ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் –
தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி –
இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு
வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ்ப் பாட்டிலே –
லோகத்தை எல்லாம் பிரமித்து அளித்த குத்ருஷ்டிகளை பிரபல பிரமாணங்களாலே நிரசித்து –
தம்முடைய பாபங்களை எல்லாம் போக்கி -இன்னும் அதுக்கு மேலே சிறிது கொடுக்க வேணும் என்று நினைத்தார்
என்று ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகார பரம்பரையை அடைவே அனுசந்தித்து –
இதிலே –
தரிசு கிடந்த தரையை செய் காலாகும் படி திருத்தும் விரகரைப் போலே –
இவ்வளவும் விஷயாந்தர ப்ரவணனாய் போந்த என்னைத் திருத்துகைக்காக –
படாதன பட்டு -அரியன செய்து -திருத்தி -தேவரீருக்கு வகுத்த விஷயமான ஸ்ரீயபதிக்கு ஆளாகும்படி பண்ணி அருளின பின்னும்-
வேறு சில அயதார்த்தங்களை என்னுடைய மனசில் வலிய பொருத்திலும் – பொருந்தாதே இருப்பன் -என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
இங்கனம் தமக்கு செய்து அருளிய உபகாரங்களை அனுசந்தித்த பிறகு –
தம்மைத் திருத்துவதற்காக அவர் பட்ட வருத்தங்களைச் சொல்லி –இப்படி என்னைத் திருத்தி –
தேவரீருக்கு உகந்த விஷயமான ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –
பத உரை –
எம் இராமானுச -எங்களுடைய ஸ்ரீ எம்பெருமானாரே
கருத்தில் -அடியேன் மனத்தில்
புகுந்து -வந்து
உள்ளில் -உள்ளத்தில் இருக்கிற
கள்ளம் -களவை
கழற்றி -போக்கி
கருதரிய -வேறு எவருக்கும் நெஞ்சால் நினைப்பதற்கும் இயலாத
வருத்தத்தினால்-பிரயாசத்தினால்
மிக வஞ்சித்து -நான் அறியில் தப்பி விடுவேன் என்னும் நினைவாலே எனக்கு தெரியாமல் மிகவும் மறைத்து
நீ -தேவரீராகவே
திருத்தி -திருத்தமுறச் செய்து
இந்த மண்ணகத்தே -இந்த உலகத்திலே
திரு மகள் கேள்வனுக்கு -ஸ்ரீயபதியான ஸ்ரீ சர்வேச்வரனுக்கு
ஆக்கிய பின் -ஆளாக்கியதற்கு பிறகு
என் நெஞ்சில் -திருத்தப்பட்டு திருந்தியவனாகிய என்னுடைய மனசிலே
மற்று -தேவரீர் உபதேசித்த மெய்ப் பொருளைத் தவிர வேறு பட்ட
ஒர் பொய்ப் பொருள் -ஒரு பொய்யான பொருளும்
பொருத்தப் படாது -வலியப் பொருத்தும்படி புகுத்தினாலும் பொருந்த மாட்டாது –
வியாக்யானம்
நெடும் கை நீட்டாக இருக்கில் -இவன் நெஞ்சைத் திருத்தப் போகாதென்று நெஞ்சு தன்னிலே-வந்து புகுந்து –
குடியிருக்குமவர்கள் செடியறுக்குமா போலே-உள்ளுண்டான ஆத்மபஹாரத்தைப் போக்கி-
வேறு சிலர்க்கு நெஞ்சால் நினைக்கவும் கூட அரிதாய் இருந்துள்ள வருத்தத்தாலே –
நான் அறியில் செய்த கிருஷி தன்னையும் அழித்து கொள்வன் என்று-எனக்கு ஒன்றும் தெரியாதபடி மிகவும் மறைத்து –
தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து -தரிசு கிடந்த தரையை செய் காலாம் படி திருத்துவாரைப் போலே-திருத்தி –
இந்த லோகத்திலே தேவரீருக்கு உத்தேச்ய விஷயமான ஸ்ரீய பதிக்கு-அந்தப்புர விநியோகத்துக்கு ஆளாம்படி -பண்ணின பின்பு –
இப்படி தேவரீர் திருத்த -திருந்தின என் மனச்சிலே தேவரீர் அறிவித்த யதார்த்தம் ஒழிய-
அதுக்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தம் வலியப் பொருத்திலும் பொருந்தாது –
இந்த மண்ணகத்தே -என்று
இருள் தரும் மா ஞாலமான -திருவாய் மொழி -10 4-1 –
இந்த லோகத்திலே திருத்துகையில் உண்டான அருமையைச் சொல்லிற்றாகவுமாம்-
கருத்தென்று –
மனோ வருத்தி வாசியான சப்தத்தாலே மனசை சொல்லுகிறது .சிந்தை என்னுமா போலே .
வருத்தம் -ஆயாசம் /பொருந்துதல்-இசைத்தல்
இந்த மண்ணகத்தே -திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி –
1-கருத்தில் புகுந்து –2-உள்ளில் கள்ளம் கழற்றிக் –3-கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து–
4- நீ யிந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய உபகாரகங்கள்
உள்ளே புகுந்து திருத்தி –
பட்டத்து அரசியான-பிராட்டியாரின் அந்தப் புரத்திலும் உபயோகப் படத் தக்க முறையில்
அந்தரங்க கைங்கர்யம் செய்யும்படி ஆளாக்கினமை தோற்றுகிறது–
நிர்ஹேதுகமாக அவர் பேறாக செய்து அருளி -தயைக சிந்து –மெய்ப்பொருள் -சேஷி சேஷி பாவம் –
அருகில் வந்து புகுந்தான் பெற்ற பாவிக்கு விட போகாது-
அஞ்ஞான- ஒன்றும் தெரியாத-அன்யதாஞ்ஞான-குணம் மாறி-விபரீத ஞானம் -பொருளை மாற்றி-.மூன்றையும் வாசனை உடன் ஒழித்து
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-போல ஆத்மா அபகாரம் தோஷம் போக்கி
மற்ற ஓர் பொய் பொருளும் -மற்றவர்களுடைய பொய் பொருள்களும் நெஞ்சில் புகாது என்றபடி
நெடும் கை நீட்டு என்று மட்டும் கூடாது என்று -கூரத் தாழ்வான் ஸ்வாமிக்கு தஷினோ பாஹு –
போதாது என்று நெஞ்சில் புகுந்து –
கருத்து -ஆகு பெயர் -நெஞ்சுக்கு -ஆத்ம பாவ -கீதையில் பிரகரணத்துக்கு சேர கருத்து என்றே அர்த்தம் ஸ்வாமி அங்கே சாதிக்க –
இங்கே கருத்து -மனஸ் நெஞ்சு என்றபடி -மேலே உள்ளில் கள்ளம் கழற்றுகிறார் அன்றோ –
அடியேனுக்கு உத்தேச்யமான திருமகள் -சொல்லாமல் தேவரீருக்கு உத்தேச்யம் –என்று மதுரகவி நிஷ்டை -என்றபடி –
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி –
தேஷாமேவானுகம் பரர்த மஹா மஜ்ஞ்ஞான ஜந்தம நாஸ யாம்யா மமபாவச்தோ ஜ்ஞானதீ பேகபாச்வதா – என்றும் –
என்னை தீ மனம் கெடுத்தாய்-என்றும் சொல்லுகிறபடி-
நெடும் கை நீட்டாக இருக்கில் இவன் நெஞ்சைத் திருத்த பணிப்படும் என்று கொண்டு நெஞ்சு தன்னில்
தானே வந்து புகுந்து –
குடி இருக்கிறவர்கள் அங்கு இருக்கிற செடிகளை அறுக்குமா போலே –
உள்ளில் உண்டான அஜ்ஞ்ஞான அந்யதாஞ்ஞான விபரீத ஜ்ஞான ரூபமான தோஷங்களை எல்லாம் –
வாசனையோடு துடைத்து –
கிம் தேன நக்ர்தம் பாபம் சோரேண ஆத்மபஹரினா -என்னும்படியான
ஆத்மா அபஹராதி தோஷங்களை கட்டடடங்க போக்கி என்றபடி –
கருத்து -என்று
மனோ வ்ருத்தி வாசியான சப்தத்தாலே பிரகரண அனுகுண்யத்துக்காக மனசை சொல்லுகிறது –
சிந்தை என்னுமா போலே –
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி –
மனத்தின் கண் உண்டாகும் -எண்ணத்தைக் கூறும் கருத்து என்னும் சொல்-எண்ணம் உண்டாகும்
இடமாகிய மனத்தைக் குறிக்கிறது
இனி ஆத்மபாவச்த்த -ஸ்ரீ கீதை -10 11- -என்னும் இடத்தில் போலே –
மநோ வ்ருத்திக்கு-விஷயமாதலை கூறுவதாக கொள்ளலாகாதோ எனின் –
புகுந்து என்னும் சொல்லமைப் புக்கு-அது ஒவ்வாதாதலினும் -புகுந்த உள்ளத்திலே கள்ளம் களற்றுவதாக மேலே கூறுவதற்கு
ஏற்ப உடைத்தாய் இருத்தலாலும் -மனத்திற்கு கருத்து என்பதை ஆகுபெயராகக்-கொள்ளுதலே நேரியது -என்க .
நான் அவர் எழுந்து அருளி உள்ள இடத்திற்கு சென்று பிரார்த்தித்தேன் அல்லேன் –
அவர் தாமாகவே வந்து -என் மனத்தில் புகுந்தார் –
புகுந்தால் இசையேன் என்கைக்கு இடம் இல்லாதபடி அறிவுக்கு வாய்த் தலையான-நெஞ்சிலே வந்து புகுந்தார் –
என் நெஞ்சைத் திருத்துவதற்கு நெடும் தொலைவில் இருந்தால் இயலாமல் போகும் என்று-நெஞ்சத்திலே வந்து புகுந்தார்-
திருத்துவதற்கு அங்கேயே இருத்தல் தேவைப் படுதலின் குடியிருப்போர் அங்குள்ள-குப்பை கூழங்கள் ஆகிய குற்றங்களை
அகற்றி விடுவது போலே -உள்ளத்தில் உள்ள-கள்ளம் கழலுமாறு செய்து அருளினார்
கள்ளமாவது -ஆத்மபஹாரம் –
யோன்யதாசந்த மாத்மானம் அந்யதா ப்ரதிபத்யதே கிம் தேன நக்ருதம் பாபம் சோரேனாத் மாபஹாரினா –
எவன் வேறு விதமாய் இருக்கும் ஆத்மாவை வேறொரு விதமாக பார்க்கிறானோ –ஆத்மபஹாரம் பண்ணுமவனான
அந்தத் திருடனாலே எந்தப் பாபம் செய்யப் படவில்லை -என்று ஆத்மபஹாரம் களவாக கூறப்பட்டு இருத்தல் காண்க –
ஸ்ரீ எம்பெருமானுக்கே உரியதாய் -பர தத்ரமான ஆத்மாவை தனக்கு உரியதாய் -அதாவது-ஸ்வ தந்த்ரிமாக கொள்ளுதல்
ஆத்மபஹாரம் எனப்படும் -அதுவே களவு -பிறர் பொருளைத்-தன்னதாகக் கருதுவது களவாகும் அன்றோ –
அந்தத் திருட்டுப் புத்தியாகிய ஸ்வா தந்திரப் புத்தியை போக்கடித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –
கருதரிய வருத்தத்தினால் –
வேறு சிலருக்கு நெஞ்சால் நினைக்கவும் கூட அரிதாய் இருந்துள்ள-வருத்தத்தினாலே –
வருத்தம் -பிரயாசம் –
கருதரிய வருத்தத்தினால் –
ஆக்கிய பின்-களவிலே தகனேறின என்னை விட்டு -அடியோடு -களவு தொலையும்படி -செய்தது முதல்–
திருமகள் கேள்வனுக்கு ஆளாக்குதல் ஈறாக -எனக்கு தெரியாமல் மறைத்து தாமே செய்து-முடிப்பது என்பது –
எவ்வளவு செயற்கு அரிய செயல் –
வேறு எவர்க்கும் இது நெஞ்சாலும்-நினைத்துப் பார்க்க முடியாத செயல் அன்றோ –
அத்தகைய செயலைச் செய்வதற்கு எவ்வளவு-பிரயாசப் பட்டு இருக்க வேண்டும் -என்கிறார் .
மிக வஞ்சித்து –
நான் அறியில் செய்த க்ர்ஷி தன்னையும் அழித்து கொள்வன் என்று -இரா மடம் ஊட்டுவாரைப் போலே –
எனக்கு ஒன்றும் தெரியாத படி மறைத்து –
மிக வஞ்சித்து –
எனக்கு தெரிந்து விடில் -என் காரியத்தை நானே கெடுத்துக் கொள்வேன் என்று –
என் காரியம் முடியும் வரையிலும் தொடர்ந்து எனக்கே மறைத்து வந்தமையின் –மிக வஞ்சித்து -என்கிறார் –
இந்த வஞ்சனை தாய் குழந்தையை வஞ்சிப்பது -போன்று-இவருக்கு நல்ல பயனை அளித்தலின் –
குற்றம் அன்று -குணமேயாம் -என்க .
நீ இந்த மண்ணகத்தே திருத்தி –
தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து -இவ்வளவும் நித்ய சம்சாரியாய் விஷயாந்தரங்களில் மண்டி விமுகனாய் கொண்டு –
இருள் தரும்மா ஞாலத்திலே -ஸ்வைரமாக அபத பிரவ்ர்த்தனாய் போந்தேன் ஆகையாலே கரும் தறையான என்னை –
செயல் நன்றாகத் திருத்தி –
தேஷாம் சத்த யுத்க்தாதாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் ஏனமா முபயாந்திதே -என்கிறபடியே
ஒரு அதிகாரத்தைப் பார்த்து திருத்துகை அன்றிக்கே-நிர்ஹேதுகமாக திருத்தினாய் என்றபடி –
திருத்துகை யாவது-
இவ் வாத்ம வஸ்து சேஷியான ஸ்ரீயபதிக்கு சேஷம் என்னும் இவ் வர்த்தம் நெஞ்சில் படும் படி உபதேசிக்கை –
நீ திருத்தி –
நான் திருந்துகைக்கு என் முயற்சியின் கலப்பு சிறிதும் இன்றி -தானே முயன்று-
தரிசு கிடந்த நிலத்தை பயிரிடத் தக்க நன் செய்யாக வழி தெரிந்தவர்கள் ஆக்குவதைப் போலே-
என்னை பயனுறத்தக்க வகையில் திருத்தி .-
திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
நலமந்த மில்லதோர் நாடு புகுந்த பின்பு வரக் கடவதான இந்த சேஷத்வ ஜ்ஞானத்தை-
இந்த மண்ணகத்தே எனக்கு உபகரித்து -தத் பலமாகக் கொண்டு –
பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே
ஸ்ரீ தேவி யாகிற பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தப்புர விநியோகத்துக்கு ஆளாம்படி பண்ணின பின்பு –
எனக்கு ஜ்ஞானத்தை பிறப்பித்தவனுக்கு என் உயிரை அறவிலை செய்து எழுதிக் கொடுத்த பின்பு –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்கிறபடி
ஞானத்தை எனக்கு உபகரித்து அருளி –
என்னை பகவத் அனந்யர்ஹா சேஷ பூதனனாம் படி கடாஷித்து அருளின பின்பு -என்றபடி –
இந்த மண்ணகத்தே திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின்–
இந்த உலகத்தில் -தேவரீருக்கு உத்தேச்யனான ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு என்னை-ஆளாக்கிய பிறகு –
திரு மகள் கேள்வன் -என்றமையின்
பட்டத்து அரசியான-ஸ்ரீ பிராட்டியாரின் அந்தப் புரத்திலும் உபயோகப் படத் தக்க முறையில்
அந்தரங்க கைங்கர்யம் செய்யும்படி ஆளாக்கினமை தோற்றுகிறது .
ஸ்ரீ அச்சுதன் தீர்ந்த அடியவர்களை திருத்தி தனக்கு பணி கொள்ள வல்லவனானான் –
ஸ்ரீ குருகூர் நம்பி தகுதி அற்றோரையும் நன்றாகத் திருத்தி தாம் பணி கொள்ள வல்லவரானார் –
ஸ்ரீ எம்பெருமானார் அங்கனம் திருத்தி -தாம் பணி கொள்ளாது -ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு ஆளாக்குகின்றார் .
தன் வாசி தெரியாது எதிரம்பு கோப்பாருள்ள இம்மண்ணகத்தே –
தான் மாதரம் அன்றி-ஸ்ரீ திருமகளும் தானுமாய் -ஸ்ரீ திருமகள் கேள்வன் எழுந்து அருளி இருக்கிற போது –
அவனிடத்தில்-பரிவுடையராய் -ஆளுமாளார் -திரு வாய் மொழி – 8-3 3- -என்றபடி –
அவனைக் காப்பார்-யாரும் இலரே என்று அவனைப் பரிந்து நோக்கி -காப்பதற்காக –
அவனுக்கு ஆளாக்குகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் என்னலுமாம் –
இங்கு -அல்லாதவர்களைப் போலே கேட்கிறவர்களுடையவும் –சொல்லுகிறவர்கள் உடையவும் தனிமையைத் தவிர்க்கை
யன்றிக்கே –ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று
ஸ்ரீ பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255- –என்னும்
ஸ்ரீ பிள்ளை உலகாசிரியர் ஸ்ரீ ஸூக்தி அனுசந்திக்கத் தக்கது
இனி –இந்த மண்ணகத்தே -என்பது –
ஸ்ரீ திரு மகள் கேள்வனுக்கு -என்பதோடு இயையாமல்-திருத்தி -என்பதோடு இயைதலுமாம்
அப்பொழுது இவ் இருள் தரும் மா ஞாலத்திலே-திருத்துதலில் உள்ள அருமை தோற்றுகிறது
என் நெஞ்சில் பொருத்தப் படாது –
இப்படி தேவரீர் படாதன பட்டு திருத்த திருந்தின என் மனசிலே இசையாது –
எம் இராமானுசா –
அஸ்மத் குரோ -என்கிறபடி –
எனக்கு அஞ்ஞா தாஜ்ஞாபனம் பண்ணி உபகரித்து அருளின எம்பெருமானாரே –
மற்றோர் பொய்ப் பொருள் –
தேவரீர் அறிவித்த யதார்த்த ஜ்ஞானம் ஒழிய அதற்க்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தமான அர்த்தத்தையும் –
பொருத்த படாது –
வலியப் பொருத்தினாலும் பொருந்தாது –
பொருந்துதல் -இசைத்தல் –
இந்த மண்ணகத்தே திருத்தி –என்று –
இருள் தரும் மா ஞாலத்தில் திருத்துகையில் உண்டான அருமையை சொல்லிற்றாகவுமாம் –
தீபம் வியாபித்த இடத்தில் திமிர வ்யாப்திக்கு வழி இல்லாதது போலே
ஞானம் புக்க-இடத்தில் அஞ்ஞானம் புகுர வழி இல்லை என்றது ஆய்த்து –
ஜ்ஞானக் நிஸ சர்வ கர்மாணி பச்ம சாத் குரு தேர்ஜுன -என்னக் கடவது இறே-
என் நெஞ்சில் –பொய்ப் பொருள்-
என் நெஞ்சில் -திருத்தப் பட என் நெஞ்சில்-பொய்ப் பொருள் பொருத்தப் படாது-
மெய்ப் பொருள் புக்க இடத்தே பொய்ப் பொருள் வலியப் புகுத்திடினும் பொருந்தி நிற்க-மாட்டாது அன்றோ
மெய்ப் பொருள் –
ஜீவாத்மா ஸ்ரீ திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –
பொய்ப் பொருளான
ஜீவாத்மா பர ப்ரஹ்ம ஐக்யமடைதல் -அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-
மற்று ஓர் பொய்ப் பொருள்-
எம் குருவான ஸ்ரீ ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி –
இனி மற்றோர் உடைய பொய்ப் பொருள் என்று உரைத்தலுமாம்-
——————-
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப்பிரானார் கிடந்தார்-பெரியாழ்வார் திருமொழி -5-2-1-
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பண்ணினோம் காப்பே -5-2-3–
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்–5-3-3-
உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை உனக்கு உரித்து ஆக்கினையே -5-4-7-
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை யுனக்கு யுரித்து ஆக்கினையே -5-4-9-
வடதடமும் வைகுந்தமும் மதில் துவராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5-4-10-
என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த -4-
அத்தனாகி யன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –பெரிய திருமொழி-7-3-3-
தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீர் –திருவாய் மொழி-2-5-8-
ஊழி ஊழி தொறும் எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்ரமனையே -2-7-6-
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே -2-7-7-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே -2-7-8-
எம் கார் முகில் வண்ணா பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -5-7-3-
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள்கின்ற எம்பெருமான் தென்திசைக்கு அணி கொள்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை மீ பால் நின்ற எம்பெருமான் -8-4-3-
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply