ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

பக்தியை உடையராய்க் கொண்டு அவனை அனுசந்திப்பார்க்கு -நினைப்பார்க்கு-
ஆலம்பமான -பற்றுக் கோடான – ஸ்ரீ திருமந்தரம் -இன்னது – என்கிறார்

கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே-10-5-1-

———————–

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்
ஸ்ரீ நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய அர்த்தத்தை -பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக ஸ்ரீ திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-ப்ரஸ்துதமானவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு வாசக சப்தத்தை -பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்
செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

———————-

ஸ்வாமித்வ ப்ரயுக்தமான -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்வரூபத்துக்கு ஏற்ற-சர்வ வித –
பல வகைப் பட்ட ரக்ஷணங்களை சொல்லுகிறார்-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

——————–

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6-
தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று
ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும் ஒரு நிர்வசன பிரகாரம் –
உண்டே அன்றோ இதற்கு
அவ்வழியாலே ஸ்ரீ திருமந்த்ரத்துக்கு பொருள் கொண்டு-நிர்வசித்து –
ஸ்ரீ திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி ஆஸ்ரயியுங்கோள் அடையுங்கோள் – என்கிறார்-

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே–10-5-4-

——————–

இப்படி செவ்வி மாறாத மலர்களைக் கொண்டு அவன் திரு நாமத்தை – திருப் பெயரை –
ஹர்ஷத்துக்கு -உவகைக்கு போக்குவீடாகச் சொல்லுங்கோள் –
அப்படிச் செய்யவே ஆத்மாவுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைப் பெறலாம் –என்கிறார்

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

—————–

நீர் சொன்னபடியே செய்யலாவது-ஆஸ்ரயணீயனை- அடையத் தக்க ஸ்ரீ இறைவனை கண்டால் அன்றோ
கண்டு அன்றோ ஆஸ்ரயிக்க -அடைய வேண்டும் என்ன –
பிற்பாடரான நமக்காக ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளினான் அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்-என்கிறார்

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

————————-

ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி -ப்ரேரிதராய் -ஆஸ்ரயிக்கவும் -அடையவும் இனிமையோடு திருநாமம்
சொல்லவும் மாட்டாதார் அந்தப்புர பரிகரமானார் வார்த்தையைச் சொல்லவே-பூர்ண உபாசனத்தில் பலம் சித்திக்கும் –
பக்தியை செய்தார் அடையும் பலத்தை அடையலாம் – என்கிறார்

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

———————-

அதிகாரி நியதி இல்லை-யாரேனுமாக திருப் பெயரை நிரந்தரமாக – எப்பொழுதும் சொல்லுவார்
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள் –என்கிறார்

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8–

———————

ஜென்மாதிகள் அப்ரயோஜம் -பிறவி தொடக்கமானவைகள் காரணங்கள் ஆகாமல் போனாலும்
பிரயோஜனாந்த பரராய் ஆவதற்கு காரணமான பாவங்கள் செய்வது என் என்னில்-ப்ரயோஜன ஸூந்யராய்
அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயிக்கவே -பற்றவே அவை தாமே போம் என்கிறார்

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

——————-

அவ்வளவே அன்றிக்கே கைங்கர்யங்களுக்கு பிரதிபந்தகங்களும் -தடையாக உள்ளவைகளும் போம்
ஆன பின்பு அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள் என்கிறார் –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

——————-

நிகமத்தில்
இப்பத்தும் அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஆழ்வார் தம்மைப் போலே ஸ்ரீ பகவான் உடைய
விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும் என்கிறார்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading