இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் ஸ்ரீ அமுதனார்-
ஆழ்வார் அவதார ஸ்தலங்கள்
திரு மழிசை-மழிசைக்கு இறைவன் 1
திரு கொல்லி நகர் 1
திரு குறையலூர் 1
திவ்ய தேசங்கள்
1-திரு குருகூர் மூன்று பாசுரங்கள்
2-திரு அரங்கம் 14 பாசுரங்கள்
3-திரு வேங்கடம் -2 பாசுரங்கள்
4-திருக் கச்சி- 1 –
5-திரு கோவலூருக்கு -1-
6-திரு மால் இரும் சோலை -1-
7-திரு கண்ண மங்கை நின்றான்–1-
8-திரு பாற்கடல் 2-
9-திரு பரம பதம் -2-
—————-
இராமானுச நூற்றந்தாதியில்-12- திவ்ய தேச மங்களா சாசனம் –
1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/
இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/
செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-
2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-
3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-
4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-
5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-
6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-
7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-
8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-
9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-
10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-
11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-
12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம்
தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –
————–
ஸ்ரீ விபவ அவதார அனுபவம்–14-பாசுரங்கள்-
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் -1- பாசுரம்
ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்
அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்-
1-கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –
2-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –
3-அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –
4-அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –
5-சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –
6-ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68-
7-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –
———
ஸ்ரீ ராமாவதாரம்-1-பாசுரம்
1-படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-
————
ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-
——————
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்
வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103-
————–
ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்-
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –
செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –
——————
அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –
—————-
ஸ்ரீ யபதித்தவம்
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-
ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் .7 வது பாசுரமாக கொண்டு போனால்
திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-
பூ மன்னு-1- அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
1-பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
2-கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
3-அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
4-வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
5-நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
6-அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
7-மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
8-மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
9-மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
10-ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
11-மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
12-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-
———-
சொல்லுவோம் அவன் நாமங்கள் -குணங்களை சொல்வதே திரு நாமம் -அருளிச் செய்த குணங்கள் –
1-மிக்க சீலம் /
2-பொருவரும் சீர் /
3-மன்னிய சீர் /
4-பெரும் கீர்த்தி
5-பிறங்கிய சீர் /
6-வள்ளல் தனம் /
7-நயப் புகழ் /
8-தன் ஈறில் பெரும் புகழ்
9-வாமனன் சீலன் இராமானுசன் /
10-தூயவன் தீதில் இராமானுசன் /
11-திசை அனைத்தும் ஏறும் குணனை
12-தொல் சீர் எதித்தலை நாதன் /
13-அற்புதன் -என்னை ஆள வந்த கற்பகம் /மண்ணுலகில் ஈட்டிய சீலத்து
14-பார்த்து அருளும் கொண்டல் /
15-உத்தமன்
16-புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி
17-சுடர் மிக்கு எழுந்த தொல் புகழ்
18-உன் பெரும் கருணை
19-வண்மை இராமானுசர்
20-மிக்க வண்மை
21-வண்மை –மா தகவு /மதி புரையும் தண்மை/
22-கொண்டல் அனைய வண்மை
23-மொய்த்து அலைக்கும் நின் புகழே
24-சீர் ஒன்றிய கருணை
25-தெரிவுற்ற கீர்த்தி
26-கார் கொண்ட வண்மை
27-சீர் வெள்ள வாரி
28-உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
29-போற்ற யரும் சீலம்
30-ஈண்டிய சீர்
32-அனைத்தும் தரும் அவன் சீர்
33-கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
34-மெய்யில் பிறங்கிய சீர்
35-இன்புற்ற சீலம்
36-பொங்கிய கீர்த்தி
———————-
ஸ்ரீ இராமானுசன் குண அனுபவம் –
மிக்க சீலம் அல்லால் உள்ளது என் நெஞ்சு -2-
பொரு வரும் சீர் ஆரியன் செம்மை -3-
அவன் மன்னிய சீர் தனக்கு உற்ற அன்பன் -4-
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் –7-
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-
மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –
காரேய் கருணை இராமானுசா–வந்து நீ என்னை யுய்த்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –
என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை–26-
உன் வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்–27-
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ்–28-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-
அன்பன் அனகன்–30-
அன்பாளன்–31–
ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்–32-
நயப் புகழே -34 –
நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் –38-
தன்னீறில பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –
வாமனன் சீலன்–40-
தூயவன் தீதில் இராமானுசன்–42-
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-
அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற் கூறும் பரம் அன்று–45-
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை–48-
தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியர்க்கு அமுதம் –51-
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் –53–
மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன்–54-
தொகை யிறந்த பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை–55–
புனிதன் புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை–56-
உத்தமனை நற்றவர் போற்றும் இராமானுசனை–57-
எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58–
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –
எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61-
மிக்க பண்டிதனே – 63- –
யுன் பெரும் கருணை–70-
வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-
நிறை புகழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72-
வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-
கொண்டலனைய வண்மை ஏரார் குணத் தெம்மி ராமானுசன்–74-
நின் புகழே மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-
யுன் சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81–
என்ன புண்ணியனோ ! தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –
கார் கொண்ட வண்மை –83-
அவன் சீர் வெள்ள வாரியை–84-
தன் குணம் கட்கு உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் –87-
போற்றரும் சீலத்து இராமானுச–89-
தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –
நூற் புலவர்க் கெண்ணரும் கீர்த்தி இராமானுச !–92-
இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –
தன் தகவால் தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி–99-
உனதடிப் போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி–100-
நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102-
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –
இன்புற்ற சீலத்து இராமானுச –107-
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-
————————
ஸ்ரீ இராமானுசன் திரு உள்ள மகிமை –
பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-
பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-
மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-
சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்–20-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் –35-
ஒண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன்–36-
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலில்–37-
வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன்
கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்–103-
———————–
ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு-
இதத்தாய் ராமானுஜன் –
மறை யதனின் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே –
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே –
மா முனிகளாக புனர் அவதாரத்தில் செய்து அருளினாரே
சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற –
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் அன்றோ அனந்தாழ்வான் வணங்குகிறார்
இராமானுச முனியே –மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கும் மனம்
நீ எனக்குத் தா -எம்பார் பிரார்திக்கிறார்-
இராமானுச நூற்றந்தாதியில் -25-பாசுரங்களில் ஆழ்வார் திருவடிகளில்– அருளிச் செயலில்
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் புக்கும் இராமானுசன் –
புகழ் மலிந்த பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன்–1-
சடகோபனைச் சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் –18-
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்–19-
திருவாய் ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும்
சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –20-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்-29-
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-
தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –
திரு வாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன்
பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்–64-
—–
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத வன்பன் –2-
நீலன் தனக்கு உலகில் இனியானை–17-
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –88-
—-
பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-
பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-
மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-
சீரரங்கத் தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்–13-
கொல்லி காவகன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்–14-
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-
சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் –16-
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-
—————
ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் –
தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –
நான்கினும் கண்ணனுக்கே யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 –
மா மலராள் நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 –
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்–47-
கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும் நற் பொருள் தன்னை
இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –
உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-
தன்னை வணங்க வைத்த கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –
மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனை–68-
வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-
இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் –79-
தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply