ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –நாலாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

உபய விபூதி உக்தனாய் -இரண்டு விபூதிகளையும் உடையவனாய் இருந்து வைத்து
ஆஸ்ரித -அடியவர்கட்கு ஸூலபனாவன் உடைய திருவடிகள்
பக்தி யோக லப்யம் -பக்தி -மார்க்கத்தாலே அடையத் தக்கன –என்கிறார் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

———————

ஸ்ரீ சர்வேஸ்வரனாய்-ஸ்ரீ யபதியாய் -ஸ்ரீ திருமகள் கேள்வனாய்-இருந்து வைத்து என் விரோதி -இருவினைகளைப் போக்கி –
என்னை இங்கே அடிமை கொள்ளா நின்றான் -என்று கீழ்ச் சொன்ன சௌலப்யம் தமக்கு பலித்த படியை அருளிச் செய்கிறார்-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

——————

மறுவல் இடாதபடி சம்சாரத்தை -பிறவிப் பிணியைப் போக்கி ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனுடைய –
கேள்வனானவனுடைய திருவடிகளை சிரோ பூஷணமாக -தலைக்கு அணியாகப் பெற்றேன் –என்கிறார்-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

—————-

என் மனத்தில் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒருவராலும் விஸ்லேஷிப்பிக்க -பிரிக்க ஒண்ணாது என்று
நிச்சயித்து – அறுதி இட்டு அதனாலே கிருதகிருத்யனாய் இருந்தேன் என்கிறார் –

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

————————

அவன் என் திறத்தில் செய்ய நினைக்கிறவை ஒருவருக்கும் அறிய நிலம் அன்று என்கிறார்

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

——————-

இன்று வந்து ஆஸ்ரயிப்பாரையும் பற்றுமவரையும் நித்ய ஆஸ்ரிதரை எப்பொழுதும் தன்னைப் பற்றி நிற்கும்
அவர்களைப் போலே விஷயீ அங்கீகரிக்கும் அவன் திருவடிகளிலே நிர்மமனாய் செருக்கு அற்றவனாய்
விழப் பெற்றேன் என்கிறார்-
ஸ்ரீ திருவனந்த ஆழ்வானுக்கும் பிரயோஜனாந்தர பரர்க்கும் வாசி வையாதே உடம்பு கொடுக்குமவனை
வணங்கப் பெற்றேன் என்றுமாம்

நாகத்து அணையானை நாள் தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6-

———————–

நம் பிரதிபந்தகங்களை -தடைகளை எல்லாம் தானே போக்கி அடிமை கொள்ளுமவனை
நாள்தோறும் அனுபவி -என்று தன் திரு உள்ளத்தை நோக்கி அருளிச் செய்கிறார்

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

————————

அவனை அனுபவிப்பாய் என்றவாறே உகந்த நெஞ்சினைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அனுபவி
என்கிறார்

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

——————-

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி
நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே –
பல ஆயிரக் கணக்கான பிறவிகளில் செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்
அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு கிருஷ்ண பக்தி உண்டாகிறது -என்கிறபடியே
அநேக -பல காலங்களில் ஸாத்யமான -சம்பாத்தித்த பக்தியாலே
அடையப் படுமவனை அவன் ப்ரஸாதத்தால் -திருவருளாலே காணப் பெற்றேன் -என்கிறார் –
இத் திருப் பாசுரத்தில் சொல்லப் படுகிற பிரபத்தியோடு-விகல்பிக்கலாம் படி – மாறாடும்படியாக இருக்கிற
பக்தியைச் சொல்லிக் கொண்டு போந்தார் கீழில் –
அதற்கும் அடி அவன் ஆகையாலே சொல்லுகிறார் ஆதல்
ஸ்வயம் நிரபேஷமானது தன்னையே -சாதனாந்தரங்களை விரும்பாமல் -அவனது அருளையே -சொல்லுகிறார் ஆதல் –
தாம் பெற்ற வழியே சொல்லுகிறார் ஆதல் –என்றுமாம் –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

———————–

பிரயோஜனாந்தர பரர்களோடு சாதனாந்தர பரரோடு பக்திமான்களோடு பிரபத்திமான்களோடு
வேற்றுமை அற அவனே உபாயம் -என்று உக்தத்தை -கீழே கூறியவற்றை எல்லாம்
நிகமிக்கிறார் -முடிக்கிறார்-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

——————–

நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம் என்கிறார்-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading