ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள–12–கேசி/சீமாலிகன்/நரகன் /சிசுபாலன்/ வாணன் /குவலயா பீடம் /மல்லர் -கஞ்சன் -நிரசனங்கள் – —- அருளிச் செயல்கள்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு –
மாயப் பொறு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாய சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
இரும் கிம் மத களிறு ஈர்க்கின்றவனை பருங்கிப் பறித்துக் கொண்டாடும் பரமன்
வேழமும் –வென்று வருமவனே
தேனுகனும் முரனும் திண் திறல் வென் நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் ஆனை-
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆயமரிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரம் இன்றி யழித்தாடிய தாளிணையாய் -ஆய –
பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட பிள்ளை
கருத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் சிட்டுக் கன்று மேய்ப்பார்
புள்ளின் வாய் பிளந்திட்டாய் பொறு கரியின் கொம்பு ஒசித்தாய்
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே –
சீமாலிகனவோனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
தேனுகனாவி செகுத்து பனங்கனி தான் எறிந்திட்ட தடம் பெரும் தோள்
கடுவாய்ச்சின வெங்கட் களிற்றுனுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பானவன் போல் அடி வாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு
தேனுகன் பிலம்பன் –என்னும் தீப்பூடுகள் அடங்க வுழக்கி
கொலை யானை கொம்பு பறித்து –தேவனை நாடுதிறேல்
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை –தண் திரு மால் இரும் சோலையே
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் மலை –தென் திரு மால் இரும் சோலையே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை –திருமால் இரும் சோலையதே
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகள்ர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை –மால் இரும் சோலையதே
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக்காலை கருதும் மலை –மால் இரும் சோலையதே
பல பல நாளம் சொல்லிப் பலித்த சிசுபாலன் தன்னை அலைவலை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –திரு மால் இரும் சோலையதே
வில் பிடித்து இருத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி மல் பொருது எழப் பாய்ந்து அரையனை யுதைத்த மால் புருடோத்தமன்
மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன்

கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்

கால நேமி காலனே
மா பிளந்த கைத்தலத்த கண்ணன்
கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா கஞ்சனைக் கடிந்து மண்ணளந்து கொண்ட காலனே
பொற்றையுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை பற்றி யுற்று மருப்பொசித்த பாகனூர்
மோடியோடி லச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் களித்த ஆதிமால்
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம்மவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த
தோளில் இல்லை யாக்கினாய் கழற்கு ஆசையாம் அவர்க்கு அலால் அமரர் ஆகலாகுமே –
கால நேமியைக் கடிந்து –வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மின்னோ
கடும் கவந்தன் -வக்கரன் –முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கருத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட –நின் புகழ்க்கு அலால் ஓர் நேசமில்லை நெஞ்சமே
காய்சினத்த காசி மன்னன் வக்கரன் பவுன்டிரன் மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –எம் ஈசனே –

——————————————————————————————–

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாக்கணும் வீழ செற்றவன் தன்னை —திரு வல்லிக் கேணியில் கண்டேனே
படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை –எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே
வெம் சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்து
ஒரு மாய வானை யஞ்ச அதன் மருபபன்று வாங்கும் ஆயர் கொல்–என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே
இருங்கை ம்மா கரி முனிந்து பரியைக் கீறி –மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை–திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே
மா வாயினங்கம் மதியாது கீறி
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு–கூத்தன் என வருகின்றான் –தில்லைச் சித்ர கூடத்துள்ளானே
அஞ்சன மா மலை போலே மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து –கை தொழ வருவான் தில்லைச் சித்ர கூடத்துள்ளானே
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவன் கோன் தாளணைவீர் –காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே
போரானைக் கொம்பு ஒசித்த புட்பாகன் என்னம்மான்
வென்றி மிகு நரகனுரமது அழிய விசிறும் விறல் ஆழித் தடக்கையன்
கும்பமிகு மதயானை மருப்பு ஒசித்துக் கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் –நாங்கூர் அரிமேய விண்ணகரம்
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் –செகுத்தான்
வலி மிக்க கஞ்சனது உயிருண்டு இவ்வுலகுண்ட காளை கருதுமிடம் அரிமேய விண்ணகரம்
கும்பமிகு மதயானை பாகனோடும் குலைந்து வீழ கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்துறையுமிடம்-
-நாங்கை தன்னுள் திருத்தேவனார் தொகையே
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை யுதைதவன்
உறை கோயில் –நாங்கூர் வண் புருடோத்தமே
சாடு போய் விழத் தாள் நிமிர்த்து ஈசன் தன படையொடும் கிளையோடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன்
உறை கோயில் -நாங்கூர் வண் புருடோத்தமே
வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை–
நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை நாங்கை செம்பொன் செய் கோயிலினுள்ளே
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
தடக்கைம்மா மருப்பு வாங்கி –புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலிந்து கொன்று –நாங்கை மேய கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய் –நாங்கை காவளந்தண் பாடியே களை கண் நீயே
கானார் கரி கொம்பு ஒசித்த களிறே –திரு வெள்ளக் குளத்துள் ஆனாய் -அடியேனுக்கு அருள் புரியாயே
கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –ஏன் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும் –பார்த்தன் பள்ளி பாடுவாளே
கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திருவுருவன் –கோயில் –திரு வெள்ளி யங்குடி யதுவே
மா வாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம் –புள்ளம் பூதம் குடி தானே
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவனிடம் –புள்ளம் பூதம் குடி தானே
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழிடம் –தென்னரங்கமே
கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை –யான் கண்டது தென்னரங்கத்தே
ஆயிரம் குன்று சென்று தொக்கனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய –அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே
வக்கரன் வாய் முன் கீண்ட மாயன் –சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாளடைந்து உய்ந்தேனே
மல்லா மல்லமருள் மல்லர் மாள மல்லடர்ந்த்த மல்லா –நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர் –நறையூரே
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் –நறையூர் நின்ற நம்பியே
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கியோட விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் –நறையூர் நின்ற நம்பியே
பூணா தணலும் தரு கண் வேழம் மறுக்க வலை மறுப்பை பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க –கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண
கருத்துக் காஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா மங்கையுள் நின்றானை
கும்பமிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து –மாயோன் காண்மின்
ஊடேறு கஞ்சனோடும் மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற நீடேறு பெறு
வலித் தோளுடைய வென்றி –அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லருயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தாநூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே –
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் –கஞ்சனை யஞ்ச முன்கால் விசைத்த காளையராவர் கண்டார்
வணங்கும் அஞ்சன மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா
தும்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பின் அணையான்
ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை கொம்புலாம் பொழில் கோட்டியூர்
கண்டு போய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே
அன்ன நடை மடவாய்ச்சி வயிறடித்து அஞ்ச அருவரை போல் மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன்
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை வாழ்த்தி

———————————————————–

கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
கரவின்றி விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு எடுத்த செங்கண் அவன்

அடியாள் முன் கஞ்சனைச் சேற்று அமரர் ஏத்தும் படியான்

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –பேரார மார்வனார்
நின்று எதிராய நிறை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய வீரைஞ்நூறுடன் துணிய
மகனை சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என் நெஞ்சே நினை

யானை பிடித்து ஒசித்து –கோப்பின்னும் ஆனான் குறிப்பு

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோள் துணித்த வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி –

———————

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த திருபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
அங்கியும் போர் தொலைய பொரு சிறைப் புல்லைக் கடாவிய மாயன்
புள்வாய் பிளந்து களிறு அட்ட தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரான்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
புள்ளின் வாய் பிளந்தாய் –என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் தன செய்கை நினைத்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி என் நோவதுவே
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்–என்னப்பன் தன மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி
நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் சேட்பால்
பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட பாழடைந்த தன்மை யறிவாரை அறிந்துமே
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடி இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
மிகப் பல வசுரர்கள் வேண்டுருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ –

———————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading