ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –82-தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் -என்று கீழ்ச் சொன்ன
பேற்றுக்கு உடலாக தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து – வித்தராய் –
ஸ்ரீ எம்பெருமானார் என்ன தார்மிகரோ -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச –என்று
கீழ் பிரஸ்த்துதமான பரம புருஷார்த்தத்துக்கு உறுப்பாக சம்சார ப்ரவ்ருத்திகளிலே மண்டி இருந்து
சம்ய ஜ்ஞ்ஞானத்தை பெற மாட்டாதே -அதி குரூரமான துஷ் கர்மத்தாலே தேகாத்மா அபிமானியாய் கொண்டு –
ஒன்றிலும் ஒரு நிலை இன்றிக்கே தட்டித் திரிகிற என்னை –
ஆண்டுகள் நாள் திங்கள் -என்றால் போல் சிர காலம் கூடி இன்றி அன்றிக்கே-
1- ஒரு ஷண மாத்ரத்திலே-2- தானே நிஸ் சம்சயமாக -3-தத்வ ஹித புருஷார்த்தங்களை-தத் யாதாம்யத்தளவும் உபதேசித்து –
4-உபமான ரஹீதமான ஸ்ருதயத்தை உடையேனாம் படி பண்ணி-
5-சர்வ விஷயமாக வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் என்னலாம் படி –
பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானார்-என்ன தார்மிகரோ என்று அனுசந்தித்து வித்தார் ஆகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் ஸ்ரீ எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

பத உரை –
தெரிவுற்ற -விவேகத்தில் ஊன்றி நின்ற
ஞானம் -அறிவை
செறியப் பெறாது -அடையப் பெறாது
வெம் தீ வினையால்-மிக கொடிய பாவத்தினால்
உரு அற்ற -உருப்படாத
ஞானத்து -அறிவை உடையவனாய்
உழல்கின்ற என்னை -ஒன்றிலும் நிலை கொள்ளாமல் தடுமாறுகின்ற என்னை
ஒரு பொழுதில் -ஒரே வேளையில்
பொருவற்ற -ஒப்பற்றதான
கேள்வியன் -கேள்வி ஞானத்தை உடையவனாக
ஆக்கி-பண்ணி
நின்றான் -செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டதாக கால் பாவி நின்றார்
தெரிவுற்ற -உலகத்தினர் அனைவருக்கும் தெரிந்து உள்ள –
கீர்த்தி -புகழை உடைய
என்னும்-என்று வள்ளன்மையினால் சொல்லப்படும்
சீர் முகில்-சீர்மை வாய்ந்த மேகம்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
என்ன புண்ணியனோ -என்ன தருமம் செய்கிறவரோ –

வியாக்யானம் –
சத் அசத் விவேகத்தில் ஊற்றத்தை உடைத்தாய் இருக்கும் ஜ்ஞானத்தை சேரப் பெறாதே –
அதிக்ரூரமான கர்மத்தாலே ஒரு வஸ்து பூதமாய் கொண்டு -வடிவு பட்டு இராத ஜ்ஞானத்தைப் பற்றி –
ஒன்றிலும் ஒரு நிலை யற்றுத் தட்டித் திரிகிற என்னை –
சிரகாலம் கூடி யன்றிக்கே –
ஒரு ஷண காலத்திலே-உபமான ரஹீதமான -ச்ருதத்தை உடை யேனாம் படிபண்ணி –
ஒரு படி திருவடிகள் பூமியிலே நற்றரித்து தரித்து நின்றார் .
திக்குற்ற கீர்த்தி – -26 -என்கிறபடியே .
விசேஷஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசித்து
இருந்துள்ள குணவத்தா பிரதையை வுடையராய்-
குணம் திகழ் கொண்டல் – 60- என்னும்படியே
பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ !

உருவற்ற ஞாலத்து -என்று பாடமான போது –
உரு வென்று அழகாய் -அதாவது நன்மையாய் –
அது அறுகை யாவது -இன்றிகே ஒழிகையாய்-நன்மை என்பது ஓன்று இல்லாத ஜகத்திலே -என்கை ..
அப்போது தெரிவுற்ற ஞானம் -இத்யாதிக்கு –
சத் அசத் விவேகத்தில் ஊற்றம் உடைய ஞானத்தை ப்ராபிக்கப் பெறாதே -பிரபல கர்மத்தாலே –
ஒரு நன்மை இன்றிக்கே -ஹேயமாய் இருந்துள்ள ஜகத்திலே –
ஈண்டு பல் யோனிகள் தோர் உழல்வோம் -31 -என்கிற படியே –
நானாவித யோநிகளில் ஜநிப்பது-மரிப்பதாய் -தட்டித் திரிகிற -என்னை என்று பொருளாக கடவது .

தெரிவு-விவேகம்
உறுதல்-ஊற்றம்
அன்றிக்கே
தெரிவுற்ற ஞானம் -என்று பிரகாச யுக்தமான ஜ்ஞானம் என்றாய்
தத்த்வஸ்த்தியை யதா தர்சனம் பண்ணுகைக்கு உறுப்பான –விசத ஜ்ஞானம் –என்னவுமாம் –

தெரிவுற்ற கீர்த்தி -பிரகாச யுக்தமான கீர்த்தி
சீர் முகில் -சீரிய முகில் -அழகிய முகில் என்னவுமாம் .

தர்ம ஸ்தாபனம் வேத -பிரவார்த்தாச்சார்யார் –ஒரு பொழுதிலே மாற்றி –
ஸ்ரீ வாதி கேசரி மணவாள ஜீயர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -உலக்கை கொழுந்து -முசலை கிலேசயம் -எழுத வைத்து –
ஸ்ரீ பன்னீராயிரப்படி எழுத வைக்கும் சக்தி-
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு அவதாரம் ஸ்ரீ மன்னார் கோயில் -அம்பா சமுத்திரம் பக்கம் –
இங்கே தான் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருவரசும் உள்ளது

நின்றான் -நிலை பெற்று முகம் மலர்ந்து -நம்மை -அவனுக்கு அன்னம் ஆக்கிய பின்பு
புண்ணியம் ஈஸ்வர திரு முக மலர்த்தி -ஸ்ரீ அமுதனார் திருந்தக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ ரெங்கன் -இதையே புண்ணியன் என்கிறார் இங்கு
நீசனான என்னை -ஷணப் பொழுதில் -கடாக்ஷம் வீக்ஷணத்தாலே அனைத்தையும் அருளி –
நல்ல தெளிவுற்ற ஞானம்-சரம உபாயம் ஆச்சார்ய நிஷ்டை அன்றோ – -நிகர் அற்றவனாக்கி -திருத்தி -இப்படி நான்கும் –
பொருவற்ற கேள்வியனாக்கி அருளிய புண்ணியன்

பூண்ட நாள் சேர்க்க கடலை யுட்கொண்டு திரு மேனி நன்நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து
ஞான ஹரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து -கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்து
கண்டு உகந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூரும் அடியவர் -உறையில் இடாதவர் -புயல் கை அருள் மாரி-
குணம் திகழ் கொண்டால் -போல்வாரை மேகம் என்னும் -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -155-சூர்ணிகை–

தெரிவுற்ற ஞானம் தெரியப் பெறாது –
தெரிவு -விவேகம் -அதாவது -ஆத்மா அநாத்மா விஷயமாய் இருந்துள்ள புத்தி விசேஷம் –
ஆத்ம வஸ்து உபாதேயம் என்றும் அநாத்மாவான அசித் வஸ்து த்யாஜ்யம்-என்றும் விவேகிக்கை என்றபடி –

உற்ற ஞானம் –
அதிலே ஊற்றத்தை உடைத்தாய் இருக்கிற ஞானம் –
உறுதல் -ஊற்றம் -அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத -என்று ஸ்ருதியும் சொல்லிற்று இறே –
1-அமாநித்வ-2- மடம்பித்வ-3- மஹிம்சா 4-ஷாந்தி –5-ரார்ஜவம் -6-ஆசார்யோபாசனம்-7- ஸௌசம் (சுத்தி )-8-ஸ்தைர்யம்-
9- ஆத்மாவி நிக்ராஹ் -10-இந்திரியார்தேஷூ வைராக்கியம் -11-மநோஹன்கார ஏவச
12- -ஜன்ம ம்ர்த்யு ஜரா வியாதி துக்க தோஷ அநுதர்சனம் -13–அசக்திர 14-னபிஷ்வங்க புத்திர தாரா க்ர்ஹாதி ஷூ-
15- நித்யம் ஸ சம சித்தத்வம்-16- இஷ்டா நிஷ்டோப பத்தி ஷூ–
17-மயிச அநந்ய யோகே ந பக்தி ரவ்யபிசாரிணீ-18-விவிக்த தேச -தனியாக இருந்து – அரதி -கூட்டம் சேர ஆசை இல்லாமல் –
19- அத்யாத்மஜ்ஞான நிஷ்டத்வம் 20-தத்வ ஞானார்த்த சிந்தனம்–– ஆக -20-ஸ்ரீ கீதையில் காட்டி –
ஏதத் ஞான மிதிப்ரோக்த மஜ்ஞ்ஞானம் யததொன்யதா -என்றும்
சாவித்யாயா விமுக்தே -என்கிறபடியே –சத் அசத் விவேசன விஷயக பரிபூர்ண ஞானம் என்றபடி –

அன்றிக்கே தெரிவுற்ற ஞானம் என்றது –
பிரகாசோபா யுக்த ஞானம் என்றதாய் தத்வஸ்த்தியை யதா தர்சனம் பண்ணுக்கைக்கு உறுப்பான ஞானம் என்னவுமாம் –
தெரிவு -பிரகாசம் –உறுதல் -பொருந்துதல் –செறிய பெறாதே -பிராபிக்க பெறாதே –

தெரிவுற்ற ஞானம் —உழல்கின்ற என்னை
தெரிவு -நல்லதையும் அல்லாத்தையும் பகுத்து காணும் உணர்வு –
அதனில் ஊற்றம் பெற்ற ஞானம் தெரிவுற்ற ஞானம் –
உறுதல்-ஊற்றம் பெறுதல்
செறிதல் -சேர்த்தல்-அடைதல்-
தெரிவுற்ற ஞானத்தை நான் அடைய முடிய வில்லை
நேர்மாறாக உருவற்ற ஞானமே என்னை வந்து அடைந்தது .

ஞானத்திற்கு உருவற்றமை யாவது –
அறிவுக்கு புலனாகும் பொருள்களில் அந்தர்யாமியா எழுந்து அருளி -இருக்கும் இறைவன் அளவும் அவ் அறிவு
சென்று முழு வடிவம் பெறாது அரை குறையாய் உருப்பட்டு யாகாது இருத்தல்
நல்லதும் கொள்ளத்தக்கதுமான ப்ரஹ்மத்தைப் பற்றும் அளவும் -அறிவு வளர்ச்சி வுறின்
அவ்வறிவு முழு வடிவம் பெற்று -உருப்படியாய் நிலை குலையாமல் -அஃது உடையானை உய்விக்கும் .
இத்தகைய அறிவு இதுகாறும் எனக்கு கிடைக்காமல் போயிற்றே -என்னும் குறைபாடு தோன்ற –
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது -என்றார் –

உய்யச் செய்யும் அறிவு இல்லாததோடு -உழலச் செய்யும் அறிவே என்னிடம் குடி இருந்தது -என்கிறார் .
உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை -என்று —
உருப்படியான ஞானம் இல்லை -உருவற்ற ஞானமே இருந்தது என்றார் –
நல்லதை பற்றிய அறிவு என்னிடம் இல்லை -அல்லதை பற்றிய அறிவே என்னிடம் இருந்தது என்கிறார் –
அல்லதும் தள்ளத் தக்கதுமான பொருளைப் பற்றியதாக அறிவு இருப்பின் -அது முன்னம் –
இனிய பொருளைப் பற்றியதாக தோன்றி -கன்மத்திற்கு ஏற்ப -பின்னர் இன்னாப் பொருளாக மாறுபடும் –
அப்பொருளைவிட்டு -வேறு பொருளை நாடி -அலையும் -நாடிய பொருளுக்கும் -இதே நிலை தான் ஆதலின் –
மற்று ஒன்றை தேடா நிற்கும் -இங்கனம் அவ்வறிவு ஒன்றிலும் -நிலை நில்லாது –

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67 – என்றபடி
ப்ரஹ்மத்தை பற்றியது ஆகாமையாலே முழுமை பெறாது சிதைந்து உருவற்றதாகி விடுகிறது .
இத்தகைய ஞானத்தை உடையவனாய் இருத்தலினால் ஒன்றிலும் கால் பாவி நிற்க மாட்டாது
தட்டித் தடுமாறி உழன்ற்றதாகக் கூறுகிறார் .

இனி –தெரிவு உற்ற ஞானம் -என்பதற்கு
தெளிவை -பிரகாசத்தை -அடைந்த ஞானம் என்று உரைத்தலுமாம் –
அப்பொழுது -தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது-தத்துவத்தை உள்ளபடி காணும் தெள்ளிய அறிவு
செறியப் பெறாது -என்றது ஆயிற்று –

வெந்தீ வினையால் –
அநாதி காலம் பிடித்து இவ்வளவாக நித்ய சம்சாரியாய் போந்த நான் தீரக் கழியச் செய்த
அக்ருத்ய கர்த்தவ்யங்களால்-
வெம் -தீ -என்கிற மீமிசையால் அதினுடைய அதி க்ரௌர்யம் தோற்றுகிறது –

ஞானம் முழுமை பெறாது சிதைந்து உருவற்றுப் போவதற்கு ஹேது – வெந்தீ வினை -என்க –
பாபம் ப்ரஜ்ஞாம் நாசயதி -பாபம் அறிவை நாசம் ஆக்குகிறது -என்றபடி –
வெந்தீ வினை-ஞானத்தை உருப்பட ஒட்டாமல் -உருவற்றதாகி விடுகிறது என்க –
வெம் தீவினை –வெம்மையும் தீமையும் சேர்ந்து வினைக் கொடுமையின் மிகுதியைக் காண்பிக்கின்றன –

உருவற்ற ஞானத்து –
உரு மாய்ந்து கிடக்கிற ஞானத்தோடு -ஞானத்தோட சத்தை எல்லாம் போயிற்று என்றபடி –
அஞ்ஞானம் அதோன்யதுக்தம் -என்கையாலே இவ் விஷயங்களை அவஹாகிக்கிற ஞானம் எல்லாம்
உருவற்ற ஞானம் இத்தனை இறே –
உரு -வடிவாகையாலும்-
அர்த்தேனைவ விசெஷோஹி நிராகாரத்யாதியாம் -என்கையாலே அதுக்கு வடிவு விஷயம் ஆகையாலும்
சந்தம் -என்கையாலே அவ விஷயாந்தரமும் ஸ்ரீயபதி யாகையாலே ததரிக்த விஷயங்களை அவகாஹிக்கிற ஞானம் எல்லாம் –
உருவற்ற ஞானம் -என்னக் குறை இல்லை இறே-

உழல்கின்ற என்னை –
பக்தி பிரபத்தி முதலான-ஹிதங்களிலே ஊன்றி இலேன் ஆகிலும்
ஒரு நிஷ்டை இன்றிக்கே கொண்டிப் பசு போலே ச்வைரசம்சாரயாய் தட்டித்-திரிகிற அடியேனை –

உருவற்ற ஞாலத்து என்ற பாடம் ஆன போது –
உரு -என்று அழகாய் -நன்மையாய் –
அறுகையாவது-இன்றிக்கே ஒழிகை -நன்மை என்பது ஒன்றும் இல்லாத ஜகத்திலே-
ஈண்டு பல் யோநிகள் தோறும் உழல்வோம் -என்றபடியே –
நாநா வித யோநிகளில் ஜனிப்பது மரிப்பது தட்டித் திரிகிற என்னை -என்று பொருளாக கடவது

ஒரு பொழுதில் –
சமித் பரணிஸ் ஸ்ரோத்ரியம் பிரம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வா நுபசன்னாய சம்யக்ப்ரசாக்த
சித்தாய சமான் விதாய ஏகாஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாசதாம் தத்வதோ பிரம வித்யாம் -என்றும் —
கூப்பின்ன கை -நம் பூர்வார் -சமித்துக்களை கொண்டு போவது மட்டும் இல்லை –
தத்வித்தி பிரணிபாதென பரிப்ரச்நேன சேவையா -உபதேஷ்யந்தி தேஜ்ஞானம் ஜ்ஞானி நச்தஸ் வதர்சின
சம்வத்சரம் ததர்தம்வா மாசத்ரயமதா பிவா பரிஷ்ய விவிதோ பறை க்ருபயா நிச்ப்ர்ஹோவதேத் -என்றும்

1-சத்புத்திஸ்சா2-துசேவிசமுசித3- சரிதஸ் 4-தத்வபோதா பிலாஷீ -5-சூஸ்ருஷூ 6-ச்த்யக்தமான -7-பிரணிபாதன
8-பரப்ரச்னகால பிரதீஷ-9-சாந்தோ-10- தாந்தோ -11-ந சூயஸ்-12- சரண முபகதஸ் 13-சாஸ்திர விஸ்வாச சாலீ சிஷ்ய ப்ராப்த
14-பரிஷாம்க்ர்த-15- விதபிமதம் தத்வாஸ் சிஷின்ய -என்றும் -15 லக்ஷணங்கள் -பஹூ பிரகாரமாக
சிஷ்யனுடைய மனசை பரிஷித்தே உபதேசிக்க-வேணும் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தேயும் –
உபதேசத்துக்காக தான் திருக்கோட்டியூர் நம்பி சன்னதிக்கு பதினெட்டு தரம் எழுந்து அருளி நிற்க்கச் செய்தேயும் –
அவற்றை எல்லாம் -தம்முடைய ஔதார்யத்தாலெ காற்கடை-கொண்டு என்னை கடாஷித்த அந்த ஷணத்தில் தானே –

பொருவற்ற கேள்வியனாக்கி –
சாஸ்த்ரார்த்தை உட் கொண்டு உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம் படி பண்ணி அருளி –
பொரு -உபமானம் –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸாம் த்ரிக்த மாஹூ -என்றும்
சத் கர்ம நிரச்தாஸ் சூத்த சாங்க்ய யோக விதஸ்ததா–நார்ஹந்தி சரணச்தச்ய கலாம் கோடி தமீமாபி -என்றும்
தேனே தேனா ப்யதே தத் தத் நியாசே நைவ மகா முனே -என்றும் சொல்லுகிறபடியே –
சர்வோத்தமையான ப்ரபத்தியை உபதேசித்து –பிரபன்னனாம் படி பண்ணி அருளி என்றபடி –

பொருவற்ற கேள்வியன் –
சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட் பொருளை என் நெஞ்சிலும் பதியுமாறு பரப்பற சாரமாக ஒரு நொடியில்
உபதேசித்து -என்னை ஒப்பற்ற கேள்வி ஞானம் உடையவனாகச் செய்து அருளினார் -என்றபடி –
ஒப்பற்றமை கேள்விக்கு சரம பர்வதத்தை பற்றினமையால் -என்க-

ஒரு பொழுதில் –
நெடும் காலம் கூடிச் செய்ய வேண்டிய பணியை மறு பொழுதுக்கு கூட வைத்துக் கொள்ளாது –
அந்த ஷணத்திலே செய்து நிறைவு கொண்டாரே -என்று வியக்கிறார் –

நின்றான் –
அபிஷிச்யச லங்காயாம் ராஜ சேந்த்ரம் விபீஷணம் க்ர்த்கர்தாச்ய ததா ராமோ விஜுவரம் பிரமுமோதஹா-என்றல் போலே
க்ர்த்கர்தராய் இந்த பூமியிலே தனிக் கோல் செலுத்திக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –
அவ்வளவும் -நாதி ஸ்வ ஸித்த மனா -என்னும்படி இருந்தார் காணும் –

ஆக்கி நின்றான் –
என்னைக் கேள்வி யறிவு உடையவனாக்கிய பின்னரே –கால் பரவி தரித்து இருந்தார் –
முன்னர்க் கால் பாவித் தரித்து நிற்க கிலாது -என்னைக் கேள்வியன் ஆக்குவதிலேயே
கண்ணும் கருத்துமாய் இருந்தார் -என்று கருத்து .
அதனால் ஸ்ரீ அமுதனாரை பொருவற்ற கேள்வியன் ஆக்குவதை ஸ்ரீ எம்பெருமானார் தம் பேறாகக் கருதினமை- புலனாகின்றது –

தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே –
திக்குற்ற கீர்த்தி என்கிறபடியே
விசேஷ்ஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசியா நின்றுள்ள –
குணவத்தா பிரதையை உடையவராய் –
குணம் திகழ் கொண்டல் –என்கிறபடியே என்றும் ஒக்க பரம உதாரரான ஸ்ரீ எம்பெருமானார் –

தெரிவுற்ற கீர்த்தி –
பிரகாச யுக்தையான கீர்த்தி –

சீர் முகில் –
சீரிய முகில் -முகிலுக்கு சீர்மை யாவது-ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கை –

என்ன புண்ணியனோ –
என்ன தார்மிகரோ -யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் -என்கிறபடி ஸ்ரீ சர்வேஸ்வரன் முக மலர்திக்காக –
அவரை இப்படி திருத்தி அங்குத்தைக்கு ஆளாம்படி பண்ணி யருளினார்-என்றது ஆய்த்து –

என்ன புண்ணியனோ –
தம்மிடம் யாதொரு பயனையும் எதிர்பாராது –தம் பேறாக -கேள்வி அறிவை தமக்கு உபகரித்த
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வள்ளன்மையை கண்டு -இது என்ன தருமம் புரியும் -இயல்போ என்று ஈடுபட்டு பேசுகிறார் .

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –
திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் ஸ்ரீ இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக ஸ்ரீ எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் .

இரண்டாம் அடியில் உருவற்ற ஞாலத்து -என்றும் பாடம் உண்டு –
அப்பொழுது –உரு -என்பது அழகைச் சொல்கிறது .
ஞாலத்திற்கு -உலகத்திற்கு அழகாவது நன்மை வுடைமை –
ஆக –உருவற்ற ஞாலத்து -என்பதற்கு -நன்மை என்பது ஒன்றும் இல்லாத உலகத்திலே என்னும் பொருள் ஆகிறது .
இத்தகைய ஞாலத்தில் உழலுவதாவது -ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் – 38- என்றபடி .
பல வகைப் பட்ட பிறவிகள் எடுப்பதும் மடிவதுமாக தட்டித் தடுமாறுகை —
வெந்தீ வினை இங்கனம் தட்டுத்-தடுமாறுகைக்கு ஹேது -என்று அறிக –

ஆக பகுத்துணர்வில் ஊற்றம் கொண்ட ஞானத்தை அடையப் பெறாது –
மிக கொடிய கர்மத்தினால்-நன்மையின்மையால் கைவிடத் தக்க உலகிலே பிறப்பதும் இறப்பதும் ஆக
உலவுகின்ற என்னை-என்றது ஆயிற்று .

—————–

தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே –

முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே -6-
இன்று கண்டு உயர்ந்தேன் –இராமானுசன் என்னும் கார் தன்னையே -24-
காரேய் கருணை இராமானுச -25-
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை -26-
உன் வள்ளல் தனத்தால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் -27-
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -37-
வாமனன் சீலன் இராமானுசன் -40-
மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் -54-
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்து அருளும் கொண்டலை -55-
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை -56-
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே -60-
உன் பெரும் கருணை தன்னை -70-
வன்மை இராமானுச எம் பெரும் தொகையே-71-
நிறை புகழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே-72-
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் -74-
தன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் -77-
இராமானுச இனி யுன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு -81-
கார் கொண்ட வண்மை இராமானுச -83-
இராமானுசன் –சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -84-
உணர்வில் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமானுசன் -87-
போற்ற யரும் சீலத்து இராமானுச -89-
புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி இராமானுச -92-
அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன் -93-
உன் அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100-
கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என் பால் வளர்ந்ததுவே -102-
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104-
இன்புற்ற சீலத்து இராமானுச -107-
பொங்கிய கீர்த்தி இராமானுசர் உன் அடிப் பூ மன்னவே -108-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading