ஸ்ரீ திருப்பாவை –கறவைகள் பின் சென்று–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

(மேம் பொருள் ஒரே பாசுரம்
உலகம் உண்ட பெரு வாயா ஒழி வில் காலம் எல்லாம் இரண்டு திருவாய் மொழி
போல் இங்கும் இப்பாசுரம் அடுத்த பாசுரம்
மந்த்ர ரத்னம் த்வயம் அர்த்தம் சொல்ல வந்தவை
ரஹஸ்ய த்வயத்தால் வியக்தம் இல்லாத
ஸ்ரீ சம்பந்தம் இதிலே தானே வியக்தம்
இரண்டு வாக்யத்திலும் ஸ்ரீ முன்னிடுவது உண்டே
முன் வாக்கியம் புருஷகாரமாக பிராட்டியைப் பற்றி சரணாகதி
பின் வாக்யத்தால் மிதுனத்தில் கைங்கர்ய பிரார்த்தனை
பிராட்டியாலே பேறு த்வயத்தாலே )

மார்கழி நீராடுவான் என்று நோன்பை பிரசங்கித்து –
அதுக்கு உபகரணங்களாக இருப்பன சங்கங்கள் முதலானவற்றையும்
சூடகமே தோள் வளையே என்று விரதம் தலைக் கட்டினால் அலங்கரிக்கைக்கும் –
உடுக்கைக்கும்
உண்கைக்கும்
வேண்டுவனவாய் இருப்பன சில உபகரணங்களையும் –
அவனுக்கும் தங்களுக்கும் அக வாயிலே சில நிழல் எழா நிற்க
நாட்டுக்கு மேல் எழுந்தன சில அபேக்ஷித்தார்களாய் நின்றார்கள் –
கீழ் இரண்டு பாட்டிலும் –

அணி யாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் (நாச்சியார் -4-10 )என்று
இவர்கள் நெஞ்சிலே கலக்குமவன் ஆகையால்
அவன் உங்கள் அபிசந்தி இவ்வளவு என்று தோற்றி இருந்தது இல்லை –
நீங்கள் சொன்னதையும்
இன்னம் மேலும் சொல்லுமவையும் யுண்டாகிலும்
நாம் தரும் இடத்தில்
நீங்கள் நின்ற நிலை தன்னை அறிந்து கொள்ள வேணும் –
பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது யத்னித்து வைக்க வேணும்
அதுக்கு உடலாக நீங்கள் அனுஷ்டித்த உபாயம் ஏதேனும் உண்டோ என்ன –

எங்கள் அளவு கண்டாய்க்கு சில சாதனங்கள் உண்டோ என்று
சொல்லும் படி இருந்ததோ -என்று
தங்கள் ஸ்வரூபம் இருந்த படியை அறிவித்து –
கேவலம் தயா விஷயம் என்னும் இடத்தை திரு உள்ளம் பற்றி
நீ எங்கள் கார்யம் செய்ய வேணும் என்று
தங்கள் உபாய ஸூந்யதையை விண்ணப்பம் செய்கிறார்கள் –
இப் பாட்டில் –

போற்றி யாம் வந்தோம் -(21)
எம் மேல் விழியாவோ -(22)
உன்னை அருத்தித்து வந்தோம் -(25 ) என்று தொடங்கி ப்ராப்ய ருசியை ஆவிஷ்கரித்தார்கள் கீழ்

அந்த ப்ராப்யத்தை பெறுகைக்கு உடலாக
தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்
அவனுடைய உபாய பாவத்தையும் சொல்லுகிறார்கள் இதில் –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் (23 ) என்றவாறே
வந்த வருத்தங்களை ஆராயாதே
அக வாயில் ஏதேனும் சில சாதனா அம்சங்கள் உண்டோ என்று ஆராய இழிந்தான்

நின் அருளே புரிந்து இருக்கிற எங்களுக்கு (பெரியாழ்வார் )எடுத்துக் கழிக்கலாம் படியும் சில உண்டு என்று இருந்தாயோ –
இரங்கு என்றும்
அருள் என்றும்
நாங்கள் அபேக்ஷித்த அருளுக்கு பிரதிபந்தமாய்க் கிடப்பன ஒன்றும் இல்லையே என்று
சர்வஞ்ஞன் அறிய
ஒன்றும் இல்லாமையை யாதார்த்தேன அறிவிக்கிறார்கள் –

1-சித்த உபாய சுவீகாரம் பண்ணும் அதிகாரிகளுக்கு பேற்றுக்குக்
கைம் முதலாய் இருபத்தொரு சத் கர்மம் இல்லை என்கையும்
(கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்)
மேலும்
2-யோக்யதை இல்லை என்கைக்கா தங்களுடைய நிஷ்கர்ஷ அனுசந்தானமும் –
(அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து)
3-மூல ஸூக்ருதமான ஈஸ்வரனுடைய குண பூர்த்தியை அனுசந்திக்கையும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
4-சம்பந்த ஞானமும் –
(உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது)
5-பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணுகையும்
(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே)
6-உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே ப்ராப்யத்தை அபேக்ஷிக்கையும்
(இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-)
இவை ஆறும் அதிகாரங்கள் ஆகையால்

(இல்லை என்பதுக்கு ஏழு விதமாக அருளிச் செய்கிறார்
1-தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –
2-நிகர்ஷம் சொல்லுவார் –
3-நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –
4-ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்
5-சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்
6-பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்-
7-ப்ராப்யத்தை உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இறே அதிகாரிகள் இருப்பது )

நோற்ற நோன்பு இலேன் -(திருவாய் )
குறி கோள் அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்-(திருமாலை )
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -(திருச்சந்த )
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்திலேன் -(பெரிய திருமொழி-1-9)
தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –

ராவணோ நாம –
ஜகத்திலே பேர் படைக்கும் படி பர ஹிம்ஸையிலே அதிர நடத்துவதொரு பேர் மாத்ரமாய்ப் போகாதே –
சர்வ விஷயமாக வழி கெட நடந்து பரஹிம்சையே யாத்ரையாய் இருபத்தொரு ஜென்மமாய் –
மேலும் திருத்த ஒண்ணாத படி நியாம்யன் அன்றிக்கே இருப்பான்
ஒரு தண்ணியனுக்கு சேஷ பூதனாய் –
அவனாலே தூஷிதமான யுதிரத்திலே சிரகாலம் வாசனை பண்ணிப் பிறந்து முறுகல் தனத்தில்
அவன் என்னைக் கொண்டு நடத்த அநீதிகளில் நடந்து –
அதில் அவனிலும் காட்டில் பிரகாசம் யுடையானாய் இருப்பான் ஒருவன் என்று நிகர்ஷம் சொல்லுவார் –

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் -என்றும் –
எப் பாவம் பலவும் இவையே செய்து என்றும் –
மனத்திலோர் தூய்மை இல்லை -என்றும்
நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –

அரவின் அணை அம்மானே -(திருவாய் )
நம்பி கடல் வண்ணா –
மாயனே எங்கள் மாதவன் (பெரிய திருமொழி-1-9-)–என்றும் –
சரண்யா (ஸ்தோத்ர ரத்னம் )-என்பராய்க் கொண்டும்
ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்

உன் அடியனேனும் வந்து என்றும் –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் என்றும் -சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்

நாயினேன் செய்த குற்றம் நற்றமாகக் கொள் என்றும் –
மத் வ்ருத்தம் அசிந்தையித்வா –ப்ரஸீதா -(ஸ்தோத்ர ரத்னம் )-என்றும்
சர்வான் அசேஷத க்ஷமஸ்வ (ஸ்தோத்ர ரத்னம் )என்றும் பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்-

சன்மம் களையாய் —
உன்னடி சேர் வண்ணம் அருளாய் என்று ப்ராப்யத்தை
உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இறே அதிகாரிகள் இருப்பது –

ஆகையால் இவர்களும்
1-தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்
2-அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து
3-உபாய பூர்த்தியையும்
4-தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு –
5-கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு
6-எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள் –

கார்ய நிர்ணய வேளை யாகையாலும்
சர்வஞ்ஞன் சந்நிதி யாகையாலும்
உள்ள படி தீர விட்டுக் கொள்ளாத போது புரை அறாது இறே

நிதாநஞ்ஞனான பிஷக்கின் முன்பு வியாதி கிரஸ்தன் தான் பண்ணின அபத்யங்களை சொல்லி
அந்த வியாதியைத் தீர்த்துக் கொள்ளுமா போலே
ஸ்வ தோஷத்தை ஆவிஷ்கரித்து ஷாமணம் பண்ண வேண்டி இறே பிரபன்னர்க்கு இருப்பது –
(மறக்காமல் மறுக்காமல் மறைக்காமல் சொல்ல வேண்டுமே )

புறம்பு அந்த வியாதிக்கு
நிமித்தமும்
பரிஹாரமும்
பரிஹாரம் பண்ணும் பிஷக்கும்
பேஷஜமும்
பத்யமும்
வியாதி சமித்தால் புஜிக்கும் போகமும் பேதித்து இருக்கும் –

இங்கு வந்தால் அப்படி அன்று –

வேவாரா வேட்க்கை நோய் (திருவாய்-2-1)-என்று பிரேம வியாதிக்கு
நிமித்தமும் தானாய்

மாலே மணி வண்ணா என்று கிருஷ்ணன் தானே பரிஹாரம் பண்ணும்
மருத்துவமும் தானாய்

ஆயர் கொழுந்து மருந்தாம் (திருவாய்- 1-7)-என்று
பேஷஜமும் தானாய்

கொழுந்தில் கிழங்கு பத்யமுமாய் –

நோய் விட்டால் புஜிக்குமதுவும் -எங்கள் அமுது என்கிறபடியே
கிருஷ்ணன் தானாய் இறே இருப்பது –

மருந்தும் –அமுதமும் தானே என்று
அம்ருதம் ஒளஷதமாம் படி இருக்கிறது இறே

வியாதி க்ரஸ்தர் -மருந்து -என்று இருப்பார்கள் –
வியாதி ரஹிதர் அமுதம் என்று இருப்பார்கள் –

இங்குள்ளார் நோய்கள் அறுக்கும் மருந்து என்று இருப்பார்கள் –
அங்குள்ளார் போக மகிழ்ச்சிக்கு மருந்து என்று இருப்பார்கள்

நோய் இல்லாதான் ஒருவனும் (அவன் மட்டுமே)தன்னை மருந்து என்று அறியான் –
(நித்ய சம்சாரியும் அறியான் -சம்சாரம் வியாதி என்று எண்ணம் இல்லாதவன் )

தேனில் இனிய பிரானே அரு மருந்து ஆவது அறியாய் (பெரியாழ்வார் -2-7 )-என்னக் கடவது இறே

இப்படி பிரபலமாய் இருபத்தொரு ஒளஷதம் பெற்றால் கடுக பரிஹரித்துக் கொள்ள வேண்டும் என்கையால்
சுத்த பாவராய்
உன்னால் அல்லது செல்லாதாரைப் போலே
எங்களை நிரூபியாதே
திரு முன்பே நின்று சொன்ன வார்த்தையைப் பொறுத்து அருள வேணும்
என்று ஷாமணம் கொள்ளுகிறார்கள்

உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களையும் ஷமிப்பான் ஒருவன் ஆகையால் இறே
அபத்ய ஸஹ ஒளஷதம் என்றது –
நச்சு மா மருந்தும் (திருவாய்-3-4-நச்சி விரும்பி )இறே

இப்போதே எம்மை நீராட்டு என்று ஆசு கார்யமான ஒளஷதம் ஆகையால்
அப்போதே குளித்து உண்ணப் பண்ணும் இறே –

ஆகையால் கண் அழிவற்ற ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறார்கள் –

ப்ராபக ஸ்வீகாரம் தான் –
தத் இதர சர்வ உபாய தியாக பூர்வகமாய்த்து இருப்பது –
அவை நின்ற நின்ற அளவுக்கும் ஈடாய் இருக்கும் –

அவற்றில் அதிகரிக்கைக்கு அசக்தனானவன் மாட்டேன் என்றும்
அதிகரித்தே அப் பிராப்தியை யுணர்ந்தவன் விட்டேன் என்றும் –
அறிந்து அதிகரியாதவன் அவை எனக்கு இல்லை என்றும்
அவை அறியாதவன் ருசி வாசனைகளும் இல்லாதவன் ஆகையால்
தான் பூர்ண அதிகாரி என்னும் இடத்தை காட்டினான் ஆகிறான்

ந ஸ ஸாமர்த்யவான் -என்பாரும் உண்டு –
ஸந்த்யஜ்ய என்பாரும் உண்டு –(விட்டேன்)
நோற்ற நோன்பு இலேன் என்பாரும் உண்டு –
மற்றேல் ஓன்று அறியேன் (பெரிய திருமொழி-1-9 )-என்பாரும் உண்டு –

ஆகையால் இறே உபாயம் சர்வாதிகாரம் ஆகிறது –

உபாயாந்தரம் யுடையவனுக்கு அவற்றை விட வேண்டுவான்
என் என்னில்-
பகவத் வியதிரிக்தமாய் இருபத்தொரு ஓன்று உபாயம் ஆக மாட்டாமையாலே-
அவை உண்டானாலும்
இவன் கை பார்த்து இருக்க வேணும் இறே

அவை அஸக்ய கிரியை என்று மீளுதல்
ஸ்வரூபத்தை உணர்ந்து மீளுதல் அத்தனை –

அவை உடையவர்கள் விடுவது
இல்லாதவர்கள் இல்லை என்று அறிவிக்கையுமாய் இறே இருப்பது –

அதில்
இவர்கள் தான்
எங்களுக்கு த்யாஜ்யாந்தரம் இல்லை என்கிறார்கள் –

மஞ்சனக் கொட்டும்
மேல் சங்கும்
போற்றவும் புகழவும்
பகல் விளக்கு பிடிக்கையும்
கொடி எடுக்கையும்
மேல் கட்டி கட்டுகையும்
ஆபரணங்கள் பூண்கையும்
உடுக்கை உடுக்கையும்
அடுகுவளம் எடுக்கையும் இவை எல்லாம் அதிசயித புண்யருடைய வரிசை இறே

ஷூத்ரமான ராஜ போகமன்றே நீங்கள் நினைக்கிறது –
வான் இள வரசு -நம்மோடு கூடி இருந்து
குளிர்ந்து
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் புஜிக்கும் போது
ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே
தபோ ஞான சமாதிகளாலே விளைந்த புண்ய பலமாக வர வேணும் –
அப்படிக்கு நீங்கள் ஏதேனும் செய்தது உண்டோ -என்ன சொல்லுகிறார்கள் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-

பதவுரை

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத
ஆய்க் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோடு உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆஸ்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருள வேணும்;
எல் ஓர் எம் பாவாய்

கறவைகள் பின் சென்று
1-சாங்க அத்யயனம் பண்ணி -‘
2-அர்த்த ஞானம் பிறந்து –
3-விஹித கர்மங்களை அனுஷ்ட்டித்து –
4-விரோதி பாப ஷயம் பிறந்து –
5-ஸூத்த பாவனாய்
6-ஜிதேந்திரனாய் விஷயங்களின் நின்றும் ப்ரத்யாஹ்ருதமான மனசை ஆத்ம ப்ரவணம் ஆக்கி
7-ஆத்ம யோகம் கை வந்து
8-அந்தர்யாமி அளவும் சென்று
9-அவனுடைய ஸ்வரூபாதிகளை ஸ்ரவண மனனங்கள் பண்ணி
10-அர்ச்சன ப்ரணாமாதி பூர்வகமான நிரந்தரமான தியானத்தை பண்ணி –
இப்படி திரண்ட ஸூஹ்ருதத்தாலே உன்னைப் பெறும் அந்த யோகத்தில் அந்வயிப்பதாக இறே
வேதாந்தங்களில் சொல்கிறது

1-இந்த தர்சன சாமாநாகாரமான நிரந்தர ஸ்ம்ருதிக்கு விஷயமான
2-பகவத் ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான
3-ஆத்ம அவலோகந ஹேதுவான
4-ஜிதேந்த்ரியத்துவத்துக்கு மூலமான
5-பாப க்ஷய ஹேதுவான
6-விஹித கர்ம அனுஷ்டானத்துக்கு நிமித்தமான –
7-அர்த்த ஞானத்துக்கு சாதனமான
8-சாங்க அத்யயனம்
9-குருகுல வாச சாபேஷமாய் இறே இருப்பது –

அதுக்கு அடியாக நாங்கள் குருகுல வாசம் பண்ணின படியைக்
கேட்டருளல் ஆகாதோ என்கிறார்கள்

கறவைகள் பின் சென்று
இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-

அபிஜன வித்யா விருத்தங்கள் மூன்றும் அவதாதமாய் இருப்பாரை இறே ஸேவ்யராகச் சொல்லுகிறது –
திர்யக் ஜென்மம் ஆன படியால் பிறவியும் விபரீதமாய்
ஞான ஹீனரை பசு பிராயர் என்னும் படி ஞானமும் இன்றிக்கே
துராசாராரை ந்ரு பசுக்கள் என்னும் படியாகவும்
பசு சமர் என்னும் படியாகவும்
விருத்த ஹீனங்களும் ஆனவற்றை இறே நாங்கள் ஆச்சார்யர்களாக பிரபத்தி பண்ணுவது

பஹு ஸ்ருதராகையாலே ஞான விருத்தருமாய்
ஞான விருத்தர் பலர் நெடும் காலம் சேவிக்கைக்கும் வீத ராகர் ஆகைக்கும்
வயோ விருத்த ரூபமாய்
ஞான அனுரூபமான சீலத்தாலும் பழுத்து ப்ரஹ்ம வாதிகளாம் படி தத்வ தர்சிகளுமாய்
விபரீதம் சொல்லும் பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற- பரரை -பிறரை- பிரமாண சரங்களாலே வென்று
பகவான் மனன பரராய்
கர்த்தவ்யங்கள் சோராமல் அனுஷ்ட்டித்து
ஒரு ப்ரஹ்ம நிஷ்டராய் இருப்பாரை ஆச்சார்ய அனுவர்த்தனத்தைச் சொல்லுகிற சாஸ்திரங்களில்
சொன்ன பிரணிபாத
அபிவாதன
பரப்ரஸ்ன சேவைகளில் ஒன்றும் குறையாத படி இன்றே அனுஷ்டித்துக் கொண்டு இறே அறிவுடையார் போருவது –

நாங்கள் கறவைகளை அனுவர்த்தித்தோம் –
அதுக்கு உறுப்பாக உண்ணும் நாளும் இன்றிக்கே உறக்கமும் இன்றிக்கே
பயாநாமபஹாரியை அண்டை கொண்டு அபயங்கதராய்
இளையவர் கலவியின் திறத்தை(பெரிய திருமொழி-1-6) நாணினவர்களை இறே அனுவர்த்தநீயராக சாஸ்திரம் சொல்வது –

ஆஹார
நித்ரா
பய
மைதுனங்களில் அநியதங்களாய் இருக்கும் பதார்த்தங்களை ஆச்சார்யர்களாக வரித்தோம்
இது எங்களுடைய வ்ருத்த சேவை இருந்த படி

கறவைகள் பின் சென்று
அறிவு கேட்டுக்குத் தலையான கன்று காலிகள் முன்னே போக
அவற்றின் பின்னே சென்றாய்த்து இத்தனை காலமும் திரிந்தது

எங்களை பார்த்தால்
பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய்
எங்கள் இளிம்பு கண்டு சிரித்து
எங்கள் ஆர்ஜவத்தை அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்

காலிகள் பின் சென்று என்னாதே –
கறவைகள் பின் சென்று -என்றது
தர்ம புத்தயா ரஷித்தது அன்று –
பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –
எருதுகள்
வறடுகள்
ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –

பின் சென்று
ப்ராப்ய ருசி யுடையார் அது கை புகுரும் அளவும்
பெரு விடாயர் நீர் நசை யுள்ள இடம் எங்கும் தட்டித் திரியுமோ பாதி
ருசிக்கு வர்த்தகராய் இருப்பார் பின்னே
கலசம் பூர்ணமாதாய பிருஷ்டகோ அநு ஜகாமஹ -என்கிறபடியே
பூர்ண கலாசாதிகளையும் கொண்டு ஸமித் பாணிகளாய்த் திரிதல் –

பிராப்யம் கை புகுந்தால்
பிருஷ்டதஸ் து தநுஷ் பாணி -என்னும் படி
தாய் நாடும் கன்றே போல் பிரிவில் நாக்கு ஓட்டும் படி
வாளும் வில்லும் கொண்டு
பின் தொடர்ந்து அனுவர்த்தித்து திரியக் கடவதாய் இறே இருப்பது –

அதுக்கு உடலாக நாங்கள் உறியும் மழுவும் தடியும் கொண்டு
ஞான பிரதராகவும்
ப்ராப்ய வஸ்துவாகவும் நினைத்துப் பின் சென்றது பசுக்களை –

கறவைகள் பின் சென்று
பசுக்களை மேய்த்து பின்னே திரிந்தாலும்
போய்த் தங்குவது சத்துக்கள் இருக்கும் புண்ய ஷேத்ராதிகள் ஆகில் அழகியது இறே
கோவலூர் சாளக்ராமாதிகள் அயோத்தியை மதுரை கோயில் தொடக்கமான
யூர்கள் கிராமங்கள் ஆஸ்ரமங்கள் தொடக்கமான இவற்றில்
இராத் தங்கினாலும் அழகியது இறே என்ன

கானம் சேர்ந்து
என்கிறார்கள் -வஸ்து பூதர் வர்த்தித்தல்
நீ அபிமானித்தல் செய்யும் பிரதேசங்களிலும்
மழைக்கு ஒதுங்கி ஓர் இராத் தங்கியும் அறியோம்
ஒரு கோபாலர் அபிமானத்தில் மழைக்கு ஒதுங்கில் வாரிப் பிடியாக அகப்படும் இறே

கானம் சேர்ந்து
பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ள இடம் தேடி
அவ் விடத்தே நெருங்கிப் போந்தோம் இத்தனை

கானம்
காடுகளில் -தண்ட காரண்யம்-நைமி சாரண்யம் -பத்ரிகாஸ்ரமம் -தொடக்கமான வற்றிலே
நம்முடைய அபிமானம் யுண்டாய் –
சத்துக்களும் ஒதுங்கிப் போருவர்களே என்ன –

ஒரு விசேஷணம் இடாதே
வெறும்-கானம் என்கிறார்களே -இவர்கள் வர்த்திக்கும் காடு –
எவ்வுஞ்சிலை வேடர் காடு இறே -(பெரியாழ்வார் -3-2 )
அடி இடுவார் காலிலே அருவும் -பிருந்தாவனம் ஆகையால் சத்துக்கள் சேரும் இடம் அன்றே

(சேர்ந்து–பதம் – உள்ள அருளிச் செயல்களை காட்டி அருள்கிறார் மேல்)

சென்று சேர்ந்து
பரவிச் சென்மின்களே —
சென்று வணங்குமினோ -என்னும் இடங்களில் சென்று அறியோம் –

சேர்மினீரே-
மணி மாடம் சேர்மின்களே -என்கிற இடங்களில் சேர்ந்தும் அறியோம்

பரன் சென்று சேர் -என்று
உனக்கும் கந்தவ்யமாய் ப்ராப்யமுமாய் யன்றோ அவை இருப்பது
அவற்றில் சென்றும் அறியோம் –

சேர்ந்தும் அறியோம் –
சென்று -சேர்ந்து -என்கையாலே -அவற்றிலே பொருந்தி இருக்கை –
சத்துக்கள் அனுவர்த்தனமும்-
புண்ய க்ஷேத்ர வாசமும் பெற்றிலோம் என்கிற இழவும் இல்லை –

நீங்கள் வைசியர் ஆகையால் கோ ரக்ஷணத்தை வர்ண தர்மத்தில் சில எழுதலாம் –
காட்டில் தங்குகையை வான பிரஸ்தான ஆஸ்ரமத்திலே முதலிட்டு ஆஸ்ரம தர்மம் ஆக்கலாம் –
ஆச்ரய அர்த்தமாக பசுக்களை மேய்த்து காடுகளில் தங்குகையும் தர்மமாகச் சொல்ல நிற்கும் –
தபஸ் பரரான ரிஷிகளும் அரண்ய வாசம் பண்ணி அன்றோ தர்மார்ஜனம் பண்ணுவது –
ஆகையால் கர்ம யோகத்தில் அடைக்கலாய் இருபத்தொரு புடை யுண்டே
அவற்றுக்கு என்ன –

உண்போம் –
என்கிறார்கள் -வர்ண ஆஸ்ரமங்கள் நடத்துகைக்காகவும்-
ஆஸ்ரய அர்த்தமாகவும்
வீத ராகரைப் போலே அத்ருஷ்டார்த்தமாகவும் செய்தது அல்ல –
காய கிலேசத்தை பிறப்பித்து
அத்தாலே ஒரு புண்யம் உண்டாகைக்காக தர்ம புத்யாயா செய்தோம் அல்லோம் –
உதர போஷண பரராய்ச் செய்தோம் அத்தனை

உண்போம்
வயிறு வளர்க்கையே புருஷார்த்தம்

கானம் சேர்ந்து உண்போம்
காட்டில் போனால் புழுதியும் வேர்ப்பும் போகக் குளித்து உண்டு அறியோம் –
குளித்து உண்ணில்-ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதியை
அனுவர்த்தித்தார்கள் என்று அவன் தர்மம் ஏறிடுமே

உண்போம்
அருகிருந்தார் கையில் ஒரு பிடி இட்டு அறியோம் —
அப்போது ஆதித்யம் -அதிதி பூஜை –பண்ணினார்கள் என்று தர்மம் எழுதும்

கானம் சேர்ந்து உண்போம் –
ஒருவர் வாச பூமியிலே புக்கு உண்ணில் –
அங்கே தேவதைகள் இருக்கையாலே யஞ்ஞ சிஷ்டாசானம் பண்ணினி கோளே என்று பிடிக்கும்

பின் சென்று உண்போம்
பிராங்முகத்வாதி நியமம் இல்லை

சென்று உண்போம்
இருந்து உண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை

உண்போம்
பசுக்கள் அசையிடாது இருக்குகிலும் நாங்கள் புஜியாது இருப்பதில்லை

உண்போம்
உச்சிஷ்டம் -அபோஜ்யம் -பர்யுஜிதம் தொடக்கமான வற்றில் ஒரு வரம்பு இல்லை

இது எங்களுடைய கர்ம யோகத்தின் நிலை இருந்த படி என்கிறார்கள் –

நாம் காலிப் பின்னே போகிறிலோமோ-(பெரியாழ்வார் -3-3-1)
நாம் காடு வாழ் சாதி ஆகிறிலோமோ-
வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பசித்து இருந்து
சோறு பெற்றால் நின்றார் உகப்பும் சிறிதும் நினையாதே
ஆடி அமுது செய்(பெரியாழ்வார் 3-3 ) என்றாலும் குளியாதே-
மந்த்ர விதியில் பூசனைகளையும் விலக்கித் திரியா நின்றோம் -(பெரிய திருமொழி-2-3 )
நமக்கு ஏதேனும் தோஷம் உண்டாகா நின்றதோ என்ன –

உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
நாங்கள் செவி புதைக்கும் படி நிந்திதமான வார்த்தையைச் சொன்னாயீ என்ன

ஆகில் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -யன்றோ –
ஞானாதிகரான உங்களுக்கு இவை தோஷாவஹமாய் புகுகிறதோ என்ன

கேவலம் உதர போஷண பரராய் இருக்கிற எங்களை
ஞானம் யுடையவர்கள் அன்றோ என்னலாமோ என்கிறார்கள்

இப்போது இவை இல்லை யாகிலும்
ஜன்மாந்தரங்களிலே சத் கர்மங்கள் யுண்டாய் –
அத்தாலே பாப ஷயம் பிறந்து
மநோ நைர்மல்யம் யுண்டாய்
இப்போது ஞானம் பிறக்கவுமாகுமே –

உங்களைப் போலே கோ ரக்ஷணம் பண்ணுகையும் அன்றிக்கே
கோ வதம் பண்ணுகையை பிரயோஜனமாய் –
அது க்ரயித்து
ஜீவியா நிற்கச் செய்தே
தர்ம ஸந்தேஹ நிவர்த்தகனாய் இருந்தான் தர்ம வ்யாதன் அன்றோ –

உங்களை போலே அரண்ய வாசம் பண்ணாதே
நகர வாசம் பண்ணா நிற்கச் செய்தே
விதுரன் ஞானாதிகன் என்று பிரசித்தனாய் இருந்தான் –

யதேஷ்ட அன்ன பரனாய் திரியா நிற்கச் செய்தே –
ஆதி பரதன் அத்யாத்ம வித்வானாய் -உபதேஷ்டாவாய் இருந்தானே

இவர்கள் எல்லாம் கிடக்க
உங்களோட்டை பெண்டாட்டி தான் சிரமணி யன்றோ தர்ம நிபுணையாய் இரா நின்றாள்

கர்ம யோகம் இல்லையாகில் ஒழிகிறது –
மோக்ஷ ஹேது வான ஞான பக்தி யுண்டாகில் குறையில்லையே –
அவை வளர வளர
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா என்கிறபடியே
அவை தன்னடையே குலைந்து விடும் –
பஹு மந்தவ்யைகளான உங்களை நாம் எளிதாக நினைத்து இராமே என்ன

அறிவொன்றும் இல்லாத –
என்கிறார்கள் -எங்களை அப்படியோ நினைத்து இருக்கிறது –
நீ நினைத்து இருக்கிற ஞானத்தில் பிரசங்கத்தில் பிரதி ஷேதமும் இல்லை காண்

1-அறிவில்லை
2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை

1-கர்ம யோகத்தில் உண்டான –
2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –
3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால்
அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து
நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி
உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும்
பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –

இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள்
சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய்
முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –

கர்ம யோகம் தானும் ஜீவ பர யாதாம்ய ஞானக பூர்வகமாக இருப்பது அன்றோ என்னில்
தேஹாதிரிக்த ஆத்ம ஞானமும் ஈஸ்வர ஞானமும் கர்ம அங்கமாய் இருக்கும் –
இவ்வளவே அங்கு உள்ளது –

(சேஷ பூதன் என்ற அறிவால் ஞான யோகம் பிரதானம் ஆத்ம ஞானமே முக்கியம் ஸ்ம்ருதி ரூபம்
அவனை பிரதானம் பக்தி யோகம் இதுவும் ஸ்ம்ருதி ரூபம் )

இப்போது தனித்து உபாயமாய் நிற்கும் ஞான யோகத்தையும்
பக்தி யோகத்தையும் இல்லை என்று சொல்கிறது

அறிவு இல்லை என்கிறதும் ஓர் அறிவின் கார்யம் இறே –
பேற்றுக்கு உடலாக தங்கள் தலையால் வரும் அறிவை இவர்கள் இல்லை என்கிறது

அறிவு ஒன்றும் இல்லாத
ஞான தவ்யங்களாய் இருக்குமவை ஒன்றிலும் அறிவில்லை என்று
தந்த்ரேண உபாதானம் பண்ணுகிறார்கள்

உண்போம் அறிவொன்றும் இல்லாத
ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –
ஊணர்க்கும் உண்டோ அறிவு –
ஞானம் உண்டாய்க் கழிந்ததாகவும் கூடுமே –
மேல் உண்டாகைக்கும் யோக்யதை யுண்டே என்ன

ஆய்க் குலம்
அறிவில்லாமை ஜென்ம சித்தம் –
எங்கள் பிறப்புக் கண்டாய்க்கு கர்ம ஞான பக்திகள் யுண்டோ என்று கேட்க வேண்டி இருந்ததோ
கீழே இல்லை என்றவை உபேக்ஷையாய் வந்தது அன்று –
யோக்யதை இல்லாமையால் குலைந்தது என்கிறார்கள் –

ஆய்க்குலம்
ராவணன் துர் வ்ருத்தன் என்கைக்கு அடி என் என்ன –
ராக்ஷஸன் என்றால் போலே –
ஏழை ஏதலன் என்கைக்கு அடி என் என்ன –
கீழ் மகன் என்றால் போலே
அறிவில்லாமைக்கு -ஆய்க்குலம் என்கிறார்கள் –

ஒன்றும் அறிவு ஒன்றும் இல்லாத ஒருவரைக் கோபாலர் (பெரியாழ்வார் -3-8 )-என்னக் கடவது இறே –
வ்ருத்த ஹானியை யுணர்ந்து திரிய விடுவிக்க ஒண்ணாத படியாய்த்து இருப்பது ஜென்மம்

யஞ்ஞ தான தபஸ் ஸூக்களுடைய பரிகரங்களுக்கு
விபரீதங்களிலே நடந்த படியால் கர்ம யோகம் இல்லை என்றி கோள்

ஆத்ம ரதியாய் ஆத்ம திருப்தனாய்-இந்த்ரியங்களைத் தேடாமல்
ஆத்ம ஸந்துஷ்டனாய் க்ருதக்ருதனாய் இருக்குமவனுடைய ஞான யோகமும்

அநந்ய பக்தனுடைய பக்தியும் இல்லை என்றீர்கள்

ஆக இரு படியால் பேற்றுக்கு அடியாய் இருபத்தொரு புண்ணிய லேசமும் இல்லை என்றி கோள் –
உங்களுக்கு உள்ளது என் என்ன –

ஆய்க் குலத்துப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாமுடையோம்
எங்களை என் சொன்னாயே –
சாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் –

ஆர்ஜித ஸூ ஹ்ருதம் இல்லை என்றோம் அத்தனை போக்கி
அயத்ன சித்த ஸூஹ்ருதம் இல்லை என்றோமோ

சாத்திய ஸூ ஹ்ருதம் இல்லை என்னும் காட்டில்
சித்த ஸூ ஹ்ருதம் இல்லை என்று இருந்தாயோ

உன்னால் ஸ்தாபிக்கப் படுகிற கர்மங்கள் இல்லை என்றோம் அத்தனை ஒழிய
தர்ம ஸ்தாபகனாய்
சாஷாத் தர்மமான யுன்னை இல்லை என்னலாமோ

ஆய்க் குலத்து உன் தன்னை
நீ எங்கள் குடியில் விரும்பி வந்து பிறக்கும் படி அன்றோ எங்கள் ஐஸ்வர்யம்

ஆய்க் குலத்து
நாங்கள் எத்தனையேனும் கை கழியச் செய்தேயும்
நீ அவ்வளவு எல்லாம் வந்து கிட்டின பின்பு
எங்களுக்கு அதிகாரத்தில் குறை யுண்டோ –

எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறைக்கைக்கு அடியான புண்ணியத்தை நாங்கள் யுடையோம் –
எங்கள் பேற்றுக்கு உபாயமும் நீயே –
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும் நீயே யாகப் பெற்றோம்

ஆய்க் குலத்து உன் தன்னை
இதிலே நீக்கி முகக்கவோ நீ பிறந்தது –

இவ் வாய்க் குலத்தை வீடுய்யத் தோன்றிற்று உய்ய
இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -என்னக் கடவது இறே
(வம்ச குலங்களை உத்தரிக்க வந்த வராஹ கோபாலர் )

நீ ஸூ ஹ்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு
ஆண்
பெண்
சட்டிப் பானை ஓன்று யுண்டோ –

உன் தன்னை
ஸூரிகள் அனுசஞ்சரங்களாய் தொடர்ந்து குற்றேவல் செய்கிற யுன்னை
கறைவைகள் பின் செல்லுகிற குலத்திலே பெற்றோம்

தடம் கடல் சேர்ந்த யுன்னை (திருவாய் -3-5 )
கானம் சேர்ந்த குலத்திலே பெற்றோம் –

ஆய்க் குலத்து உன் தன்னை
அநஸ்நன் -என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை
உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –

திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை
அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்

ஆய்க் குலத்து உன் தன்னை
இமையோர் தம் குல முதலான உன்னை(திருவாய் -1-5 ) ஆயர் தம் குல முதலாகப் பெற்றோம்

ஆய்க் குலத்து உன் தன்னை
வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் –

நீ பகல் விளக்கான குலமும்
நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ

பிறவி
சென்னாள் தோற்றி(பெரியாழ்வார் -வடமதுரையில்பிறந்த ) என்னும் படி
நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது –
நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது

பெறும் தனை புண்ணியம்
பெறுகைக்கு தக்க பாக்யம் -புண்ணியத்தை உன்னாலே தேடலாம் –
புண்யாம் நாம் அபி புண்யோசவ்-என்கிற
உன்னைப் பெறுகைக்கு தக்க புண்ணியம் வேணும் இறே

புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் –
உன்னைத் தர வல்லது உண்ணில் விஞ்சினது இல்லையே

கிருஷ்ணம் தர்மம் சனாதனம் என்கிற சனாதன தர்மம் நீயே இறே –
இத்தை புண்ணியம் என்றால் ஈது அன்று என்பார்(நான்முகன்-72) யார்
வேத வித்துக்கள் சொல்லவோ –
அத்யாத்ம வித்துக்கள் சொல்லவோ –
கர்ம பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-
ஞான பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-

(ஏஷ வேத விதோ விப்ர ஏஷ அத்யாத்ம வைத்தோ ஜன —
கிருஷ்ணன் தர்மம் சனாதானம் ஸ்லோகார்த்தம் )

பெறும் தனை புண்ணியம்
பறை தரும் புண்ணியனே இறே தன்னையும் தருவது –
பிறக்கைக்கு ஹேதுவே இறே தருகைக்கும் ஹேது
(சம்பவாமி ஆத்ம மாயயா)

வேண்டி வந்து பிறந்ததும் -(திருவாய் 6-4 )
நம்மைப் பெறும்படியான புண்ணியம் –
என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்கிற யசோதையுடைய ஒருத்தியது அன்றோ என்ன

யாமுடையோம்
அவள் பெற்று (புண்ணியம்) உடையளானாள் –
நாங்கள் பிறந்து (புண்ணியம் )உடையோம் ஆனோம் –
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று
ஊருக்காக பலித்தது இறே –

இருந்த ஊரில் இருக்கும் மானிடர் (பெரியாழ்வார் -4-4 )என்கிறபடியே
உங்கள் தபஸ் பலமாக பெற்றி கோள் ஆகிறி கோள் –
நாம் பிறந்த ஊரில் இருக்கைக்கு
புண்ணியம் பண்ணினி கோள் ஆகிறி கோள் என்றான்

உடையோம்
நாங்கள் ஓன்று செய்து ஆர்ஜித்தோம் அல்லோம் –
இந்த ஸூஹ்ருதம் சத்தா நிபந்தனம்

உடையோம்
நாங்கள் செய்ததும் அல்ல –
ஸ்வீகரித்ததும் அல்ல –

இப் புண்ணியத்துக்கு செய்யுமவையும்
ஸ்வீகரிக்குமவையும் பிரதிபந்தகங்கள் இறே
புறப் பகையும் கழிக்க வேண்டா-
உட்ப் பகையும் கழிக்க வேண்டா –

யாமுடையோம்
எங்கள் ஸூஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சமும் இல்லை –
மஹா பாதக ஸ்பர்சமும் இல்லை
(உபாயாந்தர சம்பந்த பாதகமும்
ஸூவ ப்ரயோஜன பிரபல விரோதியும் இல்லை )

புண்ணியம் நாமுடையோம்
நாட்டில் புண்ணியங்கள் அநேகங்களுமாய்
பிரதி நியதங்களுமாய் இருக்கும் –

எங்கள் புண்ணியம் ஒன்றாய்
அது எல்லார்க்கும் பொதுவாய் இருக்கும்
யாவர்க்கும் புண்ணியம் (திருவாய் -6-3 )என்னக் கடவது இறே

அறிவு ஒன்றும் இல்லை என்பது –
புண்ணியம் நாமுடையோம் என்பதாய்க் கொண்டு
வியாஹத பாஷாணம் பண்ணினி கோள் என்ன

ஓர் ஆஸ்ரயத்தில் யுண்மையும் இல்லாமையும் சொல்லில் அன்றோ வியாஹதி உள்ளது –
அப்ரயோஜனங்களை அன்றோ நாங்கள் இல்லை என்கிறது –
எங்களுடைய அபிமத சித்தி யாதொன்றால் அத்தை இல்லை என்றோமோ –

குறை ஒன்றும் இல்லாத
எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி
எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –

உண்டானாலும் கழுத்துக்கு கட்டியாம் அவற்றினுடைய இல்லாமை சொல்லுகை
உன்னுடைய அனுக்ரஹத்துக்கு ஹேதுவாம் அத்தனை அன்றோ

எங்கள் தலையால் வருமத்தை இல்லை என்றோம் அத்தனை போக்கி
உன் தலையால் வருமத்தை இல்லை என்றோமோ –

1-குறைவு இல்லை
2-குறை ஓன்று இல்லை
3-குறை ஒன்றும் இல்லை

1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –
2-ஸாவதியும் அன்று –
3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-

(1-எதையும் எதிர்பாராமல்
2-எல்லைக்கு உட்படாதது
3-பிரதிபந்தகங்களால் தடுக்க முடியாதே )

1-உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
2-பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
3-பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே

1-நிரபேஷனைப் பற்றாய் —
2-பூர்ணணைப் பற்றாய் –
3-பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –

குறை ஒன்றும் இல்லாத
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விட்டு அன்றோ போவது –

பெருமாள் கடலைத் தூர்த்து வானர சேனையை நடத்தினால் போலே
உன் குறைவில்லாமையை எங்கள் குறைவிலே இட்டு நிரவி ஓக்க விட்டுக் கொள்ளும் அத்தனை
எங்கள் அறிவு ஒன்றும் இல்லாமை யாகிற பாழ்ந்தாறு நிரப்புகைக்கு வேண்டும் புஷ்கல்யம் போராதோ யுனக்கு

உன் குறைவில்லாமை எங்கள் அறிவு இல்லாமையை அபேக்ஷித்து அன்றோ இருப்பது –
குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாம் படி எங்கனே
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ –

(நிகர் இன்றி நீசன் நின் அருள் என் கண் அன்றி புகல் ஒன்றும் இல்லை —
பயன் இருவருக்கும் ஆன பின்பு )

ஆகில் ஒன்றும் இல்லை என்று சொன்ன இடம்
உங்களுக்கு ஸ்வரூப ஞானம் இல்லாமை இறே என்ன
(அதிகாரி விசேஷமும் இல்லையோ என்ன )

கோவிந்தா
நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ-
அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு –
நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –

அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை –
நம்மை அறிந்தாலும் விரகு இல்லை
அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
இக் குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று –
தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்-
அவர்களில் சிறியவர்களுக்கும்
அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –

குறை யுண்டு என்னவும் அறியாதாரோடே பொருந்தித் திரிந்தவன் அன்றோ –
உனக்கு இற்றைக்கு விசேஷம் என் –
எங்கள் குறையால் எங்களுக்கு இழக்க வேண்டுவது
உன்னுடைய பூர்த்தியில் ஏதேனும் குறை யுண்டாகில் அன்றோ –

கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி
கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி –
ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே
வாத்சல்யாதிகளாலும்
ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ

எங்களுக்கு ஞான வ்ருத்தங்கள் கை புகுந்தது இல்லை –
உனக்கு ஞான சக்திகள் குறைந்தது இல்லை –

கோவிந்தா
மாமேகம் என்றவன் பாசுரம் அன்றோ –

கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும்
மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும்
குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற
உபாய வேஷத்தை
கோவிந்தா என்கிறார்கள் –
(நிறைவினால் குறையில்லா நெடும் பணைத்தோள் பின்னை —
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும்-திருவாய் )

பெண்காள் உங்கள் பேற்றுக்கு உடலாக நம் நைரபேஷ்யம் சொல்லா நின்றி கோள் –
குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று உண்டோ –
நிரபேஷராய் இருப்பார் ஸ்வதந்த்ரர் அன்றோ –
நீங்கள் சொன்னது தானே இழவுக்கு உடலாய் இருந்ததே
நாம் அல்லோம் என்ற போது கை விடுகைக்கு உடலாய் அன்றோ இருப்பது என்ன

உன் தன்னோடு உறவு
உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-
நீ எங்களுக்கு உறவு அன்றோ –
நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ
குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ –

(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் —-
1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –)

அது கொண்டோ –
ஆனால் அது ஒரு குட நீரோடு போகிறது என்றான்

உறவேல் ஒழிக்க ஒழியாது –
பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ –
ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ

ஒழிக்க ஒழியாது
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை யன்றி இல்லை (நான்முகன் )-என்கிற பிரமாணம் கேட்டு அறியாயோ –
நீ எங்கள் கையில் தந்த மூல பிரமாணத்தில்
முதல் வரியில் முதல் எழுத்தை வெட்டுதல் –
எங்கள் கார்யம் தலைக் கட்டல் செய்ய வேண்டாவோ
(அவ ரக்ஷண தாது -அகாரம் இருந்தால் ரக்ஷிக்காமல் இருக்க முடியாதே )

இவை எல்லாம் அறிவு ஒன்றும் இல்லாத உங்களுக்கும் வார்த்தைகள் அல்ல —
உறவு சுற்றம் என்று ஓன்று இலா நமக்குத் தெரியாது என்றான் –

நமக்கு ஒழிக்க ஒழி யாது
உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது —
(நாராயண -உறவு இல்லையே நாங்கள் சொன்னது )
இடையிலே வந்த உறவு காண் எங்களது –
அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு –
அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு
நீ மைத்துனன் நம்பி -(நாச்சியார் )
நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழிக்கும் படி –

இது என்ன அன்புது-
நமக்கு சிசுபாலன் மைத்துனன் அன்றோ என்றான்

உன்னுடைய கோவிந்தத்துவத்துக்கு பழிப்பு சொன்னவன் ஆகையால்
அவனை விடாய் –

கோவிந்த அபிஷேகம் பண்ணின வன்று
உன் காலிலே குனிந்த மைத்துனன் கார்யம் எல்லாம்
உன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு முன் நடந்து செய்திலையோ-அந்த யுறவு காண்

தாழ்ந்த தனஞ்சயர்க்காகி-(பெரியாழ்வார் )
பாலைப் பிராயத்தே பார்த்ததற்கு அருள் செய்த -என்னக் கடவது இறே –

யுத்தார்த்தமாக ஒரு நிமித்தம் கூட்டிக் கொண்டு
அந்த கார்யம் செய்த அநந்தரத்திலே விட்டிலோமோ அதுவும் என்றான்

இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம்
இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-

ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ
பரதந்த்ரரை தாழ நின்று
கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –

கோவிந்தா உன் தன்னோடு உறவேல் -இங்கு ஒழிக்க ஒழியாது
உன்னுடைய நாராயணத்தில் உறவு பழம் கிணற்றில் கண் வார வேணுமோ –
எங்களுக்கு இவ் வுறவு போராதோ –

1-அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக பந்தமும் உன்னோடே –
2-குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
3-ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் (திரு விருத்தம்-54 )ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே –
4-தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று கார்ய காரண பந்தமும் உன்னோடே –
5-என்னுயிர்க் கண்ண பிரான் -என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
6-நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே –
7-எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே –
இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –

(விஷ்ணு நாராயணன் போன்று இல்லாமல்
கோவிந்தன் என்றே உள்ள பாசுரங்களைக் காட்டும் அழகு )

கோவிந்தா ஒழிக்க ஒழியாது
நீ கோவர்த்தனம் எடுத்த வாறே வேறு ஒருவனோ என்று சங்கிக்க –
நான் பந்துவாய்ப் பிறந்தேன் உங்களுக்கு வேறு ஓன்று நினையாதே கொள்ளுங்கோள்
என்ற வார்த்தை அமோகம் அன்றோ

ஒழிக்க ஒழியாது
உன்னால் விட ஒண்ணாது –
எங்களால் விட ஒண்ணாது –
உன்னுடைய பந்துக்களால் விடுவிக்க ஒண்ணாது –
எங்களுடைய பந்துக்களால் விடுவிடுவிக்க ஒண்ணாது –
ஊராக சங்கித்தாலும் விடுவிக்க ஒண்ணாது –

நீ துறந்து எம்மை விட்டு அகன்ற இடத்திலும் போய்த்த்தில்லை-(திருவாய் -10-3)
நாங்கள் புள்ளுவம் பேசாதே கழகம் ஏறேல் ( திருவாய் 6-2 ) என்ற இடத்திலும் குலைந்தது இல்லை –
ஊனமுடையன செய்யப் பெறாய் என்ற இடத்திலும் போய்த்த்தில்லை –
இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே என்று திரள அவத்யம் சொன்ன இடத்திலும் ஒழிந்த தில்லை

அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு
குறைவு ஒன்றும் இல்லாத உறவு –
உன் தயா பூர்த்திக்கு
தயநீயதா பூர்த்தி யுண்டான உறவுக்கு அந்யதா சித்தி சொல்ல ஒண்ணாதே –

இப்படி நம்மோடு உறவு சொல்லா நின்றி கோள் –
உங்களை கோபிகைகள் ஆகவும்
நம்மை கோவிந்தனாகவும் சொல்லிற்று இப்போது அன்றோ
நம்மை அடியிலே மர்மத்திலே தொட்டு வைத்து –
மேலும் அதிலே நடந்து வைத்து –
கார்ய காலம் ஆனவாறே
வாலைக் குழைத்து கோவிந்தா என்னா நின்றி கோளே –
என்னாக்கி விடற்கு என்றான் –

நாங்கள் செய்த தப்பை பொறுக்கும் அத்தனை அன்றோ என்ன –

சொல்லுகைக்கு ஹேது சொல்லுங்கோள் பொறுக்கிறோம் என்றான் –

அறியாத பிள்ளைகளோம் –
என்கிறார்கள் -இவை எல்லாம் பொறுக்கைக்கு ஹேதுக்கள் இருக்கிற படி –
1-முதலில் அஞ்ஞர் செய்தது பொறுக்க வேணும் –
2-பாலர் செய்தது பொறுக்க வேணும் –
3-ஸ்நேஹிகள் செய்தது பொறுக்க வேணும் –

1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –
2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –
3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் –

1-எங்களால் அறிவு கெட்டோம்-
2-பிறவியாலே அறிவு கெட்டோம் –
3-உன்னாலே அறிவு கெட்டோம் –

யாதும் ஒன்றும் அறியாத பிள்ளைகள் இறே நாங்கள் -(நாச்சியார் -2-7 )
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்திலே பிறக்கையாலே அறிவு கெட்டோம் –

அழகு கண்டு என் மக்கள் அயர்க்கின்றது –என்கிறபடியே
உன்னைக் கண்டு மதி கெட்டோம் –

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடியர் என்கிறபடியே இடையூறை மதி கெடப் பண்ணுமது
பெண்களை மது கெடுக்கச் சொல்ல வேணுமோ –

பித்தர் சொல்லிற்றும் பேதையர் சொல்லிற்றும்
பத்தர் சொல்லிற்றும் பன்னப் பெறுவரோ-என்று பிரசித்தம் அன்றோ –
(கம்ப நாட்டாழ்வார் பாசுரம் -ஆகவே நாயனாருக்கு முன் காலத்தவர் )

அன்பினால்
ப்ரேமாந்தரை குற்றம் கொள்ளுகையாவது –
ஒரே படுக்கையிலே இருந்து கை தாக்கிற்று கால் தாக்கிற்று என்கை இறே

உன் தன்னை
கோவிந்த அபிஷேகம் பண்ணி இருக்கிற யுன்னை –
அநவதா நாதிகளும் அன்பு விளைக்கைக்கு நிமித்தமாய் இருக்கிற உன்னை
இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த (பெரிய திருமொழி -3-8)-என்று தானே இறே அவற்றுக்கு அடி –

உன் தன்னைப் பிறவி பெறும் தனை
என்றதை போல் அன்று இந்த உன் தன்னை –
அவ்விடத்தில் பெருமை யுடையவன்
தாழ நின்று நீர்மை சம்பாதிக்க வந்த இடத்தில் மேன்மை சொல்லுகை குற்றம் இறே

சிறு பேர்
கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு
முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இறே –
முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு மேற்பட்ட உண்டோ குற்றம் –

இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது –
நாராயணன் -என்றத்தை –
தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்று சொல்லுகை குற்றம் இறே –
ஊடினால் சொல்லுமத்தை படுக்கைத் தலத்தில் சொல்லலாமோ –
அந்தப்புர வாசலில் படுகாடு கிடப்பாரை
நாட்டுக்கு கடவன் என்கிறது பிரணயி அல்லன் என்கை இறே –

இவன் உபய விபூதிக்கும் முடி கவித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்குமவன் என்று
சிறிது ஞானம் உண்டாய் இருக்கச் செய்தே இறே
இந்திரன் வந்து பசுக்களை மேய்த்தான் என்று முடி சூட்டிற்று-
(அவனுக்கு கொஞ்சம் ஞானமே ஆகவே அபசாரப்பட்டான்
பின்பு உணர்ந்து பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்)

உபய விபூதிக்கும் முடி சூடினத்துக்கு அவ்வருகே ஒரு ஐஸ்வர்யம் இறே இது

நாராயணன் என்கிற பேர் நாராயண பரங்களான ப்ரமாணங்களாகச் சொல்லலாம் –
கோவிந்தா சக்தமான நெஞ்சுடையார்க்குச் சொல்லுகை குற்றம் –

சிறு பேர்
சஹஸ்ர அக்ஷரங்கள்
துவாதச அக்ஷரங்கள் தொடக்கமான பேர்கள் எல்லாம்
அவன் பெயர் எட்டு எழுத்தையும் கண்டவாறே(திருச்சந்த) சிறுகிற்று
அது தான் மூன்று எழுத்துடைய பேரைக்(திருமாலை) கண்ட வாறே சிறுகிற்று –

முழுகி மூக்கைப் புதைப்பார்க்கு யோக்கியமான பேர்
(சாதநாந்தர பரருக்கு தீர்த்தமாடி பிராணாயாமம் செய்வோர்க்கு நாராயண நாமம் )
தீட்டத்தோடே கத்திக் கையராய்த் திரிவார்க்கும்
யோக்கியமான பேரைக் கண்ட வாறே கழிப்பானாய்த்து-
(வேடரும் திருமலையில் கோவிந்தா என்பார்களே )

வாச்யன் சிறுக நின்று நிறம் பெற்றால்
வாசகமும் அப்படியே இறே

சிறு பேர் –
அஷ்டாக்ஷர மஹா மந்த்ரம் என்பார் கலங்கினவர்கள் –
தெளிவுடையார்களுக்கு சிறுத்துத் தோற்றும் இறே இது

மூல நாமமுமாய்
அதி குஹ்யமுமாய்
செவியில் சொல்ல வேண்டும்படி இறே இருப்பது –

பிறந்து பன்னிரண்டும் கழிந்த வாறே பேரிட்டுத் தாலாட்டினவாறே –
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்றும்
நாராயணா அழேல் தாலேலோ என்றும்
அப்போது
செய்தலை நீல நிறத்து சிறு பிள்ளையாகையாலே சொல்லலாம் –
இப்போது பெறும் கண்ணன் இறே

அழைத்தன
அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே –
நாராயணனே என்றும் –
நாற்றத்த துழாய் முடி நாராயணன் என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இறே

அழைத்தனவும்
எங்களில் நாங்கள் முதல் நாமத்தை சொல்லி விட்ட அளவு அன்றிக்கே
மூலக் கிழங்கிலே(காரணம் வேர் -பத்மநாபன் )
தட்டச் சொன்னவற்றையும் –
பாழியம் தோளுடை பற்ப நாபன் -என்றார்கள் இறே

உன் தன்னை –அழைத்தனவும்
எங்களை நாங்கள் பிரணயித்வத்தாலே –
பேய்ப் பெண்ணே —
ஊமையோ செவிடோ —
நாணாதாய் –
பண்டே உன் வாய் அறிதும் –
என்று தொடங்கிச் செய்தவற்றையும் பொறை கொள்ள நினைத்தார்கள் –

சர்வான் அசேஷத (கத்யத்ரயம் )-என்ன வேணும் இறே
த்ரிவித கரணங்களால் யுண்டான த்ரிவித அபசாரத்துக்கும் உப லக்ஷணம் –

புகு தருவான் நின்றவற்றில் புத்தி பூர்வகத்துக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் –
பகவத் பாகவத விஷயங்களில் உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களுக்கு க்ஷமை கொண்டு விட வேணும்
ஸூலபனை பரன் என்கிறது தான் அபசாரம் ஆகிற தசை இறே –

குளிர்ந்த தண்ணீரை விநியோகம் கொள்ளுமவனுக்கு காய்ச்சின தண்ணீர் பகை இறே
கிருஷ்ணனுடைய ஆற்றலுக்கு ஈஸ்வரத்தால் வந்த அழல் பகை இறே –

பேற்றுக்கு பிரயோஜனம் ஆனது புறம்பே கிடக்க
அப்ரயோஜனங்களை கிடந்து ஆராய்கிறது என் என்று

சீறி அருளாதே
என்கிறார்கள் –

செய்வுதை எல்லாம் செய்து சீறி அருளாதே -என்ன அமையும் ஆகாதே காண் –
இத் தலையை ஆராயில் சீற வேண்டும்படியாய் இறே இருப்பது -என்ன

பூர்வ வருத்தம் ந ஷமாமிக்கு இலக்கு அல்லவே –
நப்பின்னை பிராட்டியை முன்னிட்டவர்கள் ஆகையால் –

ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் நீ என்னோடே மேல் விழுந்து கலசின படியால்
உன் வைபவம் ஒன்றும் அறிந்திலேன் –
அநவதாநத்தாலும்
பிரணயித்வத்தாலும்
விஹார சய்யா ஆசன போஜனங்களிலே பண்ணின
அஸத்காரங்களைப் பொறுத்து அருள வேணும் என்று பொறை கண்டான் அவன் –

ஸுலப்யத்தாலே பரிமாறின தப்புக்களை
பரத்வம் கண்டவாறே பொறை கொண்டான் அவன்

ஸுலப்யத்தைக் கண்டு
பரத்வ புத்திக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் இவர்கள் –

பக்தியில் தலையாக நிற்கவுமாம்
அவன் தன்னைப் பற்றவுமாம் –
கிட்டினால் சொல்லுவது இது வாய்த்து

நம்மாலே பேறாம் படியான சம்பந்தம் நம்மோடே உண்டானாலும் –
குற்றத்தைப் பொறுக்க வேணும் என்றாலும்
பல போக்தாக்கள் நீங்களான பின்பு
உங்கள் தலையிலேயும் ஓன்று உண்டாக வேண்டாவோ –

இவர்கள் இன்னது செய்தார்கள்
அவன் இன்னது செய்தான் என்று நாட்டாருக்குச் சொல்லலாவது
ஒரு ஆலம்பனம் வேண்டாவோ என்ன

இறைவா
நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –

இறைவா
உன் ஸ்வரூபத்தை உணராய் –
எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட
சேஷத்வம் போல் அன்றே
உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் –
அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்
அத் தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இறே –

(அவனாலும் சேஷித்வத்தை அழிக்க முடியாதே
நாம் அநாதி காலம் யானே என்னை அறிகிலாதே
பண்டே பலகாலும் கழித்து அன்றோ உள்ளோம்)

பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம்
அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இறே

இறைவா
வானோர் இறையை நினைத்தன்று -(வள ஏழ் உலகு இறை வானோர் இறை )
ஆய்க் குலமாய் வந்து தோன்றின நம் இறை

கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்
உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை –
எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை

நீ
நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால்
தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை சொல்லப் போமோ என்கிறார்கள் –
அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு- விஷய வாச மாத்திரமே அன்றிக்கே
குடல் துடக்கு உண்டானால் ரக்ஷிக்கச் சொல்ல வேணுமோ

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -இறைவா -பறை தாராய்
குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருசநிம் நமி மஞ்சன முன்னமய-யத பேஷ்யம் அபேஷ்ய
துரஸ்யஹி தத் பரிபூர்ண மீசி துரீச் வரதா (பராசர பட்டர் )-என்னக் கடவது இறே

நோ பே க்ஷணம் மம தாவோஸி தமீஸ்வரஸ்ய -(கூரத்தாழ்வான் )

உன்னுடைய சேஷித்வம் நிலை நிற்க வேணுமாகில் செய்கிறாய் –

சீறாமைக்கு ஹேது இது –
ப்ரேஷ் யஸ்ய ஷமித்வயம்மே (கிஷ்கிந்த)-என்னக் கடவது இறே-
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே (திருச்சந்த)

பறை தாராய்
சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ
இங்கு வந்து பண்ணி அருளிற்று –

பறை தாராய் என்றவாறே
கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –
இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான்
அருகில் இருக்கிறவளை( நப்பின்னைப் பிராட்டியை)

நீ தாராய்
அவள் தருவது தந்தாள் –
நீ தரும் அத்தைத் தாராய் –
உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது –
மேல் உள்ளது உன் பணி அன்றோ
(அஸ்து தே -உபாய அத்யாவசிய அவள் முன்பே கொடுத்தாளே)

அஸ்துதே என்று அவள் அது செய்தால் –
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ

(கோவிந்தா)ஸூலபனான நீ தாராய் –
(இறைவா) ஸ்வாமி யான நீ தாராய் –

சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே
சைதன்ய கார்யமான ஸ்வீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே
எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –

கறைவைகள் இத்யாதி
எங்களை பார்க்கிலும் நீ கார்யம் செய்ய வேணும் –
எங்களையும் உன்னையும் பார்க்கிலும் கார்யம் செய்ய வேணும்

உன்னைப் பாராதே எங்களை பார்த்தாய் யாகில் இழக்கிறோம் –
எங்களை பாராதே உன்னைப் பார்த்தாயாகில் பெறுகிறோம்

ஆன பின்பு எங்களுடைய ரக்ஷணம் உன்னாலே விடலாமா –
எங்களுக்கு வ்ருத்த ஞான ஜென்மங்களால் நன்மை இல்லை என்றோம் –

நீ நன்மைக்கு அடி என்றோம் –
பூர்ணன் என்றோம்
ஸூலபன் என்றோம் –
உன்னோடு எங்களுக்கு குலையாத சம்பந்தம் உண்டு என்றோம் –

எங்கள் தப்புக்கு அனுதபித்தோம் –
பொறை கொண்டோம்
எங்களுக்கு இனி செய்ய வேணும் அம்சம் இல்லை –
இனி உன்னை இழவாமல் கார்யம் செய்யப் பாராய் –

ததஹம் த்வத்ருத-இத்யாதி -(ஸ்தோத்ர ரத்னம்)
எங்களுக்கு பரித்யஜ்யத்வேன விஹிதங்களில் அன்வயம் இல்லை யாய்த்து –

ஸ்வீகாரத்வேன ஹித உபாயமான நீ
ஸ்வீகார நிரபேஷமாகக் கைப் புகா நின்றாய் –

உனக்கு ஞான சக்தியிலும் குறைவற்று இருந்தது –
ப்ராப்தியிலும் குறைவற்று இருந்தது
எங்களுக்கு அஞ்ஞாதிகள் பூர்ணமாக இருந்தது –

குற்றங்களை பார்த்து சீற ஒண்ணாத படி
ஸமஸ்த விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாய் இருந்தாய் நீ –
ஆன பின்பு ப்ராப்ய லாப நிமித்தமாக சோகியாதே கொள் என்ற நீ
எங்கள் அபேக்ஷிதத்தை செய்யல் ஆகாதோ என்று
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும்
யோக்கியதையும் ஆவிஷ்கரித்து
உபாய பூர்த்தியையும்
தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு
பிராமாதிகமாக புகுந்த தப்புக்களுக்கு பொறை கொண்டு
எங்கள் பிராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று
கிருஷ்ணனை உபேக்ஷிக்கிறார்கள் -(அபேக்ஷிக்கிறார்கள் பிரார்த்திக்கிறார்கள் )

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading