ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

(பரத்வத்திலே நோக்கு வேதங்களில்
ஸுலப்யத்தில் நோக்கு அருளிச் செயல்கள்
சரீரத்தால் பேறு வேதம் சொல்ல
ஆத்மாவாலும் அவனாலும் பிராட்டியாலும் பேறு –
வேத தாத்பர்யங்களான ரஹஸ்ய த்ரய அர்த்தங்களை சொல்ல வந்ததே அருளிச் செயல்கள்
வேதம் சர்வாதிகாரம் அல்ல
அருளிச் செயல்களோ ரஹஸ்ய த்ரயங்களை சொல்ல வந்தாலும் சர்வாதிகாரம் –

பெரியவர் ஆழ்வார் அருளிச் செய்த ஆழமான அர்த்தங்களை சொல்லும் பெரிய திருவந்தாதி
ஆழ்வார்களுக்கு அங்கி நம்மாழ்வார் -நம்பெருமாள் ஆதாரத்தோடு நம்மாழ்வார் என்று அபிமானிக்கப் பட்டவர்
அர்ச்சா திருமேனி -திரு முத்துச் சட்டையும் கொடுத்து அருளி நம்மாழ்வாருக்கு
நம் சடகோபனைப் பாடினாயோ எஞ்சு விஞ்சிய ஆதாரத்தோடு பேச -சடகோபர் அந்தாதி பிறந்ததே –

நஹ குலபதி வகுளாபிராமம் -ஆளவந்தார் -நம் குலபதி அன்றோ
விப்ரர்களுக்கு கோத்ர ஸூத்ர சரண குலபதிகள் -பராங்குச பரகால யதிவராதிகள்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அன்னையாய் அத்தனாய் நம்மை ஆண்டிடும் -பிரிய ஹித -வேண்டிய பிரியங்களை சொல்லி ஹித உபதேசம்
இன்ப மாரி இவர்
அருள் மாரி அங்கமான கலியன்
ஆதி சேஷன் உறங்கா புளி -5122 வருஷம் பழைய
கருட அம்சம் -மதுரகவி விபவ தசையில் சாஷாத்கரித்து
நாதமுனிகள் யோகம் மூலம் அர்ச்சா திருமேனியை சாஷாத்கரித்து
பவிஷ்யத் ஆச்சார்யர் ஆழ்வாரால் காணப் பட்டு பரகத ஸ்வீ காரம்

விசாகம் நக்ஷத்ரம் இஷ்வாகு குல நக்ஷத்ரம் -யுத்த காண்டம் நான்காம் அதிகாரம் –
அன்று தான் யுத்தம் முடிந்து இலங்கை விட்டு கிளம்பினார்கள்
திருவாய் மொழிப் பிள்ளையும் விசாகம் நக்ஷத்ரம்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி தானே இவரது அருளிச் செயல்கள் –
திருமாலவன் கவி
என் நாவில் புகுந்து தானே தன்னைப்பாடி

விஸ்வம் பரரையே பரிக்கும் பெரியவர் இவரே
நான் பெரியன் —
நீ பெரியை என்பதை யார் அறிவார்
நேமியைக் கேட்டாலும் இப்படியே சொல்வார்கள்

நமோ வாஸ யாச உதித யாச அனு உதித தஸ்யை வச -உதித்திப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுக்கும் -இன்னும் உதிக்கப்படும்
ஸ்ரீ ஸூக்திகளுக்கும் நமஸ் -வேதமே சொல்லும்
அத்ராஷீ -சஹஸ்ர -பார்த்தார் -பண்டை நான் மறை -கண்டு இவர் வாயனவாறே சர்வ உஜ்ஜீவனம் ஆனதே
வேதக் கடல் உப்பு -மேகம் பெருகின சமுத்ராம்பு -ஸர்வதா சர்வ உஜ்ஜீவனம் ஆனதே –
அது தான் தோன்றி –வேதம் தமிழ் செய்த மாறன் -ம்ருத் கடம் போல் அன்றே பொற் குடம்

சடாரி உபநிஷத் உபகான மாத்ர போகா -கண்ணி நுண் தனியன்
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

ருக்கும் 100 ஸூக்தங்கள் -திருவிருத்தம்
யஜுர் -7-காண்டம் -திருவாசிரியம்
முண்டக உபநிஷத் —87-பகுதி என்பர் -அதர்வண வேத சாம்யம் பெரிய திருவந்தாதி
சாம வேதம் -சாகை ஆயிரம் -திருவாய் மொழி

ஓம் நம -திரு விருத்தம்
நாராயணாயா -திரு வாசிரியம்
சரம ஸ்லோகம் -பெரிய திருவந்தாதி -திருவடிகளே மாம் ஏகம் -நெறி காட்டி நீக்குதியோ -கண்ணனாலேயே மனத் துக்கும் மாயத்தேன்
த்வயம் -திருவாய்மொழி -சார ஸங்க்ரஹம் தீர்க்க சரணாகதி

பா மன்னு மாறன் அடி பணிந்த- பராங்குச பாத பக்தரான -ஆழ்வாராலேயே சாஷாத்கரித்து
அருளப் பட்ட எம்பெருமானாரே -வளர்த்த இதத் தாயான –
பூதூரில் வந்து உதித்த புண்ணியனான
இதற்கும் பெருமாள் திருமொழிக்கும் தனியன் சாதித்து அருளி உள்ளார் –
தங்கும் மனம் நீ எனக்குத் தா -இவர் இடமே பிரார்த்தித்துப் பெற வேண்டுமே )

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

இது பெரிய திருவந்தாதி திவ்ய பிரபந்த தனியனாக பெரியோர்களால் அனுசந்தித்துக் கொண்டு போவதாய் இருக்கும்
(தனியனில் பெரிய திருவந்தாதி பற்றி நேராக இல்லையே
முயற்றி பதம் கொண்டே இப்படி -காலக்ஷேபத்தில் சாதித்ததை ஓராண் வழியாக உபதேசித்து அருளிச் செய்வார்கள் )
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே-என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

(நெஞ்சைப் பார்த்து நினைக்கச் சொல்லாமல் கூறச் சொல்கிறார்
எங்கள் குலசேகரன் என்றே கூறு அங்கும் –
எல்லாக் கரணங்களும் மற்றவற்றின் செயல்களையே ஆசைப்படும்
நாம் சொல்லுவோம் இராமானுசன் என்று அவர் நாமங்களையே சொல்லிக் கொண்டு போக வேண்டுமே
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )

முந்துற்ற நெஞ்சே -ஆழ்வாரை ஸமாஸ்ரயணம் செய்ய -என்னைக் காட்டியிலும் -முன் செல்லும் நெஞ்சே
முயற்றி -முயற்றி -என்று உபக்ரமித்து உள்ள இந்த திவ்ய பிரபந்தத்தை
முயற்றி -உத்ஸாகம் ப்ரயத்னம் என்றுமாம் -உத்ஸாகத்தை உள்ளத்தில் தரித்து என்றுமாம்
தரித்து -புத்தியில் தரித்து
உரைத்து-வாயாலே சொல்லி
வந்தித்து -ஆழ்வாரை வணங்கி
வாயார வாழ்த்திச் -வாய் ஓயும் வரை மங்களா ஸாஸனம் பண்ணி
(உரைத்து என்று விஷயம் சொல்லி
அடுத்து வாயார வாழ்த்தி மங்களா ஸாஸனம் பண்ணுவதே பிரதானம்
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )
முருகூரும்-தேன் பெருகும் படியான
சந்த சோலை -சந்தன மரங்களை யுடைய சோலைகளாலே
சூழ் மொய் பூம் பொருநல்-சூழப்பட்டதாய் -நீர் நிறைந்த அழகிய தாமிரபரணி நதியை யுடைய
குருகூரன் மாறன் பேர் கூறு –திரு நகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வாருடைய திரு நாமத்தை அனுசந்தித்துப் போரு

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரை கண்டால் என்னைச் சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -(ஸ்ரீ கண்ணி )–என்கிறபடியே
உத்ஸாஹத்தை யுடைத்தாய்
முயற்றி சுமந்து -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

முயற்றி தரித்து உரைத்து –
ஸ்ரீ பெரிய திருவந்தாதியை அருளிச் செய்ததை காட்டி அருளிய படி

அன்றிக்கே –
முயற்றி (என்று தொடங்கும் ) திவ்ய பிரபந்தத்தை புத்தி ஸ்திதமாம் படி தரித்து
பின்பு
வாஸிகமாக அநு சந்தித்து -என்றுமாம்

உரைத்து –
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே––ஸ்ரீ திருவாய் மொழி-6-8-1-என்றபடி –
ஸ்ரீ ஆழ்வார் போலவே
ஸ்ரீ ராமானுஜர் பிரிவாற்றாமையால் உரைத்தபடி

இட்ட மா மகிழ் மாலை தந்திடில் இந்த மாலையை எல்லாம் செம்பொத்த கொங்கை மேல் செழும்
சந்தனக் குழம்பு பொறுக்குமோ ஆழ்வாரே (ப்ரமாணத்துக்கு ஆகாரம் இல்லை )-என்றால் போலே
என் தசையைச் சொல்லி

வந்தித்து
திருவடி தொழுது

முயற்றி தரித்து உரைத்து வந்தித்து
ஞான முத்திரை -திரு மார்பை சேவித்து –
(சேஷி சேஷ பாவ ) சம்பந்த அனுசந்தானத்தோடே வந்தித்து
பிரபந்த வக்தாவானவை பிரணாமம் பண்ணி

கரு வண்ணம் முதலான அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-3–என்றால் போலே

சகல கலா பூர்ணமான சந்த்ர மண்டலம் போலே இருப்பதாய் –

ஒண் நுதல் (திரு விருத்தம் )-என்ற
ஊர்த்வ புண்ட்ர மண்டிதமான -திரு முக மண்டலத்தையும்

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

ஆட் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்––ஸ்ரீ திருவாய் மொழி-4-10-11-என்றால் போலே

மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முத்ரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது
அநந்தரம் வாயார வாழ்த்தி

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி-12-என்றால் போலேவும்

அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-39—என்றால் போலேவும்

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-84-என்றால் போலேவும்

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-5-என்றால் போலே
வாய் படைத்த பிரயோஜனம் பெற
(திவ்ய தேச யாத்திரைக்கு போவார் இடம் எனக்காகவும் சேவித்து வா என்று இந்தப் பாசுரம் சொல்லுவார்கள் )

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது

சந்த முருகூரும் சோலை சூழ்
முருகூரும் சந்த சோலை சூழ்
ஆரப் பொழில் தென் குருகை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -என்கிறபடியே
மகரந்த ப்ரவாஹத்தை யுடைய சந்தனச் சோலையாலே சூழப்பட்டு இருப்பதாய்

மொய் பூம் பொருநல் -என்கிறபடியே
மொய் பூம் பொருநல் ஆற்றை யுடைய

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் –ஸ்ரீ திரு விருத்தம் -100-
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் –ஸ்ரீ திருவாய் மொழி -4-5-11-

சம்ருத்தமாய் -ஸ ரஸமான -நிர்மல சலிலத்தை யுடைய திருப் பொருநல் தீரமான
திரு நகரி ஆழ்வார் திரு நாமத்தை சத்தை பெறும்படி சொல்லு

சடகோபன் தெரிந்துரைத்த
குருகூர் சடகோபன் -2-5-11–
நான் கூறும் கூற்றாவது இத்தனையே –ஸ்ரீ பெரிய திருவந்தாதி –46-
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்––5-9-11–
நாராயணன் நாமங்களே–5-9-10-
நாமம் பராங்குசமோ –இத்யாதி போலே
நாமம் பராங்குசன் என்னும்படியாக நாமத்தைக் கூறு
நம் மாறன் -என்ற பாடமாகில் -நம்மாழ்வார் என்று கருத்து

குருகூரன் மாறன்
குருகூர் நம் மாறன் (பாட பேதம் )
நம்மாழ்வார் என்றபடி –

பேர் கூறு –-
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே–5-4-5–
நாடு எல்லாம் கை கூப்பும் படி கூறு –
குருகூர் சடகோபன் என்றதுமே கை கூப்பி வணங்குவோம்
எண்டிசையும் அறிய இயம்புகேன் –போலே ப்ரஸித்தமாகக் கூறு

குரு பதாம்புஜம் த்யாயேத் குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத் ச அம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்ச சாரம் –

ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading