பெண்காள் உங்கள் பிறப்பால் நம் விஜயத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை ஸ்வரூபம் இறே –
இக் குளிரில் உங்களைப் பேணாதே க்லேசித்து வந்திகோளே
உங்கள் நெஞ்சிலே ஓடுகிறது வெறும் பறையோ-
வேறு ஏதேனும் உண்டோ என்ன –
உன்னுடைய குண கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகையால்
ஒரு கிலேசங்களும் படாதே ஸூகமே வந்தோம் –
பறை என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நாங்கள் உன்னை இறே அர்த்தித்து வந்தது என்கிறார்கள் –
பறை கொள்ள வந்தோம் இரங்கு என்று நம்மை வடிம்பிடா நின்றி கோளே –
நீங்கள் சொன்ன போதாகச் செய்யப் போமோ
பிரதிபந்தகங்கள் உண்டாய் இருக்குமே என்ன –
பிரதிபந்தகங்களைப் போக்கி அரியது செய்த உனக்கு எளியது செய்யத் தட்டுண்டோ-
எங்களோடு சஜாதீயரிலே சிலர் நோன்பு நோற்றுப் பெற்றது
எங்கள் நோன்பு பலித்த படி அன்றோ -என்கிறார்கள் –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
பதவுரை
ஒருத்தி–ஒப்பற்ற தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–ஒப்பற்ற இரவில் (அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில்
(திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–ஒப்பற்ற யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;மகிழ்வோம் வினை முற்றி இங்கு
ஏல் ஓர் எம் பாவாய்–.
வருத்தம் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்து -மூன்றும் சொன்னபடி
ஒருத்தி மகனாய்–
ஒருவன் சாதன அனுஷ்டானம் பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளை பெற்றால் போலே
நால்வரும் கூடி தபஸ்ஸூ பண்ணி -(ஒருவனைப் பெற்றதாலே )
பேறு ஒருத்தியது யாகையாலே -ஒருத்தி -என்கிறார்கள் –
ஊழி முதல்வன் ஒருவனே
என்கிற வஸ்துவை வயிற்றிலே அடக்கப் பெற்றாள் ஒருத்தி இறே
ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 )
தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்
சர்வ வியாபகனுமாய்
நித்யனுமாய் இருக்கிற
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் )
சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே –
தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி
அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –
பிறந்து
சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால்
தூணிலே தோன்றினாலே போலே ஆதல் –
ஆனைக்கு உதவினால் போலே யாதல் –
வந்து உதவ அமைந்து இருக்க
ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து
உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்
பிறந்து
கர்ம வஸ்யர் படுவது எல்லாம் கிருபா பரதந்த்ரனாய் படுவதே -என்று
தீமதாம் அக்ரேஸர் -பிறந்தவாறும் -என்று ஆழங்கால் படும்படி யாய்த்து பிறந்தது
ஆவிர்பவித்தான் என்கிறது
கர்ப்பத்தில் தோஷ ஸ்பர்சம் இல்லை என்கைக்கா
நித்ய ஸூரிகள் அதிபதியாய் இருக்கிறவன் சம்சாரத்தில் பிறந்த இக் குணம்
இழக்க ஒண்ணாது என்று ரிஷிகளை போலே ஆவிர்பவித்தான் என்று
அவத்யம் சொல்லாதே
நிறம் பெறும்படி பிறந்தான் என்பார்கள் ஆழ்வார்கள் –
மகனாய் பிறந்து –
மகனாகை யாவது மாதா பித்ரு பரதந்த்ரனாகை இறே –
பெருமாள் பக்வரான பின்பு மாதா பித்ரு வசன பரிபாலனம் பண்ணினார்
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் திருத் தோள்களையும் மறைக்க வேணும் என்ன உப சம்ஹரித்தான் –
ஓர் இரவில்
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இறே
சம்சாரிகள் கீழ் -நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ருஹத்தில் ஓர் இராத் தங்க ஒட்டிற்று இல்லை –
சம்சாரிகள் பிறந்தால் பெறுவதுவும் பெறப் பெற்றது இல்லை –
நால்வர் இருவர் அறிந்து சோபனம் சொல்லி
தூரியம் கொட்டி
கண் கண்டு நெய்யாடல் போற்றப் (போத்தப்) பெற்றது இல்லை –
சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் நம்மோடே அவனுக்கு சாம்யத்தைக் கொடுக்கும் –
நாம் அங்கே சென்றால் அவனுடைய கிருபை அவனோடே பரம சாம்யத்தைத் தரும் –
இணைவனாம் எப்பொருட்க்கும் –(நாம் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )
தம்மையே ஓக்க அருள் செய்வர்–(அவன் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )
நம் பிறவி அவனை அகற்றும் –
அவன் பிறவி அணுகைக்கு உடலாம் –
அவன் பிறவி நமக்கு என்று கோல
நம் பிறவி அவனைப் பெற்றவர்கள் காலில் விலங்கு பட்டது படும் –
ஓர் இரவில்
கால க்ருத பரிமாணம் இல்லாத தேசத்திலே வஸ்து காலாதீனமான தேசத்திலே பிறந்து
ஓர் இரவில் பட்ட பாடு தான் என் –
வீங்கிருள் வாய் பூண்டு
இவ் விரவோடு ஒத்த இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை
ஒருத்தி மகனாய்
அங்கே பிறந்து
இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே
இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி
ஓர் இரவில் ஒருத்தி மகனாய்
அவ் விரவிலே யசோதை பிராட்டிக்கு பிள்ளையாக வேண்டுகையாலே
ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்
ஒருத்தி மகனாய்
அவ் விடத்தில் முலைச் சுவடு அறியாமல் போந்த படியால்
அழுது முலைப் பால் குடித்த இடம் இறே பிறந்த இடமாவது –
திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்
ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்
யாதவத்தையும் கோபவத்தையும் ஏக காலத்திலேயே யாக்கினான் –
யது குல உத்பவன் என்ற ரிஷி தானே
கோபாலன் யாதவ குலத்தை எடுக்கக் கடவன் என்றான் இறே
(விஷ்ணு புராணம் ஸ்லோகம் கோபாலன் யது குளத்தை தூக்கி வைத்தான் என்று சொல்கிறது
வராக கோபாலர் பூமி ஜென்ம உத்தாரணம் -நாயனார் )
அவளுக்கு முலை சுரவா நின்றதாகில்
இவன் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில் உமக்குச் சேதம் என் என்று பட்டர் –
யசோதை பிராட்டியாக பூதனை பாவித்து
இவன் உண்ணாத போது முலை விரியும்படியான தசையை யுடையாளாய்
பிள்ளையாக கொண்டு எடுத்து முலை கொடுக்க அது பெறா விடில் வயிறு ஆராத படியாய்
இவனும் முலை உண்ண-இவனை பிள்ளை என்று
அவள் விசுவசிக்க ஒண்ணாதே துணுக் துணுக் என்னும் படி இவளாக பாவித்து அவள் பக்கல் பரிமாறுபவன்
இவள் பக்கல் பிள்ளைத் தனத்தில் தப்ப நில்லானே –
மகனாகக் கொண்டு எடுத்தாள் இத்யாதி (இரண்டாம் திருவந்தாதி )
ஒருத்தி மகனாய்
அவள் இங்கே ஏற நியமித்து போக விட்ட மாத்ரம் –
இவள் காடு ஏறப் போ என்னலாம் படி இருக்கை –
கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -(பெரியாழ்வார் -3-2 )
அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா வான வஸ்து
இவள் கட்டவும்
அடிக்கவும் படி நியமிக்கலாம் படியாய்த்து இருப்பது –
மகனாய்
அங்கு பிள்ளையாய் பெற்றவளுக்கு யாய்த்து இழவு உள்ளது –
நந்தன் -பெற்றனன்-யசோதை பிராட்டியைக் கைப் பிடித்த பாக்யாதிகர் பெற்றார் –
என்னைக் கைப் பிடித்த முஹூர்த்தத்தாலே ஸ்ரீ வஸூ தேவர் இழந்தார்
மருவு நின் திரு நெற்றி (பெருமாள் திருமொழி )-திருப் பவளத்தில் முலையைக் கொடுக்கப் புக்கவாறே
திரு நெற்றியில் சாத்தின சுட்டியில் அசைவையும் முறுவலையும் கண்டு
தமப்பனாரைக் கொண்டான் என்று அகவாய் பணைக்கும்-
அந்த ப்ரீதியாலே தனக்கும் வாசி தெரிக்க ஒண்ணாத விரலை வாயிலே இட்டுக் கொண்டு
ஒரு வார்த்தை சொல்லும் போது பெரிய தேற்றத்தோடே தொடங்கின மழலைச் சொல்லும்
பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன் –
பாக்யவதியான அவள் பெற்றுப் பூர்ணை யானாள்
ஒருத்தி மகனாய்
கம்சன் முடிந்து பழை நாள் பட்டு இருக்கச் செய்தேயும்
இந்நாள் என்னாதே மறைத்து போருகிறார்கள் பொல்லாங்கு விளையும் என்னும் அச்சத்தால் –
அத்தத்தின் பத்தா நாள் -என்னுமா போலே
ஒருத்தி
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –
ஞாலத்தில் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை –
ஒளித்து வளரத்
பிறந்த இடத்தில் தோன்றப் பெறா விட்டால் –
போன இடத்தில் ஒளியாமல் தான் வளரப்பெற்றதோ
விஷ த்ருஷ்டிகளான பூதநாதிகள் கண் பட ஒண்ணாது என்று
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே நில வறைகளிலே இறே வளர்ந்தது –
வானிடைத் தெய்வங்கள் காண (பெரிய திருமொழி )-என்று
அனுகூலர் கண் உட்பட பட ஒட்டாதவள் பிரதிகூலர் கண் பட ஓட்டுவாளோ –
கன்றின் பின் போக்கில் என்று புறப்பட ஓட்டாள்
ஒளித்து வளர
உகப்பார் சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க கடவ வஸ்து
கண்ணுக்கு தோற்றாத படி மறைக்க வேண்டும் படி
கள்ளர் பட்டது படுவதே –
அவதரிக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது பட்டான்
ஒளித்து வளர
உள்ளே இருக்கச் செய்தேயும்
இவன் இல்லை என்று எழுதி எழுத்து இடுமவன் முகம் காட்ட சம்வதிக்குமோ-
பிச்சேறின பிரஜை முன்னே தாய் நிற்கிலும் கொல்லும்-
இவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொல்லும்
அப்படியே அவதரிக்கில் எதிர் இடுவார்கள் –
பரம பதத்தில் இருக்கில் அசத் கல்பர் ஆவார்கள்
அந்தர்யாமியாய் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கி
தெளிவு பிறந்து அம்மே என்றால் ஏன் என்கைக்கு பதிக்கிடைக் கிடக்கிறபடி –
ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்-தான்
நாரதாதிகள் சென்று உன்னுடைய சத்ரு திருவாய்ப் பாடியிலே வளரா நின்றான் -என்று
சொல்லக் கேட்ட மாத்திரத்தில்
நம் கண் வட்டத்தில் இல்லையாகில் அவன் என் செய்யில் என் என்று இராதே
சதுரங்க பல உபேதனாய் ஐஸ்வர்யத்துக்கு ஹானி இன்றிக்கே இருந்தோம் ஆகில்
வந்த அன்று பொருகிறோம் என்று ஆறி இராதே தரிக்க மாட்டிற்று இலன்
அஸஹ்ய அபசாரமாவது
பகவத் பாகவத விஷயமாக அவர்கள் சத்தையும் பொறாது ஒழிகை இறே
கம்ச வதத்து அளவும் அனுசந்திக்கிறவர்கள் ஆகையால்
மேலே படப் புகுகிற பாட்டை அனுசந்தித்து ஸூத்ரனான பையில்
தானே சிம்ஹத்தோடே நரி எதிர் இடுமா போலே எதிர் இட்டவன் சிறுமையைச் சொல்கிறார்கள்
தீங்கு
பரிய வேண்டும் விஷயத்தில் பொல்லாங்கை நினைப்பதே –
என்ன துஷ் ப்ரக்ருதி தான்
இன்னது என்று தன் வாயால் சொல்ல மாட்ட்டாமையாலே தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும் –
வில் விழவுக்கு என்று அழைத்ததும்
நலியத் தேடின எல்லா வற்றையும் நினைத்து –
நினைந்த
இதுக்கு மனஸ் சஹகாரம் உண்டாவதே –
சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி
யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே
நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்
தீங்கு நினைந்த
தீய புந்திக் கஞ்சன் இறே-
கருத்தைப்
அம்மானாய் –
கண்ண நீர் விழ விட்டு இருக்க –
நினைத்த அபிப்ராயத்தை –
பிழைப்பித்துக் –
அவன் நினைவை
அவன் தன்னோடே போம் படி பண்ணி
கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற
கிருஷ்ணன் என்றால் வயிறு எரிதலோடே இருக்கக் கடவ பெண்களுடைய பயத்தை
எல்லாம் அவன் வயிற்றிலே யாக்கின படி
கஞ்சன் வயிற்றில்
கம்சனுடைய தப்புக்களை நினைத்து –
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் –(பெரியாழ்வார் -3-3 )
வாழ கில்லேன் வாசுதேவா –
ஊடுற என்னுடைய ஆவி வேமால் -என்கிற
ஆஸ்ரிதருடைய பயாதிகளை எல்லாம் கம்சன் வயிற்றிலே கொளுத்தினான்
கஞ்சன் வயிற்றில்
தேவகி வயிற்றில் பிள்ளை –
கம்சன் வயிற்றில் நெருப்பு
நெருப்பன்ன
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -(பெருமாள் -7-10 )
தேவகியார் வயிற்றில் நீரைச் சொரிகிறவன் காணும்
கம்சன் வயிற்றில் நெருப்பைச் சொரிகிறான்
நெருப்பன்ன நின்ற
கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு உருவன்-
நெருப்பென்ன நின்ற
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியில் அனுபவித்து அறும் படி நின்ற நிலை
நெடுமாலே
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹத்தாலே
நெடுமாலே
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே
என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர
முலைப் பால் திரு மேனியில் பாய
அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை
அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி
வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –
(மாலும் நெடுமாலும் -தாய் மார் இடமும் கோபிகள் இடமும்
அடுத்த பாசுரம் மாலே )
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் அச்சோ ஒருவர் அழகிய வா (பாசுரம் -6)-என்று
இறே பெண்கள் பார்த்துக் கொடு நின்றது –
நாம் அவ்விடத்தில் அப்படி செய்த செய்த தீமை யுண்டு –
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன
யுன்னை அருத்தித்து
எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டாம் –
யார் வளர்ந்து காட்டவும் வேண்டாம் –
கொன்று காட்டவும் வேண்டாம் –
உன்னைக் காட்ட அமையும் –
உன்னை அருத்தித்து
உன் பக்கலிலே ஓன்று வேண்டி வந்தோம் அல்லோம் –
உன்னையே வேண்டி வந்தோம்
உன்னை அருத்தித்து
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் (2-7-11)-என்று
அர்த்தித்தவ நிரபேஷமாக அர்த்திகளையும் யுண்டாக்கி
உன்னையும் கொடுப்புதி இறே
உன்னுடைய உதார குணம் எல்லாம் அசத் கல்பமாக்கி
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாக வந்தது –
யார் அபேக்ஷித்து
(வேண்டித் தேவர் இரக்க நீயே அன்றோ உன்னைப் பிரார்த்தித்து வேண்டி வந்தாய் )
நெடுமாலே உன்னை அருத்தித்து
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
வந்தோம்
எங்கள் மிகைச் செயல் கண்டாயே –
உன் வ்யாமோஹம் எல்லாம் அத்வேஷம் என்னும் படிக்கு ஈடாய் நாங்கள் வந்தது
வந்தோம்
எதிர் சூழல் புக்கு –
ஆள் பார்த்து உழி தருகின்றாய் –
ஆயர் குலத்தினில் வந்து தோன்றின உன் வியாமோஹம் எல்லாம்
நாலடி இட்டு அசத் கல்பம் ஆக்கினோம்
பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்று சொல்வது –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்பதாய்
வியாஹதமாக வார்த்தை சொன்னி கோளே என்ன
பறை தருதியாகில்
எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில்
(ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )
தருதியாகில்
அவர்கள் அர்த்தித்தவம் அப்ரயோஜம் –
அவன் நினைவாலேயே பலம் என்கைக்காக
ஆகில் என்கிறது
இவன் எல்லாம் செய்தாலும்
அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே –
ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்
எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் என்று இறே சொல்வது
ஆகிறது நினைவு சுருக்கம் ஒழிய அறிந்தோம் –
வந்தபடி தான் என் –
வருகிற போது கிலேசித்தி கோளே என்ன
ஒரு கிலேசம் இன்றியிலே உகப்போடே வந்தோம் –
பிரிந்து இருக்கிற நீங்கள் உகப்போடே வந்த படி என் என்ன
திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு
மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –
திருத் தக்க செல்வமும்
செல்வச் சிறுமியரான இவர்களுக்கு செல்வம் தக்காப் போலே
போதமர் செல்வக் கொழுந்தான -பெரிய பிராட்டியாருக்கு தகுதியாய்
இருக்கும் செல்வத்தினால் வளர் பிள்ளையுடைய செல்வம்
சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே
செல்வமும் சேவகமும்
ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் –
கப்பம் தவிர்க்கும் கலியே-(சேவகமும்)என்றதுவும்
யாம் பாடி
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –
புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே
வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து –
கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம்
பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே
அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 )
உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல்
விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )
வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –
ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது
பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
இசை மாலைகளில் ஏத்தி மேவப் பெற்றேன் (திருவாய் 4-5-2)
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –(திருவாய் 4-5-3)
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம்-
(ராஜகுமாரனுக்கு முடி சூட்டி பின்பு சிறையில் இருந்து விடுவிக்குமா போல் )
விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —
பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply