ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307–அதிகாரி நிஷ்டா க்ரமம்-பெறுவான் முறை-
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –
ஆறாகப் பார்ப்பதில் முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில் முதல் ஆறாவது ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –
———————————
அனந்தரம் அதிகாரி சோதனம் பண்ணுகிறது -உபாயம் உபேயார்த்தம் ஆகையாலும் –
உபேயத்தில் உகப்பு என்றும் -பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம் -தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம் -என்றும் -உபேய அதிகாரமும் கீழ் பிரசக்தம் ஆகையாலும் – த்வய நிஷ்டன் ஆன அதிகாரிக்கு -உபயமும் -அபேஷிதம் ஆகையாலும் – உபாய உபேய அதிகாரங்களில் இச் சேதனன் இன்னபடி இருக்க வேணும் என்னும் அத்தை தத் தந் நிஷ்டரை நிதர்சனம் ஆக்கிக் கொண்டு அருளிச் செய்கிறார் -இந்த வாக்ய த்வயத்தாலே –
சூரணை -80-
உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —
உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —
(உபாயமும் உபேயமும் அவனே -ஆகவே இவை அவனுக்கும் பொருந்தாது -நாமோ உபாயமும் உபேயமும் அல்லவே -ஆகவே உபாய உபேய என்பதை தத் அதிகாரியாம் போது – லக்ஷணையால்—வாமனன் குணங்களை திவ்ய தேசங்களில் பார்த்தேன் என்றால் போல்-அவ்வுருவம் சொல்லாமல் -போலே -ஸப்த பிரயோகம் போல் இங்கும்-உபகாரி -சஹகாரி –உபகாரமும் வேண்டாம்- சஹகாரமும் வேண்டாம்- தகுதியே வேண்டும் –அதுவே அதிகாரி தகுதியுடன் இருந்த இவர்களைக் காட்டி அருளுகிறார் –குரு பரம்பரை மஹா பாரதம் ஸ்ரீ ராமாயணம் படிக்கத் தூண்டும் இன்ன குணம் என்று இங்கே அருளிச் செய்யாமையாலே )
(ஆய் ஸ்வாமிகள்-ஸூவதந்த்ரனே சித்த உபாயம்-என்று அத்யவசயா ரூபமான உபாயத்தில் –தத் தஸ்ய சத்ருசம் பவேத்--என்று ஸூ சக்தியை விட்டு -பாரதந்தர்யத்தை நோக்கி- லங்கா பவனத்தில் பெருமாள் வரவை எதிர்பார்த்து இருந்த பிராட்டியைப் போலே-உபாய அதிகாரியும் –ஸூ ரக்ஷண அர்த்த வியாபார சக்தியை விட்டு –ஸூ யத்ன நிவ்ருத்தி -பாரதந்தர்ய பலம் –அநர்ஹ ஸ்வரூபத்தைப் பார்த்து--துஸ் ஸஹமான சம்சாரத்திலே -ஸூவதந்த்ரனான அங்கீ காரத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டும் –
சபா மத்யே ஸ்த்ரீத்வ ப்ரத்யுக்த லஜ்ஜையை விட்டு -பர்த்தாக்கள் ரக்ஷகர்கள் என்னும் பிரதிபத்தியும் விட்டு –கிருஷ்ணனே ஆபத் ரக்ஷகன் என்று அத்யவசித்து சரணாகதையாய் நின்ற திரௌபதி இருந்தால் போலே-லௌகிக சந்நிதியில் -தத் ஸங்க்ரஹ ப்ரவ்ருத்தி தியாக லஜ்ஜையை விட்டு -உபாயாந்தரங்களில் உபாயத்வ பிரதிபத்தியையும் விட்டு -சுலப ஸ்வாமியே உபாயம் கிருஷ்ணனே சுலப ஸ்வாமி தானே -என்று அத்யவசித்து -பிரபன்னனாய் இருக்க வேண்டும்
ஒரு சேவகன் ஒரு சேவகன் வாசலிலே நாயை அடிக்க –அந்த சேவகன் செய்த வியாபாரத்தை –பத்தராவி பெருமாள் வாசலில் -இருந்தவர் காண -ஷூத்ர சேதனன் தன் அபிமானத்தில் ஒதுங்கினது என்று இத்தையே -தன்னையே அழிய மாறினதைக் கண்டால்
பரம சேதனன் திரு வாசலிலே ஒதுங்கினால் அவன் என் படுமோ -தண்டியில் குதித்து-நாயேன் வந்து அடைந்தேன் – – பர வியாபாரமே ஸூ வியாபாரம் என்று-கைபுடை கோபுரவாசலில் உள்ள திண்ணையிலே- கண் வளர்ந்து அருளினது போலே –ஸூ வியாபார யோக்ய ஜாதி ஸ்மரணமே இல்லாமல் –காம்பற –வாழும் சோம்பரை உகத்தி போலும் -ஸ்வீ காரத்தில் இருக்கும் உபாய புத்தியும் கழித்து –உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-உபாய புத்தியாகக் கூடாதே-கைங்கர்யத்தில் இல்லை
சித்த உபாய பலமான பகவத் கைங்கர்ய ரூபமாயும் -தத் விஷய விக்ரஹமாயும் இருக்கிற-
பக்த பாகவத ஆச்சார்யர்கள் -உபேயத்தில் அதிகாரத்தில் –சிந்தயந்தி-கடைசியில்- ஏற்றி ஏற்றிக் கொண்டு -இவள் தான் மற்ற கோபிகளில் கிருஷ்ண அனுபவத்தில் புதியவள் —நம்மாழ்வார் தீர்க்க சித்தயந்தி அன்றோ –உத்தவர் இந்த பக்தியைக் கண்டு -ஞான மார்க்கம் உபதேசிக்க வந்தவர் -கண்ணன் இருப்பது போலே கோபிகள் பாவிக்க -பிரமத்தை அறிந்து திரும்பினார் –ருசி வளர வேண்டுமே -நம் ஆழ்வாரை இங்கே வைத்து வளர்த்த பக்தி உழவன் நமக்காகத் தானே –
கைங்கர்ய அபி நிவேசியான இளைய பெருமாளும் -ஸ்ரீ கார்யம் நிமித்தமாக தன்னை அழிய மாறிய ஸ்ரீ ஜடாயு மஹா ராஜரும் –ஸ்ரீ சீதா பிராட்டியை ரஷிக்க-எம்பெருமான் திரு மேனியில் நெருப்புப் பட்டால் என் செய்ய என்று குடும்பத்தோடு -தன்னையே கோணி சாக்கு போலே அணைக்க திருமேனியை த்யஜித்த – அங்கு அழிய மாறி -இங்கு தெரிந்து ஆத்ம ஹத்தி –குடும்பஸ்தற்கு முன்னே ஸ்ரீ வைகுண்டம் -பாகவத ரக்ஷணம் சீர்மை
திருக் குழல் ஓசை கேட்டு ஓடுகிற போது பர்த்தா கையைப் பிடித்து தகைய உன் எச்சில் சரக்கை நீயே வைத்துக் கொள்-இவ்வாத்மா அங்கே செல்லும் என்று சரீரத்தை விட்டு –தேகம் தன்னடையே போனதே -இவளுக்கு -சரணாகதியே இல்லை –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -ஸ்வ பாவம் அவள் இடம் இருந்ததே -உணர்தலே சரணாகதி –ஆழ்ந்த சுக துக்கம் அனுபவத்தால் மொத்த புண்யம் பாபங்கள் போனதே -அவனுக்கு அது வரை தான் கால தாமதம் -ஸ்ருதி-நினைத்து துவண்டு அழிந்து அடைந்தாள் இவள் -அதனால் ஸ்ரேஷ்டம் நால்வருக்குள்–கைங்கர்ய அபி நிவேசியாய் -தத் ததீய ப்ரேம-அங்கதையாலே-கண் தெரியாமல் – ஸூ சரீரத்தை அழிய மாறும் படி பிரேமாதிகனாய் இருக்க வேணும்
சேஷத்வ வியபதேசம் உஜ்ஜீவன ஹேது –பகவத் சேஷத்வமே அந்தரங்க நித்ய நிரூபகம்-
சேஷ பூத சைதன்ய தத் கார்ய பலம் தத் விஷய ப்ரீதி பிரயோஜனங்கள் –
ஸூ பிரயோஜன பிரயத்தன நிவ்ருத்தி -சேஷத்வ பாரதந்தர்ய பலன் –
பிராப்தியும் கர்த்ருத்வங்களுக்கும் ப்ரீதியும் ஸ்வ தந்த்ர சேஷிக்கே -பிராப்தி திசையில் நினைவும் அவனது -அதுவே அநாதி சித்தம் -இவன் ஸூவார்த்த நினைவு மாறினதும் கார்யகரம் ஆகும் -ப்ராசங்கிகமான வற்றை நியமித்து -ப்ரஸ்துதமான உபாய உபேயங்களின் – -சாதன கௌவ்ரவத்துக்கு தகுந்த அதிகாரியாம் போது -உபயத்தினுடைய அதிகாரி என்றுமாம் –
அதிகாரி இருக்கும் படியை அருளிச் செய்கிறார் மேல் –
அங்கம் தன்னை பொறாது என்றும் சுருக்கமாக அதிகாரி க்ருத்யம் கீழே சொல்லி இங்கே விவரிக்கிறார் என்றுமாம்-த்வய நிஷ்டனான அதிகாரிக்கு என்றுமாம் –
அதிகாரி ஆகும் பொழுது -இவர்களைப் போலே அவர்கள் குணங்கள் வர வேண்டும் என்றபடி -)
உபாயத்துக்கு -என்றது –உபாயதுக்கு அதிகாரியாம் போது என்ற படி-உபாய அதிகாரிக்கு -என்னவுமாம் –
அப்படியே உபேயதுக்கு -என்றதுவும் –
உபாயத்தில் -என்ற பாடம் ஆன போது-உபய விஷயத்தில் -என்ற படி-
இப்படி மற்றையதுவும் –
(நிரபேஷ சித்த உபாயத்துக்கு கார்ய கரணத்தில் ஸஹ காரமும்-ஸ்வரூபம் பிரகாசிக்க உபகாரமும் வேண்டாம் —பெற்றுக் கொள்ள -அதிகாரியாம் போது -அத்யாஹாரம் –)
——————————————–
அவர்களைப் போலே இருக்க வேணும் என்றதின் கருத்தைத் தர்சிப்பிக்கைகாக
அவர்கள் தங்கள் படிகளை அடைவே அருளிச் செய்கிறார் மேல் –
அதில் பிராட்டி உடையவும் -திரௌபதி உடையவும் படிகளை அருளிச் செய்கைக்கு உடலாக பிரதமத்தில் உபயருக்கும் வாசியை அருளிச் செய்கிறார் –
சூரணை -81-
பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –
(ஆய் ஸ்வாமிகள்-உபாய அதிகாரிகளில் நிதர்சன பூதர்கள்-அந்நிய பரையான திரௌபதியில் அநந்ய பரையான பிராட்டிக்கு நிவ்ருத்தி அதிகாரத்தில் வாசி -சக்தி இருந்து விட்டு விலகி இருந்த பிராட்டி -விரோதி வர்க்கத்தை பஸ்மீ கரிக்க வல்லமை -உரு உண்ட சேலையை எடுத்துக் கட்ட ஒண்ணாத அசக்தியும்)
(பாதி வ்ரத்யாதி தர்ம அனுஷ்டானத்தால் வந்த சக்தி உண்டே என்னில் கர்ணன் இடம் விருப்பம் இருப்பதாகக் காட்டியும் -அர்ஜுனன் இடம் பக்ஷபாதித்து இருந்ததாலும் பதி வ்ரத்தை போனதே –அதுக்கு உண்டான சாப சக்தி இல்லை -பிரயோஜனாந்தரம் கேட்டதால் ஸ்வரூப ஞானம் இல்லை – சக்தி இருந்து இருந்தால் அத்தை உபயோகித்து இருப்பாள் –ரக்ஷ -பிரார்த்தநாயாம்-பகவத் ஏக கர்த்ருத்வ ரக்ஷ – இச்சா பிரகாசம் பிரார்த்தனை -அடியேனால் முடியாது நீரே ரஷிக்க வேண்டும் – தத் ஏக ரக்ஷமாம் உபயருக்கும் உண்டு -தத் தஸ்ய -என்று செய்தி சொல்லி ஒரு மாசத்துக்கு மேல் -சொல்லி இவளோ ரக்ஷமாம் என்று சரணாகதி வியக்தம்)
அதாவது –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று இருந்த பிராட்டிக்கும் –ரஷமாம் –என்ற திரௌபதிக்கும் தம்மில் வாசி –சீதோ பவ –என்று நெருப்பை நீர் ஆக்கினால் போலே –தக்தோ பவ –என்று
விரோதி வர்க்கத்தை பஸ்மம் ஆக்கி தன்னை ரஷித்துக் கொள்ள வல்ல சக்தி உண்டாகையும் -ஸ்வ யத்னத்தாலே விரோதிகளைத் தள்ளி தன்னை நோக்கிக் கொள்ளப் பார்த்தாலும்-(இச்சை இருந்தாலும் ) நோக்கிக் கொள்கைக்கு ஈடான சக்தி தனக்கு இல்லாமையும் என்கை-
———————————————-
ஏவம் பூதர் ஆனவர்கள் செய்தவை தன்னை அருளிச் செய்கிறார் –
சூரணை -82-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –
(ஆய் ஸ்வாமிகள்-லஜ்ஜை விடுவது சக்தியை விடுவதை விட ஏற்றம் அன்றோ -விடுகை முக்கியம் -ஸூய வியாபாரம் விட்டது அதிலும் முக்கியம் -நாயகன் சக்தியையே நோக்கும் -பிராட்டி ஸூ பாரதந்தர்ய ஹானியைப் பிறப்பிக்கும் –சக்தி தியாகம் -பர சக்தி ஆலம்பன ஸூ சகம் -பெருமாளுக்கு ஏற்புடையவள் -சொல்லினால் சுடுவேன் -வில்லுக்கு மாசு வரும் என்று விட்டாள்-ஆபத் சகன் கிருஷ்ணன் என்று விசுவசித்து- திரௌபதி சபா மதியத்தில் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான வெட்கத்தை விட்டாள் -ஸூவ ஸ்வபாவ தியாகம் ஸூ விசுவாச விசேஷ பலமாய் வந்தது இவளுக்கு ஜாதி யாதிகளில் ஸ்ரேஷ்டரான வர்ணாஸ்ரம வாசனா ருசிகள் உடன் விட்டார் – பர சக்தியையே நோக்கி ஸூவ சக்தி விடுகையும் -பர ரக்ஷண விசுவாசம் கொண்டு ஸூவ ஸ்வ பாவம் விடுகையும் -பர வியாபாரத்தைப் பற்றி நம் வியாபாரத்தை விடுகையும்–உபாய கிருத்யம் என்றதாயிற்று –)
ஸ்வ சக்தி விடுகை யாவது –நாயகரான பெருமாள் ரஷிக்கும் அத்தனை அல்லது
நம்முடைய சக்தியால் நம்மை ரஷித்துக் கொள்ளுகை நம் பாரதந்த்ர்யத்துக்கு
நாசகம் என்று -ஸ்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ளாது ஒழிகை -(நாயகனை நம்பினால் நயனம் நம்மது இல்லையே அஹம் நயாமி மத் பக்தன் என்னுமவன் தானே)
அசந்தேசாத் து ராமஸ்ய தபசஸ் ச அனுபாலநாத் ந த்வாம் குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹா தேஜஸா என்றாள் இறே–
(ராமன் இடம் அப்படி செய்தி வர வில்லை -தபஸ் கைக் கொண்டவள் –பாரதந்தர்யம் ஆகிய தபஸ் உண்டே இவளுக்கு –12-வித தபஸ் -நியாசம் மிக உயர்ந்தது நாராயண உபநிஷத் சொல்லும்- -ஸூ சம்பந்த தியாக விஸிஷ்ட பர சம்பந்தம் விசுவாசித்து இருப்பதே நியாசம் —
ஸூ ரக்ஷண அனர்ஹத்வ ரூப -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -தானே பாரதந்தர்யம் –தேஜஸால் எரிக்க முடியும் -ஆனாலும் செய்ய வில்லை -இந்த இரண்டு காரணங்களால் -யாக தீக்ஷையால் விஸ்வாமித்திரர் தம் சக்தியைக் காட்டவில்லை யாக சம்ரக்ஷணத்தில் )
லஜ்ஜையை விடுகையாவது –துச்சாசனன் சபா மத்யே துகிலை உரிக்கிற அளவில் –
லஜ்ஜா விஷ்டையாய் கொண்டு -தானொரு தலை இடுக்குகை அன்றிக்கே -இரண்டு கையும் விடுகை -பேர் அளவு உடையாள் (நிரதிசய ஞானம் உடைய –ராமன் இளைய பெருமாள் திரு உள்ளம் அறிந்தவள்-கங்கை போல் கலங்காதவள் ) ஆகையாலே பிராட்டிக்கு -பெருமாளே ரஷகர் -என்று விஸ்வசித்து ஸ்வ சக்தியை விட்டு இருக்கலாம் -அத்தனை அளவு இன்றிகே இருக்க செய்தே –
மகாஆபத்து தசையிலே–(சீதைக்கு வந்தது ஆபத்து -இவளுக்கு மகா ஆபத்து -) –
இவ்வளவிலே கிருஷ்ணனே ரஷகன் -என்று மகா விசுவாசம் பண்ணி -மகா சபா மத்யே இவள் லஜ்ஜையை விட்டது இறே அரிது –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் -அதாவது -ஸ்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வ வியாபாரங்களை விட்டான் -ஒரு சேவகனுடைய நாயை -ஒரு சேவகன் அடிக்க -அவன் அது பொறாமல் -அடித்தவனோடே எதிர்த்து பொருது -அவனையும் கொன்று -தானும் குத்திக் கொள்வதாக-( நாயைப் பிரிந்து இருக்க மாட்டாமல் ) இருக்கிற படியைக் கண்டு -ஒரு சூத்திர சேதனன் தந் அபிமானத்தில் ஒதுங்கினது என்னும் இவ்வளவுக்காக தன்னை அழிய மாறின படி கண்டால்-பரம சேதனன் அபிமானத்தில் ஒதுங்கினால் அவன் என் படுமோ என்று -ஸ்வ ரக்ஷண வியாபாரங்களை (அடைய முழுவதும் ) விட்டு அந்த நாயோபாதி யாகத் தம்மை அனுசந்தித்து கொண்டு அப்போதே வந்து திரு கண்ண மங்கையில் பத்தராவி திரு வாசலில் கைப் புடையிலே புகுந்து கண் வளர்ந்தார் என்று பிரசித்தம் இறே-
( பகவான் கர்த்தா -நம் காவல் அவனால் செய்யப்படும் –சக்தி லஜ்ஜை வியாபாரம் விட்டமை -ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டம்-அத்ருஷ்டங்களைக் கொடுக்கும் வியாபாரங்களைச் சொன்னவாறு -கிருஷ்ணனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களை நேராக கண்டவள் அன்றோ திரௌபதி -விசுவாசம் பிறக்கலாம் –ஷூத்ர சேவகன் ஷூத்ர ஐந்து கண்டு அனுமானித்து இவருக்கு விசுவாசம் —ஆகவே இது ஸ்ரேஷ்டம் -அதிருஷ்டம் பெற்று கொடுக்கும் வியாபாரங்களை விட வேண்டும் என்றபடி -உபாய பாவம் துளியும் கூடாதே –வியாபாரம் விட்டது உபாய பரமான வியாபாரங்கள் என்றது போலே -நாயேன் வந்து அடைந்தேன் -உயர்ந்தவர் கிஞ்சித் உண்டே -நாயைப் போலே அனுசந்தித்து –திரு வாசலிலே கைக் புடையில்-நாய் படுக்கும் அத்தை பார்த்து இவர் நினைவு –கிருஹ பாலநம் நாய் போலே கிருஹ த்வார சயனம் இவரது -என்றவாறு-ப்ராணான் பரித்யஜ்ய ஹரிகி ரஷிதவ்ய –பிராணனை விட்டாவது காப்பாற்ற வேண்டும் -அது அர்த்தம் இல்லை – பிராணனை விட்டுத் தான் ரஷிக்க வேண்டும் என்றாரே பெருமாள் )
—————————————-
இனி உபேய அதிகாரிகளில் பிரதானரான -இளைய பெருமாள் படியை விஸ்தரேண அருளிச் செய்கிறார் –
சூரணை-83-
பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றைப் பெருக்கின படியால் –
ஒப் பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் கொற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –
(சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் -நான் என் தந்தையை இழக்க வில்லை-இவன் இருக்கவே என்றாரே பெருமாளும் –அழும்-தொழும் ஸ்நேஹ பாஷ்ப அஞ்சலியோடே ருசிர சானுக்களிலே கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்குச் சரணே சரண் என்று வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -127–அட்ட சோறு-ஆன உணவு – அடுகிற சோறு-ஆகும் உணவு – இங்கு த்ருஷ்டாந்தம் கைங்கர்யத்தில் அபி நிவேசம் காட்ட -)
(ஆய் ஸ்வாமிகள்-உபேய அதிகாரி க்ருத்யம் -அருளிச் செய்யும் பொழுது ஆதி சேஷன் -இளைய பெருமாள் என்பதால் முதலிலே அருளிச் செய்கிறார் –
நாட்டுக்கு கட்டின காப்பு –பட்டாபிஷேகம் -வன வாசத்துக்கு மாற்றிய பெருமாள் -பித்ரு வசன பரிபாலனராய் -கங்கணம் கட்டி என்றவாறு- அத்தைக் காட்டுக்கு மாற்றி –
ரக்ஷணம் தீக்ஷை –கொடிய காட்டுக்கு -முகம் மலர்ந்து போகும் பொழுது –அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதே —சிறு தொட்டில் இணை நீங்கும் படி ஸூ நிக்தரான இளைய பெருமாள் -பிரிந்தால் தரியாமையை முன்னிட்டு பின் சென்று பிரியில் இலேன் -அக் குளத்தில் மீன் போலே முஹூர்த்தம் கூட ஜீவிக்க மாட்டோம் -தண்ணீர் பசை இருக்கும் வரை தானே -கை விட்டார் என்ற எண்ணம் உறைக்கும் வரை தான் ஜீவனம் –
கைங்கர்ய நிஷ்டனுக்கு பிரிந்தால் தரியாமை லக்ஷணம் –அப்புறம் அடுத்த பிரார்த்தனை -அஹம் சர்வம் கரிஷ்யாமி –சேஷத்வம் நிலை நிற்க அடிமை -சேஷ விருத்தியான கைங்கர்யம் –சேஷிக்கு அபிமதமான எல்லாக் கைங்கர்யம் -செய்ய வேண்டும் -செய்யும் இடத்து -அவன் ஏவிக் கொள்ளவும் வேண்டும் -தூங்கும் பொழுதும் மிதுனத்தில் கைங்கர்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை-இதுக்கும் மேலே முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் -ஸ்வதந்த்ர விஷம் தட்டாத படி –ஸூக்ரீவ மாருதி விபீஷணன் திருவடி புண்ய பாதம் சஞ்சாரத்தால் –சோஷணம் உலர்த்த-சுக்ரீவன் -ஸூர்ய குமாரன் – –தஹிக்கப் பட்டு மாருதியால் -வாயு குமாரன் அக்னியும் வாயு குமாரன் —நனைந்து விபீஷணன் நெக்கு உருகி – –ராவணன் பின் பிறந்தான் கிடைப்பானா என்று பெருமாள் நிற்கும் நிலை கண்டு நீராக உருக கண்களால் பருகினார் பெருமாள் –திருப் படை வீட்டிலே -புண்யாவாசனம் இப்படி –பெருமாள் நாச்சியார் உடன் நாடு களிக்கப் புக்கு -புகுந்த போது-தாமே யாகி அடிமை செய்து கைங்கர்யம் அபி நிவேசம் பெருக்கி -தொடர்ந்து -ஸ்ரீ பரதாதிகள் உடன் ஒப்பூண் உண்ண மாட்டாமல் – மற்றத் திருக் கைக்கு கூறு கொடுக்க மாட்டாத-சத்திரம் சாமரங்களை ஒரு கையாலே பிடித்து – –தம்முடைய ஆகாராந்தரம் சென்றால் குடையாம் திரு வெண் சாமரத்தையும்-இரண்டையும் ஏந்தி –சேதன சமாதி -கத்ய த்ரயம் -அனுரூபமாய் இருக்கும் இவை நித்ய ஸூரிகளே குடையும் சாமரமும் –ஆயுத ஆழ்வார் என்கிறோமே –பிரயோஜன கர்த்தாவாக இவர் நின்று தரித்து -பலர் செய்யும் அடிமையை தாம் ஒருவரே செய்தார்)
அதாவது –
பசியராய் இருப்பவர் -தங்கள் பசியின் கனத்தாலே -இதுக்கு
முன்பு ஆக்கின சோறும் -இப்போது ஆக்குகிற சோறும் -எல்லாம் நாமே உண்ண வேணும்
என்று மநோ ரதிக்குமா போலே -பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தரான இளைய பெருமாள் -படை வீட்டில் நின்றும் புறப்படுவதற்கு முன்பே கூடப் போவதாக உத்யோகிக்கிற படியை கொண்டு -நீர் நில்லும் -என்று நிர்பந்தித்து அருள –
குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் நேக வித்யதே க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவச அர்த்த பிரகல்பதே –என்றும் — கங்கை கடந்து ஏறின அன்று மீள விடுகைக்கு உறுப்பாக அவர் அநேகம் அருளிச் செய்ய-
ந ச சீதா த்வயா ஹீனா ந ச அஹமபி ராகவ -முஹுர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோ த்ருத்ருதவ் -என்றும் சொல்லுகையாலே – பிரியில் தாம் உளராக மாட்டாமையை முன்னிட்டு –குருஷ்வ மாம் -என்று அனந்தரத்தில்-
தனுராதாய ச குணம் கனித்ர பிடகாதர அக்ரதஸ் தே கமிஷ்யாமி பந்தாந மனு தர்சயன் ஆஹரிஷ்யாமி தே நித்யம் மூலாநிச பலாநி ச வந்யாணி யாநி சாத்யணி ஸ்வஆகாராணி தபஸ்வினாம் -என்கையாலே ஸ்வ சேஷத்வ அநு குணமாக அடிமை செய்ய வேணும் -என்றும்-தத் அனந்தரத்திலே-பவாம்ஸ் து சஹா வைதேஹ்யா கிரிசா அனுஸூ ரம்ஸ்யதே –
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச ச -என்கையாலே — அது தன்னிலும் இன்ன இன்னடிமை என்றுஒரு நியதி இன்றியே எல்லா அடிமையும் செய்ய வேணும் –
பஞ்சவடியில் எழுந்து அருளின போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு -பிரதேசத்தை பார்த்து -பர்ண சாலையை சமையும் என்ன–ஏவ முக்தஸ் து ராமேண லஷ்மணஸ் சம்யகாஞ்சலி சீதா சமஷம் காகுத்ஸ்மிதம் வசதம பிரவீத் -என்று நம் தலையிலே ஸ்வாதந்த்ர்யத்தை வைத்த போதே -பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் -பிராட்டி முன்னிலையாக கையும் அஞ்சலியுமாக நின்று –
பரவா நஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேச க்ரிய தாமிதி மாம் வத-என்கையாலே அடிமை செய்யும் அளவில் – ஸ்வா தந்தர்யம் ஆகிற தோஷம் கலசாதபடி -உசித கைங்கர்யங்களிலே ஏவிக் கொள்ள வேணும் என்று -பிரார்த்தித்தார் -என்கை –
படை வீட்டில் -இத்யாதி -திருப் படை வீட்டில் எழுந்து அருளி வந்து புகுந்து திரு அபிஷேகம்
பண்ணி அருளின போது -தம்மோடு கூட அடிமை செய்கைக்கு ஒருவரும் இல்லாத ஒரு
தனிக் காட்டில் -தாமே அடிமை செய்து -கைங்கர்ய அபி நிவேசத்தை பெருக்குகையாலே –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினவன் ஒப்பூண் உண்ண மாட்டாதவன் போலே –
ஸ்ரீ பரதாழ்வான் தொடக்கமானவர்களோடு ஒக்க தாமும் ஒரு அடிமை செய்து நிற்க மாட்டாதே –திரு வெண் கொற்றக் குடையை எடுக்கை -திரு வெண் சாமரம் பரிமாறுகை ஆகிய இரண்டு அடிமையை ஏக காலத்தில் செய்தார் -என்கை –இந்த விருத்தாந்தம் தான் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை –சத்ர சாமர பாணிஸ் து லஷ்மண அனுஜகாமாகா–அயோ -16 என்கிறது ஸ்ரீ ராமாயணம் அன்றோ என்னில் –
காட்டுக்கு எழுந்து அருளுவதற்கு முன்னே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து –
தம்முடைய திவ்ய அந்தபுரத்தில் நின்றும் புறப்பட்டு -சக்கரவர்த்தி திரு மாளிகையை நோக்கித் திரு தேரில் ஏறி பெருமாள் எழுந்து அருளின போது -இளைய பெருமாள் செய்த விருத்தாந்தமாக திரு அயோத்யா காண்டத்தில் சொல்லப் பட்டது ஆகையாலே -இவ்விடத்துக்கு அது சேராது –
ஆனால் இவர் என் கொண்டு இப்படி அருளி செய்தார் என்னில் –பாத்ம புராணம் பிரக்ரியையாலே அருளி செய்தார் –
அத தஸ்மின் தினே புண்யே சுப லக்னே சுன்விதே
ராகவச்ய அபிஷேகார்த்தம் மங்களம் சக்ரிரே ஜனா -என்று தொடங்கி பரக்க
சொல்லிக் கொண்டு வந்து –மந்திர பூத ஜலைஸ் சுத்தைர் முநயஸ் சம்ஸ்ரித வ்ரதா-
ஜபந்தோ வைஷ்ணவான் ஸூக்தான் சதுர்வேத மயான் சுபான்
அபிஷேகம் ஸூபஞ்ச்சக்று காகுஸ்தம் ஜகதாம் பதிம்
தஸ்மின் ஸூபதமே லக்னே தேவ துந்து பயோ திவி
நிநேது புஷ்ப வர்ஷாணி வவர்ஷூச் ச சமந்ததா
திவ்யாம்பரைர் பூஷணைச் ச திவ்ய காந்த் தானுலே பனை
புஷ்பைர் நானா விதர் திவ்யர் தேவ்யா சஹா ரகூத்வஹா –
அலங்க்ருதஸ் ச ஸூஸூபே முநிபிர் வேத பாரகை
சத்ரஞ் ச சாமரம் திவ்யம் த்ருதவான் லஷ்மணஸ் ததா
பராஸ்வே பரத சத்ருனவ் தாளவ்ருந்தம் விவேஜது
தர்ப்பணம் ப்ரதவ் ஸ்ரீ மான் ராஷசேந்தரோ விபீஷண
ததார பூர்ண கலசம் ஸூக்ரீவோ வானரேஸ்வர
ஜாம்பவாம்ஸ் ச மகா தேஜோ புஷ்பமாலாம் மநோ ஹரம்
வாலி புத்ரஸ்து தாம்பூலம் ச கர்ப்பூரம் ததவ் பிரியாத்
ஹனுமான் தீபிகாம் திவ்யம் சூஷேணச்து த்வஜம் சுபம்
பரிவார்யா மகாத்மானாம் மந்த்ரினஸ் சமுபாசிரே -என்று
பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாம் அத்யாத்தில்-சொல்லப் பட்டது இறே-
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் -என்றது தோற்ற இறே –
திரு வெண் கொற்றக் குடையும் திரு வெண் சாமரத்தையும் தரித்து -என்று அருளிச் செய்தது –
(ஸ்ரீ ராமாயணத்தில் யுத்த காண்டம் சத்ருக்கனன் பிடித்ததாக சொல்லி —
சத்ர- எடுத்துக் கை நீட்டிக் கொடுப்பதாக -உள்ளது -த்ருதவான்-இல்லையே -)
——————————————————–
சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –
( ஆய் ஸ்வாமிகள் -இளைய பெருமாளை தனித்து அருளிச் செய்து -ஏற்றத்துக்காக இங்கே மூவரையும் -பிராணனை விட்டு கைங்கர்யம் செய்த இவர்கள் ஸ்ரேஷ்டம் என்றவாறு —
இம் மூவரில் சிந்தயந்தி ஸ்ரேஷ்டம் -தானே தேகம் போனதே இவளுக்கு
மிதுன விஸ்லேஷத்தில் தம்மை அழிய மாறி ரஷித்த பெரிய உடையாரும் -மங்களா சாசனம் பண்ணி –சேஷிக்கு கைங்கர்யம் செய்ய உபகரணம் உபேக்ஷித்த இவர்கள் ப்ரேம பாரவசயத்தால் -அழிவுக்கு இட்ட சரக்காக்கி -பர ப்ரஹ்மம் நினைத்து தத் பவதி அபேதி –தத் பாவ பாவம் ஆபன்ன -ஐக்கியம் அடைந்து பாவனை நினைத்து அவனாகவே ஆகி-ஆடிப்பாடி -பிரகலாதன் நம்மாழ்வார் அநுகாரம் –தத் பாவம் -அவனாக நினைத்துக் கொண்டு -இந்திரனும் மாம் உபாஸ்வ-அந்தர்யாமி -சிந்தையந்தியும் அப்படியே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் –தன்னடையே போனது -உபேக்ஷித்து விட வேண்டாத படி –ப்ரேமம் ருசி இருந்தால் தானே கைங்கர்யம் சித்திக்கும் இதுவே அதிகாரம் –கிருஷ்ண விரக ஸ்நேஹம் ஆத்மாவை தாண்டி எலும்பை உருக்குவதற்கும் மேலே அவன் திருவடிகளில் சேரப்பெற்று – சதம் பித்ரு சமம் -பெருமாள் தானே பெரிய உடையாரைப் பற்றி அருளிச் செய்ய -சிறகுக்கு கீழே வர்த்திக்க ஆசைப்பட்டு வந்து இழந்தேன் -உடையார் பெருமாளை உடைய சக்கரவர்த்தி- இவர் பெரிய உடையார் –
(பிரியில் தரியாமை -இளைய பெருமாள் -உடம்பை விடுகை அரிது –
தாம் ஒருவர் மட்டு இல்லாமல் குடும்பமாக உடம்பை விட்டது அரிது –
உடம்பு தன்னடையே விட்டது அரிதிலும் அரிது -காலத்தால் பிந்தியதாய் இருந்தாலும் சிந்தையந்தி விருத்தாந்தம் இறுதியில் இதனாலே இளைய பெருமாளுக்கு பின்பு அருளிச் செய்தார்)
பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள் –
ஸ்ரீ ஜடாயு மகா ராஜரை பெரிய உடையார் -என்று ஆய்த்து நம் முதலிகள் அருளி செய்தது –
இவர்தாம் -பஞ்சவடியில் பெருமாள் எழுந்து அருளி -தம்மை அங்கீகரித்து –
இஹா வத்ஸ்யாமி சௌமித்ரே சார்த்த மேதேன பஷிணா-என்றவன்று தொடங்கி
திருவடிகளுக்கு மிகவும் பரிவராய் -பெருமாள் எழுந்து அருளி இருக்கிற திவ்ய ஆஸ்ரமத்துக்கு ஆசன்னமாக வர்த்தியா நிற்கச் செய்தே -அசிந்திதமாக ராவணன் வந்து பிராட்டியைப் பிரித்துக் கொண்டு போக- அப்போது பிராட்டி இவரை ஒரு வ்ருஷத்தின் மேல் கண்டு -என்னை இவன் இப்படி அபஹரித்து போகா நின்றான் -என்று இவர் பேரைச் சொல்லிக் கூப்பிட -உறங்குகிறவர் இந்த ஆர்த்த த்வனியை கேட்டு உணர்ந்து -ராவணன் கொண்டு போகிற படியைக் கண்டு -உனக்கு இது தகாது காண்-என்று தர்ம உபதேசம் பண்ணின அளவில் அவன் கேளாமையால்- நம் பிராணனோடே இது கண்டு இருக்கக் கடவோம் அல்லோம் -யுத்தம் பண்ணி மீட்குதல் – இல்லையாகில் முடிதல் செய்யக் கடவோம் -என்று அத்யவசித்து -அதி பல பராக்ரமர் ஆகையாலே அவனோடே மகா யுத்தத்தை பண்ணி -அவன் கையாலே அடி பட்டு -விழுந்து தந் திரு மேனியை விட்டார் -இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ குடும்பமாக -திரு நாராயண புரத்தில்
வேத நாராயண பெருமாளை -சேவிக்கச் சென்று புகுந்த அளவில் -பர சமயிகள்
அந்த கோவிலிலே அக்னி பிரஷேபத்தை பண்ணி உள்ளு நின்றார்கள் எல்லாரும்
புறப்பட்டு ஓடி போகச் செய்தே -அந்த எம்பெருமான் திரு மேனிக்கு அழிவு வருகிற படியை கண்டு சகிக்க மாட்டாதே பிரேமாதிசயத்தாலே -தாமும் ஒக்க முடிவதாக அத்யவசித்து இவர் நிற்க்கையாலே – பிள்ளைகளும் இவரை விட்டு போகோம் என்று நிற்க -அவர்களும் தாமும் கூடுவதுக்கு உள்ளே நின்று திரு மேனியை விட்டார் என்று பிரசித்தம் இறே –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று -அதாவது –
காசித் ஆவச தஸ்யாந்தே ஸ்தித்வ த்ருஷ்ட்வா பஹிர் குரும்
தன்மயத்வேன கோவிந்தம் தத்யவ் மீலித லோசன
தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா தத ப்ராப்தி
மகா துக்க விலீ நாசேஷ பாதகா –
சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருஸ்ஸ்வா சதயா முக்திம் கதாநயா கோப கன்யகா-என்கிறபடியே
திரு குரவை யினன்று -திருக் குழலோசை கேட்டு -ஸ்ரீ பிருந்தாவனம் ஏறப் போவதாக புறப்பட்ட அளவிலே -குரு தர்சனத்தால் போக மாட்டாமல் நின்று – கிருஷ்ணனை த்யானம் பண்ணி -தத்கத சித்தை யாகையாலே வந்த நிர்மல சுகத்தாலும் – தத் அபிராப்தி நிபந்தனமான நிரவதிக துக்கத்தாலும் -ப்ரஷீண அசேஷ புண்ய பாபையாய்- தத் ஸ்மரணம் செல்லா நிற்க -தத் பிராப்த்ய அலாப க்லேசத்தால் தரிக்க மாட்டாமல் மூச்சு அடங்குகையாலே –இவளுக்கு தான் உபேஷிக்க வேண்டாதபடி தேஹம் தன்னடையே விட்டு கொண்டு நின்றது -என்கை –
——————————————-
ஆக -இப்படி நிதர்சன பூதர் படிகளைச் சொல்லி -இனி இவர்களைப் போலே இருக்க வேணும் என்றதின் கருத்தை அருளிச் செய்கிறார் –
சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —
உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னைப் பேணாமையும்
தரியாமையும்
வேணும் —
(ஆய் ஸ்வாமிகள்-தத் தத் கந்த ஸ்பர்சம் இல்லாத படி இருப்பதே கர்தவ்யம் -உபாய உபேய வைலக்ஷண்யம் நினைத்துக் கொண்டே -அந்த மஹாத்ம்யத்தாலே இந்த அதிகாரங்களைக் கொள்ள வேண்டும்-இப்படிச் செய்யா விடில் தத் தத் அதிகாரி பூர்த்தி கிட்டாது )
அதாவது –
உபாயத்துக்கு அதிகாரியாம் போது –
தன்னுடைய ரக்ஷணம் தானே பண்ணிக் கொள்கைக்கு உறுப்பான சக்தியும் –
தான் பரிகிரஹிக்கிற உபாயத்துக்கு விரோதிகள் ஆனவற்றை விடும் அளவில்
நாட்டார் சிரிக்கும் அதுக்கு கூசும் லஜ்ஜையும் –
தந் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ யத்னமும் கை விட வேணும் —
உபேயத்துக்கு-அதிகாரி ஆகும் போது
சேஷியை பிரியாது நின்று -எல்லா அடிமையும் அவன் ஏவின படி செய்ய
வேணும் (த்வய உத்தர வாக்யார்த்தம் இதுவே )என்ற பிரேமமும் –
அத் தலைக்கு ஒரு தீங்கு வரில் அது கண்டு ஆற்ற மாட்டாமல் தந் உடம்பை உபேஷிக்கையும்
தத் விக்ரஹ அனுபவ அலாபத்தில் தரித்து இருக்க மாட்டாமல் மூச்சு அடங்கும்படி யாகவும்
வேணும் என்றபடி –
ஆகையாலே அவர்களை போலே இருக்கை யாவது -இவ் வதிகாரங்களை உடையார் ஆகை-என்று கருத்து –
—————————————————-
விஷ்ணோ கார்யம் சமுதிச்ய தேக த்யாகோ யதா க்ருத ததா வைகுண்ட மாசாத்ய முக்தோ பவதி மானவே -என்று ஆக்நேய புராணத்திலும் –
தேவ கார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் யா பரி த்யஜேத் சாயாதி விஷ்ணு சாயுஜ்யமபி பாதக க்ருன் நர –என்று வாயவ்யத்திலும் –
ரங்கநாதம் சமாஸ்ரித்ய தேஹ த்யாகம் கரோதிய தஸ்ய வம்சே ம்ருதாஸ் சர்வே கச்சந் த்யாத் யந்திகம் லயம் -என்று (ஆத்யந்த்திக லயம் மோக்ஷம்)வாம நீயத்திலும் – சொல்லுகையாலும் -விசேஷித்து ஆஸ்வமேதிக பர்வதத்தில் -வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரத்தில் பஞ்சம அத்யாயத்திலே -அக்னி பிரவேசம் யச்சாபி குருதே மத் கதாத் மனா ச யாத் யக்னி ப்ரகாசேன வ்ரஜென் யானென மத் க்ருஹம் –என்று பகவான் தானே அருளிச் செய்கையாலும் – இப்படி மோஷ சாதனமாக சொல்லப் படுகிற -பகவத் தர்தமானே ஸ்வ தேக தியாகம் – அநந்ய சாதனான இவனுக்கு த்யாஜ்யம் அன்றோ – பிரபன்னரராய் இருக்கிற பிள்ளை திரு நறையூர் அரையர் இத்தை அனுஷ்டிப்பான் என் -என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை-86-
இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –
( ஆய் ஸ்வாமிகள்-திருமேனியை வலிய த்யஜிக்கை சாஸ்த்ர விருத்தம் ஆகாதோ என்ன —வைதம் -சாஸ்த்ர விதிப்படி –ஆத்ம ஹத்தி கூடாதே –பகவத் பிரேமானந்தனான இவனுக்கு –சரீர தியாகத்தை -த்யஜிக்கலாவது — இதம் குர்யாத்-விதி பிரயக்தம் -மூலமாகவோ -கோபாதி -கோபம் தாபம் இத்யாதி -மூலமாகவோ-நிஷித்தம் -சாஸ்திரம் விலக்கிய-சரீர தியாகம் -த்யஜிக்க வேண்டும் -சரீரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றபடி –பண்ணில் சாஸ்திரம் மீறிய அதிக்ரம பீதி உண்டாகும்-ப்ராப்த விஷய ராக ப்ராப்தமாய் -ஆசையால் -கண்ட இடத்தில் ஆசை இல்லை –அதனால் ப்ராப்த விஷய ஆசை -ஏற்புடையது -விதி அனுசாரம் பண்ண ஒட்டாதபடி காதல் கட்டுக்கு அடங்காமல் –மடல் எடுப்பது -போல்வன –வாசவத்தை சீதை போல்வாரை புகழ்ந்தது போலே –ராக ப்ரேரித்த-ந சாஸ்திரம் நைவ க்ரம-சரீர தியாகம் –வருமத்தில் கொத்தை இல்லையே -ஸூ தோஷத்தால் வருமதுவே தோஷம் -பிராப்த ராகத்தால் வருமத்தில் தோஷம் வராதே –தேச பக்தியால் வாஞ்சி நாதன் உயிர் விட்டாரே -கொண்டாடுகிறோம் -தியாகி பட்டம் வேறே –பொன்னாச்சியார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பாகவத கைங்கர்யம் தோடு -புரண்டு படுக்க –அசேதனம் போலே படுத்து இருக்க வேண்டும் -சைதன்யம் காட்டுவது தப்பு -திருட்டு தப்பு இல்லையே அங்கே–பாகவத ததீயாராதனம் பண்ணும் ஆசையால் அன்றோ –மாம் அநாதரித்து தர்மம் செய்தாலும் பாபமே கிட்டும் -என்னை அநாதரித்து தர்மம் செய்தால் பாபமாகவே ஆகும் -பயன் கிட்டாது மட்டுமே அல்லவே –பிரமாணம் –தர்மம் சாஷாத் அவனே தானே -பக்தியுடன் தர்ம கார்யம் செய்ய வேண்டும் -மத் ப்ரபாவத்தாலே -பண்ணப்பட்டது பாபமா புண்ணியமா என்பது இல்லை -இவர் விஷயமே முக்கியமே -உலகில் கிரியைக்கு மாறி -அவன் உடன் சம்பந்தம் பட்டவை எல்லாம் நல்ல குணமே –கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -சீறி அருளாதே –)
(தேக தியாகத்தால் -விஷ்ணு காரியமாக மோக்ஷம் -பல பிரமாணங்கள்-வம்சத்தில் உள்ளாருக்கும் மோக்ஷம் –வாமன புராணத்திலும் ஸ்ரீ ரெங்கநாதன் பற்றி உண்டே பண்ணினது -உபாயாந்தரம் ஆகாதோ என்றது மேலே சங்கை –சாஸ்த்ர வாக்கியங்கள் பார்த்தால் –நிஷ்க்ருஷ்ட வேஷம் -பார்த்தால் -குற்றம் வாராதோ —விசிஷ்ட வேஷ குற்றம் வாராது என்பதற்கு காட்டிய பிரமாணங்களால் நிஷ்க்ருஷ்ட வேஷத்துக்கு குற்றம் வருமே -என்னில் – இதுக்கும் ராக பிராப்தம் -என்பதால் – போக்யமாயும் பிராப்தமுமான பகவத் விஷயத்தில் –அபி நிவேசத்தால் வருமது-கஷ்டப்பட்டாவது விட முடியாதே -ஆகவே தேக தியாகத்தை கை விட வேண்டாம் -பிரபன்னனுக்கு -விசிஷ்ட வேஷம் தோஷம் வாராது என்றது-அவன் விஷயமாக பண்ணினால் சரி –அதுக்கு பிரபன்னனுக்கு கூடாதே என்பதற்கும் நிஷ்க்ருஷ்ட விஷத்துக்கும் குற்றம் இல்லை என்கிறார் – இத்தை பண்ணினது மோக்ஷம் போவதற்காக இல்லையே -பொறுக்க முடியாமல் அன்றோ தேக தியாகம் –1-இந்த புராண வசனங்களில் தேக தியாகம் பக்தி பிரஸ்தாபம் இல்லையே -பக்திக்கு அங்கமாக செய்வதாக சொல்ல வில்லையே –2-அடுத்து பல சம்பந்தம் ஸ்ருதமாகையாலே-மம க்ருஹம் வருகிறான் -என்று பலத்துடன் சேர்ந்தே சொல்வதால் -ஸ்வதந்த்ர கார்யம் ஆகிறதே-3-இது கர்மம் -அவருக்காக விடுகிறோம் ஞானம் -இவற்றுக்கு உபாயம் இல்லையே –கர்ம ஞானம் ஆத்ம சாஷாத்காரம் தானே -சாஷாத் மோக்ஷம் கிடையாதே-கர்ம ஞானங்களுக்கும் ஸ்வ தந்த்ர சாதனம் -ஜனகன் கர்மத்தால் ஜடபரதர் ஞானத்தால் பெற்றதாக உண்டே –கர்ம ஞான பக்தி அன்வயம் -என்று உண்டே –மூன்றுமே அங்கி மற்றவை அங்கங்கள் என்றவாறு உண்டே –ஸ்வ தந்த்ர உபாயம் இருக்குமே –பூர்வ பக்ஷம் வாதங்கள் இவை -1-அதிருஷ்ட சாதனம் -த்யாஜ்யம் அன்றோ -ஸ்வரூப ஹானி – நிஷ்ட ஹானியும் வருமே -சங்கை-விதித்தவை விட முடியாதே –நித்ய கர்மத்தில் –2-ராக ப்ராப்தத்தில் சாஸ்திரம் கூடாது என்றாலும் விட வேண்டும் –3-இங்கே தத் விபரீதம் கொள்ளலாமோ என்னில் – மோக்ஷம் அதிருஷ்ட -சாதனம் -பாரதந்தர்ய ரஹிதனுக்கு பிராப்தம் -தேஹ தியாகம் பண்ணுவது ஒரு யத்னம் தானே –பகவத் அத்யந்த திரு உள்ளம் படி நடப்பதே பிராப்தம் -மற்றை இருவரையும் சொல்லாதது -பெரிய உடையார் யுத்தத்தில்-பெருமாள் கச்ச என்று அனுப்பியதாலும் – தேக தியாகம் குற்றம் இருந்தாலும் பெருமாள் போக்கினதாக கொள்ளலாம் — சிந்தையந்திக்கு தன்னடையே போனதாலும் விரோதம் இல்லை – தாமே வேணும் என்று பிராணனை விட்டார்
அக்னி பிரவேசம் உபாயம் தானே -குற்றம் குற்றமே என்னில் –பிராப்தமுமான என்றது உசிதமுமான-ராக பிராப்தம் –பெருமாளை என்ன ஆனாலும் விடாதே -உசிதம் தானே –
இங்கு ராக பிராப்தம் உசித விஷயத்தில் தானே –துஸ்ஜதம் -விட முடியாதே —வழி அல்லா வழி யாகிலும் பெறுவோம் மடல் தூது அநுகாரம் பிரணய ரோஷங்கள்-காமன் சாமானை தொழுவது எல்லாம் உசித விஷய கர்தவ்யங்கள் போலே -)
அதாவது-
இதம் குர்யாத் -என்று ஒரு விதி பிரயுக்தமாய் வருமது இறே – பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இவனுக்கு கை விடல் ஆகாது-அங்கன் இன்றிக்கே தன் விரஹத்தால் ஆற்ற போகாதபடி போக்யமுமாய் பிராப்தமுமான விஷயத்தில் ராக பிரயுக்தமாய் வருமது வருந்தியும் கை விடப் போகாது இறே -என்கை–
————————————
வைதவம் வரும் அளவில் ஸூ த்யஜமாய் -ராக ப்ராப்தமாய் -வரும் அளவில் -துஸ் த்யஜமாவான் என் என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம் நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் –
(–சரீரம் விட்டது யத்னம் தானே பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் உபேய அதிகாரிக்கு இல்லையே என்றும் கீழ் அரும்பதத்தில் விளக்கிச் சொன்னதை இந்த சூரணையில் அருளிச் செய்கிறார் -உபாயம் -நினைக்க யத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் -ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை-பற்றுவது –கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி – உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி-தோழி -தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் –ப்ராப்ய தவரையால் பண்ணலாமே –மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே -)
(ஆய் ஸ்வாமிகள்-ஸ்வ தந்த்ர வஸ்துவே உபாயம் என்று பரதந்த்ர வஸ்து அனுசந்திக்க-துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -மார்பிலே கை வைத்து உறங்கலாம்-பெரியநம்பி ஸ்ரீரெங்கம் வராமல் பிராணனை விட்ட ஐதிக்யம் -நித்ய சேஷ விக்ரஹமே நித்ய உபேயம் என்கிற தத் விக்ரஹ வைலக்ஷண்ய ஞான அனுரூபமான அனுசந்தானம்-ஸூ யத்னத்திலே மூட்டும் -துரும்பும் கைங்கர்யத்துக்கு வரும் –எழுந்து ஆடும் படி ஸூ யத்னத்தில் ப்ரவர்த்திக்கும் -பணம் என்றால் பிணமும் ஆடுமே போலே -ஆகவே தன்னை ஸூயத்னத்திலே பிரவர்த்திப்பிக்கும் -நித்ய உபாயம் -நிவ்ருத்தி நிஷ்டை -நித்ய உபேயம் பிரவ்ருத்தி நிஷ்டை இரண்டையும் -பிறப்பித்து உபய அதிகாரத்தையும் நிலைப்பிக்கும் —பெருமாள் இயற்கையிலே உபேயம் தான் -போக்கற்று உபாயம் ஆக்குகிறோம் -கருமுகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்-)
(தேக தியாகம் தன்னையே புருஷார்த்தமாக நினைப்பதால் அந்த நினைவே இதிலே மூட்டும் —வெய்யோன் தோன்றான் பெண் பிறந்தார் துயரம் பார்க்க முடியாமல் –வந்தால் தான் -இரவு நீங்கும் என்ற ஆழ்வார் –ஊர் எல்லாம் துஞ்சி நீள் இரவாய் நீண்டதே-முடிந்து பிழைக்க ஒண்ணாத படி -தேகத்தை முடித்து ஆத்மாவை பிழைப்பிக்க நினைவு என்றபடி -)
உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது –
வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றது
ராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே –
வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –
———————————————–
இப்படி ஒரு சாதன புத்த்யா அன்றிக்கே -தத் விஷய ப்ராவண்ய அதிசயத்தாலே –
ஸ்வ தேகத்தை விடும்படியான நிலை விளையக் கூடுமோ என்ன -அருளிச் செய்கிறார் –
சூரணை-88-
அப்ராப்த விஷயங்களிலே சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய பரவணனுக்கு சொல்ல வேண்டா இறே –
(ஆய் ஸ்வாமிகள்-உயிரை விட்டாலும் அனுபவிப்பார் உண்டோ என்னில் -பிரவர்த்தகமான -விலக்க முடியாத தத் விஷயமான அபி நிவேசம் –எது தான் பண்ணாது –திருவாலி நகரிக்கோ இலங்கைக்கோ புகுவார் கொலோ – மடல் எடுக்கவோ அநுகாரம் பண்ணவோ வைக்கும் -ஸ்வரூப நாஸகம் -அபிராப்த ஹேய விஷயங்களில் -வருந்தியும் லபிக்க அதி சாகசங்களை செய்து இரா நின்றால்–ஸ்வரூப வர்த்தகமாகக் கொண்டு பிராப்தமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தை லபிக்க -அநிவாரித விலக்கப் படாத உபேய அதிகாரிக்கு-தன்னை அழிய மாறி யாகிலும் அவனை அனுபவிக்க சொல்ல வேணுமோ — கிம்புனர் நியாயம் சித்தம் அன்றோ -என்கை-வேசிக்காக தேவதை இடம் தனது தலையை அறுத்து கொண்டவன் விருத்தாந்தம் உண்டே)
அதாவது -ஸ்வரூப பிராப்தம் அல்லாத தேக விஷயங்களிலே பிரவணன் ஆனவன் –
தன்னை அழிய மாறி யாகிலும் -அவ் விஷயத்தை லபிக்க வேணும் என்று –
ஸ்வ தேக த்யாகத்தில் பிரவர்தியா நின்றால்-ஸ்வரூப பிரப்தமான விலக்ஷண விஷயத்தில் பிரவணன் ஆனவனுக்கு – அவ் விஷயத்தை பற்றி அழிய மாறுகை யாகிற இது கூடுமோ என்னும் இடம் கிம்புனர் நியாயம் சித்தம் அன்றோ -என்கை-
ஒரு வேச்யை அளவில் ஒருவன் அதி சக்தனாய்க் கொண்டு போருமவனாய் -அவளுக்கு வியாதி கனக்க வந்த அளவிலே – இவள் ஆறி எழுந்தவாறே நான் என் தலையை அரிந்து தருகிறேன் -என்று ஒரு தேவதைக்கு பிரார்த்தித்து – பின்பு தலையை அரிந்து -கொடுப்பது செய்தான் என்று பிரசித்தம் இறே –
——————————————
உபாய உபேய அதிகாரங்களுக்கு உடலாக மற்றும் சொன்ன அனுஷ்டானங்கள் போல் அன்றிக்கே – உபாய தயா சாஸ்திர சித்தம் ஆகையாலே -அநந்ய சாதனனுக்கு அந் அனுஷ்டானமான இந்த தேக த்யாகம் -ராக ப்ராப்தம் ஆகையாலே -துஸ் த்யஜமாய் இருந்ததே ஆகிலும் -உபாய கோடியிலே-அன்வயித்தது அன்றி -நில்லாதே -என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -89-
அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய கோடியில் அன்வயியாது —
(சக்தி லஜ்ஜை வியாவாராம் விடுகை போல் அன்றிக்கே தேக தியாகம் -உபாயம் என்று சாஸ்த்ர சித்தம் -அநந்ய சாத்யனுக்கு கொத்தை -செய்யக் கூடாதே –
காதல் ப்ரேமம் பேணாமை தரியாமை இல்லாததால் -இது உபாயம் என்று வேறே சாஸ்திரம் சொல்ல உபாய கோடியிலே சேரும் – ராக பிராப்தியாக செய்தாலும் உபாய கோடியிலே சேரும் இதுவும் -என்ற ஆஷேபம் வர – மேல் இரண்டு சூர்ணிகைகள் இதுக்கு சமாதானம் –
ஸூவ சக்தியாதிகள் உபாய அந்தர்பூதம் -பிரேமாதிகள் உபேய அந்தர்பூதம்
ராக பிராப்தியாலே தானே பேணாமையும் தரியாமையும் -அதே போலே தேக தியாகமும் -உபேய கோடியிலே சேரும் –அனுஷ்டானமும்–கீழே அருளிச் செய்த ஆறும் -அந் அனுஷ்டானமும்-தேக தியாகத்தை -இப்படி அருளிச் செய்கிறார் – ஜ்யோதிஷ்ட ஹோமம் -ஸ்வர்க்கம் -காம்ய கர்மம் -பலத்தில் விருப்பம் இல்லாமல் செய்தால் தத் அனு பாயம் ஆகும் -விநியோகம் பொறுத்து அர்த்தம் –நடுவில் பல இச்சை நஷ்டமானாலும் -சிஷ்ட கர்ஹைக்காக பூர்த்தி பண்ணினால் சாதனம் ஆகாதே -பூர்வ மீமாம்சையில் படிக்கப் பட்டதே –பராசரர் யாகம் பண்ண -சக்தி தன் தகப்பனாரை கொன்றதுக்கு -புலஸ்தியர் வஸிஷ்டர் சொல்ல நிறுத்த -தத்வ ஞானம் வர ஆசீர்வாதம் – சர்ப்ப யாகம் பண்ண -தக்ஷகன் இந்திரன் தேர் காலை கட்டி பிரார்த்திக்க –வியாசர் முதலானோர் தடுக்க பரிஷத் யாக பூர்த்தி பண்ணாமல் நிறுத்தி -இப்படி நடுவில் பல உண்டே –சர்வ தர்மான் பரித்யஜ்ய -த்ரிவித தியாகம் கீழேயே சொல்லி -தர்ம பலம் விட வேண்டும் என்று சொல்ல வேண்டாமே இங்கு தர்ம புத்தி உபாய புத்தி என்றே கொள்ள வேண்டும் -விநியோக ப்ருதக் நியாயம் -கர்மா யோகம் பக்தி யோகத்துக்கு அங்கம் கைங்கர்யம் ஆகுமே பிரபன்னனுக்கு –சாதனா புத்தி உடன் செய்தால் தானே சாதனம் ஆகும் -என்றால் விஷம் முடிக்க என்று தெரியாமல் உண்டாலும் முடிக்கும் -நெருப்பும் சுடுமே -லௌகிக விவகாரம் வேறே -அலௌகிக விவகாரம் வேறே என்று பிரிக்கிறார் – உபாய அன்வய கந்தம் இல்லை சாதன புத்தியால் இல்லாமல் ராகத்தால் பண்ணினால் )
அதாவது –
அனுஷ்டானமாக சொன்ன ஸ்வ சக்த்யாதிகளும் -ப்ரேமாதிகளும் – உபாய உபேய அதிகார அந்தர்பூதம் ( ஸ்வ சக்த்யாதிகளும் உபாய அதிகார அந்தர்பூதம்-ப்ரேமாதிகளும்- உபேய அதிகார அந்தர்பூதம்)ஆகையாலே -உபாய கோடியிலே அன்வயிதாப் போலே –
அந் அனுஷ்டானமாக சொன்ன –ஸ்வ தேக த்யாகமும் -உபாய புத்தியா அனுஷ்டிதம் அன்றிக்கே –ராக பிராப்தம் ஆகையாலே உபாய கோடியில் அன்வயியாது -உபேய அதிகாரத்தில் அந்தர் பவிக்கும் அத்தனை -என்கை –
உபாயதயா சாஸ்திர சித்தமே ஆகிலும் உபாய புத்த்யா அனுஷ்டிதம் ஆனதுக்கு இறே
உபாயத்வம் உள்ளது -அங்கன் அன்றாகில் -பிரபன்னனான அவன் உபாய புத்தி அற உபேய புத்த்யா பண்ணுகிற புண்ய தேச வாசாதிகளும்-(ஆதி சப்தம் -நித்ய கைங்கர்யங்கள் ) உபாய கோடியிலே அன்வயிக்க வேணும் இறே -(என்ன எண்ணத்துடன் செய்தான் என்பதே பார்க்கக் வேண்டும் -சாஸ்திரம் விதித்து இருந்தாலும் உபாய புத்தி இல்லாமல் உபேய புத்தியால் அனுஷ்ட்டித்தால் இது தவறு இல்லையே )
————————————————
அன்றிக்கே -இப் பிரவ்ருத்தி தான் -உபாய கோடியிலே அன்வயித்தது ஆகிலும் –
அநந்ய உபாயத்வத்துக்கு குலைதல் வரும் இத்தனை இறே -அது பிரேம பரவசருக்கு
அவத்யம் அன்று என்கைக்காக-பிரேம பரவசர் பிரவ்ருத்திகளை தர்சிப்பிக்கிறார் –
சூரணை -90-
அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –
(ஆய் ஸ்வாமிகள்–நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றவள் நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் என்றாளே முதல் பாசுரங்களிலே-உபாயாந்தர ப்ரவ்ருத்தியும்-உனக்கே நாம் ஆட் செய்வோம்-29- –உமக்கே ஆளாய் திரிகின்றோம் –திருமங்கையாழ்வார்-குலையும் படி —சூடகமே –யாம் அணிவோம் -ஸூ பிரயோஜனம் சொல்லி -அந்நிய உபேயத்வம்-ஓதி நாமம் குளித்து -நமக்கே நலம் ஆதலின் -ஸூ ரசத்வ அன்வயம் ஆகிய —உபேயாந்தர பிரவ்ருத்தி–உன்னையும் உம்பியும் தொழுதேன் – –அநந்ய சேஷத்வ விரோதி பிரவ்ருத்தியும் –ப்ராவண்யம் அடியாக மயர்வற மதி நலம் அருளப் பெற்ற –தெளியப் பெற்றவர்கள் இடம் -காணா நின்றோமே –நிஷித்த அனுஷ்டானத்தின் ஸ்வ பாவம் – போல் இல்லை நேரே நோன்பு –உபாய புத்தியா அனுஷ்டிதம் தானே இவை -ப்ரேம பரவசருக்கு குற்றம் இல்லை -ஸூ வசத்தில் இல்லையே )
(ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது-சூரணை -202-சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில் த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தைச் சொல்லுகிறது -என்கை–பரித்யஜ்ய –விட்டே பற்ற வேண்டும் -விட்டு இருந்தால் பற்று இல்லை -தியாகத்தை அனுவாதம் இல்லாமல் -தியாகம் விதி விதேயம் என்றவாறு-விடாவிடில் குற்றம் இல்லை அனுவாத பக்ஷத்தில் -விதியானால் குற்றம் வரும் -நிஷித்த அனுஷ்டானம் செய்தால் -அநிஷ்ட அன்வயத்தில் கொண்டு விடும்-பரதந்த்ரன் யத்னம் செய்தால் -உபாயத்வ புத்தி உண்டா இல்லையா என்னாமல் அநிஷ்டத்தில் கொண்டு விடுமே என்னில் உன்மத்தன் ஒருவன் -அழகிய மணவாளன் கிராமம் தெரியாமல் வர -பிராப்தி போலே -மாலை தொடுத்து விளக்கு எரிப்பதும்-உபாய புத்தியாக நினையானோ என்னில் இது வைதிக விவகாரம் -லௌகிக விவகாரம் இல்லை-ஏறிட்ட கட்டி ஆகாசத்தில் நில்லாமல் கீழே விழும் பலத்தோடு அன்வயம் உண்டே -உபாய கோஷ்ட்டியில் அன்வயத்தாலும் குற்றம் இல்லை என்று தனி சரமத்தில் இவரே அருளிச் செய்துள்ளார் –விநியோக நியாயம் -கைங்கர்ய ரூபமாக செய்தால் குற்றம் இல்லை என்றவாறு)
அநந்ய உபாயத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
திருந்தவே தோற்கின்றேன் –
நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் –
குதிரியாய் மடலூர்த்தும் -5-3–குஸ்தித ஸ்திரீயாய் நேர் வழியாக போகாமல் –
ஓதி நாமம் -9-3-
ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –
உலகறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
(சாத்தியம் கைப்பட்ட பின்பும் சாதனம் கை விடாமல் இன்றும் மடலை அஞ்சலி ஹஸ்தங்களுக்குள் வைத்து சேவை சாதிக்கிறார் –உபாயாந்தரம் என்ற நினைவால் இல்லையே ) என்று –நோன்பு நோற்கை-மடல் எடுக்கை -முதலான வியாபாரங்களில் இழிகை-
அநந்ய உபேயத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –அத் தலைக்கு அதிசயத்தை விளைக்கையே புருஷார்த்தம் என்று இருக்கை தவிர்ந்து –நமக்கே நலமாதலில் -என்றும்-தூ மலர் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும் (பர கத அதிசயம் இல்லாமல் ) தனக்கு அதிசயம் தேட தொடங்குகை –
அநந்ய தைவத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –காம தேவா உன்னையும் உம்பியையும் தொழுதேன் – பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் -என்று
காமன் பக்கலிலே தேவதா புத்தி பண்ணி ஆராதிக்கை –
காணா நின்றோம் இறே -என்றது –பிராப்ய வஸ்துவின் ப்ராவண்ய அதிசயத்தாலே-
பேரளவு உடையவர்கள் பக்கலில் உண்டாக காணா நின்றோம் இறே என்கை –
முன்பு சொன்ன பிரவ்ருத்திக்கு உபாய கோட்ய அன்வயம் வஸ்துகதயா வரும் என்று
கொள்ளுகிற மாத்ரம் இறே -அங்கன் இன்றிகே நேரே உபாய புத்த்யா அனுஷ்டிதமானவை இறே இவை —ஆகையால் பிரேம பரவஸருக்கு இது அவத்யம் அன்று என்று கருத்து –
————————————————————–
இத்தனையும் கலக்கத்தாலே வந்தவை இறே –அஞ்ஞானம் மூலமாய் வருமவை ஒன்றும் ஆதரணீயம் அன்றே என்ன – அருளிச் செய்கிறார் –
சூரணை -91-
ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–
(ஒரு அடி மண்ணுக்கு ஸ்வர்ணம் -சிறியது மிக விலை பெறும் -அடிக் கழஞ்சு பெறும்–ஞானம் பக்குவம் பட்டு விளையும் அஞ்ஞானத்தால் செய்யும் கார்யங்கள் -இப்படி –ஞான விபாக-ஞானம் கனிந்த நலம் -இது தான் ஞான விபாக கார்யம் -அவனை அடைய வேண்டும் என்பது ஞானம் –அது பக்குவமாகி அது எதனால் இப்பொழுதே கிடைக்க வில்லை ப்ரேமம் மிக்கு துடிப்பது )
(ஆய் ஸ்வாமிகள்-பாரதந்தர்ய போகத்வ அநந்யார்ஹத்வ பஞ்சகங்கள் -மடல் எடுத்தவை போல்வன பாரதந்தர்யத்துக்கு பஞ்சகம் -விருத்தம் -போகத்தவ அநந்யார்ஹத்வ -நமக்கே நலம் ஆதலால் போல்வன –ப்ரவ்ருத்திகள் ஹேது பேதத்தைப் பற்ற ஸ்லாக்கியங்களாக இருக்கும் – 1-சாஷாத்கார ஞானத்தின் விசேஷ பக்குவ நிலை –பக்தி காரியமே மடல் எடுக்கை போன்ற விருத்தி விசேஷங்கள் -2-கர்தவ்ய அகர்தவ்ய -விவேக திரோதய ஞானம் ஒழிந்த -பாரவஸ்ய ரூப அஞ்ஞானத்தாலே – 3-பக்தி பரவசராய்- சரீரம் த்யாஜ்யம்- காம சோமா பஜனாதிகள் போல்வன ஸ்லாக்கியங்களுமாய் பிரார்த்தனீயங்களாய்-இருக்கும் —ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நாம் –யாவதாத்மா பாவியாய் இருக்கும் நோய் —உற்ற நல் நோய் இது தேறினோம் —ஞான தசையில் வரும் அஞ்ஞானம் வேறே-இது ஸ்வரூப ஹானியை விளைவிக்கும் —-ஞான விபாக தசையில் வரும் அஞ்ஞானம் -கொண்டாடப் பட வேண்டியதே–பக்தி பாரவஸ்ய தசையில் -ஸ்வரூப வர்த்தகம் –சிறிய திருமடலில் விபவம் அழித்து பெரிய திருமடலில் அர்ச்சாவதாரங்களை அழிக்க —பகவான் சொத்துடன் சேர -பர பிரயோஜனத்துக்கு –அவன் முக விலாசம் பிரயோஜனம் -ப்ரீத்யர்த்தம் -கைங்கர்யம் —பதட்டம் பிரார்த்தனீயம் -விதுரர் இடம் பார்த்தோம் -மஹா மதி கொண்டாட்டம் உண்டே-)
(நிரதிசய போக்யத்வ புத்தி ஞானம் -இதன் விபாகம் அனுகூல வஸ்து இன்னும் கிடைக்கவில்லையே -என்கிற துடிப்பு —பழுதே பல பகலும் போயின — சாத்விக அபிமானம் கூடுமே போலே இதுவும் -அவஸ்தா விசேஷமான பக்தி மேலீட்டால் பிராப்த அப்ராப்த விவேக ஞானம் இல்லாத அஞ்ஞானத்தால் வரும் பிரவ்ருத்திகள் அதி ஸ்லாக்கியம்)
ஞான விபாகம் ஆவது -ஞானம் கனிந்த நலம் -என்கிறபடியே ஜ்ஞானத்தின் உடைய பரிபாக ரூபையான பக்தி –அதன் கார்யமான அஞ்ஞானம் ஆவது – அந்த பக்தி அதிசயத்தாலே வரும் ப்ராப்த அப்ராப்த விவேக அபாவம் -அத்தாலே வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் -அடிக் கழஞ்சு பெறும் -என்றது –அதி ஸ்லாக்யங்களாய்-இருக்கும் என்றபடி –
கர்ம நிபந்தனமான அஞ்ஞாநத்தாலே வருமவையே ஹேயங்கள் என்று கருத்து-
———————————————
ஆனாலும் இவ்வதி பிரவ்ருத்தி -இத் தலையில் பிரவ்ருத்தியில் ஒன்றையும்
சஹியாத சித்த உபாயத்தின் கார்ய கரத்வத்துக்கு பிரதி பந்தகம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
சூரணை -92-
உபாய பலமாய்
உபேய அந்தர் பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –
(நீராய் ஒரு கால் வந்து தோன்றாயே –வைகுந்ததில் இருப்பு கொள்ள முடியாமல்
கூப்பாடு தாங்காமல் –பெருமாள் பிரவ்ருத்தியை வளர்த்ததே –நீ மருவி அஞ்சாதே நின்று -சாம தான பேத தண்டம் அறிபவன் இருந்தாலும் அஞ்சாதே — உன்னை அனுப்பியவன் வேல் கொண்ட கலியன் பரகால நாயகி –ஓர் மாது என்றாலே போதும் –பதறிக்கொண்டு ஓடி வருவான் -இறையே இயம்பி கண்டால் போதுமே —அறிவிப்பார் இருந்தால் வருவான் -பொறுப்பு அவனது புருஷோத்தமன் –தேரழுந்தூர் திருக்கண்ணபுரம் -வழியில் பார்த்து -என் விஷயத்தில் திக் பிரமம் பிடித்து அன்றோ இருப்பான்-த்வரிக்கப் பண்ணும் அவனையும் –ஞான விபாக செயல் -பகவானுடைய கிருஷி பலம் -இத்தையே உபாய பலம் என்கிறார் ஸ்ருஷ்ட்டி அவதாராதி -ஞானம் கொடுத்தல்–மயர்வற மதிநலம் அருளி –பக்தி உழவன் –
இங்கு ஞான பிரதம்-மதி நலம் கொடுத்து தூது-மடல் இவை அனைத்தும் – –ஞானம் கனிந்த நலம் தானே இது-உபேய அந்தர்பூதம் -கிருஷிக்கு பலம் தானே உபேயம் -கைங்கர்ய ரூபமாகும் )
(ஆய் ஸ்வாமிகள்-பக்தியால் தூண்டப்படும் விருத்திகள் -பூர்வ பாவி உபாயம் பகவான் -சித்த உபாயத்துக்கு தடுக்காது –உபாய ஞான அனந்தர பாவியான -உபேய ப்ராவண்ய கார்யம் தானே இவை –தேக தியாகமும் இதிலே சேரும் –உபாய ஸ்வீ கார அனந்த பாவியான அனுகூல்யாதிகள் போலே சம்பாவிதமான — தத் பலமாக மடல் தூது -இத்யாதிகள் -உபேயத்தில் அந்தர்பூதம்-பூர்வ பாவியான உபாயத்துக்கு அனு தயா பாதக பிரதிபந்தகம் ஆகாது –பெருமாளுக்கு அதிசயம் -திரு நறையூர் நம்பிக்கு ஏற்றம் மடல் எடுத்ததால் –
சேஷ விருத்தி தானே –சித்த சாத்தியமான கைங்கர்யத்துக்கு நிகர் இது -)
உபாய பலம் -என்றது சித்த உபாயம் ஆனவன் பண்ணின கிருஷி பலம் என்றபடி –
மயர்வற மதி நலம் அருளினன் –பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –என்றும்-(பக்திக்கு உத்பாதகன் -அருளி -வளர்த்தவன் அன்றோ -)
ஏவம் பூத பிரவ்ருத்தி ஹேதுவான பக்திக்கு உத்பாதகனும் வர்த்தகனும் அவனே இறே –
ஆகையால் பக்தி பாரவஸ்ய நிபந்தனமான இப் பிரவ்ருத்தியை -உபாய பலம் -என்கிறது –
உபேய அந்தர் பூதமாய் இருக்குமது -என்றது – பிராப்ய தசையில் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு -இத் தலைபடுகிற அலமாப்பு எல்லாம் -நம்மை ஆசைப்பட்டு இப்படி படப் பெறுவதே என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பு ஆகையாலே –
மடல் எடுக்கை தொடக்கமான இந்த பிரவ்ருத்திகள் அவன் முக மலர்திக்காகப் பண்ணும்
கைங்கர்யத்தோ பாதியாகக் கொண்டு உபேயத்தில் அந்தர் பூதமாய் இருக்கும் என்கை –
உபாய பிரதி பந்தம் ஆகாது -என்றது-ஏவம் பூதமானது -உபாயத்தின் உடைய கார்ய கரத்வத்துக்கு விலக்காகாது-என்றபடி-
—————————————-
இப்படி மடல் எடுக்கை முதலானவை சித்த உபாய பிரதி பந்தகம் ஆகாது என்னும் இடம் சொல்லி – அவை தனக்கு சித்த உபாய சாம்யத்தை விவஷித்து அருளிச் செய்கிறார் மேல் –
சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —
(ஆய் ஸ்வாமிகள் -தத் பிராப்யர்த்தமாக இவற்றுக்கு ஸாதன பாவம் வந்தால் தான் என் —சித்த உபாயமான பகவானுக்கு சமம் –ஈஸ்வர ப்ரீதிக்கு சமம் -ஈஸ்வர கைங்கர்யத்துக்கு சமம் – இந்த மூன்றும் -தேக தியாகம் மடல் எடுப்பது தூது விடுவது இவைகள் –
விளம்ப அஸஹத்வம் –ஸாத்ய சமானம் -இரண்டு காரணங்கள்-
சித்த உபாயத்தைப் பற்ற – -உபாயாந்தரங்கள் ப்ரஹ்மதுக்கு சமானம் ஆகாதே –
இதே போலே மடல் எடுத்தல் தூது -தேக தியாகம் -இவற்றுக்கும் இதே இரண்டு காரணங்கள் -பகவான் கிருஷி பலம் தானே இவை – அவனைப் பற்றி காத்து இருக்காமல் விளம்பிக்காமல் பலன் கொடுக்கும்-மூன்றாவது காரணம் -சாத்திய ப்ராவண்யம் அடியாகத் தானே சாதனங்களில் இழிகிறான்– ஆகவே உபாயத்துக்கு பிரதிபந்தகம் ஆகாதே இவை –
சாதனத்வம் தப்பு இல்லை -சாதனாந்தர கூடாதே என்ன – இது அவனைக் காட்டிலும் வேறே பட்டது இல்லையே -சரணாகதி பண்ணி அதுக்கு பின் மடல் தூது அப்புறம் பெருமாள் வந்து -ஆகவே விஷயீகாரம் முன்னால் நடந்ததே -பின் ஏற்பட்டதே -சித்த சாதனம் பகவானை விட தூது விட்ட உடனே சரணாகதிக்கு அப்புறம் வந்தார் –சரணாகதி -மடல் தூது -பின்பே பிராப்தி அவனே உபாயம் –எதுக்கு உடனே வந்தார் -சரணாகதிக்கு இல்லை-தூது விட்டதுக்கும் மடல் எடுத்ததுக்கும் தானே – சித்த உபாயம் இவை என்ன தட்டு என் -சாத்தியம் -இவை நாம் செய்த கர்தவ்யமே என்று கொள்ளக் கூடாது அவனது கிருஷி பலம் பலித்தது ஆழ்வார் இடத்திலே தானே-பரம சேதன சாத்யம் இது யெனவே நமக்கு இவை சித்த உபாயம் தானே இது நமக்கு இல்லை ஈஸ்வர கிருஷிக்குத் தானே -உபாய பாவம் வராதே – தன்னால் இல்லை என்பதை உணர வேண்டும்–ஞான தசையில் பகவான் சித்த உபாயம் பிரேம தசையில் இவை சித்த உபாயம்–பிரபன்ன ஜட கூடஸ்தருக்கு தான் கிருஷி பலித்தது -பரம சேதன சாத்தியம் தானே — மேலும் சேஷிக்கு அதிசய கரம் ஆகையால்-சாத்தியமான -கைங்கர்யத்துக்கு சமானமாய் -சரணாகதி தான் இருப்பது –இதர சாதனங்கள் போலே இல்லாமல் – பலத்தில் வைஷம்யம் உண்டே -பக்தனுக்கு பிரபன்னனுக்கும் -திரு உள்ளத்தில் பட்டு இருக்குமே -ஸாத்ய சாமானத்தை மேலே கூட்டியும் அருளிச் செய்வார் (கீழே –92-உபாய பலமாய் உபேய அந்தர்பூதமுமாய் இருக்குமது உபாயத்துக்கு பிரதிபந்தகம் ஆகாது -என்றாரே கீழே -) -உபாய சமானம் மட்டும் ஆகும் -அப்பொழுது இங்கே விளம்ப அஸஹம் மட்டுமே இருக்கும் -இங்கே கூட்டினால் இரண்டு காரணங்களும் வரும் -ஹேது சாம்யத்தால் -இவையும் ஸாத்ய கைங்கர்யம் போலவே ஆகுமே — சீக்கிரமாக போய் கைங்கர்யம் அதனாலே ஏற்றம் இவற்றுக்கு என்றவாறு — தத் விக்ரஹ அனுபவ கைங்கர்யத்தில் அபி நிவேசத்தாலே இதிலே இழிகிறது-ஆகவே இவையும் சித்த சாதனமே என்னக் குறையில்லை –
ஆக பக்தி பரவஸ்ய கார்யமான காம பஜனாதிகள் உபேயத்தில் அன்வயமாகும் ஒழிய
உபாயத்துக்கு பிரதிபந்தகம் ஆகாது என்றவாறு)
சாத்ய வஸ்துவே சாதனம் ஆகையாலே -சாத்தியத்துக்கு சமானம் என்றும் –
பல விளம்பத்தை சஹியாதே சீக்கிரமாக கார்யம் செய்து கொடுக்கும் என்று இறே –
இதர சாதனங்களில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம் -சாத்தியத்தில் பிராவண்யம் அடியாக இறே இந்த சாதக பரிக்ரகம் தன்னில் இழிகிறது -அவை இரண்டும் இவற்றுக்கு உண்டு என்று கருத்து -எங்கனே என்னில் –
மடல் எடுக்கை முதலான பிரவ்ருத்திகள் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே –
கைங்கர்ய ரூப சாத்தியத்துக்கு சமானங்களாய் இருக்கையாலும் –
மடலூர்தல்-நோன்பு நோற்குதல்-செய்வன் என்று துணிந்த போதே –
சர்வேஸ்வரன் த்வரிதது கொண்டு வந்து இவர்கள் காலிலே விழும்படி
பண்ணிக் கொடுக்கையாலே -பல விளம்ப அசஹங்களாய் இருக்கையாலும் –
சித்த சாதனம் போலே இதர சாதனங்களில் காட்டிலும் ஏற்றத்தை உடையதாய் –
சாத்ய ப்ராவண்யம் அடியாக இவற்றில் இழிகிற ஆகாரமும் ஒத்து இருக்கையாலே –
இத்தால்-சித்த உபாயத்தை ஒழியவும் இது தானே கார்யம் செய்யவற்று ஆகையாலே-
தத் பிரதிபந்தகம் என்னும் தூஷணம் இல்லை என்று கருத்து –
அன்றிக்கே -(பாவனத்வ மாத்திரம் இல்லாமல் போக்யமாயும் இருக்குமே இவை )உபாய பிரதி பந்தகம் ஆகாது -என்றத்தை இன்னமும் முக பேதத்தால் உபபாதிக்கிறார் -சாத்ய -இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே –அதாவது -பால் மருந்தாம் போலே சாத்ய வஸ்து தானே சாதன ஆகையாலே-சாரஸ்யத்தில் சாத்யத்தோடு ஒத்து இருக்கும் என்றும் –
சாத்தியத்தை பிராபிக்கும் அளவில் கால விளம்பத்தைப் பொறாது கடுக பிராபித்து விடும் என்றும் அன்றே சாதனாந்தரத்தில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம்-
இப்போது இது சொல்லுகிறது-இவ் ஆகார த்வயமும் சாத்ய ப்ராவண்ய ஹேதுவாம் என்று தோற்றுகைக்காக-இப்படி ஆகையாலே – தன் அடியாக விளைந்து -க்ஷண கால விளம்பம் பொறாமல் துடிக்கும் படி முறுகடி இடுகிற சாத்ய ப்ராவண்யம் அடியாக இறே மடல் எடுக்கை முதலான இஸ் சாதனத்தில் இழிகிறது என்கை –
ஆகையால் ஏவம் பூத ப்ராவண்யத்தின் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு செய்கிற இப் பிரவ்ருத்திகள் உபாயம்-(பெருமாள் என்றபடி ) மேல் விழுந்து கார்யம் செய்கைக்கு உடலாம் இத்தனை அல்லது- தத் பிரதி பந்தகம் ஆகாது என்று கருத்து –
ஆக
இவனுக்கு வைதமாய் வருமது இறே த்யஜிக்க லாவது -சூரணை – 86-என்று தொடங்கி –
இவ்வளவு வர -பிள்ளை திரு நறையூர் அரையர் பிரவ்ருத்தி வ்யாஜத்தாலே –
பகவத் பிரபன்னனாய் இருந்தானே ஆகிலும் -உபேய பரன் ஆனவனுக்கு தத் விஷய ப்ராவண்யத்தால் வரும் ஸ்வ தேக த்யாகம் துஸ்த்யஜம் – உபாய புத்தா அனுஷ்டிதம் அல்லாமையாலே -அது தான் உபாய கோடியில் அன்வயியாது – வஸ்து கத்யா அன்வயித்தது ஆகிலும் பிரேம பரவஸ்ருக்கு தோஷாயவன்று- புத்தி பூர்வகமாக அனன்ய உபாயத்வாதிகள் குலையும் படியான ப்ரவ்ருத்திகள் தெளியக் கண்டவர்கள் பக்கலிலும் காண்கையாலே–இவை தான் அஞ்ஞான மூலமே ஆகிலும் பிரேம கார்யமான அஞ்ஞாநத்தாலே வந்தவை ஆகையாலே -அதி ஸ்லாக்யங்கள் – சித்தோ உபய பிரதி பந்தகம் ஆகாது -அவ்வளவு அன்றிக்கே அத்தோடு ஒக்க சொல்லலாம் படி அன்றோ இவற்றின் பெருமை என்று சொல்லுகையாலே உபேய அதிகாரத்தில் -தன்னைப் பேணாமை -என்று சொன்ன இது -அநந்ய சாதனத்வத்துக்கு சேருமோ என்னும் அதி சங்கா பரிஹாரம் பண்ணப் பட்டது –
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply