ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –81-சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்ற வெனக்கு- – இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தி சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருத்திகளும்
பண்ணுவேன் என்றார் கீழே .
இந்நிலைக்கு -முன்பு இசையாத தமக்கு இந்த ருசி உண்டாயிற்று -ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே ஆகையாலே –
தமக்கு அவர் செய்த உபகாரத்தை -அவர் தம்மைக் குறித்து விண்ணப்பம் செய்து –
தேவரீர் உடைய கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் சர்வோத்தமரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய சம்பந்தி சம்பந்திகளுக்கே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ கரணங்களாலும் சர்வ வித கைங்கர்யங்களும் செய்யக் கடவேன் என்று
அவர்கள் பக்கலிலே தமக்கு உண்டான ஊற்றத்தை சொல்லி –
இதிலே –
ஸ்ரீ எம்பெருமானார் திரு முக மண்டலத்தைப் பார்த்து
இவ்வளவும் தேவரீருக்கு சேஷ பூதராய் இருக்கிறவர்கள் திறத்திலே அடிமை தொழில் செய்ய இசையாத என்னை –
தாம் உகந்தாரை தமக்கு அந்தபுர பரிகரமாக்குகிறவர்கள் விஷயத்தில் அடிமை படுத்துகைக்கு உத்தேசிக்கலாய்
தன் அடியார்க்கு அடிமை படாதே இருக்கிறவர்களுக்கு அந்த திருவடிகளை கொடுக்க இசையாது
இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடிகளில்–
(ஸ்ரீ பாகவத சேஷத்வத்தால் ஸ்ரீ அரங்கனுக்கு கைங்கர்யம் -காரண கார்ய பாவம் -)
சேர்த்து அருளின தேவரீர் உடைய பரம கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் அடியார் அடியார் கட்கே -எல்லா அடிமைகளும் செய்வேன் என்றார் கீழே –
இதனில்
இந்நிலை ஏற்படுவதற்கு முன்பு ஏனைய சம்சாரிகள் போலே -இவ் விஷயத்தில் இசைவில்லாமல் இருந்த தமக்கு –
ஸ்ரீ எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை -நேரே அவரை நோக்கி –
விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார் .

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

பத உரை –
சோர்வின்றி -பிரிவில்லாமல்
உன் தன் -தேவரீர் உடைய-வகுத்த சேஷி திட அத்யாவசாயத்துக்காக
உன் தன் -சம்பந்தம் போக்யதை இரண்டும் உண்டே –
துணை அடிக் கீழ் -ஒன்றுக்கு ஓன்று அழகு உடைமையின் துணையாக அமைந்த திருவடிகளின் கீழே –
தொண்டு பட்டவர் பால் -அடிமை பட்டவர்கள் இடத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு -பொருந்துதல் இன்றி நின்றவனான எனக்கு
அரங்கன் -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
செய்ய -சிவந்த
தாளிணைகள் -அழகினில் இணைந்த திருவடிகளை
பேர்வு இன்றி -நீங்குதல் இல்லாமல் –
இன்று -இக்காலத்தில்
பெறுத்தும் -பெறும்படி செய்யும்
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
இனி -ஸ்ரீ அரங்கன் திருவடிகளைப் பெறுவித்த பிறகு
உன் -தேவரீருடைய
சீர் ஒன்றிய -மகத்துவம் பொருந்திய
கருணைக்கு -கிருபைக்கு
தெரிவு உறில் -ஆராயப் புகில்
மாறு-ஒப்பு
இல்லை -கிடையாது –

வியாக்யானம் –
வேறொரு விஷயத்தில் மனச்சு பிரிவின்றிக்கே தேவரீருடைய சேர்த்தி அழகை உடைத்தான
திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர்கள் -பக்கல்-
ஒரு பொருத்தம் இன்றிக்கே நின்ற எனக்கு –
அவர்களுக்கே அனந்யார்ஹசேஷம் என்னும் நினைவை பிறப்பிக்கையாலே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அமலனாதி பிரான் – 1-என்றும்
அடியார்க்கு ஆட்படுத்தாய் -திருப் பள்ளி எழுச்சி – 10- என்றும் சொல்லுகிறபடியே
தாமுகந்தாரை ஸ்வகீயர் அளவிலே சேர்க்கும் ஸ்வபாவராய்
பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி இருக்கும் –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்
சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று
பெறுவித்து அருளினவரே !
இப்படியான பின்பு
தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .

அதவா –
சோர்வின்றி -இத்யாதிக்கு
அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -உன் தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு -இன்று பெறுத்தும் இராமானுச -என்று அந்வயித்து –
பகவத் சேஷத்வத்துக்கு இசைகையாலே ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை விடாமல் உறைக்கப் பற்றி –
(அதனாலேயே ) துர்மானத்தாலே ஸ்ரீ பாகவத சேஷத்வத்துக்கு இசையாமல் -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பார் பக்கல்
சேராமல் நின்ற வெனக்கு -அத்தை இன்று லபிப்பித்து அருளின தேவரீர் கிருபைக்கு ஒப்பு இல்லை என்னவுமாம் .

பேர்தல்-நீங்குதல்
சீர்-கனம்-அழகாகவுமாம் –
ஒன்றுதல்-கூடுதல்
மாறு-ஒப்பு
தெரிவுறுதல் -ஆராய்தல்–

பிடித்தார் பிடித்தாரை பற்றி குறை இல்லாமல் இருப்போம் –
ஸ்ரீ அரங்கன் திருவடி பிடித்த செருக்கால் -இருந்தேன் -அடியார் அடியாரை பிடிக்காதவரை அரங்கன் விரும்பானே –
இப்பொழுதோ -ஸ்ரீ ஆழ்வான் திருவடி சம்பந்தம் பெற்ற பின் ஸ்ரீ அரங்கன் விரும்பி மேல் விழுகிறான் —
ஸ்ரீ பாகவதர் திருவடிகளை பெற்றுக் கொடுத்தீர் -ஸ்ரீ அரங்கன் திருவடிகளை பெற்றுக் கொடுத்தீர் –
சிர் ஒன்றிய கருணைக்கு ஒப்பு இல்லை -இப்படி அருளிய ஸ்ரீ ஸ்வாமியின் இன்னருளுக்கு எதுவுமே ஒப்பு இல்லையே –
ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி சீயர் ஐதீகம் –பாகவத சேஷத்வம் அறியாமல் பண்டே பல காலும் போயின என்று அழுதேன் –
சோர்வின்றி -மனம் வாக் காயம் ஒருப்பட்டு –பதச்சாயை -தண்டம் பவித்ரம் -போல்வார் இடம் -பொருந்தப் பண்ணின கிருபை –
விரகு அறிந்து ஸ்ரீ ஸ்வாமி அருளினார் –ஸ்ரீ அரங்கன் திருவடிகளை ஆச்சார்ய முகேன -இதுவே –மருந்து
கிடைக்கவே –ஸ்ரீ பக்த ஸ்ரீ பக்த திருவடிகள் விருந்து பெற்றேன் என்றபடி-
ஸ்ரீ சுக்ரீவன் -ஸ்ரீ இளைய பெருமாள் அருளால் -ஸ்ரீ பெருமாள் உதவியது போலே
நாயகனாய் –வாசல் காப்பான் கோயில் காப்பான் காலிலே விழுந்தால் போலே -நீ நேசக் கதவம் நீக்கு –
ந சம்சய தத் பக்த பரிசரியா–

சோர்வின்றி உன் தன் துணை அடிக் கீழ்–
மயிசா நன்ய யோகே நபக்திரவ்யபிசாரிணி –என்று ஸ்ரீ கீதாசார்யன் அருளிச் செய்தபடியே –
வேறு ஒரு விஷயத்திலும் மனசு பிரிந்து போகை அன்றிக்கே –
க்ர்த்வாமர்த்ய மயீம் த நு ம் மக் நா நுத்தர தேலோகா ந் காரருன்யாஸ் சாஸ்த்ரபாணினா-என்று
சர்வோத்தரரான தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளின் கீழே

தொண்டு பட்டவர் பால் –
நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர் பக்கல் –
யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் -கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்று சொல்லப்பட்ட
மகத்துக்கள் விஷயத்தில் என்றபடி –

சார்வின்றி நின்ற –
சேருதல் இன்றிக்கே இருக்கிற -எனக்கு –
அநாதி காலமே தொடங்கி ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கும் அளவும் –
தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் பூஜ நீயா விசேஷத -என்கிற வர்த்தத்தை அறியாதே
ந நமேயம் -என்று பிரதி கூலனாய் போந்த அடியேனுக்கு –

அரங்கன் செய்ய தாள் இணைகள் –
ஜீவன ஹேதுவாய் போக்யமுமாயும் இருக்கிற சோற்றிலே -ரோகோல் பணத்தாலே அருசி பிறந்தவனுக்கு
விரகனான வைத்தியன் கையில்-காட்டிக் கொடுக்கும் மாதாவைப் போலே –

( பாகவத சேஷத்வம் -அன்னம் -/அஹங்காரம் துர் அபிமானம் அஜீரண வியாதி-/ தாயார் ராமானுஜர் -/ பிள்ளை -அமுதனார் /
வைத்தியர் -அரங்கன் /-மருந்து -பாகவத சேஷத்வம் இல்லாதவனுக்கு உதவோம்
அடியார்க்கு அடியாரை பின் தொடர்ந்து அருளுவேன் போன்ற -என்று உள்ள ஸ்ரீ ஸூக்தி என்றவாறு )

மமமத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காவபெத் -என்றும் -அடியார்க்கு
என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் -என்றும் சொல்லுகிற படி –
ஸ்வ ஆஸ்ரிதர் பக்கல் அதி வ்யாமுக்த்தராய் -தாம் உகந்தாரை தம் அடியார்க்கு –ஏழாட்காலும் அடிமைப்படுத்தும்
பரிமாற்றம்-அறியும் விரகராய் –
செடியார் வினைகள் தீர் மருந்தே -என்றும் –
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்றும் சொல்லுகிறபடியே –
பகவத் சேஷத்வத்துக்கும் பாகவத சேஷத்வத்துக்கும் இசையாது ஒழிகை யாகிற துஷ் கர்மங்கள் அடங்கலும் நசிக்கும்படி
கடாஷித்து அருளும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு பரபாகமாய் சிவப்பையும் சேர்த்தி-அழகையும் உடைய
திருவடிகளை காட்டிக் கொடுத்த வற்றை

பேர்வின்றி –
ஒருக்காலும் விட்டு நீங்காத படியாக-
பேர்தல் -நீங்குதல் –

இன்று பெறுத்தும் –
இப்போது நிழலும் அடி தாறும் போலே சேஷ பூதனாய் இருக்கிற இந்த மகா பலத்தை பெறுவித்து -பலிப்பித்து அருளின –

சோர்வின்றி –எனக்கு –
இதனால் தனது பழைய நிலையினை நினைக்கிறார்
உன் தன் -என்று வகுத்த ஆச்சார்ய சம்பந்தமும் –
துணையடி -என்று போக்யதையும் -திருவடிகளுக்கு காட்டப் பட்டன –
திருவடிக் கீழ்த் தொண்டு என்னவே – நிழலும் அடி தாறும் -பாத ரேகை -பாதுகை -போலே-அடிமைப் பட்டமை புலனாகிறது .
பாத ரேகையும் பாதுகையும் அடிகளின் கீழ் இருப்பதையே இயல்பாக கொண்டு –

பயன் வேறின்றி –
மற்று ஒன்றுக்கு உபயோகப் படாதது போலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிக் கீழ் இருத்தல் என்னும் வாழ்ச்சியே தம் இயல்பாகக் கொண்டு அதனைத் தவிர
வேறு பயன் இன்றி மற்று ஒன்றுக்கு ஆளாகாதவர்கள் -ஸ்ரீ எம்பெருமானார் அடியார்கள் -என்க .

இத்தகைய அடியார்கள் ஆதலின் -வேறொரு விஷயத்தில் நெஞ்சை செலுத்தாமல் –
மனப்பூர்வமாய் ப்ரீதி உடன் தொண்டினைச் செய்வது தோன்ற –சோர்வின்றி தொண்டு பட்டவர் –என்கிறார் –
சோர்வு -பிரிவு -அது இங்கே மனத்தின் பிரிவைச் சொல்கிறது .
மனத்திற்கு பிரிவாவது வேறு விஷயத்தில் அதனை செலுத்துதல் –
மனப் பூர்வமான ப்ரீதியினாலே விளைந்தமை தோற்ற –
தொண்டு செய்பவர் -என்னாது -தொண்டு பட்டவர் -என்கிறார்
ப்ரீதி காரிதமான கைங்கர்யம் உடையவர்கள் -என்றபடி –
தொண்டு பட்டமையே அவர்களுக்கு நிரூபகம் .குல கோத்ராதிகள் அல்ல –
அத்தகையோர்களை சார்ந்து இருக்கும் தற்கால நிலை முன்பு இல்லையே என்று பழைய நிலையை
நினைத்து –சார்வின்றி நின்ற எனக்கு -என்கிறார் .

சார்தல் -பொருந்துதல் –
சார்ந்த இரு வல் வினைகள் -ஸ்ரீ திருவாய்மொழி -1 5-10 – – எனபது காண்க .
இங்கனம் பாகவத சேஷத்வத்தின் சுவை யறியாது கீழ் நாள்கள் எல்லாம் வாளா இருந்து ஒழிந்த எனக்கு –
எல்லா விடத்திலும் -எத் தொழும்பும் -அந்தப் பாகவதர்களுக்கே செய்யும் நிலை ஏற்படும் படியாக
பிறர்க்கு அன்றி -அந்த பாகவத்ர்க்கே உரிமை பட்டது – இவ் ஆத்மா -என்னும் உணர்வை உண்டு பண்ணி யருளினார் ஸ்ரீ எம்பெருமானார் .
அதன் பயனாக ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அழகிய அடிகளை அடியேன் விட்டு நீங்காதபடி-பெற முடிந்தது என்கிறார் மேற் பகுதியினாலே –

அரங்கன் –பெறுத்தும் இராமானுச
ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் குறிக் கொள்ளத் தக்க இயல்புகள் உண்டு –
தமக்கு எவரிடம் ப்ரீதி உள்ளதோ அவரைத் தம் அடியார்க்கு ஆட்படும்படி செய்தல் அவற்றுள்-ஓர் இயல்பாகும் ..
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்று ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும்
அடியார்க்கு ஆட படுத்தாய் -என்று ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளிச் செய்து இருப்பது காண்க –

ஸ்ரீ பாகவத சேஷத்வத்திலே ஊன்றி இருப்பவர்களுக்கே தம் திருவடிகளை விட்டுப் பிரியாத நிலையையும் –
மற்றவர்களுக்கு தம் திருவடிகளை விட்டு பிரியாத நிலை இல்லை -என்னலாம் படியான நிலையையும் –
விளைவித்தாலும் -அவனிடம் காணும் இயல்புகளே –
இந்த இயல்புகள் என் திறத்து இன்று புலப்படா நிற்கின்றன –
அடியார்க்கு ஸ்ரீ அரங்கனால் ஆட்படுத்தப் பட்டேன் –
ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் என்னை விட்டு பிரியாது பேர்வின்றி நின்றன .

இங்கனம் அடியார்க்கு ஆட்படுதலும் –
பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு ஸ்ரீ பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
ஸ்ரீ எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .

ஸ்ரீ பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று ஸ்ரீ எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஸ்ரீ ஆழ்வானுக்கு ஸ்ரீ அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு -ஸ்ரீ அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி
செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .

ஸ்ரீ பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் ஸ்ரீ அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

அரங்கன் செய்ய தாளிணைகள் –
தாளிணைகள் சிவந்தன –
ஸ்ரீ அரங்கன் பச்சை பசும் தேவன்
இந்நிறச் சேர்த்தியின் அழகை அனுபவிக்கிறார் .

இராமானுச –
எம்பெருமானாரே –

இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு –
உபாயே நது யச்சக்யம் நதசக்யம் ப்ராக்ரமை -என்னும்படி -விரகாலே –
த்வத் தாஸ தாஸ கண ந சரமாதவ்ய ஸ்தத் தாஸைத கா சதா விரதாமமாஸ்து -என்று
அத்யந்த ப்ரார்த்தநீயமான சரம பர்வ நிஷ்டர்க்கு ஊற்றுவாயான பிரதம பர்வத்தில் நிற்கும்படி திருத்தி அருளிய பின்பு –
இப்படி கிருஷி பண்ணி அருளின தேவரீர் உடைய மகா ப்ரபாபவதியாய் இருக்கிற கிருபைக்கு –

சீர் –
அழகும் மகத்வமும் –

ஒன்றுதல்-
கூடுதல் –

தெரிவுறில்-
ஆராய்ந்து பார்க்கும் அளவில்
தெரிதல்-ஆராய்தல்

மாறு -இல்லை
ஒப்பு இல்லை –
சித்திர் பவதி வா நேதி சம்சயோச்யுத சேவி நாம் – என்கையாலே –
தென் அரங்கர் சீர் அருளும் இது தனக்கு ஒப்பாக மாட்டாது என்று காணும் இவருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –
ந சம்சயஸ்துதத் பக்த பரிசர்யாரதாத்மனாம் -என்று சொல்லுகையாலே
இவ்வர்த்தம் சம்ப்ரதிபன்னம் இறே –

மாறு -ஒப்பு -அன்றிக்கே —அரங்கன் செய்ய தாள் இணைகள் -பேர்வின்றி – சோர் வின்றி -வுன் தன் துணை அடிக்
கீழ் தொண்டு பட்டவர் பால் சர்வின்றி நின்ற எனக்கு -இன்று பெறுத்து
இராமானுச -உன் சீர் ஒன்றிய கருணைக்கு –தெரிவுறில் -மாறு இல்லை -என்று அந்வயித்து-
ஸ்ரீ பகவத் சேஷத்வத்துக்கு இசைகையாலே -ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் –
அந்த கர்வத்தாலே ததீயர் உடைய ப்ரபாபவத்தை அறியப் பெறாதே -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல்
சேராது ஒழிந்த எனக்கு அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –
ஆராய்ந்து பார்க்கில் – ஒருவரும் சத்ர்சர் இல்லை என்று பொருள் சொல்லவுமாம் –

இனி யுன் –தெரிவுறல் –
இனி -இங்கனம் ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்த பிறகு
சீர் ஒன்றிய கருணை –மகிமை பொருந்திய கருணை
சீர் -மகிமை -ஒன்றுதல்-பொருந்துதல்

உன் கருணை –
ஸ்ரீ அரங்கன் கருணை அன்று -உன் கருணை சீர் ஒன்றியது
ஸ்ரீ அரங்கன் கருணை சீர் ஒன்றாதது -ஸ்வா தந்த்ர்யம் கலந்து இருத்தலின் -அது சீர் ஒன்றாதது
அக் கலப்பு இல்லாமையின் இது சீர் ஒன்றியது –
ஒன்றவே ஸ்ரீ அரங்கன் கருணையும் -ஒரு கால் ஸ்வா தந்த்ர்யத்தால் பயன் இன்றி போவதாய் இருத்தலின் –
என்றும் பயன் குன்றாத ஸ்ரீ எம்பெருமானார் கருணைக்கு ஒப்பாகாது என்கிறார் .

மாறு -ஒப்பு
இது வெறும் புகழ் உரை அன்று -ஆராய்ந்து பார்த்தால் இவ் உண்மை புலப்படும் என்னும்-கருத்துடன் –
தெரிவுறில்-என்கிறார் –தெரிவுறில் -ஆராயின் –

இனி-
ஸ்ரீ பாகவத சேஷத்வத்தின் பயனாக ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே ஸ்ரீ பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –
அப்பொழுது ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -சோர்வின்றி உன் தன் துணை அடிக்கீழ்
தொண்டு பட்டவர் பால் சார்வு இன்றி நின்ற எனக்கு இன்று பெறுத்தும் இராமானுச -என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும் —

ஸ்ரீ பாகவத சேஷத்வத்துக்கு இசையாது
ஸ்ரீ பகவானுக்கு சேஷப் பட்டு இருத்தலை மட்டும் இசைகையாலே –
ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணைகளை நீங்காது பற்றித் தேவரீர் திருவடிகளின் கீழே சோர்வின்றி
தொண்டு பட்டவர்கள் இடம் –செருக்கினால்-பொருந்தாமல் -பாகவத சேஷத்வத்துக்கு புறம்பாய் நின்ற எனக்கு –
இன்று அந்தப் பாகவத சேஷத்வத்தை பெறும்படி -அதாவது தொண்டர் பட்டவர் பால் சார்வு
ஏற்படும்படி செய்த ஸ்ரீ எம்பெருமானாரே -என்று பொருள் கொள்க –

முந்தின பொருளில் நேரே -ஸ்ரீ பாகவத சேஷத்வம் பேசப்படுவதில்லை –
அதன் பயனாக தாளிணைகள் பேர்வின்றி பெருத்தாலே பேசப் பட்டுள்ளது .
பிந்தின பொருளில் அது நேரே கூறப்படினும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டிய இடர்ப்பாடு உள்ளது —

ஸ்ரீ அனந்த் ஆழ்வானை ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடி சேர்த்தார்-
ஸ்ரீ அமுதனாரை ஸ்ரீ கூரத் ஆழ்வான் இடம்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ எம்பார் இடம் -சேர்த்தது ஸ்வாமி தனி சிறப்பு-

இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –
வரவே வராது இந்த நிலை-ஸ்ரீ மா முனிகள்-

ஸ்ரீ தென் அரங்கன் திரு அருளும் ஈடு இல்லை-இது மொட்டு போல
இந்த சம்சயம் இல்லை ஸ்ரீ பக்த பக்தன் அடி பற்றிவனுக்கு-இது மொட்டு புஷ்பிதம் ஆகி பழம் ஆனது போல –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –நின் திரு எட்டு எழுத்தும் கற்ற பின் -மற்று எல்லா பேசினும்-ஸ்ரீ கலியன்-
இப் படியான பின்பு ஸ்ரீ தேவரீர் உடைய கௌரவ யுக்தியே இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை-

————–

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39-

மேல் ஆறு பாட்டும் இந்த ஜ்ஞானம் உடையார் உடைய ராஜகுலம் சொல்லுகிறது –
இவருடைய பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை — இருக்கிறபடி –

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42-

அடியனை அளியன் என்று அருளி யுன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே -11-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -1-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே––பெருமாள் திருமொழி-2-1-

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர் இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-

சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

பகவத் பக்தியின் எல்லை நிலமே பாகவத பக்தி -பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும் –
ஆழ்வார் உடைய பக்திப் பெரும் காதலே -பாகவதர்களே உத்தேச்யம் என்னப் பண்ணுகிறது –
மேலே திருச் சேறை திருப் பதியை மங்களா சாசனம் -கண் சோர வெங்குருதி -திரு மொழியிலும்
இந்த பாகவத நிஷ்டை அருளிச் செய்யப் படும்

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—2-6-1-

கடல் மல்லைத் தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-

தல சயனத்துறை கின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-

தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியேநினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே—2-6-10-

ஸ்ரீ சார நாத பெருமாள் -திருச்சேறை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை —
பாகவத சேஷத்வம் -பகவத் சேஷத்வத்தின் காஷ்டை –
எம்பெருமான் இடம் அளவிறந்த பக்திப் பெரும் காதலை வெளியிட்டு அருளுகிறார் –
கீழே -நண்ணாத வாளவுணர் -திருப்பதிகம் போலே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

தண் சேறை எம்பெருமான் உம்பராளும் பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

இராமானுச இனி யுன் சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே –

சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே -16-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமமானுச நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே -38-

மா மலராள் நாயகன் எல்லா வுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42-

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின்னருள் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும் அஃதே புகல்–48-

பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்து அருளும் கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -55-

கட்டப்பொருளை மறைப்பொருள் என்று கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே -93-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டாலே -104-

——————-

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading