ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –55–கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் ஸ்வபாவத்தைக் கண்டு வேதம் கர்வோத்தரமாய் ஆயிற்று என்றார் கீழ் .
இப்படி ஒருவர் அபேஷியாது இருக்கத் தாமே -சகல வேதங்களும் பூமியிலே நிஷ்கண்டமாக
நடக்கும் படி பண்ணின ஔதார்யத்திலெ ஈடுபட்டு அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி
எங்களை யாள உரிய குடி -என்கிறார் இதில் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே வேதமானது ஸ்ரீ எம்பெருமானாருடைய வைபவத்தை கண்டு கர்வித்து
தனக்கு ஒருவரும் லஷ்யம் ஆக மாட்டார்கள் என்று பூ லோகத்தில் சஞ்சரியா நின்றது என்றார் -இதிலே –
அப்படி அந்த வேதங்களை ஒருவர் அபேஷியாது இருக்க தாமே நிஷ்கண்டனமாக ப்ரவர்ப்பித்த-ஔதார்யத்தை உடையராய் –
சகல ஜன மநோ ஹரமாய் -பரிமளத்தை உடைய திவ்ய உத்யானங்களாலே-சூழப்பட்டு -தர்சநீயமான
ஸ்ரீ கோயிலுக்கு ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அடியவரான ஸ்ரீ ஆழ்வார்களை-கொண்டாடுகிற ஸ்ரீ எம்பெருமானார் –
இந்த ஸ்வபாவங்களிலே ஈடுபட்டு ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய குலத்தார் –
எங்களை ஆளக்கடவ ஸ்வாமித்வத்தை உடைய குலத்தார் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த ஸ்ரீ எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

பத உரை –
தொகை இறந்த -ஒரு தொகையில் அடங்காத
பண் தரு வேதங்கள்-ஸ்வரங்களை வெளியிடுகிற வேதங்கள்
பார் மேல்-பூமியிலே
நிலவிட -நிற்கும்படியாக
பார்த்தருளும் -செய்தருளும்
கொண்டலை -மேகம் போலே வள்ளன்மை வாய்ந்தவரும்
கண்டவர் -பார்த்தவருடைய
சிந்தை-நெஞ்சை
கவரும் -கொள்ளை கொள்ளும்
கடி பொழில் -மணம் உள்ள சோலைகள் உடைத்தான
தென்னரங்கன் -அழகிய ஸ்ரீ திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
தொண்டர்-அடியார்கள்
குலாவும் -மகிழ்ந்து கொண்டாடும் படி இருப்பவருமான
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
மேவி-பொருந்தி
தொழும் குடி -ஆஸ்ரயித்து இருக்கிற திருக் குலம்
எங்கள் கோக்குடி -எங்களை ஆளும் குலம் ஆகும்

வியாக்யானம் –
அநந்தா வை வேதா -என்கிறபடியே -ஒரு தொகையில் நில்லாத -அடங்காத -படி -அனந்தமாய்-
உதாத்யாதியான ஸ்வரங்களுக்கு பிரகாசகங்களாய் இருக்கிற வேதங்களானவை-
பூமியிலே வர்த்திக்கும்படி -பண்ணி யருளின பரம உதாரராய் –
கண்டவர்கள் நெஞ்சை யபஹரியா நிற்பதாய் –பரிமளத்தை உடைத்தான திருச் சோலைகளை உடைத்தாய் –
தர்சநீயமான ஸ்ரீ கோயிலிலே நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளுக்கு சேஷ பூதரான வர்கள் –
அந்த ஸ்வபாவத்துக்கு தோற்று கொண்டாடும்படி -யிருக்கிற ஸ்ரீ எம்பெருமானாரை -தத் ஸ்வபாவத்திலே ஈடுபட்டு -விஷயாந்தர விமுகராய் –
ஆஸ்ரயித்து இருக்கும் குலம்-தத் சம்பந்திகளே உத்தேச்யர் என்று இருக்கும் எங்களை ஆள உரிய குலமாய் இருக்கும்

எங்கள் கோக்குடி என்றது -எங்களுக்கு கோவான குடி -என்றபடி -.
கண்டவர் சிந்தை கவரும் -என்ற இது -ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு விசேஷணம் ஆகவுமாம்-
கடி -மணம் /குலாவுதல்-கொண்டாட்டம்/நிலவுதல்-வர்த்தித்தல்
பண்டரு வேதங்கள் -என்கிற இடத்தில் -பண்டே உள்ளதாய் அரிதாய் இருந்துள்ள வேதங்கள் என்று-
வேதங்களினுடைய அநாதித்வத்தையும் – அலப்யத்த்வத்தையும் -சொல்லுகிறதானாலோ என்னில் –
பண்டையருவேதம் -என்று பாடமாயிற்றாகில் அப்படி பொருள் கொள்ளலாம் –
பண்டு என்கிற சப்தம்
பூர்வ காலத்துக்கு வாசகமாம் இத்தனை யல்லது பூர்வ காலீ நமானத்துக்கு வாசகம் ஆகையாலே அப்படிச் சொல்லப் போகாது –
பண்டை நான்மறை -பெரிய திரு மொழி -4 7-1 –
பண்டைக் குலம்-– .பண்டையோமல்லோம் –பெருமாள் திரு மொழி -9 7- –
பண்டு நூற்றுவர் -பெரியாழ்வார் திரு மொழி – 9-7 –
பண்டுமின்றும் -திருச் சந்த விருத்தம் – -22 –
பண்டொரு நாள் ஆலின் இலை-பெரியாழ்வார் திரு மொழி -1 4-7 – – என்றும்
இத்யாதி ஸ்த்தலங்களிலே இந்த விபாகம் கண்டு கொள்வது .

ஸ்ரீ திரு அரங்கத்தில் நித்ய வாசம் செய்வதே இவருக்கு பெருமை
ஸ்ரீ ஆழ்வார்கள் கொண்டாடும் ஸ்ரீ இராமானுசன் என்றும் ஸ்ரீ ஆழ்வார்களைக் கொண்டாடும் ஸ்ரீ ராமானுஜன் –
பதின்மர் பாடும் பெருமாள் பெருமை ஸ்ரீ அரங்கனுக்கு மட்டுமே –
எங்கள் -நம்மையும் சேர்த்து அருளிச் செய்கிறார்–
ஸ்ரீ தென்னரங்கன்-தொண்டர் குலாவும் ஸ்ரீ இராமானுசனைத் —ஸ்ரீ அரங்கன் தொண்டர்கள் ஸ்ரீ ஆழ்வார்கள் -குலாவும் ஸ்ரீ இராமானுசன்
ஸ்ரீ இராமானுசன் குலாவும் ஸ்ரீ அரங்கன் அடியார்களான ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள்
ஸ்ரீ அரங்கன் தொண்டர்களாக நாம் குலாவும் ஸ்ரீ ராமானுஜர் என்றுமாம் –
சிந்தை –பொழில்–தன்னை முழுவதும் -காட்டி -நம் சிந்தையை கவர்ந்து இஷ்ட விநியோக அர்ஹமாக்கி
ஸ்ரீ ராமானுஜர் அடியார்களாகிய ஆக்கினவனே ஸ்ரீ அரங்கன் அன்றோ –

தொகை இறந்த –
வேதங்களை எண்ணப் புக்கால் -அநந்தாவை வேதா -என்கையாலே எண்ணித்-தலைக் கட்டப் போகாது இறே –
தொகை -சங்க்யை -இப்படி ஒரு தொகையில் அடங்காதபடி -அனந்தமாய் –

பண் தரு வேதங்கள் –
பண் என்று கானமாய் –அது தானும் இங்கு உதாத்தாநுதாத்த ஸ்வரித ப்ரசயாத்மகமாய்-
அந்த ஸ்வரங்களும் சாகா பேதேந -பஹூ விதங்களாய் -அவற்றுக்கு பிரகாசகமான வேதங்கள் என்னுதல் –
எல்லார்க்கும் அவ்வவ ஸ்வர பரிஜ்ஞானத்தை கொடுக்க வல்ல வேதங்கள் என்னுதல் –
சமஸ்த்தான் ஜ்ஞாதவ்யார்தம் ஸ்சவேதய தீதிவேத -என்று ஆராதன அர்த்த்யோ உபாயாத்மகமான
அர்த்தத்தை அபேஷித்தவர்களுக்கு அடைவே அறிவிப்பிக்கும் அதாலே வேதம் என்று பேராய் இருக்கிறது .

பண்டரு வேதங்கள் -என்கிற இடத்தில் பண்டு -என்று பூர்வ காலீ நமாய் –
அரு -என்று தெரிய அரியதாய் இருக்கும் வேதங்கள் என்று பொருள் ஆனாலோ என்னில் –
பண்டு என்று கால மாத்ர வாசகம் ஆகையாலே காலீ நத்தை சொல்ல மாட்டாது –பண்டை -என்றால் காலீ நத்தை சொல்லலாம் –
பண்டை நான்மறை —பண்டைக்குலம் –பண்டையோமல்லோம் -என்று இவை காலீ நத்துக்கு உதாஹரணங்கள் –
பண்டு நூற்றுவர் -பண்டொரு நாள் -என்று இவை பூர்வ கால வாசகத்துக்கு மட்டும் உதாஹரணங்கள் –
ஆகையால் பண்டு என்று பதம் பண்ணினாலும் கால பரமாய் போம் இத்தனை ஒழிய காலீ நபரம் ஆக மாட்டாது –
ஆக பண் தரு என்று பதச் சேதம் பண்ணினால் தான் – ஸூ சங்கதம் என்று உரையிலே ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே-
இப்படி இருந்துள்ள ரிக் யஜூர் சாம அதர்வண ரூப சதுர் வேதங்களும் –
ஸ்ரீ பராசர ஸ்ரீ பாராசர்ய ஸ்ரீ ப்ராசேதச -ஆதி பரம ரிஷிகளாலே அவகாஹிக்கப்பட்ட வேதாந்தங்களும் –

பார் மேல் –
மகா ப்ர்த்வியில் –

நிலவிடப் பார்த்தருளும்-
ஜைன பௌ த்தாதி பாஹ்யரை வேரோடே முடிவித்து-
வேதங்களை ஆசேது ஹிமாசலம் வ்யாபிக்கும்படி பண்ணியருளின-
நிலவுதல் -வர்த்தித்தல் –
இவர் தாம் வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யர் -இறே –

கொண்டலை –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் மேகம் என்னலாம் படி வதாந்யராய் –

கண்டவர் சிந்தை கவரும் –
பூகி கண்ட த்வய சசர சந்நிக்த தநீரோப கண்டாமவிர்மோத -ஸ்திமிதசகு நாநூதித பிரம்ம கோஷாம் –
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ரும்ச்யாமா நாபவர்க்காம் பாடிச்யந்தாம் புனரபிபுரீம் ஸ்ரீ மதிம் ரங்க தாம்ன-என்கிறபடியே –
தன்னைப் பார்க்கிறவர்களுடைய மனசை அபஹரித்து –தன் வசமாக்கி
பாராது போது -திரும்பவும் காண்கிறது எப்போதோ -என்று ஆகான்க்ஷிக்கும் படி நிற்பதாய் –
கவருகை -க்ரஹிக்கை –

கடி பொழில் தென்னரங்கன் –
பரிமள பிரசுரங்களான சோலைகளாலே சூழப்பட்டும் விமான மண்டப கோபுர பிரகார உத்யானங்களாலே நிபிடமாயும் –
த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமாயும் இருக்கையாலே தர்சநீயமாய் இருக்கிற ஸ்ரீ கோயிலிலே
நித்ய வாசம் பண்ணி அதுவே நிரூபகமாம்படி இருக்கிற ஸ்ரீ திருவரங்க செல்வனாருடைய —
கடி -பரிமளம் –
கண்டவர் சிந்தை கவரும் கடி -என்று பரிமளத்துக்கு விசேஷணமாய் சொல்லவுமாம் –
அன்றிக்கே –
கண்டவர் சிந்தை கவரும் தென்னரங்கன் -என்று பெரிய பெருமாளுக்கு விசேஷணமாக சொல்லவுமாம் –
சர்வ கந்த -என்று சொல்லப்படுகிறவரோட்டை ஸ்பர்சத்தாலே காணும் அவ்விடத்தே இருக்கும் திருச் சோலைகளுக்கு –
கடி பொழில் -என்று நிரூபிக்கும் படி பரிமளம் உண்டாவது –

தொண்டர் குலாவும் –-
கண்டேன் திருவரங்கமே யான் திசை –என்றும் –
இனி அறிந்தேன் தென் அரங்கத்தை -என்றும்
தேனார் திருவரங்கம் -என்றும் –
பண்டரங்கமே எதுவும் -என்றும் –
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -என்றும் –
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை கண்ணாரக் கண்டு -என்றும் –
அணி அரங்கத்தே கிடந்தாய் -என்றும் –
அரங்கத்தம்மா -என்றும் –
அண்டர்கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றும் –
நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் சூழ் அரங்கத்தம்மானே -என்றும்

அவருடைய போக்யதையில் ஈடுபட்டு இருக்கிற ஸ்ரீ பொய்கையார் தொடக்கமான ஸ்ரீ ஆழ்வார்கள் பத்துப் பேரையும் –
அன்று எரித்த திருவிளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே கொண்டாடி நிற்கிற —
அவர்கள் பக்கலிலே எப்போதும் பிரதி பத்தி பண்ணிக் கொண்டு போரா நிற்கிற என்றபடி –
குலவுதல் -கொண்டாட்டம்-

கண்டவர் –தென்னரங்கன்
சர்வ கந்தன் -எல்லா வாசனையுமாய் இருப்பவன் எனப்படும் ஸ்ரீ அரங்கனும் -இங்கு வசிக்கலாம் படி பொழில்
நல்ல மணம் உடைத்தாய் இருத்தல் பற்றி –கடி பொழில் -என்கிறார் –
கண்டவர் யாவராயினும் சரி – அவர் மனம் சிந்தைக்கு உள்ளாய் இருப்பினும் சரி-அத்தகைய மனத்தையும் கவர்ந்து விடுகிறது
கடி பொழில் -இனி கவரும் ஸ்ரீ தென்னரங்கன் -என்று கூட்டிப் பொருள் கொள்ளலுமாம் .
ஸ்ரீ கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
ஸ்ரீ தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்
தொண்டுக்கு பாங்கான இடம் எனபது தோற்ற –கடி பொழில் தென்னரங்கன் –என்றார்
தொண்டர் –ஸ்ரீ இராமானுசன்
அடியார்களுக்கு ஊரோ குடியோ நிரூபகம் இல்லை -தொண்டே நிரூபகம்
தொண்டர்-அடி இல்லாமல் அடியேன் இல்லை-

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

மேவித் தொழும் குடி –
அவருடைய ஸ்வபாவங்களிலே-அத்ய அபிநிவிஷ்ட சித்தராய் -விஷயாந்தர அபிமுகராய் -ஆஸ்ரியித்து இருக்கும்
அவர்களுடைய -திரு வம்சத்தார் அடங்கலும் –

தங்கள் சிந்தை கவரும் ஸ்ரீ தென்னரங்கன் உடைய தொண்டர்கள்
அவ்வரங்கனை விட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
ஸ்ரீ அரங்கனை விட அவர்கள் சிந்தையை ஸ்ரீ எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார்
அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட ஸ்ரீ அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி
செய்யவே வைதிகர்களான அத் தொண்டர்கள் இந்த ஸ்ரீ எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் ,

நிருபதி ரங்கவ்ருத்தி ரசிகா நபிதாண்ட வயன் நிகம விமர்ச கேலி ரசிகைர் நிப்ருதைர் வித்ருத
குண பரிணத்த சூக்தி த்ருட கோண விகட்ட நயாரடதி திசாமுகேஷூ யதிராஜ யச படஹா-என்று
வேறு ஒரு காரணம் இன்றி ஸ்ரீ ரங்கத்திலே இருப்பதையே ரசித்துக் கொண்டு இருப்பவர்களை களிக்கூத்தாடும்படி செய்து கொண்டு –
வேதத்தை விமர்சனம் செய்தல்
ஆகிய விளையாட்டிலே –
ரசிகர்களினாலே ஓர்மையுடன் தாங்கப்படும் குணங்களினாலே-நூல்களினாலே –கட்டப்பட்ட ஸூக்திகள் -என்கிற
த்ருடமான கொம்பு கொண்டு அடிப்பதனால் – ஸ்ரீ யதிராஜர் உடைய – புகழ் என்கிற பேரி-திசைகள் அனைத்திலும் ஒலிக்கிறது -என்று
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ யதிராஜ சப்ததியில் -ஸ்ரீ ரங்க வாச ரசிகர்களை
ஸ்ரீ எம்பெருமானார் புகழ் கூத்தாடச் செய்வதாக வருணித்து இருப்பது -இங்கு காணத்தக்கது –

ஆம் எங்கள் கோக்குடியே –
தத் சம்பந்திகளே உத்தேச்யர் என்று இருக்கும் எங்களை அடிமை கொள்ள வல்லவர்களுடைய திரு வம்சத்தார் ஆவர் –
தமக்கு ஒருவருக்குமே அன்றி -தம்முடைய சம்பந்த சம்பந்திகளுக்கு இக் குடி ஒன்றுமே வகுத்த சேஷி என்று காணும் –
இவருடைய பிரதிபத்தி இருக்கும்படி –
அன்றிக்கே –
ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தவர்கள் எந்தக் குலத்திலே அவதரித்தாலும் அந்தக் குலமே எங்களை எழுதிக்
கொள்ள வல்ல ஸ்வாமியாம் என்று யோஜிக்கவுமாம் –
தவத் தாஸ தாஸ கண ந சரம அவதவ்யச சதத் தாசதைகரசதா விரதாமமாஸ்து -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
சாரன்ஜோயதிகஸ் சிதச்திபுவனே நாதஸ் சயூதச்ய ந-என்று ஸ்ரீ அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –
குலம் தாங்கும் சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர் ஆகிலும் –
வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே -என்றால் போலே
அருளிச் செய்தார் ஆய்த்து –

தொகை–கொண்டல்-
வேதங்கள் அனந்தங்கள் ஆதலின் –தொகை இறந்த -என்று விசேஷித்தார்.
உதாந்தம் -அநுதாத்தம் -ஸ்வரிதம் -ப்ரசயம் – என்று பல் தரப்பட்டள் ஸ்வரங்க வேதத்தில் உள்ளமையால் –
பண் தரு வேதங்கள் -என்றார் .

கருத்து அறியப்படாது போது வேதங்கள் இருந்தும் பயன் இல்லை -அன்றோ
எம்பெருமானார் அவற்றின் கருத்தை ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்களினால் உலகு எங்கும் பரப்பவே –
அவ்வேதங்கள் பார் மேல் நிலவின ஆயின –

தொகை இறந்த என்றமையின் -சர்வ சாகா ப்ரத்யத்ய ந்யாயம்-சர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயம்
முதலியவைகளால் வேதத்தின் கருத்தை இவர் அறிந்தமை தோற்றுகிறது ..
அர்த்தங்களை அறிந்த பின்பே அர்த்தங்களை அறிவிப்பது வேதம் என்னும் காரண இடுகுறிப் பெயர்
அதற்க்கு இசைதலின் வேதங்கள் பார் மேல் நிலவிட -என்றார் .

பார்த்தருளும் என்றமையால்-
எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –
வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –

இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே
எல்லாருக்கும் அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் .
மேவித் தொழும் –கோக்குடியே
இத்தகைய உபகாரத்துக்கு தோற்று புறம்பான விஷயங்களை விட்டு ஒழித்து அநந்ய ப்ரயோஜனராய்
எம்பெருமானாரை ஆச்ரயித்தவர்கள் குலம் –
எக்குலமாயினும் – அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் -என்கிறார் .
கோக்குலம் என்று ஓதுவாரும் உளர் .

———-

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-9-

பண்டரு வேதங்கள்
பண்டை நான்மறை -பெரிய திரு மொழி -4 7-1 –
பண்டைக் குலம்-– .பண்டையோமல்லோம் –பெருமாள் திரு மொழி -9 7- –
பண்டு நூற்றுவர் -பெரியாழ்வார் திரு மொழி – 9-7 –
பண்டுமின்றும் -திருச் சந்த விருத்தம் – -22 –
பண்டொரு நாள் ஆலின் இலை-பெரியாழ்வார் திரு மொழி -1 4-7 –
ஆயிரத்துள் இவையுமோர் பத்து இசையோடும் பண்ணில் பாட வல்லார் கேசவன் தமரே-2-6-11-
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே -2-8-13–
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் அடவரும் படை மங்க ஐவர்கட்காகி-3-6-10-
பண் கொள் ஆயிரத்து -3-6-11-
பண்டை நாளாலே நின் திருவருளும் -9-2-1-
பண்ணார் தமிழ் ஆயிரத்து -9-8-11-

தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே –
எம் பல் பிறப்பிடை தோறு எம் தொழு குலம் தாங்களே -3-7-8-

கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-
செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

தொண்டர் குலாவும் –-
கண்டேன் திருவரங்கமே யான் திசை –என்றும் –
இனி அறிந்தேன் தென் அரங்கத்தை -என்றும்
தேனார் திருவரங்கம் -என்றும் –
பண்டரங்கமே எதுவும் -என்றும் –
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -என்றும் –
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை கண்ணாரக் கண்டு -என்றும் –
அணி அரங்கத்தே கிடந்தாய் -என்றும் –
அரங்கத்தம்மா -என்றும் –
அண்டர்கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றும் –
நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் சூழ் அரங்கத்தம்மானே -என்றும்
அவருடைய போக்யதையில் ஈடுபட்டு இருக்கிற பொய்கையார் தொடக்கமான ஆழ்வார்கள் பத்துப் பேரையும் –

பார்த்தருளும் கொண்டலை
சூரணை-155-

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
பு யற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
1-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

2-திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

3-உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

4-ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

5-தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

6-கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

7–வெளுத்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து

8- ஒளித்து –
மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )

9–கண்டு உகந்து –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –

10-பர சம்ருத்தியே பேறான
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர அவரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை–55–என்றும்
குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

(ஸ்ரீ நம்மாழ்வார் த்ரிகாலம் உணர்ந்தவர் -முற்பட்டவர் பின்பட்டவர் பற்றியும் அறிந்தவர்
ஸ்ரீ வால்மீகி முற்காலம் பிற்கால நிகழ்வுகளை அருளிச் செய்தது போலே – )

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading