(உபாய ஸ்வீகார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-40/41-59-/60-79/80-114/115-244
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை -அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை -)
பிரபத்திக்கு தேச நியமம் -என்று -சூரணை -23 – தொடங்கி இவ்வளவும்
உபாய வர்ணாத்மிகையான (பிரபத்தி யினுடைய–உபாய பிரபத்தி இல்லை -உபாய வரனாக வரிப்பதே -என்று காட்டி அருளுகிறார்-பகவானை வரிப்பதாக சொல்ல வில்லை -பெருமாளும் பண்ணினார் பார்த்தோம் —அதனால் தான் இங்கே பகவத் வரணாத்மிகை என்று சொல்ல வில்லை) தேச காலாதி நியம அபாவத்தையும் -விஷய நியமும் தர்சிக்கப் பட்டது -இப்படி விஷய விசேஷத்தை தர்சிப்பித்த அநந்தரம் -பகவத் சாஸ்த்ராதி-ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் படி – சித்தமான அதிகாரி விசேஷங்களையும் பிரகாசிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -அதிகாரி விசேஷத்தை அருளி செய்கிறார் –
சூரணை -41-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –
( ஆய் ஸ்வாமிகள் -பிரபத்திக்கு நியதி விஷயமான இந்த அர்ச்சாவதாரத்தில் பர சமர்ப்பண ரூப பிரபத்தி –-பர ந்யாஸம் -ந்யஸ்த பரன்-இந்த சப்தம் இரு கலையாரும் கொள்ள வேண்டும் -பக்தி உபாயாந்தரம் -பிரபத்தி உபாயம் -உபாய பிரபத்தி மாற்றி -இரண்டாவது நிலை -பல பிரபத்தி மூன்றாவது நிலை -பகவான் அனுக்ரஹத்தால் அதிகாரி விசேஷம் -திருவடிகளே உபாயம் என்று ஏற்றுக் கொள்வது –பிரார்த்தனை சரண வரண ரூபமான கிரியை தான் பிரபத்தி ஸ்வீகாரம் பிரபத்தி -பிரபத்திக்கும் உபாயத்வம் உண்டு தேசிக சம்ப்ரதாயம் –அவரும் பகவானே உபாயம் -பிரதான உபாயம் -இது வியாஜ்ய மாத்திரை அமுக்கிய உபாயம் -பிள்ளை லோகாச்சார்யார் -பிரபத்திக்கு உபாயத்வம் இல்லை -மோக்ஷத்தை அனுபவிக்க யோக்யதை கொடுக்கும் –ஏற்றுக் கொள்ளும் தகுதி அர்ஹத்தை கொடுக்கும் -விசேஷணம் -அர்ஹத்தை உள்ளாரையும் இல்லாரையும் பிரிக்க –அதிகாரி விசேஷணம் என்றவாறு –ஸ்வதந்த்ர பிரபத்தி அங்க பிரபத்தி -என்று வேறே இரண்டு வகைகள் வேறே -இதுதான் கீதையில் சொல்லப்பட்டது –-உபாய பிரபத்தியா அனுபாய பிரபத்தி -லோக தேசிகர் -வேதாந்த தேசிகர் இரண்டு சம்பிரதாயங்கள் –என்றவாறு –
ந்யாஸ தசகம் -10 ஸ்லோகங்கள் அஹம் மத் ரக்ஷண பரம் பலம் என்னது இல்லை –
அஹம் ந மம நானும் என்னுடையவன் அல்லேன் -என்னை ரக்ஷிப்பவனும் நான் அல்லேன் பலனும் நான் அல்லேன் —பொறுப்பை சமர்ப்பித்தல் பர சமர்ப்பணம் என்கிறார் -திருமந்திர அர்த்தம் -சப்தத்தில் குழப்பம் இல்லை –யோஜனா பேதம் தான் —பிரபத்தி பண்ண வேண்டாம் என்று தென் ஆச்சார்ய சம்பிரதாயமும் இல்லை -உபாய ரூபம் தான் இல்லை -பல ரூபம் தான் -பர சமர்ப்பணம் அனைவருக்கும் உண்டு பர சமர்ப்பண ரூப பிரவ்ருத்தியைப் -பிரபத்தியைப் பண்ணும் –நிவ்ருத்தி அதிகாரிகள் -என்கிறார் -சாதன ரூப பிரவ்ருத்தி இல்லை -பல ரூபமே – பிரபதன ஹேது ரூபத்தால் மூவர் -கீழே அதிகாரி நியமம் இல்லை என்றாரே –சரணாகதி பண்ண வந்தவர்கள் மூவகைப்பட்டவர்கள் என்றபடி –அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசரும்–அங்கே பன்மை – இங்கே மூவர் ஒருமை -இந்த ஹேதுவின் படி வந்தவர்களுக்குள் அதிகாரி நியமம் இல்லை -என்று காட்டவே- அனைவருக்கும் யோக்யதை உண்டு -ப்ரபத்திக்கு வந்தவர்களில் ஹேது பொறுத்து மூவகை -மூவர் ஒருமை -மேல் அஞ்ஞருமாய் ஞானத்திகர் பக்தி பரவஸர் பன்மை -வியக்திகள் பலர் )
அதாவது –
சௌலப்யாதி குண பூர்த்தியாலே பிரபத்திக்கு நியத விஷயமான இச் அர்ச்சாவதாரத்தில்
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் -பிரபதன ஹேது பேதத்தாலே -மூன்று வகை பட்டு
இருப்பர்கள்-என்கை–
————————————-
அவர்கள் யார் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -42-
அஞ்ஞரும்
ஞானாதிகரும்
பக்தி பரவஸரும் —
அஞ்ஞர் ஆகிறார் -பகவல் லாபத்துக்கு உறுப்பாக சாதனா அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஞானம் இல்லாதவர்கள் -அஞ்ஞானம் அசக்திக்கும் உப லஷணம்-
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் அஞ்ஞான அசக்திகள் அன்று-
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –சூரணை – 115- -என்று மேலே இவர் தானே-அருளி செய்கிறார் இறே –
ஞானாதிகர் ஆகிறார் –ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தேயும் -பகவத் யத்ந்த பரதந்த்ரமான ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனத்தாலே- உபயாந்தரங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று-பரித்யஜிக்கைக்கு ஈடான ஞான பூர்த்தி உடையவர்கள் –
பக்தி பரவஸர் ஆகிறார் –ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க ஷமர் அல்லாதபடி-
பகவத் பிரேம அதிசயத்தாலே சிதில கரணராய் இருக்கும் அவர்கள் –
( பக்தி யோக அனுஷ்டானத்துக்கு -1–ஸ்வாத்யாய -வேதம் கற்கும் ஞானம் -2–இந்திரியங்கள் வசம்-3-சாஸ்திரம் அனுமதித்த த்ரை வர்ணிகர்–4-விளம்பமாக பிராப்தி வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் தன்மை ஆகிய நான்கும் வேண்டுமே -இவற்றினுடைய -ஒவ் ஒன்றிலும் இல்லாதவர் பிரபத்திக்கு அதிகாரிகள் -நான்கும் இல்லா விட்டால் தான் என்று இல்லை –திருமந்திரத்தில் நமஸ் சப்தம் -ஸூ ரக்ஷண உபாய பிரவ்ருத்தி அநர்ஹத்வ ரூப – அத்யந்த பாரதந்தர்யம் –யாதாம்ய ஸ்வரூப ஞானம் -உபாய பிரவ்ருத்தியிவ் பிராயச்சித்த விதி சாஸ்திரம் விதிக்கும் -ஆகிஞ்சன்யம் —ஸூஅபேக்ஷித பிரத அத்யந்த அபிமத(நாம் அபேஷிக்கும் மோஷ ப்ரதனுக்கு அபிமதமாக இருக்கும் பிரபத்தி )-அந்நிய ஸூவீய உபாய பிரவ்ருத்தி -இதுவே உபாயாந்தரம் -பற்றாமல் – பகவத் அத்யந்த அபிமத ஜனங்கள்–விஸ்வாசம் இல்லாத பலமில்லாத நரர்களே உபாயாந்தரங்களுக்குப் போகிறார்கள்-வியாசாதிகள் –உபாயாந்தர ப்ரவ்ருத்தி- பிராரப்த அதீத வாசனையால் –வந்தது –இவர்களும் பிரபத்தி நிஷ்டர்கள் -பக்தி பாரவஸ்யத்தால் கலங்க வில்லை-பர்வத அணு -வாசி -உண்ணும் சோறு இத்யாதி -ஆழ்வாராதிகள் -விளம்பம் பொறுக்காமல் -)
———————————————–
இப்படி இவ் வஞ்ஞானாதிகள் அடியாக பிரபத்தி பண்ணினவர்கள் இன்னார் என்னும் இடம்
காணலாம் இடம் உண்டோ என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
சூரணை -43-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவஸ்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –
(ஆய் ஸ்வாமிகள் -சரணாகதி தவிர இதர சாதனங்கள் சொன்னால் சரணாகதி சாதனம் என்றதாகுமே -இதர சாதனங்கள் ஈஸ்வரனை தவிர என்றபடி
இதர சாதனங்களை பற்றி அறியாமலே வந்தான் -அன்றிக்கே அறிந்து பண்ண அரிது என்றும் அஞ்ஞானம் -எளிது என்னும் ஞானம் இருக்க வேண்டுமே –
அத்தையே செய்வான் -அறிவதற்கு அரியது என்றபடி ஸ்தூல தர்சிகள் நம் போல்வார் —அவை இரண்டுக்கும் எளிதான –கர்ம ஞான பக்தி மூன்று உள்ளதே இரண்டு என்றது ஞான சக்திகளுக்கு -அறிவதற்கும் அனுஷ்டிப்பதற்கும் அரிது –அவை -தாழ்ச்சி
இதர சாதனம் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் -அத்யந்த பரதந்தர்யம் —பிரபதனம் ஸ்வரூப பிராப்தம் என்ற ஞானம் இல்லாமல் -என்றுமாம் -இப்படி மூன்று வகை அஞ்ஞானம் –
இந்த அறியாமை வந்தால் எப்படி வருவான் சங்கை -என்னில் தெரியாமலும் வருகிறார்கள் –
அறிந்து வந்தவன் அடுத்த கோஷ்ட்டியில் சேருவானே –
துஷ்கரத்வாதி பிரதிபத்தியால் விடுவது இரண்டுக்கும் ஒக்கும் – அஞ்ஞானம் அசக்திக்கும் உப லக்ஷணம்
சாதனாந்தரம்-அத்யந்த பாரதந்த்ர ஸ்வரூபத்துக்கு நாஸகம் -பிரபதனம் ஸ்வரூப அனுரூபம் அறிந்த -நாதமுனிகள் போலே
மூன்றாவது -பகவத் பிரசாதம் அடியாக -பக்தி -மயர்வற மதி நலம் அருளப்பெற்றவர் –சஹஜ பக்தி –பக்தியால் கலங்கி -துடிப்பால்-
த்வரை மிகுத்து -ஞான காலுஷ்யம் –தெளிவான ஞானம் கலங்கின பக்தியில் மூட்ட -)
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் -என்றது -இதர உபாய அனுஷ்டானத்தில் இழிகைக்கு
ஈடான ஞானாதிகள் முதலிலே இல்லாமையாலே– (மேலோட்டமாக தெரிந்தவர்கள் -)
அநந்ய கதிகளாய் கொண்டு -பகவத் விஷயத்திலே பர ந்யாஸம் பண்ணினவர்கள் என்ற படி –(மேலே ந்யஸ்த பரர் இரண்டாவது -உபாயாந்தர சூன்யத்தை பர ந்யாஸம் – பர சமர்ப்பணம் சப்தம் மூன்றாவது வகைக்கு –ஸந் ந்யாஸம் நன்றாக விடப் பட்டது –நிர்ப்பர-நிர்ப்பய – -)அஸ்மாதாதிகள் -என்று ஸ்வ நைச்ய அனுசந்தனத்தாலே மந்த அதிகாரிகளோடே தம்மையும் கூட்டி அருளிச் செய்கிறார் –(நைச்ய அநுசந்தானம் -தோஷங்களை சொல்லிக் கொள்வார்கள் ஞானிகள் -)
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்றது -உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாசகம் என்று
நடுங்கும் படியான ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனத்தாலே வந்த ஞான பூர்த்தியாலே
அநந்ய கதிகளாய் கொண்டு ஸ்வரூப அனுரூபமாக பகவதி நியஸ்த பரர் ஆனவர்கள் -என்றபடி – ஆச்சார்யர்கள் -இந்த வர்க்கம் –தாயார் அவஸ்தை –அத்யந்த பாரதந்தர்யம் -நாத யமுனா யதிவராதிகள் -(உபாயாந்தரங்கள் என்று சொல்லும் படி த்வரையால் பிரவ்ருத்தியும் கூடவே கூடாதே – சக்தி இருந்தவனுக்கு பக்தி தான் பண்ண வேணும் என்றால் பிரபத்திக்கு வர முடியாதே -நாத யாமுனாதிகளுக்கு பக்தி இருந்தாலும் – விளம்ப பலனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னவும் கூடாதே – புருஷோத்தம வித்யை அறிந்து பக்தி பண்ணினவர்களுக்கும் அவதார ரஹஸ்யம் அறிந்த பக்திமான்களுக்கும் சரீர அவசாநத்தாலே பிராப்தி உண்டே –உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாஸகத்வம் -ஒரே ஞானாதியத்தாலே)
பக்தி பாரவஸ்யத்தாலே பிரபன்னர் -என்றது –பகவத் பிரேம பௌஷ்கல்யத்தாலே
கால் ஆலும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-என்றும் –
இட்ட கால் இட்ட கை —திருவாய் மொழி -7 -2 -4 -என்றும் சொல்லுகிறபடி
சிதில கரணராய் இருக்கையாலே -சாதன அனுஷ்டானத்துக்கு ஆள் அன்றிக்கே –
அநந்ய கதிகளாய் கொண்டு -அவன் பக்கலிலே பர சமர்ப்பணம் பண்ணினவர்கள் என்ற படி (பர ந்யாஸம் —நியஸ்த பரர்- பர சமர்ப்பணம்-மூன்றும் பர்யாய சப்தங்கள் -ரஷ்யா பரம் நம்மது அல்ல என்பதே -)
பக்தி பரவசருக்கு சாதன அனுஷ்டானம் பண்ண போகாது என்னும் இடம் –
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து-(பக்திக்குப் பரவசப்பட்டு-) நான் எங்கு உற்றேனும் அல்லேன் –திரு வாய் மொழி -5 -7 -2 -என்றும் –
என் கொள்வன் –திருவாய் மொழி -5 -1 -4 -என்ற பாட்டிலும் ஆழ்வார் ஸூஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே
(கடலிலே விழுமா போலே -சித்த சாதனங்களிலும் சாதனா அனுஷ்டானம் பண்ணுபவர்களிலும் இல்லேன் -இங்கு அங்கு -இங்கு மனசு ஓட்டலை -அங்கும் போகவில்லை -என்றுமாம் -அனுபவம் பொழுது போக்கும் அருளிச் செயல்களிலே நம் பூர்வாச்சார்யர்கள் –
என் கொள்வன்-எந்த பிரயோஜனத்தை கொள்வேன் உன்னை தவிர -ஸ்வரூபத்துக்கு தக்க பாசுரம் சொல்லியும் – பக்திக்கு வசப்பட்ட நெஞ்சை இரும்பு போல் வலிய நெஞ்சமாக்கி -கண்ணநீர் கரந்து மாற்றி நின் கண் நெருங்க வைத்து –ஆத்மாவை சரீரத்துடன் பிரிய ஷமன் அல்லேன் –-கையார் சக்கரத்து -மெய்யே பெற்று ஒழிந்தேன் என்ற பதிகம் – -ஆசை இருப்பதாக நடித்தேன் -என்றவாறு -)
———————————
இப்படி அஞ்ஞாநாதிகள் ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகைக்கு மூலம் இன்னது என்கிறார் -(திவ்ய தேசம் ஒவ் ஒன்றிலும் ஒவ் ஒரு குணம் பிரதானம்- ஊற்றம் -ப்ராசுர்யம் – உறைப்பு –என்று சொன்னால் போலே -)
சூரணை -44-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —
அதாவது
அஞ்ஞான அசக்திகளும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்
பகவத் பக்தியும் –
இவை மூன்றிலும் மூவருக்கும் அன்வயமுண்டாய் இருக்கச் செய்தே ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும் இவற்றில் ஒரொன்றே இவ் அதிகாரிகள் பக்கல் உறைத்து இருக்கையாலே என்கை
இத்தால் முற்பட்டவர்கள் பக்கல் ஞான பக்திகள் இரண்டும் குறைந்து -அஞ்ஞானமே விஞ்சி இருக்கும்-(சேஷத்வ பாரதந்தர்ய ஞானம் மேலோட்டமாக இருக்கும் – சரணாகதி வந்தவர்கள் தானே இவர்களும் -முமுஷுத்வம் மாத்திரம் -பக்தி இன்மையும் உண்டே இவர்களுக்கு)
நடுவில் அவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அல்பமாய் -பக்தியும் அளவு பட்டு -ஞானமே விஞ்சி இருக்கும் -(வாசனை இன்னும் போகாமல் துளி மிஞ்சி இருக்கும் –சாஷாத்கார ரூப ஞானம் இல்லையே –இவர்களுக்கும் -தர்சன சமானான ஆகாரம் இல்லை -பக்தியும் அளவுபட்டு என்றது ஆழ்வார்கள் போலே இல்லையே -என்றவாறு -)
பிற்பட்டவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அத் அல்பமாய் –(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -ஆழ்வார்களுக்கு உருவ வெளிப்பாடு உண்டே-தர்சன சமானாத்காரம் உண்டு- வாசனை போனதால் தானே உருவ வெளிப்படை -கொஞ்சம் துளி சரீரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்குமே –இன்னும் துளி இருக்கும் -சரீரம் இருப்பதால் –)ஸ்வரூப ஞானமும் குறைவற்று இருக்கச் செய்தே — ப்ரேமமே கரை புரண்டு இருக்கும் —பக்தி பார்வஸ்யம் -எப்போது கொடுப்பானா காத்து இருப்போம் என்று இல்லாமல்– காஷ்ட லோகாதிகளைப் போல் இருக்க முடியாமை –கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ என்பார்களே
ஆகையால் எல்லாம் எல்லார் பக்கலிலும் உண்டே ஆகிலும் -அல்பங்களானவை கிடக்க செய்தே அதிகமானதுவே அவ்வவருக்கு பிரபதன ஹேதுவாம் என்றது ஆய்த்து –
இந்த யோஜனைக்கு ஒரு குறை உண்டு –மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களுக்கும் அஞ்ஞானம் சிறிது கிடக்கிறது உண்டு என்று கொள்ள வேண்டி வருகையாலே -ஆனால் செய்வது என் என்னில் — ஆழ்வார்கள் சரீரம் அவன் உகப்பதாலே தானே -ஆகவே அஞ்ஞானம் அத் அல்பம் கூட இல்லை –ஆனால் தங்கள் அனுசந்தானம் பண்ணி பக்தி பாரவஸ்யத்தால் வந்தோம் என்று அனுசந்தானம் பற்ற என்றபடி –
ஊற்றத்தை பற்ற –என்கிற இத்தை அனுசந்தான பரமாக்கி யோஜிக்கும் அளவில் இவ் விரோதம் இல்லை –அப்போது -இப்படி -இத்யாதிக்கு -அஞ்ஞான அசக்திகளும் -ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும் -பகவத் பக்தியும் – ஆகிய இம் மூன்றின் உடையவும் அனுசந்தானம் மூவர்க்கும் ஏதேனும் ஒருபடி உண்டாய் இருக்க செய்தே ஒரொன்றே இவ் அதிகாரிகளுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும் -இவற்றில் ஒரொன்றே இவ் அதிகாரிகளுக்கு
ஊற்றம் ஆகையாலே என்று பொருளாகக் கடவது -(ஊற்றம் என்பதற்கு இருப்பதைப் பற்ற என்று கொள்ளாமல் அவர்கள் சொல்லிக் கொண்டு அனுசந்திப்பதைப் பற்றி என்றும் கொண்டால் குறையில்லையே-)அதாவது -அநந்ய கதிகளாய் பிரபன்னராகைக்கு உடலான அஞ்ஞானாதி த்ரய அனுசந்தாநாமும் மூவர்க்கும் உண்டானாலும் -மூன்றிலும் வைத்துக் கொண்டு பிரசுரமானதே தம்தாமுக்கு அநந்ய கதிகளாய் பிரபத்தியில் இழிகைக்கு ஹேதுவாக அனுசந்தித்து இருக்கையாலே என்றபடி –
இதில் –
பிரதம அதிகாரிகளுக்கு அஞ்ஞான அனுசந்தானம் ஸ்வ ரசம் –
நடுவு சொன்னவர்களுக்கு பிரமாணிகர் ஆகையாலே -அஞ்ஞானத்தின் உடைய ச வாசன நிவ்ருத்தி கூடாமையால் அஞ்ஞான அனுசந்தானம் கூடும் -பிற்பட்டவர்கள் மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஆகையாலே அஞ்ஞான அனுசந்தானம் நைச்ய நிபந்தநமாம் இத்தனை
————————————————
இவ் வஞ்ஞானாதி த்ரயத்துக்கு காரணம் இன்னது என்கிறார் –
சூரணை -45-
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –
(ஆய் ஸ்வாமிகள் ஹேது த்ரயத்துக்கும் காரண த்ரயங்களை அருளிச் செய்கிறார் துஜ்ஜேயத்வமும் துஷ்கரத்வம் பிராகிருத கரண சங்கோச நிபந்தமாக வரும் —
பிராப்தி அபிராப்தி ஸ்வரூப அனுசந்தான நிபந்தம் -பாரவஸ்யம் பகவத் வைலக்ஷண்ய ஞானம் பற்றி வருவதால் -)
மூன்று தத்வத்தையும் பற்றி வரும் -என்றது -சாதன அனுஷ்டானத்திலே அஞ்ஞான அசக்திகளுக்கு மூலம் –கர்ம நிபந்தனமான அசித் சம்பந்தம் ஆகையாலே -அஞ்ஞானம் அசித் தத்தவத்தை பற்றி வரும் -(நித்ய ஸூரிகள் இங்கே வருவது கர்ம நிபந்தம் இல்லை- பகவத் இச்சா நிபந்தமாக தானே இங்கே வருகிறார்கள்)-இதர சாதனங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று பரித்யஜ்யைக்கு உடலான ஞான பூர்த்திக்கு அடி-மத்யம பதத்தில்-நம – சொல்லுகிற ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனம் ஆகையாலே-(உபாய த்வாரா ஸூ ரக்ஷகத்வம் இல்லை -அநந்யார்ஹ சரண்யன் -என்று அறிந்தவர்கள் -அத்யந்த பரதந்த்ரர்கள் -)
ஞானாதிக்யம் ஆத்மா தத்தவத்தை பற்றி வரும் –
ஒன்றையும் அடைவு பட-(அங்கங்களையும் அங்கி யையும் -அடைவு பட – )அனுஷ்டிக்க மாட்டாதபடி கரண சைதில்யத்தை பண்ணும் பக்தி வ்ருத்திக்கு காரணம் –காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய் மொழி -5- 3- 4- என்னும் பகவத் விக்ரஹ வைலஷண்யம் ஆகையாலே -பக்தி பாரவஸ்யம் பகவத் தத்தவத்தை பற்றி வரும் -என்றபடி –
——————————————————–
அதிகாரி த்ரயத்துக்கும் -அஞானாதி த்ரயத்திலும் அந்வயம் உண்டாய் இருக்க
ஒரொன்றே பிரபதன ஹேதுவாக சொல்லுகிறது-ஊற்றத்தை பற்ற -என்று இறே சொல்லிற்று -இப்படி ஏக அதிகாரி பக்கலிலே இம் மூன்றும் உண்டு என்னும் இடம் காணலாம் இடம் உண்டோ என்ன-அருளி செய்கிறார் –
சூரணை -46-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –
(அங்கும் உள்ள மூன்றும் இல்லை –என்னை என் இடத்தில் காட்டிவிட்டாலோ -பிறர் இடத்தில் காட்டி விட்டாலோ -நீயே இன்று இல்லாமல் பின்பு தரலாம் என்று உள்ளேயோ –
என் செய்கேன் -அஞ்ஞானம் -ஞானாதிகர் -பக்தி பாரவஸ்யம் மூவரும் இப்படி கேட்கலாமே -என்றவாறு -மூவர் நிலையும்-அஸ்மதாதிகள் -ஆச்சார்யர்கள் -ஆழ்வாராதிகள் —ஆய் ஸ்வாமிகள் –பிரபந்த உக்தியிலே –அஞ்ஞனான நான் என் செய்கேன் – அப்ராப்தனான -நான் என் செய்கேன் -பக்தி பரவசனான நான் என் செய்கேன் -)
அதாவது-
எம்பெருமான் தம்முடைய ஆர்த்தி கண்டு இரங்க காணாமையாலே – தன்னை பெரும் இடத்தில் சில சாதன அனுஷ்டானம் பண்ண வேணும் என்று இருந்தானாக கொண்டு –உபயாந்தர அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாதபடி அஞ்ஞனான நான் என் செய்கேன் -(அழகாக சேவை சாதிக்கிறாயே -ஆர்த்தி கண்டு இரங்காமல் துடிக்கிறார் –திருமழிசை ஆழ்வாருக்கு எழுந்தாயே – உபாயந்தர அனுஷ்டானத்துக்கு அஞ்ஞானான நான் -சாஸ்திரம் கற்க தேகம் த்ரை வர்ணிகர் இல்லையே – மயர்வற மதி நலம் அருளினாய் நான் வாங்கிக் கொள்ள யோக்யதை உண்டோ அஞ்ஞானத்தில் தவிக்கிறேன்)
ஞானம் தந்தோமே என்னில் -நீ தந்த ஞானத்தால் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து
சாதன அனுஷ்டானம் அப்ராப்தம் என்று இருக்கிற -நான் என் செய்கேன் -(அடியேன் சிறிய ஞானத்தன்-நீர் அருளின ஞானமே உபாயாந்தரம் கூடாது அப்ராப்தம் என்று சொன்னீரே)
ஸ்வரூபத்துக்கு சேராதாகிலும்-உன்னை பெறலாமாகில்-இது தன்னை அனுஷ்டிக்கலாய்த்து இறே-ஞான மாத்ரத்தை தந்தாய் ஆகில் -பக்தி ரூபாபன்ன ஞானத்தை தருகையாலே -ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க ஷமன் அல்லாதபடி –பக்தி பரவசனான -நான் என் செய்கேன் -என்று-இம் மூன்றும் ஆழ்வாருக்கு விவஷிதம் ஆகையாலே அவ்விடத்தில் இம் மூன்றும் உண்டு என்கை –ஆகையால் -இவ்விடத்திலே காணலாம் -என்று கருத்து –
———-
ஆனால் இம் மூன்றும் அவ் விடத்தில் பிரபத்தி காரணம் ஆகிறதோ -என்ன –
அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் -என்கிறார் –
சூரணை -47-
அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –
(ஆய் ஸ்வாமிகள் –அந்த ஸூக்தி-ஆழ்வார் அருளிச் செய்த என் செய்கேன் என்றதில் -என்றவாறு -அஞ்ஞானம் அப்ராப்திகள் இவர் கண்ணிலே படாதே -பக்திக்கு பரவஸப் பட்டு உள்ளாரே)
அதாவது –
அவ்விடத்தில் பிரபத்தி யானது மூன்றிலும் வைத்து கொண்டு-ஊன்றி இருக்கிற பக்தி பாரவஸ்யத்தையே தனக்கு ஹேதுவாக பற்றி இருக்கும் என்றபடி –
——————————————
இந்த ஹேது த்ரயமடியாக வரும் பிரபத்திகளில் முக்கியம் எது என்ன அருளி செய்கிறார் –
சூரணை -48-
முக்கியம் அதுவே –
( ஆய் ஸ்வாமிகள்-ஈஸ்வர தத்துவத்தால் வந்த பக்தி பாரவஸ்யம் அடியாக செய்த பிரபத்தியே பிரதானம் –பேற்றில் இருக்கும் ருசி குறையற்று இருக்குமே -இதில் -(அரும்பத விளக்கம் )அடியேன் சிறிய ஞானத்தன் இதில் மிக்கோர் அயர்வுண்டே–அஞ்ஞானம் அடியாக ஆழ்வாருக்கு இதில்-எனது யாவி யார் யான் யார் -ஆத்ம ஞானாதிக்யத்தால்-அப்ராப்தம் அடியாக –ஆழ்வாருக்கு இதில்-ஊரவை கவ்வை தோழி என் செய்யும் பக்தி பாரவஸ்யத்தாலே நிஷேதம் -இதில் –மூன்றும் உண்டே ஆழ்வார் இடத்தில்–ப்ராப்ய ரசம் வளர்ந்து –அதிசய ஹேது தயா -தத் சீக்ர சித்தி ஹேதுதயா இதுவே ஏற்றம் என்றவாறு)
அதாவது பக்தி பாரவஸ்யம் அடியாக பிரபத்தி பண்ணும் இடத்தில்
ப்ராப்ய ருசி கண் அழிவு அற உண்டு ஆகையாலே -அதுவே முக்கியம் என்றபடி –
————————————————-
இவ் அதிகாரி த்ரயத்துக்கு பிரமாணம் உண்டோ என்ன -பிரதமம் பட்டர் அருளி செய்த
ஒரு ஸ்லோகத்தை யுதாஹரிக்கிறார் –
சூரணை -49-
அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –
(ஆய் ஸ்வாமிகள்-இம் மூன்றும் –என்றது மூன்று அதிகாரிகளையும் சொன்னவாறு -யுக்த அர்த்தத்துக்கு பிராமண உபாதானம் பண்ணுகிறார்-அஞ்ஞான ஹேதுகத்தவ ப்ரபத்தியையும் – ஞானாதிக்ய -ஹேதுக பிரபத்தி -பக்திர் பூம்யா -பக்தி பாரவஸ்யத்துக்கு -பக்தியின் எல்லை நிலம் ஹேதுகவாக)
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம்-கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜிதந்தாஹ்வைய மனோரஹஸ்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி –இஸ் ஸ்லோக அர்த்தம் -ஜிதந்தா வ்யாக்யான உபோத்காதத்திலே -(ஷடாசனம் நாலாயிரம் ஸ்தோத்திரங்கள் ரகஸ்ய த்ரயம் தனி ஸ்லோகாதி வியாக்கியானங்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –அவர் ஸ்ரீ ஸூக்திகளை- அப்படியே இங்கு எடுத்துக் காட்டி அருளுகிறார் மா முனிகள்– ஆழ்வார் ஆச்சார்யர்களை தவிர வேறு ஒன்றையும் சொல்லாமல் – உபதேச ரத்னமாலை பிறந்ததே ஸ்ரீ வைஷ்ணவ வைபவம் -11-பாசுரங்கள் இதுக்கும் -8-பாசுரங்கள் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் வைபவம் பற்றியும் -)
அவித்யாதோ -அஜ்ஞானத்தால்
தேவே பரிப்ருட தயாவா விதிதயா -த்ரிவித அபரிச்சேத பகவானிடத்தில் இருக்கும் ஞாநாதிக்யத்தால்–விதிதயா வேதனம் அறிகை
ஸ்வ பக்தேர்-பூம்நாவா -பக்தி பாரவஸ்யத்தால்
ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம்-உலகில் வேறு கதியில்லாமல் சரண் அடைந்தவர்களுக்கு
கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித -உபாயமாகவும் உபேயமாகவும் பகவான் ஹரியே இருப்பதாக
ஜிதந்தாஹ்வைய மனோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி-ஜிதாந்தா ஸ்லோக ஆரம்பத்தில் இந்த மந்த்ர ரஹஸ்யத்தில் அருளிச் செய்துள்ளார் என்று பட்டர் சாதிக்கிறார் என்று மா முனிகள் காட்டி அருளுகிறார்
பிரபத்திக்கு அதிகாரிகள் -அஞ்ஞரும் சர்வஞ்ஞரும் பக்தி பரவசரும் என்று த்ரிவிதமாக பட்டர் அருளி செய்தார் இறே -என்று தொடங்கி –
அஞ்ஞன் ஆகிறான் -பகவல் லாபத்துக்கு தன் பக்கல் ஞான சக்திகள் இல்லாதவன் –
சர்வஞ்ஞன் ஆகிறான் -தேச கால வஸ்துகளால் பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை
உடையவன்-(பரிப்ருட தயாவா-என்கிற சப்தத்தால் -) ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்தியம் என்று இருக்கும் அவன் -(ஞானாதிகன் -ஸ்வரூப யாதாம்ய ஞானம் உள்ளவர் -ஸூபிரவ்ருத்தி ஆத்மாவின் பாரதந்தர்யத்துக்கு விருத்தம் — வேறு ஒன்றால் சாத்தியம் என்றால் போவார்களோ என்னில் – போக மாட்டார்களே -இதனால் இரண்டுக்கும் விரோதம் இல்லையே- ஆத்ம ஸ்வரூபத்துக்கு அப்ராப்யம் -இங்கு அநந்ய சாத்யம் -வேறு ஒன்றால் அடைய முடியாதவன் -கொஞ்சம் மாற்றி இங்கு உள்ளது -அதற்கும் மேல் வியாக்யானம் உள்ளது )
பக்தி பரவசன் ஆகிறான் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தே -அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும்-பகவத் விஷயமொழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு பிராபகனுமாய் பிராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று-கதிர் கம்யச்சாஸௌ ஹரி–ஜிதந்தை என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை சர்வஞ்ஞனான ஸ்ரீ ஸௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே -என்கிறார் -என்று ஆச்சான் பிள்ளை அருளி செய்தார்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்ற இடத்தில் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பிரபதன-ஹேதுவாகச் சொல்லிற்று –இந்த ஸ்லோகத்தில் பகவத் அநந்ய சாத்யத்வ ஞானம் பிரபத்ன ஹேதுவாக-சொல்லிற்று –ஆகையால்-இரண்டும் ஞானாதிகருக்கு அநந்ய கதித்வ பூர்வகமான பிரபதனதுக்கு-ஹேதுவாம் என்று கொள்ள வேண்டும் –
கீழும் இது தானே அர்த்தமானாலோ என்னில் -ஒண்ணாது -இம் மூன்றும் மூன்று தத்வத்தையும்-பற்றி வரும் -என்றத்தோடு சேராமையாலே-(பரமாத்மா ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்று அநந்ய சாத்தியம் என்று உணர்ந்தவர்கள் –இம் மூன்றையும் மூன்றையும் பற்றி வருபவர்கள் – நடுவில் உள்ளார் ஜீவாத்மா யாதாம்ய ஞானத்தை பற்றி என்று சொன்னால் தானே பொருந்தும் -என்றவாறு -)
————————————-
அநந்தரம் -இவ் அர்த்த விஷயமாக -அகில ஜகன் மாதாவாய் -ஆப்த தமையான -பிராட்டி
லஷ்மீ தந்த்ரத்தில் அருளி செய்த வசனத்தை உபாதானம் பண்ணுகிறார் –
சூரணை -50-
இதம் சரணம் அஜ்ஞானாம் –
(ஆய் ஸ்வாமிகள் –அஞ்ஞானம் விஞ்ஞானம் திதிர்ஷா-மூன்றையும் சொல்லி -யுக்தம் -என்று இவ்வளவாய் அர்ச்சாவதார பிரபத்தி பண்ணும் மூன்று அதிகாரிகளை அருளிச் செய்து –ஆப்தர் -திரு மோகூர் ஆப்தன் – ஆப்ததமர்–ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் -ஆப்த தமை-பிராட்டி
இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்--17-100 -இந்த ஸ்லோகத்தில் –-திதிர்ஷதாம் விருப்பம் )
இதம் என்று பராமர்சிக்கிறது -கீழ் சொன்ன சரணா கதியை –அபாய உபாய நிர் முக்தா மத்யமாம் ஸ்திதி மாஸ்திதா-சரணாகதி ரக்ர்யைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ--99 -என்று இறே கீழ் சொல்லி நின்றது –(அபாயமாகிற உபாயாந்தரங்கள் -தொடாமல் நிர்முக்தர்கள் –
மத்திய பதம் நமஸ் பத நிஷ்டர்கள்-ஈஷா அக்ர -முன் நின்று சரணாகதி சம்சார கடலை தாண்டுவிக்கும் உபாயத்தில் இருந்தும் அபாயத்தில் இருந்தும் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி இரண்டையும் விட்டு அவனைப் பற்றி –அந்திம காலத்துக்கு பற்றுகையும் விடுகையும் உபாயம் இல்லை – விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம் என்று இருப்பவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம் இதுக்கு -)
இயம் -என்று ஸ்திரீ லிங்க நிர்த்தேசம் அன்றிக்கே –இதம் -என்று நபும்சக லிங்க வ்யத்யயம்-(சில கோசாரங்களில் இப்படி உண்டு என்பர் )-சரண சப்த விவஷையாலே-இதில் அஞ்ஞா சர்வஅஞ்ஞர்களை-ஸ்புடமாக சொல்லுகையாலே மேல் பக்தி பரவசரை சொல்லுகிறது என்று கொள்ள வேணும் –அதாவது அடுத்த ஸ்லோகத்தில் 100-இதம் திதீர்ஷதாம் பாரம் -என்றது – சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும்-த்வரையை உடையார்க்கு என்றபடி -(இது சம்சார ஆரணவத்தை சடக்கென தாண்ட விருப்பம் கொண்டவர்கள் என்றபடி)
ஆனந்த்ய மிச்சதாம் -என்றது ஸ்வரூப ப்ராப்த பரிபூர்ண பகவத் அனுபவத்தை பெற்றால் அல்லது தரிக்க மாட்டாதார்க்கு என்ற படி -இவை இரண்டும் பக்தி யினுடைய பூமாவாலே வரும் அவை இறே – பக்தி பாரவஸ்யம் உபாயாந்திர அனுஷ்டானத்தில் -அசக்திக்கும் உறுப்பாய் –அநிஷ்ட நிவ்ருத்தியிலும் -இஷ்ட பிராப்தியிலும் உண்டான விளம்ப அஷமதைக்கும் உடலாய் இறே இருப்பது – அதில் விளம்ப அஷமதைக்கு உடலான ஆகாரத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறது –ஆனால்-கீழ் அசக்திக்கு உடலாய் அன்றோ சொல்லிப் போந்தது -அதுக்கு இது பிரமாணமாமோ என்னில் -அதிகாரி த்ரைவித்யாம் தர்சிப்பிக்கிற இவ்வளவே- இவ்விடத்தில் அபேஷிதம் ஆகையாலே இது பிரமாணமாக சொல்ல தட்டில்லை – அவித்யாதா -என்கிற ஸ்லோகத்தில் -ஞானாதிக்யதுக்கு உடலாக சொன்னதும் -கீழ் சொல்லி வந்ததும் பின்னமாய் இருக்கச் செய்தே -அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணமாக அத்தைச் சொன்னாப் போலே –
————————————————————-
ஆக -பிரபத்திய அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணம் காட்டினாராய் நின்றார் கீழ் —
இந்த த்ரிவித பிரதிபத்தியிலும் –பக்தி பாரவஸ்ய பிரதிபத்யே முக்கியம் என்று இறே கீழ் சொல்லிற்று -ஏவம் பூத பிரபத்தி நிஷ்டர் ஆனவர்கள்-ஆழ்வார்கள் -தந் நிஷ்டை குலைந்து -பகவல் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூளுவது -அவன் வரக் கொள்ள அவனையும் உபேஷிப்பதாகிற இவற்றுக்கு நிதானம் ஏது என்ன -அருளிச் செய்கிறார்
சூரணை -51-
பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறந்தவாறே
இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –
(பக்தி பாரவஸ்யரை மட்டுமே இப்பொழுது பேசுகிறார் – அஞ்ஞரையும் ஞானாதிகரையும் விட்டு இதுவே பிராப்தி விளம்பம் இல்லாமல் ருசி வளர என்பதால் -அத்தைப் பற்றியே மேலே விவரித்து அருளுகிறார் –பக்தி பாரவஸ்யத்தியிலே வேறே வேறே அவஸ்தைகள் உண்டே -பக்குவம் வளர வளர –போகு நம்பி -என்னுடைய களகம் ஏறேல்- பந்து தந்து போ என்னலாமோ -பக்தி வளர வளர –ந சாஸ்திரம் -நைவ க்ரம–)
(ஆய் ஸ்வாமிகள் -பாரவஸ்ய பாக விசேஷத்தாலே -இப் பிரபத்தி குலையாதோ-சத்தா நிபந்தன பக்தி -பேற்றிலே த்வரை உண்டாக பக்தி பண்ணிக் கொண்டே கைங்கர்யமாக ப்ராப்ய ருசி வளர -1-இருப்பு -2-மாறி -3-வளர்ந்து -4-குலைந்து -5-தளர்ந்து -6-அடைந்து -இவ்வாறு ஆறு தசைகள் -கிருத பிரபத்தி அத்யாவசம் பஞ்சகமான-குலைந்து–ஆனந்தமாக அகலகில்லேன் 6-10–அடுத்து துக்கம் மிக்கு -அழுது- 7-1-மேலும் -7-2-புன புன பிரபத்தி பண்ணி அநுகாரம் மடல் எடுத்து பிரணய ரோஷம் –த்வரா ஈடுபாட்டின் அதிசய ரூப அவஸ்தா பேதங்கள் –பக்தி உத்பாதக இச்சா -விருப்பம் வளர்த்து –ஒரு தடவை பண்ண வேண்டும் உபாயாந்தரம் அஸஹ்யம் -மாஸூச -என்ன அருளிச் செய்தாலும் சோகப்படுவது–அத்யவசாயம் குலைந்தது போலவே –சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே -நிலை குலையக் கடவதாய் இருக்கும் )
பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறக்கை யாவது –(வேறே வேறே தசைகள் உண்டே -)
கரண சைதில்யத்தாலே ஸ்வ யத்ன ஷமர் அன்றிக்கே அவனே உபாயமாக அத்யவசித்து
அவன் வரவு பார்த்து இருக்கும் அவஸ்தை அளவு அன்றிக்கே -கண்ணாஞ் சுழலை இட்டு –
ஏதேனும் ஒருபடி ஆகிலும் -அவனை இப்போதே பெற வேண்டும் என்னும் அதிமாத்ர த்வரை அவஸ்தை விளைகை–(மடல் எடுத்தல்- தூது விடுதல் -காமன் சாமான்- அசேதனம் குயில் காலில் விழுந்து இருக்கும் அவஸ்தைகள் -)
இது -என்று பிரபத்தியை சொல்லுகிறது –தாத்ருசாவஸ்தை பிறந்தால் பிரபத்தி குலைகையாவது –என்னான் செய்கேன் -என்று ஸ்வ பிரபத்தியில் அந்வயம் அற்று பகவதி நியஸ்த பரராய் இருக்கும் இருப்பு குலைகை-(ஆழ்வார்கள் பண்ணின பிரதிபத்தி பிராப்யம் தராதே -அவனாலே பேறு -ருசி வளர வைக்க பக்தி உழவன் இத்தைக் கண்டு ஆனந்தித்து அன்றோ இவர்கள் விமல சரம சரீரத்தில் ஆசை கொண்டு இருக்கிறான் -)
————————————————
இப்படி பிரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் – அவஸ்தா பேதம் விளைக்கும் அத்தை அருளி செய்கிறார் –
சூரணை -52-
தன்னைப் பேணவும் பண்ணும் –
தரிக்கவும் பண்ணும் –
(ஆய் ஸ்வாமிகள்–மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே என்று தாயார் தலை மகளைப் பார்த்து அருளிச் செய்யும் அவஸ்தை -இதுக்கு மேலே-அயர்க்கும் -இந்த அலங்காரம் தன்னை உபேக்ஷிக்கப் பண்ணுமே என்று நினைத்து அயர்க்கும் -சீதா பிராட்டிக்கு வந்த நிலைமை
பின்பு தேறும் -அந்திம தசையில் தேறுமா போலே-மேலே மேலே தெளிவு பிறந்து வர மாட்டான் என்று நினைத்து தரிக்கவும் பண்ணும்–இவ்வாறு -நாநா ஸ்வ பாவங்களை பக்தி விளைவிக்கும் -இதனால் தான் பக்தி பாரவஸ்யம் அவனுக்கு மிகவும் திரு உள்ளம் உகக்கும்-ந சாஸ்திரம் -நைவ க்ரம-நமக்கு விசுவாசம் குலைவது நம்மைப் பற்றி –ஆழ்வார்களுக்கு ஹேது அவன் விஷயத்திலே -நெடு வாசி உண்டே -)
தன்னைப் பேணப் பண்ணுகை யாவது -காறை பூணும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -3 -7 -8 – இத்யாதியில் படியே அவன் வரவுக்கு உடலாக தன்னை அலங்கரிக்கும் படி பண்ணுகை –
அதாவது பகவத் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூட்டும் என்ற படி – இது –மடல் எடுக்கை -முதலான வற்றிலே மூட்டும் அதுக்கும் உப லஷணம் —
(தூது விட்டது பிரணய ரோஷம் போன்றன சுயம் உத்தியோகத்தல் -ஆத்ம ரக்ஷணம் -நமக்கே நலம் -ஓதி குளித்து இத்யாதி செய்வது-தன்னைப் பேணுகை -உடம்புக்கும் அலங்கார ஆத்ம ரக்ஷணம் போல்வன -ஸூவ யத்னம் -)
தரிக்கப் பண்ணுகை யாவது -அரை ஷணம் அவனை ஒழிய தரிக்க மாட்டாமையாலே –
அவன் வரவுக்கு உடலாக ஸ்வ யத்னத்திலே மூளும்படி பண்ணுவது தானே –
அவன் வரக் கொள்ள விளம்ப ரோஷத்தாலே –போகு நம்பி –ஏதுக்கு இது என் —கழக மேறேல் நம்பி – என்று அவனையும் உபேஷித்து தள்ளித் தரித்து இருக்கும் படி பண்ணுகை –
ஆகை இவை இரண்டாலும்-பேணவும் பண்ணும் -தரிக்கவும் பண்ணும் என்ற இரண்டுமே -என்னான் செய்கேன் -என்றும் –தரியேன் இனி -என்றும் -இருக்கும் இருப்பு பிரதி கோடியை விளைவிக்கும் என்றபடி –
ஆகையாலே பிரபத்தி நிஷ்டை குலைந்து ஸ்வ பிரவர்த்தி யாதிகளில் இழிகைக்கு அடி
பக்தியினுடைய அவஸ்தா பேதம் என்று கருத்து –
————————————————-
தன்னைப் பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்று எம்பெருமான் வருகைக்கு உடலாக க்ருஷி பண்ணுகையும்-அவன் வரக் கொள்ள அவனை உபேஷிக்கையுமாகிற பரஸ்பர விருத்த ஸ்வபாவங்களை விளைக்கும் படியை இறே சொல்லிற்று –இப்படி பக்தியானது ஸ்வ அவஸ்தா விசேஷங்களாலே சேதனருக்கு விளைக்கும் பரஸ்பர விருத்த ஸ்வபாவங்கள் தத் விஷய மாத்ரத்தில் அன்றிக்கே -தத் சம்பந்தி வஸ்துக்கள் விஷயமாகவும் காணலாம் என்கிறார் மேல் –
சூரணை -53-
இந்த ஸ்வபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திரு குழல் ஓசையிலும்
காணலாம் –
(அத்யந்த பக்தி யுக்தனுக்கு ந சாஸ்திரம் நைவ க்ரமம்-விருத்த ஸ்வ பாவங்கள் –இதை ஸ்தான த்ரய -பர பக்தி பர ஞான பரம பக்தி -ஸ்லோக த்ரய –ராமானுஜர் மூன்றையும் பிரார்த்தித்து –ஏழாவது அத்யாயம் அடுத்து அடுத்த ஸ்லோகங்கள் -வேறு வேறு அத்யாய ஸ்லோகங்கள் -ஸ்தான த்ரயம் –அங்கு அனுபவிக்க வேண்டியதையும் இங்கே பிரார்திக்கிறார் -ஆழ்வார்கள் பர ஞானம் பரம பக்தி இங்கு –ஸ்வீ க்ருத சித்த சாதனர் இத்தை சாத்தியமாக இரக்க ப்ராப்திக்கு முன்னே சித்திக்கும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -100-
இங்கேயே சேவை சாதித்து அனைத்தையும் அருளி -இங்கேயே வைத்து இருந்தது பகவத் சங்கல்ப வசத்தால் மட்டுமே -விஷயீ பக்தியின் அவஸ்தை –பகவத் தத்வம் மாறாது –இது மட்டும் இல்லை -பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் என்றது -பக்தி பக்குவப்பட்டு
நான்கு இடங்கள் -ஒவ் ஒன்றுக்கும் இரண்டு பாசுரங்கள் —
கல்யாண குணங்கள் -திருச் சரங்கள் -திரு நாமங்கள் -திருக் குழலோசை —
அழகால் கட்டுவது அனுகூலரை –பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் —
பக்தி விஷய பகவத் சம்பந்தம் போலே அவன் சம்பந்தம் கொண்ட இவையும் பல ஸ்வபாவங்கள் -ஆஸ்ரய தோஷத்தால் குலையத்தால் தான் -அதிகாரம் போகும் –
அவன் குணங்களால் தானே குலைந்தது -ஜீவாத்மாவின் தோஷங்களால் குலைய வில்லை-வெல்லும் வ்ருத்த விபூதிமான் அன்றோ -ஒப்பில்லாத அப்பன் அன்றோ -விஷயம் பகவான் -விஷயீ பக்தி -விஷய த்வகம் முதல் இரண்டும் விஷயி த்வகம் அடுத்த இரண்டும் ப்ரஹ்ம ஸூத்ரம்-இங்கே விஷயீ பக்தியின் அவஸ்தைகள் -)
இந்த ஸ்வபாவ விசேஷங்கள் -என்று -கீழ் சொன்னவை தன்னையே சொல்லுகிறது அன்று –
இப்படி பட்ட ஸ்வபாவ விசேஷங்கள் -என்றபடி –
அவை யாவன –அநு பாவ்ய விஷயம் ஒருபடி பட்டு இரா நிற்கச் செய்தே -அத்தை அநு பவிக்கிறவர்களுக்கு தாரகமாய் தோற்றுகையும்- பாதகமே தோற்றுகையும் –
கல்யாண குணங்கள்-இத்யாதி –கோவிந்தன் குணம் பாடி யாவி காத்து இருப்பேனே —நாச்சியார் திரு மொழி – 8- 3- -என்று தாரகமாகவும் –
வல் வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திரு வாய் மொழி – 8- 1- 8-என்று
பாதகமாகவும் -சொல்லுகையாலும் கல்யாண குண விஷயம் ஆகவும் –
சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –பெரிய திரு மொழி -7 -3 -4 என்று தாரகமாகவும் –
சரங்களே கொடியதாய் அடுகின்ற-என்று பாதகமாகவும் –பெரிய திருமொழி -10- 2- 9-
சொல்லுகையாலே திரு சர விஷயம் ஆகவும் –
திரு மாலை பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14 – என்று தாரகமாகவும் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -திரு வாய் மொழி -9 -5 -8 என்று பாதகமாகவும் -சொல்லுகையாலே-திரு நாம விஷயம் ஆகவும் –
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத வுன் குழலின் இன்னிசை போதராதே –பெருமாள் திரு மொழி -6 -9 -என்று தாரகமாகவும் –
அவனுடை தீம் குழலும் ஈருமாலோ -திரு வாய் மொழி -9 -8 -5 – என்று பாதகமாகவும் சொல்லுகையாலே – திரு குழலோசை விஷயமாகவும் காணலாம் என்றபடி –
என்றும் ஒக்க போக்யங்களாய் இருந்துள்ள கல்யாண குணாதிகள் தாரகமாக தோற்றுவது பாதகமாக தோற்றுவது ஆகிறது –அது போக்தாக்களான இவர்களுடைய பிரேம ஸ்வபாவ விசேஷங்களாலே இறே -அல்லது குணாதிகளின் ஸ்வரூப பேதத்தால் அன்றே -ஆகையால்-பக்த்ய அவஸ்தா பேத ஜநிதங்களான ஸ்வபாவ விசேஷங்கள் இவ்வோ வஸ்துகள் விஷயமாகவும் காணலாம் என்கிறது –
குணாதிகள் தாரகங்களாகவும் பாதகங்களாகவும் பேசுகிற இடத்தில்-இரண்டும் ஒருவர் பேச்சு அன்றிக்கே இருந்ததே ஆகிலும் –ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரகிருதிகள் ஆகையாலும் – எல்லாருடைய பக்தியும் –பகவத் பிரசாத லப்தையான பர பக்தி ஆகையாலும் –அந்த பக்தி ஸ்வபாவ விசேஷங்கள் காட்டுகிற மாத்ரமே இவ்விடத்தில்-அபேஷிதம் ஆகையாலே விரோதம் இல்லை –
சரங்களே கொடிதாய் அடுகின்ற -என்கிற இது பராஜித ராஷசர் பாசுரம் அன்றோ -அத்தை
சரங்கள் ஆண்ட-என்கைக்கு பிரதி கோடியாக சொல்லாமோ என்னில் –ராம விஜயம் தனக்கு இஷ்டம் ஆகையாலே-அந்த விஜயத்துக்கு இலக்காய்-தோற்ற ராஷசர் தசை பிறந்து -பிராட்டிமார் தசை பிறந்து பேசுமாப் போலே -தாமான தன்மை தோற்றாதே- தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் -என்று இறே இத் திரு மொழிக்கு வியாக்யானம் பண்ணி அருளுகிற ஆச்சார்யர்கள் அருளி செய்வது –
ஆகையால் தம்முடைய பிரேம ஸ்வபாவத்தாலே ததஸ்தாபன்னமான பின்பு -திரு சரங்கள்
பாதகமாய் ஆய்த்தும் தமக்கேயாய் தோற்றிப் பேசுகையாலே அப்படி சொல்லக் குறை இல்லை -பக்தி முற்றி ராக்ஷசர் அவஸ்தை அடைந்ததும் இவருக்கு உண்டே –
அதவா –
தன்னைப் பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்ற இவை இரண்டாலும் –
அவன் தானே வரும் அளவும் தரியாமல் வரவுக்கு உடலாய் யத்னிக்கப் பண்ணுவது –
வரக் கொள்ள ப்ரணய ரோஷத்தால் தள்ளித் தரித்து இருக்கப் பண்ணுவதாம் படியை இறே சொல்லிற்று -இப்படி விருத்த ஸ்வபாவங்களை ஓன்று தானே-பக்தி தானே விளைவிக்கும் என்பதற்குப் பல பிரமாணங்களைக் காட்டி அருளுகிறார் -இந்த -என்று தொடங்கி -அதாவது இப்படிப் பட்ட ஸ்வபாவ விசேஷங்கள் -கோவிந்தன் குணம் பாடி -என்று தொடங்கி – கீழ்ச் சொன்ன படியே -ஒரு தசையில் தாரகமாக பேசுவது-ஒரு தலையில் பாதகமாக போவதாம் படி -இவர்களுக்கு தரிப்பும் பாதையும் ஆகிற விருத்த ஸ்வபாவங்களைக் கல்யாண குணாதிகளிலேயும் காணலாம் என்கை –
ஆக
பிரபத்திக்கு –சூரணை – 23-என்று தொடங்கி -இவ்வளவாக
பிரபத்தி வைபவத்தையும்-23-33-
தத் (பிரபத்தி)விஷய -அர்ச்சா வைபவத்தையும்-34-40-
தத் அதிகாரி த்ரை வித்யத்தையும்-41-47-
த்ரிவித பிரபத்தியிலும் பக்தி பாரவஸ்ய ஹேதுக பிரபத்தி யினுடைய முக்யததையும்-48-50
அது தனக்கு ஸ்வ ஹேது பூத பக்த்ய அவஸ்தா பேதத்தால் வரும் குலைதலையும்-51-
அந்த பக்த்யா அவஸ்தா பேதம் செய்விக்கும் சங்கை களையும்-அம்சங்களையும்-52-53-
அருளிச் செய்தார் –
—————————————–
இப்பிரபத்தி தனக்கு –தர்ம புத்ராதிகளும்-என்று தொடங்கி -கீழ் உக்தரான அதிகாரிகள்
பக்கலிலே -சாதன தயா அனுஷ்டானம் காண்கையாலும்- கர்ம ஞான பக்தி பிரபத்திகள் -என்று உபாயங்களோடே சகபடிதமாய் போருகையாலும் –
யத் யேன காம காமேன ந சாத்யம் சாதனந்தரை முமுஷூணா யத் சாங்க்யேன யோகேன நச பக்தித ப்ராப்யதே பரமம் தாம யதோ நவர்த்ததே புன தேன தேனாப்யதே தத் தந்ந்த்யா சேனைவ மகாமுனே பரமாத்மாச தேனைவ சாத்யதே புருஷோத்தம -என்றும் –
இதம் சரணம் அஞ்ஞானம் -என்றும்-இப்படியே சாஸ்த்ரங்களில் இத்தை சாதனமாக சொல்லுகையாலும் -உபாயத்வ பிரதிபத்தி யோக்யதை உண்டாகையாலே -அத்தை வ்யாவர்த்திக்கைக்காக -அதுக்கு உடலான பலவற்றையும் அருளிச் செய்கிறார்-மேல் -அதில் -பிரதமத்திலே -இப் ப்ரபத்தியை உபாயமாக கொண்டால் – வரும் அவத்யத்தை தர்சிப்பிக்கிறார் –
சூரணை -54-
இது தன்னைப் பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால் – பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன்
எழுத்து வாங்குமாப் போலே
இருப்பது ஓன்று –
(உபாயம் என்று ஸ்வீ கரிக்கிறோம் -வ்யாஜ ரூபேண உபாயம் தேசிகர் சம்ப்ரதாயம் –
உபாயமாக பலர் பற்றி இருப்பதாலும் -தர்ம புத்ராதிகளைப் போலே –
கர்ம ஞான பக்திகளைப் போலே பிரதிபத்தி ஸஹ படிதமாகையாலும் –
யத் யேன காம காமேன–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவல் லாபத்வம் வேறு ஒன்றால் அடைய முடியாதோ அது பிரபத்தியால் -முமுஷு அடைகிறான் -பரமாத்வாவும் அதனாலே சாதிக்கப்படுகிறான் —ஆல் -மூன்றாம் வேற்றுமை -உபாயத்வம் வருமே –பிரபத்தியே சாதனம் -என்று சாஸ்திரங்கள் சொல்லுவதாலும் – உபாயமாக சங்கிக்கத் தகுதி உள்ளதே-இத்தை வியாவர்த்திக்க -சாத்திய சித்த பேதம் -சொல்லி உபாய வர்க்கங்களுக்குள் படிக்கப்பட்டாலும்– சாத்தியம் என்பதால் விதி முறையே மாறுபடும் -ஸ்வர்க்க காமம் அடைய ஜ்யோதிஷ்ட ஹோமம் -செய்ய வேண்டும் –நன்றாகப் படித்தால் பரீஷையிலே தேறலாம் -அதில் அத்யாவசிய வேண்டும் –இரண்டாவது -நம்பிக்கைப் படி படிக்க வேண்டும்- மூன்றாவது நிலை -படித்ததும் பலமாக நல்ல மார்க் வாங்கலாம் ஆக – இப்படி நான்கும் உண்டே – வேத வாக்கியம் -நம்பிக்கை -அனுஷ்டானம் -இதுவே உபாயம் -பலம் —சித்த உபாயத்துக்கு விதி மாறும் –மாம் ஏகம் -விதி வாக்கியம் -கேட்டு அத்யாவசியம் ஏற்பட்டு- -மூன்றாவது அனுஷ்டானம் என்று -பிரபத்தி செய்தல் உபாயம் ஆகுமா சங்கை -ஸாத்ய உபாயம் நாம் செய்ய வேண்டியது இல்லை -பகவானே சித்த உபாயம் –மூன்றாவது -பகவானே உம் திருவடிகளே உபாயம் நம்பிக்கையே உபாயம் -இரண்டாவது நிலை முன்பு எல்லாம் -மூன்றாவது என்ன -என்றால் தேவரீர் உபாயமாக இருக்க வேண்டும் என்று நம்பி –பரகத -பகவத் கிருபையை பகவானே மூன்றாது நிலையிலே — த்வமேவ உபாயம் ஏவ -பிரார்த்தனை பண்ணினோம் – நம்பிக்கைக்கும் பலத்துக்கும் நடுவில் உள்ள மூன்றாவது நிலை அவன் இடம் தானே —தீர்ப்பாரை -உன்னித்து -வண் துவாராபதி மன்னனை பாடினால் எழுந்து இருப்பாள் -என்று சொன்னதைக் கேட்டதும் எழுந்தாள் -நடுவிலே வேறே ஒன்றுமே வேண்டாமே – —பிரபத்தி ஸ்வரூபம் -தான் எத்தை ஆஸ்ரயித்து இருக்குமோ-அத்தை மற்றைவைகள் இடம் பிரித்து காட்டுமோ அதுவே ஸ்வரூபம் —சாமந்தித்தவம் சாமந்திப் பூவுக்கு ஸ்வரூபம்-பிரபத்தி பக்தி இரண்டுமே ஜீவனை ஆஸ்ரயித்து இருந்தாலும் இரண்டும் உபாயம் இல்லை –பிரபத்தி ஸ்வரூபமே ப்ரஹ்மமே உபாயம் என்று காட்டுவது அன்றோ –பிரபத்தியை உபாயமாக கொண்டால் அதன் ஸ்வரூபத்துக்கே கொத்தை வருமே -எதுவும் உபாயம் ஆகாது நீரே உபாயம் என்பதே பிரபத்தி –அத்தை உபாயம் என்றால் இதுக்கே கொத்தை வருமே -)
இது தன்னைப் பார்த்தால் -சேதனன் ஈஸ்வரன் விஷயத்தில் பண்ணும் பிரபத்தி -ரஷிக்க – பிரபத்தி தன்னைப் பார்த்தால் என்றும் உபாயமாகப் பார்த்தால் என்றுமாம் -வார்த்தை தருவித்து -அத்யாஹாரம் -விளக்க வேண்டி பிரார்த்தித்தால் –சத்தா காரண பூதனாய் -பிதா பிறக்க தானே காரணம் -இருப்புக்கும் பிரவிருத்தி நிவ்ருத்திக்கும் காரணம்-சர்வ திசையிலும் ரக்ஷகனாய்ப் போருகிற- வைமுக்ய திசையிலும் -ரக்ஷகன் அவனே -சம்பந்த உபாய பலன்களில் உணர்த்தி – ஓங்காரம் – காரணத்வம் சேஷத்வம் -ரஷக ரஷ்ய சம்பந்தம் –சேஷித்வ காரணத்வ ரக்ஷகத்வ ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே –எழுத்து வாங்குகை பெயரை மார்பில் எழுதிக் கொள்ளுகை–பிரபத்தி தன்னை நிரூபித்து -ரக்ஷகன் பண்ணும் ரக்ஷணத்துக்கு ஹேதுவாக -பிரார்த்தனா ரூபமான பிரபத்தியை -உண்மை தன்மை பார்த்தால் ஹிதைஷியாய் -அறியாத தசையிலும் ரஷிக்கை யாகிய பெற்ற பிதாவுக்கு சம்பந்தம் சொல்லி -ஸர்வதா காரணம் அன்றோ -பிதா புத்ர சம்பந்தம் அறிந்த –உபநயனாதிகளை பண்ணி -நல்ல பிதா நல்ல புத்ரன் என்று நாட்டார் பழிக்கும் படி-உபய சம்பந்தம் கொத்தை விளையுமா போலே -விசேஷஞ்ஞர்கள் சிரிக்கும் படியும் உபய சம்பந்தத்துக்கு கொத்தையாகும் படியும் —சங்கதி அருளிச் செய்கிறார்
1–கீழே யுக்தமான அதிகாரிகள் இடம் -தர்ம புத்திராதிகள்-சாதனதயா காண்கையாலும்-
2-உபாயாந்தரங்களுடன் ஸஹ படிதமாக போருகையாலும் –
3–ஆல் -மூன்றாம் வேற்றுமை லஷ்மீ தந்த்ர ஸ்லோகம் –காம காமேன ஐஸ்வர்யம் விரும்பும் ஐஸ்வர்யாத்தி —அந்தப் ப்ரபத்தியாலே சாதிக்கப்படுகிற –காமம் ஐஸ்வர்யம் காமேன ஐஸ்வர்யாதி-சாதனாந்தரங்களால் சாதிக்க முடியாத மேலே கைவல்யம் -பகவல் லாபத்வம் -பிரபத்தியால் -மூன்று காரணங்களால் -உபாயத்வம் என்னும் படி உண்டே -உபாய பிரபத்திக்கு தான் இம்மூன்றும் -அனு பாய பிரபத்தியே அருளிச் செயல்களிலே-
பக்திக்கு பரவசப்பட்டு-ஸூ யத்னம்– தூது விட்டது போன்றவை குறை இல்லை என்றால் போலே இத்தையும் உபாயம் என்பதுவும் பக்தி பாரவஸ்யத்தால் என்று இதுவும் தோஷம் இல்லை என்று சொல்லக் கூடாது -அவத்யம் வரும் –என்கிறார் –
பிரதபத்தி கத சாதனத்தவ பிரதிபத்திக்கு தர்ம புத்ராதிகளே உதாரணம் -சாஸ்த்ர விருத்த ஆச்சாரத்தை பிரமாணிகர்களான தர்ம புத்ராதிகள் பண்ண மாட்டார்களே —
கர்ம ஞான பக்தி பிரபத்தி -அக்ரே பிராய நியாயத்தாலும் உபாயத்வம் என்னும் சங்கை வரும்-கர்ம ஞான பக்தி பிரபத்திகள் வேறே வேறே இடங்களில்-உபாய சாஹசர்யம் லிங்கம் உண்டே -கூடப் படிக்கும் அடையாளம் என்றவாறே -சாஸ்த்ர விரோதம் வராதே –
கீதையில் முக்குணங்கள்- விபூதி யோகம்- தேவாசுர விபாகம் – புருஷோத்தம வித்யை போன்றவைகள் ஸஹ படிதங்கள் ஆனாலும்-அனைத்தும் மோக்ஷம் சாதனம் ஆக மாட்டாதே என்று பிரதி வாதம் வருமானால் -அது பொருந்தாது –
மூன்றாம் வேற்றுமை உருபு இருந்தால் சாதனம் என்று சொல்ல முடியாதே –நல்ல ஞானத்தால் மோக்ஷம் -கங்கையில் பிராணன் விட்டால் மோக்ஷம் -இரண்டும் சாதனமா -என்றால் -ஞானம் தான் சாதனம் –ஞானம்-உபாஸனாத்மாக ஞானத்தால் மோக்ஷம் உபாசனம் பக்தியால் மோக்ஷம் -கங்கையில் பிராணன் விட்டால் பக்தி பண்ணும் பிறவி கிடைக்கும் -பிரதான சாதனத்துக்கு அங்கம் என்பதால் அது சாதனத்துக்கு சாதனம் -கீதையில் பக்திக்கு அங்க பிரபத்தி என்றும் ஸ்வ தந்த்ர பிரபத்தி என்றும் இரண்டு வகைகள் போல் –ஸ்வஸ்மின் உபாயத்வ புத்தி ஸஹிஷ்ணுத்வம் -உபாய பிரபத்தி -தத் அஸஹிஷ்ணுத்வம் அனுபாய பிரபத்தி -இரண்டு வகை உண்டே ––
பிரயோக பேதம்–1- -விதி-2- மந்த்ர -3-ஸ்வரூப-4- லக்ஷண -5-அதிகார-6- அங்க ஆறுமே-இவ் விரண்டுக்கும் மாறும்-பக்தியால் அடையலாம் வேறே ஒன்றால் இல்லை விதி –தமேவ சரணம் கச்ச இதுவும் விதி வாக்கியம்-ஓம் என்று ஜீவனை சமர்ப்பிக்க -விதி – மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னை ஸ்வீகரிப்பான் -விதி வாக்ய வாசி மந்த்ரம் -திருமந்திரம் உபாய பிரபத்தி -த்வயம் அனு பாய பிரபத்திக்கு ஆத்ம சமர்ப்பணம் -ஸ்வரூபம் -அதுக்கு உபாய வரணம் -வரித்தல் -லக்ஷணம் -அத்யாவசிய அதுக்கு -பிரார்த்தனை இதுக்கு அதிகாரம் -ஸ்வார்த்த பல இச்சை -தன் விருப்பம் படி – பரார்த்த பலம் இச்சா அதுக்கு அங்கம் –நியாஸ பஞ்சாங்க ஸம்ஹிதா -தேசிகன் -அனுகூல சங்கல்பம் இத்யாதிகள் –ஷட்விதா சரணாகதி –
பர ந்யாஸம் உபாய பிரபத்தி ஐந்து அங்கங்கள் –சரணாகதி அனு பாய பிரபத்தி -என்று கொள்ளுகிறார்கள் –300 வருஷங்களால் இப்படி -தேசிகர் சம்ப்ரதாயம் பிரபத்தி – தென்னாச்சார்ய சம்ப்ரதாயம் சரணாகதி -அங்கங்கள் இல்லை-நியாசத்தில் ஆத்ம சமர்ப்பணம் அங்கி -ஐந்து அங்கங்கள் அனுகூலஸ்ய சங்கல்பம் –கார்ப்பண்யம் இத்யாதி ஐந்தும் –இவை ஏற்பட்டால் தான் அங்கி சித்திக்கும் –இவற்றால் தான் அது உதிக்கும் –சரணாகதிக்கு அங்கங்கள் இல்லை -நம்மை சமர்ப்பிக்க வேண்டாம் -அவனை வரித்தல் அங்கங்கள் எதிர்பார்க்க மாட்டார் -உபாய வரணம் மட்டுமே-சொன்ன ஐந்தும் வேண்டாமா என்னில் உண்டு -அங்கத்வேன கிடையாது -ஆறையும்-நியாசயத்தையும் சேர்த்து ஆத்ம நிஷேப்ய ஷட்விதா சரணாகதி –அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே ஏற்படும் -நெல்லு குத்த வியர்வை வருமா போலே இவ்வாறும் தானே ஏற்படும் –சரணாகதி ஏற்பட்டால்-வரித்தவனுக்கு இவை ஆறும் தானே வரும் என்றவாறு —சரணாகதிக்கு அங்கம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய விடுகையே அங்கம் –
இதுக்கும் ஒரு விதி விலக்கு -சவாசனமாக விடுவதே – நிவ்ருத்தி ரூபம் தானே
ஒன்றும் பண்ணுவதாக இல்லையே -குற்றம் இல்லை -ப்ரவ்ருத்தி ரூப அங்கங்கள் இல்லை
இப்படி விதி மந்த்ரம் ஸ்வரூபம் லக்ஷணம் அதிகாரம் அங்கம் இப்படி -உபாய அனு பாய பிரபத்திக்கும் ஆறு -வாசிகள் -உண்டே — கீழ் சொன்ன-மூன்று ஹேதுக்களுக்கும் -அனுஷ்டானம் சஹ பாடம் த்ருதீய விபக்தி ஆகிய மூன்றுக்கும்ம் -சாவகாசமாக இடம் கொடுக்கும் உபாய பிரபத்திக்கு –அனுபாய பிரதிபத்திக்கு பொருந்தாதே –
தனக்கு அடிமை பட்டது தான் –பாசுரம் -வனத்திடை ஏரி யாம் வண்ணம் –மாரி யார் பெய்விப்பார் மற்று-மழை வருவதற்கு சாதனம் இல்லை -மழை வந்தால் தங்குவதற்கு சாதனம்-பகவான் எப்பொழுதும் உண்டு -தான் அறியானேலும் -மனத்திடை வந்ததுக்கு சாதனம் இல்லை -மனத்தில் இருப்பவரை -வைப்பதால்-இருப்பதை இசைவதே கர்தவ்யம் -இருப்பவரை இருப்பதாக ஒத்துக் கொள்வதே வேண்டும் –பிரபத்தி கிருபைக்கு சாதனம் இல்லை -கிருபை பொழிந்த பின்பு அனுபவிக்க சாதனம் –இத்தையே அதிகாரி வீசேஷணம் பிரபத்தி என்கிறோம் –பசி அன்னத்தைக் கொடுக்க வைக்க சாதனம் -அனுபவிக்க சாதனம் ஆகுமா போலே என்றவாறு –பிரபத்தியால் கிருபையை கிளப்ப வில்லை – -கிருபையால் தானே சரணம் என்று நாக்கு பிரண்டு சொல்கிறோம் –அவன் வந்து தான் சொல்ல வைக்கிறான்–சரண வரண வாக்யம் ய உதிதா ந பவதி பத சாபி தீ பூர்விகா
இதி யதி தயநீ யதா மய்யஹோ வரத தவ பவேத் தத ப்ராணி மே –84–உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவே -இரக்கமே உபாயம்-சீதை போன பின்பு தானே தானே விபீஷணன் வந்தான் -கிருபை முதலில் -சரணாகதி பின்பு அத்தை பெருமாள் கொண்டாடுகிறார் –பிரபத்தி வியாஜ்யம் -பெருமாள் தானே உபாயம்-வியாஜ்யம் -பரம்பரயா சப்தம்- அஹேதுத்வ-குயவன் பானை -நூறு தடவை செய்து குடம் -அதுக்கு இது காரணம் -பரம்பரா காரணம்-குளத்தை வெட்டியது மழை பெய்ய காரணம் இல்லை -ஹேது இல்லை -வெட்டாமல் விட்ட அதி பிரசங்க நிவாரணம் வியாஜ்யம் –
மழை தங்க-வேண்டுமே –அடித்துக் கொண்டு போகாமல் ஆபத்தை போக்க —அதி பிரசங்கம் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக பிரபத்தி என்றவாறு –அதி பிரசங்க நிவேதனம் -அதிகாரி விசேஷணம் என்றவாறு-ஆசைப்பட்டது ஸ்ரீ ரெங்கம் போக உபாயம் ஆகாதே -வண்டி தானே -உபாய க்ருஹ ரக்ஷகம் சரண -த்வயத்தில் உபாயம் என்கிறோமே -சரணாகதி விஷயத்திலும் அனு பாய பிரபத்தியிலும் ஸ்ருதம் ஆகையால் த்வய நிஷ்டர்கள் -உபாய பிரபத்தி செய்தவர்கள் என்று சொல்லக் குறை என்ன என்னில் –
ஆசார தர்சநாத் —3-4-3-ஆசார தர்சநாத்-ப்ரஹ்ம வித்துக்களின் ஆசாரமும் கர்மாவையே பிரதானமாகக் கொண்டதாகக் காணப்படுவதால் கேகேயர் சாந்தோக்ய வாக்கியமும் -பராசரர் வாக்கியமும் கீதா வாக்கியமும் உண்டே ப்ரஹ்ம வித்துக்கள் இடம் -ஜைமினி கர்மம் முக்கியம் – வித்யை கர்மத்துக்கு அங்கம் –தத் ஸ்ருதே –3-4-4-வேத வரிகளிலும் வித்யைகள் கர்மங்களின் அங்கம் எனக் காணலாம் – பிரபத்திக்கு உபாயதயா-ஹேது த்வயமும் –தர்ம புத்ராதிகள் அனுஷ்டானம் ஆல் மூன்றாம் வேற்றுமை பிரயோகம் என்று சொன்னால் வரும் அவத்யதையை -அவத்ய-இது தன்னை ஸ்வரூபத்தை பார்த்தால் -உபாயமாகப் பார்த்தால் -தான் அவத்யம் –எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –சைதன்ய கார்யம் ஆகையாலும் –பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –ஸ்வரூபாதிரேகி யல்லாமையாலும்-அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாகக ஒண்ணாது —64-ஸூர்ணிகை இத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது என்று முடிக்கப் போகிறார் —ஸ்வரூபேண பார்த்தால் அவத்யம் இல்லை என்றவாறு –
யுக்த பிரகாரத்தால் -சேதனன் -சரணாகதி பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பது – சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –சம்சாரம் நடத்த வேண்டுமே -ரஷிக்க வேணும் என்று பிரார்த்திப்பது உபாயம் ஆகாது -அதிகாரி விசேஷணமே — பிரபத்யன் ஸ்வரூபம் அறிய வேண்டுமே -நம் பங்கு லவ லேசமும் இல்லை -கைங்கர்யம் -ப்ராப்ய ருசி வளர –-உபாய பாவத்தில் கண் வைக்காமல் ப்ராப்யத்தில் ஊன்றி கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம் என்றாரே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பிதா புத்ரன் -காப்பவர் பிதா -யவ்கிகம் ரூடி இரண்டு அர்த்தங்கள் உண்டே —
உத்பாதகன் ரூடி அர்த்தம் -பெற்றவர் -அனைவருக்கும் பொது -ஹிதத்தையே பார்ப்பவர் –
காப்பாளர் -யோகார்த்தம் தன்னை ரஷிக்கிற படியால் பிதா -பாதீதி பிதா -இவர் இரண்டுமே செய்பவர் -சஹ்ருதய ஒத்து இருந்து ரசம் அனுபவம் —ஸ்ருஷ்டித்து பேரேன் என்று புகுந்து – அகாரம் -மகாரம்-சதுர்த்தி விபக்தியால் சேஷித்வம் –காரணத்வம் -ரக்ஷகத்வம் -சேஷித்வம் -மூன்றுக்கும் கொத்தையாகுமே –)
இது தன்னை பார்த்தால் -என்றது-இச் சேதனர் ஈஸ்வர விஷயத்தில் பண்ணும் இப் பிரபத்தி
தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்றபடி -ஈஸ்வரன் தன்னை ரஷிக்கைக்கு ஹேதுவான இச் சேதனன் பண்ணும் இப் பிரபத்தி தன்னை நிரூபித்தால் என்று இங்கனே அனத்யாஹாரேன யோஜிக்கவுமாம் -அப்போதும் அர்த்தம் ஒக்கும் இறே –
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே இருப்பது ஓன்று -என்றது –உத்பாதகன் ஆகையால் -ஹிதைஷியாய் -தான் அறியாத தசையிலும் -தன்னை ரஷித்துக் கொண்டு போரும் தம் அப்பனுக்கு புத்ரன் ஆனவன் -தான் அறிந்த தசையிலே நீ என்னை ரஷிக்க வேணும் என்று எழுத்து வாங்கினால் -இரண்டு தலைக்கும் உண்டான உறவு கொத்தை யாம் போலே –சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி —எழுத்து வாங்குகையாவது-ரஷகன் பேரை தந் மார்பில் எழுதிக் கொள்ளுகை
——————————————————-
ஆனால் இது தனக்கு ஸ்வரூபம் ஏது என்ன அருளிச் செய்கிறார் –
சூரணை -55-
இது தனக்கு ஸ்வரூபம்
தன்னை பொறாது
ஒழிகை –
(நம்பாவதனை விட நம்பினவனை வேறுபடுத்தும் தன்மை தானே ஸ்வரூபம் -நம்பாதவன் அதிகாரி இல்லை -நம்பினவனே அதிகாரி -நம்பிக்கை அதிகாரியுடைய விசேஷணம் -பண்பு -அடை மொழி -நம்பிக்கை தானே பிரபத்தி -அத்யாவசிய அதிகாரி விசேஷணம் -ஸாத்ய சித்த உபாயங்கள் இரண்டுக்கும் இதுவே
முதல் விதி வாக்கியம் -அடுத்து நம்பிக்கை அதிகாரி விசேஷணம் -மூன்றாவது அனுஷ்டானம் -நான்காவது பலம் பார்த்தோமே
சாதனத்தவ ஆகாரம் அற்ற நிலை நின்ற ஆகாரம் -உண்மையான ஆகாரம் –அருளிச் செய்கிறார் இத்தால் –
இயம்-கேவல ஸ்ரீ யபதியே உபாயம்–ஸ்வ ஹேதுத்வ புத்தியை தவிர்க்கும் —
கிம் புன சஹ காரின –(வேதாந்த தேசிகருடைய ஸ்லோகம் )தானே இல்லை என்றால் கர்மா ஞான பக்தி யாதிகளை பொறுக்குமோ –
(ஆய் ஸ்வாமிகள்-சரண வரண ரூபையான இப்பிரபத்திக்கு -அசாதாரண ஸ்வரூபம் –அதிகாரி விசேஷணம் ஆவதே நிலை நின்ற வேஷம் -தன்னை பல சாதனமான உபாயம் என்ன–என்று சொன்னால்–ஸ்ரீ பரத ஆழ்வான் ராஜன் என்றதும் துடித்தால் போலே -ஸூ வியாவ்ருத்தி அதிகாரம் -(அசாதாரண தர்மம் )குலையும் படி பொறாது ஒழிகை –
பர ப்ரேரிதமாய்-(கிருபையே பிரபத்தியைத் தூண்டும் )-பிரபத்தியை வரண பூர்வ பாவியுமாய்-உபாயம் என்றாலே பொறுக்காதே -உபேயம் என்றாலும் பொறுக்காதே -இனிமை ஸ்ரீ லஷ்மீத்வம் இல்லையே –உத்தர பாவியும் இல்லை –வரண அனந்தர பாவியுமாயும் பொறாது –நான்கையும் சொல்வதால் தன்னைப் பொறாது என்கிறார் —
உபாயம் பொறாது என்பதே பிரகரணத்துக்கு சேரும் -பர கதமான -ஸூ கதமாக்கப் பாராதே-பகவானிடத்தில் உள்ள உபாயத்தை பிரபத்தியான தன்னிடம் சொன்னால் –ஆஸ்ரய விஷய தூஷகம் ஆகுமே –ஜீவனை அழித்து தன்னையும் அழித்துக் கொள்ளும் -ஸ்வ தந்த்ரன் இடம் பிரபத்தி வாழாதே -பெருமாள் பண்ணிய சரணாகதி கார்யகரம் ஆக வில்லையே —ஆனால் பர கதமான போது ஆஸ்ரய விஷய உத்தேஜகம் ஆகுமே -பார தந்தர்ய சேஷத்வம் பிரகாசிக்கும் –பக்தி உபாயம் -சாதனாந்தரம் -பிரபத்தி உபாயம்–உபாய பிரபத்தி -பகவான் உபாயம் -அனுபாய பிரபத்தி -என்றவாறு – )
இது தனக்கு ஸ்வரூபம் -என்றது -இப் பிரபத்தி தனக்கு அசாதாராண ஆகாரம் என்றபடி –
தன்னைப் பொறாது ஒழிகையாவது-உபாய வரண ஆத்மகமான தன்னை -உபாயம் -என்ன-சஹியாத படியாய் இருக்கை -அதாவது – ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் -ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதி பத்திக்கு யோக்ய மாக மாட்டாத படி இருக்கை -என்றபடி –
அன்றிக்கே –தன்னைப் பொறாது ஒழிகை -என்கிற இடத்தில் –உபாயத்வேன ப்ரதீதிமான தன்னை பொறாது ஒழிகை என்று அநத்யா ஹாரேன யோஜிக்கவுமாம் -இப்படிச் சொன்னாலும்-ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதிபத்தி அசஹத்வமே பொருளாம் இறே –
(த்வம் ஏவ உபாய பூதோ மே பவ -நீயே என்ற எவகாரம் -நீ மட்டுமே -உபாயாந்தரங்கள் ஸ்பர்சம் இல்லாத அடியேனுக்கு -நீ மட்டுமே –தான் வேண்டாம் நீயே வேண்டும் என்றபடி –நின் அருளே புரிந்து இருந்தேன் -நாராயணனே நமக்கே – நாகணை மிசை நம்பிரானே சரண் –நான் பற்றும் பற்றுதலும் உபாயம் ஆகாதே -இதுவே ஏவம் சப்தத்துக்கு உள்ளுறைப் பொருள் –மற்றவை உபாயம் ஆகாது என்ற உறுதி -சித்த உபாயம் என்பதால் பிரதான்ய அர்த்தமே மற்றவை உபாயமாகாது என்பதே பிரதான்யம் –காம்பற தலை சிறைத்து- மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்வீ காரத்தில் உபாய பிரதிபத்தியை தவிர்க்கிறது –
தன்னைப் பெறாதது இதன் ஸ்வரூபம் –ஆபாத ப்ரதீதி ஸ்ரவணத்துக்கு அனந்தரம் விசாரத்துக்கு பூர்வம் -மேம் போக்காக பார்க்கும் பொழுது என்றபடி – உபாயம் என்பதற்கு தகுதி இல்லாமல் இருக்குமே –உபாயத்வ அஸஹிஷ்ணுத்வம் -அனுபாய பிரபத்தி —
முத்து சிப்பியை வெள்ளி என்னுமா போலே –பிராந்திக்கு விஷயம் மருந்து சொல்வதே -நிரூபணம் ஆராய்ந்து பார்க்காத படியால் —அசாதாரண ஆகாரம் கொண்டே இத்தை விலக்கி அத்தை உண்மையாக அறிய வேண்டும் –ஸ்வரூபம் இன்றியமையாத ஆகாரம் -ஸ்வம் ஆஸ்ரயம் மற்றவற்றில் இருந்து விலக்கி நன்கு – நிரூபித்து – இது தன்னை உபாயம் என்ன பொறுக்காது என்பதே –உபாய வரணமாக இருப்பதால் உபாயம் ஆகாதே -தத் ஏக ரஷ்யத்வ அத்யாவசாயமாக இருப்பதாய் –உபாயம் என்ன ஸஹிப்பது உபாய பிரபத்தி –
உபாயம் என்று நினைத்தால் -ஸ்வா தந்தர்ய கார்யம் -ஸாத்ய உபாயமாகும் –பல நீ காட்டி படுப்பாயோ -நெறி காட்டி நீக்குவாயோ –
ஏவ சப்தம் உபாயத்வம் நிஷேதம் –தான் செய்யும் உபாய வரணமும் உபாயம் இல்லை என்று சொல்லும் -அந்நிய தமரில் அந்நிய தமர் தானே நான் என்பதும் -சித்த உபயாந்தர பிரதிக்ஷேபங்கள் –சித்த உபாய பிரவ்ருத்திக்கு பிரதிபந்தகம் ஸூய பிரவ்ருத்தி–விளக்கு எரிய மூடினால்-தெரியாது -இது இல்லை என்றால் எரியும் –இதன் பாவம் அபாவம் இருந்து பாதிக்கப்பட்டாலும் இதனால் உருவாகாதே -இது காரணம் இல்லை – இதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க முடியாது –
பிரதி பந்தனம் இல்லாமை வேண்டும் -அது காரணம் ஆக மாட்டாதே -அதே போலே உபாயாந்தர சம்பந்தம் —இன்மை இல்லாமை பகவத் ரக்ஷணத்துக்கு ஹேதுவாகாது –
உபாயமாகாது நாம் பற்றும் பற்றுதலும் –இதனால் பாதிக்கப்படுவது உண்மை இது காரணம் ஆகாது —பர ந்யாஸ விசிஷ்ட வரண ரூபமான ஸூ ப்ரவ்ருத்தி ரூப பிரதிபந்தகம் இல்லாமை —பல ப்ரதாதா மட்டும் உபாயம் இல்லை பகவான் என்று பிரித்து சொல்லவும் முடியாது -பிரபத்தி செய்தவனுக்கு மோக்ஷம் -அதிகாரி விசேஷணம் பசி போலே -என்னில் -பலம் -விருப்பம் -உபாயம் மூன்றும் அதிகாரி விசேஷணம் –ஆற்றைக் கடக்க ஆசை படகு கடந்தது இம் மூன்றும் போலே -பிரபத்தி இம் மூன்றுக்குள் இல்லையே -பலம் இல்லையே-மோக்ஷம் தான் பலம் – -ஆசையும் இல்லை -நிமித்தமும் இல்லை -இப்படி ஆஷேபம் -விதி உடன் பிரபத்திக்கு அன்வயமே இல்லை -கோபிஷ்டர் கோபம் உள்ளவர் –
பிரபத்திக்கு விதி வாக்யத்துடன் அன்வயம் உள்ளதே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ விதியால் செய்தது அன்றோ –மூன்றாவது -உபாயமாக வேறு ஓன்று விதிக்கப் படவில்லையே -இப்படி மூன்று காரணங்களால் ஆஷேபம் பூர்வ பஷி வாதம் –
அஹம் த்வா -உன்னை என்றது முதலில் சொன்ன பற்றின உன்னை என்றவரையா -அனைவரையுமா-அதிகாரிக்கு சித்தத்வம் முதல் வாக்கியத்தில் சொன்ன சர்வ தர்மான் பரித்யஜ்ய – மாம் ஏகம் வ்ரஜ -என்று பண்ணினவனுக்கு-அஷ்ட வர்ஷம் உபநயனம் விதித்து ஆனவன் அத்யயனம் பண்ண வேண்டும் -அதிகாரி முதலில் சொன்ன விதி வாக்கியம் –
உபநயனம் அத்யயனம் பண்ண உபாயம் ஆகாதே –அதிகாரி விசேஷணம் தானே –
உபாயம் -அங்கம்-பலம் மூன்றும் – சுவர்க்கம் பலம் உபாயம் ஜ்யோதிஷ்டஹோமம் -அங்கம் -சக்தியால் அங்கி சித்திக்கும்-மோக்ஷம் பலம் -பலம் பகவான் -அங்கம் இதர உபயா த்யாஜ்யம் -பண்ணினவன் தான் தகுதி அடைகிறான் -அதனால் அதிகாரி விசேஷணம் சம்பாவிதம் —சாஸ்த்ர விதியாலும் ஸூவ கதமாகவும் அதிகாரி விசேஷணம் -பசித்தால் உண்கிறான் விதிக்க வேண்டாமே-உபாயமாக பற்று -விதி உண்டு -நீ உபாயத்தை அனுஷ்ட்டிப்பாய் சொல்ல வில்லை -சித்தம் அன்றோ அவன் -என்னை உபாயமாக ஸ்வீ கரிப்பாய் – உபாயமாக புத்தி பண்ணுவாய் –வ்ரஜ -கத்யர்த்த புத்யர்த்த -பற்றினவனை -அதிகாரி விசேஷணம் -சோகிக்காதே -உபாயம் நான் -அதனாலும் சோகிக்காதே -வேறே யார் இடமும் பொறுப்பு இல்லை -உன்னிடமும் பொறுப்பு இல்லை –அதிகாரம் உடையவனாய் நீ இருக்கிறாய் -இந்த காரணங்களால் சோகிக்க வேண்டாமே –
வ்ரஜ -சொல்லி -த்வா -அனுவாதம் பின் வாக்கியத்தில் –மோக்ஷயிஷ்யாமி பிரத்யயம் உன்னை எதிர் பாராமல் நானே மோக்ஷம் கொடுத்து —நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் -உபாயத்தை அபேக்ஷியாத சித்த உபாயம் அன்றோ –அஹம் –நெஞ்சை நிமித்து அருளுகிறார் –அவாப்த ஸமஸ்த காமன் -ஸ்வாமித்வம் -மேலும் ஒரு சங்கை -பலத்தை அனுபவிக்கும் ஜீவன் உபாயம் செய்ய வேண்டாமோ என்னில் –
பலத்தை அடைபவனும் நானே –பிராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே – பலத்துக்கு சத்ருசமாக ஒன்றும் நம் கையில் இல்லை-மகத்தான பலத்துக்கு மகத்தான உபாயம் வேண்டுமே -அறியாதது அறிவித்த சித்த உபாயம்-பிரபத்தி பண்ணினவன் இடத்தில் உபாயத்தை அபேஷியாமல் ரஷிப்பார்-
வெறிதே அருள் செய்வார் -அங்கம் -பிரபத்தி என்று சொல்ல முடியாது -கார்ய அனுகூல சக்தி உத்போதகம் –அங்கம் – நிவ்ருத்தி ரூபம் தானே இது – அங்கி -சர்வ சக்தன் சர்வஞ்ஞன் இத்தை எதிர்பார்த்து இருந்தான் ஆகில் அவனுக்கு கொத்தை வருமே –
பக்திக்கும் -உபாயம் இல்லாமல் அதிகாரி விசேஷணம் என்று சொல்லலாமோ என்னில் -அங்கு மாம் ஏகம்-ஒருத்தன் ஏவகாரம்-பக்தி தவிர மற்று ஒன்றினால் அடைய முடியாதே ஏவ காரம் பக்தி தலையிலே வைத்து –அடைய காண அறிய பக்தியே காரணம்
–பக்தியாலேயே மூன்றாம் வேற்றுமை தான் அடையப்படுகிறேன் அடைவிக்கிறேன் இல்லையே –ப்ராப்யமாகவே மட்டுமே – பிராபகமாக இல்லையே -ஏவகாரம் பக்தியில் வைத்துத் தன்னைப் ப்ராப்யமாக மட்டுமே வைத்த்துள்ளார்- ப்ராப்யம் பிராபகம் அதிகாரி விசேஷணம் மூன்றையும் நாராயணனே நமக்கே பறை தருவான் -வேதம் அனைத்துக்கும் வித்து அன்றோ –ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கிறாள் —கொடுக்கிற அவன் இடத்திலும் பெரும் நம் இடத்திலும் ஏவ காரம் சேர்த்து அருளியது அருளிச் செயல்களிலே இந்த ஒரே பாசுரம் –
பக்தி தவிர சேதனனால் செய்யப்படும் உபாயம் இல்லை -ஜீவனாலே சாத்யமாய் –
பிரபத்தி கூட சேதனன் செய்வதே -இது பகவத் அனுக்ரஹம் அடியாக –
கிரியாகத உபாய பாவ விலக்ஷணம் -பகவத் உபாயமாவதற்கு நிஷேத வாக்கியம் இல்லை –
விஷ்ணுவை உபாயமாக கொண்டு ப்ரயோஜனாந்தரம் பெற்றால் அதமன்
வேறே உபாயம் கொண்டு விஷ்ணுவை பெற்றால் மத்யமன்
அவனையே உபாயமாக கொண்டு அவனைப் பெற்றவன் உத்தமன் -மிகச் சிறந்தவன் –
பக்தி பண்ண பிராட்டி புருஷகாரம் ஆவதற்கு நிர்பந்தம் இல்லை –பிரபத்திக்கு புருஷகாரம் விதித்து இருப்பதால் -இது பக்தி போலே உபாயம் ஆக மாட்டாது
பரத்வம் -அனுகாம்பா உள்ளவன் -அனுக்ரஹம் உள்ளவன் -மூன்றும் –மேன்மையிலும் இரக்கத்திலும் அருளே முக்கியம்-யதா கர்மத்துக்கு தக்க பல ப்ரதன் -உபேக்ஷகர் உதாசீனம் என்ற நினைவு -அனுக்ரஹத்தை அளிக்கும் -கொத்தையாகும் –
தப்பு பண்ணும் பொழுது உதாசீனம் –நாம் பண்ணுவது முக்கியம் இல்லை -அவனை இசைவதே முக்கியம் -பிரார்த்தனையும் உபாயம் ஆகாதே -தேவரீர் உபாயமாக ரஷித்து அருள வேண்டும் என்பதே பிரார்த்தனை – -அபேக்ஷை எதிர்பார்க்கிறார்
பர நியாசம் -ரஷா பரத்தை அவன் திருவடிகளில் வைப்பது -உபாயம் என்றால் ரக்ஷணம் பொறுப்பு இங்கே நிற்குமே -பர நியாசம் சொல்லும் அனுபாய ப்ரபத்தியே – திடமாக இல்லாமல் யாக யஜ்ஜாதிகளால் அடைய முடியாதே -நாம் செய்யும் பிரவிருத்திகள் ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -க்ஷணம் காலம் வர்த்தித்தவம் -சங்கைக்கு இடம் உண்டே –
உபாயமாக பிரபத்தி யாக்கினால் ஒழுகல் ஓடம் போலே ஆகுமே -மத் ஸ்வீ கார ஸ்வரூபம் -பிரபத்தியின் தலையில் உபாயத்தை ஏறிட்டால்-இன்னம் மனம் அடக்கம் இல்லாமல் பாரதந்த்ர காஷ்டை – ஸ்வ தந்த்ர லேசமும் இல்லாமல் இருப்பவன் ஆவான் –
பிரபத்தி ஸாத்ய சித்த உபாய கோஷ்டிகளில் சேராதே –ஒன்றை விடும் ஒன்றை பிடிக்கும்–உபயாந்தரங்களை விட்டு பகவானைப் பற்றி நடுவிலே -அவைகளாக இது இருக்காதே நடுவில் இருந்து –சித்த உபாய வர்ணம் ஒன்றே இதுக்கு ஸ்வரூபம் —ஆழ்வார்கள் சரணாகதி செய்தது அதிகாரி விசேஷணம் சித்தம் –பலத்தை அனுபவிக்க-அதிகாரம் சம்பவிக்க – துல்யம் து தர்சனம் –3-4-9–வித்யைகள் கர்மங்களின் அங்கங்கள் அல்ல என்றும் கூறப் படுகின்றன –வித்யையே பிரதானம் என்கிற பக்ஷத்திலும் ப்ரஹ்ம வித்துக்கள் ஆசாரம் ஸமமாகவே காணப்படுகிறது என்பதாம்-இதனால் கர்மாவை அனுஷ்டிக்காத நிலையும் காணப்பட்டு இருப்பதால் கர்ம அனுஷ்டானத்தைக் கண்டு இருப்பது நிலையானது அல்ல ––நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்ட்டித்து காம்ய கர்மங்களை விட்டு -ப்ரஹ்ம வித்யைக்கு குந்தகமானவற்றை விட வேண்டுமே –பிரபத்தியால் முக்தி என்பதுவும் -சாதனம் ஆகாது -பக்தியால் -விதி சாஸ்த்ர வாக்கியம் -இதனாலேயே பெறுகிறான் -விதிக்கு உள்ள சக்தி போதகத்வம் போகுமே-அனுபாயம் என்ற புத்தி பண்ணி பகவானே சாதனம் -என்று சொன்னவாறே — மூ வகைப்பட்ட அதிகாரிகள் –பிரபத்தி –உத்பத்தி வாக்கியம் -உபாயத்வம் நிஷேதம் – அபாயமான உபாயத்தை விட்டு நம -எதுவும் என்னது இல்லை –மாம் ஏவ என்று விசுவசித்து இருப்பவனே என்னை அடைகிறான் – அப்புறம் அதிகார விபாக வாக்கியம் மூவகை அதிகாரிகளை சொல்லிய சுருதி வாக்கியம் –அஞ்ஞர் ஞானாதிகர் பக்திபரவசர் மூவருக்கும் அதிகாரமாக பிரபத்தி பண்ணினார்கள் என்றவாறு
————————————–
சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து – இது தன்னை அருளிச் செய்கிறார் –
சூரணை -56-
அங்கம் தன்னை
ஒழிந்தவற்றை
பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –
(பரித்யஜ்ய வ்ரஜ விட்டே பற்று -என்ற அங்கம் உண்டே -என்ன -ஸ்வரூபம் தன்னையே பொறாது -இது தன்னையே பொறாது – தியாகமே ஸ்வரூபம் –ஆய் ஸ்வாமிகள் -சித்த உபாய ஸ்வீ காரத்தைப் பற்ற -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்லோகத்தில் விதேயமான –சர்வ தர்மான் பரித்யஜ்ய -விட்டே பற்று -விட்டு இருந்தாயாகில் பற்று என்றது இல்லை –-அதிகாரம் பங்கம் வராதபடி பொறாது ஒழிகை -ஸ்வரூப உத்பாதகத்வம் வளர்வது அங்கம் குளித்தே சந்தியாவந்தனம் போல் குளித்தல் அங்கமாகும்–வேறே ஒன்றிலும் அன்வயம் இருக்கக் கூடாதே -அவன் உபாயமாகும் பொழுது –ஸ்வீ கார பூர்வ பாகம் மாத்ரத்தையே ஹேது வாக அங்கம் என்னைக் கூடாதே -அங்கி உபாயமாக இருந்தால் தானே இத்தை அங்கம் என்னலாம்-அங்கியாய் தோற்றுகிறது உபாயமாகில் இறே இது அங்கம் –அவனோ அங்கம் நிரபேஷனாய் சித்தம்–அன்றிக்கே-பிரபத்திக்கு அங்கமாக இருக்குமிது அங்கியாகிய பிரபத்தி-(ஸ்வீகாரம்-உபாய வர்ணம் ) -தவிர மற்றவற்றை பொறாது-அன்றிக்கே-பிரவ்ருத்தி ரூபம் என்னவும் பொறாது -அங்கத்துவம் குலையும் என்பதால் இத்தை உபாயம் என்னவும் கூடாது-அனுவாதம் இல்லை ––விடுவதும் கர்த்தவ்யமாக இருந்தாலும் -உபாய பாவம் ப்ரவ்ருத்தி பாவம் ஒழிந்தது என்றே கொள்ள வேண்டும்)
தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை யாவது -ஸ்வீகார ரூபமான தன்னைஒழிந்த சேதன பிரவ்ருத்திகள் ஒன்றையும் சஹியாத படி இருக்கை –
சாதன ரூப சகல பிரவ்ருத்திகளின் உடையவும் சவாசன த்யாகமிறே இதுக்கு அங்கம் –
யத் யத் சாங்கம் -என்கிற இடத்தில் -பிரவ்ருத்தி ரூப அங்க சஹிதமனவற்றை இறே
சாதனமாக சொல்லுகிறது – அப்படி இன்றிக்கே –இதனுடைய அங்கம் நிவ்ருத்தி ரூபம் ஆகையாலே -இது தானே இதனுடைய அனுபாயத்வ ஸூசகம் என்று கருத்து-
—————————————————————–
இதனுடைய அனுபாயத்வத்தை த்ருடீகரிக்கைக்காக -சித்த சாத்திய உபாயங்களின்
படிகளை சொல்லி -அவை இரண்டையும் பற்ற -இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
அருளிச் செய்கிறார் -மூன்று சூரணைகளால்–57/58/59-இது -பிரபத்தி0அதிகார விசேஷணமாய் ஸ்வீகார வர்ணம்
சூரணை -57-
உபாயம் தன்னை பொறுக்கும்-
(ஆய் ஸ்வாமிகள் -ஆகவே பொறுப்பது எது என்ன அருளிச் செய்கிறார் மேல் -சித்த உபேயமான தன்னை சேதனன் செயல் அறுதியாலே உபாயம் என்னப் பொறுப்பார் -கருமுகை மாலையை சும்மாடு என்னுமா போலே–பாவனை உடனே மாறனும் -திருவடியை மார்பிலே தாங்கி குங்குமப்பூ சாத்தி சந்தனம் பூசி கைங்கர்யம் பண்ண வேண்டி இருக்க-காட்டுக்கு மேட்டுக்கும் அலைய வைப்பதே-சித்த உபாயம் என்று மட்டும் சொல்ல பொறுக்கும் -அங்கி அங்கம் என்னப் பொறுக்க மாட்டான்-அங்கி என்றால்; சஹாயாந்தர அபேக்ஷை உண்டாகும் -அங்கி என்றால் ஸ்வா தந்தர்யம் குலையும் -நிராங்குச ஸ்வ தந்த்ரர் -ஆஸ்ரித பாரதந்தர்யம் தானே ஸ்வா தந்த்ரயத்தால் ஏறிட்டுக் கொள்ளலாம் -)
உபாயம் தன்னை பொறுக்கும் -என்றது –சித்த உபாயமான சர்வேஸ்வரன் -இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும் ஸ்வயமேவ நிர்வாகன் ஆகையால் -தன்னை உபாயம் என்றால் -அதுக்கு தகுதியாய் இருக்கும் -என்றபடி –
உபாய உபேயத்வ ததிஹா தவ தத்வம் நது குநௌ–ஸ்ரீ ரெங்கராஜஸ்த்வம்-87-என்று
உபேயத்வோபாதி வஸ்துவுக்கு ஸ்வரூபமாய் இறே உபாயத்வமும் இருப்பது –
ஏச வேதவிதோ விப்ரா யோசாத் யதமவிதோ ஜனா
தே வதந்தி மகாத்மானாம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -பாரதம் -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வமாகூர் திவ்யா மகார்ஷய
அம்ருதம் சாதனம் சாத்யம் சம்பஸ்யந்தி மநீஷிணா–என்னக் கடவது இறே
தன்னைப் பொறுக்கும் -என்கிற இவ்வளவே சொல்லி விடுகையாலே –
தன்னை ஒழிந்தவற்றை பொறாமை அர்த்தாத் சித்தம் — (தன்னைப் பொறாது என்றதும் —
தன்னை ஒழிந்த வற்றையும் பொறாது என்று முன்பே பார்த்தோமே)-இந்த சித்த உபாயம் சஹாயாந்தர சம்சர்க்க அசஹமாய் இறே இருப்பது –
இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே
அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத ஸ்வேதம் போலே
சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே
————————————————-
சூரணை-58-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –
(இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –
அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் -)
(ஆய் ஸ்வாமிகள்-சாத்தியமான கர்மாதிகள் அங்கம் அங்கி பொறுக்கும் -பக்தி அங்கி ஞானம் கர்மம் அங்கங்கள் – ஞானம் அங்கி கர்மா அங்கம் -என்னலாமே-ஆத்ம ஞானத்தை அங்கமாக கொண்டால் தானே கர்ம யோகத்துக்கு வருவான் -ஞானம் வளர பாபங்கள் போக்க அனுஷ்டானம் வேண்டுமே கர்மம் அங்கமாக இருக்குமே -பக்தி கர்ம ஞான சாத்தியம் ஆகையால் தத் உபயத்தையும் அங்கமாக கொள்ளும் –பக்தி அங்கம் -ப்ரீதி பூர்வகமாக தானே ஞான கர்மா வரும் பக்தியை அங்கம் – இப்படி உபாயாந்தரங்களுக்கு அன்யோன்ய அங்கி அங்க பாவங்கள் உண்டே -)
சித்தோ உபாய தரமான ( ஸ்ரேஷ்டமாக பிரபத்தி பகவான் இரண்டையும் விட- என்பதால் அடுத்த அடைமொழி சாத்ய )சாத்திய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்ய ஞான ரஹீதராய் -ஸ்வ யத்ன பரராய் இருப்பார்க்கு -மோஷ சாதன தயா -சாஸ்திர விகிதம் ஆகையாலே –ஸ்வ ஸ்மின் உபாயத்வ பிரதி பத்தி சஹமுகமாய் ஸ்வோத் பத்யாதிகளில் பிரவ்ருத்தி ரூப அங்க சாபேஷம் ஆகையாலே ஸ்வ வ்யதிரிதக்தங்களையும் சஹிக்குமதாய் இருக்கும் என்ற படி –
பக்த்யா லப்யஸ் தவ நன்யயா -உபாய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக
பக்தி யோகைக லப்யா-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -சித்தி த்ரயம் ஆளவந்தார்
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி-நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்னக் கடவது இறே-
—————————————————-
சூரணை -59-
இது (பிரபத்தி உபாய வர்ணம் )இரண்டையும் பொறாது-
(ஆய் ஸ்வாமிகள்– சித்த உபாயம் விட வேறுபட்டதாய் உபாயாந்தரம் என்றும் சொல்லலாம் படி இவன் செய்யும் ப்ரபத்தியும் இரண்டையும் பொறுக்குமே என்னில்-நிவ்ருத்தி ரூபமாய் இருக்க அங்கம் என்றால் பிரவ்ருத்தம் ஆகுமே அதனால் பொறுக்காது –இது நிரபேஷ சித்தம் -சாதிக்க வேறே ஒன்றும் வேண்டாமே – முன்னால் இதர த்யாஜ்யம் இருக்கிறதே என்னில் -அவை ஹேது வாகாதே –ஆநுகூல யாதிகளும் அங்கங்கள் இல்லை சம்பாவிதங்கள் தானே இவை -உபாயமாக விதித்ததும் ஞான பாக அனுகுணமாக சித்த உபாயத்தை பற்ற வழி படிக்கட்டு போலே-சரணாகதி -பண்ணி – ருசி வளர்ந்தவனுக்கு பிராப்தி சித்தம் –பிரிய தமனாக விஷயாந்தர வெறுப்புக்கள் வேண்டுமே -)
(தபோ பூதர் என்றாலும் -கர்ப்ப பூதர்கள் -தண்டகாரண்ய ரிஷிகள் -அவனையே எதிர்பார்த்து இருப்பார்கள் அன்றோ)
இது இரண்டையும் பொறாது -என்றது-சித்தோ உபாய வர்ண ரூபமாய் – நிவ்ருத்தி சாத்திய ரூபமாய் -அதிகாரி விசேஷணமாய்-ஸ்வரூப அனதிரேகையாய் -(ஸ்வரூபத்தை விட மாறுபடாமல் -பசித்தவன் என்பது -பசி உடன் விசிஷ்டம் நேற்று இன்று இல்லை -அதிகாரி விசேஷணம் -ஸ்வரூபத்தில் இருந்து விரோதம் இல்லையே -) இருக்கிற இந்த பிரபத்தி உபய அசஹமாய் இருக்கும் என்ற படி -ஆகையால் சித்த சாத்திய உபாய வ்யாவிருத்த வேஷையாய் இருக்கிற இந்த பிரபத்திக்கு உபாயத்வம் அசம்பாவிதம் என்றது ஆய்த்து-
அன்றிக்கே –
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதிக்கு –ஆனால் சாங்கமாக சாஸ்திர விஹிதமான
இந்த பிரபத்திக்கு ஸ்வரூபம் எது -இதுக்கு சொல்லுகிற அங்கம் தான் என்ன -அவை
இரண்டையும் அடைவே அருளி செய்கிறார் –இது தனக்கு -இத்யாதி வாக்யத்தாலே –
ஆனால் தன்னை பொறுப்பது எது என்ன அருளிச் செய்கிறார்-உபாயம் -இத்யாதி –
தன்னையும் தன்னை ஒழிந்தவற்றையும் பொறுக்கும் அது எது என்ன அருளிச் செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதி-இந்த சித்த சாத்திய உபாயங்கள் இரண்டிலும் -இப் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பியா நின்று கொண்டு உக்தார்த்தை நிகமிக்கிறார் –இது இரண்டையும் -இத்யாதி –என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
அதவா –
இதன் அனுபாயத்தை சாதிக்கைக்காக இதனுடைய ஸ்வரூப அங்கங்கள் இரண்டையும்
தாமே அருளிச் செய்கிறார் –இது தனக்கு-இத்யாதி வாக்ய த்வயத்தாலே-
இதன் அனுபாயத்வத்தை ஸ்புடம் ஆக்குகைக்காக சித்த சாத்திய உபாயங்களின் படிகளை
தர்சிப்போம் என்று திரு உள்ளம் பற்றி -பிரதமம் சித்த உபாயத்தின் படியை அருளிச் செய்கிறார்-உபாயம்-இத்யாதியால் –
அநந்தரம்-சாத்திய உபாயத்தின் படியை அருளிச் செய்கிறார் –உபாயாந்தரம் -இத்யாதியால்
இவை இரண்டிலும் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பிக்கிறார் –இது இரண்டையும் -இத்யாதியால்-என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-இவ் உபய சங்கதிக்கும் வாக்யங்களுக்கும் அர்த்தம் பூர்வவத் –
(உபாயம் தன்னைப் பொறுக்கும் -பக்தியும் பகவானும் -உபாயம் என்றால் பொறுக்கும் -இங்கு சித்த உபாயமான பகவானை குறிக்கும் –சித்தத்வம் -சேதனனுடைய செயலால் உருவாக்க வேண்டியது இல்லையே –பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் –சர்வ சேஷி சர்வ நியாந்தா ஸ்வயமேவ நிர்வாஹகன்-இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –ஏவகாரம்-சேர்த்து-ஸ்வயம் ஏவ நிர்வாஹகன்– பிராட்டியையும் – ஏவ காரம் வரணாதிகளையும் நிவர்த்திக்கிறது – புருஷ சாபேக்ஷையுமாய் புருஷகார சாபேக்ஷையுமாய் இருக்கும் என்றாரே முன்-பசி எதிர்பார்த்து -காசு எதிர்பார்க்காமல் ததீயாராதனம் -அதிகாரி எதிர்பார்ப்பது போலே –உத்கரிஷ்யாம் சாஷாத் –-நாமே தூக்கி விடுகிறோம் –பிராட்டி பார்த்து பகவான் வாக்கியம் -இந்த வார்த்தை கிளப்பி விடத் தான் பிராட்டி கர்தவ்யம் –நாம் -என்றால் -அடியேனுக்கு ஸ்வா தந்தர்யம் வந்து பாரதந்தர்யம் போகுமே -நாமே சொல்லுவான் என்று தான் எதிர்பார்க்கிறாள் –
மாம் -திரு மார்பைத் தொட்டு அருளிச் செய்கிறான் –புருஷன் புருஷார்த்தை விரும்பி புருஷகாரம் ஜீவனை தூண்டி புருஷோத்தமன் -தானே அருளுகிறார் –உபாயம் என்றால் அதுக்கு தகுதியாக இருக்கும்-என்றது -உபாய சப்த புத்திகளுக்கு -சப்தத்துக்கும் புத்திக்கும் –பக்தி உபாய சப்தம் பொருந்தாது -புத்தி பொருந்தும் – பக்திக்கு உபாயம் பெயர் இல்லையே-அவனை மந்த்ரம் என்றும் பெயர் -சப்த சக்தியால் -நினைப்பவனை ரஷிப்பவன்-மந்திரத்தை மந்திரத்தால் மறவாமல் -வாழ –பிரபத்திக்கு உபாய – சப்தமும் பொருந்தாது புத்தியும் பொருந்தாது-பகவான் உபாய சப்த புத்திகளுக்கும் -அர்த்தங்களும் என்றவாறு – தகுதியாய் -(சப்த உபாய சப்த புத்திகளுக்கு பகவான் இடத்திலேயே பூர்ணமாகப்பொருந்தும்-தகுதியாய் இருக்கும் -பக்திக்கு உபாய சப்தம் பொருந்தாது புத்தி பொருந்தும் –ப்ரபத்திக்கு இரண்டுமே பொருந்தாது )-உபாயம் உபேயம் தத்துவமே நீ என்கிறார் பட்டர் கதியாகவும் கம்யமாகவும் அவனே —ஷட் விதா சரணாகதி -ஷட் ஸ்வபாவம்- கீழே நியாசத்துக்கு ஐந்து அங்கங்கள் –ஆனுகூலஸ்ய சங்கல்பம் –கார்ப்பண்யம் -ஆறு விதம் சரணாகதி –எல்லாம் முதல் வேற்றுமையில் -(சாமாநாதி காரண்யத்தால் ஒவ்வொன்றுமே சரணாகதி என்னலாம் அன்றோ )இங்கு-சம்பாவித ஸ்வ பாவங்கள் இவை –விதா சப்தம் ஸ்வபாவங்கள் இருக்கும் என்றவாறே –நெல் குத்த வியர்வை வருமா போலே –விதிக்காமல் தானே ஏற்படும் –ஆறு வகைகளாய் இருக்கும் ஷட் விதா என்று –ஆகிஞ்சன்யம் முன்னிட்டு நீயே உபாயமாக வேண்டும் –பிராத்தனா மதி சரணாகதி-ஆறில் ஓன்று தானே ஆத்ம நிஷேப்பியம் – சமர்ப்பணம் – சரணாகதி என்றால் -ந்யாஸம் பஞ்ச அங்கம் –அது உபாய பிரபத்தி –இது அனுபாய பிரபத்தி என்றவாறு-இது ஒதுங்கின ஆஸ்ரயம் ஜீவனைப் பார்த்தால் இந்த ஆறு ஸ்வ பாவங்கள் உடன் கூடி அல்லது இருக்காதே —ஷட் விதா சரணாகதி -விதா பிரகாரம் -என்றவாறு சாமானாதி கரண்யத்தில் படிக்கப்பட்டு உள்ளதே–விதி வாக்கியம் இல்லா விட்டால் அங்கங்கள் சித்திக்காதே -ஆகவே அத்யந்த பாரதந்தர்யம் உள்ளவனுக்கு இவை தானே ஏற்படும்-ஆறு வகைகள் இவை ஆறு அங்கங்கள் அல்ல – ந்யாஸ பஞ்சாங்க என்பது – ஓன்று ஆத்ம சமர்ப்பணம் உபாயம்-மற்ற ஐந்தும் அங்கங்கள் என்பதை உபாய பிரபத்தியைக் குறிக்கும் -)
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply