ஸ்ரீ பாஷ்யம்–முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் –பத்தாவது அதிகரணம்–பிரமிதாதிகரணம் -1-3-10-

இது ஆறாவது அதிகரணமாகிற பிரமிதாதிகரணத்தின் தொடர்ச்சி –

விஷயம்
இவ்வாறு வந்த ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் குறித்த விவாதங்கள் முடிந்த பின்பு –
முன்பு கூறப்பட்ட விஷயமான அங்குஷ்டமானவானும் முக்காலத்திலும் அனைத்துக்கும் அதிபதியான
ப்ரஹ்மம் குறித்து மேலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன –

1-3-40-கம்ப நாத் –

தேவர்களுக்கு நடுக்கம் கூறப்படுவதால் -கட்டை விரல் அளவுள்ளவன் என்று கூறப்படுபவன் பரமாத்மாவே ஆவான்
அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி –கட -4-12-என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷ அந்தராத்மா -கட -6-16-என்றும் உள்ளவற்றில் நடுவே
யத் இதம் கிம் ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ரம் உத்யதம் ய ஏதத் விதுர் அம்ருதாஸ்தே பவந்தி-6-2-என்று அனைத்து லோகங்களும்
உயர்த்திப் பிடிக்கப்பட்ட வஜ்ராயுதம் போன்ற இவனைக் கண்டு நடுங்குகின்றன –
இவ்விதம் அறிபவர் மோக்ஷம் பெறுகின்றனர் -என்றும்

பயாத் அஸ்ய அக்நிஸ் தபதி பயாத் தபதி ஸூர்ய
பயாத் இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவதி பஞ்சம- கட -6-3-என்று
பயம் காரணமாகவே அக்னி சுடுகிறது -சூர்யன் காய்கிறது -இந்திரன் வாயு ஐந்தாவதான யமன்
அஞ்சி பணி செய்கிறார்கள் -என்றும்

பிருஹு
ஏதஸ்ய வா அஹரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்ய சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத -3-8-9-என்றும்

தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாத் அக்நிஸ்ச இந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம -2-8-
இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்களை – பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————

1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –

கடவல்லியில்
அங்குஷ்ட மாத்ர புருஷனை விஷயமாகக் கொண்டு கூறப்பட்ட வாக்யங்களுக்கு நடுவில்
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -5-15-என்று அவனது
தேஜஸ்ஸாலே அனைத்தும் பிரகாசிக்கின்றன

அதர்வண வேதத்தில் முண்டக உபநிஷத்தும் அவனை பரஞ்சோதி என்றும்

சாந்தோக்யமும்
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே -8-3-4-/8-12-3–என்றும்
பிருகு
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் ஆயுர் ஹோபாஸதே அம்ருதம் -4-4-16-என்றும்
ஜ்யோதிஸ்களுக்கும் ஜ்யோதிஸ்சான பரமாத்மாவை ஆயுஸாகவும் அமிர்தமாகவும் உபாசிக்கிறார்கள் என்றும்

மேலும் சாந்தோக்யம்
அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -3-13-7-என்று ஸ்வர்க்கத்தையும் கடந்து பிரகாசிக்கிறது -என்றும்

இப்படிப்பட்ட பெருமை உடைய அங்குஷ்ட மாத்ர புருஷன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-என்றதாயிற்று –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading