(திருப்பாவை ஆகிறது இப்பாட்டு
பாகவத வைபவம் எல்லே
பகவத் வைபவம் இதில்
த்வயார்த்தம் -சரணாகதி கீழ் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில்
பிரபல தம விரோதி -களை அற்ற கைங்கர்யம் -ஸூய போக்த்ருத்வ புத்தி தவிர வேண்டுமே )
நமக்கே பறை தருவான் என்று சங்க்ரஹேண முதல் சொன்ன ப்ராப்ய பிராபகங்கள்
இரண்டையும் இந்த இரண்டு பட்டாலும் விவரிக்கிறார்களாய் –
பலம் தருகிற பிராபகத்தை நிர்ணயித்து ஸ்வீகரித்தார்கள் கீழில் பட்டாலே –
அதில் பறை என்று சொன்ன
ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார்கள் -இப்பாட்டில் –
பறை என்று ப்ராப்யத்தை முற்படச் சொல்லி
தருவான் என்று கொண்டு சாதன ரூபத்தை அனந்தரம் சொல்லிற்று
ப்ராப்ய ருசி அடியாக
ப்ராபக அன்வேஷணம் பண்ண (தேட ) வேண்டுகையாலே –
அவ் விடத்தில் ப்ராப்ய சித்தியில் ப்ராபக ஸ்வீகார சாபேஷத்தை யுண்டாகையாலே
உபய ஸ்வீகாரம் பண்ணி பல பிரார்த்தனம் பண்ணுகிறது –
இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறது
அநந்ய போக்யத்வமும் –
அநந்ய உபாயத்வமும் –
அநந்யார்ஹத்வமும் -இறே ஸ்வரூபம்-
(நாராயணாயா -கைங்கர்யமே பிரதானம் என்பதால் அத்தை முதல் காட்டி அருளுகிறார் )
செல்வச் சிறுமீர்காள் –
வையத்து வாழ்வீர்காள் நாமும் –
நாங்கள் நம் பாவைக்கு –
நாங்களும் மார்கழி நீராட –
எம்மை நீராட்டு –
யாம் வந்தோம் –
யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் –
நாங்கள் என்பது
எங்களுடையது என்பதாய்
பாட்டுத் தோறும் தங்களை உறைத்து காட்டிற்று
ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும்
பலத்திலும்
தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு
நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இறே –
தூயோமாய் வந்து நாம் என்றும் (5)
தூயோமாய் வந்தோம் என்றும் (16_
இரண்டு சுத்தி உண்டு இறே கீழ்ச் சொல்லிற்று –
(இரண்டிலும் இரண்டு வகை வெளிப் பகை உள் பகை இரண்டும் உண்டே
அவற்றை விவரிக்கிறார்
பற்றின பற்றும் உபாயம் இல்லை
நமது ப்ரயோஜனத்துக்காகக் கைங்கர்யம் என்பதும் கூடாதே
இவையே உள் பகைகள் )
அதில் சித்த உபாய பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
சாத்திய உபாயத்தில் ருசி வாசனை யாதல் –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தி யாதல் –
ஸ்பர்சிக்கில் சவ ஸ்ப்ருஷ்டம் போலேயும்
நீச ஸ்பர்சம் போலேயும் இருப்பது ஓன்று இறே –
அவை இரண்டு அசுத்தியும் இல்லை என்னும் இடம்
கீழ்ப் பாட்டாலே வெளியிட்டார்கள் –
சாத்யத்திலும் வந்தால்
ப்ரயோஜனாந்தர சங்கம் நடப்புதல்-
அக வாயிலே போக்த்ருத்வ புத்தி நடப்புதல் செய்தால்-
விஜ போஜனம் போலேயும்
உச்சிஷ்ட அசனம் போலேயும் வருவதொரு அசத்தி உண்டு இறே –
அந்த எச்சில் அறுத்து போக சுத்தி பண்ணுகிறார்கள்
இப் பாட்டில் –
ஆசற்றார் மாசற்றார் (திருமாலை22) என்கிறது
இரண்டு தோஷமும் அற்றவர்களை இறே –
சர்வ தர்மான் –
சர்வ காமான்ச்ச-
தொழுமின் தூய மனத்தராய் -(திருவாய் 3-6 )
(கீழே ஆறு பகுதியாகப் பார்த்தோம்
இதிலும் ஆறு யாரையும் அறிந்தால் ஆறி இருக்கலாம் )
1-உபாய பரிக்ரஹத்தினுடைய அநந்தரத்திலே ருசி காரியமாய் வருவதொரு பேற்றிலே த்வரையும்-
(சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து)
2-சாத்தியத்திலே சாதனா புத்தி நடக்கும் படியான கலக்கமும் –
(உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்)
3-ஆர்த்தியை ஆவிஷ்கரித்து வளைக்கையும்–
(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
4-ப்ராப்யாந்தர ஸ்ரத்தை குலைகையும்
(இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா)
5-புருஷார்த்தத்தில் அவிச்சின்னமான பாரிப்பும் –
(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
6-ப்ராப்யம் சபலமாம் படியான அபேக்ஷையும் –
(மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)
இவை ஆறும் பரிக்ரஹித்த உபாய பலமாய் விளையும் இறே
(த்வரா கலக்கம் ஆர்த்தி உபேஷா அபேக்ஷை வைராக்யம் இந்த ஆறும் )
1-காலமே கண்ணுறங்காதே வந்து துவளும் படியான த்வரையும் –
2-போற்றுதற்குப் பொருள் தேடும்படியான கவக்கமும் –
3-தங்கள் வடிவைக் காட்டி வளைக்கும் படியான ஆர்த்தியும் –
4-நோன்பை வியாஜ்ஜியமாக்கி வேண்டினவற்றில் அபேக்ஷை அற்ற படியையும்-
5-பரிபூர்ணமாக கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிற படியையும் –
6-அதில் களை யறுத்துத் தர வேணும் என்று சொல்லும்படி பிரார்த்திக்கிற படியையும்
காட்டி
நாமுடையோம் என்கிற புண்ணியத்தினுடைய பலன்களை வெளியிடுகிறார்கள் –
கீழ்ச் சொன்ன உபாயத்துக்கு
வேறு ஒன்றை பலமாக்குகை யாவது
மாணிக்கத்தை இட்டு தவிடு கொள்ளுவரைப் போலே இறே –
அந்த உபாயத்துக்கு உபாயாந்தர நிவ்ருத்தி போலே
சகல பல சாதாரணம் என்று விரோதியான பலத்தை
அபேக்ஷிக்கலாகாது இறே –
ஸ்வரூப அனுரூபமான பலத்தில் தங்களுடைய அபிநிவேசத்தை அறிவிக்க வேணும் என்று
ஸ்ருதி சத சிரஸ் ஸித்தமாய் –
கருத்தறியும் மூதுவர் கைப் பட்டு கிடக்குமதாய்-
கரும் தறையில் வாசனையால் அவர்கள் பிறந்த இடத்தில் அபேக்ஷிக்குமதாய்
(எம்பெருமான் பொன் மலையிலே ஏதேனும் ஆவேனே )
அவர்களோடு ஒத்த பிராப்தியை யுணர்ந்தவர்கள் பாரிக்குமதாய்-
பகவத் அநந்யார்ஹ சேஷமான வேஷத்துக்கு அத்யந்தம் அனுரூபமாய்
ஈஸ்வரனுடைய முக விகாசத்துக்கு ஹேதுவாய் இருந்துள்ள பரம ப்ராப்யத்தை
பிரபந்த நிகமனம் பண்ணுகையாலே
எல்லாருக்கும் தெரியும்படி வெளியிட வேண்டுகையாலே
நாட்டார் இசைகைக்கு நோன்பு என்ற ஒன்றை வியாஜி கரித்துப் புகுந்தோம் அத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் என்று
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்கள் –
எம்மா வீட்டில் அர்த்தத்தோடு (2-9 )தலைக் கட்டுகிறது –
எம்மா வீட்டில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து (2-9 )-
ஒழிவில் காலத்திலே பிரார்த்தித்து (3-3 )
அது தன்னுடைய எல்லை நிலமான பாகவத அனுபவத்தை
நாளும் வாய்க்க நங்கட்கே-என்று
நெடுமாற்கு அடிமையிலே பிரார்த்தித்தார் -ஆழ்வார்-(8-10 )
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
அவரைக் காட்டில் இவர்களுக்கு உள்ள வாசி –
நீராடப் போதுவீர் –
(இவள் எடுத்த எடுப்பிலே நீராடப் போதுவீர் )
எல்லாரும் போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில் முதலடியிலே நின்று
அது நிலை நிற்கைக்காக
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்-
(பாகவத கைங்கர்யம் நிலை நிற்க பகவத் கைங்கர்யம் வேண்டுமே )
ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
எம்மேல் விழியாவோ -என்று பெண்கள் அக்ரூரன் மநோ ரதித்தால் போலே
மநோ ரதித்துக் கொண்டு வந்த படியே நாமும் பெரிய ஆதரத்தோடு புறப்பட்டு இருந்து
வந்த கார்யங்களை சொல்லுங்கோள் என்று கேட்டு
வேண்டுவனவும் கொடுக்க இசைந்து
பறை கொண்ட காலத்துக்கு பெறும் ஸம்மானம் பண்ணுவதாக இசைந்து
வந்த கார்யம் தலைக் கட்டி விட்டோம் –
திரிய
பறை தாராய் -என்று நின்றார்கள் –
பாடிப் பறை கொண்டு என்றதும் மேலேயும் ஒரு பறை யுண்டாய் இருந்தது –
நாமது அறிந்திலோம் –
நமக்கு இதுவே தெரிந்தது இல்லை –
மேல் விளையும் படி காண்கிறோம் என்று பேசாதே இருந்தான் –
எங்கள் த்வரையையும்-
தலை தடுமாறான பரிமாற்றத்தையும் கண்டு வைத்து
இதுக்கு ஹிருதயம் கேட்டில்லையீ –
எங்கள் நினைவைக் கேளாய் -என்று தொடை தட்டுகிறார்கள் –
கீழ்ப் பண்ணின ப்ராபக ஸ்வீகாரம் அசத் சமமாம் படியான ப்ராப்ய ருசியையும்
உன்னாலே பேறு -என்று அறுதி இட்டால்
நீ வரக் கண்டு இருக்க ஒண்ணாத படி இருக்கிற த்வரையையும்
எங்கள் ஆற்றாமையின் ஸ்வ பாவத்தையும்
கேளாய் என்கிறார்கள் –
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
பதவுரை
கோவிந்தா–கண்ண பிரானே!வெறும் கோவிந்தா இதில் -கீழ் எல்லாம் அடை மொழி உண்டே
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை
மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்
பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை-எங்கள் ஆனந்தமாகிய கைங்கர்யங்களை
மாற்று–தவிர்த்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.
சிற்றம் சிறுகாலே வந்து
சிறு பெண்கள் ஆகையால் குளிர் காலத்தில் புறப்பட மாட்டாத நாங்கள்
அறப் போதோடே புறப்பட்டு வரும் படி அன்றோ எங்கள் த்வரை இருந்த படி –
இவர்களுக்கு ஆபிமுக்யம் பிறந்த காலம் ஆத்ம ஹித சிந்தனத்துக்கு சத்வோத்தர காலமாக இருக்கும்
ப்ரஹ்ம முஹூர்த்தமாக வந்து விழுந்தது
மாசம் மார்கழி மாசமாய் –
பக்ஷம் பூர்வ பஷமாய்-
அதிலே பவுர்ணமியாய்-
அப்படியே ஒரு நன்னாள் வந்து பலித்தால் போலே
அத் திவசத்தில் முஹூர்த்தமும் ப்ரஹ்ம முஹூர்த்தமாய் வந்து விழுந்தது
(சுக்ல பக்ஷம் கிருஷ்ண பக்ஷம் இரண்டும் உண்டே –
பவுர்ணமி தொடங்கி பவுர்ணமியில் முடியும் படி அமைந்தது
முதல் பாட்டில் நேரம் இல்லை )
காலை –
சிறு காலை –
சிற்றம் சிறு காலை-
செங்கல் பொடிக் கூறை என்று தாமஸரும் உணரும் படி யான அளவு காலை யாவது
ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்று இடைச்சிகள் உணர்ந்து
ஸ்வ க்ருத்யத்திலே அதிகரிக்கும் படியான அளவு சிறு காலை யாவது
ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்றது தான் விடிவுக்கு அடையாளமாகச் சொல்லும் படி –
அதற்கு முன்னே உணர்ந்தார்கள் இறே தாங்கள் –
இவர்களுக்கு ராத்திரி கழிந்து
பகல் வருவதற்கு முன்புத்தை
நடுவில் போதை இறே நினைக்கிறது
அஞ்ஞான தசை குலைந்து
பிராப்தி தசை புகுவதற்கு முன்புத்தை
ஞான தசையைச் சொன்ன படி
முனிவர்களும் யோகிகளும் உணரும் காலம்
சிற்றம் சிறு காலை யாவது –
சம்சாரியான நிலை குலைந்து
முக்தனாவதுக்கு முன்பு
முமுஷூத்வம் அங்குரித்த தசை இறே –
இருள் அகன்ற அளவாய்
வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து –
இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே
பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு
நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –
காலை நல் ஞானத் துறை படிந்தாடி (திரு விருத்தம் -93)-என்று
ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இறே நல் ஞானமாவது –
துறை படுகையாவது-
சதாசார்ய உபதேச மூலமாக
பிராட்டி புருஷகாரமாக –
பாகவதர்கள் உஸாத் துணையாக
எம்பெருமானைப் பற்றுமது-
உன் மணாளனை எம்மை நீராட்டு (20) என்று
துறை தப்பாமல் இழிந்தவர்கள் இறே இவர்கள்-
ஓயும் பொழுதின்றி -(திருவாய் -5-4 )
விடிவு காணாத படி நீண்ட சம்சார காள ராத்திரி கழிந்து –
பகல் கண்டேன் -என்று ஒரு பகல் முகம் செய்கிற சமயம் இறே
அந்தம் தம இவ ஞானம் இத்யாதி –
காலை மாலை (திருவாய் )என்று ஒரு நியதி இல்லை இறே –
அவன் தோற்றும் காலம் விடிவாம் அத்தனை இறே –
திருவாய்ப் பாடிக்கு நாட்டார் விடிவு அஸ்தமயமாய் –
சர்வ பூதங்களினுடைய அஸ்தமநம் விடிவாய் இறே நடப்பது –
ஆவிர்ப் பூதம் மஹாத்மனா -என்று
அபர ராத்ரம் விடிவாய் வந்து விழுந்தது இறே –
விரியும் கதிரே போல்வான் இறே(நாச்சியார் )
சிற்றம் சிறு காலே
சிறு காலே வரில் உன்னைக் காண ஒண்ணாது என்று சிற்றம் சிறு காலே வந்தோம் –
சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன் -என்று
மாத்ரு பரதந்த்ரனாய்
இளம் கன்று மேய்க்க வேணும் –
விடிந்த வாறே –
காலிப் பின்னே போம் –
எல்லியம் போதாக வரும் –
நீராட்ட அமைத்து வைக்கையாலே-ஆடி அமுது செய்யும் –
அல்லலுற்றான் வந்த பின்னை என்கிறபடியே
இருளிலே ஆள் பார்த்து ஊரிலே திரியும் –
அபிமதைகளை வேண்டின இடங்களிலே புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்றவாறு இங்கே கிடை காட்ட வரும்
அக் காலம் அறிந்து வந்து கைக் கொண்டார்கள் –
நாள் தோறும் ஒரு விடிவு யுண்டாய் நடக்கிறது இறே –
ஸூப்ரபாதமாய்த்து இத் திவசம் ஒன்றுமாய்த்து –
அதுக்கடி என் என்றால்
வந்து
வந்த வருத்தத்தை –
வந்து தலைப் பெய்தோம் -என்று கீழே சொன்னார்கள் இறே
வந்து
சம்சார பதவியில் ஓடினவர்கள் மீண்டு வருவதிலும் வருத்தமுண்டு எங்கள் வரத்துக்கு –
தேஹாத்ம அபிமானம் பண்ணினாரை –
எதிர் சூழல் புக்குத் திரிகிறவனுடைய யத்தனத்தாலே வருவிக்கலாம் –
நிவ்ருத்தி சாத்தியம் என்று ஸ்வ ஸ்வரூபத்தை யுணர்ந்து வாராதாரை வருவிக்க அரிது இறே
உபாய ஸ்வீகாரத்தில் உபாய பிரதிபத்தி பண்ணாத படியான
நிலையிலே நிற்கிறவர்களை
க்ரியா ரூபமானத்தை ஏறிட்டுக் கொண்டு வரும் படி பண்ணுகை அரிது இறே
உவாச ச என்று
பெருமாள் திரு உள்ளத்தைப் புண் படுத்தினால் போலே சொல்லுகிறார்கள் —
வரவுக்கு நோவு படுகிறவனை வார்த்தையால் புண் படுத்தினான் –
தான் சரண்யராகப் பற்றி வந்தாரை யுண்டாக்கிக்
கார்யம் கொள்ள மாட்டிற்று இலன் என்றது இறே விபீஷணனை
அப்படியே நாலடி இட்ட நாங்களே வந்தோம் என்கிறார்கள் –
பத்ப்யாம் அபிகமாத்-என்று
தாம் வந்த தூரம் பாராதே வாசல் அளவும் புறப்பட்டது பொறுத்திலரே
(குகன் வந்ததை பெருமாள் வார்த்தை )
வந்து
இவ் வீதி போதுமாகில் (பெரியாழ்வார் – 3-4 )என்று வந்தால்
கார்யம் கொள்ள இருக்கும் நாங்கள் வரும்படி யன்றோ த்வரை இருந்தபடி
வந்து
பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து
மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து –
நம் தெருவின் நடுவே வந்து –
கதவின் புறமே வந்து –
முற்றம் புகுந்து –
நம் இல்லம் புகுந்து –
நீ மலர் அணை மேல் வைகி –
மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க –
படுக்கையை விட்டுப் படி கடந்து
காவலும் கடந்து –
உன் தோரண வாசலிலே வந்து –
உட் கட்டிலிலே புகுந்து –
பள்ளிக் கட்டில் கீழே –
சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –
கறவைகள் பின் சென்று என்று அந்த போக்கு நிகர்ஷமாக சொன்னால் போலே –
இவ் வார்த்தையும் தப்பு என்று இருக்கிறார்கள் –
ஸ்வரூபத்தை யுணராத போது அது ப்ராப்தமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உணர்ந்தால் இது ப்ராப்தமாய் இருக்கும்
உபாயாந்தரத்துக்கு நிவ்ருத்தி தோஷம் –
இவ் வதிகாரிக்கு பிரவ்ருத்தி குற்றம் –
ப்ராப்ய ப்ராவண்யம் ஸ்வரூபத்தை மறப்பித்தது –
பூமருவு கோல நம் பெண்மை சிந்தித்திராது போய் (பெரிய திருமொழி -11-2 )-என்னப் பண்ணும் இறே
நீங்கள் வந்து செய்த தப்பு என் என்ன
உன்னைச் சேவித்து
இது இறே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் –
எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால்
உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –
இத் தலையில் மித்ர பாவநையாய் இருக்கை –
இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இறே –
வரவு தானே மிகையாய் இருக்கும் படி இருக்கிற யுன்னை –
அதுக்கு மேலே
துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்
பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி –
துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு
அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து
அவர்கள் முகத்தில் விழித்து –
அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து
நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று
அத்தை தவிர்ந்து —
விஷயம் வகுத்ததாய்
ஸூசீலனாய்
ஸ்வாராதனாய்-
புலன் கொள் வடிவு படைத்தவனாய் (திருவாய் -8 )
தானே தன்னைத் தருவானாய்
தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை
உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –
எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிகையால்
பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்
உன்னைச் சேவித்து
சோப்ய கச்சன்-என்று அபிகந்தாவான யுன்னை
அபிகமனம் பண்ணி
குசல பிரஸ்னத்திலே திருப்தனாம் உன்னை
நாங்கள் சேவிக்கை மிகை அன்றோ
சென்று
நாம் சேவித்தால் என்கிற
இரண்டும் மிகையுமாய் செய்தோம் இறே
பின்னே சென்று –
சூழவே நின்று -என்று
எங்களை தொடர்ந்து சேவிக்கிற யுன்னை
பேஜூர் முகுந்த பதவீம் -என்கிறபடியே
சுவடு பார்த்து திரிந்து
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் (பெரியாழ்வார் -3-7 )-என்னக் கடவது இறே –
சேவித்த அளவியோ -அதுக்கு மேலேயும் சில செய்திலோமோ-
உன்-பொற்றாமரை அடியே போற்றும்
சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே
கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து
வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்
சேவித்து –போற்றவும்
தொடர்ந்து ஏத்தவும் (பெரிய திருமொழி -1-9 )என்கிற படியே
உன் அடி போற்றும்
ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்
அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி –
தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே
தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை
புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து
பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே
அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை
உன்னடியே போற்றும்
அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி –
அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே
(திருமார்பை ஆசைப்படும் அத்திரு
திருவடியை ஆசைப்படும் இத்திரு )
உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ –
காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்
அவை –
உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் —
வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –
இது
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே
இப் பொன்னடி இருப்பது –
உன் –பொன்னடி –
எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -(பொது நின்ற பொன் அம் கழல் )
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் –
கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் –
விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –
வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ –
பொற்றாமரை அடி அன்றோ –
சாதனத்வமும்
சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –
பாவனத்வமும் போக்யத்வமும்
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்
பொன்னும் தாமரையும்
தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3)
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )
உன் பொற்றாமரை அடியே
எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –
உன் பொற்றாமரை அடி
பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால்
கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே
அழித்தாய் உன் திருவடியால் –
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று
ஆசிரயணீயமும் இதுவே –
அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று
ஆசைப்படுவதும் இதுவே
ஆசானுகுணமாக
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 )
இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –
போற்றும்
பரமன் அடி பாடி –
அடி போற்றி –
கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே
கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி )
ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –
இதுக்கு மேல் ஓன்று நினைக்கும் படி இறே
ருசி காரியமாய் வந்த ஆற்றாமை இருந்த படி –
போற்றும் பொருள்
போற்றுகிற பிரயோஜனம் –
இவர்கள் போற்றும் பொருள் என்று பாரித்துக் கொண்டு
சொல்லத் தொடங்கினவாறே –
சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் –
இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் –
வடிவு அழகிலும்
பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து
நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி
அந்நிய பரனாய் இருந்தான் –
முன்பு இருக்கிறவனை
கேளாய்
என்கிறார்கள் –
இவர்கள் தாம் தங்களை அறிந்தால்
பின்னே நின்று வார்த்தை சொல்ல வேண்டாவோ –
வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
கேளாய் –
என்னும் போது நடுவே அந்நிய பரனாக வேணும் இறே
(கேட்டியேல் மாலே பாசுரம் போல் )
கேளாய்
எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று
அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –
கேளாய்
அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால்
ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இறே
இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு
கேளீரோ (2 )-என்று
பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் –
இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று
அழகிது -எனக்குத் தான் ஏதானால் நல்லது –
உங்கள் பேச்சே அமையாதா-
இது ஒரு பொருள் கேள்வியாய் இருந்தது
விடிவோறே வந்து கைக் கொண்டி கோள்-
நமக்கு உசித தர்மங்களையும் விட்டு –
புறம்பு உள்ள அந்நிய பரதைகளையும் தவிர்த்து
இற்றைக்கு இதுவே கேள்வியாக இருக்கிறோம் -சொல்லலாகாதோ என்றான் –
நீ கேளாய்
சீரிய சிங்கா சனத்திலே அன்றோ நீ இருக்கிறது –
தர்ம சாசனத்தில் இருப்பார்க்கு கேட்க வேண்டாவோ
நீ போற்றும் பொருள் கேளாய்
உனக்கு க்ரமத்திலே இவர்கள் கார்யம் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
த்வரிக்க வேணும் காண் என்கிறார்கள் –
பேறு உங்களதாய் நீங்கள் த்வரியா நின்றி கோளே என்றான் –
பிறந்த நீ
இவ்வளவாய் த்வரித்தோம் நாங்கள் ஆகில் அன்றோ நாங்கள் மேலும் த்வரிப்பது-
எதிர் சூழல் புக்கு –
இவ்வளவாய் கிருஷி பண்ணின நீ
பல வேளையில் ஆறி இருக்கலாகாது காண் –
எங்கள் ருசி கார்யமான த்வரைக்கு முற்பாடனான நீயே பேற்றுக்கு முற்பாடானாக வேணும்
எத்தனை காரியத்தை இட்டு பிறப்போம் என்று தெரியாது –
இது என் –
என்பிது இது என்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ
பெற்றம் மேய்த்து உண்ணும்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் (நித்யர்( நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு (முக்தர்) முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ –
பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ –
வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –
பெற்றம் மேய்த்து
தாழ்ந்தவர்களை ரக்ஷணம் பண்ணும் இக் குலத்திலே பிறக்கச் சொன்னார் யார் –
பர ரக்ஷணமும் பண்ணாமல்
ஸ்வ ரக்ஷணமும் பண்ணாதார் குலத்தில் உன்னை பிறக்கச் சொன்னார் ஆர் –
பிறந்த நீ
நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த
எங்கள் பெற்றத்து ஆயன் வட மதுரைப் பிறந்தான் (திருவாய் -9)-என்று
அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –
குலத்தில் பிறந்த
குலத்துக்கு தலைவரானவர் வயிற்றிலே பிறந்த படியால்
எல்லார்க்கும் சாதாரணம் இறே இப்பிறவி
நாம் உங்களில் வந்து பிறந்தோம் ஆகில்
நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன
அந்தரங்க வ்ருத்தி கொள்ளச் சொல்லுகிறோம் என்கிறார்கள் –
ஆரைத் தான் என்றான் –
எங்களை –
குலத்தில் பிறந்த நீ –
குலங்கெழு கோவியரான(பெரிய திருமொழி -3-3 ) -எங்களைக் கொள்ள வேண்டாவோ
நீளா குலேந ஸத்ருசீ –
எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –
எங்களை
திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க
நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப் பாடி யான எங்களை
ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் (திருவாய் – 10-3-8 )என்று
நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –
பிறந்த நீ எங்களை
பிறவாதாரைப் பிறவாதார் ஏவிக் கொள்ளவும்
பிறந்தாரை பிறந்தார் ஏவிக் கொள்ளுகையும் பிராப்தம் அன்றோ
(அஜாயமானோ பஹு தா விஜாயதே இரண்டுமே நீயே தானே
அங்கு அவர்களை ஏவிக் கொள்ளவும்
இங்கு எங்களை ஏவிக் கொள்ளவும் பிராப்தம்)
இவ் வாய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது –
ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-(திருச்சந்த 41 )
எங்களை
பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை –
பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் –
பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் –
இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை
குற்றேவல்
அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது –
முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இறே -8-5
விடுத்த திசைக்கு கருமமும் இல்லை
கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை –
அணுகின விருத்தியும் –
ஏவின விருத்தியாக வேணும்
திருத் திரைக்குள்ளில் விருத்தி –
உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் –
கலசப் பானை பிடித்தல் –
படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் –
திருவடிகளை விளக்குதல்-
ஒலியன் (ஆலவட்டம் )பணி மாறுதல் –
சாமரம் இரட்டுதல் –
அடைக்காய் திருத்துதல் –
அடி வருடுதல்
முலைகள் இடர் தீர அணைத்தல்
இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -(நாச்சியார் )
இவை எல்லாம் க்ரமத்திலே கொள்ளுகிறேன் என்றான்
எங்களைக்
தாஸ்யத்தில் சுவடு அறிந்து –
அதில் ருசியும் த்வரையும் விளைந்து
க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை
அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று
தங்கள் ஆற்றாமையை அணித்துக் காட்டுகிறார்கள்
சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை
ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை
குற்றேவல் கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம்
பிறந்த நீ கொள்ளாமல் போகாது –
முன் தீம்பு செய்தார்க்கு வீண் போமோ –
புறம்புள்ள ஜீவனத்தை மாற்றினால் நீயும் இடது ஒழியவோ-
அன்ன பானாதிகள் தாரகமான நிலையைத் தவிர்ந்து
உன் வடிவு அழகைக் காட்டி –
எல்லாம் கண்ணன் -என்று
தாரகாதிகள் நீயேயாம் படி பண்ணினால்
ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளாதே போகப் போமோ –
ஒருவனுக்கு இடுகின்ற சோற்றை விலக்கி பின்னை தானும் பொகட்டுப் போகவோ
நாங்கள் இசையாத அன்று தப்பினத்தைச் செய்யலாவது இல்லையே –
ஸ்வரூப ஞானம் யுண்டாய்
இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ
உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-
ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ
கொள்ளாமல் போகாது
நாங்கள் விட நினைத்தால் நீ தான் விட வில்லையோ –
திரு வாணை நின்னாணை கண்டாய் (திருவாய் -10-10 )-என்று ஆணை இட மாட்டார்கள் இறே
அபிப்ராயம் தோற்றச் சொல்லும் அத்தனை இறே –
வளைத்து வைத்தேன் இனி போகல் ஓட்டேன்-(பெரியாழ்வார் -5-3 )
தடுக்கையும் வளைக்கையும் ஆணை இடுகையும் பரிசு இறே –
கொள்ளாமல் போகாது என்று அடுகுவளம் (யானைக்கு கொடுக்கும் சோறு ) தடையான பின்பு
கேட்க என்று விடுகை இறே
கொள்ளாமல் போகாது -என்று மீள ஒண்ணாத படி நிர்பந்தித்தவாறே –
நாம் அந்தரங்கமாக வேண்டுமவை ஏவிக் கொள்ளுகிறோம் –
உங்களுக்கு நம் பக்கலிலும் சில கொள்ளாமல் போகாதே –
நீங்கள் நோன்புக்கு அங்கமாகச் சொன்னவற்றை
இப்போது கொண்டு போம் அத்தனை இறே –
நீங்கள் அனைவரும் அறிய வேண்டி வந்தத்தைக் கொண்டு போக வேணும் –
இப்போது –
பறை தருவான் -என்றும் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
போற்றப் பறை தரும் என்றும் –
அறை பறை என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் –
சாலப் பெறும் பறை -என்றும் –
உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் –
நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை
இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று
பெண்களுக்கு கொடுக்கும் படி -பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான்
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
உன்னை அங்கனே விடுவுதுமோ-
கெடுவாய்
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –
தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –
அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ
லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –
சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –
நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –
கொள்வான் அன்று காண்
எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய
நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –
கோவிந்தா –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –
நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் –
நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்
(பெருமாள் ஆண்களுக்கு நடுவில் சீதாப்பிராட்டியை சொன்னதுக்கு
இங்கு இவர்கள் பதிலுக்கு அவனுக்கு இந்த வார்த்தை )
கோவிந்தா
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று
ஞான பூர்வகமான உபாய ஸ்வீகாரம் பண்ணுகிற இடமாகையாலே
குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை அவ்விடத்திலே
ப்ராப்ய ருசியாலே
கண்ணாஞ்சுழலை இடுகையாலும்
பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான ரோஷத்தாலும்
இவ்வளவும் சொல்ல வேணும் இறே இங்கு
கோவிந்தா
எங்களையும்
எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே
உன்னையும்
உன் பிறவியையும் மறந்தாயீ
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தா –
பூமியை எடுத்து நோக்கின மஹா வராஹமாக நினைக்கிறாயோ –
பூமியை நீர் ஏற்ற வாமனாக நினைக்கிறாயோ –
சப்த ராசியைப் பிரித்து எடுத்த ஹம்ஸ ரூபியாக நினைக்கிறாயோ –
அத்தைப் பிரகாசிப்பித்த ஹயக்ரீவ விஷமாக நினைக்கிறாயோ –
ஆதித்ய அந்தரவர்த்தியாக நினைக்கிறாயோ –
அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து
ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால்
பர வ்யூஹாதிகளையும்
யாதவ வம்சத்தையும் விட்டு
இடைச் சேரியில் ஸூலபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –
நீங்கள் சொன்ன வார்த்தைக்கு பலரும் அறியக் கருத்தாய் இருக்குமத்தை
நாமும் அறிந்து சொன்னோம் ஆகில்
நமக்குத் தாத்பர்ய ஞானம் இல்லை என்கிறது என் –
நீங்கள் குற்றேவல் என்கிறதிலே இரண்டு வகை அறிந்து சொல்லுங்கோள்
இற்றைப் பொழுதை உங்களோடு போக்குகிறோம் அங்கனேயாகில் என்றான்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
இற்றை அளவிலே போகாது கண் –
இப் பிறவி அளவிலே போகாது காண்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் –
ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய்
சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்-
அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –
உன் தன்னோடு-
நீ பிறவாது இருக்கும் இடத்திலும்
பிறந்து திரியும் இடத்திலும்
கூடத் திரியும் அத்தனை
எற்றைக்கும்
தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே
நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் –
இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே
உன் தன்னோடு
நீ சங்கு சக்ர கதா தரனாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் இடத்திலும்
எங்களோடு கண் கலந்த உன்னோடும் ஓக்கத் திரிய வேணும்
உன் தன்னோடு
அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் –
இத்தை நினைத்து இறே
கச்சொடு பொற் சுரிகை அடியிலே இவர்கள் தான் அவனுக்கு வர விட்டது
(அவனியாள் -பூமா தேவி -இவளே தானே அப்போது கொடுத்து வைத்தாள்
நாங்கள் இப்பொழுது கொண்டு வர )
கோவிந்தா எற்றைக்கும் –
கோயில் கோள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்டு -(திருவாய் 8-6-
நீ இருக்கும் இடத்திலும்
பின்னும் எம்மாண்பும் ஆனான் (திருவாய் -1-8 )-என்னும் படி
நீ பிறந்து திரியும் இடத்திலும் உன்னோடே திரிய வேணும் –
தேவும் தன்னையும் என்கிற (திருவாய் -2-7-4 )
இரண்டு அவஸ்தையும்
கோவிந்தனுக்கு இறே
உற்றோமே யாவோம்
சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் –
(பண்டை நாள் திருவாய் -எல்லா உறவின் காரியமும் நீயே )
ஒரு உறவைக் குறித்து -அது உண்டாக வேணும் என்னாது ஒழிந்தது
ஒன்றை விசேஷிக்கில் அல்லாதவை இல்லையாம் என்று
எல்லா உறவும் நீயேயாக வேணும்
உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று
வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )
கோவிந்தா உன்தன்னோடு
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண என்கிறபடி
அவரே இனி யாவார் என்று இருக்க ஒண்ணாது
பிராதா பர்த்தா ச பந்துச்சு பிதா ச மம ராகவா -என்கிறபடியே
அவர் உயிர் செகுத்த எம்மண்ணல் -என்று இருக்க ஒண்ணாது
(எம்பிரான் எந்தை இது போன்ற எல்லாம் சொல்ல மாட்டாளே
முதலிலே எல்லாம் )
அவை எல்லாம் உன்னோடே யாக வேணும் –
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றை யாவாரும் நீ என்று இருக்க வேணும் –
உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே
பத்து மாசம் பிரிந்து இருத்தல் -(சீதாபிராட்டி )
பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -(பரதன்)
பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது (நம்மாழ்வார்)
அத்தனையோ வேண்டுவது என்றான்
ஆட் செய்வோம்
அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது –
ஆகிறது மற்று என் என்றான்
உனக்கு ஆட் செய்வோம்
ஆட் செய்யும் இடத்தில்
எங்களுக்கு உறவை அறிவித்து
அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்
உனக்கு -ஆட் செய் வோம்
ஆட் கொள்ளத் தோன்றிய (ஆயர் தம் கோ -பெரியாழ்வார்-1-6)யுனக்குச் செய்ய வேண்டாவோ –
அத்தனையோ என்றான்
உனக்கே
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து –
தனக்கே யாக -என்னுமா போலே கொள்ள வேணும் –
எங்கள் அபிநிவேசத்தாலே உன் அபிமதம் செய்ய ஒண்ணாது –
நீ உகந்ததாக வேணும் –
தேச கால அவஸ்தா பிரகார நியம சூன்யமாக அபிநிவேசத்தாலே பாரியா நிற்கச் செய்தேயும்
ருசிகரமான தேசத்தில் நியோகித்துக் கொள்ள வேணும் என்று
அவன் உகந்து ஏவினதைச் செய்யக் கடவராய் இறே இருப்பது
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (திருவாய் -10-3 -காலைப் பூசல் )-என்னக் கடவது இறே
(பிரபல தர விரோதி அன்றோ )
நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய
நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது
ஆட் செய்வோம்
உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்( திருவாய் -1-7)-என்கிறபடியே
உத்துங்க விஷயம் ஆகையால் –
ஆயர் சிறுமியரான தாங்கள் தாழ்ந்த மனிச்சராகையாலும்-
செய்வோம் என்று பிரார்த்திக்கிறார்கள்
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே (திருவாய் – 4-10-10-)என்றபடி
உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –
அப்படி யாகிறது –
இனி என் என்றான்
காமம் மாற்று
வேறு ஒரு காமம் உண்டாய்ச் சொல்லுகிறது அல்ல விறே –
தேறேல் என்னை (திருவாய் -2-9 ) -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அடிமை செய்வாரையும் செறுமவை-
ப்ரக்ருதி வாசனையாலும்-
மனஸ்ஸூ அஸ்திரமாய் இருப்பது ஒன்றாகையாலும்
சம்பாவிதமாக சங்கித்து
சூடகமே என்று தொடங்கி நாட்டாருக்குச் சொன்னவை தொடருகிறதோ என்று
அது நடையாடாத படி வேணும் என்கிறது –
அத்தனையோ என்றான் –
அவ்வளவு போராது
மற்றை -காமம் -மாற்று
நீ ஸ்ரீ வைகுண்டத்தில் ஸூரிகளுக்கு முகம் கொடுத்து இருக்கும் இருப்பில்
க்ரமத்திலே பெறும் படி இருக்க ஒண்ணாது
நீயும் -பெண்காள் -என்று அழைக்க –
நாங்களும் கிருஷ்ணன் -என்று சொன்ன பரிமாற்றமே நடக்க வேணும்
ந காம கலுஷம் சித்தம் –
(சித்தம் திருவடிகளில் ஸ்ரீ விஷ்ணு பக்தியே வேண்டும் )
அவனுடைய ப்ராப்யத்தையும்
ப்ராபகத்வத்தையும்
சரண்யத்தையும்
இந்நிலத்தின் தண்மையையும்
அந்நிலம் உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
மநோ ரதம் தான் அமையும் என்னும் இடத்தையும்
சொன்ன வாறே
ஒரு அபேக்ஷை இன்றிக்கே
பலவற்றில் நெஞ்சு தாழா நின்றதே என்ன –
தேபாத் யோஸ்திதம் –மம சித்தம் –நகாம கலுஷம்
ப்ராப்யத்வம் ப்ராபகத்வம் சரண்யத்வம் -இவை எல்லாம் சொல்லிற்று நீ யாகையாலே –
இவ்விடம் த்யாஜ்யம் என்றது –
உன்னுடைய அனுபவத்துக்கு விரோதி யாகையாலே –
அவ்விடத்தில் உத்தேச்யதா புத்தி நடந்தது -அனுபவத்துக்கு ஏகாந்த ஸ்தலம் என்று –
அல்லாதவை உத்தேச்யம் அன்று என்று சொன்னது அல்லவே
உன் திருவடிகளில்
நிலை நின்றவர்கள் நெஞ்சு ஸ்ரீ வைகுண்டாதிகளாலே கலங்காது காண் என்றது இறே –
அப்படியே இவர்களும்
மற்றை –காமம் –
என்கிறார்கள் –
மாற்று -என்றது –
சிந்தை மற்று ஒன்றில் திறத்தில் அல்லா -(7-10- திருவாறன் விளை )
மற்று ஒன்றைக் காணா -(அமலனாதி பிரான் )
மற்று ஒன்றில் என்கிற இடங்களில் சொல்லுகிறத்தை
கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று –
கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -(திரு விருத்தம் -30)
(கண்ணன் கோவிந்தன் என்ற நிலையே நாங்கள் வேண்டுவது)
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இறே
நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் –
(பராங்குச நாயகி -தீர்க்க சிந்தையந்தி நிலை வேண்டுமே )
அத்தனையோ வேண்டுவது என்றான்
நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் –
(நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்
அப்பாஞ்ச ஜன்யம் )
அத்தனையோ என்றான்
காமங்கள்
என்கிறார்கள் -இருவர் கூடப் பரிமாறா நின்றால்
அத்தால் பிறக்கும் இனிமை இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே
விஷய வைலக்ஷண்யத்தாலும்
ஆஸ்ரயத்தின் இனிமையாலும்
மிகவும் ப்ரீதி ரூபமாய் இறே பரிமாற்றம் இருப்பது –
(ரமதே -எங்கு நீ ஆனந்திப்பாயோ அங்கு பர்ணசாலை -சொன்னதும்
அழுதாரே இளைய பெருமாள் )
அதில் ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்ப்பமான அடிமையும்
அபுருஷார்த்தம் இறே
நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்-
அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய
போக்த்ருத்வ பிரதிபத்தியும்
மதீயத்வ பிரதிபத்தியும்
போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது –
அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –
(சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் ஏற்றம்
போக்த்ருதம் விட போக்ய புத்தி ஏற்றம் -ஆச்சார்ய ஹ்ருதயம் )
1-ஸ்வரூப விரோதியும் -(அஹங்காரம் )
2-சாதன விரோதியும் -(உபயாந்தரம் )
3-பிராப்தி விரோதியும் -(அநாதி கால பாபங்கள் )
4-ப்ராப்ய விரோதியும் -(ஸூவ போக்த்ருத்வ புத்தி )
என்று நாலு வகையாய் இறே விரோதிகள் இருப்பது-
அதில் சாதன விரோதியும்
பிராப்தி விரோதியும் கீழில் பாட்டிலே கழிந்தமை சொல்லிற்று –
மற்றை இரண்டையும் இப் பாட்டில் கழிகிறது
கறைவைகள் பின் சென்று –
உபாயாந்தரத்தில் அநந்வயம் சொல்லுகையாலும் –
பிராப்தி பிரதிபந்தகத்துக்கு அபராத ஷாபணம் பண்ணுகையாலும் இரண்டும் குலைந்தது இறே
ப்ராப்ய ருசியும் த்வரையும் ஆர்த்தியும் விளைந்து
பாஹ்யங்களிலே சங்கம் குலைந்த படி சொல்லுகையாலே
(இற்றைப் பற்றி கொள்வான் அன்று )
ஸ்வரூப விரோதி குலைந்த படி சொல்லிற்று –
இப் பாட்டில் முற்கூற்றாலே –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –
கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று
நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது
ஸ்வரூப
உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே
ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும்
அதின் பலமான கலக்கமும் –
விளைந்த ஆர்த்தியும் –
இது எல்லாவற்றுக்கும் அடியான ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் –
பேற்றில் அளவிறந்த பாரிப்பும்
அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் –
1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ )
கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –
இவை எல்லாம் நிழல் எழும்படி
கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply