ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடி -என்று இவர் சொன்னவாறே –
முன்பும் ஒரோ விஷயங்களில் நின்றால் இப்படி யன்றோ நீர் சொல்லுவது .
இதுவும் அப்படி அன்றோ -என்ன
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு என் வாக்கு மனச்சுக்கள் இனி வேறு ஒரு விஷயம் அறியாது -என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -என்று சொன்னவாறே –
நீர் இப்போது-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை அனுபவித்து வித்தராய் சொன்னீர் –
நீர் விஷயாந்தரங்களை-விரும்பின போது முற்காலத்தில் அப்படியே அன்று சொல்லுவது -ஆகையாலே உமக்கு இது ஸ்வபாவமாய் விட்ட பின்பு
இவரையே பற்றி இருக்கிறேன் என்ற இது நிலை நிற்க கடவதோ என்று சிலர் ஆட்சேபிக்க -அவர்களை குறித்து-
நான் துர்வாசனையாலே விஷயாந்தரங்களை விரும்புவதாக யத்நித்தேன் ஆகிலும்
என்னுடைய வாக்கும்-மனசும் அவற்றை விரும்ப இசையாதே இருந்தது -என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
கொண்டலை மேவித் தொழும் குடி எங்கள் கோக்குடி எனபது நீர் பற்றின ஒவ் ஒரு விஷயத்திலும்
தனித் தனியே உணர்ச்சி வசப்பட்டு பேசினது போனது அன்றோ –
அது போலே இதுவும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சாய் நிலை நிற்காதே -என்ன –
எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை –
என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் .
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-
பத உரை
கோக்குல மன்னரை -ராஜ -ஷத்ரிய குலத்தில் பிறந்த அரசர்களை
மூ ஏழு கால் -இருபத்தொரு தடவை
ஒரு -ஒப்பற்ற
கூர் மழு வால் -கூர்மையான மழு என்னும் ஆயுதத்தினால்
போக்கிய -உலகை விட்டு போகும்படி செய்த
தேவனை-புகழ் பெற்ற சர்வேஸ்வர அவதாரமான பரசுராமனை
போற்றும் -ஏத்தும்
புனிதன் -தூயவரான
புவனம் எங்கும் -உலகம் எங்கும்
ஆக்கிய -பரவும்படி பண்ணின
கீர்த்தி -புகழை உடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
அடைந்த பின் -ஆஸ்ரயித்த பிறகு
இனி -மேலுள்ள காலம் எல்லாம்
மற்று ஒன்றை -வேறு ஒரு விஷயத்தை
என் வாக்கு -என்னுடைய வாக்கானது
உரையாது -பேசாது
என் மனம் -என்னுடைய நெஞ்சு
நினையாது -நினைவில் கொள்ளாது
வியாக்யானம் –
ஐச்வர்யத்தால் – ராஜ குலத்தை ப்ராபிக்கை யன்றிக்கே -ஷத்ரிய குலோத்பவரான ராஜாக்களை
இருபத்தொரு கால் அரசு களை கட்ட -திருவாய் மொழி -9 2-10 – – என்கிறபடியே
இருப்பதொரு கால்-அத்விதீயமாய்க் -கூரியதாய்-இருக்கிற மலுவாலே நிரசித்த –
விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை -அந்த குணஜிதராய்க் கொண்டு ஏத்தா நிற்ப்பராய்-
ஸ்வ சம்பந்த்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல-பரம பாவன பூதராய்-
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு – – 52- என்கிறபடியே
லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு
மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது –
என்னுடைய மனஸ்சானது-ஸ்ம்ரியாது –
போற்றுதல் -புகழ்தல் / புனிதன் -சுத்தன்
கரணங்களுக்கு இவ்விஷயத்தில் அனந்யார்ஹமாம் படி விளைந்த ப்ராவன்யத்தைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே –
என் வாக்கு -என் மனம் -என்று தனித் தனியே ஸ்லாகித்து அருளிச் செய்கிறார் .
அடைந்ததற் பின் வாக்குரையாது என் மனம் நினையாது -என்றும் பாடம் சொல்லுவார்கள் .
பரசுராம அவதாரம் அஹங்கார யுக்த ஜீவனை அதிஷ்ட்டித்து நிற்கையாலே முமுஷுக்களுக்கு-அனுபாஸ்யம் அன்றோ –
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் -என்பான் என் என்னில் –
அதுக்கு குறை இல்லை -விரோதி நிரசனம் பண்ணின உபகாரத்துக்குத் தோற்று – ஸ்துதிக்கிற மாத்ரம் ஒழிய –
தத் உபாசனம் அல்லாமையாலே .
மன்னடங்க மழு வலங்கை கொண்ட விராம நம்பி -பெரியாழ்வார் திரு மொழி – 4-5 -9 -என்றும்
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா –பெரிய திரு மொழி –4 3-1 – என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்ததும் -விரோதி நிரசன ஸ்வபாவத்துக்கு தோற்றுத் துதித்தது இத்தனை இறே ..
கோக்குல மன்னர் -அரச குலத்தில் பிறந்த மன்னர் -ஷத்ரியர்களாக பிறந்த -மற்ற வம்ச அரசர்களை அழிக்க வில்லையே ஸ்ரீ பரசுராமர்
உறுதியான -தந்தை சொல் கேட்டு தாயையும் அழித்து -21 தலை முறை ஷத்ரிய அரசர்களை அழித்து –
இதனால் வந்த உறுதி அமுதனார்க்கும் உறுதி
கோக்குல மன்னரை –
த்ரேதா யுகத்திலே -கார்த்த வீர்யார்ஜுனன் -என்பான் ஒரு ராஜா மகா பல பராக்கிரம சாலியாய்
ஒருவரும் எதிரி இன்றிக்கே திரிகிற காலத்திலே -ஒரு நாள் ஜமதக்னி-மகரிஷியினுடைய ஆஸ்ரமத்திலே சென்று –
பிரசந்காத் ராஜ்ய கர்வத்தாலே -அவனை ஹிம்சித்துப் போக –
அந்த ரிஷி புத்ரனான ஸ்ரீ பரசுராம ஆழ்வான் -அச் செய்தியை கேட்டு மிகவும் குபிதனாய் -தத் ஷணத்திலே-
தானே அந்த ராஜாவை கொன்றும் பித்ர்வத ஜன்யமான கோபம் சமியாமையாலே –
ராஜ குலத்தை எல்லாம் நிஷத்ரமாக பண்ணக் கடவோம் -என்று சங்கல்பித்து பூமியில் உள்ள ராஜாக்களை எல்லாம் சம்ஹரித்து-
சிறிது நாள் தபசு பண்ணி கொண்டு போந்து பின்னையும் ஷத்ரிய குலம் உத்பன்னமாய் கொழுந்து விட்டு படர்ந்தவாறே
அத்தைக் கண்டு திரியட்டும் முன்பு போலே நிஷத்ரமாக பண்ணி இப்படி
இருபத்தொரு தலை முறை -ஷத்ரிய ராஜாக்களை எல்லாம் சம்ஹரித்து அவர்களுடைய ரத்தத்தால்-தில தர்ப்பணம் பண்ணினார்
என்று பிரசித்தம் இறே -அப்படி ரோஷா விசிஷ்டனாய் நின்ற போது
வேறொரு குலத்தில் பிறந்தார் ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டு இருந்தாலும் அவர்கள் வழி போகாதே
ஷத்ரிய குல மாத்ரத்தையே சம்ஹரித்த படியை அருளிச் செய்கிறார் –
கோக்குல மன்னரை –
வேறொரு குலத்தில் பிறந்து ஐச்வர்யத்தாலே ராஜ குலத்தை பிராப்பிக்கை அன்றிக்கே –
சாஷாத் ஷத்ரிய குலோத்பவரான ராஜாக்களை –
கோக்குல மன்னரை –போக்கிய தேவனை
உலகினில் ஷத்ரிய பூண்டே இல்லாமல் தொலைத்து விட வேண்டும் என்பதே ஸ்ரீ பரசு ராமனது
நோக்கம் ஆதலின் மன்னரை என்பதோடு அமையாமல் -கோக்குல மன்னரை –என்றார் .
மூ வெழு கால் –
மூ வேழுதரம் -இருபதொருகால் அரசு களை கட்ட -என்கிறபடியே இருப்பதொரு முறை என்றபடி –
மூ ஏழு கால் –
இருப்பதொரு தடவை -ஒரு தலை முறைக்கு ஒரு கால் என்கிற கணக்கில்
இருபத்தொரு கால் உலகினை வலம் வந்து ஷத்ரிய இனத்தவர் அனைவரையும் ஸ்ரீ பரசுராமன் –கொன்று தள்ளினார் -என்பர்
இருபத்தொரு கால் அரசு களை கட்ட வென்றி நீண் மழுவா -ஸ்ரீ திரு வாய் மொழி -6 2-10 – – –என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி காண்க –
அஷத்ராமிஹா சந்த தஷய இமாம் த்விச்சப்தக்ருத்வ ஷிதம்-என்று
ஷத்ரிய பூண்டு இல்லாமல் -மூ வெழு கால் பூமியைச் செதுக்கினான் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகனும் .
ஒரு கூர் மழுவால் –
ஆவேச அவதாரமான ஸ்ரீ பரசுராம ஆழ்வானுக்கு நிரூபகமாய் இருக்கையாலே அத்விதீயமாய் இருப்பதொரு -பர்யாயம்-
ஷத்ரியரை சம்ஹரிக்கத் தக்கதான கூர்மை உடைய பரசுவாலே –
வென்றி நீண் மழு -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
வென்றி மா மழு -என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் பாராட்டும்படி ஒப்பற்ற -பெருமை தோற்ற –ஓர் கூர் மழு -என்றார் .
மழு ஒன்றினாலேயே போக்கினமையின் அங்கனம் கூறியது ஆகவுமாம்-
போக்கிய தேவனை –
விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை என்றபடி
இப்படிப் பட்ட தொழில்களை எல்லாம் அந்த அவதாரத்தில் பண்ணின கிரீடை யாகையாலே –
ஏவம் பிரகாரமான க்ரீடா யுக்தனை -என்றபடி –
போக்கிய தேவனை –
மீளாத படி உலகினின்றும் போக்கினான்
மழுவால் தேவன் போக்கினான் -சங்கல்பத்தால் அன்று
தேவன் -விளையாட்டு
ஒளி என்னும் பொருள் கொண்ட –திவ் -என்னும் வினையடி யிலிருந்து பிறந்தது இச் சொல் .
தேவன் என்பதற்கு -பகை களைந்த களிப்பினால் வந்த ஒளி படைத்தவன் -என்று பொருள் கொள்க .
இனி அரசு களை கட்டத்தை விளையாட்டாக கொண்டவன் என்று பொருள் கொள்ளலுமாம் .
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உலகினை அடர்க்கும் அசூரத்தன்மை வாய்ந்த அரசர்களை அழிப்பது புகரூட்டுவதாகவும்
விளையாட்டாகவும் இருக்கிறது என்க-
போற்றும் –
ஆஸ்ரயித்து இருக்கிற மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –
போற்றுதல் -புகழ்தல் -விநாசாய ச துஷ்க்ர்தாம் –என்கிறபடி ஆஸ்ரித விரோதி நிரசன சீலமாகிற குணத்திலே
தோற்று ஏத்தா நின்றார்கள் காணும் –
மகா பாராத பாஞ்சராத்ராதிகளாலும் -நம்முடைய பூர்வாச்சார்யர்களாலும் –
பிரம ருத்ர அர்ஜுன வியாச ககுஸ்த ஜாமதக்னியாதிகள் அனுபாச்யர் என்று பஹூ முகமாக சொல்லி இருக்க
எம்பெருமானார் -பரசுராம ஆழ்வானை ஏத்துகிற இது -சேருமோ என்னில் –
அந்த அவதாரம் எம்பெருமானுடைய அஹங்கார யுக்த ஜீவ ஆவேசம் ஆகையாலே -அவனாலே செய்யும் அம்சத்துக்கு
எம்பெருமானார் ஈடுபட்டு ஸ்துதித்தார் என்று சொன்னேன் இத்தனை ஒழிய
தத் உபாசனம் பண்ணுகிறார் என்று சொல்லாமையாலே விரோதம் இல்லை –
மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி -என்றும் –
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அருளிச் செய்ததும் விரோதி நிரசன ஸ்வ பாவத்துக்கு தோற்று –
புனிதன் –
பகவத் மங்களா சாசனத்தாலே பரிசுத்த ஸ்வ பாவராய் -தம்மை ஆஸ்ரயித்தவர்களையும் –
ஆத்மசாம்யா வஹத்வாத் -என்று சொல்லப் பட்ட -ஸ்வ சாம்யத்தை உடையராம்படி பண்ண வல்ல பாவனர் –
புனிதன் -சுத்தன் –
போற்றும் புனிதன் –
இங்குப் போற்றுதல் வழி படுதல் அன்று
உலகினுக்கு உதவி புரிந்தமைக்கு தோற்றி நன்றி உடன் புகழுதல்-என்று உணர்க –
ஸ்ரீ பரசுராமனை தெய்வமாக கொண்டு வழி படலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கு ஏற்ப
அங்கனம் உணர்தல் வேண்டும் –
அனர்ச்ச்யா நபி வஷ்யாமி ப்ராதுர் பாவான் யதாக்ரமம் -என்று தொடங்கி
பூஜிக்கத் தகாத அவதாரங்களையும் முறைப்படி சொல்வேன் -என்று தொடங்கி
அர்ஜுனோ தன்வினாம் ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகான் ருஷி –
வில்லாளிகளுள் சிறந்த ஸ்ரீ கார்த்த வீரியர்ஜுணனும் –
பெரிய ருஷியான ஸ்ரீ பரசு ராமனும் -என்று பரசு ராமனையும் எடுத்துள்ளமை காண்க –
பூஜிக்காமைக்கு ஹேது –
ஆவிஷ்ட மாத்ராச்தே சர்வே கார்யார்த்தம் அமிதத்யுதே -பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து உள்ளமை மட்டுமே
இவர்களிடம் உள்ளது -என்று பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து அவர்கள் இடம் இருப்பினும்
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாக்களாக அவர்கள் இருப்பதே என்று ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதையில் கூறப்பட்டு உள்ளது
இதனால் ஸ்ரீ பரசு ராம அவதாரம் பத்து அவதாரங்களில் ஓர் அவதாரமாக கருதப் படினும் –
ஸ்ரீ இராமன் போலவும் ஸ்ரீ கண்ணன் போலவும் சாஷாத் அவதாரம் அன்று –
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாவின் இடம் பகவான் ஆவேசித்த அவதாரமே என்பது -தெளிவு
ஆவேச அவதாரம் இரண்டு வகைப்படும் .
ஸ்வரூப ஆவேசம் -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபமே ஒரு கார்யத்துக்காக ஒரு ஜீவான்மாவிடம் விசேடித்து புக்கு நின்றால் –
சக்தி ஆவேசம் -ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்வரூபத்தால் அன்றி சக்தியைக் கொண்டே உட்புக்கு நடாத்துதல் –
என்பன இவ்விரு வகைகள்
சக்தி ஆவேச அவதாரமாக -ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனன் கருதப்படுகிறான் .
ஆக சாஷாத் அவதாரம்-என்றும் ,ஸ்வரூப ஆவேச அவதாரம் என்றும் -சக்தி ஆவேச அவதாரம் என்றும்
அவதாரங்கள் மூன்று திறத்தனவாம் .
ஆயினும் சாஷாத் அவதாரம் ஸ்வரூப ஆவேச அவதாரத்தை விடப் பலம் வாய்ந்தது .
ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரத்தை விட பலம் வாய்ந்தது .
ஆதல் பற்றியே ஸ்ரீ இராமன் இடம் ஸ்ரீ பரசுராமனும்
ஸ்ரீ பரசு ராமனிடம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுணனும் தோல்வி கண்டனர் .
அவதாரங்கள் அனைத்தும் ஒரே தரத்ததனவாயின் வெற்றி தோல்விக்கு இடம் இல்லை அன்றோ .
இவ்விஷயங்கள் -விதிசிவ வியாச ஜாமதக்ன்யார்ஜுன -என்று தொடங்கும் ஸ்ரீ தத்வ த்ரைய சூர்ணிகை வ்யாக்யானத்திலும் –
என் வில் வலி கண்டு -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- – வ்யாக்யானத்திலும் ஸ்ரீ மணவாள மா முநிகளால் விளக்கப் பாட்டு உள்ளன ..
ஆக .முக்தியை கோருமவர்களுக்கு வழிபாட்டிற்கு உரிய தேவன் ஆகாமையின்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பரசுராமனை துதித்தனரே யன்றி வழி பட்டிலர் என்று தெளிக-
இங்கனமே ஸ்ரீ பெரியாழ்வார் -மன்னடங்க மழு வலம் கைக் கொண்ட இராமன் –5 4-6 – – – என்றும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் – வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -5 6-1 – –
என்றும் அருளிச் செய்தவை விரோதிகளைக் களைந்தமைக்கு தோற்றுத் துதித்தவைகளே என்று கொள்க –
புனிதன் –
தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் ஒக்கும் ஆக்கிய கீர்த்தி –
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்கிறபடியே இந்த லோகம் எல்லாம் வ்யாபிக்கும்படி
பண்ணின கீர்த்தியை உடையரான –
இராமானுசனை –
எம்பெருமானாரை –
அடைந்த பின் –
ஆஸ்ரயித்த பின்பு –
இங்கே
அடைந்தததற் பின் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -ஆகிலும் அர்த்த பேதம் இல்லை –
இனி மற்று ஒன்றை –
மேல் உள்ள காலம் எல்லாம் வேறு ஒரு விஷயத்தை –
என் வாக்கு உரையாது-என் மனம் நினையாது –-
முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் – பண்ணிக் கொண்டு போந்த
என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய –
வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –
முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை ஆஸ்ரயித்த பின்பு –
அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய
வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண ஸாலிந -என்னக் கடவது இறே –
அடைந்த பின் என் வாக்கு –மற்று ஒன்றினையே –
அடைந்த பின் மற்று ஒன்றை என் வாக்கு உரையாது .மனம் நினையாது என்னவே –
அடைவதற்கு முன்பு எந்த விஷயத்தை பற்றி நிற்பினும் மற்று ஒன்றை வாக்கு உரைக்கும் .
மனம் நினைக்கும் என்பதை ஒப்புக் கொண்டார் ஆகிறார் ஸ்ரீ அமுதனார் .
இராமானுசனை அடைந்த பின் அங்கனம் இல்லை -என்கிறார் .
என்னது மாறும் இயல்பே
இராமானுசனை யடைந்த பின் என்னிலை மாறியது .
என் வாக்கையும் மனத்தையும் தன்பால் துவக்க வைத்து -மாறாத நிலையனாக என்னை மாற்றி விட்டார் -ஸ்ரீ எம்பெருமானார் .
விஷய வைலஷண்யம் அப்படிப் பட்டதாய் இருக்கிறது என்று -கருத்து –
வாக்கும் மனமும் பிறர் திறத்தன வாகாது –
வகுத்த ஸ்ரீ எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு உறவு பாராட்டி –
என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
அடைந்ததற் பின் வாக்குரையா தென் மனம் நினையாது -என்றும் பாடம் உண்டாம் .
பின் என அமைந்து இருக்க -இனி -என்று வேண்டாது கூறினார் –
மேலுள்ள காலம் அனைத்தும் முன் போலே வீணாகாது பயன் பெறச் செய்யும் நோக்கம் தோற்றற்கு-
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார் .
ஆவித்யாரண்யா நீ குஹா விஹரன்மாம்கமன பீரமாத்யன் மாதங்க ப்ரதம நிகளம் பாத யுகளம் –
ஸ்ரீ யதிராஜர் இணை யடி அறியாமை யடவிக்குள்ளே விளையாடுகிற என் மனம் என்னும்
மதக் களிற்றுக்கு முதல் விலங்கு ஆகும் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன மனத்தை மற்று ஒரு
இடத்துக்கு போக ஒட்டாது தடுத்து நிறுத்துவதாக கூறியது நினைவு கூரத் தக்கது –
இனி ஸ்ரீ தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு ஸ்ரீ எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -ஸ்ரீ தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை–ஸ்ரீ தென்னரங்கனை- நினையாது -என்னலுமாம்-
இனி வேறு ஒரு விஷயம் அறியாது-முன்பு எத்தனித்தேன் ஆகிலும் -துர் வாசனையால் விஷயாந்த்ரங்களில் அலைந்து
போனாலும் என் வாக்கும் மனசும் ஒத்துழைக்காது-
இவற்றை ஸ்வாமி இடம் சமர்பித்து விட்டேன்–
மனமும் கண்ணும் ஓடி–கைவளையும் கனவளையும் காணேன்-
புனிதன்-
மங்களா சாசனம் பண்ணியே பெற்ற சுத்தி-.
ஸ்வ சம்பந்தத்தால் அசுத்தரையும் சுத்தராக்க வல்ல பரம பாவன பூதராய்-
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு-52 -என்கிற படி-லோகம் எங்கும் வியாபிக்கும் படி பண்ணின கீர்த்தி உடைய
ஸ்ரீ எம்பெருமானாரை ஆச்ரயித்த பின்பு-மேல் உள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை
என் உடைய வாக்கானது கீர்த்தியாது -என் உடைய மனஸ் ஸ்மரியாது–என் மனம் என் வாக்கு என்கிறார்-
இங்கு -தனி தனியே ப்ரீய அதிசயத்தாலே-அனந்யார்ஹமாம் படி –ஸ்லாகித்து அருளி செய்கிறார்-
புனிதன்
எட்டு குணங்களில் சாம்யம் அவன் அருளும் மோஷம்–இவர் அடிமை தனம் ஒன்றே கொடுத்து பாவன-தமர் ஆக்குவர்
———-
ஸ்ரீ பரசுராம திரு அவதாரம் – பற்றிய அருளிச் செயல்கள் –
என் வில் வலி கொண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- –
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7 5-
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5 4-6 –
வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள
வடிவாய மழு வேந்தி உலகம் ஆண்டு
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த
வேள் முதலா வென்றானூர் விந்தை மேய
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்புடைய மலை யரையன் பணிய நின்ற
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -7-
அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–-ஸ்ரீ பெரிய திருமொழி -3-2-5-
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-
இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -56-
யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-
முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானேஎ! ஆழ் கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல் வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே–3-8-1-
நெஞ்சமே நீள் நகராக இருந்த என்
தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள்வான் குறளாகிய
வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-
தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் -நான்முகன் திருவந்தாதி-–85-
என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-
———————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply