மஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார்
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-
ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது,
ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே, ஒன்றும் நாலாதே முன்பு போலே
ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் -தன் தன் இடத்திலே கிடக்கும்படி.
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற,
உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.
ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்குஒரு குறை வாராதே.
ஸப்த -ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.
பின்னும் –
அதற்கு மேலே,
நான்றில ஏழ் மலை தானத்தவே –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல்
தன் தன் இடத்தில் நிற்கும்படி. என்றது,
ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி.
பின்னும் பின்னும்’
என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு வியாபாரமே -செயலே அமையும் கண்டீர்!
அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக.
நான்றில ஏழ் கடல் தானத்தவே –
அவை தாம் கடினத் தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ?
அதுவும் இல்லை அன்றோ இதற்கு? நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்?
அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
இவை இப்படிக் கிடத்தல் அவன் அவஹீதானாயக் கொண்டு -குறிக்கோளுடையவனாய்க்
கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில்,
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-
மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு,
எயிற்றிலே எற்றிக் கொண்டு வ்யாபாரித்த -செயல் செய்த போது:
மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே.
அவன் இப்படி முக்யமாகக் ரஷிக்கப் புக்கால் அவை சலிக்கமோ?
அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியற ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் தம் தம் இடத்திலே நின்றன-
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply