ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
—————————————————————————————————————
இவனுக்கு சர்வாத்மாக்களும் சர்வ பிரகார பரதந்த்ரர் –அவர்கள் தான் தேஹாதி விலஷணர்-
—————————–
சார்வாக மத உபன்யாசம் –
நனு-ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று தேஹத்திலே அஹம் புத்தி வ்யவஹாரம் காண்கையாலே
அஹம் அர்த்த பூதனான ஆத்மா தேஹம் தானாம் அத்தனை –
இந்த அஹம் புத்தி வ்யவஹாரங்களுக்கு தேஹாதிரிக்தன் விஷயம் என்ன ஒண்ணாது –
அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே –
கட படாதிகளைப் போலே பார்த்திவமான சரீரத்துக்குச் சைதன்யம் கூடாதே என்னில் மத சக்தி போலே
பரிணாம விசேஷத்தாலே கூடும் இறே
நனு –பால யுவ வ்ருத்த சரீரங்கள் அந்யோந்யம் பின்னங்கள் என்று சொல்ல வேணும் —
ஏகமாகில் பரிணாம பேதங்கள் கூடாது –
பேதத்தை இசையில் பால்யத்தில் அனுபவித்தவற்றை யௌவனத்தில் ஸ்மரிக்கக் கூடாது –
கூடில் ஒருவன் அனுபவித்ததை மற்றையவன் ஸ்மரிக்க வேணும் -அது காண்கிறிலோம்-இங்கு ஸ்ம்ருதி காணா நின்றோம் –
ஆகையாலே ஆத்மா தேஹாதிரிக்தனாக வேணும் என்னில் அதுவும் அனுபபன்னம் -சரீர பேதம் இல்லாமையாலே
ஒருவன் தனக்கே கால பேதத்தாலே பரிணாம பேதம் கூடும் –
பால்யத்தில் துக்கித்த நானே யௌவனத்திலெ ஸூகியா நின்றேன் –
பாலனான நானே யுவாவானேன் -என்கிற பிரத்யபிஜ்ஞைகளாலே யுவ சரீரம் பழைய சரீரம் என்னும் இடம் சித்தம் –
அல்லாத போது பால்யத்திலே அனுபவித்ததை யௌவனத்தில் ஸ்மரிக்கக் கூடாது –
ஸ்ம்ருதி பிரத்யபிஜ்ஞைகள் அஹம் அர்த்தத்துக்கு அன்றோ
தேஹத்துக்கு அன்றே என்ன ஒண்ணாது -தேஹ வ்யதிரிக்தமாய் இருப்பதொரு அஹம் அர்த்தம் காணாமையாலே –
கிஞ்ச தேஹத்திலே நெடும் காலம் செல்லச் செய்தேயும் ச ஏவாயம் என்று பரனுக்குப் பிறக்கும் பிரத்யபிஜ்ஞையும் கூடாது –
பிரத்யபிஜ்ஞைக்கு விஷயம் தேஹாதிரிக்தன் என்ன ஒண்ணாது -அவன் சாஷூஷன் அல்லாமையாலே –
பிரத்யபிஜ்ஞ்ஞை பிராந்தி என்ன ஒண்ணாது -பாதகம் இல்லாமையாலும் –
விபஷே ஸ்மரண அனுபபத்தி யாகிற பாதகம் உண்டாகையாலும்
இப்படி தேஹத்தில் அஹம் புத்தி கொள்ளாத போது விதி நிஷேதமும்
அதினுடைய நிவ்ருத்த்யர்த்தமான சாஸ்திர ஸ்ரவணாதிகளும் கூடாது –
ஆகையாலே தேஹமே ஆத்மாவாம் இத்தனை என்னில் –
தத் கண்டனம் –
அது அனுபபன்னம் —
தேஹம் அநேக அவயவ சங்காத் மகம் என்னும் இடம் சித்தம் -அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் உண்டாகில்
அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும் -அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும் –
அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் -கூடாது –
ஒரு அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில் அது விச்சின்னம் ஆனால் அவயவாந்தரம் அது அனுபவித்ததை
அவயாந்தரத்திலே ஸ்மரிக்கக் கூடாது –
பின்பு அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதா புத்தி வ்யவஹாரப்ங்களும் தவிர வேணும் –
சர்வ சரீர வியாபியான ஸூக துக்க அனுபவமும் கூடாது –
அவயவ சங்காதாத்மகம் அன்று சரீரம் -அயவவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –
உபலம்ப அனுபபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே –
கிஞ்ச -பாலதே ஹோ அஹம் மந்த ஜ்ஞான –யுவதே ஹோ அஹம் பஹூ ஜ்ஞான மம சரீரம் –என்று
சரீர அஹம் அர்த்தங்களில் பிறக்கிற பேத பிரதிபத்தியும் பேத வ்யவஹாரமும் கூடாது –
மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதகம் இல்லாமையாலே –
அன்றிக்கே அஹம் புத்திக்கு சரீரமே விஷயம் என்று கொண்டாலும் ஸ்ருதியாலும் ஸ்ருத் யர்த்தா பத்தி களாலும்
தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –
பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரிய விஷயங்களையும் அறிகையாலே —
இப்படி கொள்ளாத போது யாவன் ஒருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் –
அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் என்கிற பிரதிசந்தானமும் கூடாது –
சஷூஸ்ஸே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும் –
ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பத்திரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்
இப்படி மற்ற இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –
—————————-
சங்கர மத கண்டனம்
அந்த கரணமும் ஆத்மாவாக மாட்டாது —
ஸ்மர்த்தாவினுடைய ஸ்மாரணாதி கார்யங்களுக்கு கரணமாகக் கல்பிதங்கள் ஆகையாலே –
இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது -ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே –
கரணமும் தானே என்ன ஒண்ணாது -விருத்தமாகையாலே –
வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணம் ஆகில் அது இல்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது
ஆந்தர கரணம் ஆகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேர் இட்டாதாய் விடும் –
ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்த்ரியார்த்த சம்பந்தம் உண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும் –
ஆகையால் மனஸ்ஸூ ம் ஆத்மாவாக மாட்டாது –
பிராணங்களும் ஆத்மாவாக மாட்டாது –
சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம் –
——————————
பௌத்த மத கண்டனம் –
ஜ்ஞானமும் ஆத்மாவாக மாட்டாது -எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது -என்று ஷணிகமுமாய்-
ஆத்ம தர்மமுமாய்த் தோற்றுகையாலே-
ஸ்திரனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்னும் இடம் நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் –
என்கிற பிரத்யபிஜ்ஞையாலே சித்தம்
————————————————-
இதுவும் சங்கர மத கண்டனம் –
நிர்விஷயையுமாய் -நிராஸ்ரயையுமான சம்வித்து ஆத்மா என்ன ஒண்ணாது –
அப்படி இருப்பதொரு சம்வித்துக் காணாமையாலே –
நனு -ஜ்ஞானம் ஆத்ம தர்மமாய் யன்று தோற்றுகிறது-
அந்தகரண ரூபமான அஹங்காரத்துக்கு தர்மமே யன்றோ தோற்றுகிறது -என்ன ஒண்ணாது –
அசேதனமுமாய்-பிரகிருதி பரிணாமமுமாய்-த்ருச்யமாய் -பராகர்த்தமுமாய் -பரார்த்தமுமாய் இருக்கையாலே
தேஹாதிகளைப் போலே அஹங்காரமும் ஜ்ஞாதாவாகக் கூடாமையாலே –
நனு –
சைதன்ய சந்நிதி யடியாக சாயாபத்தியாலே ஜ்ஞாத்ருத்வம் கூடுமே என்னில் அது கூடாது –
சைதன்யத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் கூடாமையாலே –
நனு ச -தர்ப்ப்பண ஜல கண்டங்கள் முக சந்திர கோத்வங்களுக்கு வ்யஞ்ஜகம் ஆகிறாப் போலே
அஹங்காரமும் சைதன்யத்துக்கு வ்யஞ்ஜகம் ஆகையாலே தன் நிஷ்டமாயத் தோற்றுகிறது என்னில்
ஸ்வயம் பிரகாசனான ஆத்மாவுக்கு ஜடமான அஹங்காரம் வ்யஞ்ஜகமாகை என்கிறது –
சாந்தாங்காரம் ஆதித்யனை பிரகாசிப்பிக்கும் என்றால் போலே இருப்பதொன்று
தர்ப்பணமும் ஜலமும் முகத்துக்கும் சந்த்ரனுக்கும் வ்யஞ்ஜகம் அன்று -சாஷூஷ தேஜ பிரதிபலனத்துக்கு ஹேது வித்தனை
அபிவ்யஞ்ஜகம் ஆலோகாதிகள் போலே -ஜாதி வ்யக்தி நிஷ்டையாய்த் தோற்றுகிறது வ்யக்திக்கு ஆகாரம் ஆகையாலே –
கிஞ்ச -சைதன்யத்தாலே வ்யங்க்யமான அஹங்காரம் அதுக்கு வ்யஞ்ஜகம் ஆகமாட்டாது –
ஆதித்ய கிரணத்தாலே அபி வ்யங்க்யமான கரதலம் அதுக்கு வ்யஞ்ஜகம் ஆகக் காணா நின்றோமே என்னில்
கர தலம் வ்யஞ்ஜகம் அல்ல -கிரண பாஹூள்யத்துக்கு ஹேது வித்தனை –
ஸூஷூப்தியிலும் முக்தி தசையிலும் அஹம் அர்த்தம் இல்லாமையாலும் அதுவும் ஆத்மாவாக மாட்டாது என்னில் –
அவற்றிலும் உண்டு –
ஸூ ஷூப்தியில் இல்லையாகில் உறங்கி எழுந்து இருந்தவன் -முன்பு நான் இத்தச் செய்தேன் -இத்தைக் கண்டேன் –
இத்தை அனுபவித்தேன் -என்று பராமர்சிக்கக் கூடாது
முக்தி தசையில் ஆத்மா இல்லையாகில் ஆத்ம நாசம் மோஷமாய் விடும் –
ஸ்வ நாசத்தையும் இசைந்து மோஷ உபாயத்தில் இழிவார் இல்லாமையாலே மோஷ சாஸ்திரம் அப்ரமாணமாம் –
மத்தஸ் சர்வமஹம் சர்வம் -என்றும் –
அஹமேக பிரதமமமாசம் -என்றும் –
அஹம் மனுரபவம் ஸூ ரிச்சா -என்றும் தத்வ ஜ்ஞானம் பிறந்த முமுஷுக்களும்
அஹம்,அன்னம் என்று முக்தனும் –
யஸ்மாத் ஷரமதீதோஹம்-என்றும் –
அஹமாத்மா குடாகேச -என்றும் –
நத்வேவாஹம் -என்றும் –
அஹம் க்ருதஸ் நஸய ஜகத -என்று பர ப்ரஹ்மமும் அஹம் என்று வ்யபதேசிக்கக் கூடாது –
அஹம் அர்த்தம் ஆத்மா வாகில்-மஹா பூதான் யஹங்கார-என்று ஷேத்ராந்தர்பாவம் கூடும்படி என் என்னில் –
அஹங்காரத்தை யாய்த்து அங்குச் சொல்லுகிறது -அஹம் அர்த்தத்தை யன்று –
அஹங்காரத்தை சாஸ்த்ரங்களிலே ஹேயமாகச் சொல்லா நின்றதே என்னில்
அங்குச் சொல்லுகிறது கர்வ ரூபமான அஹங்காரத்தை யாகையாலே அஹம் அர்த்தம் அஹங்காரம் அல்ல -ஆத்மாவே யாகையால் –
—————————————————————————
ஆத்ம நித்யத்வ சமர்த்தனம்
ஆத்மா தேஹாதி விலஷணம்-அவை போலே அநித்யன் அல்லன் –
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -என்றும் –
நித்யோ நித்யா நாம் சேதநஸ் சேதனா நாம் ஏகோ பஹூ நாம் யோ விததாதி காமான் -என்றும்
அஜோ நித்யஸ் சாஸவதோ அயம் புராண -என்று உத்பத்தி விநாச்யங்கள் இல்லை என்கையால்
நனு -பிரஜாபதி பிரஜா சதாயத நாஸ் சத்ப்ரதிஷ்டா -என்றும் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -என்றும் –
யதா பிரஸூதா ஜகத பிர ஸூ தீதே யேன ஜீவான் வ்யச ச சர்ஜ பூம்யாம் -என்று
உத்பத்தி விநாசங்களைச் சொல்லா நின்றதே என்னில்
அவற்றில் சொல்லுகிறது தேஹ சம்பந்தத்தையும் – தேஹ விநியோகத்தையும் –
நித்யன் ஆகில் சிருஷ்டிக்கு முன்பு ஏகத்வா வதாரணம் கூடாதே என்னில்
ஏகத்வம் ஆவது நாம ரூப விபாகா பாவம் ஆகையாலே கூடும் –
சம்ஹார தசையில் ஆத்மா இல்லை யாகில் ஈஸ்வரனுக்கு உபாதாநத்வம் கூடாது
அக்ருதாப்யா கம க்ருத விப்ரணாசங்களும் வரும் –
ஆகையால் ஆத்மா நித்யன்
———————————————————————
ஏக ரூபத்வ சமர்த்தம் –
அம்ருதாஷரம் ஹர -என்றும் –
ஆத்மா ஸூ த்தோஸ் ஷர -என்றும் –
ஏகம் சதேகம்-என்கையாலும்
அவை போலே உபசயாபசயங்களுக்கு அர்ஹன் அன்றிக்கே ஏக ரூபனாய் இருக்கும் –
——————————————————————–
ஜைனமத கண்டனம்
தேஹ பரிமாணன் என்கிற பஷம் ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் –
ச்தூலோஹம் க்ருசோஹம் பாதே மே வேதினா சிரசி மே ஸூ கம் என்கிற பிரதிபத்தியும் கூடாதே என்னில்
அது தேஹாத்மா பிரமத்தாலே கூடும் –
ஏக காலத்தில் அநேன சரீர பரிக்ரஹம் பண்ணுகிற யோகிகள் உடைய ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் பிரசங்கிக்கும் –
———————————————————————–
அஜடத்வ சமர்த்தம் –
இவன் ஸ்வரூபம் அவை போலே ஜடம் அன்றிக்கே –
ஹ்ருத்யந்தர்ஜ்யோதி புருஷ -என்றும் –
அத்ராயம் புருஷஸ் ஸ்வ யஞ்ஜ்யோதிர் பவதி -என்றும் –
விஜ்ஞாநகன -என்றும் –
தச்ச ஜ்ஞான மாயம் வியாபி ஸ்வ சம்வேத் யம நூபமம் -என்றும் –
ஆத்மா ஜ்ஞானமய -என்றும் –
ஆத்ம சம்வேத்யம் தஜ்ஞானம் என்கிறபடியே ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும் –
ஸ்வயம் பிரகாசமாகை ஆகிறது -ஜ்ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை-
நனு -ஸ்வரூபமும் நித்யமுமாய்த் தானே தோற்றுமாகில் ஸூஷூப்தியிலும் தோற்ற வேண்டாவோ என்னில் –
அப்போது தோற்றாதாகில் உணர்ந்த போது -இத்தனை போதும் ஸூகமாக உறங்கினேன் -என்னக் கூடாது –
நனு -நான் ஒன்றையும் அறிந்திலேன் -என்னும்படி என் என்னில் –
அறிந்திலேன் என்கிறது -என்னை ஒழிந்தவற்றை அறிந்திலேன் என்றபடி –
நான் என்னையும் அறிந்திலேன் என்றாலோ வென்னில் என்னையும் அறிந்திலேன் என்கிறது
சரீர விசிஷ்டனான என்னையும் அறிந்திலேன் என்றபடி –
ஸ்வரூபம் பிரகாசித்தது இல்லையாகில் நான் என்னக் கூடாது –
அயமஹமச்மி -என்று இவ்வர்த்தத்தை ஸ்ருதியும் சொல்லிற்று –
அப்போது விசதமாக தோற்றாது ஒழிகிறது-தமோ குணாபிபத்தாலே –
—————————————————————————–
ஆனந்த ரூபத்வ சமர்த்தனம் –
பிரகாசம் தான் அனுகூலமாய் இருக்கும் -ஸூகமாக உறங்கினேன் என்கிற பிரத்யபிஜ்ஞை தானே இதில் பிரமாணம்
இப்போது ஸூகம் பிறக்கும்படி உறங்கினேன் என்று அன்றோ ஸூகமாக உறங்கினேன் என்கிற இதுக்கு பொருள் என்ன ஒண்ணாது
பிரதிபத்தி சரீரம் அப்படி அன்றிக்கே இனிதாகப் பாடினேன் என்கிறாப் போலே இருக்கையாலே –
ஸ்வரூபம் அனுகூலம் அன்றாகில் ப்ரேமாஸ்பதத்வம் கூடாது
ஆச்சர்யவத் பஸ்யதி கச்சிதே நம் -இத்யாதிகளாலும் இவ்வர்த்தம் சித்தம் ஆகையாலே
ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிரஹ மஸ்மி -என்கிறபடியே
ஆத்மா ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய் இருக்கும் –
———————————————————————————————
ஜ்ஞாத்ருத்வ சமர்த்தம்
அவ்வளவும் அன்றிக்கே ஜ்ஞானானந்தங்களுக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும்
அதயோ வேதே தம் ஜிக்ராணீதி ச ஆத்மா மனஸை வைதான் காமான் பசின் ரமதே -என்றும்
ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி -என்றும் –
விஜ்ஞாதாரமரே கேன விஜா நீயாத் -என்றும் –
ஞானாத்யேவாயம் புருஷ -என்றும் –
ஏஷ ஹி த்ரஷ்டா ச்ப்ரஷ்டா ஸ்ரோதா க்ராதா ரசயிதா மந்தா போத்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ -என்றும் –
ஏவ மேவாச்ய பரித்ரஷ்டு -என்றும் இத்யாதி ஸ்ருதியாலும்
இவ்வர்த்தத்தை நான் அறியா நின்றேன் என்கிற பிரத்யஷத்தாலும் ஜ்ஞாதா வென்னும் இடம் சித்தம் –
இப் ப்ரத்யஷம் தன்னை -ஜானாத்யேவாயம் புருஷ -என்று ஸ்ருதியும் சொல்லிற்று
——————————————————————————————————–
பௌத்த மத கண்டனம்
ஜ்ஞான மாத்ரம் ஆத்மா -அது தான் ஷணிகம்-என்னும் பஷத்தில்
நேற்றுக் கண்ட அர்த்தத்தை இன்று காணா நின்றேன் என்கிறவிது கூடாது
நேற்றை ஜ்ஞானம் என்று ஓன்று இல்லாமையால்
அது அநித்யம் என்கிற பஷமும் அப்படி இருப்பதொரு ஜ்ஞானம் காணாமையாலே நிரச்தம் –
கிஞ்ச ஜ்ஞான மாத்ரமே ஆத்மாவாகில் தேஹாத்மா ப்ரமம் கூடாது -தேஹத்தை ஜ்ஞாதாவாக பிரமிக்கையால்
———————————————————————————-
தர்ம பூத ஜ்ஞான நித்யத்வ சமர்த்தனம் —
ந ஹி த்ரஷ்டுர் த்ருஷ்டேர் விபரிலோபோ வித்யதே -ந ஹி விஜ்ஞாதுர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும் –
யதோதபா நகரணாத் க்ரியதே ந ஜலாம்பரம் –சதேவ நீயதே வ்யக்தி மசதஸ் சம்பவ குத —
ததா ஹேய குணத்வம்சாத வபோதாதயோ குணா -பிரகாச்யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மா நோ ஹி தே -என்றும்
ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தர்மஸ்ஸ மனுஜேச்வர -ஆத்ம நோ ப்ரஹ்ம பூ தஸ்ய நித்யமேதச்ச துஷ்ட்யம் -என்கிறபடியே
ஜ்ஞாத்ருத்வம் நித்யம் –
ஆனால் உத்பத்தி வினாசங்கள் உண்டு என்று சொன்னபடி என் என்னில் –
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி-என்றும் –
ச சாநந்த்யாய கலப்பதே -என்றும்
முக்தி தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே சர்வத்தையும் சாஷாத்கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்
யயா ஷேத்ரஜ்ஞ சக்திஸ் சா வேஷ்டிதா ந்ருப சர்வகா -என்கிறபடியே கர்மத்தால் சங்குசிதமாய்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா–சர்வ பூதேஷு பூபால தாரதம் யேன வர்த்ததே –
அப்ராணி மத்ஸூ ஸ்வல்பா சா ச்தாவறேஷூ ததோ அதிகா -என்கிறபடியே
கர்ம அனுகுணமாகத் தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யத்யேகம் ஷர தீந்த்ரியம் -தே நாசா சாரதி ப்ரஜ்ஞா த்ருதே பாதாதி வோதகம் -என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிக்கக் கடவதாய் இருக்குமாகையாலே பிரசரணாதியை இட்டு
உத்பத்தி விநாசம் சொல்லுகிறது-
ஏகமாய் இருக்கச் செய்தே அநேகமாய்த் தோற்றுகிறது அத்தாலே –
——————————————————————————————————————————
தர்ம பூத ஜ்ஞானச்ய த்ரவ்யத்வ சமர்த்தனம்
இது தான் அஜடமுமாய் -சங்கோச விகாசங்களுக்கும் சம்யோக வியோகாதிகளுக்கும் ஆஸ்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம்
ஜ்ஞானம் நித்யமுமாய் அஜடமுமாய் இருக்குமாகில் ஸூஷூப்தியில் தோற்ற வேண்டாவோ வென்னில்
அப்போது தோன்றாது ஒழிகிறது திரோ ஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே பிரசரணம் இல்லாமையாலே
——————————————————————————–
தர்மபூத ஜ்ஞானச்ய ஆனந்தத்வ சமர்த்தநம்
சர்வமும் பகவத்தாத்மகமாகையாலே அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே இது தான் ஆனந்த ரூபமாய் இருக்கும் –
நனு-ஆனால் இப்போது விஷ சஸ்த்ராதிகள் பிரதிகூலங்களாயும்-
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் –
காஷ்ட லோஷ்டாதிகள் உபேஷா விஷயங்களாயும்-
இவை தான் ஸ்வதந்த்ரங்களாய்க் கொண்டு தோற்றுவான் என் என்னில் –
கர்ம தேஹாத்மா அபிமானங்களாலே அப்படி தோற்றுகிறது அத்தனை -ஸ்வ பாவமாயன்று –
ஸ்வ பாவமாகில்
ஒருகால் அனுகூலங்களான சந்தன குஸூமாதிகள் காலாந்தரத்திலே பிரதிகூலங்களாகத் தோற்றக் கூடாது –
வச்தவேகமேவது க்காய ஸூகா யேர்ஷ்யாகமாய ச -கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வச்த்வாத்மகம் குத –
ததேவ ப்ரீதயே பூத்வா புநர் துக்காய ஜாயதே ததேவகோபாய யத பிரசாதாய ச ஜாயதே –தஸ்மாத் துக்காத்மகம்
நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் -என்று ருஷியும் அருளிச் செய்தான் ஆகையால்
ஜ்ஞானத்துக்கு ஆனந்தத்வமே ஸ்வ பாவம் –இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை யுடையனாகை ஆனந்தி யாகிறது –
—————————————————————
புநரபி ஜீவாத்மநோ ஜ்ஞாத்ருத்வ சமர்த்தநம் –
இப்படி ஆத்மா ஜ்ஞாதாவாகில் –
யோ விஜ்ஞாநே திஷ்டன் -என்றும் –
விஜ்ஞா நம் யஜ்ஞம் தநுதே -என்றும் ஜ்ஞான சப்தத்தாலே சொல்லுவான் என் என்னில்
ஜ்ஞான ஏக நிருபணீயமுமாய் -ஸ்வயம் பிரகாசமும் ஆகையாலே -அப்படி சொல்லுகிறது –
ஆகையாலே ஜ்ஞாதாவுமாய் ஆனந்தியுமாய் இருக்கும்
—————————————————————————-
ஜீவாத்மன் அணுத்வ சமர்த்தநம் –
தேன பிரத்யோதே நைஷ ஆத்மா நிஷ்க்ராமதி -என்று உத்க்ரமணத்தைச் சொல்லுகையாலே ஆத்மா அணு பரிமாணன் –
உத்க்ராந்தி என்கிறது சரீர விநியோகத்து அளவே என்னில் -அது எப்படி யானாலும்
யே வைநே சாஸ்மால் லோகாத் பிராந்தி சந்த்ரமசமே வந்தே சர்வே கச்சந்தி -என்றும் –
தஸ்மால் லோகாத் புனரேத்ய அஸ்மை லோகாய கர்மணே -என்கிறபடியே கத்யாகதிகள் கூடாது –
ஏஷோணுராத்மா சேதஸா வேதி தவ்ய-என்றும் –
வாலாக்ர சதா பாகச்ய சத்தா கல்பி தஸ்ய ச –பாகோ ஜீவஸ்ஸ விஜ்ஞேய -இத்யாதிகளாலே
ஸ்ருதி தானே அணு வென்று முக்த கண்டமாகச் சொல்லிற்று –
ஹ்ருத் யந்தர் ஜ்யோதி புருஷ -என்கையாலே ஆத்மா அணுவாய்
ஹ்ருதய பிரதேசத்திலே நிற்குமாகில் பாணி பாதாதிகளில் ஸூக துக்க அனுபவம் கூடும்படி எங்கனே என்னில் –
ஜ்ஞான வ்யாப்தியாலே கூடும் –
—————————————————————————————–
ஆத்ம பஹூத்வ சமர்த்த நம்
ஆத்மாக்கள் தான் அநேகங்கள் -சிலர் ஆத்ம பேதம் இல்லை -ஏகாத்மாவே யுள்ளது என்றார்கள் –
அது அயுக்தம்-ஸூ காதி வ்யவஸ்த அனுபபத்தி வருகையால்
ஸூக துக்க இச்சா த்வேஷாதிகள் நியதங்கள் ஆகையாலே தேக பேதத்தாலே யாதல் –
அந்தகரண பேதத்தாலே யாதல்
இவை நியதங்கள் ஆகின்றன வென்னில் -சௌபரி சரீரத்திலும் இதுவே நியதங்கள் ஆக வேணும்
தேஹ பேதமும் அந்தகரண பேதமும் ஸூக துக்காதி நியமத்துக்கு ஹேது வன்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இஜ் ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்
ஸ்மரியாது ஒழிகிறது சம்ச்காரத்தினுடைய அனுத்பவத்தாலே யாதல் -நாசத்தாலே யாதல் –
ஆனால் சரீராந்தரத்தில் ஸூக துக்க ஸ்ம்ருதி யாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும் இரண்டத்தில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும் ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும் –
ஆகையால் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது தேஹாதி பேதம் என்ன ஒண்ணாது –
ஒருவன் ஆகில் பந்த மோஷ வ்யவஸ்தையும் சிஷ்ய ஆசார்ய வியவஸ்தையும் விஷம சிருஷ்டியும் கூடாது –
வைஷம்ய நைர்க்ருண்யங்களும் பிரசங்கிக்கும் -நித்யோ நித்யா நாம் -என்று இத்தை ஸ்ருதியும் சொல்லிற்று –
அந்த ஸ்ருதி ஔபாதிக பதத்தைச் சொல்லுகிறது -அல்லாத போது ஜீவாத்வைத ஸ்ருதிகளோடே விரோதிக்கும் -என்ன ஒண்ணாது
அவற்றில் சொல்லுகிறது பிரகாராத்வைதத்தை யாகையாலே –
சதா பச்யந்தி -என்றும் –
மம சாதர்ம்யமாகதா -என்றும் –
முக்தா நாம் பரமா கதி -என்றும்
மோஷ தசையிலும் பேதத்தைச் சொல்லுகையாலே பேதம் ஔபாதிகம் என்ன ஒண்ணாது
ஆகையால் ஆத்மாக்கள் அநேகர் என்னும் இடம் சித்தம்
————————————————————————————–
அமலத்வ கதநம்
ஆத்மா ஸூத்த –என்றும் –
ஜ்ஞானமயோ அமல -என்றும் –
ஜ்யோதிர்ஜ்வலதி என்கிறபடியே இவர்கள் தான் பரி ஸூத்தர்
—————————————————————————-
சேஷத்வ கதநம்
யஸ் யாஸ்மி –யோஹமஸ்மி -என்றும் –
ப்ரஹ்மாஹ மஸ்மி -என்றும் –
தாஸ பூதா -என்றும் –
க்ருஷ்ணஸ்ய ஹி கருத்தே -என்கையாலே இவர்கள் பகவச் சேஷ பூதர் –
யஸ் யாத்மா சரீரம் -என்றும் –
பூ ராணி ந-என்றும் –
தத் சர்வம் வைஹாரேஸ் தநு-என்றும் –
தானி சர்வாணி தத்வபு -என்றும் –
அபரேயமிதஸ் த்வந்யாம்-என்கையாலே இந்த சேஷத்வம் தான் சரீர தயாவாய் இருக்கும்
———————————————————————————-
உக்தார்த்த நிகமநம்
ஆக
இப்படி ஆத்மாக்கள்
தேஹேந்த்ரிய -மன -பிராண தீக்களில் விலஷணராய்-
ஸ்வயம் பிரகாசராய் –
ஆனந்த ரூபராய் –
ஜ்ஞானானந்தங்களுக்கு ஆஸ்ரய பூதராய் –
நித்யராய் –
அணுக்களாய் –
பரி ஸூ த்தராய் –
பகவச் சேஷ பூதராய் -இருப்பார்கள்
ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம்
——————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply