல்லாமல் முழுவதுமாக )-நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடையரான எம்பெருமானார் உடைய திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
(ப்ராப்ய ருசி என்னும் செடி தழைக்க -ராமானுசன் அடி பூ முளைக்க-அத்தை சென்னியில் சூடுவோம் -என்றபடி )
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று
ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய தர்சநீயமான கோயல்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –தர்சநீயமான கோயிலையே
தமக்கு நிரூபகமாக உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய திரு மார்விலே –
இறையும் அகலகில்லேன் -ஸ்ரீ திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம் பண்ணா நிற்பாளாய்–
ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் – நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் —

போற்றுதல் -வணங்குதல் –புகழ்தலுமாம்-

அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு –அணி யாக மன்னும் — – என்றார்
அங்கு –இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –1- – என்றார்–
இங்கு –தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் –
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு —நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .

இத்தால்
1-ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-ஸ்வ கடாஷ விசேஷங்களாலே
உண்டாக்கி யருளும் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்றும் –
2-ப்ராப்யம் தான் ஸ்ரீ ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
3-அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
4-இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே –
மண்டல அந்தாதி -திருவில் ஆரம்பித்து திருவில் முடித்து
வீட்டுடைத்த தலைவி தானே ப்ராப்யம் அருளுவாள்-ஆச்சார்ய கைங்கர்யம் -யவாதாத்மபாவி –
ஸ்ரீ பிராட்டிக்கு விசேஷணம் ஸ்ரீ தென்னரங்கன் -பிராட்டி இருப்பிடம் என்றே ஸ்ரீ தென்னரங்கன் –
பிரபை-ஸூரியன்–ஆகம் மன்னும் -மாது பொருந்திய மார்பன் –
பாவையைப் போற்றுதும் -திவ்ய தம்பதியைப் போற்றுதும் -சூழ்ந்து இருந்து ஏத்துவோம் பல்லாண்டு
சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –இதுவே கர்தவ்யம் -சதாசார்ய பிரசாதத்தால் -திவ்ய தேச கைங்கர்யம் –
நிர்ஹேதுகமாக பரம கிருபையால் பரகத ஸ்வீகார பாத்திரமான பின்பு மங்களா சாசன பரராக இருந்தோம் என்று
திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து இத்தால்
நாமும் இப்பிரபந்தம் சொல்லி இப் பேறு பெறுவோம் என்று அருளிச் செய்கிறார் –
பதஞ்சலி யோகம் பலன் உத்சவங்கள் மூலம் நாம் பெரும் படி பண்ணி அருளிய ஸ்ரீ ஸ்வாமி கீர்த்தி எண் திசையும் பரவி உள்ளதே
திருவடி பூ சென்னியில் மன்ன வேண்டி யன்றோ -பூ மன்னு மாது மார்பிலே பொருந்தி இறையும் அகலகில்லேன் என்று
நித்ய வாசம் செய்து அருளுகிறாள் –

இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக் கட்டினவாறே
அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –
அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே –
இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி அனுபவித்து தலை கட்டுகிறார் –

1-பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –
பக்தி சப்த வாச்யம் எல்லாம் ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி
சம்ர்த்தமாய் இருக்கிற நெஞ்சே –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்-தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
நின்பால் –என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம் பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே –

அன்றிக்கே –
2–பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை
ஸ்ரீ எம்பருமானார் திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்– –
பக்தி எல்லாம் தங்கிய தென்னத் தழைத்து -சஹ்யத்தில் ஜலம் எல்லாம் கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே –
என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு பரி பக்குவமாய் படிந்து –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –

(பக்தி தங்கினது நெஞ்சிலும் ஸ்ரீ எம்பெருமானார் இடமும் என்று இரண்டு நிர்வாகம் –
ஸ்ரீ ஸ்வாமி தானே ஸ்ரீ அமுதனார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருமால் இரும் சோலை
அவை தன்னோடும் அன்றோ நித்ய வாசம் செய்து அருளுகிறார் )

பொங்கிய கீர்த்தி —
ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற கீர்த்தியை உடையரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய –

உபக்ரமத்திலே -கலை இலங்கு மொழியாளர் –பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே –
இங்கு பொங்கிய கீர்த்தி இராமானுசன் -என்கிறார் –
அடிப்பூ–கீழ் சொன்ன தழைப்பதோடு கூடி இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –
அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் -(திருவடியில் உபக்ரமித்து உப சம்ஹாரம் )
யாவதாத்மபாவி ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே —மன்னவே ––

அம் கயல் பாய் வயல் தென்னரங்கன் –
அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த தர்சநீயமான –
அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -ஸ்ரீ பெரிய பெருமாளையும் –
அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும்
அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –
அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய் –
உபக்ரமத்திலே –பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே –இங்கே மன்னும் -என்கிறார் –

அம் -அழகு
கயல்-மத்ஸ்யம் –
பாய்தல்-சலித்தல்
வயல்-கழனி
அணி -அலங்காரம் –
ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல் –

பங்கய மா மலர் பாவையை –
தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் –
அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும் நிரூபகமாவும் உடையவளாய் –
பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை என்னக் கடவது இறே –
பாவை -ஸ்திரீ –
அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு பங்கய மாமலர் பாவையை -என்கிறார் –

போற்றுதும் –
இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை – மங்களா சாசனம் பண்ணுவோம் –
போற்றுதல்-புகழ்தல் –

ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே -பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே –
உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி
பண்ணிக்-கொண்டு போரக் கடவன் -என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே ஸ்ரீ பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –

ஆக இத்தாலே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு –
அதற்கு பலமாக -இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று –
தாம் பெற்ற பேற்றை-தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –

அம் கயல் –போற்றுதும் –
நெஞ்சே பக்தி யெல்லாம் தங்கியது –என்னத் தழைத்து -நம் தலை மிசை -அடிப் பூ மன்ன
பாவையைப் போற்றுதும் -என்று கூட்டிப் பொருள் கொள்க –
ஸ்ரீ திருவரங்கத்தில் நீர் வளம் மிக்கு இருத்தலின் வயல்களிலும் நீர் வற்றாமையினால் அழகிய மீன்கள் –
ஓங்கு பெரும் சென்னலூடு கயல் உகள -ஸ்ரீ திருப்பாவை – 3- என்றபடி உகளா நிற்கின்றன .
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
ஸ்ரீ தென்னரங்கன் அணி ஆகத்தில் இறையும் அகலகில்லாது மகிழ்ந்து மன்னி உறைகிறாள் –பாவை
வயல்களிலே நீரை விட்டு அகலகில்லாது களித்து உகளா நிற்கின்றன -கயல்கள் –
ஜலான் மத்ஸ்யா விவோத்திரு தெவ்-என்று மீனின் இயல்பு கொண்டவளாகப் ஸ்ரீ பிராட்டியும் கூறப்படுவது காண்க .
நீர் உளது எனின் உளது மீன்
மார்பு உளது எனின் உளள் ஸ்ரீ மா மலர்ப் பாவை
நாரத்தை நீரை பற்றி உள்ளன கயல்கள்
ஸ்ரீ நாராயணனைப் பற்றி உளள் ஸ்ரீ பங்கயப் பாவை –

அணி யாகம் மன்னும் -என்கையாலே பகவானை-ஸ்ரயதே –ஆஸ்ரயிக்கிறாள் என்னும் பொருளும்-
போற்றுதும் -என்கையாலே சேதனர்கள் ஆகிற நம்மாலே ஆஸ்ரயிக்கப் படுகிறாள்-என்னும் பொருளும்
ஸ்ரீ சப்தத்துக்கு காட்டப் பட்டன –
இதனால் சேதனர்கள் உடைய விருப்பத்தை இறைவனைக் கொண்டு நிறைவேற்றித் தரும் தன்மை –
புருஷகாரமாய் இருக்கும் தன்மை-ஸ்ரீ பிராட்டி இடம் உள்ளமை உணர்த்தப் படுகிறது ..
தாமரையைப் பிறப்பிடமாக உடையவள் அதனை விட்டு மார்பிலே மன்னி விட்டாள் –
இதனை விட்டு இனி அகலாள்-அதற்கு ஹேது மார்பின் அழகுடைமை
இது தோற்ற அணி ஆகம் -என்றார் –
பாவை பதுமை போல கணவனுக்கு பர தந்திரையாய் இருத்தல் பற்றி -பெண்களுக்கு உவமை ஆகு பெயர் –

ஸ்ரீ தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
ஸ்ரீ பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை –
ஸ்ரீ பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் –போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .

பக்தி யெல்லாம் தங்கியது என்னத் தழைத்து –
இங்கே பக்தி என்பது பேற்றினைப் பெறற்கு சாதனமாகக் கைக் கொள்ளும் சாதனா பக்தி யன்று -.
போஜனத்திற்கு பசி போலே பேற்றினைத் துய்த்துதற்கு -தேவைப் படுகின்ற வேட்கை யாகும் –
இது ப்ராப்ய ருசி -எனப்படும் –
அந்த ப்ராப்ய ருசி எந்த விதம் யெல்லாம் வர வேண்டுமோ -எவ்வளவு வர வேண்டுமோ –
அவ்விதம் அவ்வளவு -முழுவதும் நிறைவேற வேண்டும் .
பிராப்ய ருசி முழுதும் நம்மிடம் குடி புகுந்து விட்டது -என்று சொல்லலாம்படி தழைத்து இருக்க வேண்டும் –
என்று அமுதனார் ஆசைப் படுகிறார்

இவர்க்கு பிராப்யம் -ஸ்ரீ எம்பெருமானார் அடிப்பூ மன்னுதல் –
அதனுக்கு ஏற்ப பூரணமாக ப்ராப்ய ருசியை வேண்டுகிறார் .
தழைத்து மன்ன -என இயைக்க –
பசித்து உண்ண -என்பது போன்றது இது –
நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 –
என்று இப் பேற்றின் சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்–நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று சரணாரவிந்தம்
எப்போதோ என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருக்கிற நம் தலையிலே -என்றபடி
பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் –திக்குற்ற கீர்த்தி –என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
போற்றுதல்-ஆஸ்ரயித்தல்-புகழுதலும் ஆம் –
உயரினங்கள் அனைத்துக்கும் தம் தம் தகுதிக்கு ஏற்ப -கோரும் அவ்வச் செல்வங்களை –
தன கருணோக்தங்களால் உண்டாக்கி -அளிக்க வல்லவளான ஸ்ரீ பிராட்டியே
சரம பர்வ நிஷ்டர் – தம் தகுதிக்கு ஏற்ப கோரும் ப்ராப்ய ருசி எனப்படும் –
பக்தியின் வளப்பமும்-ப்ராப்யமான -அடிப்பூவுமாகிற செல்வங்களை தந்து அருளால் வேண்டும் என்பதையும் –
சரம பர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆசார்ய சரணாரவிந்தம் என்பதையும் –
அது –அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -3 –
இங்கும் பரம பதத்திலும் எவருடைய திருவடிகள் என்றும் எனது சரணாம் -என்றபடி
பிரிவின்றி நிரந்தரமாய் உள்ளதொன்று என்பதையும்
இத்தகைய பேற்றினில் மிக்க ஈடுபாடு உடையோர் ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரிகள்
என்பதையும் இங்கே ஸ்ரீ அமுதனார் காட்டி அருளினார் ஆயிற்று –

வந்து அருளி நெஞ்சில் இடம் கொண்டதுக்கு இதுவே பலன்
சரணார விந்தம் நாம் மன்னி வாழ -அடி பூ மன்ன -பலன் பாவையை போற்றுவதே என்கிறார்–

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று –
நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது
இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்

குருகூரன் மாறன் அடி பணிந்துய்ந்த குருவரன் தான்-தரு கூரன் பார்ந்த திருமலை நல்லவன் தந்தனனால்-
குருகூரர் நாதன் சரண் சேரமுதன் குலவு தமிழ்-முருகூரந்தாதி யமிழ்தினை இப்பார் முழுதுக்குமே – –

குருவரன் -சிறந்த ஆசாரினாகிய ஸ்ரீ எம்பெருமானார் –
கூரன்பு -மிக்க அன்பு
ஆர்தல் -நிறைதல்
திருமலை நல்லவன் -ஸ்ரீ திரு மலை நல்லான்
குருகூர் நாதன்-குருவான ஸ்ரீ கூரத் ஆழ்வான்
அமுதன் -ஸ்ரீ திருவரங்கத் தமுதனார்
குலவுதல்-கொண்டாடுதல் -பழகுதலுமாம்
முருகு -மணம் -தேனுமாம் –
நல்லவன் அமிழ்தினை இப்பார் முழுதுக்கும் தந்தனன் -என்று கூட்டி முடிக்க –

——————–

தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-

செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1-

நங்கள் திரு (இரண்டாம் திருவந்தாதி -56-திருமாலை முன் பேணிக் காட்டும் -பொன் மேனி காட்டா முன் ) என்றும்
உன் திரு (திரு வாய் மொழி 10-10-2 -மார்வத்து மாலை -உனக்கே திரு என்றும் உன் திரு -விஷ்ணுவுக்கும் சொத்து) –
என்னலாம் படி இரண்டு இடத்திலும் விட ஒண்ணாத பந்தம் உண்டு ..

செல்வர் பெரியர் (நாய்ச்சியார் திருமொழி 10-10-சிறு மானிடர் நாம் )
அவன் எவ் இடத்தான் நான் யார் ( அம்மான் ஆழிப் பிரான்-திரு வாய் மொழி 5-1-7 ) என்றும் –
செய் வினையோ பெரிதால் (திரு வாய் மொழி 4-7-1 ) என்று
(சீலமில்லாச் சிறியனேலும்–ஆத்மா அணு மட்டுமே உள்ளது ஞானம் மறைந்து -செய்வினையோ தத்வத்ரயத்தை விட பெரியதாக இருப்பதால் -)
அவன் பெருமையையும் , தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும் நினைத்து அஞ்சினவர்கள்

இலக்குமணனோடு மைதிலியும் ( பெரிய திரு மொழி 2-3-7 ) என்னும் படி ,
தன்னோடு ஒரு கோவையான இளைய பெருமாளோ பாதி
கீழ் மகன் மற்றோரு சாதி ( பெரிய திருமொழி 5-8-1 ) பிரதம பதார்த்தம் ..

சிறு காக்கை ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-6 )
புன்மையாளன் (பெரிய திரு மொழி 10-2-8 )
அடியார் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என்று தண்மை பாராமல்

நாடும் காடும் மேடும் கல்லும் கடலும் ஒரு வெளுப்பாம் படி ,
பங்கயத்தாள் திரு வருள் (திரு வாய் மொழி 9-2-1 ) என்கிற தன்னுடைய காருண்ய வர்ஷத்தைச் சொல்லுகிற

மழைக் கண்களுடைய ( திரு விருத்தம் -52 )
பார் வண்ண மட மங்கையாய் ( ) அசரண்ய சரண்யையான இவளே நமக்கு புகல் என்று
புகுந்து கைங்கர்ய பிராப்த உபாயத்தில் அபேக்ஷிக்கல் தோற்ற விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு –

அஸ்து தே என்று தொடங்கி இவர்கள் வினைகள் தீர்த்து
தூவி சேர் அன்னமான (பெரிய திருமொழி 3-7-9 ) தன் சிறகிலே இட்டுக் கொண்டு ,
ஈஸ்வரன் இத்தலையிலே பிழைகளை நினைத்து
எரி பொங்கி (நான்முகன் திருவந்தாதி -21 )
அழல விழித்து (பெரியாழ்வார் திருமொழி 1-8-5 )
சலம் புரிந்து ( திரு நெடும் தாண்டகம் -6 ) அங்கு அருள் இன்றிக்கே சீறி – கலங்கின அளவிலே

நன் நெஞ்சவன்ன மன்னமை தோற்ற (பெரிய திருமொழி 7-2-7 ) கால் வாங்கி கடக்க நின்று இரண்டு தலையும் பட்டது பட
நம் கோலரியான குடி இருப்பை முதல் திருத்த வேணும் என்று பார்த்து

ஹிரண்ய வர்ணனையான தன்னுடைய பாண் மொழிகளாலே (பெரியாழ்வார் திரு மொழி 3-10-5 )
பிரிய ஹிதங்கள் குலையாதபடி இடம் அற வார்த்தை சொல்லி ஆர விட்டு

வடி கோல வாள் நெடும் கண்களாலே ( ) தேற்றி

திரு மகட்கே தீர்ந்த வாறு ( முதல் திரு வந்தாதி -42 ) என்னும் படி
திரு உள்ளம் மாறாடின அளவிலே ஓடம் ஏற்றி கூலி கொள்வாரைப் போல அபராதங்களைப் பொறுப்பித்து

பொன் பாவை ஆனமை (நான் முகன் திருவந்தாதி -59 ) தோற்றும் படி விளக்குப் பொன் போல
இரண்டு தலையையும் பொருந்த விட்டு

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் (திரு வாய் மொழி 4-5-8 ) என்னும் படி ஏக ரசமாக்கி பின்பு
அந்தப்புரத்தில் ஆளாய் நின்று

இரந்து உரைப்பது உண்டு (திருச்சந்த விருத்தம்-101 )
வேறே கூறுவது உண்டு ( பெரிய திரு மொழி 6-3-7 )
நின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம் -1 )
போற்றும் பொருள் கேளாய் (திருப் பாவை -29 ) என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை

திரு மங்கை தங்கிய (நாய்ச்சியார் திரு மொழி -84)
என் திரு மார்வற்கு (திரு வாய் மொழி 6-8-10 )
ஒரு வாய் சொல் (திரு வாய் மொழி 1-4-7 )
என் வாய் மாற்றம் ( திரு வாய் மொழி 9-7-6) என்னும் படி சேர இருந்து
திருச் செவி சாத்துகையாலே ஸ் ருணோதி /ஸ்ரா வயதி -என்கிற இரண்டாலும்
புருஷகாரமான இவளுடைய செயல்களைச் சொல்லுகிறது ..

செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு ( பெரிய திருமொழி 5-8-2 ) என்று இரண்டு தலைக்கும் தலை தடுமாறாக உபகரித்து
தன் சொல் வழி போக வேண்டும் படியான திருவடியோடே மறுதலிக்கும் அவள்

தான் முயங்கும் படியான போக்கியதைக்குத் தோற்று (மூன்றாம் திருவந்தாதி -100 ) எத்தைச் செய்வோம் என்று தலை தடுமாறி

நின் அன்பின் வழி நின்று ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-7)
அதனின் பின்னே படர்ந்தான் ( பெரிய திரு மொழி 2-5-6 ) என்னும் படி ,

விளைவது அறியாதே முறுவலுக்குத் தோற்று தன் சொல் வழி வரும் அவனைப் பொறுப்பிக்கும்
என்னும் இடம் சொல்ல வேண்டா இறே ..

—————————————————————————————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading