(சாம்யா பத்தி இதில் -அஷ்ட குணங்களில் ஸாம்யம் –
அபஹத பாப்மாதிகள் -தடங்கல் இல்லாமல் முழுமையாக நாம் பெறுவோம் அங்கே –
சாயுஜ்யம் அடுத்து -கைங்கர்யம் கொண்டு அவன் ஆனந்தம் -செய்து நாம் ஆனந்தம் –
சரணாகதியும் கைங்கர்ய பிரார்த்தனையும் மேல் இரண்டாலும்
நீராட்டம் உத்சவம் -உபகரணங்களைப் பெற்று ஏழு நாள்கள்
தை முதல் நாள் ஜீயர் படி உத்சவம்
பரத்வம்-ஆலின் சிலையாய்
சவுந்தர்யம் -மணி வண்ணன்
ஸுலப்யம் -மாலே
மூன்றும் விழிச் சொற்கள்)
பெண்காள்-உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்று சொன்னி கோள்-
நம்முடைய சம்ஸ்லேஷ ரஸ உத்ஸாகம் உடையவர்கள்
வேறு ஒன்றை அபேக்ஷிக்கக் கூடாமையாலே அது என் சொன்னி கோள் என்று
அதிலே ஒரு சம்சயம் வர்த்தியா நின்றது –
(பறை)அதாகிறது ஏது-
அதுக்கு மூலம் ஏது –
அதுக்கு வேண்டுவன எவை –
அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை -அவற்றைச் சொல்லுங்கோள் என்ன –
உன் முகத்தை வெளியிலே கண்டு
உன் திரு நாமங்களை வாயாலே சொல்லுகைக்கு ஹேதுவாய் இருபத்தொரு நோன்பை
இடையர் பிரஸ்தாபிக்கையாலே
உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமாய் இருக்கிற படியைக் கண்டு
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே அந்நோன்பிலே இழிந்தோம்
அதுக்கு முன்பு உள்ளார் செய்து போருவது ஓன்று உண்டு –
அது தனக்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை
அவற்றையும் தந்து அருள வேணும் என்று வேண்டிக் கொண்டு
அவனை ஆசைப் பட்டவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள் –
இதுக்கு முன்பு எல்லாம் தங்கள் பட்ட வியசனங்களைச் சொல்லி வந்தார்கள்
இப்போது அவனைக் கண்டவாறே
அவனுடைய வ்யாமோஹம் கடல் போலே எட்ட முடியாதபடி இருந்ததே
தங்களுடைய வ்யாமோஹம் குளப்படியாய்-
அத்வேஷ கோடியிலேயாய் என்னலாய் இருந்தது –
அவனுடைய பிச்சு வடிவு கொண்டால் போலே இருந்தது –
இது கொண்டு இத்தனை நாளும்
நாங்கள் வரும் தனையும் பாடு ஆற்றின படி தான் எங்கனே என்று
மாலே என்கிறார்கள் –
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
பதவுரை
மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணி வண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்-முன்னோர்கள் –
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
பிச்சுப் பிடித்து கோபிகளை கூட்டம் பார்த்து திகைத்து இருக்கத் தட்டி எழுப்புகிறார்கள்
ஞாலத்தை எல்லாம்-பூமி யடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப் பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற் கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.
மாலே –
நாங்கள் தெளிந்து
நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –
நோற்கவும் ஷமன் அன்றிக்கே
நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே
வ்யாமோஹம் இருந்த படி என் –
மாலே
நாராயணன் —
பையத் துயின்ற பரமன் –
தேவாதி தேவன் -என்று முன்பு அபரிச்சேதயமான மேன்மை
யுனக்கு உள்ளது என்று இருந்தோம் –
இப்போது மேன்மை இடு சிவப்பு –
வாத்சல்யமே உனக்கு பிரகிருதி என்று நிலையிட்டோம் காண் –
உன்னைக் கண்ட வாறே –
பெருமாளுக்கு பிரதானமான குணத்தை –
சரணாகதர் வத்சலர் -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடாக நிலையிட்டாள் பிராட்டி –
அப்படியே
கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய்
மஹா பாரதத்துக்கு உள்ளீடான ஆஸ்ரித வியாமோஹத்தை
மாலே என்கிற சம்புத்தியாலே
வெளியிடுகிறார்கள் இடைப் பெண்கள்
ராவணன் பின்னே பிறந்த நம்மை
ரகு குலத்தில் பிறந்தார் கைக் கொள்ளுவார்களோ -என்று இருந்தான் விபீஷணன் –
ராவணன் பின்னே பிறந்தவனை ராவணனை ஆசைப்படுகிற நமக்கு
சித்திக்கப் புகுகிறதோ என்று இருந்தார் பெருமாள் –
இது இறே இரண்டு தலைக்கும் வாசி
இத் தலை ஒரு மாசம் ஜீவியேன் என்னில்
ஒரு க்ஷணம் ஜீவியேன் என்று இறே அத் தலை
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –
என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )
(கோதண்ட ராமர் சந்நிதியில் பராங்குச பரகால யதிராஜர் முன்னே வர
நம்பெருமாள் பாய்ந்து முன்னே வர அவர்கள் பின்னே எழுந்து அருளி வியந்து இருக்க
இன்றும் இத்தை மணல் வெளியில் சேவிக்கிறோமே )
எனைத்தோர் பல நாள்,அழைத்தேன் இறே -இவர்களது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் இறே -அவனது –
அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –
அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது –
நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு
யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு
ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே –
ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே –
பெண்களை பிரியாமைக்கு இறே
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–(நாச்சியார் -3-9 )
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த –
மாலே
இவர்கள் பக்கல் பிச்சு இறே ஒரு பிறவியிலே இரு பிறவி யாய்த்து –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை –
பிச்சாய்ப் பிறந்து பெண்களையும் பிச்சேற்றித் தன்னோடு ஒரு கோவையாக்கும் –
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் -(நாச்சியார் -11-2)
(அங்கு அஷ்ட குண ஸாம்யம்
இங்கு மாலாவதற்கு ஸாம்யம் )
தெளிவுடையார் பெண்களை சந்தியில் வைப்பார்களா-
நம்முடைய வியாமோஹம் நீங்கள் அறிந்த படி என் என்ன –
அகவாயில் வியாமோஹம் வடிவிலே நிழல் இட்டுக் காட்டுகையாலே தெரிந்தது என்கிறார்கள்
(ரத்ன கர்ப்ப ஸாளக்ராமம் உண்டே )
மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி
மணி வண்ணா
தாமரையில் இருக்கிறவள் அத்தை விட்டு வருவது இவ் வடிவைக் கண்டு இறே –
பனி மலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன் (பெரிய திருமொழி-2-2)
மணி வண்ணா
வியாமோஹன் அன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
மாலே மணி வண்ணா
இப்படி வடிவு படைத்தாரும் பிறரத்தை ஆசைப் படுவார்களோ
பிச்சர் கையில் மாணிக்கமாய் -உன்னுடம்பு உன்னதாமோ
(ந தே ரூபம் –பக்தாநாம் அன்றோ )
அன்றிக்கே –
மால் -என்று
பெரியோன் -என்றபடியாய்
சூட்டு நன் மாலைகள் எடுத்து ஸூரிகள் சேவிக்க இருக்கும் ஈஸ்வரத்வம் சொல்கிறது
மணி வண்ணா -என்று
வெண்ணெய் தொடு உண்ணப் போந்து -அபரிச் சேதியனாய் இருக்கச் செய்தே-
முந்தானையில் முடிந்து
பெண்களுக்கு அடக்கி ஆளலாம் படி இருக்கிற ஸுலப்யத்தை சொல்லுகிறது ஆகவுமாம்-
மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை என்று
நம்மை ஆச்சி பல காலம் சொல்லும் –
தாய்க்கு மணி வண்ணன் அத்தனை அன்றோ
மணி மாமை குறைவில்லாதே -(4-8 )
அழகியார் இவ் வுலகம் மூன்றுக்கும் (6-2 )-என்கிற உங்களுக்கு ஏற யுடம்பு படைக்கப் போமோ
இத்தனை மிகை நம்மை சொல்லுகிறது என் –
போந்த காரியத்தை சொல்லுங்கோள் என்ன
மார்கழி நீராடுவான்
மகிழ்ந்து -மார்கழி நீராட -என்று ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –
சாத்தியம் கைப் பட்டு இருக்கச் செய்தே
ஆன்ரு சம்சயத்தாலும்
ஆஸ்திக்ய அதிசயத்தாலும்
க்ருத்யாம்சம் விடார்கள் இறே
மார்கழி நீராடுகைக்கு உபகரணங்கள் வேண்டி வந்தோம்
இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து
இது எங்கே உள்ளது என்று தான் என்றான்
இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –
காமநாதிகாரிகளுடைய ஜ்யோஷ்டோமாதி விதி போலே ப்ரசித்தமோ என்ன –
அனன்ய பிரயோஜனைகளான எங்கள் முன்னே
பிரயோஜனாந்தர பரருடைய விதியைக் காட்டினாயே என்று இவர்கள் சொல்ல
முமுஷுக்களுடைய த்யான விதி போலே பிரசித்தமாய் இருந்ததோ என்று அவன் சொல்ல
நாஸ்திகரைப் போலே நீ சொல்லுகிறது என் –
ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறவை போலே அல்ல காண் –
பிரபல பிரமாண சித்தம் காண் என்கிறார்கள் –
(ஸ்ருதி ஸ்ம்ருதி உணர்ந்த வைதிகர் அனுஷ்டானம் தான் பிரபல பிரமாணம்
வேதங்களும் பிரமாணம் மேலையார் செய்வனகள் )
மேலையார் செய்வனகள்
விதி ப்ரவ்ருத்தமானால் பல வ்யாப்தமாந்தனையும் சம்சயத்துக்கு விஷயம் உண்டு –
அனுஷ்ட்டித்து பல சித்தி உண்டானதுக்கு சம்சயம் இல்லையே –
விச்வாமித்ரன் சொன்னான்
கண்டு சொன்னான் என்றால் போலேயோ
கபோதம் அனுஷ்டித்தது -(புறா கதை )
மேலையார் செய்வனகள்
நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும்
வியாசன் சொன்னான்
மனு சொன்னான்
ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள்
யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று –
ஞானவான்களுடைய வசனத்தையும்
அனுஷ்டானத்தையும்
அன்றோ பிரமானமாகச் சொல்கிறது –
வேதங்களுக்கு முன்னே அன்றோ
தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது
வேண்டுவன கேட்டியேல்
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள் –
யாதொரு அளவு செய்தார்கள் -அவ்வளவு லோகம் அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று
தேர்த் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ –
சாஸ்திரம் விதித்ததே யாகிலும்
சிரேஷ்டர் அனுஷ்டானம் இல்லாத இடத்தில் தவிரக் கண்டு அறியாயோ –
அஷ்டகையில் -பசு விசசநம் கர்த்தவ்யம் என்னும் இடம் பசு மேய்ப்பார்க்குத் தெரியாதே –
உன்னை பர தேவதை என்றும்
உனக்கு வாசக சப்தம் நாராயணன் என்றும்
நாங்கள் ஆதரிக்கிறது வேத சாஸ்த்ர சித்தம் என்று அன்று இறே
விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்றும்
விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்றும் அன்றோ –
வைதிக விதிகள் எல்லாம்
உன்னுடையாருடையான கம்பீரமான மனசை அனுவர்த்தித்து இறே பிரமாணம் ஆகிறது
ஒத்த ஓதா நிற்கச் செய்தே ஒரு மந்த்ரத்தை ஸ்வீகரித்து
இதர மந்த்ரங்களைக் கை விட்டது
சிஷ்ட அசிஷ்ட பரிக்ரஹங்கள் ஆகையால் இறே –
அப்படி பரிக்ரஹித்த மந்த்ரம் தன்னில்
மந்த்ர ரத்னத்துக்கு உத்கர்ஷம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று இறே –
திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்-என்னக் கடவது இறே
வேண்டுவன
லோக ஸங்க்ரஹத்தயா அனபேஷிதங்களும் செய்யா நிற்பர்கள் –
அவர்கள் செய்யுமா போலே அவை எல்லாம் செய்யப் போகாதே என்ன
வேண்டுவன
அவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்துக்கு அபேக்ஷிதமுமாய்
ஸ்வரூப விரோதமும் பிறவாதே இருக்குமவை-
இவர்கள்
மணி வண்ணா என்று அவன் வடிவிலே கண் வைத்துக் கொண்டு இருக்கிற மாத்ரம்-
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே அவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் துவக்குண்டு அந்நிய பரனாய் இருந்தான் –
தட்டி யுணர்த்தி
கேட்டி
என்கிறார்கள் –
இவர்களாலும் புறம்புள்ள அந்நிய பரதை இறே தவிர்க்கலாவது-
தங்கள் பக்கல் அந்நிய பரதை தவிர்க்கப் போகாது இறே
ஊரார் இசையாத போது இறே -ஓடி அகம் புக வேண்டுவது –
இப்போது வைத்த கண் வாங்காதே அனுபவிக்கலாமே-
ஆகையால் பார்த்துக் கொண்டு இருந்தான் –
சிலர் பட்டினி கிடக்க சிலர் உண்டு ஸூகிக்குமா போலே
கெடுவாய் நீ என் செய்கிறாய்
கேட்க்கிறாயீ -என்கிறார்கள் –
உங்களுடைய ஞான பக்தி வைராக்யங்களினுடைய நிழலீடு ஆகையால்
கண்ணும் முலையும் இடையும் போக்யமாகையாலே
உங்கள் வடிவைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் –
உங்களுடைய மழறு தேன் மொழிகள் (6-2 )செவிக்கு போக்யமாம் படி கேட்க்கிறோம்-
திரு உள்ளமாகல் ஆகாதோ –
வேண்டுவது எல்லாம் -என்றான்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன–பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
என்கிறார்கள் –
ஜகத்து எல்லாம் அதிரும் படியான த்வனியை யுடைத்துமாய் –
இடைமுடைத்தாய் –
பாலைத் திரட்டினால் போலே அழகிய நிறத்தை யுடைத்தாய் –
பல சொல்லுகிறது என்
உன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் அநேக சங்கங்கள் வேணும்
ஞாலத்தை எல்லாம் நடுங்க
பாரத சமரத்தில் முழக்கம் துர்யோத நாதிகளை நடுங்கப் பண்ணின அளவிலே
இச் சேர்த்திக்கு பிரதிகூலராய் இருப்பர் யாவர் சிலர் –
அவர்கள் எல்லாம் நடுங்க வேணும் –
பற்றார் நடுங்க -(பெரிய திருமொழி 3-3)
பூங்கொள் திரு முகத்து
சிலரை வாழ்விக்கும் –
சிலரைக் கெடுக்கும் –
வர்ஷார்த்தமாக பெண்கள் புறப்படும் போதை சங்க த்வனி கேட்டு
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -என்னும் படி
மேகங்களும் உட்பட முழங்கும் படி சப்திக்க வேணும்
பாலன்ன வண்ணம்
மணி வண்ணா என்று இவன் நிறம் உத்தேசியமானால்
இவனோடு ஸ்பர்சம் யுடையார் நிறமும் உத்தேச்யமாகச் சொல்ல வேணுமோ –
உன் பாஞ்ச சைன்யம்
தாமோதரன் கையில்(நாச்சியார்-7-5 ) என்கிறபடியே
போய்ப்பாடுடையன
பேரிடமாய் இருக்கை-இடமுண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
போய்ப்பாடு -என்று புகழுடைமை யாகவுமாம் –
அதாவது
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினது அன்றிக்கே-
சங்கரய்யா யுன் செல்வம் -என்றும் –
பொதுவாக உண்பதனை -என்றும் –
நாய்ச்சிமாரும் கூட ஊடும் படியான வேண்டற்பாட்டை யுடையவன் ஆகையால் வந்த புகழ் –
அல்லாதவை வேண்டுவதுக்கு முன்னே பிரதானம் மங்கள சப்தம் ஆகையால் வேண்டுகிறார்கள்
உன் பாஞ்ச சன்னியம் என்கிறார்கள் –
இயல் அறிபவன் ஒருவன் ஆகையால் தானே அறியும் என்று –
தன்னுடைய பாஞ்ச சன்னியம் போலே இருக்கும் சங்கு இல்லையே
உன்னோடு உடனே (நாச்சியார் 7-5 )
அதுக்கு ஈடாக தான் உகக்கும் ஆகையால் (நாச்சியார் )
அது கூடாமைக்கு தானே கூட வருவான் என்று நினைத்து –
ஓன்று கண்டோம் –
பின்னையோ என்றான்
சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ –
பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம்
முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –
பின்னையோ என்றான் –
பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –
பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி
தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –
கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –
எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-
விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –
குளிக்கப் போம் போதைக்கு வேண்டும் அளவு இது என்கிறார்கள் –
பெண்காள் இப்படி இருப்பன தேடப் போமோ
துர்க்கடன்களை சொன்னி கோளே என்ன –
உனக்கு அரியது உண்டோ என்றார்கள் –
எனக்கு எளிதாய் இருந்ததோ என்றான்
ஆலினிலையாய்
உன்னுடைய சிறிய வயிற்றில் பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து
ஒரு பவனான ஆலிலையில் கிடந்து அகடிதங்களை
செய்ய வல்ல உனக்கு அரியது யுண்டோ –
லோகத்தில் இல்லாதது எல்லாம் எங்களுக்காக யுண்டாக்க வல்லவன் அன்றோ –
ஆலினிலையாய
பாலன் தனதுருவாய்-(முதல் திருவந்தாதி -69 )
வட தள சாயியுடைய விருத்தாந்தம் கிருஷ்ணன் பக்கலிலே இறே காண்பது –
(சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -அப்பாசுரம் )
பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் -(1-4 )
வையம் ஏழும் கண்டாள்-
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இல்லையே –
(all in ilaiyaay )
மாலே மணி வண்ணா -என்கிற இடத்தில் ஸுலப்யம் சொல்லுகிறது –
ஆலினிலையாய் -என்ற இடத்தில் சர்வ சக்தி யோகத்தவம் சொல்லுகிறது –
அது மாமின் அர்த்தம் –
இது அஹம் -என்கிறத்தின் அர்த்தம் –
மாலாய் ஆலிலையில் வளர்ந்து(பெரிய திருமொழி – 5-7) -என்னக் கடவது இறே –
அருளேலோ ரெம்பாவாய்
சக்தி இராமை இல்லை –
வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை –
தரில் அரியது இல்லை –
தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது –
ஆலினிலையாய் அருள்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது-(நாச்சியார் -2-2 )என்னக் கடவது இறே –
இப்போது அகடிதம் இறே என்று கண் அழியாதே கிருபை பண்ண வேணும் –
ஆலினிலையாய் அருள்
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் (மூன்றாம் திருவந்தாதி -19) என்று
வட தள சாயி யருள் இறே பிரசித்தமாய் இருப்பது –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply