ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இவ்விஷயத்தை ஆஸ்ரயிக்க இசையாத சம்சாரிகள் நிலையைக் கண்டு இழவு பட்டார் கீழ் –
உம்முடைய நிஷ்டை தான் இருக்கும் படி என் -என்ன –
இவ்விஷயமே உத்தேச்யம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-
ஒழிவில் காலத்தில் -திரு வாய் மொழி – 3- 3-1 – படியே நான் அடிமை செய்வேன் -என்கிறார் —
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ்ப் பாட்டில்
ஸ்ரீ எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணியும் -பிரமாணிகமாக வேத மார்க்க பிரதிஷ்டாபநம் பண்ணியும் இருக்கச் செய்தே
அஜ்ஞான பிரசுரமான இந்த பூ லோகத்திலே இருந்துள்ள சேதனர் அவரை ஆஸ்ரயிக்க இசையாதே –
வேறொரு ரஷகாந்தரம் உண்டோ என்று தேடித் தடுமாறி திரிந்து – அவசன்னராய் விட்டாட்கள் என்று அவர்கள் படியை சொல்லி –
இதிலே –
அவர்களை போல் அன்றி -அவர்களைக் காட்டில் அத்யந்த விலஷணராய் ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தையே
விஸ்வசித்து இருக்கும் மகாத்மாக்கள் இடத்தில் பக்த ஸ்நேகராய் -ஒருக்காலும் அவர்களை விஸ்மரியாதே
இருக்குமவர்கள் யாவர் சிலர் -அந்த ததீயர்க்கே
1-சர்வ தேச -2-சர்வ கால–3-சர்வ அவச்தைகளிலும் -4–சர்வ வித கைங்கர்யங்களையும் -5–சர்வ கரணங்களாலும்-
6-சர்வரும் அறியும்படி -பண்ணக் கடவேன் என்று தம்முடைய நிஷ்டையை சொல்லுகிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி உய்வுறாதவர்களும்-சொன்னாலும் -அதனுக்கு இசையாதவர்க்களுமான
சம்சாரிகள் நிலையைக் கண்டு தாம் இழவு பட்டார் கீழே –
சம்சாரிகள் நிலை கிடக்கட்டும் -உம்முடைய நிலை எவ்வாறு உள்ளது -?என்பாரை நோக்கி-
ஸ்ரீ எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 –
பத உரை
நல்லார் -நல்லவர்கள்
பரவும் -ஏத்தும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
திரு நாமம் -திரு நாமத்தை
நம்ப வல்லார் -தஞ்சமாக -நம்பிக் கொண்டு இருக்கிற திறமை வாய்ந்தவர்களுடைய
திறத்தை-நன்மையை
மறவாதவர்கள் -மறந்து போகாமல் என்றும் நினைந்த வண்ணமாய் இருப்பவர்கள்
யவர்-யாவர்களோ
அவர்க்கே -அவர்களுக்காகவே
எல்லா இடத்திலும் -சர்வ தேசங்களிலும்
என்றும் -சர்வ காலங்களிலும்
எப்போதிலும் -சர்வ அவஸ்தை -நிலைகளிலும்
எத் தொழும்பும் -எல்லா அடிமைகளும்
சொல்லால்-வாக்கினாலும்
மனத்தால்-நெஞ்சினாலும்
கருமத்தினால்-சரீரத்தாலும்
சோர்வு இன்றி -தனித்து இன்புறும் நிலை இல்லாமல்
செய்வன்-செய்வேன்
வியாக்யானம் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -திரு விருத்தம் -100 என்னுமா போலே
சத்துக்கள் அடங்கலும்-இருந்த இடங்களிலே ப்ரேம பரவசராய் ஏத்தும் படியான ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு நாமத்தை –
ந சேத் ராம்னுஜே-த்யேஷாசதுரா சதுரஷரீ காமவஸ்த்தாம் பிரபத்யன்னே ஜன்தவோ ஹந்தமாத்ருசா -ஸ்ரீ ஆழ்வான் முத்தகம் — என்கிறபடியே –
தங்களுக்கு தஞ்சமாக விஸ்வசித்து இருக்கிற-வல்லவர்களுடைய பிரகாரத்தை அனுவரத அனுசந்தானம் பண்ணி இருக்குமவர்கள் யாவர் சிலர் –
அவர்களுக்கே -சர்வ தேசத்திலும் -சர்வ காலத்திலும் -சர்வ அவச்தைகளிலும் – சர்வ சேஷ வ்ருத்திகளும் –
வாக்காலும் மனச்சாலும் காயத்தாலும் –
தனக்கேயாக -திருவாய் மொழி -2 9-4 – – என்கிறபடியே-ப்ருதக்ரசம் அறச் செய்வன் .
வல்லார் திறத்தை மதியாதவர்கள் -என்று பாடமான போது
மதித்தல் -அளவிடுதலாய் -அவர்கள் படியை பரிச்சேதியாதவர்கள் -என்று பொருளாக கடவது –
நம்புதல் -விஸ்வசித்தல்-விரும்புதலுமாம்
திறம் -பிரகாரம்
தொழும்பு -அடிமை
சொல் -கருமம் -என்கிற வற்றால் தத் தத் கரணங்களான வாக் காயங்களை லஷிக்கிறது
சோர்வு -பிரிவு–
சோர்வு -ஆயாசம் -பிரிவில்லாமல் கைங்கர்யம் செய்ய -சேர ஒட்டாமல் பிரகிருதி பண்ணுமே –
சததம் கீர்த்தயந்த –பக்திக்கு -பிரியாது ஆடச்செய்ய -ஈன துழாயானை வழுவா வகை அறிந்து வைகல் தொழ வேண்டுமே –
நல்லார் நவில் குருகூர் -அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -நல்லார் வாழ் நளிர் அரங்கம் —
சர்வ தேச -சர்வ அவத்தைகளிலும் -சர்வ காலத்திலும் –சர்வ சேஷ விருத்தியும் –முக்கரணங்களால் சோர்வின்றி –
சர்வரும் அறியும் படி கைங்கர்யம் செய்ய –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –சித்ர கூடம் -கடல் கரையில் -கங்கை மந்தாகினி கோதாவரி ஆற்றங்கரைகளிலும்-கைங்கர்யம் –
நல்லார் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ பவிஷ்யத்கார-ஆச்சார்யர் -கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் – தீர்த்தவாரி உத்சவம் ஆனபின்பு இன்றும் எழுந்து அருளி –
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -ஸ்ரீ எம்பெருமானாரை அடைந்தேன் -என்கிறார் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் -ஸ்ரீ ஆழ்வார் சொல் கேட்டே ஆச்ரயித்தார்கள் –
ஸ்ரீ பாகவத ஸ்ரீ நாரத புராணம் -அநந்தம் பிரதம யுகம் –கலவ் ராமானுஜ –
அர்வாஞ்சோ–கூர நாத -ஞான அனுஷ்டான பிரகாரம் -ஸ்ரீ ராமானுஜ நாமம் சொல்லி கைங்கர்யம் செய்வதே உபாதேயம்
வார்த்தா மாலை பொக்கிஷம் -அனுபவிக்க அனுபவிக்க -கைங்கர்யம் பெருகும் – நமக்கு ஸ்ரீ அமுதனார் போல்வார் –
மறவாதவர்கள் எவர் -மதியாதவர்கள் -விடாமல் உள்ள சத்துக்களுக்கே கைங்கர்யம் –
அவர்களுக்கே குடிக்குடி ஆடச்செய்யும் நல்ல கோட்ப்பாடு -சொல்லால் மனத்தால் கருமத்தினால் –
ஒவ் ஒன்றினாலும் எல்லா காலத்திலும் -தேசத்திலும் -அவஸ்தைகளிலும் —ஒன்பதை சொல்லவே பொறுமை இல்லையே நமக்கு —
சோர்வின்றியே கைங்கர்யம் செய்ய வேண்டுமே -பண்ணப் பண்ண ஆர்வம் மிக்கு ஆரோக்யம் கிட்டும் –
நல்லார் பரவும் இராமானுசன் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -என்று ஸ்ரீ திரு நகரியிலே வசிக்கும் சத்துக்களாலே விரும்பப்படும் –
1-நம் ஆழ்வாரைப் போலே -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அவர் தம்மாலும் –
2-மேவினேன் அவன் பொன்னடி -என்று அவர்க்கு அந்தரங்கரான ஸ்ரீ மதுரகவிகளாலும் –
3-அவர் தம்முடைய பிரசாதத்தாலே பவிஷ்யாதசார்யா விக்ரகத்தை பெற்று தத் ஆராதனா முகேன ஸ்ரீ மன் நாத முநிகளாலும் –
4-ஆ முதல்வன் -என்று தத் வம்ச்யரான ஸ்ரீ ஆள வந்தாராலும் விரும்பப்பட்ட்ட ஸ்ரீ எம்பெருமானாருடைய
இவர்கள் எல்லாரும் இப்புடைகளாலே ஸ்ரீ எம்பெருமானார் உடைய வைபவத்தை முந்துற முன்னம்-
இந்நானிலத்தே வந்து நாட்டினான் -என்று வெளி இட்ட பின்பு –
அத்தைக் கண்டு -தெளிந்து இறே ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான்-தொடக்கமானவர் அவர் தம்மை பரவத் தொடங்கினது
அநந்தம் பிரதமம் ரூபம் லஷ்மணஸ் துதப்புரம் -பல பத்ரஸ்-த்ர்தீயஸ்து கலவ் ராமானுஜஸ் ஸ்மர்த்த -என்று
ஸ்ரீ நாரத புராண உக்த வசனத்தை சத்துக்கள் வாசித்துக் கொண்டு-போருவர்கள் இறே –
அர்வாஞ் சோயத் பத சரசி ஜத்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யாந்வயமுபகதா தேசிகா-முக்த்திமாபு
சோயம் ராமானுஜ முநிரபி -என்கிறபடி சத்துக்கள் அடங்கலும் இருந்த இடங்களிலே பிரேம பரவசராய் கொண்டு ஏத்தும்படியான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய –
நல்லார் பரவும் இராமானுசன் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -திரு விருத்தம் -100 என்று ஸ்ரீ நம் ஆழ்வார் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கிறார் .
அதனை ஸ்ரீ எம்பெருமானார் திறத்திலும் அனுசந்திக்கிறார் ஸ்ரீ அமுதனார் .
நல்லவர்கள் அனைவரும் எந்த தேசத்தில் இருப்பினும் -எந்தக் காலத்தில் இருப்பினும் –
அன்பிற்கு வசப்பட்டு -ஸ்ரீ எம்பெருமானாரை ஏத்துகின்றனராம்-
தற் காலத்தில் அன்றி – முற் காலத்தில் இருந்த முனிவரும் . -ஸ்ரீ ஆழ்வாரும் முறையே –
கலவ் கச்சித் பவிஷ்யதி -என்றும் –
கலி காலத்தில் ஒருவர் -எம்பெருமானார் – பிறக்கப் போகிறார் -என்றும் –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் மொழி -5 2-1 – – என்று
இவர் பெருமையை உணர்ந்து ஏத்திப் பேசி இருப்பது காண்க .
திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்
ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தில் நம்பிக்கை கொள்ளும் அளவில் அறிவில் தெளிவும் –
அதனில் நிலை நிற்கும் ஆற்றலும் –வாய்ந்தவர்கள் -ஸ்ரீ ஆழ்வான் போல்வார்கள் .
நசேத் ராமானுஜெத்யேஷா சதுரா சதுரஷரீ காமவஸ்த்தாம் பிரபத்யன்னே ஜன்தவோ ஹந்த மாத்ருசா -என்று –
ஸ்ரீ ராமானுஜ -என்னும் இந்தத் திறமை வாய்ந்த நான்கு அஷரங்கள் கொண்ட மந்த்ரம்
இல்லை எனில் -என்னைப் போன்ற பிராணிகள் அந்தோ எந்த நிலையை அடைந்து இருக்கும் -என்று
ஸ்ரீ ஆழ்வான் இந்த திரு நாமத்தின் சீர்மையை -நன்கு உணர்ந்து அதன் பால் மகா விசுவாசம் கொண்டு பேசி இருப்பது -காண்க
ஸ்ரீ ராம ஸ்ரீ ராம என்று அயோதியை வாசிகள் புலம்புவது போல
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஆழ்வார் என்று சொல்வார்களாம் ஸ்ரீ குருகூர் வாசிகள்-
பரவும்-
இருந்த இடத்திலே பிரேம பரவசராய் ஏத்தும் படியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு நாமத்தை-
கும்பிடு நட்டம் இட்டு ஆடி–
ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுர் அஷரீ காமவச்த்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹன்தம் ஆத்ருசா-ஸ்ரீ ஆழ்வான்
சதுரஷரியான திரு நாமங்கள் இரண்டு வகை –
அவை பிரதம பர்வமான ஸ்ரீ நாராயண நாமமும் -சரம பர்வமான ஸ்ரீ ராமானுஜ நாமமும் .ஆகும் .
அவற்றில் ஸ்ரீ நாராயணா என்னும் சதுரஷரியினின்றும்-சிறப்புடைமையின் வேறு பாட்டைக் காண்பிப்பதற்காக –
ஸ்ரீ ராமானுஜ -என்னும் சதுரஷரிக்கு -சதுரா -என்னும் அடைமொழி இடப்பட்டு இருக்கிறது .
வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது ஸ்ரீ நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ஸ்ரீ ராமானுஜ சதுரஷரி –
இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது -என்க –
சதுரஷரி என்றமையின் ஸ்ரீ ராமானுஜ மந்த்ரம் ஏற்றம் தோற்றுகிறது –
ஸ்ரீ நாராயண மந்த்ரம் போலே ஸ்ரீ ராமானுஜ மந்த்ரமும் பிரபன்னர்கள்-அவர்களிலும் -சரம பர்வ நிஷ்டர்கள்-
அனுசந்திக்க வேண்டிய மந்த்ரம் என்று நல்லார்கள் சொல்லா நிற்பர்கள்.
நம்புதல்-விஸ்வாசம் கொள்ளுதல் -விரும்புதலுமாம் .
திரு நாமம் நம்ப வல்லார் திறத்தே –
நசேத் ராமானுஜேத் ஏஷா சதுராசதுரஷரீ-காம வஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்சா-என்றும் –
ஸ்ரீ ராமானுஜ திவாகர –என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ-சமாசரயண சாலி ந -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா -என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நமம் பரம யோகினே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜார்யம் நமதேத்யவாதீத் -என்றும் –
தஸ்மின் ராமானுஜார்யே -என்றும் –
ஸ்ரீ ராமானுஜ்ச்ய சரணமஸ்து-என்றும்-
ஸ்ரீ ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று சதுரஷரியான ஸ்ரீ ராமானுஜா என்கிற திரு நாமத்தினுடைய
வ்யதிரேகத்தில்தரியாமையை ஏறிட்டு கொண்டு -அத்தையே தங்களுக்கு தஞ்சமாக விஸ்வசித்து த்ரட அத்யாவச்ய யுக்தராய் இருக்கும் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் முதலிய முதலிகளுடைய பிரகாரத்தை-
நம்புதல் -விஸ்வசித்தல்-திறம் -பிரகாரம்
பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்கள் உடைய வசனமும் அனுஷ்டானமும் என்று இப்படி
பிரமாண-சகஸ்ரத்தாலே பிரதிபாதிக்கப்பட்ட -சிஷ்டர் உடைய ஞான அனுஷ்டான பிரகாரத்தை -என்றபடி –
மறவாதவர்கள் யவர் –
ஸ்வாத்யாயன் மாப்ரமத -ஆசார்ய பிரியம் தனம் ஆஹர்த்த்ய பிரஜாதந்தும்-அவ்யவத் சேத் ஸீ-சத்யான்ன
பிரமதி தவ்யம் தர்மான்ன பிரமதி தவ்யம் -என்கிறபடியே
விச்வாச்ய மாந்த்யத்தாலே அதை மறந்து போகை அன்றிகே அனவரதம் அனுசந்தித்து கொண்டு இருக்கிறவர்கள்-சிலர் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு நாமத்தை –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்கிறபடியே முதல் அடியில் தாம் அனுசந்தித்தும் –
ஸ்ரீ இராமானுசன் என்று சொல்லுமினோ -என்று லோகத்தார்க்கு எல்லாம் உபதேசித்தும் –
சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாளினை மேல் உயர்ந்த குணத்து திருவரங்கத்து
அமுது ஓங்கும் அன்பால் இயம்பும் கலித் துறை அந்தாதி ஓத -என்கிறபடியே –
பிரபன்னர்க்களுக்கு எல்லாம் நித்ய அபிஜப்யமாம் படி கிரந்தீகரித்தும் போருகைக்கு உறுப்பான–
இவ் வதிகாரம் உண்டாகும்படி -கரும் தறையான என்னைத் திருத்தி அருளின ஸ்ரீ ஆழ்வான் போல்வர் என்றபடி –
நம்ப வல்லார் திறத்தை மதியாதவர்கள் என்ற பாடமான போது –
மதித்தல் –விடுதலாய் -அவர்கள் படியை பரிச்சேதியாதவர்கள் என்று பொருளாக கடவது –
நம்ப வல்லார் திறத்தை மறவாதவர் –
எவராயினும் சரி -அவர்களுக்கே நான் எல்லா அடிமையும் செய்வேன் என்கிறார் .
குலம் கோத்ரம் பற்றி ஆராய வேண்டியதில்லை –
ஸ்ரீ ராமானுஜ மகா மந்த்ரத்தில் மகா விஸ்வாசம் கொண்டு இருப்பவர்களுடைய பிரகாரத்தை மறவாது -என்றும்
அனுசந்திதுக் கொண்டு இருப்பவர்களே இருந்தால் போதும் .
அவர்க்கே எல்லா அடிமையும் செய்வேன் என்கிறார் .
உனக்கே நாமாட் செய்வோம் -எனபது போலே அவர்க்கே செய்வேன் என்கிறார் .
ஸ்ரீ நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார்
இவரோ ஸ்ரீ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு அடிமை செய்பவன் நான் -என்று
மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார் .எல்லா இடத்திலும்
அவர்க்கே –
அவர்களுக்கு முக மலர்த்தி உண்டு என்றும்
எனக்கு உஜ்ஜீவனம் உண்டு என்றும் இருவருக்கும் கூட பொதுவாக பண்ணுகை தவிர்ந்து –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடி அவர்கள் முக மலர்த்தியே புருஷார்த்தம் என்று அத்யவசித்து நின்று –
அவர்க்கே -என்ற
அவதாரணத்தாலே -இவ் வர்த்தம் தோற்றுகிறது இறே –
எல்லா இடத்திலும் என்றும் எப்போதும் –
சர்வேஷூ தேச காலேஷூ சர்வாவச்தாஸ் வாவிச்யுர்மம-என்று சொல்லுகிற படியே
பிரதம நிஷ்டர் விஷயத்திலே ஈடுபட்டால் போலே –
தஸ்மாத் பக்த பக்தாச்ச பூஜ நீயா விசேஷத – மத்பக்தைஸ்சஹசம்வாச – என்றும்
தஸ்மை தேயம் ததொக்ராஹ்யம் சச பூஜ்யோயதாஹ்யஹம் -என்றும் -அவன் தான் அருளிச் செய்தான் ஆகையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் -எல்லா இடத்திலும் -சர்வ தேசங்களிலும் -இடம் -தேசம் -என்றும் –
காலோப லஷிதமாய் இருந்துள்ள -சகல அவச்தைகளிலும் என்றபடி -எப்போதிலும் -சர்வ காலங்களிலும் –
சொல்லால் மனத்தினால் கருமத்தினால் –
இம் மூன்றிலும் -மனோ வாக் காயங்கள் மூன்றிலும் -சொல்லால் கருமத்தினால் – என்கிற இவற்றால்
தத் காரணங்களான வாக் காயங்களை லஷிக்கிறது –
எத் தொழும்பும் –
சர்வ பிரகார தாஸ்யமும்
தொழும்பு -அடிமை –
எப்பேர்பட்ட என்ற படி –
சோர் வின்றியே –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பிரார்த்தித்தபடியே அவிச்சின்னமாக –
சோர்வு -பிரிவு
செய்வன் -செய்யக் கடவன் –
அம் மூன்றிலும் வைத்துக் கொண்டு ஒவ் ஒன்றிலும் தானே
சர்வ கரணங்களாலும் சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணக் கடவேன் என்கிறார் –
வாசா யதீந்திர மனசா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்-கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்று ஸ்ரீ ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –
நன்றும் திரு வுடையோம் நானிலத்தில் எவ் உயிர்க்கும் ஒன்றும் குறை இல்லை ஓதினோம் –
குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுசன் தன் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -என்னும்படியாக
ஸ்வ அத்யாவச்யத்தை வெளி இட்டு அருளினார் ஆய்த்து –
எல்லா இடத்திலும் —சோர்வு இன்றியே
ஸ்ரீ நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
ஸ்ரீ பகவத் விஷயத்தில் கூறியதை –
இவர் ஸ்ரீ இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் .
எப்போதிலும் –
சர்வ அவச்தைகளிலும் என்றபடி .
கீழ் சர்வ தேச சர்வ காலங்கள் சொல்லப்படவே இங்கு சர்வ அவஸ்தை -எல்லா நிலைகள்-சொல்லப்படுகின்றன –
எந்த நிலையில் இருக்கும் போதும் -என்றது ஆயிற்று –
சொல் என்பதும் கருமம் என்பதும் அவற்றுக்கு காரணங்களான வாக்கினையும் உடலினையும் ஆகு பெயராகக் குறிக்கின்றன –
சோர்வின்றி செய்வன் –
சோர்வு -பிரிவு
அடிமை செய்வதில் பிரிதல் ஆவது -அடிமை இன்பத்தை தன்னது என தான் வேறு படுத்தி தனித்து அனுபவித்தல்
அங்கன் இன்றித் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றபடி
கொள்ளுகிறவர் இன்பம் தவிர தான் தன் இன்பத்தை கருதாது அடிமை செய்தல் சோர்வின்றி செய்வதாம் –
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் இயல் சாத்து பாசுரம்-
நன்றும் திரு வுடையோம் நானிலத்தில் எவ் உயிர்க்கும்-ஒன்றும் குறை இல்லை ஓதினோம் –
குன்றம்-எடுத்தான் அடி சேர்- ராமானுசன் தாள்-பிடித்தார் பிடித்தாரைப் பற்றி-
—————–
செய்வன் சோர்வின்றியே-
இராமானுசன் என்னைச் சோர்விலனே -14-
சோராத காதல் பெரும் சுழிப்பால்-15-
சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால் சார்வின்றி நின்ற வெனக்கு–81-
நல்லார் பரவும் இராமானுசன்-திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள்
இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் -9-
மேகத்தை மேவும் நல்லோர் -26-
மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் -37-
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பி -44-
நல் தவர் போற்றும் இராமானுசனை -57-
இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என்நாவியும் சிந்தையுமே -68-
நல் வேதியர்கள் தோளும் திருப்பாதம் இராமானுசன் -105-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் -106-
முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே –திரு விருத்தம்-39-
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – – – 84-
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100- –
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8-
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10-
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தனைக்
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-
தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-
உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-
கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -நான்முகன் திருவந்தாதி -11
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான் தனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1–
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply