மாற்றார் உனக்கு வலி தொலைந்து -என்று போக்கற்று வந்த படி இறே சொன்னார்கள் –
இன்னமும் இவர்கள் வாய் அறியக் கடவோம் என்று கிடந்தான் கிருஷ்ணன்
இப்படியே எங்களை நீ நினைத்து இருக்கிற படி –
இங்கேயே புகல் இன்றியே ஒழிந்தாலும் வேறு போக்கிடம் இல்லாத படி
அநந்யார்ஹைகளுமாய்
எங்களுக்கும்
பிறருக்கும் ஆகாத படியாய் வந்தோம் –
இனி கடாக்ஷித்து அருள வேணும் என்கிறார்கள் –
பரித்யக்தா –
புத்ராம்ச தாராம் ச -என்று
அனுகூலராய் இருக்கச் செய்தேயும்
இவர்களிலும் அண்ணி யராக-(நெருங்கியவராக ) இருந்தபடி இது வன்றோ என்று
இவர்களும் அப்படியே யாகக் கூடும் என்று –
ராவண சம்பந்தம் உள்ளதடங்கலும் விட்டு
பகவத் கதம் என்று ஓர் இடத்திலே பாரதந்தர்யம் கிடவாத போது எல்லாம் பெற்றாலும்
பலவாய்த் தண்ணிய வற்றை தின்று தேட வேணுமோ என்று பொகட்டுப் போந்தேன்-
அநுஜோ ராவணஸ்யாஹம் தேந சாப்யவமாநித: ।
பவந்தம் ஸர்வபூதாநாம் ஸரண்யம் ஸரணாகத: ॥
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி வை ।
பவத்கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸுகாநி ச ॥
தேவர் அங்கீ காரம் பெற்றிலேன் ஆகிலும்
விட்டுப் போந்த இடத்துக்கு ஆகாத படி வந்தேன் என்று விபீஷணன்
விண்ணப்பம் செய்தால் போலே
பிறந்தகத்துக்கும் ஆகாதபடி வந்தோம் என்று
தங்கள் அநந்யார்ஹத்வம் தோற்ற விண்ணப்பம் செய்கிறார்கள் –
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-
பதவுரை
அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
செய்த உவமை உறுப்பில் போன்ற என்ற அர்த்தம்
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப்போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?-பிரார்த்தனை இல்லை மநோ ரதம்
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதியேல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்-
சாபம் -அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாபம்
இழிந்து–கழிந்துவிடும்’
ஏல் ஓர் எம் பாவாய்
அங்கண் மா ஞாலத்து அரசர்
இங்கு வந்தார் உன்னில் குறைந்தார் உண்டோ –
ஈஸ்வரஸ் சர்வ பூதா நாம் (கீதை )என்று நீ இருக்குமா போலே –
நாங்களும் ஈஸ்வரோஹம் என்று
தனித் தனியே இருக்குமவர்கள் அன்றோ –
உன்னில் ஒரு சுற்றுக் குறைய நின்ற இடம் உண்டோ –
இத்தால்
ஈரரசு தவிர்ந்து வந்த படி பார்த்திலையோ –
ஸ்வத்தவ ஸ்வாமித்வங்கள் இரண்டு தலைக்கும் வியவஸ்திதம் ஆனால்
ஸ்வாமித்வம் உள்ள இடத்தில் ஸ்வாதந்தர்யமும்
ஸ்வத்வம் உள்ள இடத்திலே பாரதந்தர்யமும் கிடவாத போது
ஸ்த்ரீக்கு மோவாய் எழுந்தால் போலேயும் புருஷனுக்கு முலை எழுந்தால் போலேயும் இறே இருப்பது
இப்படி ஸ்வரூப விருத்தமான அபிமானத்தை கழித்து அன்றோ நாங்கள் வந்தது –
அம் கண் ஞாலத்து அரசர்
அம் -என்று அழகு –
கண் -என்று இடம் –
அழகிய ஸ்தான விசேஷங்களை யுடைத்தாய் இருந்துள்ள
மஹா பிருத்வியை தங்களது என்று அபிமானம் பண்ணி இருக்கிற ராஜாக்கள் –
அங்கண்
என்ற இடத்தால் -போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை
ப்ரஹ்மாதி பீபீலிக அந்தமாக தம் தாம் அளவிலே அபிமானம் பண்ணி இருப்பது
இனி ப்ரஹ்மா அஹம் என்றால் அவன் அளவில் நிற்குமா போலே
சிற்று எறும்பு அஹம் என்றால் அது தன் அளவிலே நிற்கும்
அவன் நான் என்றத்தோடு
இது நான் என்றத்தோடு வாசி இல்லை –
தத் வியதிரீக்தக்கள் அடைய நான் என்றால் ஆக்கனுமாய்-
அத்தனையும் துக்க ஹேதுவுமாய் இருக்கும் –
யாவது குருதே ஐந்து சம்பந்தான் மனச ப்ரியான் தாவன் தோஸ்ய நிகந்த்யந்தே
ஹ்ருதயே சோக சங்கவ-என்று சொல்லிற்று இறே
வேதாந்தங்களிலே ப்ரஹ்மாதிகளும் கூட ஏழு ஜென்மம் ஜனித்து
அரிய சாதன அனுஷ்டானங்களைப் பண்ணி
பின்பு பகவத் பிராப்தி ரூப புருஷார்த்தம் பெற்றவர்களாக சொல்லா நின்றது இறே
இவ் வருகே எத்தனை யேனும் கீழாய் இருப்பார் சிலர்
சரீர அவசான காலத்திலேயே மோக்ஷம் கிடைக்கும் என்று
பொதி சோறு கட்டிக் கொண்டு இரா நின்றார்கள் –
இவை இரண்டும் சேர விழுந்தபடி எங்கனே என்று பட்டரைக் கேட்க –
ஒரு குறை இல்லை என்று அருளிச் செய்தார் –
அவன் தன் விபூதி அளவும் செல்ல பச்சை இட்டுப் பெறக் கடவன் என்று கோலக் கடவன் –
யதோ உபாசனம் பலமாகையாலே
தத் க்ரது ந்யாயத்தாலே அப்படியேயாய் இருக்கும் அவனுக்கு –
இவன் தன் பக்கல் ஒன்றும் இல்லாமையை அனுசந்தித்து
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து நீயே எனக்கு கடவையாக வேணும் என்று காலிலே விழும் –
அவனும் அப்படியே தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு
இவனைப் பார்த்து இருக்க வேண்டாத படி தலைக் கட்டிக் கொடுக்கும்
அவனுக்குத் தான் கோலின பரப்பு அடங்கலும் விட வேணும் –
இவனுக்கு இவ்வளவு இறே விட வேண்டுவது
அவன் அனுஷ்ட்டிக்க கடவை எல்லாம் அனுஷ்ட்டித்து பின்பு பலம் தரப் பார்த்து இருக்கும் –
ஈஸ்வரனை இறே இவன் முதலிலே பற்றிற்று
மா ஞாலத்து அரசர் அபிமான
மஹா பிருத்வியில் பரப்பு எல்லாம் என்னது என்று அபிமானம் பண்ணுகை —
பதிம் விஸ்வஸ்ய -என்று ஓதப்படுகிற ஈஸ்வரனை அநு கரிக்கிறார்கள் இறே இவர்கள் –
யாவரும் யாவையும் தானாம் அமையுடை நாரணன் -என்கிற பதத்தை
அநு கரித்த பவுண்டரீக வாஸூ தேவனைப் போலே
அபிமான பங்கமாய்
ராஜ்யங்களை இழந்து எளிவரவு பட்டு அபிமான ஸூன்யராய்-
ராஜ்யன் நாம மஹா வியாதி -அசிகித்சோ விநாசந-தச வேஸ்யா சமோன் ரூப –
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் (4-1-1)-என்று
ராஜ்யத்தில் அபிமானம் அநர்த்தாவஹம் என்று இறே ஞானாதிகருடைய பிரதிபத்தி
வந்து –
கானகம் போய் என்று காடு பாய்ந்து திரியாதே (4-1-2)
உஜ்ஜீவன ஹேதுவான இடத்தில் வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே
அந்த ராஜாக்கள் தோற்று தங்கள் சத்ருக்கள் கட்டில் கீழே என்ன வேண்டாவோ –
நின் பள்ளிக் கட்டில் கீழ் -என்பான் என் என்னில்
உபமேய வஸ்து இவன் அல்லது இல்லை என்னும் ப்ரஸித்தியாலும் –
யத் யத் விபூதி மத் சத்வம் (கீதை ) என்று சொல்லப் படுகிற
விபூதி பூதர்க்கு விபூதிமான் வாசல் புகலாகையாலும்-
பஃன அபிமானர் புகும் வாசல் ஆகையாலும்
சர்வ லோக சரண்யன் வாசலே புகல் என்னும் தங்கள் வாசனையால் சொல்லுகிறார்கள்
நின்
எங்கேனும் வழி பறி யுண்டாலும் ராஜாவின் வாசலிலே கூப்பிடுமா போலே –
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் –
என்ற பிரமாணம் சொல்லப் படுகிற உடையவன் இருந்த இடத்திலே வர வேணும் இறே
(உனது அழகால் எங்களது ஸர்வத்தையும் வழி பறித்தாய் நீயே அன்றோ
ஆடி ஆடி இத்யாதி -அடியார்கள் உடன் சேரப் பெறாமையால் நரசிங்கா என்று கூப்பிட்டாள் பராங்குச நாயகி )
கோவாகி மா நிலம் காத்த (பூதத்தாழ்வார் )
இவனோடு சம்பந்தி சம்பந்தம் உடையாரை பற்றினவர்கள் இறே ராஜாக்கள் ஆகிறார்கள் –
(முடியுடை மன்னரைக் காணில் திருமால் அம்சம் என்பார் பராங்குசர் )
சங்கம் இருப்பார் போல்
அந்த ராஜ்யங்களைக் கொடுத்து போங்கோள் என்றாலும்
பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா வென்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே திரள் திரளாக வந்து ஓலக்கமாக இருப்பவர்களை போலே –
(தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து உன் தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி
எங்குப் போய் உய்வேன் உன் இணை அடி அல்லால் )
பள்ளிக் கட்டில் கீழே
வெளியிலே வேளாளராய்த் திரியில் தலையிலே முடியை வைப்பார்கள் என்று
ராஜ்ஜியம் பண்ணுகைக்கு முசித்து (வருந்தி )
அந்தரங்கமான ஓலக்கத்திலே சேவிக்கிற படி –
பஃன அபிமானர் ஆனாலும்
அரதிர் ஜன சம்சதி (கீதை )-என்கிறபடியே
ஆளற்ற இடத்தில் விவிக்த சேவை பண்ணினால்
ஸ்ரீ பரத ஆழ்வான் தனி இருக்கையிலே ராஜன் என்பார்-
வஞ்சித்தாச் சாபி தே வயம்-என்பார் -(குகன் அதிசங்கை )
கச்சின்ன துஷ்டோ வ்ரஜஸி-என்பாராய்க் கொண்டு (பரத்வாஜர் அதிசங்கை )
கண்டார் அலைக்க
அவர்களுக்கு சூழ்த்துக் கொடுத்து
தன் பக்கல் அபிமான தோஷம் இல்லாமையை வெளியிட வேண்டிற்று இறே
இளைய பெருமாள் படுக்கைத் தலையில் பிரியாமையாலே
அவை ஒன்றும் கேட்க வேண்டிற்று இல்லை இறே
போல் வந்து தலைப் பெய்தோம்
இந்த ராஜாக்கள் க்ரம ப்ராப்தமான ராஜ்யாதிகளையும்-
தங்களுடைய அபிமானங்களையும் விட்டு
உன் பள்ளிக் கட்டில் கீழே படு காடு கிடக்குமா போலே
நாங்களும் ஒரு ப்ரஹ்ம அபிமானத்தோ பாதியும் போந்து இருக்கிற ஸ்த்ரீத்வ அபிமானத்தையும்
பந்துக்களுடைய நிரோதத்தாலே கிருகங்களை விட்டுப்
புறப்பட ஒண்ணாத அருமையையும் வேறு உண்டான போகங்களையும் விட்டு
அம்புக்கு தோற்றாரோ பாதி
உன் அழகுக்குத் தோற்று வந்து புகுந்தோம் –
வந்து தலைப் பெய்தோம்
அந்த ராஜாக்களை போலே நாங்களும் அநாதி காலம் பண்ணிப் போந்த
தேகாத்ம அபிமானத்தாலே இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்
நிர்ஹேதுகமாக கிட்டப் பெற்றோம் என்று
யாதிருச்சிக சங்கதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
நாங்கள் அகன்ற தூரம் வந்த அருமையையும் பாராய் –
த்ரவ்யமாய் இருக்கச் செய்தேயும் குண ஜாதிகள் போலே பகவத் பிரகார பூதனாய்
ப்ருதக் ஸ்திதி யாதல்
ப்ருதக் உபலம்பமாதம் ஆதல் உடையன் அன்றிக்கே
கௌஸ்து பத்தோ பாதி அத்தலைக்கு அதிசயத்தை விளைத்து
ஸ்வரூப லாபமாகக் கடவ சேதனன்
அநாதி கர்மம் அடியாக அத்தை இழந்து –
அசித் ஸம்ஸ்ருஷ்டனாய் தனக்கு பிரகாரமான சரீரத்தை
தேவோஹம் மனுஷியோஹம்-என்று தானாக புத்தி பண்ணி –
சரீர சம்பந்த நிபந்தமான ஸூக துக்கங்களுக்கு போக்தாவாய்
ஸ்தாவரங்களோடு ஓக்க அசித் சமனாய் –
ஷிபாமி -என்று ஈஸ்வரனும் வெறுக்கும் படி -கை கழிய அகன்ற இவன்
யாதிருச்சிகமாக பிறப்பதொரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் கடாக்ஷத்துக்கு யோக்யனாய்
அனந்தரம்
தேஹாத்மாக்கள் உடைய ஸ்வரூபத்தை விவேகித்து –
தேஹாத்ம அபிமானத்தை விட்டு
ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்தர்யத்தையும் விட்டு
ஈஸ்வரனுக்கு சேஷம் என்றும் –
புருஷார்த்தம் அவன் என்றும் –
ருசி விளைந்து –
அது பெறுகைக்கு அடியான உபாயமாகவும் –
அவன் தன்னைப் பற்ற விளம்பம் பொறாத படி த்வரை விளைந்து
திருவடிகளில் வந்து கிடக்கும் அளவாய் விட்டது இறே
ப்ராஹ்மண பிரஜை வேடருடைய கிருஹத்திலே பால்யத்திலே அகப்பட்டு
புத்தி வ்ருத்திகள் அவர்கள் படியாய் நடந்து செல்லா நிற்க
ஸூஹ்ருத விசேஷத்தாலே மாதா பிதாக்கள் முன்னே வந்து நிற்குமா போலே
வந்து தலைப் பெய்தோம்
மாறி மாறி அந்தாதியாக -அநாதியாக -பல பிறப்பும் பிறந்து
அதுவே திருவடிகளை அடைகைக்கு ஹேதுவாய்
சிரா யமே கூல மிவாசி லப்த–(ஸ்தோத்ர ரத்னம் -24-)
மன்யே ப்ராப்தாஸ் மதம் தேசம் பரத்வா ஜோயம் அப்ரவீத் –
வாநராணாம் நராணாம் ச –
தேவ்யே வம்ச மஜாயதே –
நணுகினம் நாமே –
வித்ருசமான விது சங்கதமாகப் பெறுவதே
நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||(ஸ்தோத்ர ரத்னம் -24-)
தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.
இலனது வுடையனி தென நினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.
வந்து தலைப் பெய்தோம்
வந்து எங்கும் தலைப் பெய்வன் (7-6)-என்கிற இழவுகள் தீர்ந்து
எல்லாரையும் எழுப்பிப் பட்ட வியசனம் எல்லாம் தீர
ஒரு படி வந்து கிட்டப் பெறுவதே
பெண்காள்-எல்லாம் சபலம் ஆயிற்றே –
இனி ஒரு குறைகளும் இல்லையே என்ன –
பிராப்தி பலம் பெற வேண்டாவோ என்கிறார்கள்
கிங்கிணி வாய்ச் செய்த
அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –
இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –
கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-
காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே
இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று
செங்கண்
உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் –
உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே
தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது
வாத்சல்யத்தாலே வந்த குதறுதல் இல்லையே அதுக்கு –
சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இறே –
பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
(அருகில் ஓக்கலையில் –உச்சியில் வந்தானே –
சாத் மிக்க சாத் மிக்க –
பொலிந்து நின்ற பிரான் திரு முடி சேவை பிரசித்தம் )
சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம்
காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்
எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே
எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே
கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ –
அதுக்கு வந்தது என் என்ன
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்
திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் –
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் –
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –
திங்களும் ஆதித்யனும்
1-விரஹ தாபம் போக்குகைக்கும்
2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி –
சந்த்ரமா மனசோ ஜாத சஷோ ஸூர்ய அஜாயத -என்று
சந்த்ர ஸூர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இறே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய்
க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார் கால ஆதித்யனும் அன்றே
அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –
(ஆகவே அம் கண் என்று விசேஷணம் இட்டு அவற்றையே சொல்கிறார் )
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே –
இரண்டும் -என்று சொல்கிறார்கள்
எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே
எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –
1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்
2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்
சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6)
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி
தோற்றக் கேடு அவை இல்ல வன்உடை யான்அ வன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடு அருள் பெற்ற வன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.(திருவாய்மொழி 3-6-6 )
ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர்
குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -(திருவாய்மொழி-3 -5 -2-)
விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை
நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்
எங்கள் மேல் சாபம் இழிந்து
யாதநா சரீரம் போலேயும்
சாப உபஹதரைப் போலேயும்
உன்னைப் பெறாதே வியசனப் படுகிற துக்கம்
எங்கள் மேல் சாபம்
பிறருடைய சாபம் உன் கடாக்ஷத்தாலே தீரும் –
எங்களுடைய சாபம் நீ போக்குதல் அனுபவித்து விடுதல் செய்யும் அத்தனை
விஸ்லேஷ வியசனம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்கிறது –
1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –
2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்
3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –
4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்
எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –
1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )
2-எங்கள் மேல் நோக்க வேணும்
3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)
4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்
(நான்குக்கும் அழகாக பிரமாணங்கள் காட்டி அருளும் அழகு )
சாபம் இழிந்து நோக்குதியேல் –
வந்து தலைப் பெய்தோம்
எம் மேல் விழியாவோ –
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply