கிளரொளி பிரவேசம்
கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –
———————————-
முதல் பாட்டிலே நிரதிசய ஓவ்ஜ்ஜ்வல்ய விசிஷ்டனான சர்வேஸ்வரன் விரும்பின திருமலையே ப்ராப்யம் -என்கிறார் –
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1-
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்–கிளர்ந்து வருகிற ஞான ஓவ்ஜ்ஜ்வல்யத்துக்கு யோக்யதை யுண்டான
யவ்வன ஆரம்ப ரூபமான இளமை -விஷயாந்தர கதமாய்க் கெடுவதற்கு முன்னே
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்–ஆஸ்ரித அர்த்தமாக இங்கே எழுந்து அருளினை பின்பு வளர்ந்து வருகிற
சீல ஸுலப்யாதி குண ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடைய ஆச்சர்ய ரூபனான சர்வேஸ்வரன் பொருந்தி வர்த்திக்கிற திவ்ய ஸ்தானமாய்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை-வளரா நிற்கச் செய்தே இளமை யுடைத்தான பொழில்களாலே சூழப்பட்டு –
அத்தாலே மாலிருஞ்சோலை என்று திருநாமமான திருமலையை
தளர்விலராகில் சார்வது சதிரே –ப்ரயோஜனாந்தர சம்பந்தமாகிற தளர்த்தி அற்று பிராபிக்கும் அதுவே சதிர் –
இது ஒழிய ப்ரயோஜனாந்தரம் உண்டு என்று இருக்கை இளமை என்று கருத்து
சேதனர் பால்யத்தாலே விவேகாத்மாக்களாய்க் கொண்டு அநந்ய பிரயோஜனராய்ப் பற்றும் இது சதிர் இறே -என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து உரைத்தாராய் இருக்கிறது –
—————————————————
அநந்தரம் -அழகருடைய திருமலையோடு சேர்ந்த திருப்பதியை ஏத்துமதே பிரயோஜனம் -என்கிறார் –
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது–அர்த்த அனுரூபமாகவும் ஸ்வ தோஷத்துக்கு ஈடாகவும் ஒதுக்கி உடம்பு கொடுக்கும் சதிரை யுடையராய் –
இளமையாலே மதி மயக்கி செல்லாமை தோன்ற இருக்கும் ஸ்த்ரீகளுடைய தாழ்ச்சி தோற்ற இருக்கும் யுக்தி சேஷ்டிதாதிகளை ப்ரீதி பண்ணாதே
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்-சம்ச்லேஷ ஜெனித ப்ரீதியாலே முழங்குகிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையராகையாலே
நிரதிசய ஸுந்தர்யத்தை யுடைய அழகருக்கு அசாதாரண ஸ்தானமாய்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை-சந்த்ரனானவன் தவழும் படி ஓங்கின சிகர சிகைகளை யுடைத்தான திருமலையில்
பதியது வேத்தி எழுவது பயனே –திருப்பது யாகிற பிரசித்த ஸ்தலத்தை ஸ்தோத்ரம் பண்ணி உச்ச்ரிதராகையே பிரயோஜனம்
இதுவும் நெஞ்சை நோக்கி உரைத்தல் –
————————————————-
பரம உதாரன் வர்த்திக்கிற திருமலையோடு சேர்ந்த அயல்மலையை பிராபிக்கையே கார்யம் -என்கிறார் –
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3–
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே–நெஞ்சே பிரயோஜன ஸூன்யமானவற்றை செய்து பிரயோஜனம் இல்லை
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்-தூறலும் துளியுமான கால மேகம் போலே ஜல ஸ்தல விபாகம் அரா வர்ஷிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்
அபிமுகராய்க் கொண்டு நித்ய வாசம் பண்ணுகிற வாச ஸ்தானமாய்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை–கண்டார் நெஞ்சு கலங்கும் படி தர்ச நீயமான பொழில் சூழ்ந்த திருமலையினுடைய
அயன்மலை யடைவது அது கருமமே –அருகின மலையை அடைகையாகிற அதுவே கர்த்தவ்யம் -ஸ்வரூப பிராப்தம் –
————————————————————–
அநந்தரம் ரக்ஷகனானவன் வர்த்திக்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை ஆஸ்ரயிக்குமதுவே செய்யக் கடவபடி -என்கிறார் –
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-பந்தகமான கர்மங்களாகிற -கழற்ற அரிய- பாசங்களை கழற்றி -அடிமை செய்து வ்யாபாரித்து
சேதனர் உஜ்ஜீவிக்கைக்காகவே ஆர்த்தமான கோப கோபீ ஜனங்களுடைய ஆர்த்தி தீர்க்கும்படி
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்-பெரிய மலையை எடுத்து ரஷித்தவன் -தன்னுடைய ரக்ஷண ஐஸ்வர்யம் விளங்கும் படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தானமாய்
வருமழை தவழும் மாலிரும் சோலை–வர்ஷ உன்முகமாய் வருகிற மேகங்கள் தவழும்படி மிகவும் உயர்ந்து -பரந்த சோலையை யுடைத்தான
திருமலை யதுவே யடைவது திறமே –திருமலை தன்னையே அடைவதே செய்யும்படி –
மால் -உயர்த்தி /இருமை -பரப்பு /
மாலிருஞ்சோலைத் திருமலை என்கையாலே திருமலையில் சோலையினுடைய ப்ராப்யதை தோற்றுகிறது-
———————————————————-
அநந்தரம் ரக்ஷண உத்யுக்தமான திருவாழியை யுடையவன் வர்த்திக்கிற திருமலையின் புறமலையைக் கிட்டப் போவது நல் விரகு -என்கிறார் –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது–நாநா விதமான பலங்களாலே அக்ருத்ய கரணாதிகளான கொடிய பாபங்களை வர்த்திப்பியாதே
அற முயலாழிப் படையவன் கோயில்–அஷ்ரிதா ரக்ஷணம் ஆகிற தர்மத்தில் உத்தியோகத்தை யுடைய திருவாழியை
திவ்ய ஆயுதமாக யுடையவனுடைய வாசஸ் ஸ்தானமாய்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை-சைவல கர்த்தமாதிகள் ஆகிற களங்கம் அற்று -கிட்டினார்க்கு சர்வ பிரகார
உப ஜீவ்யமான சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின்
புறமலை சாரப் போவது கிறியே –புறமலையை கிட்ட போகிறவது நல் விரகு-
கிட்டுமதிலும் கிட்ட பிரவர்த்திகமது நல் விரகு என்று கருத்து –
இப்பாட்டளவும் உபதேசத்தை நெஞ்சோடு கூட்டி மேல் பிறரைக் குறித்து உபதேசிக்கிறார் –
—————————————————————-
அநந்தரம் ஆஸ்ரித வ்யாமுக்தன் வர்த்திக்கிற திருமலைக்குப் போகிற வழியை யுட்பட நினைக்குமதுவே நன்மை -என்கிறார் –
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே-விஷயாந்தரங்களை நோக்கிப் போக நினைக்கும் நீசதையை பண்ணாதே –
இத்தை நல் விரகு என்று நினையுங்கோள் -எது என்னில்
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்-உறியில் பொருந்திச் சேமித்து வைத்த வெண்ணெயை அணுத்து செய்த கிருஷ்ணனுடைய
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை-தன்னுடைய கன்றுகளோடே கூட மான் பேடைகள் சேருகிற திருமலையினுடைய
நெறி படவதுவே நினைவது நலமே –வழியிலே உட்பட வேணும் என்கிற அத்தையே நினைக்கை புருஷார்த்தம்
மறி -குட்டி / பிணை -மான் பேடை –
————————————————————-
அநந்தரம் பிரளய ஆபத்சகன் வர்த்திக்கிற திருமலையில் ஆனுகூல்யமே பிரபலம் -என்கிறார் –
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
நலமென நினைமின் நரகழுந்தாதே–பஹிஷ்டாராய் சம்சார நிரயத்தில் அழுந்தாதே -இத்தை பரம பிரயோஜனம் என்று புத்தி பண்ணுங்கோள் –
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில் -பிரளயம் கொண்ட முற்காலத்திலே பூமியை ஸ்ரீ வராஹ வேஷத்தைக் கொண்டு
இடந்து எடுத்தவன் நித்ய வாசம் பண்ணுகிற கோயிலாய்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை –சிகரங்களில் தேய்க்கையாலே களங்க ரஹிதனான சந்திரன் பொருந்துகிற திருமலையை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –சேஷ சேஷி பாவமாகிற முறைப்பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் –
——————————————————–
அநந்தரம் -ஆஸ்ரித அனுகூலனான கிருஷ்ணன் வர்த்திக்கிற திருமலையில் நிரந்தர அனுகூல வ்ருத்தியே ஸ்வரூப பிராப்தம் -என்கிறார் –
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-
வலம் செய்து வைகல் வலம் கழியாதே–காரணங்களுக்கு பலத்தை உண்டாக்கி நிரந்தரமாக அந்த பலத்தை இதர விஷயமாக்கிக் கெடாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்–ஆஸ்ரிதர்க்கு பவ்யத்தை யாகிற ஆனுகூல்யத்தை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்ய பூதனுடைய கோயிலான
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை-பரமபத வாசிகள் அனுகூல வ்ருத்தி பண்ணும் திருமலையைக் குறித்து
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –பிரதஷிணாத் யனுகூல வ்ருத்தியை பண்ணி நிரந்தரம் சம்ச்லேஷம் பண்ணுகை நியாயம் –
—————————————————
அநந்தரம் -பூதநா நிரசனம் பண்ணினவன் வர்த்திக்கிற திருமலையைத் தொழ வேணும் -என்கிற நினைவில் துணிவு வெற்றிக்கு அடி-என்கிறார் –
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது-கடக்க அரிதாம்படி பிரபலமான பாபங்களிலே முழுகாதே -இது ஸ்வரூப அனுரூபம் என்று நினையுங்கோள்
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்-பேயான பெண்ணை நசிப்பித்தவன் பொருந்தி வர்த்திக்கும் அங்குசிதமான கோயிலாய்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-கன்றுகளான ஆனைத்திரள் சேருகிற திருமலையை
தொழக் கருதுவதே துணிவது சூதே –தொழ வேணும் என்கிற நினைவிலே துணிகையே சம்சாரத்தை வெல்லுகைக்கு ஹேது –
அழன்–பேய் / கொடி -பெண்
———————————————————–
அநந்தரம் -வைதிக ஞான ப்ரவர்த்தகன் வர்த்திக்கிற திருமலையில் பிரவேசிக்கிற இது புருஷார்த்தம் என்று உபக்ரமித்த உபதேசத்தை நிகழித்து அருளுகிறார் –
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-
சூதென்று களவும் சூதும் செய்யாதே–ஸூ கரமான அர்த்த சாதனம் என்று நினைத்து -களவு காணுதல் -பார்த்து இருக்க அபஹரித்தல்-செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-முற் காலத்திலேயே கீதா உபநிஷத் முகத்தாலே -வேதார்த்ததை விவரித்தவன் -விரும்பி வர்த்திக்கிற கோயிலாய்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை–மாதுமை உடைத்தான் மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற ஓங்கி பரந்த சோலைகளில்
போதவிழ் மலையே புகுவது பொருளே –பூவானது மலருகிற திருமலையில் சென்று புகுவதே புருஷார்த்தம்
மாதுமை -மென்மை / மாதுறு என்று பேடையோடே சேர்ந்த என்றுமாம் –
————————————————–
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்–ஆஸ்ரித ஆபி முக்யம் பிரயோஜனம் என்று இந்த லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய
தயா ஷமா ஓவ்தார்யாதி குண ப்ரதை விஷயமாக
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-அஞ்ஞான கந்த ரஹிதராய் விலக்ஷணமான திரு நகரிக்கு நிர்வாஹகராய் மஹா உதாரரான ஆழ்வார்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-தத்வ ஞானமானது சேதனர் ஸ்வீ கரிக்கும் படி அருளிச் செய்த அத்விதீயமான ஆயிரத்துள் இப்பத்தும்
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –சம்சாரத்தை நசிப்பித்து கிருபா பரிபூர்னரான அழகருடைய திருவடிகளை அடைவிக்கும் –
முடித்து -என்று கர்த்தவ்யங்களைத் தலைக்கட்டி என்றுமாம்
இது கலி விருத்தம் –
———————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply