ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தத்வ சேகரம் –பர ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

உபோத்காதம் –
பும்ஸ்பர்ச க்லேச சம்பாவநா கந்த விதுரமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய்-இருந்துள்ள நிகில வேத ஜாதத்துக்கும்-
தத் உபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளுக்கும் க்ருத்யம்-
சகல சம்சாரி சேதனர்க்கும் தத்வ ஜ்ஞானத்தை ஜநிப்பிக்கை –

தத்வ ஜ்ஞானமாவது –
சர்வ ஸ்மாத் பரனான நாராயணனுக்கு -சர்வ பிரகார பரதந்த்ரரான சர்வாத்மாக்களினுடையவும்
ஸ்வரூபத்துக்கு அநுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை -அனாதியாக பிரதிபந்தித்துக் கொண்டு போருகிற
கர்ம சம்பந்தத்தை நிவர்த்திப்பிக்கும் உபாயம்
தச் சரணாரவிந்த சரணாகதி என்கிற நிரூபண ஜ்ஞான விசேஷம் –

—————————————–

நாராயண காரணத்வ நிரூபணம் –
நாராயணன் சர்வ ஸ்மாத் பரனான படி எங்கனே என்னில் –
பரத்வ சிஹ்னங்களான ஜகத் காரணத்வ -முமுஷுபாஸ்யத்வ -மோஷ ப்ரதத்வங்கள் உள்ளது
இவனுக்கே யாகையாலே இவனே சர்வ ஸ்மாத் பரன்-

மஹா உபநிஷத்தும் ஸூபால உபநிஷத்தும் நாராயண உபநிஷத்தும் ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களும்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -என்றும் –
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் –
அத புருஷோ ஹவை நாராயணோஸ் காமயத -என்றும்
அப ஏவ ச சர்ஜா தௌ-என்றும் –
நாராயணோ ஜகன் மூர்த்தி -என்றும் –
விஷ்ணோஸ் சகாசாதுத் பூதம் -என்றும்
நாராயணாதி திவ்ய சப்தங்களாலே ஜகத் காரணத்வத்தைச் சொல்லுகையாலே இவனே காரண பூதன் –

சாந்தோக்ய வாஜசநேய கௌஷீதக் யாதிகளில் -சத் ப்ரஹ்ம ஆத்மாதி சப்தங்களாலேயும்
சில வஸ்துக்களைக் காரணமாகச் சொல்லா நின்றதே என்னில்
பஸ்வதி கரண ந்யாயத்தாலே சாமான்ய சப்தம் விசேஷ பர்யவசியியாகையாலே சத்தாதி சப்தங்களும் இவனையே ப்ரதிபாதிக்கின்றன –

——-

சதுர்முக காரணத்வ பஷ அநுவாதம்
நனு-
ஹிரண்ய கர்பஸ் சமவர்ததாக்ரே -என்றும் –
தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும் –
பிரஜாபதி பிரஜா அஸ்ருஜத -என்றும்
அஜச்ய நாபாவத் யேகமர்ப்பிதம் யஸ்மின் விஸ்வா புவநானி தஸ்து -என்றும்
ஹிரண்ய கர்ப்பாதி விசேஷ சப்தங்களாலே சொல்லுகையாலே ப்ரஹ்மா காரணமாகக் குறை என் என்னில்
தத் பஷ நிரசநம்

அது சொல்ல ஒண்ணாது –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோஸ் ஜாயத -என்றும் –
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே -என்றும்
ச பிரஜாபதிரேக புஷ்கர பர்ணே சமபவத் -என்றும் –
விராஜோ அதி பூருஷ -என்றும் –
யன்நாபி பத்மாதபவன் மஹாத்மா பிரஜாபதிர் விஸ்வஸ்ருட் விஸ்வரூப -என்றும்
ப்ரஹ்ம வை ப்ரஹ்மாணம் புஷ்கரே ச சர்ஜ -என்றும் –
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமானம் -என்றும் இத்யாதிகளால் -ஸ்ருஜ்யன் என்றும்

ந ப்ரஹ்மா -என்றும் –
ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ -என்றும்
சம்ஹார்யன் -என்றும்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ –புநஸ் த்ரைலோக்யதாத்ருத்வம் ப்ராப்தவா நிதி ஸூஸ்ரும –என்றும்
ப்ரஜாபத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசிதம் -என்றும் –
மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தா நவாப்யாம் பலாதித -என்றும் –
யஸ்மாத நபரா தஸ்ய சிரச் சின்னம் த்வயா மம -என்றும்
இத்யாதிகளால் சர்வேஸ்வர சமாராத நத்தாலே தன் பதம் பெற்றான் என்றும்

அசுரர் கையிலே வேதங்களைப் பறி கொடுத்தான் என்றும் –
ருத்ரனாலே பறி பூதனானான் என்றும்
இவனைக் கர்ம வச்யனாகச் சொல்லுகையாலே
ஹிரண்ய கர்ப்ப தாத்ரு பிரஜாபதி சப்தங்கள்
அபர்யவசான வ்ருத்தியாலேயாதல்
அவயவ சக்தியாலே யாதல் –
நாராயண பிரவ்ருத்தியாலே யாதல் -நாராயண வாசகங்கள் –

அஜஸ்ய நாபாவத் யே காமர்ப்பிதம் -என்கிறவிடத்தில் அர்ப்பிதம் -என்றது ஆவிர்ப்பூதம் என்றபடி —
ஏகம்-என்றது புஷ்கரத்தை –
அஜஸ்ய நாபாவத் யேகம் யஸ்மின் விஸ்வம் ப்ரதிஷ்டிதம் -புஷ்கரம் புஷ்க ராஷச்ய தஸ்மை பத்மாத்மாநே நம -என்று
மஹா பாரதத்திலே வ்யாக்யாதமாகையாலே –

————————————————–

ருத்ர காரணத்வ பஷ அநுவாதம்
நனு –
யதா தமஸ்தந்ந திவா ந ராத்ரி ந சந்த சாஸச் சிவ ஏவ கேவல -என்றும் –
காரணம் து த்யேய-என்றும்
சர்வைஸ்வர்ய சம்பன்னஸ் சர்வேஸ்வரஸ் சம்புரா காசமத்யே த்யேய -என்றும்
ஸ்வேதாஸ்வதராதர்வ சிகாதிகளிலே ருத்ரனைக் காரண பூதனாகச் சொல்லா நின்றதே என்னில்
தத் பஷ நிரநசம் –
அதுவும் அனுபபன்னம்

புத்புதாத் த்ர்யஷஸ் ஸூல பாணி புருஷோ அஜாயத-என்றும் –
நாராயணாத் ருத்ரோ ஜாயதே -என்றும் –
லலடாத் க்ரோத ஜோருத்ரோ அஜாயத -என்றும்
இந்த்ரோ வருணஸ் சோமோ ருத்ர பர்ஜன்யோ யாமோ ம்ருத்யு ரீசான -என்றும் –
த்ர்யஷம் கண்ட பர ஸூம ஜீஜநத் -என்றும் –
ப்ரஹ்மண புத்ராய -என்றும்
ஏவமாதி வாக்யங்களாலே மஹா உபநிஷத்தும் நாராயண உபநிஷத்தும் ஸூ பால உபநிஷத்தும்
ப்ருஹதாரண்யகமும் -அதர்வணமும் -சாம வேதமும் ஸ்ருஜ்யனாகவும் –

நேசான-என்று சம்ஹார்யனாகவும் சொல்லுகையாலே –

சத பத ப்ராஹ்மணத்திலே –
சம்வத்சரே குமாரோ அஜாயத ஸோ அரோதீத் தம் பிரஜாபதிரப் ரவீத் குமார
கிம்ரோதி ஷி யச்ச்ரமாத் தபசோஸ்தி ஜாதோ அசீதி ஸோ அப்ரவீத் அனபஹத பாப்மாஹம் அஸ்மி -இத்யாதிகளிலே
ருத்ரன் உத்பன்னனான வளவிலே ரோதனம் பண்ண அவனைப் பார்த்து பிரஜாபதி நீ அழுகிறது என் என்று கேட்க –
நான் அபஹத பாப்மா -என் பாபங்கள் போம்படி எனக்கு நாம கரணம் பண்ண வேணும் என்ன
இவன் அழுகையாலே உனக்கு ருத்ரன் என்று பேராகக் கடவது என்ன –
பவ சர்வேசான பஸூபதி பீமோக்ர மஹா தேவ ரூபமான நாம சப்தகத்தையும்
அஷ்ட மூர்த்தித்வத்தையும் கொடுத்தான் என்று சொல்லிற்று –

இதுதான் ஸ்காந்த புராணத்திலே
உன்மத்தவ தநுன்மத்த பிரபு பிரபவதாமாபி -ராத்ரௌ ச்மசாநே பர்யடசி தத்கிமேதத்த வேச்வர -இத்யாதியாலே –
தேவிச்மசாநபரிட நம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுபவிக்கைக்கு அடி என்-என்று கேட்க
அஹம் சோணிதா பங்கால கராலவத ஹரே ரோதிமி விஸ்வரம்-இத்யாதியாலே
தன்னுடைய உத்பத்தியையும் ரோதனத்தையும் நாம சப்தக மூர்த்யஷ்டகங்களையும் பெற்ற படியையும் சொல்லி

ரௌத்ரே முஹூர்த்தே ஜாதொஹம் ரௌத்ரகர்மா தது ஹ்யஹம் -யத்பவத் யுசிதம் கர்ம புருஷஸ்ய கிரேஸ் ஸூதே-
தத்தே நாவஸ் யக்ர்த்தவ்யம் ம்ருது வா யதி வேதாத் -பிரஜாபதேச்ச கச்சக்த ஆதேசம் கர்த்துமன்யதா –இத்யாதியாலே
தன்னுடைய நிஹீ நாசரண ஹேது கர்மம் என்று சொன்னான் என்று வ்யாக்யமாய்த்து –

இவ்விடத்திலே ஹரே ரோதிமிவிஸ்ரம் ததோ மாம் பாணி நா ச்ப்ருஷ்ட்வா லோகேச ப்ராஹ கேசவ -என்று
ஹரி கேசவ சப்தங்களாலே உபக்ரமித்து பிரஜாபதி சப்தத்தாலே உபசம்ஹரிக்கை யாலே
இந்த ஸ்ருதியில் பிரஜாபதி சப்தம் நாராயண பர்யவசியியாய்க் கடவது

மார்கண்டேய வைஷ்ணவ புராணாதிகளிலேயும்-
ருத்ர சர்க்கம் ப்ரவஷ்யாமி தந்மே நிகதத்தஸ் ச்ருணு -என்று இவ்வர்த்தத்தைச் சொல்லிற்று –

அஸ்ய தேவஸ்ய மீடுஷ-என்றும் –
மஹா தேவஸ் சர்வமேத மஹாத்மா ஹூத்வாத்மானம் தேவதேவோ பபூவ -என்று இவனுடைய பதம் கர்மாதீனம் என்று சொல்லிற்று –

ஸ்ரீ வராஹ புராணத்திலே
தவ விஷ்ணோ பரசாதென மயா தத் த்ரிபுரம் ஹதம் –தஸ்ய பாபச்ய தோஷேன ந சக்நோமி விசேஷ்டிதும்-என்று
திரிபுர தஹநத்தால் உண்டான பாபம் அடியாக யோக மாயை -ஐஸ்வர்ய நாசம் ஹ்ருதய சந்தாபம் நிச் சேஷ்டிதத்வங்கள்
இவனுக்கு உண்டாய்த்து என்றும் சொல்லிற்று –

ததோ வாக்யான் முநீந்தரஸ்ய தேவோ பாலேந்துசேகர-சங்கரஸ் சின்ன லிங்கஸ்து காநநே விசசார ஹ
ஏவம் சாபோ யதாஸ் மாகம் தாபயம் தத்தஸ் ஸூ தாருண-அவசய கரணீயம் மே ததா காஷ்டமயம் வபு
என்று ப்ருகு தத் பத்னி சாபங்களாலே சின்ன லிங்கத்வ காஷ்ட ரூபத்வங்களும் உண்டாய்த்து
என்று ப்ரஹ்ம புராணத்திலே சொல்லிற்று –

வாயவ்யத்திலே
ததொபி வ்யாஹ்ருதோ தஷோ ருத்ரம் சோப்யசபத் புன –யஸ்மாத் த்வம் மத் க்ருதே க்ரூரம் ருஷீன் வ்யாஹதவா நசி-
தஸ்மாத் சார்த்தம் ஸூ ரைர் யஜ்ஞைர் ந த்வா யஷ்யந்தி வை த்விஜா –ஹூத்வா ஹூதிம் தவ க்ரூராமபஸ் ச்ப்ருச்யந்து கர்ம ஸூ -என்றும்
அப உபச்ப்ருசதி மேத்யத்வாய நான்வீஷேத யாத ந்வீஷேத சஷூ ரஸ்ய பிரமாயுக ஸ்யாத்-தச்மாந்தரன் வீஷ்ய-
என்று சுருதியிலே போலே –
தஷ சாபத்தாலே இஜ்யத்வாதி நிவ்ருத்தியைச் சொல்லிற்று –

மாத்ச்ய புராணத்திலே –
யச்மாத நபரா தஸ்ய சிரச் சின்னம் த்வயா மம-தச்மாச்சாப சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி —
விஷ்ணோ பிரசாதாத் ஸூ ஸ்ரோனி கபாலம் தத் ஹச்ரதா-ஸ்புடிதம் பஹூதாயாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா -என்று
ப்ரஹ்மாவாலே இவன் சாபோபஹதனான படியையும்
சர்வேஸ்வரன் இவன் சாபத்தைப் போக்கின படியையும் சொல்லிற்று –

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஸ்ரீ கிருஷ்ணன் வைபவம் அறியாதே தன்னை ஆஸ்ரயித்த பாணனை நோக்குகைக்காக சபரிகரனாய் வந்து ஸ்ரீ கிருஷ்ணனோடு எதிரிட்டு
ஜ்ரும்பாபி பூதஸ்து ஹரோ ரதோபச்த உபாவிசத் –ந சசாகததா யோத்தும் கிருஷ்ணே நாக்ளிஷ்ட கர்மணா -என்று
தானும் பரிகரமும் தோற்றுத் தேர்த்தட்டிலே விழுந்து கிடந்து
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் -என்று பின்பு
ஸ்ரீ கிருஷ்ண வைபவத்தை உணர்ந்து பாணனுடைய பிராண ப்ரதாநார்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனை இரந்தான் என்றும்

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர ஸ்ரீ ராமாயணங்களிலே –
விஷ்ணோ ராதிக்யமன் விச்சம்ஸ் தஸ்ய மாயா விமோ ஹித க்ருத்வா நஸ்மி தேவேசோ தேவ வாக்யேன விக்ரஹம் -என்று –
பகவத் மாயா மோஹிதனாய் விஷ்ணுவோடு எதிரிட்டு –
ஆரோபிதும் ந மே சக்திச் சர்வ யத் நேன சாஸ் அபவத் -என்று அவன் கையிலே வில்லையும் வளைத்து நாணிலே ஏறிடவும் மாட்டாதே
ததாது ஜ்ரும்பிதம் சைவம் தா நுர்பீ மபராக்ரமம் -ஹூங்காரேண மஹா தேவஸ் தம்பி தொத த்ரிலோசன -என்று –
வில்லும் முறிந்து போய் தானும் ஹூன்காராபி பூதனாய்
தாத்தாச்ச க தாமோ ஹேன மயா ஜ்ஞாதோ ஹரி பர –ஜ்ஞாத்வா விஸ்ருஷ்ட சாபேன ச்துதஸ்ஸ பகவாம் ஸ் ததா -என்று பின்பு
தெளிந்து ஸ்தோத்ரம் பண்ணினான் என்றும் இவனுடைய அஜ்ஞான அசக்திகளைச் சொல்லிற்று –

வ்ருத்தாஸூரன் இவனை ஆராதித்து யாவன் ஒருவனுடைய தலையை ஸ்பர்சித்தேன் அவனுடைய
தலை சததாவாக வேணும் என்று அபேஷிக்க-
அவனும் அப்படியே வரம் கொடுக்க அநந்தரம் –
ஸ தத்வர பரீஷார்த்தம் சம்போர்மூர்த்னி வ்ருகா ஸூர -ஸ்வ ஹஸ்தம் தாதுமாரேபே ஸோ அபிப்யத் ஸ்வ க்ருதாச்சிவ —
தே நோபஸ் ருஷ்டஸ் சந்த்ரஸ்த உபதாவன் சவேபது -யாவதந்தம் தயவோ பூ மே காஷ்டா நாம தராபுவ -என்கிறபடியே
அவன் அத்தைப் பரீஷிக்கைக்காக -இவன் தலையைத் தொட சோக பீதனாய்
இவனோடு அவன் கண்டவிடம் எங்கும் ஓடிப் போக்கற்று ஸ்ரீ வைகுந்தத்து ஏறச் செல்ல
சர்வேஸ்வரன் இவனுடைய க்லேசத்தைக் கண்டு நடுவே வந்து ஆவிர்பவித்து
வருகாஸூரனைப் பார்த்து -இவன் ப்ராந்தன் பொய்யல்லது சொல்லான் -உன் தலையைத் தொட்டுப் பார்க்க மாட்டாயோ என்ன அநந்தரம்
அவன் தன்னுடைய தலையைத் தொட்டு ம்ருதனாய் விழுந்தான் என்று ஸ்ரீ பாகவதத்திலே
வருகா ஸூராய கிரிசோ வரம் தத்வாப சங்கடம் -என்று தொடங்கி இவன் ஆபன்னான படியையும் –
சர்வேஸ்வரன் இவன் ஆபத்தைப் போக்கின படியையும் இவனுடைய அஜ்ஞ்ஞான அசக்திகளையும் சொல்லிற்று –

அந்தகா ஸூரனை நிரசிக்கைக்காக மாத்ரு கணங்களை சிருஷ்டிக்க
த்ரை லோக்யே பஷ்யமாணே து ததா மாத்ரு கணே ந வை
நருசிம்ஹா மூர்த்திம் தேவசம் ப்ரதத்யௌ பகவான் சிவா -என்று அத்தாலே நோவு பட
தன்னாலே சமிப்பிக்க ஒண்ணாமையாலே
சர்வேஸ்வரனை த்யானம் பண்ண அவன் சமிப்பித்தான் என்று மாத்ச்ய புராணத்திலே இவனுடைய அஜ்ஞ்ஞான அசக்திகளையும் சொல்லிற்று –

ஆக இப்படி
ஸ்ருஜ்யத்வ சம்ஹார்த்யத்வ கர்ம வச்யத்வங்களைச் சொல்லுகையாலே இவனுக்கு காரணத்வம் கூடாது –
ஆகையால் ஹிரண்ய கர்ப்பாதி சப்தங்கள் போலே சிவ சம்ப்வாதி சப்தங்களும் நாராயண பரங்கள் –

சிவன் என்றது -சர்வ பிரகார ஸூத்தன் என்றபடி –
சிவ சப்தம் சிவ மஸ்து சர்வ ஜகதாம் -என்றும் –
சிவாச்தே சந்து பந்தான-என்றும் –
சிவம் கர்மாஸ்து -என்று ஸூத்ததி மங்கள குண விசிஷ்ட வஸ்துக்களிலேயும் பிரயுக்தம் –

சம்பு என்றது -சாம் -ஸூகம் பாவயதீதி சம்பு -என்கிற வ்யுத்பத்தியாலே சர்வ ஸூக ப்ரதன் என்றபடி –
சம்பு சப்தம் -த்ருஹிணனையும் சொல்லும்
சர்வஸ் சர்வஸ் சிவஸ் ஸ்தாணு -என்றும் –
ஸ்வயம்பூஸ் சம்பு ராதித்ய -என்று குண விவஷையாலே இவை தான் நாராயணன் பக்கலிலே பிரயுக்தங்கள்

யானி நாமானி கௌணானி-என்கையாலே இவை தான் யௌகிகங்கள்
நாராயண பதம் ருத்ரனைச் சொல்ல மாட்டாது
இது தன்னைப் பல உபநிஷத்துக்களிலும் பல காலும் சொல்லிற்று -சிவ சப்தத்துக்கு அதில்லை –

நனு-
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ் தே சர்வே சம்பிரஸூயந்தே -என்று அவர்களோடு ஒக்க நாராயணனும் பிறந்தான் என்றும் –
ஸ்ரீ ராமாயணத்திலும் லைங்காதி புராணங்களிலும் ப்ருகு சாபத்தாலே இவனுக்கு துக்க அனுபவம் உண்டாய்த்து என்றும் சொல்லுகையாலே
இவனுக்கு கர்ம வஸ்யத்வம் உண்டே என்னில் –அது சொல்ல ஒண்ணாது –

ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராஸ்தே என்கிற விடத்திலே இவனை அவர்களைப் போலே பிறந்தான் என்கிறது அன்று –
ரஷார்த்தம் சர்வ பூதாநாம் விஷ்ணுத்வம் உபஜக்மிவான் -என்கிறபடியே
ராகவ யாதவ சஜாதீயனானால் போலே
ப்ரஹ்ம விஷ்ணு சஜாதீயனாய்க் கொண்டு விஷ்ணுவாய் வந்து திருவவதரித்த படியைச் சொல்லுகிறது –

அஜாயமானோ பஹூதா விஜாயதே -என்று ஸ்ருதி தானே கர்ம மூலமான ஜென்மத்தை நிஷேதித்து
ஐச்சிகமான ஜென்மத்தை விதித்தது –
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாபமா -என்றும் –
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்றும்
பஸ்ய தேவஸ்ய மஹாத்ம்யம் மஹிமா நஞ்ச நாரத —ஸூ ப ஸூ பை கர்மபிர்யோ ந லிப்யதே கதாசன -என்றும்
ச சர்வ பூத ப்ரக்ருதிம் விகாரான் -என்றும் –
ஸூ பா ஸூ பைர்வி நிர்முக்தம் ஊர் மிஷட்காத் பரம் ப்ரபும் -தம் வைத்யமமலம் விஷ்ணும் சதா தாயன் விமுச்யதே -என்று
இவனை அ கர்ம வச்யனாகச் சொல்லிற்று –

சர்வ அவஸ்தா ஸூ வை விஷ்ணோர் ஜனனம் ச்வேச்சயைவது -சீலயா சைவ கிருஷ்ணே ந ஸ்வ குலச்ய ச சம்ஹ்ருதி –
ஐரகாஸ் தரச்ச லே நைவ கமனம் ச்வேச்சயைவ துர் -என்றும் –
தவிச சாபச்ச லே நைவ மவதீர்ணோபி லீலயா -இத்யாதியாலே
லைங்காதிகள் தன்னிலே பகவத் அவதாரம் ஐச்சிகம் என்று சொல்லிற்று –

ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே –
தேவ திர்யக் மனுஷ்யேஷூ சரீர க்ரஹணாத்மிகா–லீலேயம் சர்வ பூதேஷு தவ சேஷ்டோப லஷணா-என்றும் –
நாகாரணாத் காரணாத்வா காரணா காரணாந்த ச -சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -என்றும் –
இச்சாக்ருஹீதாபி மாதோரு தேஹ-என்றும் –
சமஸ்த சக்த ரூபாணி தத் கரோதி ஜநேஸ்வர -தேவ திர்யக் மனுஷ்யாக்யா
சேஷ்டா வந்தி ஸ்வ லீலயா ஜகதாமுபகாராய ந சா கர்ம நிமித்தஜா -என்று
ஜகத் ரஷணார்த்தமாக இச்சையாலே அவதரிக்கிறான்

ரிஷி சாபத்தை சர்வ மர்யாதா ஸ்தாபநார்த்தமாகத் தானும் அனுவர்த்திகிகிறான் அத்தனை என்று சொல்லிற்று –
அஜோபிசன் அன்வ்யயாத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -ப்ரக்ருதிம் ஸ்வா மதிஷ்டாய சம்பவாம் யாத்ம மாயயா –
யதா யதா ஹி தர்மஸ்ய கலா நிர்பவதி பாரத -அப்யுத்தா நம தர்மஸ்ய ததாத்மானம் ச்ருஜாம் யஹம்-என்றும் –
பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று
தானும் அருளிச் செய்தான் இறே-ஆகையால் இவன் கர்மவச்யன் அன்று –

நனு –
ஸ்ரீ கிருஷ்ணன் புத்ரார்த்தியாய் கைலாசத்திலே சென்று ருத்ரனை அர்ச்சித்து அவன் பக்கலிலே புத்ரனை அபேஷித்தான்-
அவனும் புத்ரனைக் கொடுத்தான் -என்று மஹா பாரதத்திலே சொல்லுகையாலே
நாராயணனும் கர்ம வச்யனாய் ருத்ரனும் சரண்யபூதனாக வேண்டாவோ என்னில்

அங்குச் சொல்லுகிற அர்ச்சனா ப்ரார்த்த நாதிகள் கர்ம வச்யத்வாதி ஸூசககங்கள் அன்று என்னுமத்தை
அநயம் தேவ வரம் தேஹி பிரசித்தம் சர்வ ஜந்துஷூ -மர்த்யோ பூத்வோ பவான் தேவ மாமாராதய கேசவ –
மாம் வஹஸ்வ ச தேவேச வரம் மத்தோ க்ருஹாண ச -யே நாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோஸ் பவம்-என்று
ருத்ரன் அபேஷிக்க –
தேவ கார்யாவதாரேஷூ மனுஷ்யத்வம் உபேயிவான்-த்வாமேவாரா தயிஷ்யாமி மம த்வம் வரதோபவ -என்று
சர்வேஸ்வரனும் வரம் கொடுத்தான் என்று ஸ்ரீ வராஹ புராணத்திலே சொல்லிற்று –

புத்திர பிரதான அநந்தரம்
ருத்ரன் தேவர்களையும் ரிஷிகளையும் பார்த்து கிருஷ்ணன் ஜகன் மோஹநார்த்தமாகப் புத்ரார்த்தியாய் வந்தான் இத்தனை –
இவனே சர்வ காரண பூதன் -சர்வ ஸ்மாத் பரன் -மோஷ ப்ரதனும் இவனே –
இவனையே உபாசித்து முக்தராகப் பாருங்கோள்-என்று உபதேசிக்கையாலும் –
இவன் பரத்வத்தை பஹூ முகமாக ஸ்தோத்ரம் பண்ணுகையாலும்-
புத்ரனைப் பெறுகைக்காகப் பிறர் காலிலே விழுகிற கிருஷ்ணன் தானே வழியிலே கண்டா கர்ணனுக்கு மோஷம் கொடுக்கையாலும்
இவனுக்கு கர்மவச்யத்வாதி சங்கை இல்லை –

லைங்காதி புராணங்களிலே ஷேத்ர பிரகிருதி யோநி சக்தி மாயா சப்தங்களாலே ருத்ரனைப் பார்க்க
நாராயனனுக்குச் சொன்ன குண பாவம்
ருத்ராத் உத்பத்தி மூர்த்தி த்ரயாதீத சதாசிவபாராம்யம் தொடக்கமானவை –
ப்ரத்யஷ ஸ்ருதி விரோதத்தாலும் –
ஸ்வ கிரந்தத்தில் பரஸ்பர விரோதத்தாலும்
அக்நேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமசேஷூ பிரகீர்த்யதே -என்கிறபடியே இவை தான் தாமச புராண சித்தங்கள் ஆகையாலும்
பிராந்தி பரிகல்பிதங்கள் –

ப்ரஹ்ம ருத்ரர்களுடைய ஜன்மங்களும் ச்வேச்சையாலே யானாலோ வென்னில் -அது சொல்ல ஒண்ணாது –
ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்த ஜகதந்தர் வ்யவச்திதா பிராணின கர்ம ஜனித சம்சார வசவர்த்தின -என்றும்
ப்ரஹ்ம த்யாஸ் சகலா தேவா மனுஷ்யா பசவாஸ் ததா விஷ்ணோர் மாயாமஹா வர்த்தே மோஹாந்த தமஸா வ்ருதா -என்றும்
இவர்களை கர்ம பரதந்த்ரராகச் சொல்லுகையாலே –

இப்படி நாராயணனே காரணபூதன் என்கிற இவ்வர்த்தத்துக்கு நியாய வேண்டாதபடி –
அனந்தசாகா நிகில வேத நிகமனமாய் -உபாசன விதி விதுரமாய் –
சமஸ்த பர வித்யா உபாச்ய விசேஷ நிர்ணயகமாய் -நிகில வேதாந்த நிர்வாஹகமாய் இருந்துள்ள நாராயண அனுவாகம்
சகல வேதாந்தங்களிலும் பரம் ப்ரஹ்ம பரதத்த்வ பரமாத்மா பரம ஜ்யோதி பராயண புருஷா ஷராச்யுத விஸ்வாத்ம
சிவ சம்பு பிரமுக சப்தங்களாலே நிர்திஷ்டமான வஸ்துவை அவ்வோ சப்தங்களாலே அனுவதித்து நாராயணன் என்று விசேஷித்து
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்திர-என்று கார்யத்வென சம்ப்ரதிபன்னனான இந்த்ரனோடே ப்ரஹ்ம ருத்ரர்களை சஹபடித்து
இவனுக்கு கார்ய பூதனாகவும் சொல்லிற்று –

ஆக இப்படி நியாய ஸ்வ பாவத்தாலும் –
நியாய நிரபேஷமாக ஸ்ருதி தானே விசேஷிக்கையாலும்-
ச நோ ஹரி -என்று ஹரி சப்தத்தாலே உபசம்ஹரிக்கையாலும்
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஸ்ருஜ்யத்வ சம்ஹார்யத்வ கர்ம வச்யத்வங்களைச் சொல்லுகையாலும்
நாராயணனே காரண பூதன் –

யேன ஜாதானி ஜீவந்தி -என்றும் –
ஏஷ பூ தபால -என்றும் –
பரித்ராணாய சாதூனாம் -என்றும் –
ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்றும்
ச ஏவ பாதி -என்கிறபடியே ஸ்தாபகனும் இவனே –

யத் பிரயந்த்யபி சம்விசந்தி -என்றும்
யே நேதம் விஸ்வம் பரிபூதம் யதஸ்தி -என்றும் –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷேத்ரஞ்ச உபே பவத ஓதன -ம்ருத்யுர் யச்யோப சேசனம் -என்றும்
க்ரசேத் சம்ஹார சமயே ஜகதௌ தும்பராண்ட வத் –லீலயா யஸ்து பகவான் தம் கச்ச சரணம் ஹரிம் -என்றும்
சம்ப ஷயித்வா என்கிறபடியே சம்ஹர்த்தாவும் இவனே –

நனு ருத்ரன் சம்ஹர்த்தா வென்னும் இடம் உபயவாதி சித்தமாய் இருக்க
இவனே சம்ஹர்த்தா வென்னும் இடம் என் என்னில்
கல்பாந்தே ருத்ர ரூபீ யோக்ரசதே த்வ கிலம் ஜகத் –தமைந்த புருஷம் விஷ்ணும் ப்ரணதோ அஸ்மி ஜனார்த்தனம் -என்றும்
சிருஷ்டி ஸ்தித்யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம் -ச சம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்றும் –
ச ஏவ ஸ்ருஜ்யச்ச ச சர்க்க கர்த்தா ச ஏவ பாத்யத்தி ச பால்யதே ச -என்கிறபடியே
ருத்ர அந்தர்யாமியாய் நின்று இவனே சம்ஹரிக்கிறான் –
ஆகையாலே சகல ஜகஜ் ஜென்மாதி காரண பூதன் –

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே –தத் விஜிஜ்ஞாசஸ்வ -என்றும் –
ஆசாத் வா இதமக்ர ஆஸீத் –ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி –என்றும் –
தமேவம் விதவா நம்ருத இஹ பவதி -என்றும் –
பித்யதே ஹ்ருதய க்ரந்தி -என்றும்
த்வாமாராத்ய பரம் ப்ரஹ்ம யாதா முக்திம் முமுஷவ –வா ஸூ தேவம நாராத்ய கோ மோஷம் சமவாப் நுயாத் -என்றும்
சம்ஹாரார்ணவ மக்நா நாம் விஷயா கிராந்த சேதஸாம் –விஷ்ணு போதம் வி நா நாந்யத் கிஞ்சி தஸ்தி பராயணம் -என்றும்
சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம்–த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷீண -என்றும்
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் சதிரா த்வயி –தர்மார்த்தகாமை கிம் தஸ்ய முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா -இத்யாதியாலே
காரண வஸ்துவே உபாஸ்யம்-மோஷ ப்ரதம்-முக்த ப்ராப்யம் -என்கையாலே
முமுஷு உபாஸ்யனும் மோஷ ப்ரதனும் முக்த ப்ராப்யனும் இவனே –

—————————————————————

பூர்வ பஷம்-
நனு –சாந்தோக்ய தஹர வித்யையில்-தைத்ரிய தஹர வித்யையிலும்-ப்ருஹ தாரணயகத்திலும் -அதர்வசிகையிலும்
தஹரோ அஸ்மின் நந்தர ஆகாச தஸ்மின் யதந்தஸ் தத ந்வேஷ்டவ்யம் -என்றும் –
ககனம் விசோகஸ் தஸ்மின் யதந்தஸ் தாது பாசிதவ்யம் -என்றும் –
ய ஏஷோ அந்தர்ஹ்ருதய ஆகாசாஸ் தஸ்மின் சேதே-சர்வச்ய வசீ சர்வஸ் யேசான-என்றும்
சம்பு ராகாசமத்யே திய -என்றும் –
ஆகாச சப்தத்தாலே நாராயணனைச் சொல்லி -அதுக்கு அவ்வருகே
சம்பு சிவ ஈசான மகேஸ்வர சப்தங்களாலே ருத்ரனை உபாஸ்யனாகச் சொல்லிற்று –

சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா -என்று நாராயணனுக்கு அசாதாரணமான நாம ரூப கர்த்ருத்வத்தை
ஆகாசோ ஹவை நாம ரூப யோர் நிர்வஹிதா -என்று சொல்லுகையாலே
சாந்தோக்ய தஹர வித்யையில் ஆகாச சப்தம் நாராயண பரம் –
அத்தோடு ஏகார்த்தமாக வேண்டுகையாலே அல்லாத விடங்களிலும் ஆகாச ககன சப்தங்களும் நாராயண பரங்கள் –
அதர்வசிரச்சிலே நாலு கண்டத்தாலே ருத்ரனுடைய சர்வ ஐஸ்வர்யத்தைச் சொல்லி -அஞ்சாம் கண்டத்தாலே –
தமாத்மச்தம் யே அனுபச்யந்தி தீரா தேஷாம் சாந்திச் சாஸ்வதீ நேதரேஷாம்-என்று
ஹ்ருதய அந்தர்வர்த்தியான ருத்ரனுடைய உபாசனத்தையும்
அதுக்கு பலம் மோஷம் என்னும் இடத்தையும் –
பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ்யான்காநி சம்சப்ருசேத் தஸ்மாத் -வ்ரதமேதத் பாஸூ பதம் பஸூ பாஸ விமோஷாய -என்று
பா ஸூ பத வ்ரதத்தைச் சொல்லுகையாலே உபாஸ்யத்வ மோஷ பிரதத்வங்கள் கண்டோக்தம் —

ஸ்வேதாஸ்
வதர உபநிஷத்திலே ததோ யதுத்தரதரம் -என்று நாராயணனில் பரத்வத்தையும் –
ய ஏதத் விதுரம்ரு தாஸ்தே பவந்தி என்று மோஷ பிரதத்வத்தையும் சொல்லிற்று —
தஸ்மாத் சர்வகத்தஸ் சிவ என்கையாலே இது தான் ருத்ர பரம் என்னும் இடம் சித்தம் –
ருத்ரஸ் தாரகம் ப்ரஹ்ம வ்யாசஷ்டே –யே நா ஸா வம்ருதீ பூத்வா மோஷி பவதி -என்கிற
ஜாபாலி ஸ்ருதியாலும் மோஷ பிரதத்வம் கண்டோக்தம் –
ஸ்ரீ ருத்ர சத ருத்ர ருத்ர பஞ்ஜர பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்களிலேயும் ருத்ர வைபவத்தைச் சொல்லிற்று –
ஆகையாலே ருத்ரனும் உபாஸ்யனும் மோஷ பிரதனுமாக வேண்டாவோ என்னில்

———————————————-

சித்தாந்தம் –
அது அனுபபன்னம் -சாந்தோக்ய தஹர வித்யை தன்னில் –
கிம் தத்ர வித்யதே யதன்வேஷ்டவ்யம் -என்று ஸ்ருதி தானே சோத்யம் பண்ணி
தஸ்மின் காமாஸ் சமாஹிதா -ஏஷ ஆத்மா அபஹத பாப்மா –இத்யாதியாலே தஹர ஆகாசத்திலே உபாஸ்யமாகச் சொல்லிற்று –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் என்று சமாதானம் பண்ணிற்று –
தைத்ரீய தஹர வித்யா வாக்யம் இத்தோடு ஏகார்த்தம்-ய -என்று
அகார வாச்யனைச் சொல்லுகையாலே -மகேஸ்வர சப்தம் அவயவ சக்த்யா சர்வ நியந்தாவான நாராயணனைச் சொல்லுகிறது –
அகாரோ விஷ்ணு வாசக – என்கையாலே அகார வாச்யன் நாராயணன் –

ப்ருஹ தாரணயத்திலும் அதர்வசிகையிலும் சொன்ன ஆகாச சப்தம் பரம புருஷ பரம் அன்று –
சர்வ பிரசித்த ஆகாச பரம் –
தஹராகாசாதிகளில் போலே புருஷோத்தமனுக்கு அசாதாரணமான தர்மம் இல்லாமையால் இவ்விடங்களில்
ஈசான சம்பு சிவ சப்தங்கள் வசித்தவ ஜகத் காரணத்வாதி பரமாத்மாசாதாரண தர்ம சம்பத்தாலே
ஈசான பிராணத-என்றும் –
ஸ்வயம் பூச் சம்பு -என்றும் –
சர்வஸ் சர்வஸ் சிவ -என்கீற சப்தங்களோடு பர்யாயங்கள் –

காரணம் து த்யேய-என்கிற வாக்யம் -காரண த்வத்யேயத்வங்கள் இரண்டையும் விதிக்கிறது அன்று –
த்யானத்தை விதிக்கிறது
இரண்டையும் விதிக்கும் போது வாக்ய பேதம் பிரசங்கிக்கும் –
அனுவதிக்கும் போது அத்யத பிரசித்தமானத்தை அனுவதிக்க வேண்டுகையாலே
காரண வாக்யங்களில் காரண பூதனாகச் சொன்ன நாராயணனை அனுவதித்து தத் த்யானத்தை விதிக்கிறது –

அதர்வசிரச்சிலே பிரதம கண்டத்தில் –
அஹமேக பிரதமமாசம் வர்த்தாமி ச பவிஷ்யாமி -ச நான்ய கச்சின்மத்தோ வ்யதிரிக்த -இத்யாதியாலே
ருத்ரன் தனக்கு விஸ்வ ஐஸ்வர்யத்தைச் சொல்லிற்று –
மத்தஸ் சர்வமஹம் சர்வம் -என்றும் –
அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்றும் –
ப்ராணோ அஸ்மி பிரஜ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித்யு பாஸ்வ -என்று
ப்ரஹ்லாத வாமதேவந்த்ராதிகளைப் போலே பரமாத்மா பாவநா ப்ரகர்ஷ பலத்தாலே என்னும் இடத்தை –
ஸோந்தராதந்தரம் ப்ராவிசத் -என்று ஸ்ருதி தானே சொல்லிற்று –

த்வதீய கண்டத்தில் சொன்ன தேவ வாக்யம் ருத்ர வாக்ய அனுவாதம் ஆகையாலே தத் வாக்ய துல்யம் –
த்ருதீய கண்டத்தில் பரமாத்வின் வைபவம் சொல்லுகிறது –
சதுர்த்த பஞ்சமா கண்டங்களில் ஓங்கா ராதி -பிரணவ நாமங்களையும் தத் நிர்வசனங்களையும் சொல்லுகிறது —
ஆகையாலே ருத்ர பரங்கள் அன்று அந்த சப்தங்கள் -பிரணவ வாக்ய நாராயண பரங்கள்
ஷஷ்ட கண்டத்தில் சொன்ன ருத்ர உபாசனம் -மது வித்யையில் சொன்ன ஆதித்ய உபாசனம் போலே பரமாத்மா உபாசனம் –
இதில் சொன்ன பச்ம ஸ்பர்சம் -சௌத்ராணியில் சொன்ன ஸூராக்ரஹணம் சர்வக்ரதுசாதாரணம் அல்லாதாப் போலே
சர்வ உபாசன சாதாரணம் அன்று –

சாந்தோக்யாதிகளில்-அசதே வேதமக்ர ஆஸீத் -இத்யாதிகளிலே
பரமத உபன்யாசம் பண்ணினால் போலே இவ்விடத்திலும் பரமத உபன்யாசம் பண்ணுகிறது –
லைங்கத்திலே நக்னத்வாதி தர்மாங்கமாகச் சொல்லுகையாலும்
அதர்வ சிரச்சில் சொன்ன மந்த்ரங்களை பஸ்மோத் தூள நத்திலே விநியோகிக்கையாலும்
அதர்வ சிரச்சிலும் லைங்கத்திலும் சொன்ன பாஸூபத வ்ரதம் ஏகம் ஆகையாலும்
அர்த்தர்த்த சார்த்த சம்யுக்தம் கூடம் ப்ராஜ்ஞவி நிந்திதம் வர்ணாஸ்ரம க்ருதைர் தர்மைர் விபரீதம் க்வசித் சமம் –என்று
லைங்கம் தன்னிலே அவைதிகமாகச் சொல்லுகையாலும் –
அதர்வ சிரச்சிலே அதிகார ஸ்ரவணத்தாலே விசேஷண சர்வாதிகாரத்வம் அப்ராப்தமாக ஸ்ரீ வராஹ புராணத்திலும் ஆதித்ய புராணத்திலும்
வேத பாஹ்யாதிகாரம் என்று சங்கோசிக்கையாலும்
பஸ்மச்சன்னோ பச்ம சய்யாசயான -என்று சாதாதப தர்ம சாஸ்த்ரத்தில் மஹா பாதக நிவர்த்தகமாகச் சொன்ன
பஸ்மோத் தூளனம் பிராயச்சித்த விஷய மாகையாலும்
லோக பிரசித்தியாலும் இது அவைதிகம் என்று சிலர் சொன்னார்கள்

ஸ்வேதாஸ் வதரத்தில் நாராயணாத் பரத்வமும் மோஷ பிரதத்வமும் சொல்லுகிறது என்கிறதுவும் அனுப பன்னம் –
வேதாஹமேதம் என்று தொடங்கி நான்ய பந்தா -என்று மஹா புருஷ வேதனம் மோஷ சாதனம் என்றும்
தத் வ்யதிரிக்த உபாயம் இல்லை என்றும் –
யஸ்மாத் பரம் நாபரம் -இத்யாதியாலே ப்ரஸ்துத புருஷனே பரன் -தத் வ்யதிரிக்தர் அடைய அபரர் என்று சொல்லி வைத்து
அநந்தரம் வேறே யொரு வஸ்துவைப் பரம் என்றும் மோஷ ப்ரதம் என்றும் சொல்லுகையாகிறது
பிரதிஜ்ஞா ஹேது விரோதத்தாலே அசங்கதம் ஆகையால் –

மஹான் ப்ரபுர்வை புருஷஸ் சத்த்வச்யைஷா ப்ரவர்த்தக -என்று ப்ரஸ்துதனான மஹா புருஷனை
சத்வ ப்ரவர்த்தகனாகச் சொல்லுகையாலும்
சத்வ ப்ரவர்த்தகன் விஷ்ணு வென்னும் இடம் –
அதயோ ஹைவ கலு ஏஷ வாச்ய சாத்விகாம்ச ஸோ அசௌ ப்ரஹ்ம சாரிணோ யோயம் விஷ்ணு
என்கிற மைத்ராயண யுபநிஷத் சித்தமாகையாலும்
ஸ்ரீ புருஷ ஸூக்த நாராயண அனுவாக ப்ரப்ருதிகளில் சொன்ன சர்வா நனத்வாதிகளை -சர்வா நனசிரோக்ரீவ இத்யாதிகளில்
சொல்லுகையாலும் இந்த பிரகரணம் நாராயண பரம்

ததோ யதுத்தரதரம் என்கிறவிடத்தில் தச் சப்தம் ஹேது பரம் -அன்றிக்கே இதம் சர்வம் என்று
கீழ்ச் சொன்ன பிரபஞ்சத்தைப் பராமர்சிக்கிறது ஆகவுமாம் –
சிவ சப்தம் அவயவ சக்த்யா நாராயண பரம் –
ருத்ரஸ் தாரகம் -இத்யாதிகளில் சொல்லுகிறது மோஷ பிரதத்வத்தை யன்று -ஜ்ஞான உபதேஷ்ட்ருத்வத்தை –
ச நோ தேவஸ் ஸூ பா ச்ம்ருத்யா சம்யுனக்து -என்கிற இடத்தில் சொல்லுகிறதும் ஜ்ஞான பிரதத்வத்தை –
உபாயோ அஸ்மி ஹரே ச்ம்ருதௌ-என்றும் –
ஈச்வராத் ஜ்ஞாமமன்விச்சேத்-இத்யாதிகளாலே அவனுடைய ஜ்ஞான உபேதேஷ்ட்ருத்வமும்
நாராயணனுடைய மோஷ பிரதத்வமும் சித்தம் –

சங்கரஸ்ய து யோ பக்த சப்த ஜன்மாந்தரம் நர –தச்யைவ து பிரசாதேன விஷ்ணு பக்த பிரஜாயதே -என்கிற படியே
ருத்ரன் பகவத் பக்தியை யுண்டாக்கும் அத்தனை -ஆகையால் இறே ருத்ர பக்தனான வாணன் –
நிர்வைரிதா ச விபுதைர் விஷ்ணு பக்திர நுத்தமா வா ஸூ தேவாத் து மரணம் கல்பாந்தே குபிதாத் புன -என்று
ருத்ரன் பக்கலிலே பகவத் பக்தியை அபேஷித்தது-
ஸ்ரீ ருத்ர ராதிகளில் பரத்வ சிஹ்னமான ஜகத் காரணத்வ முமுசு உபாசயத்வ மோஷ பிரதத்வங்கள் இல்லாமை யாலும்
அக்னி சய நாதிகளிலே வி நியுக்தங்கள் ஆகையாலும் ருத்ர பரத்வத்தை சொல்லுகிறன வன்று –
ஆகையாலே ருத்ரனுக்கு உபாசயத்வ மோஷ பிரதத்வங்கள் கூடாது

———————

கிஞ்ச -யே ஸ்வ தர்மஸ்தி தா வர்ணா விப்ராத்யா குறு நந்தன -விகரம ஸூ நிவர்த்தந்தே ப்ரீதிமாம்ஸ் தேஷு கேசவ -ப்ரஹ்ம சாரி க்ருஹச்தாத்யா -என்றும் –
தஸ்மாத் ப்ரியத்வம் க்ருஷ்ணச்ய –யேஷாமதுஷ்டி பாரக்யே –வேதா பிரமாணம் ச்ம்ருதய -என்றும்
பரத் ரவ்யேஷூ ஜாத்யந்தா பரதா ரேஷ்வ பும்சகா -பரிவாதேஷூ யே மூகா தே சர்வே திதா மம -என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருத்யுதி தம் தர்மம் -என்றும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி மமைவாஜ்ஞா -என்றும்
த்விவிதோ பூத சர்க்கே அயம் தைவ ஆ ஸூ ர ஏவச விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதச் ததா ஸூ ர -என்கீற ஸ்ரீ விஷ்ணு தர்ம வசநங்களாலும்
தேவானாம் பரமோ தர்மஸ் சதா யஜ்ஞாதி கா க்ரியா –ஸ்வாத் யாய தத்தவ வேதித்வம் விஷ்ணு பூஜா இதி ஸ்ருதி –தைத்யா நாம் பஹூ மா நித்வம்
மாத்சர்யம் சத்ஸ்வ சத்க்ரியா நிந்தனம் வேத சாஸ்த்ராணாம் ஹர பக்தி ருதாஹ்ருதா -என்கிற ஸ்ரீ வாமன புராண வசனத்தாலும்
ஸூ ர பதிர ஸூ ரைஸ் சதாபி யுக்த-ப ஸூ பதி ரப்யவ நீதப்ருத்ய வர்க்க –ஸூ ர குருத் ருட பிரசாத கர்த்தா –
ஹரி சரனௌ ஸ்மரதோ அபவர்க்க ஹேது -என்கிற ஸ்ரீ நாரசிம்ஹ புராண வசனத்தாலும்
விஷ்ணு பக்தி சமாயுக்தான் ஸ்ரௌ தஸ்மார்த்த ப்ரவர்த்தகான் –ப்ரியோ பவதி யோ த்ருஷ்ட்வா வைஷ்ணவோ அசௌ ப்ரகீர்த்தித -என்கிற லைங்க வசனத்தாலும்
யே ச வேத வயதோ விப்ரா -என்றும் –
மஹாத்மா நஸ்து மாம் பார்த்த -என்கிற மஹா பாரத வசனத்தாலும்
பகவத் பக்தர்கள் சத்வ பிரக்ருதிகளாய் வைதிகராய் இருப்பார்கள் என்னும் இடம் சித்தம் –

ருத்ர பக்தர்கள் தமஸ் பிரக்ருதிகளாய் அவைதிகராய் இருப்பார்கள் என்னும் இடம் சித்தம் –
வாஸூ தேவ பரா யத்ர வேத மார்க்க அநு சாரிண–ருத்ர பக்தாஸ் த்ரயீ பாஹ்யா பஸ்மோத் தூள ந விக்ரஹா -என்கிற லிங்க வசனத்தாலும்
பஸ்மோத் தூள நம் ருத்ர பக்தர்களுக்கு லஷணம் என்னும் இடம் சித்தமாய் நின்றது –

பஸ்மோத் தூள நம் தான் தஸ்மாத் சர்வ பிரயத் நேன பஸ்மோத் தூலன விக்ரஹா –ஜடிநோ முண்டி நச்சைவ நாகனா நா நா ப்ரகாரிண-என்றும்
ஜடிலா முண்டி தாவாபி -என்று லைங்கத்திலும் மகா பாரதத்திலும் நக்னத்வாதி தர்ம சஹ சரிதமாகச் சொல்லுகையாலும்
நபச்மகேசதுஷா கரீஷ கபாலா மேத் யாந்யதி திஷ்டேத்-என்று நிஷேத த்ரவ்யங்களோடே சேர வைக்கையாலும் –
பஸ்மம் தான் அஸூத்த த்ரவ்யம் ஆகையாலும்
நக்னம் வா நுபநீதம் வா விபரம் த்ருஷ்ட்வா பிரமாதத –ம்ருத்பிர் த்வாத சபிஸ் ஸ் நாத்வா வாஸோபிஸ் சஹ ஸூ த்த்யதி -என்றும் –
தச்மாதேதான் நரோ நக்னான் த்ரயீ சந்த்யாக தூஷிதான் -சர்வதா வர்ஜயேத் ப்ராஜ்க்ன ஆலாப்ஸ் பர்ஸ நாதி ஷூ -என்று
நக்னத்வாதிகள் வேத பாஹ்யங்கள் ஆகையாலும்

த்ரிபுண்ட்ரத தாரிணோ நித்யம் பஸ்மோத் தூல நத்பரா -பவிஷ்யத்வம் த்ரயீ பாஹ்யா மித்யாஜ்ஞா நப்ரலாபின -என்றும் –
ருஷீணாம் மாயா சர்வமிதி சஞ்சிந்த்ய தத்ர வை -சசாப தான் ஜடாபாஸ் ம மித்யா வ்ரததராம்ஸ் ததா -பவிஷ்யத த்ரயீ பாஹ்யா வேத கர்ம பஹிஷ்க்ருதா -என்கிற
ஆதித்ய புராண ஸ்ரீ வராஹ புராண வசனங்களாலும் வேத பாஹ்ய லஷணம் என்கின்றன –

இப்படி வேத பாஹ்ய லஷணரான தாமச புருஷர்களாலே சேவ்யனாகையாலும்-
ஜ்ஞானாதி கார்யங்களாலும் -தேவதாத்வத்தாலும் ருத்ரனுக்கு சக்ருத் சத்வ குணம் உண்டேயாகிலும் –
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா -என்று குண த்ரய வைஷ்யன் ஆகையாலும்
தமோ குணம் உண்டாகையாலும்
அதுதான் ப்ரஹ்மாதிகளுக்கும் உண்டே யாகிலும் அவர்களிலும் -இவனுக்கு அதிசயித்து இருக்கையாலே –
ஆபேஷிகமான தாமசத்வ வ்யபதேசம் யுக்தமாகையாலும் -தானும் தாமச புருஷனாகையாலும் –
சாபேஷ்த்வ ஸூ சகங்களான ஜடா சர்மா வசனாதி சாதச தர்மங்களோடு கூடி இருக்கையாலும் ருத்ரனுக்கு உபாச்யத்வாதிகள் கூடாது

ஸ்ரீ புருஷ ஸூக்த பிரக்ரியையாலும் நாராயணனுடைய காரணத்வ முமுஷூ உபாச்யத்வ மோஷ பிரதத்வாதிகள் சித்தங்கள் –
நனு
இவனுக்கு அசாதாரணங்களான வாகன ஆயுத நாம் ச்ம்ருதிகளாலே அந்யதம சங்கீர்த்தனம் இல்லாமையாலும் –
ஈசான பதம் கிடக்கையாலும் நாராயண பரம் அன்றே என்னில் -அது அனுபபன்னம் –

சஹஸ்ர ஷீர்ஷத் வாதிகளைச் சொல்லுகையாலும் அவை தான்
இவனுக்கு அசாதாரணம் என்னும் இடம் நாராயண அநு வாகாதி சித்தங்கள் ஆகையாலும் –
லஷ்மீ பதித்தவ லிங்கத்தாலும் –
நாராயண பிரதிபாதிக ஸூ பால உபநிஷத்திலே புருஷ ஏவேதம்-என்று புருஷ ஸூக்த வாக்யத்தாலே நிகமிக்கையாலும் –
அதர்வணத்திலே வைஷ்ணவ்யாம் புருஷ ஸூகதம் -என்று வைஷ்ணவ மகா சாந்தி மந்த்ரமாக விநியோகிக்கையாலும்
சாந்தோக்யத்தில் ஏஷா வை வைஷ்ணவீ நாம சம்ஹிதா -என்கையாலும்-
பகவத் சமாராதன ரூப கர்மாதிகளிலே போதாயன ப்ரப்ருதி பரமர்ஷிகளாலே விநியுக்தங்கள் ஆகையாலும்
புருஷஸ்ய ஹரேஷ் ஸூ கதம் ஸ்வர்க்யம் தான்யம் யசஸ்கரம் என்கிற சௌநக வாக்யத்தாலும் பலவிடங்களிலும்
புருஷ சப்த பிரயோகம் பண்ணுகையாலும்
புருஷம் நாராயணம் என்கிற சமாக்யையாலும் நாராயண பரம் என்னும் இடம் சித்தம் –

இவ்விடத்தில் ஈசான சப்தம் நாராயண சப்தம் போலே சம்ஜ்ஞை யல்ல-
அம்ருதத்வஸ்யே சான் -என்கையாலே புருஷ சப்தம் இவன் பக்கலிலே ரூடம் –
சேதன சாமான்ய வாசியாகிற அவ்வளவால் பிரயுக்தமாகிறதன்று-சால பாத பாதி சப்தங்கள் போலே சாமான்ய விசேஷ வாசியாய் இருக்கும் –
முண்டகோப நிஷத்து தொடக்கமான பல உபநிஷத்துக்களிலும் –
புருஷ புண்டரீகாஷ-என்றும் –
தவிரத்வாத சேப்யஸ் தத்த்வேப்ய க்யாதோ அயம் பஞ்ச விம்சக –புருஷோ வா ஸூ தேவஸ்ஸ பரமாத்மேதி சோச்யதே-என்றும் –
வித்யாத்து புருஷம் பரம் -இத்யாத் யுப ப்ரும்ஹணங்களாலும்-
அதாதோ மகா புருஷஸ் யாஹாஹ–பரிசர்யாவிதிம் வ்யாக்யாச்யாம என்கிற போதாயன வசனத்தாலும் –
பரம பூமா நிவபதி பத்ய -என்கிற அர்வாசீன பிரசித்தியாலும்
புருஷ சப்தம் நாராயண பரம் என்னும் இடம் சித்தம் –

தத் புருஷாய வித்மஹே மஹா தேவாய தீ மஹி-என்றும் –
புருஷோ வை ருத்ர -இத்யாதி பிரதேசங்களில் ருத்ரனையும் புருஷ சப்தத்தாலே சொல்லா நின்றதே என்னில் –
அவ்வோ விடங்களில் நாமதயா ப்ரயுக்தம் ஆகிறதன்று-
நமசகார்யத்வ ஹேதுவான பரமாத்மா பிரகாரத்வம் அடியாக வந்த திரிபுர தஹன பராக்ரமாதி குண யோகம்
தொடக்கமான வற்றாலே பிரயுக்தம் ஆகிறது இத்தனை –

ஆக இப்படி பரத்வ சிஹ்னங்களான ஜகத் காரணத்வ-முமுஷு பாச்யத்வ மோஷ பிரதத்வங்கள் உள்ளது இவனுக்கே யாகையாலும்
சர்வே வேதா யத்பதமாம நந்தி -என்றும் –
சர்வே வேதா யத்ரைகம் பவந்தி -என்றும்
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும் –
வேதம் தானே தனக்கு பிரதிபாத்யன் நாராயணன் என்கையாலும்

வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -என்று நானே வேத பிரதிபாத்யன் என்று அவன் தானே சொல்லுகையாலும் –
நாராயண பரா வேதா -என்றும் –
வேதே ராமாயணே புண்யே பாரதேபரதர்ஷப –ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும்
ஏ நமேகே வதந்த்யக் நிம் மருதோ அன்யே பிரஜாபதிம் -இந்த்ரமேகே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்று
இங்கனே ரிஷிகளும் சொல்லுகையாலும்

ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்யா ச புன புன -இத மேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் சதா -என்றும்
தத்தவம் ஜிஜ்ஞா சமா நா நாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை –தத்த்வமேகோ மஹா யோகி ஹரிர் நாராயண பர -என்றும்
ஸ்ருதயாம் நரவ்யாக்ர வேத வேதாந்த நிச்சய –யஜ்ஞோ ஸோ யஜ்ஞபுருஷ புண்டரீகாஷ சம்ஜ்ஞித –யஸ்ஸ விஷ்ணு பரம் ப்ரஹ்ம எதோ நாவர்த்ததே புன -என்றும் –
விஷ்ணு ரேவ பரம் ப்ரஹ்ம த்ரிவேத மித பட்யதே –வேத சித்தாந்த மார்க்கே ஷூ தன்ன ஜா நந்தி மோஹிதா -என்றும்
யதே தத் பரமம் ப்ரஹ்ம வேத சாஸ்த்ரேஷூ பட்யதே-ச தேவ புண்டரீகாஷ ஸ்வயம் நாராயண பர -என்றும்
பகவான் வாஸூ தேவஸ்ஸ கீர்த்யதே அத்ர சநாதன –ச ஹி சத்யம் ருதஞ்சைவ பவித்ரம் புண்ய மேவச -என்று
பிரமாண தர்க்கங்களையிட்டு ஆராய்ந்தவர்கள் இவனையே பரதத்வம் என்று நிர்வஹிக்கையாலும்

அவற்றை ஒழியவே ப்ரஹ்ம விஷ்ணு சிவர்கள் மூவரிலும் அதிகர் ஆரோ வென்று ஆராய்ந்து
வா என்று ப்ருகுவைப் போகவிட்டுப் பரீஷித்து
தந்தி சம்யாத முனயோ விஸ்மிதா முக்த சம்சா –பூயாம்சம ஸ்ரத்ததூர் விஷ்ணும் யதாஸ் சாந்திர் யதோ அபயம் -என்று
சாந்த்யாதி குண யோகத்தாலே இவனையே அதிகன் என்று நிர்ணயிக்கையாலும் –

ஜ்ரும்பிதம் தத்த நுர்த்ருஷ்ட்வா சைவம் விஷ்ணு பராக்ரமை -அதிகம் மே நிரே விஷ்ணும் தேவாஸ் சர்ஷிகணாஸ் ததா -என்று
தேவர்கள் பரீஷித்து நிர்ணயித்த படியே பார்க்கவன் சொல்லுகையாலும் –

அவன் தான் ருத்ரன் பக்கலிலே செல்ல
அவன் த்யான பரனாய் இருக்க -நீ ஆரை த்யானம் பண்ணுகிறது என்று அவனைக் கேட்க –
யோகீச்வரம் ஜகன்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சனாதனம் -பத்ம நாபம் விசாலாஷம் சிந்தயாமி ஜகத்பதிம் -என்று
ஜகத் பதியான ஸ்ரீ மஹா விஷ்ணுவை த்யானம் பண்ணுகிறேன் என்று சொல்லுகையாலும்

நஹ்யே தஸ்மாதிதி நேத்யன்யத் பரமஸ்தி-என்றும் –
ந தச்யே சே கச்சன -என்றும் –
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -என்றும்
நாராயணாத் பரோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி –எதத் ரஹஅச்யம் வேதா நாம் புராணா நான்ச –சம்மதம் சத்தமா -என்றும்
ந பிரமாதும் மஹா பாஹூ யோகீ சக்யோ பாரத கேசவ ப்ரமேப்ய பரம் தஸ்மாத் விஸ்வ ரூபாந்த வித்யதோ -என்றும்
இவனில் காட்டில் பரராய் இருப்பார் இல்லை என்கையாலே இவனே சர்வ ஸ்மாத் பரன் –

பர ஸ்வரூப நிர்ணய பிரகரணம் முற்றிற்று

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading