1 -கண்ணன் –கண்ணாக இருப்பவன் –
கண்ணாவான் என்றும் மன்னார் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதி வாய்ச செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற மாதரார் கண்களூடே வாவுமான தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே
உறுப் பொருள் உணர்த்தி விட்டான் –ராமனே கண்ணன் என்னும் பொருளில் கம்பர்
2 – கண்ணே -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப் படும் விஷயமும் அவனே –
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –
3-கண்ணா -நிர்வாஹகன் -கணவன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
களை கண் -மற்றிலேன் -மணியை வானவர் கண்ணனை –எண்ணிலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண் அலால் ஓர் கண்ணிலேன் –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் -உலகத்துயிர் தேவர்கட்டு எல்லாம்
4-கண்ணன் எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாரையும் சீர்மைத்தே
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணன்
5-கண்ணன் -கண் அழகன் –
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் –
தண் பெரு நீர்த்தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் / தகும் கோலத்தாமரைக்கு கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / அணி கொள் செந்தாமரைக் கண்ணன் / தாமரைக்கு கண்ணினன் / கமலத் தடம் பெரும் கண்ணினன் / செய்ய கண்ணினன்
5–கண் -கண்ணோட்டம் -கடாக்ஷம் -இரக்கம் -கருணை -அனுக்ரஹம் -கண்ணோட்டம் அதிகாரம் -திருக் குறளில் -தன்னோடு பயின்றாரைக் கண்டால்
அவர் கூறியன மறுக்க மாட்டாமை -இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாதலின் அப்பெயர் யாயிற்று -பரி மேல் அழகர் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண-ஆபத் சகத்வாதி குண பெரிதமான விசேஷ கடாக்ஷத்தை பண்ணினவன் -வியாக்யானம்
கார்த்தன் கமலக் கண் -நாச் திரு –அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தை பண்ணுமது யாய்த்து திருக் கண்கள் –
6–கண்ணன் –கையாளன்–ஸுசீல்யம் உரு எடுத்த எளியவன் –
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்கு கையாளாகத் தருமவனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை -சர்வேஸ்வரனாய் இருந்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளானவன்
கரிய மேனியன் கண்ணன் –விண்ணோர் இறை –ஆஸ்ரிதற்குக் கையாளாய் உள்ளவன்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —விரஹ வியசனம் தீர்க்கும் ஆச்ரித ஸூ லபன்
8–கண்ணன் -கரிய மேனியன் –
கார் முகில் போலே வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போலே என் அம்மான் கண்ணன்
காரார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்துகே கண்ணபிரானை
காரார்ந்த திரு மேனிக் கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
9–கண்ணன் –களிக்கச் செய்பவன் -ஆனந்திப்பிக்கிறவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை –ஆனந்தாவாஹனனைப் பற்றின எனக்குத் துக்கம் இல்லை
9–கண்ணன் –ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -மாயன் என்னும் பொருளில்
மலியும் சுடர் ஓளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் / கண்ணனை மாயன் தன்னை / கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் –
-எத்திறம் என்னும் படியான குண சேஷ்டிதங்களை யுடையவன் –
10–கண்ணன் -அறிவு அளிப்பவன்
உள்ளொற்றி உள்ளூர் நகப்பருவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண் சாய்பவர் -கண் சாய்பவர்–அறிவு தளர்வார் –
விண்ணருள வந்ததொரு மெல்லமுதம் அன்ன வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
தண் அருளி ஏழ்மை துடைத்து எழு மெய் ஞானக் கண்ணருள் செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் —
ஞானக் கண்ணருள் செய் கண்ணன் –இராம பிரானை கம்பர் -மயர்வற மதி நலம் அருளுபவர் கண்ணன்
இப்படி பல பொருள்கள் உண்டே –
—————————————————-
ஸூகுமாரவ் / மஹா பலவ்–பாழி அம் தோள்-வன்மையும் மென்மையும் உண்டே / சீறி அருளாதே -சீற்றமும் அருளும் உண்டே -/ கதிர் மதியம் போல் முகத்தான் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ / ஆழி யம் கையனே அச்சோ அச்சோ / பரத்வ ஸுலப்யம் -கலந்தவன் அன்றோ –
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண கணன்-சேராச் சேர்த்தி உண்டே –
—————————————————–
சாதாரண -வருஷம் -மா முனிகள் திரு அவதாரத்தால் அசாதாரணம் ஆனதே -தாரணா -எல்லை மீறாமை –
மர்க்கட கிசோர நியாயம்–குரங்கு குரங்குக் குட்டி சுவகத சுவீகாரம் -/ மார்ஜார கிசோர நியாயம் -பூனை பூனைக் குட்டி–பர கத சுவீகாரம்
ப்ரஜாபதிம் த்வோ வேத ப்ரஜாபதிஸ் த்வம் வேதயம் ப்ரஜாபதிர் வேதச புண்யோ பவதி-
யஸ்ய ராமம் ந பஸ்யேத்து யஸ்ய ராமம் ந பஸ்யதி–நிந்தித ச வஸேல் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே
அயம் ஆத்மா –பரமாத்மாவான அழகிய மணவாளன் -/ ப்ரவச நேந மேதயா பஹு நா ஸ்ருதேன–கேவல ஸ்ரவண மனன நிதித்யாஸங்களால்
ந லப்ய–அடைய முடியாதவர் / யம் ஏவ -எந்த ஜீவனை /ஏஷ-இப்பரமாத்மா
வ்ருணுதே–மா முனியை ஆச்சார்யனாகவும் / குகன் அர்ஜுனன் போன்றறோரை தம்பி நண்பன் சஹா என்றும் /
நந்தன் வஸூதேவன் போன்றோரை தந்தையாகவும்
யசோதை தேவகி -தாயாகவும் -அக்ரூரர் மாலாகாராதிகளை வருத்தும் -ஆழ்வார்களாதிகளை எல்லாமாகவும் வரிக்கிறானோ
தேனை -அந்த ஜீவனாலேயே / லப்ய -அடையத் தக்கவனாய் ஆகிறான் / ஏஷ –இவ்வழகிய மணவாளன்
தஸ்ய ஏவ -தன் நிர்ஹேதுக கடாக்ஷத்துக்கு இலக்கான அவனுக்கே
ஸ்வாம் தநூம்-தன் அசாதாரண ஸ்வரூபத்தை -சிஷ்யன் நண்பன் பிள்ளை கணவன் எஜமான் எல்லாமுமாக இருக்கும் தன்மையை
விவ்ருணுதே-பிரகாசிக்கிப்பிக்கிறான் –நாயமாத்மா ஸ்ருதியின் பொருளும் இதுவே –பரம வைதிக சித்தாந்தம் –
ஆச்சார்ய தேவோ பவ –தேவமிவ ஆச்சார்யம் உபாஸீத / என்னை ஒழிய எண்ணில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றம் பருகினான்
மம நாத யதஸ்தி யோஸ்ம் யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ –நிகில ஸ்வ மிதி பிரபுத்ததீ அதவா கின்னு ஸமர்ப்பயாமி -தே –ஆளவந்தார்
ஆட் கொள்வான் ஒத்து என்னுயிர் உண்ட மாயன் –
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ வில்லிபுத்தூர் விஞ்சி மூர் ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply