ஸ்ரீ ஆண்டாள் வைபவம் –
கர்க்கடே –ஆஷாடே-பூர்வ பல்குன்யாம் துளஸீ கானன உத்பவாம் –
பாண்ட்யே விஸ்வம் பராம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம் –
தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதவ் சோதாம் உபாஸ்மஹே –
யன் மவ்லி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீ கரோதி ஸ்வயம் ப்ரபு-
ஸூசி மாசி பாண்ட்ய புவி பூர்வ பல்குநீக நபே நவீன துளஸீ வநாந்தராத் —
உதிதாம் உதார குண ரங்க நாயக ப்ரிய வல்லபாம் வஸூ மதீம் உபாஸ்மஹே –
சித்தா நாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவவ் யாதே கர்க்கடகம் விதாவு பசிதே ஷாஷ்டே அஹநி ஸ்ரீ மதி
நக்ஷத்ரேர்ய மாதேவதே ஷிதி புவோ வாரே சதுரத்யாம் திதவ் கோதா ப்ராதுர பூத சிந்த்ய மஹிமா ஸ்ரீ விஷ்ணு சித்தாத்மஜா –
கலியுகம் 100-வருடங்களுக்கு மூன்று வருடங்கள் கழித்த அளவில் -நள வருஷம் -கடக ராசி -திருவாடிப் பூரம் –
சுக்ல பக்ஷம் -ஆறாவது தேதியில்- செவ்வாய்க் கிழமை- சதுர்த்தி திதியில்- ஸ்ரீ கோதா-சூடிக் கொடுத்த நாச்சியார் – திருவவதாரம்
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் –
————————
எம்பெருமானார் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகளில் ’ஆஸூரிப் பெருமாள்’ ஒருவர்.
இவர் ஸ்ரீராமானுஜரின் ஹாரீத வம்சம். இவருடைய வம்சத்தில் அவதரித்தவர் ஸ்ரீஸாநுதாஸர் என்ற தேவராஜன்.
இவரே ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று பெயர் பெற்றார்.
செல்லப்பிள்ளை ‘நம் ஆய்(தாய்)’ எங்கே?’ என்று கேட்க ’ஆய்’ என்றும் ’ஜனந்யாச்சாரியார்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று.
(ஜனனி என்ற சொல்லிற்கு “பெற்றவள்” என்று பொருள் அதுவே ’ஜனந்யாச்சாரியார்’ ஆகியது).
திருநாராயணபுரத்தில் அவதரித்ததால் ’திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்’ என்று அழைக்கப்பட்டார்.
எதிராஜர் தம் திருக்கையாலே திருவாராதனம் செய்த எதிராஜ சம்பத் குமாரனான செல்வப்பிள்ளைக்கு
யசோதை போலப் பாலமுதும், பெரியாழ்வார் ஆண்டாள் போல மாலைக் கட்டி புஷ்ப கைங்கரியமும் செய்து வந்தார்.
ஐப்பசி பூராடம் ஆயி ஸ்வாமி திருநட்சத்திரம்.
திருநாராயணபுரத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதியில் ஆயியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் அவர் எழுந்தருளியிருந்தார்.
ஆயியின் திருவரசு திருநாராயண புரத்தில் கல்யாணி புஷ்கரணி அருகில் யோக நரசிம்மர் கோயிலுக்குப் போகும் வழியில் இருக்கிறது.
மேல்கோட்டையில் கொல்ல இடையர்கள், மைசூரில் உள்ளப் பதினெட்டு ஜாதி மக்கள், பல கிராமங்களில்
அறுபது குலங்களைச் சேர்ந்த சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஆயி வம்சப் பரம்பரை சிஷ்யர்கள்.
————-
திரு நாராயண புரத்து ஆய் என்னும் ஜனனயாச்சார்யார் வைபவம் –
ஆச்சார்ய ஹ்ருதயஸ் யார்த்தா சகலா யேந தர்ஷிதா
ஸ்ரீ சானு தாசம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே–
ஸ்ரீ சானு தாசர்–ஸ்ரீ தாழ்வரைத் தாசர் -ஸ்ரீ தேவராஜர் -ஜனநா ச்சார்யர் –மாத்ரு குரு-ஆயி -மற்ற திருநாமங்கள்-பிராட்டியுடைய ரத அம்சம் இவர் என்பர் –
ஸ்ரீ யாதவாத்ரி -திருநாராயண புரம் -அஷ்டோத்தர சதா ஸ்தான சாரம் -தக்ஷிண பத்ரி காஸ்ரமம் –
வைகுண்ட வர்த்தன க்ஷேத்ரம் -இந்திர க்ஷேத்ரம் -மேலக்கோட்டை -ஆறு வார்த்தைகளில் திருநாராயண புரத்தில் குடில் கட்டி வாழ
திவ்ய ஷேத்ரத்தில் சேனை முதலியார் திருவவதரித்த- ஓங்கு துலாப் பூராட நன்னாளில் உதித்து (1341-ஐப்பசி பூராடம் )-
பால் அமுதமும் புஷ்ப்பமும் செல்லப்பிள்ளைக்கு சமர்ப்பித்துக் கொண்டு நம் தரிசனத்தை நிர்வஹித்துக் கொண்டு இருந்தவர்
ஆஸூரிப் பெருமாள் -74- சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் -திருவம்சம் -(ஹாரீத வம்சம் -ராமானுஜர் போலவே )
இவர் திருத் தகப்பனார் ஸ்ரீ லஷ்மணாச்சார்யார் –
இவர் திருக் குமாரர் ஸ்ரீ கேசவாச்சார்யர் –
இறுதி காலத்தில் இவர் சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ கரித்தவர்-என்பர்
நம்பிள்ளை சிஷ்யர்களில் ஒருவர் -அவர் இடம் இருந்து திருவாய் மொழி யீட்டைப் பெற்றவர்- ஈயுண்ணி மாதவர் –
ஈடு ஓராண் வழியாக உபதேசிக்கப் பெற்று வந்தது
இவருடைய குமாரர் -ஈயுண்ணி பத்ம நாதர் –
இவருடைய சிஷ்யர் நாலூரப்பிள்ளை என்னும் ஸூமந கோலேஸர்-
இவருடைய குமாரரும் சிஷ்யரும் தேவராஜர் என்னும் நாலூர் ஆச்சான் பிள்ளை –
இவருடைய சிஷ்யர்களில் முக்கியமானவர் ஆய் என்னும் ஜனன்யாச்சார்யார்-
நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது
திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளியது
தேவராஜர் செல்வப் பிள்ளைக்கு பால் அமுது காய்ச்சி அமுது செய்யப் பண்ணி வந்தார் -ஒரு நாள் சிறிது தாழ்க்கவே
அது பொறாமல் நம் ஆய் -தாய் எங்கே இன்னம் காணோமே என்று அர்ச்சக முகேந வினவின படியால்
ஆய் என்றும் ஜனன்யாச்சார்யார் என்றும் திருநாமம் உண்டாயிற்று –
பகவத் பாகவதருக்கு தாய் போலே பரிவு காட்டி ஆய் என்றும் ஜநநீ என்றும் சிறப்புப் பெயர் பெற்றவர்
இவர் அருளிச் செய்த
ஸ்ரீ வசன பூஷண –
ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய –
ஸ்ரீ திருப்பாவைக்கு ஈராயிரப்படியும் நாலாயிரப்படியும் -வியாக்யானங்கள் உள்ளன –
(ஸ்ரீ திருமாலைக்கு வியாக்யானம் உண்டு என்பர் இப்பொழுது கிடைக்க வில்லை )
ஆயி சிஷ்யர் -நல்லப்ப நாயன் என்பவரை பிள்ளை லோகம் ஜீயர் உபதேச ரத்ன மாலை -58-பாட்டு
வியாக்யானத்தில் கூறி இருக்கிறார் –
(ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர்
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –
ஆச்சார்யா ஹ்ருத் சம்ஜ்ஞ நிபந்த நஸய வியாக்யா மகார்ஷீத்-என்றும் சொல்லக் கடவது இறே
ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயங்கள் ஆகிற
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களுக்கு பிரதம வியாக்யானம் செய்து அருளியவர்
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆயி இறே)
மாறில் முடும்பை உலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும் -வல் லிருளைச்
சீறும் படி திருத் தாழ்வரை தாதன் தெரிந்து எனக்குத்
தேறும் படி யுரைத்தான் திருத் தாள்கள் என் சென்னியதே –
ஞான சதுர்த்திகளின் மேலே இறே ஆனந்த ஷஷ்டிகளுக்கு உதயம்-(22) -என்கிற ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகளுக்கு
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் பக்கலிலே கேட்டு அறிய ஸ்ரீ மா முனிகள் வர-
ஸ்ரீ ஆய் ஸ்வாமியும் ஸ்ரீ ஜீயருடைய பிரபாவம் கேட்டு ஆசன்னமாக மார்க்க மத்யே –
(1341-இவர் திரு அவதாரம் -105 திரு நக்ஷத்ரம் இருந்தார் –1446-திரு நாடு அலங்கரித்தார்
1371-மா முனிகள் திரு அவதாரம்–30 திரு நக்ஷத்ரம் இளையவர்
ஹோசூருக்கு அருகில் -டெங்கணிக் கோட்டையில் சந்தித்தார்கள்-இங்கு இன்றும் ஸந்நிதி சேவிக்கலாம் )
இருவரும் அன்யோன்யம் வந்தன பரராய்- குசல ப்ரச்னம் பண்ணி நிற்க
ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ எம்பெருமானாரும் எதிர்ப்பட்டால் போலே யாயிற்று என்று மிகவும் உகந்து அருளினார்கள் ஸ்ரீ பாதத்து முதலிகள் –
ஆச்சார்ய ஹ்ருதயஸ் யார்த்தா சகலா யேந தர்ஷிதா
ஸ்ரீ சானு தாசமமலம் தேவராஜம் தமாஸ்ரயே–தனியனும் மா முனிகளே சமர்ப்பித்தாராம்
பூதூரில் வந்துதித்த புண்ணியனோ பூங்கமழும்
தாதரு மகிழ் மார்பன் தான் இவனோ -தூதுரைக்க
வந்த நெடு மாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் -என்று ஸ்ரீ ஜீயர் பற்றி இவர் அருளிச் செய்தார் –
மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றோர் தீது அற்ற
ஆசாரிய விதயம் பெற்றார் நம் மாயி யிவர்
தேசாரத் தாள்கள் நெஞ்சே காண்–மா முனிகள் சமர்ப்பித்த பாசுரம்
மாதவத்தோர் வாழ்த்தும் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் நீதியினால்
ஆங்கு அவர் தாள் சேரப் பெற்றார் ஆய் மணவாளன்
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று–மா முனிகள் சிஷ்யர் சமர்ப்பித்த பாசுரம்
பூர்வாஷாடா வதீர்ணாய துலாயாம் யது பூதரே
ஸ்ரீ சானு தாச குரவே தேவராஜாய மங்களம்–யதுகிரியிலே ஐப்பசி பூராடம் திரு அவதாரம் –
ஓங்கு துலா பூராடத் துதித்த செல்வன் வாழியே
ஒண் மதியோன் எதிராசன் ஒண் சரணோன் வாழியே
பாங்குடனே ஞானப் பிரான் பணியுமவன் வாழியே
பஞ்சமத்தின் பொருள் தன்னைப் பரிந்து உரைத்தோன் வாழியே
தேங்கு புகழ் தேவராசர் திரு வருளோன் வாழியே
தென் மறையின் மனப் பொருளைத் தெளிவித்தான் வாழியே
நாங்கு திருக்கை திரி தண்டம் தரித்த வள்ளல் வாழியே
திருத்தாழ்வரை தாதர் திருவடிகள் வாழியே —
பஞ்சமத்தின் பொருள் தன்னைப் பரிந்து உரைத்தோன் –
பஞ்சம உபாயமான ஆச்சார்ய அபிமானம் – தேவராசர் -நாலூராச்சான் பிள்ளை –
(மா முனிகள் உடன் திருக் குருகூர் போக
இவர் சொத்தை எடுத்துக் கொண்டு-ஸ்ரீ பண்டாரத்தில் கொஞ்சம் சேர்த்தார்களாம் –
யஸ்ய அனுக்ரஹம் -அவன் சொத்தை பிடுங்கி கொள்கிறான்
அருகில் அழைத்து கொள்ள திரு உள்ளம்-என்று சொல்லி குடில் கட்டி பால் அமுது புஷ்பம் சமர்ப்பித்து கால ஷேபம் செய்தார்
ஞானப் பிரான் இவரது திரு ஆராதனப்பெருமாள் -கைங்கர்யம் செய்து கால ஷேபம் –செய்து கொண்டு -1446- திரு நாடு அலங்கரித்தார் )
————————————————-
ஈராயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –
எம்பெருமானாரை -ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன –
திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப் பாவைக்கு ஆள் கிடையாது -என்று அருளிச் செய்தார் –
மோவாய் எழுந்த முருடர் கேட்க்கைக்கு அதிகாரிகள் அல்லர் -முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானைத் தங்கள் அனுபவிக்க வேணும் என்று இருக்கும் பரிவாணிச்சிகளான
பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் அல்ல -பல சொல்லி என் –
பத்து ஆழ்வார்களுடைய சார பூதையான தானே சொல்லித் தானே கேட்க்கும் அத்தனை – என்று அருளிச் செய்தார் –
ஒரு பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் உள்ள வாசி போரும் ரிஷிகளுக்கும் சம்சாரிகளுக்கும் –
அத்தனை வாசி போரும் ஆழ்வார்களும் ரிஷிகளுக்கும் –
அப்படியே பெரியாழ்வாருக்கும் ஆழ்வார்களும் –
அத்தனை வாசி போரும் பெரியாழ்வாருக்கும் திரு மகளாருக்கும் –
பதின்மருடைய ஞானமும் ஸ்த்ரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது –
பத்துப் பேர்க்கு ஒரு பெண் பிள்ளை இறே –
ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றனர் –
இவள் தான் எம்பெருமானுக்கு மயர்வற மதி நலம் அருளினாள்
இவள் அருளுகையாவது எம்பெருமானை எழுப்பித் தன் குறையை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கை–
(அத்யாபயந்தி -தனியனில் பார்த்தோம் )
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது —
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது –
ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி அவர் திருமகளது –
ஆழ்வார்களும் இளைய பெருமாளும் பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ பரத ஆழ்வானும் பெரியாழ்வாரும் பகவச் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ சத்ருன ஆழ்வானும் நாய்ச்சியாரும் மதுரகவிகளோடு ஒப்பர்கள் –
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வஸித்து இருப்பர் –
இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த-ரானாப் போலே –
இவளும் தொடக்கமே பிடித்து ஸ்னேஹித்துக் போரும் –
இப்படி விலக்ஷணையான நாய்ச்சியார் அருளிச் செய்த பிரபந்தம் இறே திருப்பாவை –
இப் பிரபந்தத்துக்கு கருத்து -மார்கழி நீராட -என்கிற இத்தை ஒரு வ்யாஜமாகக் கொண்டு
நோன்பு முன்னாக எம்பெருமானை –
உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மா அநர்த்தப் படாதபடி பண்ணி –
இதற்கு ஸ்வரூப அனுகுணமான கைங்கர்யத்தையும் கொடுத்து
அதுதான் யாவதாத்மா பாவியாம் படி பண்ணி யருள வேணும் -என்று அபேக்ஷிக்கிறாள் –
அர்ஜுனன் ஷட்க த்ரயத்தாலும் கூட -மாமேகம் சரணம் வ்ரஜ -என்று அவனைக் கொண்டு
உபாயத்தை அறுதியிடுவித்தாப் போலே
இவளும் முதல் பாட்டால் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று உபாயத்தை அறுதியிட்டுச்
சிற்றம் சிறுகாலையிலே உபேயத்தை அறுதியிட்டுக் கொண்டு
நடுவே தேஹ யாத்திரைக்கு உடலாக்கி விடுகிறாள் –
(ஆறு உபாயம் தொடங்கி பேறு நிகமித்து நடுவில் தேக யாத்திரை )
அன்று எனக்கு அவை பட்டினி நாள் -(பெரியாழ்வார் -5-1–6)-என்னுமவர் மக்கள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் -( திருவாய்-3-3-1-)என்றும் உண்டாய் இறே
மாலாகாரர் மகள் இறே –
ஆழ்வார்களுக்கு அந்யாபதேசம் ஆண்களாய் இருக்கச் செய்தே பெண்களாகை –
இவளுக்கு அந்யாபதேசம் -ப்ராஹ்மணியான இவள் இடைச்சி யாகை
குலம் தரும் இறே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -என்றும் உண்டு இறே –
இவளுடைய ஞான பக்திகள் க்ஷணம் தோறும் பகவத் விஷயத்திலே கை வளர –
வட பெரும் கோயிலுடையான் முகம் கூடாதே இருக்க
இவளும் ஐஸ்வர்யார்த்திகளுக்காக எல்லை நடந்து கொடுத்து -இளைப்பாலே கிடக்கிறான் என்று புத்தி பண்ணித்
தன் திரு முலைத் தடங்களை யிட்டு நெருக்கினாள் —
அத்தாலும் எழுந்து இருந்து பிரதிவசனம் பண்ணக் கண்டிலள் –
காணாமையாலே வ்யசனாதிகளாலே மீளவும் சிசிரோபசாரம் பண்ணினாள் –
அத்தாலும் எழுந்து இருக்கக் காணாமையாலே –
இது நோவு -அல்ல –நம் பக்கல் ப்ராணய அபராதத்தாலே கிடக்கிறான் -என்று நினைத்து
மிகவும் தளர்ந்து திருவாய்ப்பாடியில் பெண்பிள்ளைகளை அனுசந்தித்துப் பார்த்தாள்-
அது காலாந்தரத்திலே யாகையாலே உதவப் பெற்றிலோம் என்று தளர்ந்து மிகவும் அவசன்னையாய்
நமக்கு தரிகைக்கு விரகு என் -என்று கூப்பிடச் செய்தே
சில சாபராணி ப்ரப்ருதிகள் கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனோடு கலந்து பிரிந்த பெண்கள்
தங்கள் ஆற்றாமையாலே-
துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று கிருஷ்ணனை அனுகரித்து தரித்தாப் போலே-
இவளையும் அனுகரித்து தரிக்கச் சொல்ல
இவளும் கிருஷ்ணனை அனுகரிப்பதிலும் கிருஷ்ணனை அனுகரித்த பெண்களை அநுகரிக்கை நன்று
என்று பார்த்து அனுகரித்து தரிக்கிறாள் —
அவ்வநுகாரம் முற்றி -இடை முடியும் இடை நடையும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய் விட்டது
இப்படி தான் இருந்த ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய்ப்பாடியாகவும் –
வட பெரும் கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும் –
வட பெரும் கோயிலுடையானே கிருஷ்ணனாகவும் –
தன்னைப் பிராட்டியாகவும் தோழிமாராகவும் அணுகரித்துக் கொண்டு நோற்கிறாள் –
நோன்புக்கு அடி என் என்னில் –மீமாம்ஸையிலே ஹோளாகாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம் –
மேலையார் செய்வனகள் -என்று நோன்பு நோற்க அறுதியிட்ட வாயாலே
எல்லை நிலத்திலே நிற்கிற நாய்ச்சியார் தாமே அருளிச் செய்தார் –
பொய்யே நோற்கிறோம் என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹ சமயத்திலும் ப்ராணாந்திக சமயத்திலும் பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் உண்டு
உண்டு என்று சொல்ல வேணுமோ அனுஷ்டானம் யன்றோ பிரதானம் –
இவ்விரண்டுக்கும் கைம்முதல் வேறே தேட வேணுமோ –
இவர்களுடைய ஆற்றாமை தான் என் செய்யாது –
அழகிது -இது தான் இங்கு விளைந்தபடி என் என்னில் –
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -புருஷோத்தமனாய் -புண்டரீகாக்ஷனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சாத்விக சேவ்யனாய் இருக்கிற சர்வேஸ்வரன்
தன் கிருபையால் நிர்ஹேதுகமாக பிறந்து அருளி –
தன்னுடைய சீலாதிகளாலே ஜனங்களை ஈடுபடுத்தி –
வாரிப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவனாகையாலே –
ததார்த்தமாகத் திருவாய்ப்பாடியிலே வந்து திருவவதரித்துப் பெண்களும் தாணுமாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே
கிருஷ்ணனும் ப்ராப்த யவ்வனனாய் பெண்களும் குமாரிகளாய் இருக்கிற இருப்பைக் கண்டு –
இவன் இப்படி தூர்த்தனாய் இரா நின்றான்
இவன் பாடு பெண்கள் சேரக் கடவர்கள் அன்று என்று எல்லாருமாகத் திரண்டு
இப் பெண் பிள்ளைகளை நிலவறைகளிலே அடைத்தார்கள் –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கிட்டாமல் வெண்ணெயையும் மறைத்து வைத்தார்கள் –
இப்படி வெண்ணெயும் பெண்களும் கிருஷ்ணனும் பிரிந்த
தர்ம ஹானி கண்டாவது –
இவர்கள் பண்ணின பாக்யமாவது
நாடு வர்ஷம் இன்றிக்கே நோவு பட்டுப்
பசுக்களுக்கு ஊண் இன்றிக்கே
பிராணன் இன்றிக்கே
ஸஸ்ய வ்ருத்திகளும் இல்லையாய்த்து –
நாடு வர்ஷம் இன்றிக்கே இருக்கிறபடியைக் கண்டு கோப வ்ருத்தர்கள் எல்லாம் திரண்டு –
பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்க விரகு என் என்று விசாரிக்க –
அசரீரி போலே புருஷ வாக்யம் -தேவதை திருப்தனாக வர்ஷமுண்டு -என்று பிறக்க –
இவர்களும் வருஷார்த்தமாக இவ்வூரில் பெண்பிள்ளைகள் அடைய நோற்கக் கடவர்கள்-என்றார்கள் –
இக்க்ரமம்-அபி வ்ருஷா பரிம்லா நா -என்றது போய்-
அகால பலிநோ வ்ருஷா-என்று புண்ய காலம் வந்தால் போலே இருந்தது –
அநந்தரம் வர்ஷார்த்தமாக நோற்க்கைக்காக நிலவறைகளிலே அடைத்த பெண்களை புறப்பட விட
நந்தகோபர் வ்ருத்தராகையாலே-எல்லாவற்றுக்கும் கடவானாக கிருஷ்ணனையும்
சாந்த்வ வாதனம் பண்ணிப் பெண்களையும் கிருஷ்ணனையும் சேர விட்டு சரணம் புக-
கிருஷ்ணனும்
கோபீ பரிவ்ருதோ ராத்ரிம் சரத் சந்த்ர மநோ ரமாம் -என்று சொல்லுகிறபடியே
தண்டலிட்ட நிலவும் -விள்ளலிட்ட நாண் மலர்ச் செறிவும் -இருந்த சோலையும் –
பளிங்குப் பாறையும்- செங்குன்றுத் தாழ்வரையும் –
பரப்பு மாறப் பூத்த காவியோடையும் – நாயடி இட்டுப் புகுந்த தென்றலுமாய் இருக்கிற- யமுனா தீரத்தில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையடைய
மெய்க்காட்டிக் கொண்டு கழகம் இருந்து –
இனி நாம் வைகல் இருக்கில்- மாதா பிதாக்கள் அதி சங்கை பண்ணுவார்கள் –
உந்தம் அகங்களிலே போய்ச் சேருங்கோள்-என்று தானும் நப்பின்னை பிராட்டி திரு மாளிகை சேர
பெண்களும் தந்தாம் அகங்களிலே போய்ப் படுக்கையிலே சேர- படுக்கை அடி கொதித்து
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் மத்திய ராத்ரியிலே எழுந்து இருந்து
சிலர் உறங்குகின்ற பெண் பிள்ளைகளை எழுப்புகிறார்கள்
உறங்குகிறவர் யார் எழுப்புகிறவர் யார் என்னில்
குண வித்தர் உறங்குகிறார்கள் -கைங்கர்ய பரர் எழுப்புகிறார்கள்
ராம சரம் ஒருபடிப் பட்டு இராது இறே
சின்னம் பின்னம் -அப்படி கிருஷ்ண குணங்களும் நாநாவாய் இறே இருப்பது
இரண்டு பிரகாரமும் பரமபதத்தில் உண்டு -அமரரும் முனிவரும் – இறே –
முனிவரோடு ஒப்பார் உறங்குகிறார்கள் -அமரரோடு ஒப்பார் எழுப்புகிறார்கள் –
ஆக
1-நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
2-இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
3-அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
4-வர்ஷிக்கும் படியை நியமித்து
5-நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி
6-15-மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
16-30-மேல் விசதமாக இருக்கும்
————
ஹேமந்தே ப்ரதமே மாஸே நந்த வ்ரஜ குமாரிகா –காத்யாயனி விரதம் -நந்த கோபன் ஸூநுவையே –பதியாக பெற -நோன்பு –
அனுபவ பரிவாஹமாக வந்த திருப்பாவை
——–
நாலாயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –
அநாதி மாயயா ஸூப்தா யதா ஜீவ ப்ரபுத்யதே-என்கிறபடியே அநாதி காலம் ஒரு போகியாக உறங்கினவன் (வாடினேன் -ஓடினேன்)இனி
(நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-உண்டோ கண்கள் துஞ்சுதல் )அநந்த காலம் ஒரு போகியாக உணர்ந்தே இருக்கும் படி சொல்லுகிறது -(கீழ் ஆதி இல்லை அநாதி இங்கு அந்தம் இல்லை அநந்தம் )
உணர்ந்தது எம்பெருமானை யாகையாலே உணர்த்திக்கு பாதகம் இல்லை –
ப்ரக்ருதியைச் செறியச் செறிய இருள் மிகும் -(இருள் தரும் மா ஞாலம் அன்றோ )
எம்பெருமானைச் செறியச் செறிய உணர்த்தி மிகும் –
ஞான ஆனந்த மயமான (மகாரம் -மன ஞானே -மன அவ போதனே-மதி ஹர்க்ஷே ஆனந்த மயம் )ஆத்ம ஸ்வரூபத்துக்குத் திரோதானம் பிறந்த அத்தனை இறே பண்டு செய்தது –
ஸ்வரூப சித்தி யன்றோ ப்ராப்யம்(அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே ப்ராப்யம்-சேஷத்வ சித்தியே ப்ராப்யம் )
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்(இரண்டாம் திருவந்தாதி )-உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன்
பாஸ்கரேண ப்ரபாயதா- திருக் கண்டேன் -என்ற பின்பு -பொன்மேனி கண்டேன் என்றார் இறே-
பிரபையை முந்துறக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –
அத்யமே சபலம் ஜென்ம ஸூப்ரபாதா ச மே நிசா -என்று அக்ரூரனுக்கும் கம்ச சம்பந்தத்தால் விடிவு காண ஒண்ணாத ராத்ரியும் விடிந்து அஸ்தமியாத பகலாய்த்து
கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம்(நிர்தேவத்வம் ஆசைப்பட்டு நித்ரா கேட்டு இழந்தானே )-
விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ராவணனுடைய உணர்த்தியில் கும்பகர்ணனுடைய உறக்கம் நன்றாய் இருந்தது –
உணர்ந்தால் எம்பெருமான் பக்கலிலே செல்லுகைக்கு இறாய்க்கும் அத்தனை இறே –
ஆஜகாம முஹுர்த்தேன யத்ர ராம்ஸ ச லஷ்மண (புருஷகாரமாக இளைய பெருமாள் உடன் இருக்கும் பெருமாள் பக்கம் விபீஷணன் வந்து சேர்ந்தான் )- ஸூப்ரபாதாத்ய ரஜநீ மதுரா வார யோஷிதாம் -(கோகுல பெண்கள் மதுரா பெண்களைக் குறித்துப் பேசினது -கண்கள் வண்டு -கண்கள் திருப்பவளாம் தேன் பருகும் )என்று அங்குள்ளார்க்கு
நல் விடிவும் நமக்கு விடியாத ராத்திரியுமாய்த்து என்றார்கள் இறே –
ஆதித்யன் உண்டானாலும் கண்ணுள்ளார்க்கு இறே விடிவு உள்ளது –
(அநாதி மாயையால் நாமும் தூங்கி இருக்க -எழுப்பி அநந்த காலம் போகம் அனுபவிப்பிக்க தானே ஆண்டாள் வாய் அமுதம் நாம் கிடைக்கப் பெற்றோம்)
ஆண்டாளுக்கு பத்துத் தமப்பன்மாருக்கு உண்டான ஆற்றாமையும் ஸ்த்ரீ தனமாகப் பெற்று இவள் பக்கலிலே குடி கொண்டது –
ஆழ்வார்களுக்கு தரிக்கைக்கும் ஒரு பொற்றை யுண்டு -தங்களான தன்மை அழிந்து இருக்கச் செய்தே-
நாய்ச்சியார் தசையாக அந்யாபதேசத்தாலே பேசி அனுபவித்தார்கள் –
பின்னை கொல் —இவள் பிறந்திட்டாள்-(6-5-11)என்னுமா போலே அந்யாபதேசத்தாலே அனுபவிக்க வேண்டாதே
அவனைப் பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வத்தை (பாரதந்தர்யம் )உடையளாய் இருக்கும் –
அவர்களில் காட்டிலும் ஆற்றாமை தன்னேற்றம் -எம்பெருமான் தன் அழகையும் குணங்களையும் இவளுக்கு கொடுத்தான் –
பிராட்டிமாரும் தங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் (பாரதந்தர்யமும் புருஷகாரமும் ஸ்வரூபங்கள் காருண்யம் ஸ்வ பாவம் )இவளுக்குக் கொடுத்தார்கள் –
தமப்பன்மாரைப் போலே ஏறிட்டுக் கொண்ட பெண்மை என்று -இவளுக்கு ஓர் அந்யாபதேசம் யுண்டு -அதாகிறது
ப்ரமணி இடைச்சியாகை-குலம் தரும் -என்று அவனுக்கு அந்நிய குலம் இறே –
(உறி அடி உத்ஸவம் பட்டர் இடைக்குலம் சேர்ந்து அனுபவித்த வ்ருத்தாந்தம் )
பதிம் சம்யோக ஸூலபம் வாயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசா சாதாப்லவோ யதா -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் பருவமாய்
மானிடவற்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன் என்னும் தன்மையை யுடையளாய்(நாச்சியார் -1-5)
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -(இரண்டாம் திருவந்தாதி )என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணிக் கொண்டு
வட பெரும் கோயிலுடையானோடே -தழுவி முழுசிப் பரிமாற்ற வேணும் என்று இவள் செல்ல –
இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசன்னையாய்- இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்த இடத்திலே
திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு அனுபவிக்கப் பெற்றார்கள் என்று கேட்டு –
அதுக்கு நாம் உதவப் பெற்றிலோம் -என்று இன்னாதாக
கோவர்த்த நோ கிரிவா (அதிமானுஷ ஸ்தவம் )-அவன் பொருப்பன பன்னிரண்டும் காட்டின மலை கிடந்தது
யமுநா நதீ சா -அவனும் பெண்களும் புக்குக் கலக்கின நீர் இன்னமும் தெளிந்தது இல்லை –
மஞ்சளும் குங்குமாதிகளும் இப்போதும் காணலாம்
அனந்தாழ்வான் திரு முக்குளத்தில் புகுத்தி தடவினார் -இது என் என்ன –
அப்பெண் பிள்ளைகள் குளித்த தொரு மஞ்சள் கொழுந்தாகிலும் கிடைக்குமாகக் கருதிக் காண்-என்றார்
(கோவர்த்தனோ கிரிவரோ யமுனா நதீ சா பிருந்தாவனம் ச மதுரா புரீ புராணீ
அத்யாபி ஹந்த ஸூலபாஸ் க்ருதிநாம் ஜனாநாம் ஏதே பவச் சரண சாரஜூஷஸ் பிரதேசா–அதிமானுஷ ஸ்தவம்-49-
கோவர்த்தனோ கிரிவரோ –பர்வத ஸ்ரேஷ்டமான கோவர்த்தனமும்
யமுனா நதீ சா –அந்த யமுனா ஆறும்
பிருந்தாவனம் ச –ப்ருந்தாவனமும்
மதுரா புரீ புராணீ –புராதனமான மதுரா நகரையும் -ஆகிய
பவச் சரண சாரஜூஷஸ் ஏதே பிரதேசா–உன்னுடைய பாத சஞ்சாரம் பெற்ற இந்த ஸ்தலங்கள்
க்ருதிநாம் ஜனாநாம் –ஸூஹ்ருதிகளுக்கு
அத்யாபி ஸூலபாஸ் –இன்றைக்கும் ஸூல பமாய் உள்ளன –)
பிருந்தாவனம் ச -அவனாலும் பெண்களாலும் பருத்தி பட்ட பன்னிரண்டும் ஸ்ரீ பிருந்தா வனத்தில்
திருக் குரவை கோத்த அடிச் சுவடும் இன்னமும் அழிந்தது இல்லை
மதுரா ச புரி புராணி -ஆஸ்ரிதற்கு வயிறு எரித்தலான தேசம் -கொடும் தேசம் என்றுமாம் –
ஆனை படும் ஆகரம் போலே சர்வேஸ்வரன் படும் ஆகரம்
அத்யாபி அந்த ஸூலபாக்ருதி நாம் ஜனா நாம் –கால்நடை பாக்யவான்களுக்கு இப்போதும் காணலாம் கிடீர்-
வைலக்ஷண்யத்துக்கு த்ருஷ்டாந்தம் –
தேஹாத்ம அபிமானத்துக்கு கூனியும் கைகேயியும் –
தார்மிகத்வத்துக்கு சக்ரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்தர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்-
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -ஸ்ரீ பரத ஆழ்வான் படி பெரியாழ்வாரது -ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி ஆண்டாளது
பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார் -இவள் பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்டாள்-
முந்துறவே பல்லாண்டு என்றார் அவர் -இவள் நீராடப் போதுவீர் -என்றாள்
இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் –
இவளுக்கு உபாயம் விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க -இவள் தன்னை அழித்து அவர்களை பெறப் பார்க்கிறாள்
நம்மாழ்வார் -நெடுமாற்கு அடிமையிலும் -வேய் மறு தோளிணையிலும் -கடை கோழி -கடைக் கோடி –
நிலையிட்ட அர்த்தம் -இவளுக்கு முற்பட்டது –
கிருஷ்ணனைப் பிரிந்த இத் தர்ம ஹானி கண்டு மாரி மறுத்தது –
கூடினால் -ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக -பிரிந்தாலும் -அபி வ்ருஷா பரிம்லாநா -என்னும்படியாம் இறே
முன்பே மழை பெய்யாமைக்கு நோற்றார்கள் ஆகவுமாம்-மேலையார் செய்வனகள் -என்று வ்ருத்த ஆசாரங்களை நினைக்கிறது ஆழ்வார்களை –
அர்ஜுனன் உபாயத்தை கடைக் கோழி கடைக் கோடி-நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்-
ஸ்ரீ பரத ஆழ்வான் உபேயத்தை நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆடச்செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –
வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா -என்பான் என் என்னில்
சத்ப்ரக்ருதி யாகையாலே காணில் மோஹிக்கும் என்று வட பெரும் கோயிலுடையான் திருவடிகளில் புகாதபடி அடக்கிக் கொண்டு இருப்பர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்
இது ஆழ்வார்களும் ஒக்கும் -ஆண்டாளுக்கு ஒக்கும் –
எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப் பிரபந்தங்கள் –
சாஷாத் ப்ரமேயம் இது -அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-
(அர்த்த பஞ்சகத்திலும் ப்ராப்யமே ஒன்றே ஆழ்வார்களுக்கு நோக்கு -மற்றவை பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-என்றவாறு)
(புருஷார்த்தம் -வாழ் வினையையே சொல்ல வந்தவர்கள் -மற்ற நான்கும் நம் போல்வாருக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமே
ஆகவே அதற்க்கு ஏற்ற ஸப்தங்களை அவன் இவர்கள் மூலம் வெளியிட்டு அருளினான் என்கிறார்)
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –
ஸ்வாபாதேசாதிகளால் (ஸ்வாபாதேசம்-உள்ளுறை–ஆதி -தானான தன்மை )பகவத் தியானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி –
அந்யாபதேசத்துக்கு (பாகவத ததீய சேஷத்வத்துக்கு ) எல்லை அவர் மகள் படி –
மடல் எடுக்கப் பாராதே நோன்பிலே கையை வைத்தது –
கிருஷ்ணன் மடல் எடுக்கக் காணில் நாமும் வீறுடையோம் என்று உபேக்ஷித்து இருக்கும்
இதர உபாயங்களை விட்டு என்னைப் பற்று என்கையாலே நோன்பு என்னில் சஹியான் –
இவர்கள் தங்களுக்கு தேஹ யாத்ரையாய் இருக்கிலும்-
நாட்டார் தர்மம் என்று அடுத்துக் கட்டுமதும் பொறுக்க மாட்டான் -அப்போதே கலந்து கொடு நிற்கும் –
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply