ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-2-4–

உம்மை ஒழிய ஜீவிக்க மாட்டாத இவள் திறத்துச் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்கிறாள்.

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;‘கடல் வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்ட வாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழு நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறத் தென் சிந்தத் தாயே?–7-2-4-

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் –
இவளுக்கு நீர் உடம்பு கொடுக்க வேண்டா; இவள் அவயவங்கள் இவள் அதீனமாகச் செய்ய அமையும்.
ஸகீபி: ந்யஸ்த ப்ரகீர்ண பரதந்த்ர விபாண்டுர அங்கீ’ என்பது.
தோழிகளால் பொகடப் பட்டுப் பரந்து இருப்பனவும் ஸ்வாதீனம் அற்றனவும் மிக வெளுத்தனவுமான
அவயங்களை யுடையவள்’ என்கிறபடியே, தோழிமார் போகட்ட இடத்தே கிடக்குமித்தனை.
ஸ்வாதீனம் இல்லாமையாலே தோழிமார் இட்டு வைத்த காலும் கையுமாய் இருக்கும்.

எழுந்து உலாய் மயங்கும்-
அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே அடி அற்ற எழுச்சியும் அடி அற்ற உலாவுகையுமாய் இரா நின்றது;
அது கிளர்ந்து எழுந்தவுடனே-கிளர்ந்த சமநந்தரத்திலே – அவியுமாறு போலே மயங்கா நின்றாள்.

கை கூப்பும்-
உணர்த்தியில் தொழுமவள் அல்லள்; மயங்கினால் தொழாதிருக்க வல்லள் அல்லள்;
சாதன புத்தியில் தொழுமது இல்லை; ஆற்றாமையாலே வருமது தவிர மாட்டாள்.

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்-
சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடா தன்றோ?
விஸ்லேஷத்தில் -பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே ப்ரேமம் -அன்பு தண்ணிது என்கிறாள்.

கடல் வண்ணா கடியை காண் என்னும்-
கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே,
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும்.
அன்றிக்கே,
பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாத படியான வடிவு படைத்த நீ காதுகனாகா நின்றாய்’ என்னும் என்னுதல்.

வட்டம் வாய் நேமி வலக்கையா என்னும் –
சங்கு சக்கரங்கள்’ என்று சொல்லும் நிலையும் போயிற்று,
இப்போது கண்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும்,
அவற்றினுடைய அமைப்பு, புத்தியில் படிந்ததாய் இருக்கிறபடி.
பிடித்த இடம் எங்கும் வாயாக இருத்தலின், ‘வட்ட வாய்’ என்கிறது.
இதனால், ‘விரோதியைப் போக்கப் பரிகரம் இன்றிக்கே இருக்கிறாய் அன்றே?’ என்கிறாள் என்றபடி.

வந்திடாய் என்று என்றே மயங்கும் –
ஒருகால் ‘வந்திடாய்’ என்றால் ஆறி இருக்க வல்லள் அல்லளே.
விடாய்த்தவன் தாகம் தீரும் தனையும் ‘தண்ணீர்’ என்னும் இத்தனை யன்றோ?
அப்படியே, ‘வந்திடாய், வந்திடாய்’ என்று உருவ அதனையே சொல்லும்; மற்று ஒன்று அறியாள்.
மயங்கும்
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லுமத்தனை.

என்றென்றே
வெண் கலத்தின் ஒலி போலே சொல்லுக்குச் சொல் ஓய்ந்து வருகின்றதாதலின், ‘என்றென்றே’ என்கிறது.

சிட்டனே –
சிட்டன்-திருமால். என்றது, ‘பிராட்டி விஷயத்தில் வியாமோகத்தை யுடையவன்’ என்றபடி.
அன்றிக்கே, ‘பிராட்டியைத் தன் பக்கலிலே பித்தாக்கித் துடிக்கப் பண்ணுமவன்’ என்னுதல்.
அன்றிக்கே, உம்முடைய படி சால அழகிதாய் இருந்தது;
உம்மைப் போலே சிஷ்டர்கள் சிலர் அமைந்தார்களே அன்றோ அபலைகள் குடி கெடுக்கைக்கு?
அழகிதாகத் ஆந்ரு சம்சய பிரதானராய் -திருவருளையே மிகுதியாக வுடையவராய் இருந்தீர்’ என்னுதல். என்றது,
பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்க விட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு
ஓத்துச் சொல்லித் திரிவாரைப் போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி.

செழுநீர்த் திருவரங்கத்தாய் –
ஸ்ரமஹரமான -ஸ்ரமத்தைப் போக்கும் படியான நீரையுடைய கோயில்.
தண்ணீர்ப் பந்தலிலே காதுகள் -கொலைஞர் தங்கினதைப் போன்றதே யன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்?

இவள் திறத்து என் சிந்தித்தாயே –
சர்வஞ்ஞனுக்கும் – இவளுக்கு ஓடுகிற தசைக்கு -நிலைக்குப் பரிஹாரம் சிந்திக்க வேணும் என்றிருக்கிறாள்;
திருத் தாயார் தெளிவு இருக்கிறபடி.
அவன் நினைவே காரியமாய்த் தலைக் கட்டுவது’ என்று அவனைக் காலைக் கட்டிக் கேட்கிறாள்.
ஸ்ரேயோ த்யாயதி கேசவ -கேசவன் அநுகூலர் விஷயத்தில் மேன்மையைச் சிந்திக்கிறான்,’ என்கிறபடியே,
அனுகூல விஷயத்தில் சிந்திப்பானும் அவனே அன்றோ?
இங்ஙனே மநோ ரத சிந்தித்தலாயே போமித்தனையோ,
நிர்ணய அந்தமாக-அறுதியிடல் முடிவாகக் கடவதன்றோ?

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading