ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்வரூபம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம – ஆனந்தமயம் -ஸ்வாவாவிகம் -ஞானமயம் –
சதா ஏக ரூபம் -அவிகாராய ரூபாயா -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அகில ஹேய ப்ரத்யநீக-கல்யாணைக ஸ்வரூபன்
ரூபம் -திவ்ய மங்கள விக்ரஹம் –
ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த்யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-
ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில் பற்று இல்லாத நிலையாலும்
பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –
———————————-
ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-
ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம்-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன
———————————————————
அசக்த்யா லோக ரஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-
உலகோரை ரஷிக்கும் பொருட்டு (3-26-வரை)-முக்குணங்களால் தூண்டப பட்டு செய்கிறோம் என்ற எண்ணத்துடன் –
பகவான் நியமிக்க -இவை தூண்ட
அடுத்த நிலை –பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் -கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றவாறு –
லோக ரக்ஷணத்துக்காக -இந்திரியங்களை அடக்க முடியாதவர்க்கு கர்ம யோகம் -என்றவாறு –
பழகியது -சுலபம் -நழுவாதது -ஞான யோகியும் கர்ம யோகம் சரீரம் நிலைக்க -பல காரணங்கள் சொல்லி —
————–
அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர் ஜநார்தந.–
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ—৷৷3.1৷-
அர்ஜுந உவாச = அர்ஜுன் கேட்கிறான்
ஜ்யாயஸீ = உயர்ந்தவனே
சேத் = அப்படியானால்
கர்மணா = காரியம் செய்வதுதான்
தே = உன்
மத = எண்ணம் என்றால்
புத்தி = புத்தி, ஞானம், அறிவு
ஜனார்த்தன = ஜனார்தனனே
தத் = அது
கிம் = ஏன்
கர்மணி = கர்மம் செய்வதில்
கோரே = கோரமான
மாம் = நீ
நியோஜயஸி =என்னை ஈடுபடுத்துகிறாய்
கேஸ²வ = கேசவா
ஞான யோகம் கர்ம யோகம் விட உயர்ந்தது என்பாய் ஆனால் -கோரமான கர்ம யோகத்தில் எதற்கு தள்ளுகிறாய் –
அவனுக்கு யுத்தம் தானே ஷத்ரியன்-அந்தணர் பஞ்ச கால பராயணர் -போலே –
ஜனார்த்தனன் -கேசவன் -இரண்டு திரு நாமங்கள் -ஜனங்களுக்கு நல்லதே செய்பவன் -பிறப்பை அறுத்து –
கேசவன் -ப்ரஹ்மாதிகள் ஸ்வாமி -சிலர் வாழ சிலர் தாழ -சிலர் மடிய காரணம் தள்ளலாமோ –
அணுவிலும் அணு-பரமாத்மா -ஸ்தூலா நியாயம் -அருந்ததி -சரீரம் சொல்லி -ஜீவாத்மா சொல்லி -பரமாத்மாவை காட்டி –
வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே—
ததேகம் வத நிஷ்சத்ய யேந ஷ்ரேயோஹமாப்நுயாம்—৷৷3.2৷৷
புத்தி குழம்பி -ஏத்தி –ஸ்ரேயஸ் கொடுக்குமோ அத்தை சொல்லு
சாங்க்ய யோகம் —அத்யாயம் -2-ஸ்லோகம் -49- சில நினைவுகள் உடன் கூடிய கர்ம யோகமே சிறந்தது என்றதே
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தநஞ்ஜய.–
புத்தௌ ஷரணமந்விச்ச கரிபணா பலஹேதவ—৷৷2.49৷৷
தரித்ரர்கள் -தாழ்ந்த பலத்துக்காக பண்ணுபவர்கள் –
தியாக புத்தி உடன் செய்யும் கர்ம யோகமே உயர்ந்தது என்றவாறு –
புத்தியில் புகலிடமாக ஆஸ்ரயிப்பாய் -புத்தியை முதலில் சம்பாதித்து கொள் என்றவாறு
கர்மங்களைச் சொன்னபடி செய்தால் ஆத்மாவின் நினைவு நிலையாய் வரும் -அதனால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டும்
இடைவிடாத நினைவே சாஷாத்காரத்துக்கு உதவுமே
இடைவிடாமல் ஆத்மாவை நினைக்கும் காலத்தில் வேறு விஷயம் தோன்றாதே –
ஒரு விஷயமும் தோன்றாமல் இருந்தால் தானே ஆத்ம சாஷாத்காரம் கிட்டும் –
எல்லா விஷயங்களையும் கவனித்தால் தானே கர்மம் செய்ய முடியும்
ஒன்றையும் கவனியாமல் இருந்தால் சாஷாத்காரத்துக்கு உதவும் படி எப்படி கர்மங்களைச் செய்ய முடியும்
எல்லா இந்திரியங்களுக்கு வேலை கொடுக்கும் கர்மங்களைச் செய்வது ஆத்மாவை சாஷாத்காரத்துக்கு இடைஞ்சலாக அன்றோ இருக்கும்
நீர் குழம்பும் படி அருளிச் செய்ய மாட்டீர் எனது புத்தி குறைவால் நான் குழம்பி உள்ளேன்
சந்தேகம் தீர்ந்து தெளிவு பெற -இது தான் நீ செய்ய வேண்டியது -செய்து க்ஷேமம் அடைவாய் –
என்று அருளிச் செய்ய வேண்டும் என்கிறான்
——
ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—
ஜ்ஞாநயோகேந ஸாம் க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்—৷৷3.3৷৷
இரண்டு பாதைகள் -முன்னாடியே சொல்லி உள்ளேன் -கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் –
மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்
சர்வஞ்ஞன் -சர்வ சக்தன் பிராப்தன் பூர்ணன் -கருணையால் சொன்னேன் -லோகே –லோகோ பின்ன ருசி –
கர்ம யோகத்தால் பலன் -ஞான யோகத்தை விடலாம்
இந்திரியங்களை அடக்க முடியாதவனுக்கு கர்ம யோகம் -என்றும் -அடக்கியவனுக்கு ஞான யோகமும்
நான் முன்பு சொன்னதை நீ கவனிக்க வில்லை -இங்கு அனைவரும் ஓன்று போலே சக்தி உள்ளவர்கள் இல்லையே
மோக்ஷத்தில் ஆசை வந்த உடனே ஞான யோகம் செய்ய முடியாதே –
கர்மங்களை -அவற்றின் பலன் இல்லாமல் -பகவத் பிரீதி யர்த்தத்துக்காகவே செய்யவே அவன் திரு உள்ளம் புகுந்து –
ரஜஸ்ஸு தமஸ்ஸுக்களைப் போக்கி -இந்திரியங்களை மற்ற விஷயங்களில் போகாமல் அடக்கி
ஆத்மாவின் நினைவு நிலையாய் நிற்கும்படி செய்வான்
இப்படி மனஸு அடங்கின பின்பு தான் ஆத்மாவை நினைத்து -இடைவிடாமல் நினைத்து இருந்து
பின்பு – சாஷாத்காரம் கிட்டும்
ஆகையால் இந்திரியங்கள் அடங்கினவர்களுக்கு ஞான யோகமும் –
அடங்காதவர்களுக்கு கர்ம யோகமும் என்று பிரித்தே முன்பு சொன்னேன்
இந்திரியங்களை அடக்க அவை உதவும் -இடைஞ்சல் அல்ல -நீ கர்மங்களைச் செய்யா விடில் மனஸு அடங்காது –
ஞான யோகம் உன்னால் செய்ய முடியாது –
பலன்களில் ஆசை இல்லாமல் -பகவத் ப்ரீத்யர்த்தத்துக்காகவே என்று எண்ணி செய்வதால் திரு உள்ளம் உகந்து
மனசின் கலக்கத்தை போக்கி அருளுவார் என்று -2-47-என்றும் மீண்டும் -18-46-என்று அருளி மேலே -2-55-தொடங்கி
நான்கு ஸ்லோகங்களால் -ஞானயோகத்தை செய்வதை அருளிச் செய்கிறான் –
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்மபல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் –கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை -கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் – மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-
ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோ கதாந்.–
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷
வசீகரம் -கடைசி நிலை -சர்வ ஆசைகளையும் விட்டு -ஆத்ம சாஷாத்காரம் தவிர –
மனசால் ஆத்மா இடமே செலுத்தி ஸந்தோஷம் அடைகிறான்
துகேஷ்வநுத் விக்நமநா ஸுகேஷு விகதஸ்பரிஹ-
வீத ராக பய க்ரோத ஸ்திததீர் முநிருச்யதே–৷৷2.56৷৷
ஏகேந்த்ரம் -மனன சீலன் முனி -ஆத்மா இடமே மனசை செலுத்தி -துக்கம் வந்தால் கலங்காமல் -சுகம் வந்தால் மகிழாமல் —
கீழே சுகம் துக்கம் -இங்கு சுக காரணம் -துக்க காரணம் –
ராகம் பயம் க்ரோதம் மூன்றையும் விட்டு –
அநாகதேஷூ ஸ்ப்ருஹ ராகம் -வர போகும் நல்லது பற்றி இனம் புரியாத ஆசை வருமே அது தான் ராகம்
பிரிய விஸ்லேஷம் அப்ரிய ஆகாத —பயம் முதல் நிலை -அப்புறம் துக்கம் –எதிர்பார்க்கும் நிலையில் –
க்ரோதம் -பயம் -வந்து -செய்யும் செயல்கள் தானே -ஆசை மாறி கோபம் -ஆசை இருந்தால் தானே கோபம் வரும் –
ய ஸர்வத்ராநபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய ஷுபாஷுபம்.–
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—–৷৷2.57৷
வ்யதிரேகம் -ஆசையை திருப்புவது –இவன் தான் ஞான யோகி -எங்கும் இருந்து -ஆசை காட்டாமல் உதாசீனனாக -பற்று அற்று –
ஸூபம் அஸூபம் -இன்பமோ துன்பமோ படாமல் -பக்குவப்பட்டு -புகழுவதும் இகழுவதும் இல்லாமல்
யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஷ–
இந்த்ரியாணீந் த்ரியார்தேப் யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா–அவனுடைய ஞானம் நிலை பெற்றது -மீண்டும் மீண்டும் வரும் –
ஆமை -போலே சுருக்கிக் கொண்டு -விஷயங்களில் இருந்து
இந்திரியங்களை இழுத்து –பகவத் விஷயம் மட்டுமே -கண்டு பேசி கேட்டு -சப்த்தாதிகளில் இருந்து இழுத்து –
அப்பொழுது தான் மனசை ஆத்மா இடம் செலுத்த முடியும் —
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.
ரஸ வர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் -ரசம் ஆசை தவிர விஷயங்கள் –
சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் -ஆசை கூட ஆத்மா சாஷாத்காரம் வந்தால் போகும் –
விஷயங்கள் ஆசையை தவிர விலகி போகும் -அதுவும் போகும்
———–
ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோஷ்நுதே—-
ந ச ஸம் ந்யஸநாதேவ ஸம்த்திம் ஸமதிகச்சதி—৷৷3.4৷৷
நேராக ஞான யோகம் போக முடியாது -தொடங்கி பாதியில் விட்டாலும் ஞான யோகம் சித்திக்காது –
யுத்தம் -நேராக சொல்லாமல் கர்ம யோகம் –
நைஷ்கர்ம்யம் -செய்யாமல் இருக்கும் ஞான யோகம் -சன்யாசம் -விடுவது -அர்த்தித்தவம் ஆசை -வேன்டும் –
ஆசை இருந்தாலும் சக்தியும் வேன்டும் -வஸ்துவை அடைய ஆசையும் சக்தியும் வேண்டுமே –
மோக்ஷ ஆசை வந்த உடனே கர்மயோகம் பண்ணாமல் ஞான யோகம் பண்ண முடியாதே –
ஸாஸ்த்ர யுக்தமான கர்மங்களைச் செய்யாமலும் ஆரம்பித்த கர்மங்களை நிறுத்தியும் ஞான யோகம் செய்ய முடியாதே
பகவத் ப்ரீத்யர்த்தம் ஒன்றையே குறித்து கர்மங்களைச் செய்து அவனை சந்தோஷப்படுத்தா விடில்
நெடுநாளாக ஆர்ஜித்த பாப சமூகங்கள் போகாதே -போனால் ஒழிய ஆத்மா நினைவு வராதே
ஆகையால் கர்மயோகம் செய்யாவிடில் மனம் தெரியாது ஞான யோகம் பண்ண முடியாதே
———–
ந ஹி கஷ்சத் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்மகரித்—
கார்யதே ஹ்யவஷ- கர்ம ஸர்வ-ப்ரகரிதிஜைர் குணை—৷৷3.5৷৷
ஓர் வினாடி யாவது கர்ம யோகம் இல்லாமல் சம்சாரி வாழவே முடியாதே -தூங்குபவனும் –தூங்குவதும் கர்மா தான் –
தூங்கினால் தான் புத்தி கூர்மை
இந்திரியங்கள் பின்பு – பிராணன் உண்டே தூங்கும் பொழுதும் -தெரியாமல் கார்யம் தானே நடந்து கொண்டே இருக்கும் –
கர்ம யோகம் தான் பழகி-பிறந்த குழந்தை அழுகிறதே -சன்யாசிகளும் விடாமல் செய்கிறார்கள் –
முக்குண வஸ்யர் -சத்வம் வெளுப்பு -ரஜஸ் தமஸ்–
முக்குணங்களும் இவனை இழுத்துக் கொண்டு போய் தங்கள் தங்கள் கார்யங்களைச் செய்யத் தூண்டும்
எனவே கர்மங்களை செய்து நெடுநாள் வருகிற பாபங்களைப் போக்கி குணங்களை வசப்படுத்திக் கொண்டு
மனசு தெளிந்தவனுக்குத் தான் ஞான யோகம் செய்ய முடியும் –
————
கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷
நிந்தை -மனசை அடக்காமல் -இந்திரியங்களை மட்டும் அடக்கி பொய் ஆசாரம் -மூன்றும் –
சாஸ்த்ர ஸம்மதம் -படி இருக்க வேன்டும் -ஆர்ஜவ குணம்
அவிநிஷ்ட பாபதயா-பூர்வ ஜென்ம பாபங்கள் -அஜித பாஹ்ய அந்தக்கரண —
உள் இந்திரியங்களும் வெளி இந்திரியங்களும் வெல்லப்படாமல் இருக்குமே
கர்ம யோகத்தைச் செய்யாமல் -ஞான யோகம் செய்ய வேணும் என்று ஆரம்பித்தவன் அந்த எண்ணத்துக்குத் தப்பாக நடக்கிறான்
கர்மயோகம் செய்யாமல் பாபங்கள் போகாது -பாபங்கள் போகாமல் இந்திரியங்கள் அடங்காது -இந்திரியங்கள் விஷயங்களில் போகும் –
ஆகையால் அப்படிப்பட்டவன் ஆத்மாவை நினைக்க ஆரம்பித்தால்-மனசு நெடுநாளாக விஷயங்களிலேயே
ஆழ்ந்து இருக்கிறபடியால் ஆத்மாவில் செல்லாமல் விஷயங்களையே நினைத்துக் கொண்டு இருப்பன்
ஆத்மாவை நினைக்க ஆரம்பித்து விஷயங்களை நினைக்கிறபடியால் எண்ணத்துக்கு விரோதமாக நடக்கிறான்
நினைத்தது ஓன்று செய்கிறது ஓன்று -இப்படி இருப்பதும் கூட அறியாமல் ஆத்ம சாஷாத்காரத்துக்கு
இடைஞ்சலாக வேலையைச் செய்வதால் ஆசைப்பட்ட பிரயோஜனத்தை அடைய மாட்டான்
—————–
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந.–
கர்மேந்த்ரியை கர்மயோகமஸக்த ஸ விஷிஷ்யதே–৷৷3.7৷৷
புத்தி சாரதி – மனஸ் கடிவாளம் -அடங்கினால் தானே -இந்திரியங்கள் அடங்கும் –
கர்ம யோகம் ஆரம்பித்து -பற்று இல்லாமல் தொடங்கினால்-ஞான யோகி விட சிறந்தவன் –
பள்ள மடை -இதுவே -போகும் வழியில் போனால் திரும்ப கொண்டு வரலாமே -கண் பார்க்கட்டும் -வரையறைக்கு உள்பட்டு
பல காரணங்கள் -பழக்கம் சுலபம் ஞான யோகிக்கும் விட முடியாதே –
பல சொல்லி -மேலே கேட்ட கேள்விக்கு பதில் அடுத்து -நேராக அருளிச் செய்கிறான்
இந்திரியங்களுக்கு விஷயங்களில் போவதே வழக்கம் -அத்தை திடீர் என்று நிறுத்த முடியாதே –
அவைகள் இயற்கையாகவே வேலைகளில் படிந்து இருக்கின்றன -அவைகளை முன் செய்து பழகின வேலைகள் போன்ற
ஸாஸ்த்ர யுக்த கர்மங்களிலே செலுத்தி -ஆத்ம சாஷாத்காரத்தில் உள்ள ஆசையுடன் உள்ள மனசோடு –
கெட்ட கர்மங்களில் போகாமல் தடுத்து கீழே சொன்னபடி பலன்களில் ஆசை இல்லாமல் கர்ம யோகம்
செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு ஒரு கெடுதியும் நேராது -ஆரம்பித்த கர்மமும் ஒரு நாளும் நிற்காது –
ஆகையால் ஞான யோகம் செய்பவனைக் காட்டிலும் அவன் உயர்ந்தவன்
இரு கரையும் ஒத்துப் போகிற வெள்ளத்தில் நீந்தி அக்கரை போகிறவன் போலே ஞான யோகம் செய்பவன்
பாலம் சுற்றிப் போகிறவன் போலே கர்ம யோகம் செய்கிறவன்
நீந்துகிறவன் நடுவில் கை சளைத்தால் தொந்தரவு -மற்றவனுக்கு அது இல்லையே
———————–
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–.
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷
கர்மத்தை நியதமாக செய் – உயர்ந்தது ஞான யோகத்தை விட -கேள்வியில் உள்ள சப்தம் ஜ்யாயோக –
சக்தி இருந்தாலும் கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேன்டும் –
நழுவவே நழுவாது கர்ம யோகம் – விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் அடுத்த ஜன்மாவில் –
ஞான யோகம் அப்படி இல்லை -சரீர யாத்ரைக்கும் இது வேன்டும்
சரீரம் தேகம் வாசி உண்டே – இளைத்து கொண்டு போவது சரீரம் –வளரும் உடம்பு தேகம்
இங்கு சரீர யாத்திரை -இளைத்து போகும் சந்யாசிக்கும் கர்ம யோகம் விட முடியாதே -என்கிறான்
சாதனத்தால் தான் ஆத்ம சாஷாத்காரம் –பிராணன் போனால் கிடைக்காது -அடுத்த ஜன்மா தான் கிடைக்கும்
சரீர யாத்திரை நம் கையில் இல்லையே -நின்றனர் இருந்தனர் –இத்யாதி எல்லாம் அவன் அதீனம் தானே
நியத கர்மா ஒரு வகை –அநியத கர்மா வேறு வகை
அவன் தூண்ட நாம் செய்கிறோம் என்ற நினைவால் செய்ய வேன்டும் -விநயம் உடன் இருக்க வேன்டும் –
முதலில் ஞான யோகம் செய்ய முடியாது -கர்ம யோகம் தான் செய்ய முடியும் என்றும்
கர்ம யோகத்தில் கெடுதி கிடையாது என்றும் சொல்லப்பட்டது –
இப்போது ஞான யோகம் செய்யத் தகுந்தவனும் -கர்ம யோகம் செய்வது லகுவாய் இருப்பதாலும் –
கெடுதி இல்லாமையாலும் -அவனுக்கு கர்மங்களை விட முடியாதாகையாலும் -கர்ம யோகத்தையே செய்ய வேணும் என்கிறார் –
உடம்போடு கூடி இருப்பவனுக்கு வேலை செய்வது வழக்கம் -பந்து அடிப்பதும் யாகம் செய்வதும் இந்திரியங்கள் வேலை –
அத்தை லகுவாக செய்யலாம் -நிற்காமல் நடக்கும்
த்யானம் -பழக்கம் இல்லை -செய்வது வருத்தம் -முழுக்க நடக்காது -எனவே தியானத்தை விட கர்மமே உயர்ந்தது —
கர்மத்தையே நீ செய் –கர்மங்களைச் செய்யும் போது ஆத்மாவை உள்ளபடி அறிந்து செய்ய வேண்டியதால்
நான் செய்யவில்லை என்கிற எண்ணம் இருக்க வேணும் என்று மேலே சொல்லப்படுகிறது –
அதாவது ஸம்ஸாரிகளின் வேலைகளைச் செய்வது ஆத்மாவுக்கு ஸ்வபாவம் இல்லை
உடம்போடு சேர்ந்து இருப்பதாலே செய்கிறான் -இப்படி நினைப்பதால் ஆத்மாவின் நினைவும் கர்மத்தில் அடங்கி இருக்கிறது –
பரம புருஷ ஆராதன விஷயஸ்ய கர்மண -ஸ்ரீ ராமானுஜர் -கடமைகளை செய்வதே ஆராதனம் -duty is worship
இந்த காரணத்தாலும் கர்ம யோகமே சிறந்தது -இதற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது –
உடம்பை வைத்துக் கொண்டு தானே ஞான யோகமும் செய்ய வேண்டும் -சாப்பிட்டால் தானே உடம்பு நிற்கும் –
ப்ரஹ்ம யஜ்ஜம் தேவ யஜ்ஜம் பித்ரு யஜ்ஜம் மனுஷ்ய யஜ்ஜம் பூத யஜ்ஜம் செய்து மிகுதியாக உள்ளவற்றை
உண்ண வேண்டும் -ஆகாரம் கெட்டுப் போனால் மனமும் கெட்டப் போகும் -மனசு கெட்டால் நல்ல நினைவும் வராது
மஹா யஜ்ஜ்ங்களைப் பண்ணாமல் உண்டால் பாபங்களை சாப்பிடுகிறான் என்று மேலே சொல்லப்படும்
ஆகையால் ஞான யோகம் செய்பவனுக்கு கர்மங்களை விட முடியாது –
ஆகையால் ஞான யோகம் செய்யத் தகுந்தவனும் இந்தக் காரணங்களால் கர்ம யோகத்தைச் செய்ய வேண்டும் –
—————————
யஜ்ஞார்தாத் கர்மணோந்யத்ர லோகோயம் கர்ம பந்தந–
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த சங்க ஸமாசர—৷৷3.9৷৷
கர்மா செய்ய செய்ய பாபங்களும் வருமே என்ன –
யஞ்ஞார்த்தமாக -ஆத்ம சாஷாத்காரம் -பற்று அற்ற கர்மா செய்தால் -பாபங்கள் கிட்டாது –
இதை தவிர மற்ற கர்மாக்கள் தாழ்வு -என்றவாறு -பலத்தை பொறுத்தே -உயர்ந்த அல்லது தாழ்ந்த கர்மா ஆகும்
வர்ணாஸ்ரம தர்மம் -சாஸ்த்ர சம்மத கர்மாக்கள் – பற்று அற்ற -சாஷாத்காரம் பலன் என்ற எண்ணம் வேன்டும் –
கர்மங்களைச் செய்ய வேணுமானால் பணம் சம்பாதிப்பது போன்றவற்றைச் செய்ய வேணுமே –
நான் கெட்டிக்காரன் பணம் என்னுடையது போன்ற கெட்ட எண்ணங்கள் வருமே -அதனால் மனம் கலங்குமே –
மோக்ஷம் வேணும் என்ற ஆசைப் பட்டவனுக்கும் கர்மங்களினுடைய வாசனையினாலே மேன்மேலும் சம்சாரம் தொடர்ந்து வருமே –
முன்னால் உண்டான வாசனை ஒழியாதே- இப்போது செய்கிற செயல்களால் அது வலுப்படும் என்றால்
யஜ்ஜாதி ஸாஸ்த்ர உசித கர்மங்களுக்கு பணம் சம்பாதிப்பது போன்ற செயல்களைச் செய்தால் புது வாசனை உண்டாகாது –
முன் வாசனையும் வலுப்படாது
பகவான் திரு உள்ள உகப்பே ஸூகத்துக்கு காரணம் -இந்த வேலைகள் அவன் திரு உள்ளத்தில் உகப்பை ஏற்படுத்துவதால்
எல்லையற்ற ஸூகத்தைக் கொடுக்கும் ஒழிய கெட்ட வாசனைகளை உண்டாக்காதே
விஷயாந்தரங்களுக்காக பணம் சம்பாதித்தால் தான் கெடுதி உண்டாக்கும்
ஆகையால் யஜ்ஜ்ங்களுக்காக வேலைகளைச் செய் -செய்யும் போது பகவத் பிரீதி உண்டாகும் –
அந்த வேலைகளே இதுக்கு பிரயோஜனம் -எனக்கு அல்ல என்ற எண்ணத்துடன் செய்
இதனால் அவன் ப்ரீதி அடைந்து -நீண்ட நாளாக உள்ள கர்ம வாசனையைப் போக்கி உன்னை
ஆத்மாவை உள்ளபடி பார்க்கும்படி செய்வான் –
————–
ஸஹயஜ்ஞா ப்ரஜா ஸரிஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி–
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்ட காமதுக்—-৷৷3.10৷৷
ஸஹயஜ்ஞா: = வேள்வியுடன்
ப்ரஜா: = மனித குலம்
ஸ்ருஷ்ட்வா = வெளிப்பட்டு
புரோ = முன்பு
உவாச = கூறினான்
ப்ரஜாபதி:| = பிரமன்
அநேந = இதன் மூலம்
ப்ரஸவிஷ்யத்வம் = நீங்கள் பெருகி வளர வேண்டும்
இஷா = அது
வ = உங்கள்
அஸ்து = இருக்க வேண்டும்
இஷ்டகாமதுக்= உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தரும் காமதேனுவாய் இருக்கும்
மேலே எழு ஸ்லோகங்களில் -யஞ்ஞத்துக்கு சொல்லி வைத்த கர்மங்கள்
பிரஜாபதி -பர ப்ரஹ்மம் -என்றவாறு இங்கு பொருள் என்று இவ்வுலகம் படைத்து -சோம்பாது –
இதுவே பயன் -அதே பயனுக்கு வாழ்தல் சிரமம் இருக்காதே -ஒரே கோணம் ஆகுமே
யாகங்கள் செய்து இஷ்டமான காமங்கள் பெற்று கொள்ளலாம் –
தேவர்கள் உதவுவார் -வருண ஜபம் விராட பர்வம் வாசித்தால் மழை பெய்யும் -என்பர் –சகல வேத அந்தராத்மா பர ப்ரஹ்மம்
ஆனந்தம் பட்டு பலன் -இதை நினைத்து பண்ணினால் கர்ம யோகம் ஆகும்
எந்த புருஷார்த்தத்தை விரும்புகிறவனும் மஹா யஜ்ஜ்ங்களை செய்து மிகுந்த ஆஹாரத்தையே தான் சாப்பிட வேணும்
அப்படிச் செய்யாமல் சாப்பிட்டு உடம்பை வளர்க்கிறவனுக்கு தோஷம் தான் உண்டு –
பிராகிருத பிரளயத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் -சேதன அசேதன வாசி இல்லாமல்
ஸூஷ்மமாக அவன் இடம் ஒட்டிக் கொண்டு இருக்கும்
ஜீவாத்மாவுக்கு -கர்மங்கள் இருக்கும் வரையில் ஞானம் இந்த்ரியத்வாரா சென்று வஸ்துக்களை அறிகிறான்
கர்மங்கள் அடியோடு விட்டு மோக்ஷ தசையில் தான் இந்திரியங்கள் இல்லாமலே விஷயங்களில் பரவும்
பரம காருணிகன் ஆகையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளி -தனது ப்ரீத்யர்த்தமாக யஜ்ஜாதிகளைப் பண்ணி
இந்த கர்மங்களால் நீங்கள் மோக்ஷம் அடையலாம் –
இந்த யஜ்ஜ்ங்கள் மோக்ஷத்தையும் அதுக்கு உதவியாக வஸ்துக்களையும் வேண்டியபடி கொடுக்கும் –
எல்லா தேவதைகளையும் உள்ளிருந்து நியமிப்பவன் தானே என்று –
பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —-7-20-ஸ்லோகம் தொடங்கி
நான்கு ஸ்லோகங்களில் மேலே அருளிச் செய்கிறான்
காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்ய தே₃வதா:|–
தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—20-
ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக் குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக்கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.
ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –
மந்தி பாய் – கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –
யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிது மிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-
ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடுஅர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-
அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் –
அப்படி இல்லாதவர்க்கும் – அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் –
நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –
ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதந மீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து
சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –
அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்பமேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வயஜோ யாந்தி மத் ப₄க்தா யாந்தி மாமபி॥—23-
யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-
என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் –
மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம் எல்லாமே கிடைத்ததாகுமே –
அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்க்கி இருந்து – அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் –
பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —
————
தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ–
பரஸ்பரம் பாவயந்த ஷ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷
தேவாந் = தேவர்கள் , தெய்வீகத் தன்மை
பாவயதா = வெளிப்படும்படி
அநேந = அதன் மூலம்
தே = அவர்கள்
தேவா = தேவர்கள், தெய்வீக தன்மை
பாவயந்து = செயல் பட்டு
வ: = உங்களுக்கு
பரஸ்பரம் = ஒருவர்க்கு ஒருவர்
பாவயந்த: = உதவி
ஸ்ரேய: = உயர்நிலை, சிறப்பு நிலை
பரம = இறுதி நிலை, உன்னத நிலை
வாப்ஸ்யத = வாய்க்கப் பெறுவீர்கள்
தேவர்கள் -மழை கொடுப்பர் –ஹவிஸ் வாங்கி –பர்ஜன்ய தேவதை –
பரஸ்பரம் நல்லது செய்து கொண்டு ஸ்ரேயஸ் அடையலாம் –
தானே செய்ததாக சொல்லாமல் பிரஜாபதி -என்கிறான் –
ஆட்டு வாணியன் இல்லையே -சேதனன் சாஸ்திரம் அறிந்து செய்வான் –
யஜ்ஜம் -செய்தது வேறு காலத்தில் எப்படி பலனைக் கொடுக்கும் -ஞானத்தால் மோக்ஷம் என்பதால் –
ஸ்வர்க்காதிகளைக் கொடுக்கும் யஜ்ஜ்ங்களால் எப்படி மோக்ஷம் பெறலாம் –
சம்சாரிகள் வேண்டுகிற மோக்ஷ வ்யதிரிக்த பலங்களால் எவ்வாறு மோக்ஷம் பெறலாம் –
இவைகள் இடைஞ்சல்கள் அன்றோ -இவற்றுக்குப் பதில் இதில்
எனக்கு உடம்பாக தேவதைகளை இந்த யஜ்ஜ்ங்களினால் மகிழ்விக்க —
அவர்கள் மேலும் மகிழ வேண்டிய எல்லாவற்றையும் உங்களுக்கு கொடுப்பார்கள் –
இப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு மோக்ஷமாகிற உயர்ந்த புருஷார்த்தை பெறுங்கோள்
—————-
இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா–
தைர்தத்தாந ப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷
இஷ்டாந் = வணங்கத்தக்க
போகாந் = போகங்களை
ஹி = அதனால்
வோ = உங்களுக்கு
தேவா = தேவர்கள்
தாஸ்யந்தே = தருவார்கள்
யஜ்ஞபாவிதா = யாகத்தில்
தைஹ் = அவர்களால்
தத்தா = தரப்பட்டவை
அப்ரதாயை = தராமல்
ப்யோ = அவர்களுக்கு
யோ = எவன்
புங்க்தே = அனுபவிக்கிறானோ
ஸ்தேந = திருடன்
ஏவ = நிச்சயமாக
ஸ: = அவன்
தனக்காக பயன் படுத்தி -தேவர்களுக்கு கொடுக்காமல் -இவன் தான் பெரிய திருடன் –
திருடு என்பது -ஒருவன் உடையதாய் -அவனது சுகத்துக்காகவே ஏற்பட்ட வஸ்துவை –
யாதொரு சம்பந்தம் இல்லாத இன்னொருவன் தன்னுடையது என்று எண்ணி உபயோகப்படுத்திக் கொள்வது போலே –
கீழ்ச் சொன்னபடி எனது உடம்பாக தேவதைகளை சந்தோஷப்படுத்தாமல் இருந்தால்
மோக்ஷம் ஸித்திக்காது மட்டும் இல்லை நரகம் ஸித்திக்கும்
—————–
யஜ்ஞ ஷிஷ்டாஷிந ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை-.
புஞ்ஜதே தே த்வகம் பாபாயே பசந்த்யாத்ம காரணாத்—৷৷3.13৷৷
யஜ்ஞஸிஷ்டாஸிந: = யாகத்தின் மீதியை
ஸந்தோ முச்யந்தே = உண்மையான, சந்யாசிகள்
ஸர்வகில்பிஷை:= அனைத்து பாவங்களிலும் இருந்து
புஞ்ஜதே = உண்கிறார்கள்
தே = அவர்கள்
து = அப்புறம்
அகஹம் = பாவம், துன்பம்
பாபா = பாவம் செய்பவர்கள்
யே = அவர்கள்
பசந்த்தி = அவர்கள் சமைக்கிறார்கள்
அத்மகாரணாத் = தங்களுக்காக
திருவாராதனம் பண்ணி -சேஷம் உண்பவன் -பாபம் போக்கி -இல்லாமல் இருந்தால் -உண்பது பாபங்களையே
இந்திராதி ஆத்மனா அவஸ்திதா பரம புருஷ ஆராதனம் –
அத்தையே விவரிக்கிறார் -இந்திராதி தேவதைகளுக்கு ஆத்மாவாய் இருக்கும் பகவத் ப்ரீத்யர்த்தமாகவே த்ரவ்யங்களை
அடைந்து சமைத்து கண்டு அருளிப் பண்ணி மிச்சம் உண்டு உடம்பை வளர்ப்பவர்களுக்கு
ஆத்ம சாஷாத்கார பிரதிபந்தங்களைப் போக்கி அருளுகிறார்
தங்கள் சுகத்துக்காகவே என்று சமைத்து உண்ணுவார்கள் பாபத்தையே உண்கிறார்கள் —
ஆத்ம சாஷாத்காரம் பற்றி யார் உபதேசித்தாலும் அவர்கள் மேல் கோபிப்பார்கள் –
நரகம் போவதற்காகவே இருக்கிறார்கள்
—————–
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ–
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்மஸமுத்பவ—৷৷3.14৷৷
அந்நாத் = உணவு
பவந்தி = இருக்கிறது
பூதாநி = உயிர்களுக்கு
பர்ஜந் = மழையின் மூலம்
அதந்நஸம்பவ: = உணவு சம்பவிக்கிறது; உருவாகிறது
யஜ்ஞாத் = வேள்வியினால்
பவதி = இருக்கிறது
பர்ஜந்யோ = மழையின்ய மூலம்
யாங்கய = வேள்வியின் மூலம்
கர்மஸமுத்பவ: = கர்மத்தை செய்வதால் உண்டாகிறது
அன்னத்தால் பூதங்கள் வாழலாம் -இங்கு சுழல் ஒன்றை அருளிச் செய்கிறான் –
பர்ஜன்யம் தேவதை அன்னத்துக்கு மழை
யாகங்கள் செய்தால் மழை -கர்மா தான் யாகம் -கர்மம் பண்ண சரீரம் -ஜீவாத்மா உள்ளே புகுந்து உடல் –
என்றவாறு -சக்கரம்
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்–
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—৷৷3.15৷৷
கர்ம = செயல்கள்
ப்ரஹ்மோத்பவம் = பிரம்மத்தில் இருந்து வருவது
வித்தி = என்று உணர்
ப்ரஹ்மம் = ப்ரம்மம்
அக்ஷர = அழியாத (க்ஷர என்றால் அழியக் கூடிய) =
ஸமுத்பவம்| = வெளிப்படுகிறது
தஸ்மாத் = எனவே
ஸர்வகதம் = எங்கும் நிறைந்த
ப்ரஹ்ம = பிரமம்
நித்யம் = நிரந்தரமாக இருக்கும்
யஜ்ஞே = யாகத்தில்
ப்ரதிஷ்டிதம் = நிலைத்து நிற்கிறது
சரீரம் எல்லாம் கர்மா எதிர்பார்த்து இருக்கும்
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய–
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி—৷৷3.16৷৷
ஏவம் = எனவே
ப்ரவர்திதம் சக்ரம்= ஒரு சுழற்சியில் இருக்கும்
நா = இல்லை
அனுவர்தயதி = நடக்கச் செய்தல்
இஹ = இங்கு
ய: = எவன்
அகாயு = பாவம் நிறைந்த
இந்ரிந்த்ரியாராமோ = இந்திரிய சுகங்களில்
மோகம் = ஆசை கொண்டு
பார்த = பார்த்தனே
ஸ = அவன்
ஜீவதி = வாழ்கிறான்
சக்கரம் அனுவர்த்தனம் பண்ண வேன்டும் -இல்லாதவன் வாழ்வது பாபம் -அவன் இந்த்ரியராமன் -ஆவான் –
மேலே மூன்று ஸ்லோகங்களால் கைவல்யார்த்தி பற்றி –
மறுபடியும் லோக அனுபவத்தாலும் -சாஸ்திரத்தாலும் எல்லாம் யஜ்ஜ்ங்களாலே வருகின்றன என்பதைக் காண்பித்துக் கொண்டு
யஜ்ஜ்ங்களைக் கட்டாயம் பண்ண வேண்டும் என்றும் பண்ணாவிட்டால் கெடுத்து உண்டாகும் என்றும் அருளிச் செய்கிறார்
உலகில் பிராணிகள் ஆஹாரத்தாலே தானே வளர்கின்றன -ஆஹார விருத்திக்கு மழை வேணுமே -இது ப்ரத்யக்ஷம் –
யஜ்ஜ்ங்களால் மழை என்று சாஸ்திரம் சொல்லும் -யஜ்ஜ்ங்கள் பணம் சம்பாதிப்பது போன்ற வேலைகளால் உண்டாகிறது –
அந்த வேலை உடம்பால் உண்டாகிறது -உடம்பு இல்லாவிடில் வேலையைச் செய்ய முடியாதே-
உடம்பு உண்டு தண்ணீரை குடித்து யஜ்ஜம் செய்ய ஆத்மாவுக்கு உதவிக்கிறதே –
எல்லா உடல்களும் யஜ்ஜ்ங்களால் உண்டாகின்றன -இப்படி ஒன்றால் ஓன்று சக்கரம் –
ஆத்மாவைப் பார்த்து சுகப்படாமல் இந்த்ரியங்களைப் பார்த்து சுகப்படுபவன் ரஜோ குணம் தமோ குணம் மேலிட்டு –
ஆத்மாவைப் பற்றிய பேச்சால் அலுப்பு உண்டாகி விஷயாந்தர சுகங்களையே அனுபவிக்கிறான்
ஆகையால் ஞானயோகம் முதலியவைகளை ஆரம்பித்தாலும் முறைப்படி செய்யாமல் பிரயத்தனம் வீணாகும் –
அவன் இருந்தும் பிரயோஜனம் இல்லை –
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply