நிகமத்தில் –
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் சம்வாதம் ஆவயோ
ஜ்ஞான யஜ்ஞ்ஞென தேன அஹம் இஷ்டா ச்யாம் இதி மே மதி -ஸ்ரீ கீதை -16-70-
அற நெறியை விட்டு விலகாததாய் இருக்கிற நம் இருவருவருடைய எவன் படிக்கிறானோ
அவனால் ஞானமான வேள்வியால் நான் ஆராதிக்கப் பட்டவன் ஆகிறேன் -என்பது என் எண்ணம் –
என்று அவன் அருளிச் செய்தாப் போலே
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-
ஒரு பிறவியிலே இதனைக் கற்கைக்கு -அப்யஸிக்கைக்கு ஈடான -தகுதியான அதிகாரத்தை
உடையராய் இருப்பார்கள் ஆகில்-அவர்கள் பண்டே நமக்கு ஸ்ரீ நாத பூதர் -தலைவர் –
அத்யேஷ்யதே -எவன் படிப்பானோ -அவன் என்கிறபடியே
இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு ஸ்ரீ நாதர்
படிக்கிறவன் – நிகழ் காலத்தில் சொல்லாமல்–படிப்பவன் -எதிர் காலத்தில் சொன்னது போலே –
படிக்க தகுதி யானவர்கள் -என்கிற பொருளில்
இங்கும் ஓத வல்ல பிராக்கள் -ஓதுவதற்கு தகுதி உள்ளவர்கள் -என்று அருளிச் செய்கிறார்-
—————————
நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-
ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்
இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்
உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே
இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று
இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம்
மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத
யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஸ்ரீ ஜிதந்தா ஸ்தோத்ரம்
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –
———————-
நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார் ஸ்ரீ பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே –என்கிறார் –
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-
இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்
பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்-அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –
ஸ்ரீ பரம பதத்தில் செல்லுதல் பிராப்தம் -இயல்பாகவே இருக்கும் –-யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப் பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே இருக்கும் அன்றோ –
————————–
நிகமத்தில் –
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
இத் திருவாய்மொழி ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண் படுத்தும் என்னுதல்-
அன்றிக்கே-ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு ஏறான ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-
———————-
நிகமத்தில்
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்
என்கிறார்
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-
என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு
பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது-
———————-
நிகமத்தில்
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து
அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-
பிறவிகளின் தொடர்ச்சிக்கு முடிவினைப் பெற்று –வசனத்தை லபித்து –பிறவிகட்கு அடியான சம்சாரமும் நசிக்கும்
கானல் –ம்ருக த்ருஷ்ணிகை –பேய்த் தேர்
இங்கும் – இங்கே பிறக்க இருக்காமல்- ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –
————————
நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு -கற்பார்க்கு பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –
பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் – என்கிறார் –
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-
இப் பாசுரத்தை கேட்டார்க்கு-சம -அக் காலத்தில் போலே
எல்லாக் காலங்களிலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று இருப்பது -என்றபடி –
ஸ்ரீ பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது
கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –
———————
நிகமத்தில் –
இத் திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்
இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும்
அனுப்பிக்கப் பெறுவர் என்கிறார்
வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-
இஹ -இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –மல்லிகை மணம் கமழ்வர் –
மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்
இவருடைய மநோ ரதம் -எண்ணம் அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –
——————-
நிகமத்தில்
அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறார்
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–
இப்பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –
என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –
————————–
நிகமத்தில்-பிரதிபந்தகங்கள் ச வாசனமாக – உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு
அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –
என்கிறார்
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
ப்ரீதி பூர்வகமாக முன்னாகப் பாடி இருந்த இடத்தில் இராதே ஆடி
ப்ரீதியினால் பிரேரிதராய் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு அவன் திருவடிகளில் விளுங்கோள்
இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply