ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது -என்பான் என் –
விபூதி இதுவாகையாலே அஞ்ஞானம் வரிலோ -என்ன
ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்த பின்பு -விவேகம் இன்றியே -கண்டது ஒன்றை-விரும்பக் கடவ
பேதைத் தனம் ஒன்றும் அறியேன் -என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது மற்று ஒன்றையே -என்றீர் –
இருள் தரும் மா ஞாலத்திலே -இந் நாளிலே இந்த நியமம் நிலை நிற்குமோ -என்ன –
சஞ்சலம் ஹி மன-என்று மனஸ்ஸூ ஒரு விஷயத்தில் தானே சர்வ காலமும் நிற்க மாட்டாது இறே –
ஆகையாலே மற்றொரு காலத்திலே மனஸ்ஸூ வ்யபிசரித்து அஞ்ஞாநத்தை விளைத்தாலோ என்று ஆஷேபித்தவர்களைக் குறித்து –
நீங்கள் சொன்னதே சத்யம் -ஆகிலும் நான் கீழே இழந்து போன நாள் போல் அன்று இந் நாள் –
இப்போது தம்தாமுடைய பரமை ஏகாந்த்யத்தாலே ஸ்ரீ ரங்கநாதன் உடைய பரம போக்யமான திருவடிகளுக்கு
அடிமைப் படுக்கையே பரம புருஷார்த்தம் என்று அத்யவசித்து இருக்குமவர்களையே தமக்கு பந்து பூதராக அங்கீ கரித்து கொண்டு
பிரபன்ன குல உத்தேச்யராய் –
சர்வ தபஸ்ஸூக்களிலும் வைத்துக் கொண்டு -விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் –
தம்முடைய வைபவத்தைச் சொல்லி புகழும்படியான ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது
என் இடத்தில் சேரக் கண்டிலேன் -என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
என் வாக்கும் மனமும் மற்று ஒன்றை இனி உரையாது நினையாது என்னும் உறுதி எங்கனம் கூடும் –
இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
மீண்டும் அறியாமை வாராதோ -என்பாரை நோக்கி
இன் நானிலத்தில் ஸ்ரீ எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் .
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- –
பத உரை –
மற்று ஒரு பேறு -வேறு பயனை
மதியாது -ஒரு பொருளாகக் கருதாமல்
அரங்கன் -ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
மலர் அடிக்கு -அழகிய திருவடிகளுக்கு
ஆள் உற்றவரே -ஆட் புக்கு நிலை நிற்பவர்களையே
தனக்கு உற்றவராய் -தமக்கு உறவினராக
கொள்ளும் -ஏற்கும்
உத்தமனை -மிக்க மேன்மை வாய்ந்தவரான
நல் தவர் –நல்ல தவமாம் சரணா கதி தர்மத்தை கை கொண்டவர்கள்
போற்றும் -துதியா நிற்கும்
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
இன் நானிலத்தே -இந்த உலகத்திலே
பெற்றனன் -பெரும் பேறாக பெற்று விட்டேன்
பெற்ற பின் -பெற்ற பிறகு
மற்று -இப் பேற்றைத் தவிர மற்று ஒன்றை விரும்புவதற்கு உறுப்பான
ஒரு பேதைமை -ஒரு அஞ்ஞானம்
அறியேன் -வருவது கண்டிலேன் .
வியாக்யானம் –
வேறு ஒரு பிரயோஜனன்களை ஒன்றாக நினையாதே
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான திருவடிகளுக்கு அடிமையாகையே பரம புருஷார்த்தம் என்று -அதிலே ஊன்றி
இருக்குமவர்களையே-தமக்கு பந்து பூதராக அங்கீகரிக்கும் உத்தம அதிகாரிகளாய் –
ஸூசுகத்வ -அவிளம்ப்ய-பலப்ரதத்வ -ஸ்வரூப அநுரூபத் வாதிகளாலே -சர்வ தபஸூக்களிலும் வைத்துக் கொண்டு –
விலஷண தபச்சான -சரணாகதி தர்மத்திலே நிஷ்டரானவர்கள் –
தம்முடைய வைபவத்தையே சொல்லிப் புகழும்படியான ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
லபித்தற்கு பின்பு இத்தை ஒழிய ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே கண்ட தொன்றிலே
மேல் விழுகைக்கு உறுப்பான ஒரு அஞ்ஞானம் கண்டிலேன் –
ஆதலால் மேலும் உண்டாகக் கூடாது என்று கருத்து–
பித்தர் பேசினார் பேதையர் பேசினர்–கம்பர் – -அஞ்ஞானம் இல்லை என்கிறார் இதில்
மூடர் ஆசூரா பாவம் -அவதரித்தவனை உண்மையாக அறியாத பாஷாண்டிகள் –
நல் தவர் -உபாயமும் உபேயமும் அவனே என்று அத்யவசித்து –74 சிம்ஹாசநாதிகளும் –
ஜகத் குரு -சத்யம் சத்யம் ஸ்ரீ எதிராஜரே ஜகத் குரு -சம்சயம் இல்லை -தத் ஏவ சர்வ லோகாநாம் உத்தாரகர்
பெற்ற பின் மற்று அறியேன் -பெற்ற ஹர்ஷத்தால் மீண்டும் அருளிச் செய்கிறார்-
ஸ்ரீ ஆழ்வாராதிகளையும் -ஸ்ரீ அரங்கன் அடியாரர்களையும் உற்றவராக -உத்தமன் –ஆச்சார்ய சிரேஷ்டர் -என்றவாறு –
மேல் கீழ் விடாமல் எல்லா பாசுரங்களும் -ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ ஆழ்வான் போல்வார் —
உத் -பகவான் / உத்தர ஆழ்வார் / உத்தமர் -ஆச்சார்யர் -வைபவம் மிக்கு என்றபடி –
மற்று ஒரு பேறும் மதியாது –
நமாம் துஷ்க்ர்திநோ மூடா ப்ரபத்யந்தே நராதமா -மாயாயாப ஹ்ர்தஞான ஆசூரிம் பாவாமாஸ்ரிதா –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி
மைத்ரேய பாஷண்டோபஹதாஜனா -காமைஸ் தைஸ் தைர் ஹ்ர்தஜ்ஞான ப்ரபத்யந்தே அந்ய தேவதா –என்று நிஷேதித்த படியே
சத்துக்கள் உடைய உபதேசாதிகளாலே தெளிந்து கொண்டு –
அனந்யாஸ் சிந்தயந்தோமாம் – வ்யவசாயாத் மிகா புத்த்திரே கேஹ குரு நந்தன –
மயிஸா நனந்யோகே ந பக்தி ர வ்யவிசாரிணி -என்கிறபடியே ததேக நிஷ்டராய் –
ஏகாந்தீது விநிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை பக்தயுபாயம் சமம் க்ருஷ்ண ப்ராப்தவ் -கிருஷ்ண ஏக சாதன -என்னும்படி
தேவதாந்திர -மந்த்ராந்தர -பிரயோஜனாந்தரங்களை-ஸ்மரியாத பரம ஏகாந்த யத்தாலே –
மதிக்கை -விரும்புகை-
மற்றொரு –உத்தமனை –
அரங்கன் மலர் அடிக்கே ஆளுகையே பேறு
அடிகள் நிரதிசய போக்யமாய் மலர் போன்று இருத்தலின் ஆளுறுகை பெரும் பேறாயிற்று –
திரு வரங்கத்தில் அரங்கன் திருவடி வாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
மற்ற புருஷார்த்தங்கள் புருஷார்த்தமாக மதிக்கத் தக்கன அல்ல என்று ஆளுற்றவர் கருதுகின்றனர் .
இனி
திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை
நேரினும் -அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது -என்று கூறினதாகக் கொள்ளலலுமாம்-
மற்று ஒரு பேறு –
பரம பதத்தில் பெரும் பேறு -முக்த ஐஸ்வர்யம் என்றபடி –
இப்படி பொருள் கொள்ளும்போது –மற்று ஒரு பேறும் என்று பிரிக்க -உம்மை உயர்வு சிறப்புப் பொருளது –
சீரிய முக்த ஐஸ்வர்யத்தையும் மதிக்கிலர் என்றது ஆயிற்று –
திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள் பரம பதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பது கீழ் வரும் ஐதிஹ்யங்களாலே விளங்கும் .
ஆள வந்தார் மகனார் சொட்டை நம்பி -அந்திம தசையிலே முதலிகள்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அடைய புக்கிருந்து -நீர் நினைத்துக் கிடக்கிறது என் -என்ன –
ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால் நம் பெருமாள் உடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இருந்தது இல்லை யாகில் -முறித்துக் கொண்டு இங்கு
ஏற ஓடிப் போகும் இத்தனை -என்று கிடக்கிறேன் -என்றார் .
பட்டர் -பெருமாள் பாடே புக்கு இருக்க -பெருமாள் திரு மஞ்சனத்துக்கு ஏறி அருளுகிறவர் –
பட்டரைக் கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
சேலையைக் கடுக்கி -திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் .
பெருமாள்-அஞ்சினாயோ -என்று கேட்டு அருள -ஆடை இல்லாத ஏகாந்த நிலையில் -பெருமாளை சேவித்தால் –
சீக்கிரம் பரம பதத்துக்கு போவார் -என்கிற பிரசித்தியைப் பற்ற -பரம பதம் போவதற்கு அஞ்சினாயோ –
என்று பட்டரை பெருமாள் கேட்டு அருளினார் -என்க ..
நாயந்தே பரம பதம் என் சிறு முறிப்படி அழியும் –எனக்கு வசப்பட்டதே பரம பதம் ஆதலின் அங்குப் போக நான் அஞ்ச வில்லை -என்றபடி –
உம்முடைய குளிர்ந்த திரு முகமும் திரு நாமத் தழும்பும் இழக்கிறேனாக கருதி அஞ்சா நின்றேன் -என்றார் .
இவ்விரண்டி ஐ திஹ்யங்களும் -திரு விருத்தம் – 44- ஆம் பாசுரத்தில் -வ்யாக்யானத்தில்-
பெரிய வாச்சான் பிள்ளை காட்டியவைகள் .
நாச்சியார் திரு மொழி வ்யாக்யானத்திலும் -அவராலே -சிறிது மாறு பாட்டு -இவை –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -11 5-என்னும் இடத்தில் கட்டப் பாட்டு உள்ளன –
அவ்விடத்திலேயே -பரம பதம் வரில் செய்வது என் என்று நடுங்குவார்கள் போலே காணும் அவ்வூரில் திருவரங்கத்தில்
வர்த்திக்கிறவர்கள் – – என்று அவர் அருளிச் செய்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –
அரங்கன் மலர் அடிக்கு –
ஸ்ரீ ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத்யோஜநாநாம் -சதைரபி முச்யதே சர்வ பாபேப்யோ –
ஸ்ரீ விஷ்ணு லோகம் ச கச்சதி -இதம் ஹி ரங்கம் த்யஜிதாமி ஹாங்கம்-என்னும்படி பிரசித்த தமமான
ஸ்ரீ ரங்க நகரை தனக்கு இருப்பிடமாக உடையனாய் –
அதுவே நிரூபகமாம்படி -எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ரங்க நாதனுடைய –
சர்வே வேதா யத்பதமாமநந்தி -விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்றும் –
கதா புனஸ் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாகுச வஜ்ராலாஞ்சனம் -திரிவிக்கிரம த்வச் சரணாம்
புஜத்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -என்றும்
கதாஹம் பகவத் பாதாம் புஜத்வம் சிரஸா சங்கர ஹிஷ்யாமி –என்றும் சொல்லுகிறபடியே –
வேதாந்த வாக்ய சர்வ ஸ்வம்மாய்-நித்ய நிரதிசய போக்யமாய் -சர்வ லஷணோ பேதமாய் –
அத்யந்த ப்ரார்த்த நீயமாய் -புஷ்ப ஹாச சூகுமாரமாய் -சேவித்தவர்களை அனந்யார் ஹராம்படி
பண்ணக் கடவதான திருவடிகளுக்கு –
ஆள் உற்றவரே –
தாசோஹம் வாசுதேவச்ய -லஷ்மீ பர்த்துர் நர ஹரித நோர்த்தா சதா சச்ய தாஸா -என்றும் –
பொன் ஆழிக் கை என்னம்மான் நீக்கமில்லா அடியார் -என்றும் சொல்லுகிறபடியே –
வழு இலா அடிமைகளில் அன்வயித்து –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றும்
ஆதலால் உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -என்றும் –
அதுவே பரம புருஷார்த்தம் என்றும் அத்யவசித்து இருக்கிற பராங்குச பரகாலாதிகளே –
தனக்கு உற்றவராகக் கொள்ளும் –
பாந்தவா விஷ்ணு பக்தாஸ்ஸ –என்றும் –
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே
மாதா பித்ர்ப்ரப்ர்தியான சர்வ வித பந்துக்களாய் அனுசந்தித்து இருக்குமவராய் –
உத்தமனை –
கீழ் சொன்ன அதிகாரிகளில் எல்லாரையும் வைத்துக் கொண்டு -உத்தம அதிகாரியாய் -ஆசார்யராய் – என்றபடி –
அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவர் பரம பத நாதனுக்கு ஆளுருதலையும் பேறாக மதிக்கிலர் –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்
மாகம் -பரம ஆகாசமாம் பரம பதம் -மட்டும் இறைஞ்சும் அது பரம பத நாதன் அடி –
அரங்கனதோ -மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி .தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
அரங்கன் திரு முற்றத் தடியார்களையே தமக்கு உறவினராக கொண்டவர் -எம்பெருமானார் -என்றபடி .
துறக்கும் போதும் ஆண்டானையும் ஆழ்வானையும் துறவாது உறவாக -ஆத்மபந்துவாக -கொண்டவர் அன்றோ அவர் .
மாதவன் திருவடிகளை உபாயமாகவும் -உபேயமாகவும்-கொள்ளுமவன் உத்தம அதிகாரி எனப்படுவான் .
எம்பெருமானார் அத்தகைய அதிகாரி ஆதலின் அவரை உத்தமன்-என்கிறார் .
த்வயார்த்த நிஷ்ட்டர் -என்றபடி .
உத்தமனை
கீழ் சொன்ன அதிகாரிகளில் அரங்கனையும் சேர்த்து
உத் புருஷன் உத்தர புருஷன் ஆழ்வார்கள் உத்தம புருஷன் ஆச்சார்யர்கள் என்ற படி..
நற்றவர் போற்றும் –
தவம் –தபசு
நல தவம் -வி லஷணமான தபசு –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ-என்றும் –
சத் கர்ம நிரதாஸ் சூத்த -சாங்க்ய யோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடிதமீமபி -என்னும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே -பிரசம்சிக்கப் பட்டதாய் –
அர்ஜுனனுக்கு மோஷ உபாயங்களை உபதேசிக்கும் இடத்தில்
முந்துற முன்னம் -கர்ம யோக ஞான யோக பக்தி யோக அவதார ரகஸ்ய புருஷோத்தம வித்யா நாம
சங்கீர்த்தன ரூப இதர உபாயங்களை உபதேசித்தவாறே –
அவற்றைக் கேட்டு சோக விசிஷ்டனானவனைக் குறித்து அவனுடைய சோகாபநோத நார்த்தமாக உபதேசிக்கப்பட்ட அர்த்தமாய் –
அத ஏவ சுகமாய் -அவிளம்ப்ய பல ப்ரதமாய் –ஸ்வரூப அநு ரூபமாய் -அத்யந்த விலஷணமான –சரணாகதி தர்மத்திலே –
அத்யபிநிவிஷ்டரான –ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் முதலான முதலிகளும் –
லோகத்தாரை உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த வருடைய வைபவத்தை அறிந்து –
ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரஷரி காமவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாதரசா -என்றும்
புண்யம் போக விகாசாய பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதயா-ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிந -என்றும்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு -ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந அத்ர சம்சய -என்றும்
குதர்ஷ்டி குஹ நாமுகே நிபதித பரப்ரஹ்மண கரக்ரஹ விசஷணே ஜயதி லஷ்மணோ யம் முனி -என்றும் –
ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப ப்ரத்யஷ தாமுபக தஸ்த்வி ஹ ரங்கராஜ வச்யஸ் சதாபவதி தே
யதிராஜ தஸ்மாத் சக்தஸ்ஸ்வ கீய ஜன பாப விமோச நேத்வம் -என்றும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்றும் சொல்லிப் புகழும்படி எழுந்து அருளி இருக்கிற –
நல் தவர் போற்றும் இராமானுசனை –
த்வயார்த்த நிஷ்டர் ஆதலின் அத்தகையோர் அவரைப் போற்றுகின்றனர் .
தவம்-சரணாகதி –
தவங்களுக்குள் தனக்கு மேற்பட்டது ஓன்று இல்லாத தவம் ந்யாசம் எனப்படும் சரணா கதி – என்று வேதம் ஓதுகிறது .
ஏனைய தவங்களில் நின்றும் மேம்பாடு தோற்ற –நல் தவம் –என்று விசேஷித்தார் –
நன்மையாவது –
எளிதில் கை யாளலாம்படி இருத்தலும் –
காலம் தாழ்த்தாது பயன் அளித்தாலும் –
ஜீவான்ம ஸ்வரூபத்தின் பார தந்த்ரியத்திற்கு இயைந்து இருத்தலும் .
ஏனைய தவங்கள்-சாதனாந்தரங்கள் -அரும் பாடு பாட்டு கைக் கொள்ள தக்கனவாய் உள்ளன .
காலம் தாழ்த்து -அதாவது -பிராரப்த கர்மம் தீர்ந்த பின்னர் பயன் அளிப்பன –
அஹங்காரம் கலந்தவை யாதலின் ஆன்மாவின் பாரதந்த்ரியம் நிலைக்கு இசையாதன -என்றுணர்க –
அத்தகைய நல் தவம் உடையவர்கள் -சரணா கதி நிஷ்டர்கள் –
எம்பெருமானார்
தான் சரணா கதியைக் கைக் கொண்டும் –
உபதேசத்தாலும் -நூல்களாலும் உலகினரை சரணா கதி நெறியில் ஒழுகச் செய்தும் –
தாம் செய்த சரணா கதியில் செருகி உலகினர் உய்யுமாறு வரம் பெற்றும் –
சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின பெருதவிக்குத் தோற்று
நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் -என்க –
இராமானுசனை –
எம்பெருமானாரை –
இந் நானிலத்தே –
இருள் தருமமா ஞாலத்திலே –
பெற்றனன் –
ஆஸ்ரயித்தேன் –
நிழலும் நீரும் இல்லாத மருகாந்தரத்திலே தண்ணீர் பந்தல் பெற்றவன் ஹ்ர்ஷ்டனாப் போலே –
இந்த லோக ஸ்வ பாவத்தை அழிய மாறி என்னை உஜ்ஜீவிப்பிக்கும் விஷயத்தை பெற்றேன் என்று ஹ்ர்ஷ்டர் ஆகிறார் காணும் –
பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதமையே –
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு
முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும்
ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –
மற்று அறியேன் ஒரு பேதமையே –
அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –
பிரத்யஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து
மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி –
த்யஜபட தூரதரென தான பாபான் –என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –
இன் நானிலத்தே –பேதமையே –
பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது .
இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே
ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–
அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்–
தெரிந்து விட வில்லை வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–
————
அரங்கன் மலரடிக் காளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -8-10-3-
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம் உறும் கண்டாய் –இரண்டாம் -77-
உற்று வணங்கித் தொழுமின் -94-
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் –மூன்றாம் -40-
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி -18-
உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–-ஸ்ரீ திருவாய் மொழி-8-10-3-
உற்றேன் உகந்து பணி செய்தேன்
———————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply