நிகமத்தில் -இத் திருவாய் மொழியில் சொன்ன அர்த்தத்தை ஸங்க்ரஹேண- சுருக்கமாக சொல்லி
இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம் -என்கிறார்
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-
அநாதி காலம் ஸ்ரீ பகவான் இடம் விமுகராய் -விருப்பு இல்லாதவர்களாய் –
விஷயாந்தர ப்ரவணராய் -வேறு விஷயங்களில் ஈடுபட்டவர்களாய் –
அசந்நேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத் அசதி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது இதி -தைத்ரியம் -–
அசத் சமராய் -இல்லாதவன் ஆகிறான் என்கிறபடியே
இல்லாதவர்களைப் போலே இருக்கிற நுங்கட்கு – சந்தமேனம் -இருக்கின்றவனாக அறிகிறார்கள் -என்றபடியே உஜ்ஜீவிக்கலாம்-
———————–
நிகமத்தில் ‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய
எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -என்கிறார் –
பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
அவித்யாதி தோஷங்களும் -அறிவின்மை முதலான குற்றங்களும் நீங்கப் பெறுவார்
புறம்பு உள்ள நசை அற்று இருக்கச் செய்தே பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக இருக்குமதுவும்
இவர்களுக்கு இல்லை –
இஹ -இவ் உலகத்தோடு பர -மேல் உலகத்தோடு வாசி அற குறை அற்று இருப்பார்கள் -என்றது
கிருதக்ருத்யா ப்ரதீஷ்ந்தே ம்ருத்யும் ப்ரியம் இவாதிதிம் -பாரதம் –-இவ் உலகத்தில் செய்ய வேண்டியதை
செய்து முடித்தவர்கள்-யமனை எதிர் பார்த்து இருக்கிறார்கள் -என்ற படியே
பர -மேல் உலகத்தில் –
பவாம்ச்து சஹ வைதேஹ்யா கிரிசா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத சவபதஸ் தே – அயோத்யா 31-25
நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –
ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா-உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்
————————-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள்
அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார் -என்கிறார் –
உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-
இப் பூமிப் பரப்பை அடைய அனுசந்தித்தால் -நினைத்தால் பரப்பேயாய்
ஸ்ரீ சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள்
ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-
———————
நிகமத்தில்-இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில்
ஸ்ரீ பரம பதத்து ஏறக் கொடுபோய் பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும் -என்கிறார்-
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே
இப் பத்து தானே முந்துற ஸ்ரீ பரம பதத்தைக் கொடுத்து-பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –
————————-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே
இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர் – என்கிறார்
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-
இந்த உலகத்திலே இப் பிறப்பிலே திவா ராத்திரி விபாகம் – பகல் இரவு என்ற வேறுபாடு இன்றிக்கே
ஸ்ரீ பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவார்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-என்று கூப்பிட வந்து முகம் காட்டாத அவத்யத்தை -தாழ்வினை
இப் பத்தினை கற்று வல்லவர்களோடு கடுக வந்து முகம் காட்டி தீருமாயிற்று ஸ்ரீ ஈஸ்வரன் –
மனைவியோடு வெருப்புண்டானால் அவள் பக்கல் முகம் பெறுகைக்காக பிரஜைகளை ஸ்லாகிப்பாரை –
குழந்தைகளைக் கொண்டாடுவாரைப் போலே —
—————————-
நிகமத்தில்-இத் திருவாய் மொழி கற்றவர்களை இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-
சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக் கூத்தா -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் –
————————–
நிகமத்தில்
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் என்கிறார் –
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
சன்ம மானது விட்டுப் போம்படியாக நோக்கும்-அது செய்யும் இடத்தில்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் – அதாவது
இப் பிறவிக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை-என்றது
இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –
————————
நிகமத்தில்
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீகரித்தாப் -அங்கீகரித்தாப் போலே விஷயீகரித்து -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் -என்கிறார்
தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-
சர்வ -எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-ஸ்ப்ருஹணீயமான -விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் –
முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான -ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –
———————–
நிகமத்தில்
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்
நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய வ்ருத்தியிலே -கைங்கர்யத்திலே அந்வயிக்க -சேரப் பெறுவர் –
நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –
ஆக
இப்பாட்டால்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் வை லக்ஷண்யத்தையும் -சிறப்பினையும்
இதனைக் கற்றவர்கள் அப்யசித்தார்களுடைய ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும் -பெரும் பேற்றின் சிறப்பினையும்
சொல்லிற்று ஆயிற்று —
———————
நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன ஸ்ரீ பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-
ச பரிகரமாக –-பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-
தாங்கள் ஒன்றனை நினைக்க-பரிகரம்-தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை
அன்றிக்கே ச பரிகரமாக குடும்பத்தோடு ஸ்ரீ பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –
ஸ்ரீ திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே ஸ்ரீ செல்வ நம்பி திரு மாளிகையிலே போய்ப் புக்கார்களாக
ஸ்ரீ நம்பி தாம் வேற்று ஊருக்காக சென்று இருக்க-ஸ்ரீ நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க
அவற்றைக் குத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட
பிற்றை நாள் ஸ்ரீ நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –ஸ்ரீ பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –
ஸ்ரீ தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ
ஸ்ரீ பாகவத சேஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்-அவர்கள் படியே யாகப் பெறுவர்கள்-
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply