ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ எம்பெருமானார் யதார்த்த ஜ்ஞானத்தை கொடுக்கையாலே அயதார்த்தங்கள்
தமக்கு பொருந்தாத படியாயிற்று என்று ஸ்வ நிஷ்டையை யருளிச் செய்தார் கீழ் –
உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க -அருமந்த ஜ்ஞானத்தை இழந்து –
இவ்விஷயத்துக்கு அசலாய் போருகிற லௌகிகர் படியை அனுசந்தித்து–இன்னாதாகிறார் இதில் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ்ப் பாட்டில்
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய மனோ தோஷத்தைப் போக்கி –அது தன்னைத் திருத்தி –சம்யஜ்ஞ்ஞானத்தை பிறப்பித்து
ஸ்ரீயபதிக்கு சேஷம் ஆக்கின பின்பு -என்னுடைய மனசு வேறு ஒன்றைத் தேடித் போமோ-
என்று தம்முடைய அத்யாவச்ய தார்ட்யத்தை அருளிச் செய்து –
இதிலே –
அந்தப்படியே சம்சாரி சேதனருக்கும்-அத்யாவசிக்க ப்ராப்தமாய் இருக்க -அது செய்யாதே –
ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வம் -ஷணிகத்வம் தொடக்கமான வேதார்த்த விருத்தார்ந்தகளை வாய் வந்த படி
பிரலாபிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத-ப்ரேமேயத்தை வாசனையோடு ஒட்டி விட்ட பின்பு –
அந்த மறைக் குறும்பாலே வ்யாப்தமான பூ லோகத்திலே-சத்யமான அர்த்தத்தை –
ஸ்ரீ எம்பெருமானார் இருக்கச் செய்தேயும்
சஜாதீய புத்தியாலே அவரை விட்டு அகன்று வேறு ஒரு தேவதை நம்மை ரஷிக்க-கடவது உண்டோ என்னும் உள் வெதுப்பாலே
சுஷ்கித்துப் போய் வ்யர்த்தமே சம்சயாத்மாக்களாய் நசித்துப்-போகிறவர்கள் படியைக் கண்டு இன்னாதாகிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானார் உண்மை யரிவை உபதேசித்தமையால் எனக்குப் பொய்ப் பொருள்-பொருந்தாத நிலை ஏற்பட்டதென்று –
தன் நிலை கூறினார் கீழே-
உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து உஜ்ஜீவிப்பிக்க
காத்திருக்கும் ஸ்ரீ எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ் வருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில்
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –
பத உரை .
பொய்யை -உண்மை கலப்பு இல்லாத பொய்யான விஷயத்தை
சுரக்கும் -மேன்மேலும் எடுத்துக் கூறும்
பொருளை -பிற மதத்து அர்த்தத்தை
துரந்து -நிலை நிற்க ஒட்டாமல் ஒட்டி
இந்த பூதலத்தே -இந்தப் பூதலத்தே
மெய்யை -பொய் கலப்பில்லாத சத்யமான விஷயத்தை
புரக்கும் -காத்து அருளும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
நிற்க -தம்மிடம் வருவரை எதிர்பார்த்து காத்து நிற்க
உய்ய -உஜ்ஜீவிக்கும்படி
நம்மைக் கொள்ள வல்ல -நம்மை ஏற்றுக் கொள்ள திறமை வாய்ந்த
வேறு தெய்வம்-மற்றொரு தெய்வம்
இங்கு -இங்கே
யாது என்றே -எது என்றே தேடி அலைந்து
உலர்ந்து -உடல் வாடி
நல் அறிவு -நல்ல மெய் உணர்வை
இழந்து -பெறத் தக்க நிலையில் இருந்தும் பெறாமையால் நஷ்டம் அடைந்து
உய்யும் வழி இதுவே என்று உணர்ந்திடினும்
வையத்து உள்ளோர் -பூமியில் உள்ளவர்கள்
அவமே -வீணாக
ஐயப்படா நிற்பர் -சந்தேகப் பட்டுக் கொண்டு இருப்பார்கள்
வியாக்யானம் –
ஆத்மாவினுடைய தேக பரிமாணத்வ ஷணிக ஜ்ஞானரூபத்வ ஜடத்வாதிகள் என்ன –
ப்ரஹ்மத்தினுடைய மாயா சபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாரித்வாதிகள் என்ன –
சுத்த அசத்யமாய் இருப்பதொன்றை மேன்மேலும் உபபாதியா நிற்கும் பாஹ்ய குத்ருஷ்டி மதத்தை ஒட்டி
இந்த பூமியிலே யதார்த்தத்தை பரிபாலித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் –
ஆரொருவர் வருவார் என்று வழி பார்த்து நிற்கச் செய்தே –
சஜாதீய புத்தியாலே -இவரை உபேஷித்து-
வேறு நம்மை உஜ்ஜீவிப்பிக்க வல்ல தேவதை இங்கே ஏதென்று தேடி -மன -க்லேசத்தாலே உடம்பு உலர்ந்து –
இவ்விஷயமே -நமக்கு உத்தேச்யம் என்று பற்றி உஜ்ஜீவித்துப் போருகைக்கு உறுப்பான யதார்த்த ஜ்ஞானத்தை லபிக்க பெறாதே –
உங்களுக்கு உஜ்ஜீவனகரம் இவ் விஷயம் என்றாலும் பூமியில் உள்ளார் வ்யர்த்தமே சம்சயப்படா நின்றார்கள்
ஐயோ இவர்கள் நிலை இருந்தபடி -என் -என்று கருத்து –
பொய்யைச் சுரக்கும் -இத்யாதிக்கு
உத்பத்தி வினாசாதி யோகத்தாலே அசத்திய சப்த வாச்யமான தேஹத்தை ஜன்ம பரம்பரையாலே
மேன்மேல் உண்டாக்கும் தேஹத்மா அபிமான ஸ்வா தந்த்ரர்யாத் யர்தங்களை ஸ்வ உபதேசத்தாலே யோட்டி விட்டு –
இந்த பூதலத்திலே சதைக ரூபதயா சத்யா சப்த வாச்யமான ஆத்மாவை
ரஷித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் நிற்க -என்று பொருள் ஆகவுமாம் .
துரத்தல்-ஒட்டுதல் /புரத்தல்-காத்தல் /ஐயம் -சம்சயம்
தெய்வமிங்கியாது-என்ற இடத்தில் இகரமும் குற்றியலிகரம் ஆகையாலே
உமக்கியான் 49- –என்கிற இடத்தில் சொன்ன ந்யாயத்தாலே கழித்து
பூர்வாபர பாதங்களுக்கு ஒக்கப்-பதினாறு எழுத்தாக எண்ணக் கடவது .
ஸ்ரீ வேத வியாசர் திரு உள்ளம் –விசிஷ்டாத்வைதம் -தொன்மை -ஸ்ரீ புராண ரத்னம் -ஸ்ரீ பராசரர் -இடம் வந்ததே —
வேதாந்தம் வீறு கொண்டு எழுந்தது ஸ்ரீ ஸ்வாமியாலே –சொத்துக்களை ஸ்ரீ ஸ்வாமியிடம் சேர்த்து அருள –
செய்த உபகார பரம்பரைகள் -ஸ்ரீ பெரிய பெருமாள் பொறுப்பை ஸ்ரீ உடையவர் இடம் விட்டு கிடக்க –
ஸ்ரீ இராமா னுசன் நிற்க –திருப்பாவை சாத்து முறை கூட நித்யம் ஸ்ரீ உடையவர் சந்நிதியில் இருக்க –
லோகத்தார் அலர்ந்து ஐயப் படா நிற்கிறார்கள் —
அவமே -வீணாக –பொய்யைச் சுரக்கும் -பொருள் –மலை முகடு -மூக்கு நுனியை பெரிசாக்கி
பார்க்கும் பார்வையில் தப்பு -வஸ்து இல்லாதது இல்லை -பார்த்த முறை தப்பு –
சாஸ்திரத்தை விளக்கி –அசன்னேவ ச பவதி –தேக பரிமாணம் ஆத்மா ஒருமதம் – பர ப்ரஹ்மமத்துக்கு அஞ்ஞானம் -மாயாவாதம் –
ஏழு வித அனுபவத்தி –உபாதி பட்டு ஆத்மாக்களாக பிரதிபலிக்கும் -பிம்மம் என்பர் -விகாரத்வாதிகள்
வேதார்த்த பரமான பொய்யைச் சுரக்கும் -சித்துக்கு அசித்தின் அபாவம் வராது -அச்சித்தின் பாவம் சித்திக்கு வாராது –
ஸ்வபாவம் தேகத்துக்கு வேறு ஆத்மாவுக்கு வேறு -தேகத்தை நன்பொருள் என்னும் பொய்யைப் போக்கினார் என்றுமாம் –
மெய் சரீரம் என்று நினைக்கும் பொய் என்றவாறு –பொய் நின்ற ஞானம் மித்யை இல்லை -மாறிக் கொண்டே -இருக்குமே –
அஹங்காரம் -நான் அல்லாததை நான் என்கிறது -ஜாபாலி -வாதம் –
மூளை செயல்பாடு -ஞானம் -மனஸ் -தொட்டுப் பார்க்க முடியாதே –செயல்பாடு மறுத்த சரீரத்தில் இல்லையே –
சரீரம் விட வேறே -அதுக்கு பெயர் ஆத்மா அப்புறம் வைக்கலாம் -தேக விலக்ஷணம் சைதன்யம் –
நான் அறிவு -இல்லை –சொல்லாமல் -நான் அறிவுடையவன் –என்கிறோமே –
எனக்கு கை வலி–ஸூக துக்கம் அனுபவிப்பவன் நான் -சரீரம் இருப்பதால் தான் வலி –ஷேத்ரஞ்ஞன் -க்ஷேத்ரம் –
ப்ரஹ்மம் மாயை மறைக்கிறது ஓவ்வாதே-சாஸ்திர விருத்தம் ஆகுமே —அவிகாராய -தத்வம் அன்றோ காட்டி அருளி
மெய்யை நிர்வகித்து –த்ரிவித பரிச்சேத ரஹிதன் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
திருமேனி ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –உபய விபூதி நாதன் -ஸ்ரீ பூ நீளா தேவி நாயகன் –
பஹுஸ்யாம் –சங்கல்ப ஞானத்தால் அருளால் ஸ்ருஷ்டித்து -அந்தரப்பிரவேசித்து – -சத் சம்ப்ரதாயம் –
அனைத்து -ஜீவ ராசிகள் நன்மை வேத சித்தம் -வியாபித்து –ஸமஸ்த திவ்ய தேச நிலையன் -சீரார் திருவேங்கடமே இத்யாதி
யாதாத்ம்ய பர ஜீவ ஸ்வரூபம் காட்டி அருளி -பொய் -சரீரம் — மெய் ஆத்மா -இவற்றை பற்றியவை என்றுமாம் –
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து –
பொய் என்று அசத்யம் –
சுரக்கும் பொருளை -இத்தையே மேன்மேலும் உபபாதியா நிற்கிற- பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத பிரக்ரியையை –
அசந்னேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத் -என்கிறபடியே
அஞ்ஞான அந்யதாஞான விபரீத ஞான விஷயங்களை -என்றபடி -அவை யாவன –
ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வ -ஷணிகத்வ -விஞ்ஞான ரூபத்வ ஜடத்வாதிகளும் –
ப்ரஹ்மத்தின் உடைய மாயாசபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாராதிவாதிகளும் –
ஜகத்தினுடைய மித்யாத்வ அவித்யா கார்யத்வாதிகளும்
இப்படி அசத்யங்களாய் வேத விருந்தங்களான அர்த்தங்களை என்றபடி –
அன்றிக்கே
பொய்யைச் சுரக்கும் பொருளை
நாசதோ வித்யா தேபாவ -என்கிறபடி –
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே-அசத் சப்த வாச்யமான தேகத்தை
ஜன்ம பரம்பரையாலே மேன்மேலும் உண்டாக்கும் தேகாத்ம அபிமானம் –
ஸ்வ ஸ்வாதந்த்ர்யம்-தொடக்கமான அர்த்தங்களை -என்றுமாம்
பொருளைத் துரந்து –
இப்படி பட்ட அசத்தியமான அர்த்தங்களை-திரு நாராயண புரத்திலும் – சரஸ்வதீ பண்டாரத்திலும்
கோவாச ஷூரி தஞ்சயே தபிபு ரச்சோடோ பதர்க்கச் சடா-சஸ்த்ரா ஸஸ் த்ரிவிகார சம்ப்ரதரணா ஸ்வா தேஷு ந -என்கிறபடியே
கரை கட்டா காவேரி போலே நடையற பெருகி வருகிற சத் அர்த்தங்களாலே –
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு கண் விழிக்க ஒண்ணாதபடி -அவர்களோடு பஹூ முகமாக பிரசங்கித்து –
சரீரமே ஆத்மா வாகில் மிர்த சரீரத்திலும் சைதன்யம் உண்டாக வேண்டி வரும் -என்றும்
ஆத்மா ஷணிகம் ஆனால் –
பூர்வ ஷணது பூதங்களான சுக துக்கங்களுக்கு உத்தர ஷணத்தில் பிரதிசந்தானம் வாராமல் போக வேண்டி வரும் என்றும் –
ஜ்ஞானமே ஆத்மா வாகில் -நான் அறிவேன் என்று இருக்க வேண்டும் ஒழிய நான் அறிந்தேன் -என்று ஞாத்ர்த்வேன
பிரதி சந்தானம் கூடாது என்றும் –
ஆத்மா ஜடம் என்றால் -எதத்யோ வேத்திதம் ப்ராகூ ஷேத்ரஜ்ஞ இதி தத்வித -என்கிறபடியே –
பாதமே வேத நா சிரசிமேசுகம் -என்றும்
விஜ்ஞா நகந -என்று ஜ்ஞான ஸ்வரூபமாக சொல்ல கூடாது என்றும் –
ப்ரஹ்மம் மாயாசபளிதமானாலும் -நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரந்ஜ்னம் -என்கிறபடி
நிர்மல-ஆனந்த ஏக ஸ்வரூபம் ஆகையாலே -நான் ஜீவன் என்றும் ஈஸ்வரன் என்றும் -பிரமிக்கக் கூடாது என்றும் –
அப்படி-பிரமித்தால் –ஏகோ தேவஸ் சர்வ பூதேஷு கூடி -என்கிறபடியே
அத்விதீயனான அவனுக்கு ப்ரம நிவர்தகர் இல்லாமையாலே சர்வதா பிரமித்தே போக வேண்டி வரும் என்றும் –
ப்ரஹ்மம் விகாரி என்றால் -நிர்விகாரி என்கிற-ஸ்ருதியோடு விரோதம் பிரசங்கிக்கும் என்றும் –
அவர்களைக் குறித்து பஹூ முகங்களாக பிரதி கூல அர்த்தங்களை-சொல்லி -அவர்களை சிஷித்து பராஜிதராக்கி –
இந்த மகா பிருத்வியில் இருக்க கூடாமல் கடலில் புகும்படி-ஒட்டி விட்ட –
துரத்தல் –ஒட்டுதல் –
இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கும் –
யதா ஜ்ஞ்ஞானத்தை இந்த பூதலத்தில் பரிபாலித்து அருளும் –
சுஷ்க தர்க்க வாதிகளை ஒட்டி விட்டு –
பிரமாணம் வேதாஸ் ஸ-என்றும்
ஆதவ் வேதாம் பிரமாணம் – என்றும் -சொல்லுகிற படியே
சகல பிரமாணமான வேதத்தில் வைத்துக் கொண்டு –
சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் – என்கையாலே சர்வேஸ்வரன் -ஸ்வரூப விகாரத்வ ஜடத்வ த்ரிவித பரிச்சேத ரஹீதன் என்றும்
கப்யாசம்புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்றும்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கையாலே –சுபாஸ்ர்ய திவ்ய ரூபன் என்றும் –
பராஸ்ய சக்திர் விவைதைவஸ் ருயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியஸா -என்கையாலே சமஸ்த கல்யாண குணாத்மகன் என்றும் –
பாதோச்ய விஸ்வ பூதானி த்ரிபாதஸ் யாம்ர்தம் திவி -என்கையாலே உபய விபூதி நாதன் -என்றும் –
ஹரீஷ் சதே லஷ்மீஸ் ஸ பத்ன்யவ் -என்கையாலே திவ்ய மகிஷி வல்லபன் என்றும்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும் –
யத்ர ருஷய பிரதமஜாயே புராணா -என்றும் –
ஏதத் சாமா காயான் நாஸ்தே -என்கையாலே ஸூரி ப்ரந்த பரிசார்யமாணன் என்றும்
ததை ஷத பஹூச்யாம் பிரஜா யேயேதி -என்றும்
தத் ஸ்ரஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் தது அனுப்ரவச்ய சத் சத்யஸ்-சா பவத் -என்கையாலே
சூஷ்மசித் அசித் விசிஷ்டனாய் கொண்டு ஜகத் காரண பூதன் என்றும் –
ஏஷ சர்வ பூதாந்தராத்ம அபகதபாப்மா திவ்யா தேவ ஏகோ நாராயணா -என்கையாலே சர்வ அந்தர்யாமி என்றும் –
அம்பச்ய பாரே புவநச்ய மத்யே நாகச்ய ப்ர்ஷ்டே மகதோ மகீயான் -என்கையாலே வ்யூஹ ரூபேண வஸ்த்திதன் -என்றும் –
ப்ரஹ்மன்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மன்யோ மது ஸூதனம் -என்றும்-
அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்கையாலே அநந்த அவதார கந்தன் என்றும் –
சயச்ய்யாயம் புருஷே யாச்சா சாவாதித்யே என்றும் –
ய யஷோந்தராதித்யே ஹிரண்மயீம் புருஷ -என்கையாலே சமஸ்த திவ்ய தேச நிலையன் என்றும் –
நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு பிரசோதயாத் -என்கையாலே
விஷ்ணு நாராயண வாசுதேவன் சப்த வாச்யன் என்றும் –
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்கையாலே சர்வ ஸ்மாத் பரன் என்றும் –
ஏஷ அணுராத்மா புருஷம் உபைதி திவ்ய-என்றும்-
(ஆக -12-மெய்ப்பொருள்கள் அருளி -ஆத்மாவுக்கு -6-/ பிரக்ருதிக்கு -3-அருளிச் செய்கிறார் –
தத்வ த்ரயம் -அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் -அனைத்தையும் ப்ரமாணங்களால் காட்டி அருளி )
ஆராக்ர மாத்ரோ ஹ்யவரேபிதர்ஷ்டா-என்கையாலே பிரத்யகாத்மா அணுவாய் இருப்பான் என்றும் –
நித்யானாம் சேதனானாம் -என்கையாலே நித்யனாய் இருப்பான் என்றும் –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா –என்கையாலே போக்தா என்றும் –
ப்ர்தகாத்மானாம் ப்ரேரிரதம் சமத்வ -என்கையாலே ஸ்ரீ சர்வேச்வரனில் வேறுபட்டு இருப்பான் என்றும் –
தயோரன்யம் பிப்பலம் ஸ்வாத்வத்தி – என்கையாலே கர்ம பல போக்தா என்றும் –
ப்ரஹ்மணே த்வா மகச ஒமித்யாத்மானம் புஞ்ஜீத -என்கையாலே பகவத் அனந்யார்க்க சேஷ பூதன் என்றும் –
தமேவம் வித்வானம்ர்த்த இஹ பவதி -என்கையாலே தாதர்ச ஜ்ஞானத்தை கொண்டு
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை-பெறக் கடவன் என்றும்
சமானம் வ்ர்ஷம் பரிஷஸ்வ ஜாதே -என்கையாலே அசித் ஈஸ்வரனுக்கு கிரீடா பரிகரமாய்- இருக்கும் என்றும் –
ஆகாசாத் வாயு வாயு ரோர் அக்னி அக்னேராப அத்ப்ய ப்ர்த்வி-என்கையாலே சதுர்விம்சதி தத்வாத்கமாய் பரிணமிக்கும் என்றும் –
ம்ர்த்தி கேத்ய வசத்யம் -என்கையாலே துச்ச வ்யாவர்த்தமாய் இருக்கும் என்றும் –
இப்படி தத்வ த்ரயத்தினுடையவும் ஸ்வரூப ஸ்வ பாவாதிகளை -இந்த அஞ்ஞான வர்த்தகமான பூ லோகத்திலே
யதாவாக உபதேசித்து உபகரித்து -என்று –
புரத்தல் -காத்தல் –
அன்றிக்கே இரண்டாம் யோஜனைக்கு அனுகுணமாக
பொருளைத் துரத்தி இந்த பூதலத்தே மெய்யை சுரக்கும் -என்றதுக்கு
ஸ்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை ஸ்வ உபதேசத்தாலே ஒட்டி விட்டு இந்த பூதலத்தில்
சதைக ரூபனாய் சத்ய சப்த வாச்யனாய் ஆத்மாவை ரஷித்து அருளினார்-என்று பொருளாக கடவது
இராமானுசன் நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யராய் –உபய வேதாந்தாசார்யராய் –
திருத்துக்கைக்கு யாரேனும் ஆளுண்டோ என்று எதிர் சூழல் புக்கு வழி பார்த்து-நிற்கச் செய்தே –
பொய்யை –நிற்க –
வேதப் பிரமாணத்தை ஏற்காத புற மதங்களும் -அதனை ஏற்கும் குத்ருஷ்டிகளும் பொய்யான விஷயங்களையே
புகட்டி மேலும் மேலும் அவைகளையே விளக்கி வலியுறுத்துவனாய் உள்ளன
இம்மதங்கள் சுரக்கும் பொய்களில் ஒன்றுக்கு ஓன்று வேற்றுமை காணப் படினும் பொய்யான விஷயத்தை சுரத்தல்
என்னும் அம்சத்தில் சிறிதும் வேற்றுமை இல்லை .
புற மதமாகிய ஜைன மதம் ஆத்மா தத்துவம் தேகத்தின் அளவினது என்னும் பொய்யை சுரக்கின்றது .
பௌத்த மதம் ஆத்மா தத்தவத்தின் ஷணிக விஞ்ஞானம் எண்ணம் பொய்யை சுரக்கிறது .
குத்ருஷ்டி மாதமாகிற ந்யாய மதம் ஆன்ம தத்வம் விழ அது அறிவுடைமை யதே யாயினும்
வடிவம் அறிவன்று என்னும் பொய்யை சுரக்கிறது .
மாயாசபளி தமான ப்ரஹ்மம் அவித்யையினால் மறைக்கப் பட்டு சம்சரிக்கிறது என்னும்
பொய்யை சுரக்கிறது -மாயி -சங்கர -மதம் .
சத்யமான உபாதியினால் ப்ரஹ்மம் கர்மத்துக்கு வசப்படுகிறது என்னும் பொய்யை சுரக்கிறது-பாஸ்கர மதம்
ப்ரஹ்மம் அசேதனப் பொருளோடும் -சேதனப் பொருளோடும் இயல்பான பேதமும் அ பேதமும் கொண்டதாலின்-
ப்ரஹ்மமே ஜீவன் அசேதனப் பொருள்களின் மாறுபடும் இயல்பும் -பரிணாம ஸ்வபாவமும் –
சேதனர்களின் அபுருஷார்த்த அந்வயமும்-துக்கப் படும் இயல்பும் -ப்ரஹ்மத்துக்கு இவர்கள் பஷத்தில் தவிர்க்க ஒண்ணாதவை
என்னும் பொய்யைச் சுரக்கிறது யாதவ பிரகாச மதம் –
இங்கனம் பொய்யைச் சுரக்கும் மதங்களின் அர்த்தங்களை நிலை நிற்க ஒட்டாமல் துரத்துகிறார் ஸ்ரீ எம்பெருமானார் .
துரத்தல் -ஒட்டுதல்
துரந்து-பிறவினையின் கண் வந்த தன்வினை -துரத்தி -என்றபடி –
வெளிச்சம் உள்ள இடத்தில் இருள் இருப்பு கொள்ள மாட்டாது ஓடுகின்றன -என்க.
பொய்ப் பொருள்களை பரவுவதற்கு பாங்கான இந்த பூதலத்திலே -மெய்ப் பொருளைப் பரப்புவதின் மூலம் –
அவற்றைத் துரத்தி அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் –
1-ஜீவாத்மா ஸ்வரூபம் அணு ஸ்வரூபமானது .
2-அது நித்தியமாய் -ஞான ஸ்வரூபமாய் உள்ளது –
3-ஞானத்தை தன் குணமாகக் கொண்டதும் ஆதலின் -அது அறிவு வடிவில்லாத பொருளாகாது .
4-அது திருமகள் கேள்வனுக்கு சேஷப்பட்டது –
5-ப்ரஹ்மமும் ஈஸ்வரனும் ஒன்றே-ப்ரஹ்மம் மாயா சபளிதமாய் -ஈச்வரனாவதும் -அவித்யையினால்
ப்ரஹ்மம் மறைக்கப் படுவதும் பொருந்துவன அல்ல –
6-ஜீவனும் ப்ரஹ்மமும் என்றும் வேறு பட்ட பொருள்களே .
7-ப்ரஹ்மம் சேஷி -ஜீவன் சேஷ பூதன்
8-எனவே சத்யோபாதியினால் ஜீவ ப்ரஹ்ம பேதம் ஏற்படுவதாக கூறுவதும் ஏற்புடைதாகாது-
9-நிர் விகாரமாக -மாறுபாடு அற்றதாக -ஓதப்படும் ப்ரஹ்மத்துக்கு -அசேதனப் பொருள்களின் மாருபாடுமியல்பும் –
10-சேதனர்களின் துக்கப்படும் நிலையும்-நினைத்தற்கும் ஒண்ணாத மகா பாபங்களாகும் என்று-கருதுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் .
இங்கனம் வேத நூல் ஒத்கின்ற உண்மைப் பொருள்களை பாதுகாப்பதன் மூலம்
பொய்யைச் சுரக்கும் பிற மதப் பொருள்களை கண்டித்து –
தாம் பாது காத்த மெய் அறிவை உய்வதற்காக பெற விரும்பி –தன் பால் வருவார் யாரேனும் உண்டோ
என்று வழியிலே விழி வைத்து எதிர்பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி இருக்க-
உய்யும் வழி உணராது உலகத்தார் உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .
இனி -பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து -என்பதற்கு
பொய்யான தேஹத்தை பிறவிகள் தோறும் மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டு இருக்கும் பொருளான
தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வ த்ந்த்ரிய அபிமானத்தையும் ஒட்டி என்றும் –
மெய்யைப் புரக்கும் -என்பதற்கு மெய்யான ஆத்ம ஸ்வரூபத்தை காப்பாற்றும் என்றும் உரை கூறலுமாம் .
பொய் -என்பது பிறப்பு இறப்புகள் வாய்ந்தது -என்றுமொருபடி பட்டு இராது மாறுபடும் இயல்பினதாக தேஹத்தை சொல்லுகிறது
இன்று தேஹம் என்னும் பேர் வாய்ந்து -பிறந்தது ஒரு படிப்-பட்டு இராமல் மாறுபட்டுக் கொண்டே வந்து
இறுதியில் அழிந்து சாம்பலாகி விடுகிறது அன்றோ – ஆதலின் அது பொய் ஆயிற்று –
அத்தகைய தேஹத்தை பிறவித் தொடரிலே மேன்மேலும் சுரப்பான
தேகாத்ம அபிமானமும் ஸ்வ தந்த்ர்யா அபிமானமும் ஆகும் .
அநாத்மன் யாத்மா புத்திர்யா அச்வே ஸ்வ மிதியா மதி –
அவித்யா தரு சம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்த்திதம் –என்று
ஆத்மா அல்லாத தேகத்தில் ஆத்மா என்னும் எண்ணமும்
தனக்கு உரிய சொத்து அல்லாத ஆத்மா தத்துவத்தில் தனக்கு உரிய சொத்து என்னும்
ஸ்வா தந்த்ரிய எண்ணமும் –
அவித்யை-சம்சாரம் -என்னும் மரம் உண்டாவதற்கு விதையாம்-
இந்த விதை கீழ்க் கூறியவாறு இரு பிரிவாக உள்ளது .-எனபது காண்க –
இங்கனம் உடல் எடுத்து சம்ஸ்ரிப்பதற்க்கு காரணமான -தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –
அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும் ஆத்ம தத்துவத்தை –
மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்ம ஸ்வரூபத்திற்கு மெய் எனபதுஆகு பெயர் ஆயிற்று –
மாறுபடும் அசேதன பொருள்களை பொய் -அந்ருதம் -என்றும் –
மாறு படாத சேதனப் பொருள்களை மெய் -சத்யம் -என்றும் உபநிடதம் -ஓதி இருப்பதும் இங்கு உணரத் தக்கது .
தம் உபதேசத்தால் தொடர்ந்து உடல் எடுத்து சம்சரிப்பதற்க்கு காரணமாக தேகாத்ம அபிமானாதிகளை ஒழித்து
இவ் உலகில் ஆத்ம ரஷணம் பண்ண ஸ்ரீ எம்பெருமானார் காத்து நிற்கும் போது –
இவ் வையத்தில் உள்ளோர் உய்யும் வழி உணராது -உழல்கின்றனரே -என்று வருந்துகிறார் .
வேறு நம்மை உய்யக் கொள்ள தெய்வம்-
அநாதி பாப வாசனா தூஷித சேஷி ஷேமுஷீகராய்
அவர் பக்கல் சஜாதீய புத்தியைப் பண்ணி -அவர் உபதேசத்துக்கு இசையாதே –
எங்களை உஜ்ஜீவிப்பைக்கு சமர்தமான-வேறு ஒரு தெய்வம் –
இங்கி யாதென்று உலர்ந்து –
இந்த பூமியிலே ஏதோ வென்று தேடித் தேடித் தடுமாறி -அப்படி-பட்ட தெய்வத்தை லபியாதே –
மிகவும் உடம்பு உலர்ந்து கிலேசித்து –
அவமே ஐயப்படா நிற்பர் –
இவ் விஷயம் எனக்கு-உத்தேச்யம் என்று பற்றி உஜ்ஜீவித்து போகைக்கு உறுப்பான யதா ஜ்ஞானத்தை லபிக்க பெறாதே
உங்களுக்கு உஜ்ஜீவனகரம் இல்லை என்று சொன்னாலும் வ்யர்தமே –
இனி நமக்கு ரஷகர் ஆவார் ஒருவரும் இல்லை என்று சம்சயப்படா நின்றார்கள் –
ஐயம் –சம்சயம் –
வையத்து உள்ளார் நல்லறிவு இழந்தே
பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே –
அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே தலைக் கட்டிற்று –
சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத ஸூஹ்ருதர்
ஆகையாலே அவர்களுக்காக ஸ்ரீ அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –
வேறு நம்மை –நல்லறி விழந்தே
ஸ்ரீ இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை தேடுவது –
அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க
தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின் கிடைக்கப் பெறாமையின் –
மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –
தாம் உய்யும் படியாக தம்மைக் கொள்ள வல்ல தெய்வத்தை தேடுவதால் -தமது உஜ்ஜீவனத்தில்
வையத்தில் உள்ளோருக்கு நாட்டம் இருப்பது புலனாகிறது
ருசி இருந்தும் இழக்கின்றனரே -என்று வருந்துகிறார் .
நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-
உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை
நல் அறிவைத் தரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே என்று இரங்குகிறார்
அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –
என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது
சொன்னாலும் புரியாது .
இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார் .
ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் ஸ்ரீ இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் ஸ்ரீ அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்ம ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் ஸ்ரீ அமுதனார்
தெய்வமிங்கியாது-என்னும் இடத்தில் இகரம் குற்றியலிகரம் ஆகையால் – 43- பாசுரத்தில் போலே அலகிடாது
கழிக்கவே முன் பின் அடிகளில் போலே பதினாறு எழுத்துக்கள் அமைகின்றன -என்று அறிக –
—————-
மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே–திரு மாலை-6-
புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-
வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே—8-
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-
கெருட வாகனுனும் நிற்க சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -10-
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–-ஸ்ரீ திருவாய் மொழி-4-10-1-
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-
இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்––ஸ்ரீ திருவாய் மொழி-5-2-1-
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply