ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -என்றார் கீழ் .
லோகத்தில் உள்ளவர்களுக்கு தத்தவ ஸ்திதியை யருளிச் செய்து –பகவத் சமாச்ரயண ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவில் பண்ணின விசேஷ விஷயீகாரத்தை-யனுசந்தித்து –இப்படி விஷயீகரிக்க பெற்ற எனக்கு
சத்ருசர் இல்லை என்கிறார் இதில் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே பிரகாசித்து உஜ்ஜ்வலமாக-அவரை வணங்கினோம் என்று சொல்லி –
இதிலே -லோகத்தார் எல்லாரையும் குறித்து -சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் கோயிலிலே சந்நிகிதனாய் இருந்தான் –
அவனை ஆஸ்ரியுங்கோள் என்று பரம தர்மத்தை-உபதேசித்த உபகாரகன் -எம்பெருமானார் –
என்னுடைய ஆர்த்த அபராதங்களை நசிப்பித்து திவா ராத்ரி விபாகம் அற என்னுடைய ஹ்ருத்யத்திலே ஸூ ப்ரதிஷ்டராய் –
இவ் இருப்புக்கு சதர்சம் ஒன்றும் இல்லை என்னும்படி எழுந்தருளி இருந்தார் –
இப்படி ஆன பின்பு தமக்கு சத்ருசர் ஒருவரும் இல்லை என்கிறார்
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் என்று தம்மை விஷயீகரித்த படியைக் கீழ் அருளிச் செய்தார் –
உலகத்தாருக்கு தத்வ உபதேசம் செய்து பகவத் சமாஸ்ரயண-ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவிலே விசேஷமாக விஷயீகரித்ததை அனுசந்தித்து-இப்படிப் பட்ட எனக்கு நிகர் யாரும் இல்லை -என்கிறார் –
தாழ்ந்தவன் மனத்தில் இருந்து நீங்காமல் இருந்தான்- இருவருக்கும் நிகர் இல்லை.
இல்லை எனக்கு எதிர் இல்லை இல்லை எனக்கு நிகர் இல்லையே எம்பார் அருளியது போல–
மதி இலியேன் தேறும் படி புகுந்தான் என்றார் முன்னம்-
தத்வ ஸ்திதியை அருளி செய்து பகவத் சமாச்ரயண ருசியை ஜனித்தவர்-
தம் அளவில் விசேஷ விஷயீ காரத்தை அனுசந்தித்து -தமக்கு சருசர் இல்லை என்கிறார்-
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –
பத உரை –
இறைஞ்சப்படும் -எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்படும்
பரன்-பரம் பொருள்
ஈசன் -ஈஸ்வரனாக காட்சி தரும்
அரங்கன் என்று -திருவரங்கத்திலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று
இவ்வுலகத்து -இந்த லோகத்திலே
அறம் -தர்மத்தை
செப்பும் -அருளிச் செய்யும்
அண்ணல் -ஸ்வாமியான
இராமானுசன் -எம்பெருமானார்
என் அரு வினையின் -என்னுடைய அருமையான கர்மத்தின் உடைய
திறம்-சமூஹத்தை
செற்று -தொலைத்து
இரவும் பகலும் -இராப்பகலாக
விடாது -இடைவிடாது
என் தன் -என்னுடைய
சிந்தை உள்ளே -ஹ்ருதயத்திற்கு உள்ளே
நிறைந்து -பூரணமாய்
ஒப்புற-நிகர் இல்லாதபடி
இருந்தான் -எழுந்து அருளி யிருந்தார்
எனக்கு -இத்தகைய எனக்கு
ஆரும் -எவரும்
நிகர் இல்லை-ஒப்பு இல்லை
வியாக்யானம் –
சர்வ சமாஸ்ரயணீயனாக -வேதாந்த பிரசித்தனான -சர்வ ஸ்மாத் பரன் –அநந்த சாயித்வாதிகளாலே –
ஈஸ்வரத்வம் தோற்ற -வந்து கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று –
அதர்ம அனுசாரியான இந்த லோகத்திலே சாஷாத் தர்மத்தை அருளிச் செய்யுமவராய்
ஆஸ்ரித இழவு பேறுகள் தம்மதாம் படியான சம்பந்தத்தை வுடையராய் இருக்கிற எம்பெருமானார் –
என்னுடைய அனுபவத்தாலும் -ப்ராயசித்தத்தாலும் போக்க வரிய கர்ம சமுஹத்தை நிரசித்து-
அல்லு நன்பகலும் இடை வீடின்றி -திரு வாய் மொழி -1 10-8 – -என்கிறபடியே-
திவாராத்ர விபாகமற இடைவிடாதே என்னுடைய ஹ்ருதயத்தின் உள்ளே பூரணராய் கொண்டு-
இவ்விருப்புக்கு சத்ருசம் இல்லை என்னும்படி எழுந்து அருளி இருந்தார் –
ஈதரு ச விஷயீகார பாத்ரமான எனக்கு ஒருவரும் சத்ருசர் இல்லை
திறம்-சமூஹம்
நிகர் -ஒப்பு–
சாத்விக அஹங்காரம் -எம்பார் -வார்த்தை/ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் அருளிய இராமானுசன் -வளர்த்த தாய் –
திருவரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
இறைஞ்சப்படும் ஷீராப்தி -பரன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் — ஈசன் அந்தர்யாமி /அரங்கன் அர்ச்சா -/அறம் செப்பும் வைபவம் –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ஐந்தையும் சொன்னவாறு –
இறைஞ்சப்படும் –
எழுவார் விடைகொள்வார் ஈன் துழா யானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –என்றும் –
முழு எழ உலகுக்கும் நாதன் -என்றும் – சொல்லுகிறபடி
சர்வ சமாஸ்ரயநீயனாய்க் கொண்டு பிரசித்தனாய்
பரன் –
பராபரானாம் -என்கிறபடி சர்வ ஸ்மாத் பரன் –
ஈசன் –
சர்வேஸ்வரன் –
அரங்கன் என்று –
அநந்த சாயித்வாதிகளாலே-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று –
அன்றிக்கே –
இறைஞ்சப்படும் -சர்வ சமாஸ்ரயநீயன் –
ஈசன் -சர்வ ஸ்மாத் பரன் –
ஈசன் -ஸ்வாபாவிக ரநவதிகாதிசயே சிதிர்த்வம் நாராயண த்வயி நமர்ஷ்யதி -என்கிறபடியே சர்வ ஸ்வாமியானவன் –
இந்த மஹிமாவான் யார் என்னில் –
அரங்கன் –அப்படிப்பட்டவன் -எட்டா நிலத்திலே இராதே -இன்று சந்நிகிதனாய் -சுலபனாய் –
கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற திருவரங்க செல்வனார் –
என்று -இப்படிப் பட்டவர் என்று –
இவ் உலகத்து –
அதர்ம அநுசாரியான இந்த லோகத்திலே -அதர்ம பூதமான -இருள் -தரும் மா ஞாலத்தில் உள்ள ஜனங்களுக்கு –
அறம் செப்பும் –
சாஷாத் தர்மத்தை அருளிச் செய்யும் –
அன்றிக்கே –
அப்படிப் பட்டவனை ஆஸ்ரயிக்க -சம்சார நிச்தரன உபாயத்தை உபதேசித்து அருளும் –
அன்றிக்கே –
இறைஞ்சப்படும் -தேவ ஜாதிக்கு ஒரு உபத்ரவம் வந்தால் -அவர்கள் எல்லாரும் திரண்டு -பிரமாவோடு கூடிப் போய் –
கூப்பிடும் கூப்பீடு கேட்கைக்காக -வியூக ஸ்தானமான திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து -அவர்களாலே சேவிக்கப்படுமவன் –
இத்தால் வியூகத்தை சொன்னபடி –
பரன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான பரன் –
ஈசன் –
அந்தப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் -என்கிறபடியே சர்வரையும் நியமிக்கைக்காக சர்வ அந்தர்யாமியாய் இருக்குமவன் –
இத்தால்-அந்தர்யாமித்வத்தை சொன்னபடி –
அரங்கன் –
அர்ச்சையஸ் சர்வ சஹிஷ்ணு ரர்ச்சாக பராதீநா கிலாத்மா ஸ்த்திதி -என்னும்படியான
அர்ச்சாவதாரங்களில் வைத்துக் கொண்டு பிரதானமாய் இருக்குமவன் –
இத்தால் அர்ச்சாவதாரத்தை சொன்னபடி –
என்று இவ் உலகத்து அறம் செப்பும் –
அறம் –ராமோ விக்ரஹவான் தர்ம –
யேசவேத விதொவிப்ரயேசாத்யாத்மா விதோஜன-தேவதந்தி மகாத்மானாம் க்ர்ஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறபடியே
அவதாரங்களிலே பிரதானமான விபவம் –
என்று –
என்கிறத்தை இத்தோடு அன்வயித்த படி –
அஞ்சு வகைப் பட்டு இருக்கும் நாராயணனை -பிராப்யமும் பிராபகமும் என்று அருளிச் செய்யும் என்னவுமாம் –
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று –
வேதாந்தங்களிலே எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுவதாய்ச் சொல்லப்படும் பரம் பொருள்
ஈஸ்வரத்வம் தோற்ற பாம்பணை மேல் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் -என்று-எம்பெருமானார் உபதேசிப்பாராம் –
இன்னாரால் இறைஞ்சப்படும் என விதந்து கூறாமையாலே -எல்லாராலும் இறைச்சப்படும் எனக் கொள்க –
எல்லோராலும் ஆஸ்ரயிக்கப் படுபவனாக-கூறப்படும் பரம் பொருள் -கண்ணாலே காணலாம் படி -தன் ஈஸ்வரத்வம் தோற்றத்
தானே வந்து-கண் வளர்ந்து அருளுகிறது -என்கிறார் .
ஸ்ரீ ரங்க நாதனிடம் சர்வேஸ்வரத்வதைப் பல-படியாலும் சாஷாத் கரிக்கலாம் –
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது -திருவாய்மொழி- 2- 8- 1- என்றபடி-
அநந்த சாயித்வமும் -பிராட்டி அகம் புணர்தலும் ஈஸ்வரத்வத்தை காட்டுகின்றன-
அனாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன்-
அன்பன் தன்னை அடைந்தவர்கள் எல்லாம் அன்பன்-விசேஷணம் இன்றி அனைவருக்கும் அன்பன் அவன் ஒருவனே –
சர்வ லோகானாம் பிதா மாதாச மாதவன்–
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாய் யானை வழுவா வகை-மூவருக்கும் கதி த்ரயத்துக்கும் மூலத்வம்
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்–பிரசித்தனாய்-
அண்ணல் -சஹி வித்யாதஸ்தம் ஜனயதி தத் ஸ்ரேஷ்டம்-ஜன்ம -என்றும்
குருர் மாதா குரு பிதா -என்றும் சொல்லுகிறபடி –
இவ் உபதேச முகேன சேதனருக்கு சர்வ வித பந்துவாய்-அவர்களுடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான
சம்பந்தத்தின் உறைப்பை உடைத்தாய் இருக்கிற –
இராமானுசன் –
எம்பருமானார் –
இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
அதர்ம வழியே போகும் இவ் வுலகின் கொடுமையைக் காட்ட –இவ் உலகம் -என்கிறார் .
அதர்ம அனுசாரியான லோகத்திலே தர்ம உபதேசம் பண்ணி இருக்கிறார் .
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் -க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறபடியே
சாஷாத் தர்மத்தை உபதேசித்து அருளினார் .
பகவத் ஆஸ்ரயண ரூபமான உபாய தர்மத்தை என்றார் ஆகவுமாம் –
இவ் அரிய விஷயத்தை உபதேசிப்பதற்கு காரணம் அண்ணலாய் இருத்தல் என்கிறார் .
அண்ணல் -ஸ்வாமி
ஆஸ்ரிதர் இழவு பேறுகள் தம்மதாம் படியான உறவு முறை உடையவர் -என்றபடி .
இராமானுசன் -விபரீதனான இராவணனுக்கு உட்பட ஹிதம் நாடின இராமனை அனுசரித்தவர்-என்பது கருத்து .
என் அருவினையின் திறம் செற்று –
அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய -என்றும்
அமர்யாதா ஷூத்ரஸ் சலமதி -என்றும் –
பாபானாம் பிரதமோச்ம்ய்ஹம்-என்றும் –
ந நந்திதம் கர்மததச்திலோகே-சஹச்ரசோ யந்ந மயாவ்யதாதி -என்றும் –
அஹம் அஸ்ய அபராத சக்ரவர்த்தி -என்றும் –
யாவச் சயச் சதுரிதம்-சகலஸ் யஜந்தோ தாவத் சதத் தததிகம் சமமாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிறபடியே –
என்னால் தீரக் கழியச் செய்யப்பட்டதாய் -அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் -போக்க அரிதான பாப சமூகத்தை –
வானோ மறிகடலோ -என்னும்படி நசிப்பித்து –
திறம் –
சமூஹம் –
என் அரு வினையின் திறம் செற்று –
என் வினை-
என் வினை என்கிறார் உலகத்தார் வினையின் வேறுபாடு தோற்ற –
வினையின் திறம்-
வினைகள் பலகால் செய்யப்பட்டு செய்யாதது ஒன்றும் இன்றிப் பலவாய் இருத்தலின் வினையின் திறம் -என்றார் –
அருவினை
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹா ஸ்ரசோ யந் ந மயா வ்யதாயி-என்று
உலகத்தில் என்னால் பல காலும் செய்யப்படாத பாபங்கள் ஒன்றும் இல்லை –
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திரு மொழி – 1-9 2- – -என்றது போலே-
ப்ராயசித்ததாலோ -அனுபவத்தாலோ -அழியாத வினை என்பார் அருவினை என்றார் –
இரவும் பகலும் விடாது –
அல்லும் பகலும் இடைவீடு இன்றி -என்கிறபடியே -திவா ராத்ர விபாகம் அற -இடைவிடாதே –
இரவும் பகலும் விடாது
அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திருவாய்மொழி 1-10 8- – -என்கிற படியே
இடைவிடாதபடி எழுந்து அருளி இருந்தார்-
அமுதனார் தூங்கும் பொழுது புகுந்தாராம்–
பகலில் புகுந்தால் தடுப்பார் என்பதால் -விலக்காமை இரவில் இருக்குமே-
நிறைந்து -முழுவதுமாக சொரூபம் ரூபம்-அமுதனார் உகந்த திருமேனி குணம் விபவம் சேஷடிதம் புகுந்ததே சேஷ்டிதம்-
பூரணராய் கொண்டு இருந்தான்- எழுந்து அருளி இருந்தார்
என் தன் சிந்தை உள்ளே –
பண்டு எல்லாம் ஆசாபரனாய் போந்து இப்போது இவ் விஷயீ காரத்தை பெற்ற என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே –
நிறைந்து –
ஸ்பர்ஷடா ஸ்பர்ஷடி மாத்ரம் அன்றிக்கே -ஸ்வரூபத்தோடும் குணங்களோடும் விக்ரகத்தோடும் -விபூதியோடும் கூட –
அதிலே பூரணமாய் புகுந்து –
அணுவான ஆத்மாவின் உள்ளே -விபுவான ஈஸ்வரன் -ஸ்வரூப ரூப குணங்களோடு –
அசங்குசிதமாக வியாபித்து நிற்குமா போலே காணும் –
எம்பெருமானாரும் அதி சூஷ்மமான இவருடைய திரு உள்ளத்திலே அசங்குசிதமாக வியாபித்து நிற்கிறபடி –
ஒப்பற விருந்தான் –
இவ் வாத்சல்யத்துக்கு சத்ருசம் இல்லாதபடி இருந்தார் –
அதிலே தானே ஸூ ப்ரதிஷ்டராய்-எழுந்து அருளி இருந்தார் என்றபடி –
ஒப்பு -சத்ருசம் –
என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் –
ஆசாபாசங்களுக்கு உறைவிடமான என் சிந்தைக்கு உள்ளே இருந்தார் –
அருவருப்பின்றி மிக்க வாத்சல்யத்துடன் இதயத்தில் -ஈசானன் -அந்தர்யாமி -எந்தன் சிந்தை உள்ளே இருந்தார் –
அருவருப்பு இன்றி ஆதரத்துடன் இருப்பது மாத்ரம் அன்று –
குறை நீங்கி -நிறைவு பெற்றவராய் இருந்தார் .
க்ருத்ய பேற்றினை கைப்பற்றின வீறுடைமை தோற்ற ஒப்பற இருந்தார் –
அமுதனாரை வசப்படுத்துவது தவிர எம்பெருமானார் திரு வவதாரதிற்குப் பேறு வேறில்லை என்பது கருத்து .
நிறைந்து இருந்தான்–
பகவத் விஷயத்துக்கும் இடம் இன்றித் தானே சிந்தையுள் நிறைந்து இருந்தான் -என்னலுமாம்-
விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாதபடி
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –திருவாய் மொழி – 10-8 1- – என்று
நம் ஆழ்வார் கூறியது போலே அமுதனாரும் கூறினார் .
நம் ஆழ்வார் நெஞ்சில் விஷயாந்தரங்களுக்கு இடம் இல்லை .
அமுதனார் நெஞ்சில் பகவத் விஷயத்துக்கும் இடம் இல்லை –
எனக்கு –
இப்படி எம்பெருமானார் உடைய விஷயீ காரத்தைப் பெற்ற எனக்கு –
ஆரும் நிகர் இல்லையே –
எத்தனை தரம் உடையார் உண்டானாலும் -சத்ருசம் ஆக மாட்டார்கள் –
அவித்யாந்தர்க்க தாச்சர்வே-தேஹி சம்சார கோசர -என்று சொல்லப்படுபவர்கள்
சத்ருசம் ஆக மாட்டார்கள் –
நிகர் -ஒப்பு-
த்ருணீ க்ருத விரிம்சாதி நிரங்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிந -என்னக் கடவது இறே —
எனக்காரும் நிகர் இல்லை –
எனக்கு-
எம்பெருமானார் திருவருளுக்கு இங்கனம் இலக்கான எனக்கு
அவர் ஒப்பற இருந்தார்
நான் ஆரும் நிகரில்லாத நிலையை எய்தினேன்
இருந்தவர் அருளுவாரில் ஒப்பற்றவர்
இருக்கும் சிந்தை வாய்ந்த நான் அருள் பெருவாரில் நிகர் அற்றவன்–
குற்றங்களை குணமாக கொண்டு இருந்தான்-அருவருப்பு இன்றி-ஆனந்தமாய் -வீறு கொண்டு -மூன்றிலும் நிகர் இல்லை –
ஸூ பிரதிஷ்டராய்-.அவதாரம் பிரயோஜனம் இவருள் புகுந்ததால் தான் –உச்சி உளானே போல –
ராமானுஜர் திருவடி பெற்ற பின் விபூதி எல்லாம் புல் போல நினைப்பார்கள் -தேசிகன்-
அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம்
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
அரங்கத்து அரவணைப் பள்ளியானை -4-10-10-பெரியாழ்வாரின் அறு சுவை அமுது இது-
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-என்று
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–48-
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே –ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-10 10-
மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை–5-
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–17-
உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-3-
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –திருக் குறும் தாண்டகம் –3-
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –திரு நெடும் தாண்டகம்–8-
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!––ஸ்ரீ திருவாய் மொழி––6-9-5-
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6-
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-இரண்டாம் திருவந்தாதி–28-
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —மூன்றாம் திருவந்தாதி–30–
பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்––பெரிய திருவந்தாதி–68-
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-
————-
என் தன் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற விருந்தான்-
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து –பெரியாழ்வார் -5–2–8-என்றும் –
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –5–2–10-என்றும்-
–
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு –பூதத்தார்—30-
என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த –4-
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடந்தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானைச்
சொன் முடிவு காணேன் நான்; சொல்லுவது என்? சொல்லீரே–2-5-8-
மாயப்பிரான் நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான் –8–6–4-
கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -8–6–5-
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறம் உள்ளான் –8–8–2-
———–
எனக்காரும் நிகர் இல்லையே-
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான்முகன் –51-
நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை-
எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——முதல் திருவந்தாதி–89-
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டோ?–4-5-9-
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – இராமானுஜ நூற்றந்தாதி-48 —
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply