நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–
அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே-
அசன்நேவ -‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே,
அசத் கல்பரானவர்களை,சந்தமேநம் ததோ விது ‘ஸ்ரீ பரம்பொருள் உளன் என்று அறிவானாகில்
அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே,-உஜ்ஜீவிப்பித்து விரோதிகளையும் போக்கும். என்றது,
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே ,
ஸ்ரீ அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு
தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’
———————–
நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யசித்தாருக்கு சரீர சம்பந்தம் அறுத்துக் கொடுக்கும் என்கிறார்
தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட,
‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்;
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது.
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-
இப்பத்தும் செய்வது என்?’ என்னில்–ராஜபுத்ரனையும் -அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று,
நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்-ஸ்ரீ ஈஸ்வரனுக்கு சேஷமாய் -அடிமையாயிருக்கிற ஆத்மாவையும்,-
பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் -வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும்
தன்னிலே-பந்தித்துக் – கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.
இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;
‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஸ்ரீ ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.
‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின்,
பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச் செய்கிறார்.
ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?
இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.
———————
நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்க வல்லவர்கள்,
ஸ்ரீ ஆழ்வார் பிரார்த்தித்த படியே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட
அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-
ஒப்பில்லாத இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்.
இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு அனுரூபமான கைங்கரியத்தை
மனோ ரதித்த பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை.
‘ஸ்ரீ இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று,
எல்லாரும் புகழும்படியாக
அன்றிக்கே –
கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.
இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி,
கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்க வேண்டி ஏத்துவார்களே அன்றோ?
அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று
பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல்.
‘விசேஞ்ஞர்கள் ஏத்துதலே யன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே த்வேஷமும் கிடக்க ஏத்துதலேயன்றி,
இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.
‘திரு வரை சுற்றிய சீரை ஆடையன்
பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ! இவர்க்கு இவ்வூர் உறவென்றார் சிலர்.
‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையா ரென்று
முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவிலாத
துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்;
அன்பத்துக் கெல்லை உண்டே? அழகி தென்னடிமை’ என்றான்.’- என்ற ஸ்ரீ கம்ப ராமாயணச் செய்யுள்கள்
———————
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்கள் நித்ய கைங்கரியத்தைப் பெற்று,
ஸ்ரீ அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.
கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-
புஷ்பம் -மலர்கள் பரிமளத்தோடே -மணத்தோடே மலருமாறு போன்று இசையோடு கூடின ஆயிரத்திலும்
வைத்துக்கொண்டு இப்பத்தையும்-அப்யஸிக்க – கற்க வல்லவர்கள்.
விச்சேத சங்கை -பிரிவின் ஐயம் ஒருநாளும் இல்லாத மோக்ஷ இன்பத்தையடைந்து.ஸ்ரீ அமரராலே மொய்த்து விரும்பப்படுவர்.
‘லீலா விபூதியை-ததீயத்வ ஆகாரத்தாலே – அநுசந்திப்பார் ஸ்ரீ நித்ய ஸூரிகளாகையாலே,
தாங்கள் அனுபவிக்கக்கூடிய அநுபவத்தை, ‘இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம்
பிறந்து அநுசந்திப்பதே!’என்று ஸ்ரீ ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே,
அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பார்கள்
ஸ்ரீ நித்தியசூரிகள் ஆதலின்,‘அமரர் மொய்த்து விரும்புவர்,’ என்கிறார்.
—————–
நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி கற்றார், ஸ்ரீ பகவத் குண அநுசந்தானம் பண்ணினால்,-
அவிக்ருதராய் – விகாரம் இல்லாதவராய் -இருக்கைக்கு அடியான மஹாபாவத்தை
இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்,’ என்கிறார்.
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-
ஸ்ரீ ஆழ்வார் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரத்திலும் இப்பத்து.
தண்-குளிர்த்தி / நேர்ந்த -சொன்ன என்றபடி /
ஸ்ரீ பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராய்க் கொண்டு
சொன்ன ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து என்பார், ‘வாய்ந்த சடகோபன் நேர்ந்த இப்பத்து’ என்கிறார்.
ஸ்ரீ பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய்
இருக்கைக்கு அடியான மஹாபாவங்களைச் சாம்பல் ஆக்கும்.
——————-
நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் அப்யஸிக்கவே பகவத் ப்ரேமம் உண்டாம்
இத்தை அப்யசியுங்கோள் -என்கிறார்
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-
எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்கு ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி;
இத் திருவாய் மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும் ஸ்ரீ பத்தராகக் கூடும் பயிலுமின்
ஸ்ரீ பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,சாஸ்திர ஞானமாதல்,
ஸ்ரீ சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல், ஸ்ரீ பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -ஸ்ரீ பகவத் கடாக்ஷம் –
இவையனைத்தும் இல்லாதார்க்கும் ஸ்ரீ அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி
உண்டாகக் கூடும் என்கிறார்.
அவாப்த ஸமஸ்த காமனான ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே
அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி,
‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால்,
‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’
என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி.
‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன,
அவ்விடத்தைத் தோண்டுவார்களே -கல்லுவர்களே அன்றோ?
அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள்-அப்யசிப்பார்கள் – என்று அருளிச் செய்கிறார்.
——————–
நிகமத்தில் ‘பாகவதசேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள்,
இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’ என்கிறார்.
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-
நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில்.
இனி, ‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல்.
ததீய சேஷத்வ -அடியார்கட்கு அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல்-ஜென்ம அந்வயம் – அறும்.
———————-
நிகமத்தில் இத்திருவாய் மொழியில் -சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே
அனுபவிக்கலான -பரமபதத்தைச் செல்லப் பெறுவர் என்கிறார் –
( சொன்னாலே -–ஒவ் ஒரு இந்த்ரியமும் -மற்ற வியாபாரம் பெற அங்கே தானே நடக்கும் –)
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
பிரதிபாத்யத்தை விளாக்குலை கொண்ட -என்னுதல்
ப்ரதிபாதந சாமர்த்யத்தை உடைய என்னுதல் -அத்விதீயமான இப்பத்து
இன்னார் இனையார் இல்லாத ஸ்ரீ பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வைலக்ஷண்யத்தை யுடைய
ஸ்ரீ பரமபதத்தை பிராபிக்கப் பெறுவார்
ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து
அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து
பூர்ண அனுபவம் பண்ணலாம் படி தேசத்திலே பெறப் பெறுவர் – என்றபடி –
—————–
நிகமத்தில் ‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு
பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ என்கிறார்.
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-
யதோ வாசோ நிவர்த்தந்தே -அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன,’ என்னும்படியான
ஸ்ரீ பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.
ஆயிரத்திலும் இப்பத்து, தகுதியான பெரும் புகழையுடைத்து. என்றது,
‘இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்குச் அநனுரூபமாக -சேராத வகையிலே பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்றும்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியாக -ப்ராப்தமான -அனுரூபமாக -அடையத்தக்க ஸ்ரீ பரம் பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும்
சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?
பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?
பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.
————————
நிகமத்தில் இத்திருவாய்மொழியை அப்யசித்தாரை சர்வ லோக பிரசித்தமாம்படி
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,மேலே ஸ்ரீ பரமபதத்திலே சென்றால்
தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–
முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார்.
சொல்ல வல்லார்க்கு -பயிற்ற என்பதை -பயில என்று கொண்டு -அப்யஸிக்க கற்க வல்லவர்கட்கு.
‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று அந்வயம்
நாடு –த்ரவ்ய -பொருளின் விசேஷத்தை அறியாத சாதாரண மக்கள். -அவிசேஷஞ்ஞர்
நகரம் –த்ரவ்ய பொருளின் விசேஷம் அறிந்திருக்கும் பெரியோர்கள். -விசேஷஞ்ஞர்
நன்கு உடன் காண –நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி.
நலன் இடை ஊர்தி பண்ணி –நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையாவது, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ.
வீடும் பெறுத்தி –ஸ்ரீ பரம புருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து.
தன்னதான த்ரிவித -மூன்று விதமான-ஆத்மவர்க்கத்துக்கும் – உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான்-
அத்விதீய – ஒப்பு அற்ற தலைவன்-நாயகன் – ஆம்படி பண்ணிக் கொடுக்கும்.
ஆயின், ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போன்றவனோ இவனும்?’ எனின்,
அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது,
இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித்
தன் ஐஸ்வர்யத்திலே அந்தர்பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply