ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தர்யாதிகளை வனப்பு முதலானவற்றையும் காட்டி
உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து
துஸ் ஸஹமான – பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து
நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க-குண ஆவிஷ்காரத்தை பண்ணி –
விட ஒண்ணாது என்கிறார்-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

—————————

தாம் விரும்பியது-தம்முடைய அபேக்ஷிதம் -செய்து அல்லாது நிற்க ஒண்ணாதபடி
அவனுக்கு திரு ஆணை இடுகிறார்

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

——————-

பெரு மிடுக்கரான பிரமன் முதலாயினோர்கள் உடைய ஸ்வரூபம் ஸ்திதி பேறு-முதலாயின வற்றுக்கு எல்லாம்
நிர்வாஹகனான நீ உன்னால் அல்லது ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை
ஐயோ -வந்து விஷயீ அங்கீ கரித்து அருள வேண்டும் என்கிறார் –

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கரு மாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே–10-10-3-

———————-

சர்வ -எல்லாப் பொருள்களுக்கும் நிர்வாஹகனான நீ என் கார்யத்தை நானே செய்து கொள்வேனாய்
பார்த்தாய் ஆகில் என்னைக் கை விட்டாய் அல்லையோ என்கிறார்

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

——————-

சர்வ ரக்ஷகனான -எல்லா பொருள்களையும் பாது காக்கின்ற- நீ கை விட்டால்
என் கார்யம் -நான் செய்யவோ-பிறர் செய்யவோ-முடிந்தேனே இறே –என்கிறார்

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

———————

ஸ்ரீ பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யந்த அபிநிவிஷ்டனாய் -மிக்க காதலை உடையவனாய்
என் ப்ரக்ருதியிலும் -சரீரத்திலும் ஆத்மாவிலும் அத்யாதரத்தை -மிக்க விருப்பத்தைச் செய்து புஜித்த -அனுபவித்த நீ
என்னைக் கைவிடாமல் உபேக்ஷியாதே -ஈண்டென விஷயீ -அங்கீ கரித்து அருளாய் – என்கிறார்-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

———————

நான் ஸ்ரீ பெரிய பிராட்டியாரை சார்ந்தவன் -பரிக்ரஹம் -ஆகையால்
பிரளயத்தில் மூழ்கின -பிரளய ஆர்ணவ மக்னையான -ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை எடுத்து
அவளோடு ஸம்ஸ்லேஷித்து -கலந்தால் போலேயும்
கடலைக் கடைந்து ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு சம்ச்லேஷத்து -கலந்தால் போலேயும்-சம்சார ஆர்ணவ மக்நனான –
பிறவிக் கடலில் மூழ்கின- என்னை எடுத்து
என்னோடு ஸம்ஸ்லேஷித்து -கலந்தருளி
என் பக்கல் அதி வ்யாமோஹத்தை -மிக்க காதலைச் செய்த
உன்னைப் பெற்று வைத்து இனி தப்ப விடுவேனோ என்கிறார்-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

———————

அத்யந்த துர்ஜ்ஜேயனான – சிறிதும் அறிய முடியாதவனான உன்னை பெற்று வைத்து
இனி விட உபாயம் -இல்லை என்கிறார்-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ–10-10-8-

———————

தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-
அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருதிவி சரீரம் -அந்தர்யாமி ப்ரஹ்மணம்
எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்
தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-
அது முழுதும் அவனுடைய சரீரம்-என்றும்-சொல்லுகிறபடியே எங்கும் வந்து முகம் காட்டலாம்படி
ஜகத் சரீரனாய் உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும் இருப்பைக் காட்டித் தந்தோம் இறே -என்ன
அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது
ஆகாராந்தரம் -வேறு உருவம் இல்லையாகில் அன்றோ அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது
ஸ்ரீ திரு நாட்டில் -ஸ்ரீ பரம பதத்தில் -வ்யாவ்ருத்தமாய் -வேறுபாட்டோடு கூடியதாய்-பரிபூரணமாய் –
எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை காண வேண்டும் – என்கிறார் –

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

—————–

ஸ்ரீ எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் -விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து
மிகப் பெரிய ஆர்த்தியோடே -துன்பத்தோடு கூப்பிட்டு
இவர் பிரார்த்தித்த -வேண்டிக் கொண்ட படியே-பரி பூர்ணனாய் – எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு
வந்து ஸம்ஸ்லேஷித்து -கலந்து அருளக் கண்டு
அபரிச்சேதயமான -அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்
ஆத்ம தத்வத்தாலும்
உன்னுடைய சங்கல்ப ரூப -நினைவின் உருவமான ஞானத்திலும்
பெரியதான என் விடாய் எல்லாம் தீர
வந்து -என்னோடு -கலந்தாய்
என்னுடைய மனோ ரதமும் -விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது என்கிறார் –

இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து
அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு
என்னோடு வந்து கலந்து
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்–என்னவுமாம் –
அங்கே பரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39
ஸ்ரீ பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

———————-

நிகமத்தில்
அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -இவற்றையே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்
சவுந்தர்யாதி விசிஷ்டமான -வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்
அபரிமித -அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்
ஸ்ரீ லஷ்மீ பூமா நீளா -திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்
அஸ்தானே பயசங்கை செய்யும் ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைனதேயாதிகள் -ஸ்ரீ நித்ய ஸூரிகள் -ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் –
ஸ்ரீ பெரிய திருவடி-அனவரத பரிசர்யமான – எப்பொழுதும் அடிமை செய்யும் –
சரண நளினனாய் -திருவடித் தாமரைகளை உடையவனாய்
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்
ஸ்ரீ சர்வேஸ்வரனாய்
ஸ்வ விபூதி பூதரான -தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற ஆஸ்ரயிக்கும் -அடியவர்கள் விடாய்
தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு
அவனைப் பெற்று நீர்த்துக்கராய் -துக்கம் அற்றவராய்-நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான –
எல்லா தடைகளும் நீங்கினவராய்
ஸ்ரீ ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-பக்தி பலாத்கார பூர்வகமாக – ஆயிரம் ஸ்ரீ திருவாய் மொழியும்
அவற்றில் வைத்துக் கொண்டு
கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
பரம பக்தியால் பிறந்த அந்தாதியான இத் திருவாய்மொழி வல்லார்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading