ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –46-கூறும் சமயங்கள் ஆறும் குலைய -இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை யனுசந்தித்து அதுக்குத் தோற்றுத்
திருவடிகளிலே வணங்குகிறார்–

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டில் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகரானவர் -தம்மை-இவர்க்கு முற்றூட்டாக கொடுக்கையாலே –
அந்த உபகாரத்தை அனுசந்தித்து –
விஸ்ரப்பத்தராய் கொண்டு -துச்தர்க்கங்களாய் -கேவலம் உக்தி மாத்திர சாரங்களாய் இருக்கிற –
பாஹ்ய சமயங்கள் ஆறும் -குத்ருஷ்டி சமயங்கள் ஆறும் – அடியோடு நசிக்கும்படி பூ லோகத்தில்
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்த த்ரமிட வேதத்தை சார்த்தமாக அறிந்தவராய் -சகல திக் வ்யாபையான பிரதையை உடையவராய் –
அறிவு கேடனான நான் விச்வசிக்கும்படி -என்னுடைய-மனசிலே ஸ்தாவர பிரதிஷ்டையாக புகுந்து அருளின –
ஸ்ரீ எம்பெருமானாரை -ஆஸ்ரயிக்கிறோம் -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளிய உபகாரத்திற்கு தோற்று-அவர் திருவடிகளில் வணங்குகிறார்

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

பத உரை
கூறும் -சொல்லளவில் பேசிக் கொண்டு இருக்கும்
சமயங்கள் ஆறும் -ஆறு புற சமயங்களும்
குலைய -குலைந்து போம் படியாக
குவலயத்தே -இம் மண்ணகத்திலே
மாறன்-ஸ்ரீ நம் ஆழ்வார்
பணித்த -அருளிச் செய்த
மறை -தமிழ் வேதமாகிய திரு வாய் மொழியை
உணர்ந்தோனை-கண்டு அறிந்தவரும்
மதியிலியேன் -அறிவிலியான நான்
தேறும்படி -தெளிவுறும்படி
என் மனம் -என்னுடைய ஹ்ருதயத்தில்
புகுந்தானை -எழுந்து அருளினவரும்
திசை யனைத்தும் -எல்லாத் திக்குகளிலும்
ஏறும் -பரவுகிற
குணனை -குணம் உடைய வருமான
இராமானுசனை -எம்பெருமானாரை
இறைஞ்சினம் -வணங்கினோம்

வியாக்யானம் –
விளம்பும் ஆறு சமயமும் -ஸ்ரீ திருவாய்மொழி -4 10-9 – -என்கிறபடியே
சிலவற்றை சொல்லா நின்றால் -தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் அத்தனை போக்கி-
பிரமாண அனுகூல தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உக்தி சாரமேயாய் இருக்கிற-பாஹ்ய சமயங்கள் ஆறும்
சிதிலமாய்ப் போம்படியாக -அவ்வவ சமயங்கள் தன்னரசாக-நடத்தின இத்தேசத்திலே –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழியை-சாஷாத் கரித்து அருளினவராய் –
பிரமாண கதிகளாலே தர்சித்து விஸ்வசிக்கைக்கு உறுப்பான-ஞானமில்லாத நான்
கீழில் பாட்டில் சொன்னபடியே
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தாமே என்று விஸ்வசித்து இருக்கும்படி என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து அருளினவராய்
இப்படிகளாலே சர்வ திக்குகளிலும் பிரசித்தமான கல்யாண குணங்களை உடையரான
ஸ்ரீ எம்பெருமானரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம்–

ஊமைக்கும் திருவடி பலத்தால் -மதி இன்மையால் -கடாக்ஷ பலத்தால் திருத்தி அருளுவார் –
நம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடையவர் திருவடிகளில் சேர்த்து நமக்கும் அந்த பலம் கிட்ட பண்ணும் உபகாரகர்கள் –

கூறும் சமயங்கள் ஆறும் குலைய –
தேஹமே ஆத்மா வென்றும் -தேக பரிமாணமே ஆத்மா வென்றும் -ஷாணிக விஞ்ஞானமே ஆத்மா வென்றும் –
ஞானம் ஒன்றுமே உள்ளது என்றும் -சூன்யமே தத்துவம் என்றும் –
ப்ரஹ்மம் நிர்க்குணம் என்றும் -நிராகாரம் என்றும் -அத்வதீயம் என்றும் -அவிபூதிகம் என்றும் -நிஸ் ஸ்ரீ கம் என்றும் –
விக்ரக குணங்கள் எல்லாம் ஸ்வரூப விகாரம் என்றும் –
ப்ரஹ்மம் வ்யதிரிக்தம் எல்லாம் மித்யை என்றும் -ருத்ரன் சர்வ ஸ்மாத் பரன் என்றும் –
இப்படி பிரமாண தர்க்க அனுக்ர்ஹீ தங்கள் அன்றிக்கே -ஸ்வ ஸ்வா ஞான விஜ்ரம்பிதங்களான பிரலாபங்களை
அநேக பிரகாரமாக கத்திக் கொண்டு போருகிற பாஹ்ய குத்ருஷ்டி சமயங்களும்-சிதிலமாய் நசித்துப் போம் படி –

கூறும் சமயங்கள் ஆறும் குலைய –
விளம்புமாறு சமயமும் -என்ற ஸ்ரீ நம் ஆழ்வார் வாக்கை அடி ஒற்றி –
கூறும் சமயங்கள் ஆறும் -என்கிறார் ..வெறும் சொல் அளவில் சமயங்களே அன்றி
பிரமாணங்களுக்கும் யுக்திகளுக்கும் அனுகூலம் இல்லாதவை என்பது கருத்து .
ஆறு சமயங்கள் ஆவன -பௌத்தம் -சார்வாகம் ,நையாயிகம் -ஜைனம் -சாந்க்க்யம்-யோகம் -என்பன .

குவலயத்தே –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா -க்வசித் க்வசித் மகா பாகா த்ராமிடே
ஷூச பூரிச -தாம்ர பரணீ நதீயத்ர க்ர்தமால பயச்விநீ -காவேரி ச மகா பாகோ ப்ரதீசீச மகா நதீ-என்றும்-
ஜாயதே -என்றும் -கொண்டாடும்படி –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய -திரு அவதார பிரதேசமான பூ லோகத்திலே –
கலி யுகத்திலே -என்றபடி –

குவலயத்தே-
அவ்வாறு சமயங்களும் மேலோங்கி யிருக்கிற இந்நாட்டிலே -என்றபடி

மாறன் பணித்த –
உயர்வற உயர்நலம் உடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -உளன் சுடர் மிகு சுருதியுள் -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல்-மங்கை உறை மார்பா –
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -என்று இப்படி ஸ்ரீ நம் ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்ட –

மறை வுணர்ந்தோனை
மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும் தக்க நெறியும்-தடையாகி தொக்கியிலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் வோதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்தியல் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்டதாய்-அர்த்த பஞ்சகத்தையும் அடைவே பிரதிபாதிக்கிற ஸ்ரீ திருவாய் மொழி யாகிற
திராவிட வேதத்தை சார்த்தமாக தெளிந்து கொண்டு இருக்கை யாகிற-பரி பூர்ண ஞானத்தை உடையராய் –

மாறன் பணித்த மறை வுணர்ந்தோனை –
மாறன் பணித்த மறை-
வட மொழி மறை போலே தான் தோன்றியாய் இராமல்-ஆபிஜாத்யத்தாலே உண்டான-மேம்பாடு தோற்ற –
மாறன் பணித்த மறை-என்றார் .
மறை-
மாறன் பணித்ததாயினும் தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு தன் பொருளை மறைத்திடுதல்-பற்றி –மறை -என்கிறார் –
ரகுவர சரிதம் முநி ப்ரநீதம்-என்பது போலே மறை மாறன் பணித்தது –என்றார்

ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் -உம்மை உய்ய கொண்டு போக-.திவ்ய தேச ப்ராவண்யமே உய்ய ஒரே வழி என்றவாறு

குலைய உணர்ந்தோனை
ஸ்ரீ எம் பெருமானார் அன்புடையவர் ஆதலின் மறையை உணர்ந்தார் –
இவர் உணரவே -சமயங்கள் ஆறும் பயந்து -குலைந்து -அழிந்தன என்பார் -குலைய உணர்ந்தோனை –என்கிறார் –
குவலயத்தே என்பதைக் கூறும் சமயங்கள் என்பதோடு கூட்டினால் –
மெய்யறிவுடையதேவ லோகத்தே கூற அருகதை அற்ற சமயம் என்றது ஆயிற்று –
இனி –
குவலயத்தே பணித்த -எனக்கூட்டினால் இருள் தரும் மா ஞாலத்திலே வெளிச் சிறப்பு தோற்ற அருளிச் செய்த -என்றபடி
இனி
குவலயத்தே உணர்ந்தோனை-எனக் கூட்டினால் இந்த லோகத்திலே உணர்ந்தவர் இவர் ஒருவரே என அருமைப்பாடு தோன்றுகிறது –

திசை யனைத்தும் ஏறும் குணனை –
திக்குற்ற கீர்த்தி ராமானுசன் -இத்யாதிகளிலும் –
பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹந -இத்யாதிகளிலும் –
காதா தாதா கதானாம் -இத்யாதிகளிலும்–சொல்லுகிறபடியே -திகந்தரங்களிலே -வ்யாப்ததையான கீர்த்தியை உடையராய் –

மதியிலேன்-தேறும்படி என் மனம் புகுந்தானை –
பிரமாண கதிகளாலே தர்சித்து -விஸ்வசிக்கைக்கு உடலான-ஸ்வரூப யாதாம்ய ஞான சூன்யனாய் -சுஷ்க ஹ்ர்தயனாய் –
அவிவேகியாய் போந்த அடியேன் –
கீழ் சொன்ன பிரபாவத்தை தெளிந்து விஸ்வசிக்கும்படி அடியேனுடைய மனசிலே பிரவேசித்து –
எனக்கு வகுத்த சேஷியான –

மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தானை-
பிரமாணங்களின் போக்கைக் கொண்டு ஆராய்ந்து உண்மையான நம்பிக்கையிலே-நிற்கைக்கு உறுப்பான ஞானம் இல்லாதவன்
என்று –மதியிலியேன் -என்கிறார்
மதி -பக்திக்கும் உப லஷணம் –
தேறும்படி –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தாமே என்று நம்பும்படி என்றபடி –
அவர் புகுந்த மனம் ஆதலின் -அதனோடு சம்பந்தம் தோற்ற -என் மனம் –என்கிறார்-
இவருக்கு ப்ராப்யம் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் .-அவருக்கு பிராப்யம் இவர் மனம் போலே காணும்

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

இறைஞ்சினோமே-
அவ் உபகாரத்துக்கு-தோற்று வணங்கினோம் –
அவருடைய குணா க்ர்ஷ்டராய்க் கொண்டு காணும் இவர் அவர் திருவடிகளிலே வணங்குவது-

திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே-
இங்கனம் சமயங்கள் ஆறும் குலைய மாறன் உணர்ந்தமை -தேறும்படி என் மனம்-புகுந்தமை என்னும் குணங்கள்
திக்குகள் அனைத்திலும் பரவின -அத்தகைய நற்குணம்-வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானாரை
இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம் -என்றபடி –

பரத்வ பெருமை பேசி –ஸ்ரீ ஆழ்வாரும் -உயர்வற வுயர் நலம் சொல்லி –மதி நலம் அருளியதை நடுவில் சொல்லி-
பின்பு அயர்வறும் அதிபதி சொன்ன க்ரமம்–இவ்வளவு உயர்வானவன் தமக்குக் கொடுத்தானே -பெற்ற பேற்றைச் சொல்லி –
இதைக் கொடுத்தவன் அயர்வறும் அதிபதி
திசை அனைத்தும் கூறும் ஆறு. சமயங்கள் குலைத்தான்-நடுவில் மனசில் புகுந்தவனைச் சொன்னார் இங்கும்-
என் மனசில் புகுந்ததே பிரபாவம் என்கிறார்-எட்டு திக்கிலும் இந்த நீசன் உள்ளத்தில் புகுந்து தேறும் படி
பிராப்ய பிராபகங்கள் அருளிய குணங்களை பேசுகிறார்களாம் –
இவ் உபகாரத்துக்கு -தோற்று -வணங்கினோம்– வணங்குதலே பிராப்யம் பிராபகம் -அனுஷ்டானம் இது இறைஞ்சினோம் –
புகுந்து ஸ்தாவர பிரதிஷ்டை பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்து மன்னி கிடந்தான்–

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

திரியும் கலி யுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கித யுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே–5-2-3-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே —

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading