புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்ப –
அவள் உணர்ந்து எழுந்திருந்து நான் உங்களில் ஒருத்தி அன்றோ
உங்கள் கார்யங்கள் எல்லாம் மகிழதாகச் செய்து தருகிறோம் –
நம்மைப் பற்றினார்க்கு ஒரு குறைகள் உண்டோ
நாம் எல்லாரும் கூடி கிருஷ்ணனை எழுப்பி அர்த்திக்க வாருங்கோள் என்ன –
அவன் குணங்களில் தோற்றார் தோற்ற படியே சொல்லி
யுகாவாதார் அம்புக்குத் தோற்று வந்து விழுமா போலே
அஹமஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்ற இளைய பெருமாளை போலே
குணங்களுக்குத் தோற்று வந்தோம் என்று சொல்லி
கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்
யுகாவாதார் உன் வீரத்துக்குத் தோற்றால் போலே
உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்றபடி-
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
பதவுரை
ஏற்ற கலங்கள்-(கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை
எதிர் பொங்கி-எதிரே பொங்கி
மீது அளிப்ப-மேலே வழியும்படியாக
மாற்றாத-இடை விடாமல்
பால் சொரியும்–பாலைச் சுரக்கின்ற
வள்ளல்-(பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய
பெரு பசுக்கள்-பெரிய பசுக்களை
ஆற்ற படைத்தான் மகனே–விசேஷமாகப் படைத்துள்ள நந்த கோபர்க்குப் பிள்ளை யானவனே!
அறிவுறாய்-திருப் பள்ளி யுணர வேணும்’
ஊற்றம் உடையாய்-(அடியாரைக் காப்பதில் ஸ்ரத்தை யுடையவனே!-திருட பிராமண சித்தன்
பெரியாய்–பெருமை பொருந்தியவனே!-வேதங்களாலும் சொல்லி முடிக்க ஒண்ணாத பெருமை
உலகினில்-(இவ்) வுலகத்திலே
தோற்றம் ஆய் நின்ற-ஆவிர்பவித்த-சகல மனுஜ நயன விஷயாங்கதனே
சுடரே-தேஜோ ரூபியானவனே!
ஸுலப்யமும் பரத்வமும்
துயில் எழாய்-’
மாற்றார்–சத்ருக்கள்
உனக்கு வலி தொலைந்து–உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.)
உன் வாசல் கண்-உன் மாளிகை வாசலில்
ஆற்றாது வந்து-கதி யற்று வந்து
உன் அடி பணியும் ஆ போலே–உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல்
யாம்–நாங்கள்
புகழ்ந்து–மற்ற ஆழ்வார்களைப் போல் (உன்னைத்) துதித்து
போற்றி-பெரியாழ்வாரைப் போல் (உனக்கு) மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வந்தோம்-(உன் திரு மாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’
ஏல் ஓர் எம் பாவாய்-.
ஏற்ற கலங்கள்
உன்னை ஆராய் நினைத்து உறங்குகிறாய் –
உன்னை உணராய் –
ஷீராப்தி சாயி யாகவாதல் –
சக்கரவர்த்தி பிள்ளையாக வாதல் நினையா நின்றாய்
ஸ்ரீ நந்தகோபர் மகனாய் நினைக்கிறாய் இல்லையே உன்னை –
ஸ்ரீ நந்தகோபர் ஆர்ஜித்த ஐஸ்வர்யத்தை சொல்லுகிறார்கள்
ஸ்ரீ நந்த கோபருடைய ஸுர்ய வீர்யங்களும் (நாயகன் )
தார்மிகத்வமும் -(அம்பரமே )
புஜ பலமும் (ஓடாத தோள் வலியன் )
இறே கீழ்ச் சொல்லிற்று –
ஏற்ற கலங்கள்
இட்ட இட்ட கலங்கள் எல்லாம் எதிரே நிரம்பி வழியும் படி அனுசந்ததமாக
பால் சொரியக் கடவனாய் இருக்கும் பசுக்கள்
ஏற்ற கலங்கள்
கலமிடுவார் தாழ்வே –
இட்ட கலம் நிறையாதது இல்லை –
நாலாயிரம் இரண்டு ஆயிரம் என்ற ஒரு ஸங்க்யை இல்லை
ஏற்ற கலங்கள்
கலத்தில் சிறுமை பெருமை இல்லை –
கடலை மடுக்கிலும் நிறைக்கும் அத்தனை –
ஏலாத கலங்கள் நிறையாது ஒழி கிறது பாலின் குற்றம் அன்று இறே
கொடுப்பார்க்கு ஒரு கொள்வார் தேட்டமாய் இறே இருப்பது –
(கடாயில் பாயாசம் குருவாயூரில் யானைக்காலால் தேய்க்க வேண்டும் படி பெரியதாக இருக்கும் –
அவ்வளவு பெரிதாய் இருந்தாலும் சொரிந்து வழியுமே )
இவையும் கிருஷ்ணன் படியாய்த்து இருப்பது –
அர்த்தியார் குற்றமேயாய் அவன் பக்கல் குறை இல்லையாய் இருக்குமா போலே
உதார -என்று அர்த்தித்த பாத்திரங்களை கொண்டாடி இறே இவன் உபகரிப்பது-
அர்த்தித்தவம் தான் உபாயம் ஆகாதோ என்னில்
இவனுடைய தாதர்த்யம் ஸ்வரூபத்தில் புகுமா போலே
இதுவும் (அர்த்தித்தவமும் ) ஸ்வரூபத்தில் புகும் அத்தனை –உபாயத்தில் புகாது
(லுப்த சதுர்த்தி அர்த்தம் -அநந்யார்ஹ சேஷ பூதன் –
அவன் பிரயோஜனத்துக்காகவே இருப்பது
இது ஸ்வரூபத்தில் சேரும் -அதே போல் இங்கும் )
அங்கனே யாகில்
அர்த்தித்தவம் தான் வேணுமோ என்னில்
முக்தன் ஆனாலும் ( அர்த்தித்தவம் )இல்லை யாகில் போகம் தான் ப்ராப்யம் ஆக மாட்டாது
(அங்கும் அர்த்தித்தவம் உண்டே -அங்கே உபாய பாவம் வேண்டாமே –
ஸ்வரூபம் தானே -அதே போல் இங்கும்
கைங்கர்யத்துக்கு-பிரார்த்தனை – அங்கு தொடரும் )
சம்சாரத்தில் போகம் சாவதி யாகையாலே அர்த்தித்தவமும் அவ்வளவில் பர்யவசிக்கும் –
அங்கு நித்யமாகையாலே அது உருவச் செல்லும்
நித்ய அநபாய யானவளும் இறையும் அகலகில்லேன் என்று இறே
அங்கு இருப்பது
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் –
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–திருவாய்மொழி -9-3-4-
சதா பஸ்யந்தி இறே அவ்விடம்-
(பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா) நம இத்யேவ வாதின -என்றது இறே –
அவதரித்த இடத்திலும் இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற -என்னக் கடவது இறே
தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி விஷ்ணோ -பரஸ்ய ப்ரஹ்மண-பரமம் பதம் -சதா பஸ்யந்தி ..
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–
எதிர் பொங்கி மீதளிப்ப
முலைக் கண்ணின் பெருமையால் ஒருக்கால் தொட்டு விட்டாலும் ஒரு பீறிலே கலத்தை நிறைத்து
வழிந்து போகா நின்றாலும் முலைக் கடுப்பாலே மேலே மேலே சொரியும் –
மாற்றாதே பால் சொரியும்-
இட்ட கலம் நிரம்பிற்று –
கலம் இடுவார் இல்லை என்னாக் கண் அடையாது –
ஊற்று மாறாதே பால் சொரியும் அத்தனை
பூய ஏவ மஹா பாஹோ -என்றும்
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் இதஞ்ச ச ச்ருணு மைத்ரேய -என்று
சொல்லக் கடவது இறே
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணு மே பரமம் வச–
யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா —- ৷৷10.1৷৷
ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று
நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே
வள்ளல் பெரும் பசுக்கள்
சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை அன்றிக்கே
தன் கார்யம் செய்ததாக உபகரிக்கும் படி உதார ஸ்வபாவமாய் இருக்கை –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் (3-9)-என்கிற
கிருஷ்ணனைப் போலே –
இத்தை நினைத்து இறே –
உதாரா சந்தர்ச்யன் -என்று ஆளவந்தார் –
கொள்ளும் பயன்இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றுஎல் லாம்தரும் கோதுஇல்என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மினோ.–திருவாய்மொழி -3-9-5-
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராணரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –4 –
சிலர் அர்த்தியாய இருக்கச் செய்யாதே
வீடுமின் முற்றவும் என்று அருளிச் செய்தது
அத்தை நினைத்து இறே ஸ்ரீ மதுர கவிகள் –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்றது
(இன்ப மாரியான )வண் சடகோபரான இவரைப் போலவே
அருள் மாரியாகையாலே திரு மங்கை ஆழ்வாரும்
முந்துற யுரைக்கேன் (9-8)-
சொல்லுகேன் வம்மின் –
நமரும் உரைமின் -என்று அருளிச் செய்தார்
வள்ளல்
கிருஷ்ணனைப் போலவே பெண்ணுக்கும் பேதைக்கும் அணையலாம் படி
தன்னைத் தாழ விட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கும் பவ்யதையை சொல்லுகிறது
பெரும் பசுக்கள்
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளருமவை ஆகையால்
அவன் தன்னோடு ஓக்கப் பெருத்து இருக்கை –
பெரும் கண்ணன் -(திருவாய்மொழி -9-5-9)
மஹாத்மன –
பேரோதும் பெரியோர்-(பெரிய திருமொழி -7-4-4 )
வள்ளல் பெரும் பசுக்கள்
சிறு மா மனிசர் என்னுமா போலே
ஆற்றப் படைத்தான்
மிகவும் படைத்தான் –
குணா நாம ஆகரோ மஹான் –
குணா நாம யயுதைகமம்சம் –
யதா ரத்நா நிஜலதேர் அசங்கயே யானி புத்ரக-
ஈறில வண் புகழ் –
ஸமஸ்த கல்யாண குணாம் அம்ருதோததி-
அகில ஹேய ப்ரத்ய நீக-
அபரிமித குண கண ஓக மஹார்ணவ –
வர்ஷா யுதைர்யஸ்ய குணா ந சக்யா -என்று கிருஷ்ண குணங்களுக்கு எல்லை காணுதல் –
கண்ண பிரான் கற்ற கல்வி என்று
கிருஷ்ணன் தீம்புக்கு எல்லை யுண்டாதல்
அமர்யாத ஷூத்ரா-என்று
சம்சாரிகள் அனாத்மா குணங்களுக்கு ஸங்க்யை யுண்டாதல்
திரு நறையூரில் திரு வீதிகளில் முத்துக்களை எண் உண்டாதல் செய்யில் யாய்த்து
திருவாய்ப்பாடியில் பசுக்களுக்கு எண் உண்டாவது
கழி ஆருங்கன சங்கம்(பெரிய திருமொழி 6-9-2 )-கர்ப்பிணிகளை போலே
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-
கலந்து எங்கும் நிறைந்து ஏறி –
பெரிய திரு நாளிலே சர்வோதிகமாக வந்து ஏறுமா போலே
வழி யார முத்தீன்று –
சிலர் தார்மிகர் மனுஷ்யருக்கு சஞ்சரிக்கைக்கு உறுப்பாக
குறும் தெருவும் நெடும் தெருவும் கண்டு வைப்பார்கள் ஆனால்
இவை வழி போக ஒண்ணாத படி முத்தாலே நிரப்பி வைக்கும்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –
பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும்
ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே
பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே
கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே
(அந்த இரண்டுக்கும் இந்த இரண்டு
அவை இருந்த சொத்து இவை பிறந்து பெற்ற சொத்து )
மகனே அறிவுறாய்
உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை –
ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும்
உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
உனக்கும் எங்களுக்கும் உண்டான சம்பந்தத்தால் பெறில் பெறும் அத்தனை என்று
உன் தன்னைப் பிறவி பெறும் தனை -என்று அருளிச் செய்தாள் இறே
மகனே அறிவுறாய்
பரம பதத்தில் வந்தோமோ –
வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ
அறிவுறாய்
இவனுக்கு உணர்த்தி யுண்டானாலும் பலத்தில் விளம்பம் இல்லை –
வ்யபிசாரமும் இல்லை என்று இருக்கிறார்கள்
அறியாத போது இறே இத்தலைக்கு இழவும் வியசனமும் –
அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே
அறிவுடையார் கார்யம் ஒரு பரம சேதனன் கையது இறே
(சேதனனுக்கு அறிவின் பயன் தான் பாத்திரம் என்று இசைந்து அறிவித்தலே
பரம சேதனனுக்கு அறிவின் பயன் அறிவித்த சேதனனை ரஷித்தல் )
அறிவுறாய்
சர்வஞ்ஞனையும் உணர்த்த வேண்டும் படி இறே உள்ளுச் செல்லுகிறபடி –
கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைப்படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான
உபாய அந்நிய பரதையாலே எழுப்புகிறார்கள்
(உபாய அந்நிய பரதை-கண்ணன் தானே உபாயம் –
அவனது வேறு சிந்தனை இன்னும் கைப்படாதவர்களை கைக்கொள்ளுவதிலே நோக்கம் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
ஊருக்காக இல்லையோ -நாம் பிறந்து படைத்தோமாகச் சொன்னார்கள் –
இது ஒரு ஏற்றமோ என்று பேசாதே கிடந்தான் –
இனி அவ்வருகு இல்லை என்னும் படியான உத்கர்ஷங்களை சொல்லி எழுப்புகிறார்கள்
ஊற்றமுடையாய்
பிராமண தார்டயத்தால் வந்த
ப்ரேமயத்தினுடைய ஸ்தைரியத்தைச் சொல்லுகிறது –
புருஷ புத்தி ப்ரபாவங்களால் ஆனவற்றால் அன்றிக்கே –
அபவ்ருஷேயமாய்
நித்ய நிர்தோஷமான வேதத்தால் ப்ரதிபாதிக்கப் படுக்கையாலே
திருட பிராமண சித்தனாய் இருக்கை –
அப்ரமாணம் என்னுதல்
அனுமான பிரமாணம் என்னுதல் செய்ய ஒண்ணாது –
வசன ஆபாசங்களாலும்
உக்த் ஆபாசங்களாலும் அழிக்க ஒண்ணாது இருக்கை –
சர்வே வேதா யத் பதமாமநந்தி சர்வே வேதா யத்ரைகம் பவந்தி –
நதாஸ்ம வசசாம் பிரதிஷ்டா –
வசசாம் வாஸ்யம் உத்தமம் -(ஜிதந்தே )
நாராயண பரோ வேத –
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்-
வேத முதல்வன் (3-5 )
நான் மறைகள் தேடி ஓடும் செல்வன் –
நம்முடை நாயகனே என்று யசோதை பிராட்டி சீராட்டுகிற கிருஷ்ணன் இறே
பெரியாய்
அந்த பிரமாணங்கள் எல்லாம் சொன்னாலும்
தன்னுடைய அவதி காண ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு இருக்கிறவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –
யஸ்ய அமதம் தஸ்ய மதம் –
அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் என்றும்
பிரமாணங்களுக்கு-இவ்வளவு என்ன ஒண்ணாத படி இருக்கை –
உலகினில் தோற்றமாய் நின்ற
மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாத படி இருக்கும் என்று
ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே
எத்தனையேனும் தண்ணிய சம்சாரிகளுக்கும்
உபேஷா விஷயமான லோகத்தில் அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு
சாது பரித்ராணத்துக்காக-சம்பவாமி -என்று சொன்னபடியே அவதரித்து
எல்லாரும் காணலாம் படி சகல மனுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –
தோற்றமாய் –
ஆவிர்ப்பூதம் என்கிறபடியே
சுடரே
அல்லாதார் கர்ம அனுகுணமாக பிறக்கையாலே பிறக்கப் பிறக்க மழுங்குவர்கள் சம்சாரிகள் –
அவனுக்கு அனுக்ரஹ கார்யம் ஆகையால் பிறக்க பிறக்க ஒளி மிகா நிற்கும்
ஜென்ம சம்பந்தத்தால் கறை ஏறுகை அன்றிக்கே
சாணையில் இட்ட மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலமாகை
ச உஸ் ஸ்ரேயான் பவதி ஜாயமான –
மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் -பரம்பாவ மஜா நந்த -என்னும்படியான மனுஷ்யத்வே பரத்வம் சொல்கிறது
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே-என்னக் கடவது இறே
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே? ( 3-2 )
(பரம் சுடரே அழுக்கு உடம்பாய் -6-3)
அன்றிக்கே –
ஊற்றமுடையாய்
மஹா ராஜர் -வத்யதாம்-என்றால் –
நத்யஜேயம் கதஞ்சன-என்றும் –
தாமரையாள் ஆகிலும் சித குரைத்தாலும் -என்னடியார் அது செய்யார் என்றும்
ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிஞ்ஜையை –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்கிறபடியே
தன்னையும் தன் விபூதியையும் அழிய மாறியும் விடாதே நின்று தலைக் கட்டுகைக்கு ஈடான
ஆதாரத்தோடு நிற்கும் ஊற்றத்தைச் சொல்கிறது
பெரியாய்
ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும்
அது தான் தன் பேறாய் இருக்கையும் –
செய்யுமன்று தன் பெருமைக்கு ஈடாக இருக்கையும்
விரோதித்த மஹா ராஜர் தாமும் கூட கிமத்ர சித்ரம் -என்று கொண்டாடும்படியான பெருமை
விலக்கும் அளவு அன்றிக்கே
ஒழிந்தால் பின்னை கொண்டாடும் அத்தனை இறே
(கிமத்ர சித்ரம் வியப்பு இல்லை தர்மஞ்ஞ லோக நாதர் –
இதுவே உமது ஸ்வ பாவம் என்று கொண்டாடினான் )
(கிமத்ரசித்ரம் தர்மஞ்ஞா லோக நாத ஸூகாவஹ
யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா சத்த்வ வாந் சத்பதே ஸ்த்தித -18-36-
கிமத்ரசித்ரம்
எங்களைப் போலிகள் இப் பாசுரத்தைச் சொல்லில் அன்றோ ஆச்சர்யமாவது-
தேவரீர் இப்படி அருளிச் செய்த இடத்தில் ஆச்சர்யம் உண்டோ
ஸ்வ பாவம் என்று இருக்கும் அத்தனை அன்றோ
தர்மஞ்ஞா
பணையோடு பணை தத்தித் திரிந்த எங்களால்
தேவரீர் திரு உள்ளம் பற்றி இருக்கும் தர்மங்கள் எல்லாம் அறியப் போமோ
ஸூஷ்ம பரம துர்ஜ்ஜேய சதாம் தர்ம பிலவங்கம் -18-36-என்று
அருளிச் செய்த தேவரீருக்கு அன்றோ உண்மை தெரிவது
லோக நாத
உடைமை அழியாதபடி ரஷிக்கை உடையவனுக்கு ஏற்றம் அல்லாமையாலே-
சரணாகதனுக்கு அச்சம் தவிர்த்து ரஷித்தீர் –
எங்களை அபசாரம் தவிர்த்து ரஷித்தீர்
ஸூகாவஹ
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு அடிமை செய்யப் பெற –
நாங்களும் அவனுக்கு அடிமை செய்யப் பெற –
இரண்டு வர்க்கத்தையும் க்ருதார்த்தர் ஆக்கினீர்
சத்த்வ வாந்
இதற்கு முன் கண்டு அறியாத சரணாகதன் பக்கல் ஒரு தலையாக
பரிவர் சொன்ன உபபத்திகளுக்கும் நிர்பந்தங்களுக்கும்
இளையாத வ்யவசாயத்தில் திண்மை இருந்த படி என்
சத்பதே ஸ்த்தித –
ப்ருஹஸ்பதி சிபி ரகு வானர கபோத வசிஷ்ட விச்வாமித்திராதிகள் முதலான சத்துக்கள் நடந்த நல்வழியான
சரணாகத பரித்ராண தர்மத்தில் தேவரீர் நின்ற நிலை ஒரு கோடி சரணாகதராலும்
கலக்க ஒண்ணாதபடியாய் இருந்தது
யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா
தேவரீர் அருளிச் செய்த பாசுரத்தில் நிழலிலே ஒதுங்கி
புலியும் புல்வாயும் ஒரு துறையிலே நீர் உண்ணும்படியாய் இருந்தது )
உலகினில் தோற்றமாய் நின்ற
கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பக்ஷபாதம் உலகிலே பிரசித்தமாம் படி நிற்கை –
துரியோதனன் சிசுபாலன் உதங்கன் இவர்கள்
உட்பட சொல்லும் படி லோகத்தில் பிரசித்தமாம் படி இருக்கை –
களவு கண்டாய் -கட்டுண்டாய் என்பது
வ்ருஷள போஜனம் பண்ணினாய் என்று இகழ்வது
துரியோத நாதிகளை பொடி படித்தினாய் –
அர்ஜூனாதிகளை வாழ்வித்தாய் என்னும் படி பிரசித்தம் இறே
சுடரே
ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்
இன்னார் தூதன் என நின்றான்
நின்ற சுடரே
ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -என்னக் கடவது இறே
துயில் எழாய்
நீ இப்போது எழுந்திராமையாலே நீ பிறந்து படைத்த சம்பத்தும்
நீ ஆர்ஜித்த குணங்களும் மழுங்கக் கிடாய் புகுகிறது
நீ அவை சம்பாதிக்கப் பட்ட அருமை அறிவுதியே-
அவை நிறம் பெறும் படி திருப் பள்ளி யுணர்ந்து அருளாய்
ஆகிறது நாம் எழுந்து இருக்கிறோம் –
நீங்கள் வந்தபடி சொல்லுங்கோள் என்ன –
தாங்கள் வந்த செயல் அறுதி இருந்தபடிக்கு
த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறார்கள் –
மாற்றார் உனக்கு
உனக்கு சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குத் தோற்று போக்கடி இல்லாமையால்
வந்து விழுமா போலே
மாற்றார் உனக்கு
சத்ருக்களை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாலும் நோக்க ஒண்ணாத படி அநாதி காலம் கை கழிந்த படி சொல்லுகிறது
நாஸ்திக புரா–
யானே என் தனதே என்று இருந்தேன் –
மாற்றார் உனக்கு
நாராயணன் ஆகையால் சம்பந்தம் எல்லோரோடும் ஒத்து இருக்க
சேஷமாய் இருக்கிற ஆத்மாக்களில் சில சத்ருக்கள் உண்டோ என்னில்
பிராதி கூல்ய பரம்பரைகள் பண்ணி இடக்கை புரி முருக்கி விரோதித்து போருமவர்களை –
தானஹம் த்விஷத-என்னுமது
என்னுடைய ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணாதார் எனக்கு த்ரோஹிகள் என்பது –
பாகவத த்வேஷம் பண்ணுவாரை த்விஷத்துக்கள் என்பது
அவர்களை நிந்தை பண்ணுவாரை பொறேன்-என்பது ஆகா நின்றான் இறே
எங்களை அறியாயோ
நாங்கள் வருபவர்களோ
ஹிரண்ய ராவணாதிகள் போல் அன்றோ வந்தோம் நாங்கள்
மாற்றார் வலி தொலைந்து
வலி தொலைகையாவது –
ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஜை தவிர்க்கை
உன் வாசல் கண்
மிடுக்கு அழிந்து எளிமைப் பட்டு –
கச்ச என்ற இடத்திலும் அங்குப் புகுராதே தன் கோட்டில் ஏறப் போனான் இறே ராவணன் –
அப்படி அன்றிக்கே
உன் வாசல் கண் ஆற்றாது வந்து –
ப்ரஹ்மாஸ்திரம் விட வேண்டும் படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி
த்ரீன் லோகான் சாம் பரிக்ரமய-என்னும் படி அலமந்து
சபித்ரா ச பரித்யக்த -என்னும் படி
ஓர் இடத்திலே புகல் அற்று –
தமேவம் சரணம் கத -என்று பெருமாள் திருவடிகளில்
விழுந்த காகம் போலே உன் வாசலிலே வந்து உன் காலில் கீழே விழுந்தோம் –
அம்புக்குத் தோற்றாரோ பாதி
நாங்களும்
குணங்களுக்குத் தோற்று வந்தோம் –
ஆற்றாது வந்து
அம்பு பிடரி தள்ளாத தள்ள வருவாரைப் போலே
ஸுந்தர்ய குண பலாக்ருதைகளாய் வந்தோம்
அம்பு நற் கொலையாகக் கொள்ளும் –
குணம் உயிர்க் கொலையாகக் கொல்லும்-
வல் வினையேனை ஈர்கின்ற குணங்கள்
யாம் வந்தோம்
சத்ருக்கள் துர் அபிமானத்தாலே
ந நமேயம் என்று இருக்குமா போலே
தத் தஸ்ய சத்ருசம் என்று இருக்கும் நாங்கள்
எங்கள் செல்லாமையாலே வந்தோம் அத்தனை –
ஸ்வரூப ஞானம் வர ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாது
போற்றி
தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே –
போற்றுகை யாவது –
செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று திருப் பல்லாண்டு பாடுகை-
அல்லாதார் பாடுவது தம் தாம் பிரயோஜனத்துக்காக இறே –
நாங்கள் உன் சம்ருத்தியை ஆசாசிக்கும் படி அன்றோ வந்தது –
புகழ்ந்து
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்
இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –
எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது
போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –
அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –
நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்
நீ பெறிலும் பெறு
இழக்கிலும் இழ –
(அறிவித்தோம்
போற்றினோம்
புகழ்ந்தோம்
இதுவே சேதனனானதுக்கு பிரயோஜனம்
ப்ராப்தாவும்
பிராபகமும்
ப்ராப்திக்கு உகப்பானும் நீயே )
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply