உய்ய உலகு -பிரவேசம் –
கீழே ப்ரஹ்மா முதலானோர் அழையாது இருக்க –
சிலர் உபஹாரங்களை வர விடுவாரும்
உபஹாரங்களைக் கொண்டு வந்து அங்கீ கரிக்க வேணும் என்று தொழுவாரும் –
அவன் அழைக்கிறான் என்று அழைத்தாலும் வாராதாருமாய் -( மதி சந்திரன் )
நின்றது இவ்விபூதி –
அந்த விபூதியில் உள்ளார்
பிராட்டிமார் கொடுத்த உபஹாரங்களையும் கொண்டு ஆழ்வார் அழைத்தார் என்றால்
மகா மதிகள் ஆகையாலே வருவார்கள் இறே –
பவள வாயீர் வந்து காணீரே என்று
பல காலும் அழைக்கையாலே
த்ருதீய விபூதியில் உள்ள எல்லாரும் வருவார்கள் இறே –
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தாலும் –
தன்னுடையவர்களுக்கு பரதந்த்ரன் ஆகிறதாலும்
வசவர்த்தியாவன் இவன் ஒருவனும் இறே –
இவ்வர்த்தத்தை –
உய்ய உலகு -தொடங்கி-(1-5 )
மெச்சூது சங்கம் அளவும் -(2-1 )
யசோதை பிராட்டி பாசுரத்தாலே இவர் அனுபவித்து உகக்கிற அவையும் மங்களா சாசனம் இறே –
அவனை நியமிக்கையாலே –
பிள்ளைகளுடைய ந்ருத்த விசேஷங்களில் –
செங்கீரை என்ற ஒரு துறை யுண்டு -தமிழர் சொல்லுவது–அது ஆதல் –
கீர் -என்று ஒரு பாட்டாய்-
அதுக்கு நிறம் சிவப்பாகி
பாட்டுக்குத் தகுதியாக ஆடு -என்று நியமிக்கிறார் ஆதல் –
——————————————————————————-
உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா
ஊழி தோர் ஊழி பல வாலினிலை யதன்மேல்
பைய வ்யோகு துயில் கொண்ட பரம் பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதிச்
செலவு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய வெனக்கொரு காலாடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-1-
பதவுரை
உய்ய–(ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்து
(பின்பு ப்ரளயம் வந்த போது அவற்றை)
உண்ட–உள்ளே வைத்து ரக்ஷித்த
மணி வயிறா–அழகிய வயிற்றை யுடையவளே
பல ஊழி ஊழி தொறு–பல கல்பங்கள் தோறும்
ஆலின் இலை அதன் மேல்–ஆலிலையின் மேல்
பைய–மெள்ள
உயோகு துயில் கொண்ட– யோக நித்திரை செய்தருளின
பரம் பரனே–பர ஸ்மாத் பரனானவனே!
பங்கயம்–தாமரை மலர் போன்று
நீள்–நீண்டிருக்கின்ற
நயனம்–திருக் கண்களையும்
அஞ்சனம்–மை போன்ற
மேனியனே ஐய–திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
செய்யவள்–செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான
நின் அகலம்–உன் திரு மார்வானது
(இந் நிர்த்தனத்தால் அசையாமல்)
சேமம் என கருதி–ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு
செல்வு பொலி–ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான
மகரம்–திரு மகரக் குழைகளோடு கூடின
காது–திருக் காதுகளானவை
திகழ்ந்து இலக–மிகவும் விளங்கும்படி
எனக்கு–எனக்காக
ஒரு கால்–ஒரு விசை
செங்கீரை ஆடுக–செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்–இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே–போர் செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!! –
உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா-
அசந்நேவ-என்று மூல பிரக்ருதியிலே கிடந்த ஆத்மாக்களை
போக மோஷ யோக்யராக சிருஷ்டிக்க
ஸ்ருஷ்யரான அளவிலே மீண்டும் அபராதங்களிலே ப்ரவர்த்திக்கையாலே
சம்ஹரிக்க பிராப்தமாய் இருக்கச் செய்தேயும் சம்ஹரியாமல்
அழகிய திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கையாலே -உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா-என்கிறார் –
ஊழி தோர் ஊழி பல வாலினிலை யதன் மேல் –
கல்பம் தோறும் கல்பம் தோறும்
பல -என்கையாலே -கல்பங்கள் -அநேகம் -என்றபடி –
ஆலிலை என்று தோற்றுகிற அளவேயாய்
அதன் -என்று விசேஷிக்கையாலே முகிழ் விரிகிற யளவைக் காட்டுகிறது –
பைய வ்யோகு துயில் கொண்ட பரம்பரனே –
பைய -மெள்ள
லோக ரஷண சிந்தையோடு இலை அசையாமல் கண் வளர்ந்த பராத் பரன்
என்கையாலே பரத்வ ஸூசகமாய் இறே –
பங்கய நீள் அயனத்து அஞ்சன மேனியனே -செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதிச் –
பங்கய நீள் அயனமும் -அஞ்சன மேனியும் –
மேனியன் -என்று சம்போதித்து
உன் திரு மார்பைப் பற்றி இருக்குமவள் திருமேனி அசையாமல் பேண வேணும் -என்னும் கருத்தோடு ஆதல் –
அன்றிக்கே –
செம் செம் என்று சுமப்பாரைப் போலே அன்றே
அபிமத விஷயத்தில் அது மிகவும் வேணும் -இறே –
செலவு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய –
அவருக்கு போக்யமான திரு மகரக் குழைகள் திருக் காதிலே அசைந்து விளங்க –
செல்வாவது-அவளுக்கு மிகவும் போக்யமாகை இறே ( ரஹஸ்யம் பேச காதோடே பேசுவார்கள் )
ஐஸ்வர்யம் மிக்குப் படி சேர்ப்பு வுண்டார்க்கு இறே மகரக் குழை தானாவது –
ஐய -பிள்ளைகளை -ஐயா -அப்பா -என்னக் கடவது இறே –
வெனக்கொரு காலாடுக ஆடுக வாடுகவே-
உன் உகப்பாலும்
அவள் உகப்பாலும்
ஆடின அளவன்றிக்கே
எனக்காகவும் ஒரு கால் ஆட வேணும் -என்கிறார் –
இவர் உகப்பது
அமுது செய்த பதார்த்தங்களை ஜரிப்பைக்கு ஆயாசம் உண்டாக வேணும் என்று இறே –
செங்கீரை –
செங்கீரைக்குத் தகுதியான லஷணத்தோடே-
ஆயர்கள் போரேறே –
திரு வாய்க் குலத்துக்கு ஸிம்ஹ புங்கவம் போலே இருக்கிறவனே-
—————————————————————————–
கோளரி அரியின் உருவம் கொண்ட வுணனுடலம்
குருதி குழம்பு எழக் கூருகிரால் குடைவாய்
மீளவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக்
காள நன் மேகமவை கல்லோடு கால் பொழியக்
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே
ஆள வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே யாடுக யாடுகவே –1-5-2-
(கால் பொழிய கார் பொழிய பாட பேதம் -காற்று மேகம்
பெரும் காற்றோடு கல் வர்ஷமாக வர்ஷிக்க –
அன்றிக்கே –
கார் -என்ற பாடமான போது-
கல்லோடு கூட வர்ஷத்தை சொரிய என்று பொருளாக கடவது – )
பதவுரை
கோன்–வலிமையை யுடைய
அரியின்–(நா) சிங்கத்தின்
உருவம் கொண்டு–வேஷங்கொண்டு
அவுணன்–ஹிரண்யாஸுரனுடைய
உடலம்–சரீரத்தில்
குருதி–ரத்தமானது
குழம்பி எழ–குழம்பிக் கிளரும் படியாகவும்
அவன்-அவ் வஸுரனானவன்
மீள–மறுபடியும்
மகனை–தன் மகனான ப்ரஹ்லாதனை
மெய்ம்மை கொள கருதி–ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி
கூர் உகிரால்–கூர்மையான நகங்களாலே
குடைவாய்–(அவ் வசுரனுடலைக்) கிழித்தருளினவனே!
மேலை–மேன்மை பொருந்திய
அமரர் பதி–தேவேந்திரன்
மிக்கு வெகுண்டு வா–மிகவும் கோபித்து வா (அதனால்)
காளம்–கறுத்த
நில்–சிறந்த
மேகம் அவை–மேகங்களானவை
கல்லொடு–கல்லோடு கூடின
கார் பொழிய–வர்ஷத்தைச் சொரிய (கால் பொழிய கார் பொழிய பாட பேதம் -காற்று மேகம் )
கருதி–(‘இம் மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து
வரை–(அந்த) கோவர்த்தந கிரியை
குடையா–குடையாகக் கொண்டு
காலிகள்–பசுக்களை
காப்பவனே–ரக்ஷித்தருளினவனே!
ஆள–(இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண் பிள்ளைத் தனமுடையவனே!
எனக்கு. . . . . ஆடுக-.
கோளரி அரியின் உருவம் கொண்ட வுணனுடலம் குருதி குழம்பு எழக் கூருகிரால்
மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ வேஷத்தை அங்கீ கரித்து
ஹிரண்யன் பாவ த்ரயங்களாலே ஊட்டுப் பன்றி போலே வளர்த்த சரீரத்தை
நரசிம்ஹ அவதாரமாக நின்று
முஷ்டி ப்ரஹாரங்களைச் செய்து
குருதி குழம்பவும்
வாய் தகர்ந்து ரத்தம் உகளிக்கவும்
ஆயுதம் எடுக்க ஒண்ணாமையாலே முழுக் கூர்மையான
திரு வுகிரை ஆயுதமாகக் கொண்டு
பிளத்தல் கிழித்தல் செய்த அளவன்றிக்கே
குடைவாய்-மீளவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி –
மீளவும் -குடைவாய் -குடைகிறது –
ரத்தங்கள் தேங்கின பிரதேசங்கள் தோறும் திறந்து விடுவதாக விறே –
மெய்ம்மை யாவது –
பாகவத சேஷத்வம் இறே
அது உள்ளது பிரதம ரஹஸ்யத்திலே இறே –
(திருமந்திரம் -நம -பாகவத சேஷத்வ பாரதந்தர்ய பர்யந்தம் -அடியார்க்கு அடியார் )
அது அவன் வாயிலே ஒள்ளியவாகிப் போந்த சப்த மாத்ரத்தையே
அர்த்த சஹிதமாகச் சொன்னானாக
பிரதிபத்தி பண்ணினான் இறே –
தான் கருதினதாகையாலே இறே –
(பிள்ளை நாராயணா மட்டும் சொன்னாலும் -அனைத்தையும் சேர்த்து –
சொல்லையும் மட்டும் இல்லாமல் பொருளையும் -அதிலும் ஆழ்ந்த பொருளையும் -கொண்டு
தான் கருதினதாகையாலே இறே )
இதுக்கு கீழ் அசுரர்களால் வந்த பிராதிகூல்யம் சொல்லிற்று
மேல் -தேவர்களால் ஆஸ்ரிதர்க்கு வந்த பிராதி கூல்யத்தைப் போக்கின படி சொல்லுகிறது –
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லோடு கால் பொழியக்-
நாலு நாள் மனுஷ்யரைக் காட்டில் இருக்கிறோம் என்கிற மேன்மையை யுடையவர் ஆகையாலே -அமரர் -என்கிறது –
இனி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் கர்த்தாவுமாய்
இவர்களுக்கு பதி யாகையாலே -அமரர் பதி -என்கிறது -இந்த்ரனை –
இவன் எனக்கிட்ட சோற்றை யுண்டவன் ஆர் -என்று பசியாலே மிகவும் கோபித்து வர
கடலை வறளாகப் பருகின நன் மேகங்கள் ஆனவை காற்றோடு கூடி கல் மழையைப் பொழிய
நன் மேகம் -என்றது -இந்த்ரன் சொன்ன விபரீதம் செய்கையாலே
முன்பு நன்மை இறே போந்து செய்தன
அவை இறே இப்போது அவன் கோபத்துக்கு அஞ்சி
பெரும் காற்றோடு கூட கல் மலை பொழிந்து நலிகிறது –
அன்றிக்கே
கார் -என்ற பாடமான போது மழையாகக் கடவது –
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே –
முன்பே தாம் அமுது செய்யக் கருதி
இந்தரனுக்கு இடுகிற சோற்றை இப் பர்வததுக்கு இடுங்கோள்
இது உங்களுக்கு ஆபத்து காலத்துக்கு ரஷிக்கும்-என்று
தான் அருளிச் செய்ததைக் கருதி இறே
இந்த ஆபத்திலே அவ்வரை தன்னையே குடையாக எடுத்தது
இடையர்களையும் இடைச்சிகளையும் ரஷிப்பவன் என்னாதே-காலிகள் காப்பவனே -என்றது –
ரஷித்தவனை அறிவாரைச் சொல்ல வேணும் இறே –
(ஸ்ரீ மத் பாகவதம் சுரபி கோவிந்த பட்டாபிஷேகம் செய்த ஸ்லோகங்கள்
ஶ்ரீப⁴க³வானுவாச
மயா தே(அ)காரி மக⁴வன் மக²ப⁴ங்கோ³(அ)னுக்³ருʼஹ்ணதா .
மத³னுஸ்ம்ருʼதயே நித்யம்ʼ மத்தஸ்யேந்த்³ரஶ்ரியா ப்⁴ருʼஶம் .. 15..
மாமைஶ்வர்யஶ்ரீமதா³ந்தோ⁴ த³ண்ட³பாணிம்ʼ ந பஶ்யதி .
தம்ʼ ப்⁴ரம்ʼஶயாமி ஸம்பத்³ப்⁴யோ யஸ்ய சேச்சா²ம்யனுக்³ரஹம் .. 16..
க³ம்யதாம்ʼ ஶக்ர ப⁴த்³ரம்ʼ வ꞉ க்ரியதாம்ʼ மே(அ)னுஶாஸனம் .
ஸ்தீ²யதாம்ʼ ஸ்வாதி⁴காரேஷு யுக்தைர்வ꞉ ஸ்தம்ப⁴வர்ஜிதை꞉ .. 17..
அதா²ஹ ஸுரபி⁴꞉ க்ருʼஷ்ணமபி⁴வந்த்³ய மனஸ்வினீ .
ஸ்வஸந்தானைருபாமந்த்ர்ய கோ³பரூபிணமீஶ்வரம் .. 18..
ஸுரபி⁴ருவாச
க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ன் விஶ்வாத்மன் விஶ்வஸம்ப⁴வ .
ப⁴வதா லோகநாதே²ன ஸநாதா² வயமச்யுத .. 19..
த்வம்ʼ ந꞉ பரமகம்ʼ தை³வம்ʼ த்வம்ʼ ந இந்த்³ரோ ஜக³த்பதே .
ப⁴வாய ப⁴வ கோ³விப்ரதே³வானாம்ʼ யே ச ஸாத⁴வ꞉ .. 20..
இந்த்³ரம்ʼ நஸ்த்வாபி⁴ஷேக்ஷ்யாமோ ப்³ரஹ்மணா நோதி³தா வயம் .
அவதீர்ணோ(அ)ஸி விஶ்வாத்மன் பூ⁴மேர்பா⁴ராபனுத்தயே .. 21..
ஶ்ரீஶுக உவாச
ஏவம்ʼ க்ருʼஷ்ணமுபாமந்த்ர்ய ஸுரபி⁴꞉ பயஸா(ஆ)த்ம ந꞉ .
ஜலைராகாஶக³ங்கா³யா ஐராவதகரோத்³த்⁴ருʼதை꞉ .. 22..
இந்த்³ர꞉ ஸுரர்ஷிபி⁴꞉ ஸாகம்ʼ நோதி³தோ தே³வமாத்ருʼபி⁴꞉ .
அப்⁴யஷிஞ்சத தா³ஶார்ஹம்ʼ கோ³விந்த³ இதி சாப்⁴யதா⁴த் .. 23..
ஸகோ³னாஸங்கோ³கோ³ தத்ராக³தாஸ்தும்பு³ருநாரதா³த³யோ
க³ந்த⁴ர்வவித்³யாத⁴ரஸித்³த⁴சாரணா꞉ .
ஜகு³ர்யஶோ லோகமலாபஹம்ʼ ஹரே꞉
ஸுராங்க³னா꞉ ஸன்னந்ருʼதுர்முதா³ன்விதா꞉ .. 24..
தம்ʼ துஷ்டுவுர்தே³வநிகாயகேதவோ
ஹ்யவாகிரம்ʼஶ்சாத்³பு⁴தபுஷ்பவ்ருʼஷ்டிபி⁴꞉ .
லோகா꞉ பராம்ʼ நிர்வ்ருʼதிமாப்னுவம்ʼஸ்த்ரயோ
கா³வஸ்ததா³ கா³மநயன் பயோத்³ருதாம் .. 25..
நானாரஸௌகா⁴꞉ ஸரிதோ வ்ருʼக்ஷா ஆஸன் மது⁴ஸ்ரவா꞉ .
அக்ருʼஷ்டபச்யௌஷத⁴யோ கி³ரயோ(அ)பி³ப்⁴ரது³ன்மணீன் .. 26..
க்ருʼஷ்ணே(அ)பி⁴ஷிக்த ஏதானி ஸத்த்வானி குருநந்த³ன .
நிர்வைராண்யப⁴வம்ʼஸ்தாத க்ரூராண்யபி நிஸர்க³த꞉ .. 27..
இதி கோ³கோ³குலபதிம்ʼ கோ³விந்த³மபி⁴ஷிச்ய ஸ꞉ .
அனுஜ்ஞாதோ யயௌ ஶக்ரோ வ்ருʼதோ தே³வாதி³பி⁴ர்தி³வம் .. 28..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ பூர்வார்தே⁴ இந்த்³ரஸ்துதிர்நாம ஸப்தவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 27..)
ஆள வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே யாடுக யாடுகவே —
ரஷித்த ஆண்மையை யுடையவன் என்னுதல்
என்னை ஆள வேண்டி இருந்தாய் ஆகில் எனக்கு ஒரு கால் ஆடுக என்னுதல்
நான் யுன்னை நியமித்து ஆள வேண்டில் எனக்கு ஒரு கால் ஆடுக –
செங்கீரை –
தமிழர் யுடைய பிள்ளைக் கவி ந்யாயம் ஆகவுமாம் –
———————————————————————————
நம்முடை நாயகனே நான் மறையின் பொருளே
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒரு கால்
தம்மனை யானவனே தரணி தல முழுதும்
தாரகை யின்னுலகம் தடவி யதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுகவாடுகவே –1-5-3-
பதவுரை
நம்முடை–எங்களுக்கு
நாயகனே–நாதனானவனே!
நால் மறையின்–நாலு வேதங்களுடைய
பொருளே–பொருளாயிருப்பவனே!
நாபியுள்–திரு நாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்–நல்ல தாமரை மலரிற் பிறந்த
நான்முகனுக்கு–பிரமனுக்கு
ஒருகால்–அவன் வேதத்தைப் பறி கொடுத்துத் திகைத்த காலத்தில்
தம்மனை ஆனவனே–தாய் போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்–பூமி யடங்கலும்
தாரகையின் உலகும்–நக்ஷத்ர லோக மடங்கலும்
தடவி–திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன் புறமும்–அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம–பூர்ணமாம்படி
வளர்ந்தவனே–த்ரி விக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்–குவலயாபீடமென்ற யானையும்
ஏழ் விடையும்–ஏழு ரிஷபங்களும்
விரவிய–(உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்–ஸமயத்திலே
வென்று–(அவற்றை) ஜயித்து
வருமவனே–வந்தவனே!
அம்ம–ஸ்வாமி யானவனே!
எனக்கு . . . ஆடுக.
நம்முடை நாயகனே –
என்னுடைய ஸ்வாமி யானவனே
நான் மறையின் பொருளே –
இவருக்கு நாயகனான பின்பு இறே நான்மறையின் பொருளாய்த்ததும்-
(பெரியாழ்வாருக்கு நாயகனாய் ஆன பின்பே நாராயண அநு வாகமும் உள்ளதாயிற்று )
அதாவது –
நாராயண அனுவாகம் தலைப் பெறுகை இறே
நான்மறை -அநந்த வேத உப லஷணம்
வேதைஸ்ஸ சர்வைர் அஹமேவ வேத்ய -விறே –
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒரு கால் தம்மனை யானவனே –
ஒருகால் நற்கமலம் நான் முகனார் தமக்கும் நாவியுள் தம்மனை யானவனே –
ஒரோ காலங்களிலே திரு நாபி கமலத்திலே விகசிதமான தாமரையிலே உத்பவித்த நான்முகனார் தமக்கும்
தாமரைக்கும் ஜன்ம பூமி யானவனே
அன்றிக்கே
மகர ஒற்று னகர ஒற்றாய்-நான்முகன் தன் அனை-என்று
நான் முகனுக்கு அன்னை என்றுமாம் –
தரணி தல முழுதும் தாரகையின்னுலகம் தடவி –
அந்த ப்ரஹ்மாவும் ஆராத்யன் ஆகைக்காக
அந்ய சேஷ பூதர் வர்த்திக்கிற பூதலம் அடங்கலும்
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய பரர் வர்த்திக்கிற நஷத்ர பதம் முதலான உபரிதன லோகங்களையும்
நிலா தென்றல் போலே ஸ்பர்சித்து-
யதன் புறமும்-
அண்ட பித்திக்கு அப் புறமும் –
விம்ம வளர்ந்தவனே –
இரண்டு திருவடிகளாலே தடவி
கார்யம் பலித்த வாறே பூரித்த படி –
வேழமும் ஏழ் விடையும்
குவலயா பீடமும்
ஏழு ருஷபங்களும் –
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
நெஞ்சு கலந்த காலத்தில் –
வேலை -அளவும் -பொழுதும் -எல்லையும் செயலும்
எல்லை என்றாலும் ஏலை என்றாலும் -ஏகாரம் குறைந்து எல்லையைக் காட்டும்
வேலவை -என்ற பாடமானாலும் எல்லையைக் காட்டிப் பொருள் ஒக்கும் –
வென்று வருமவனே –
வேழத்தை ஒரு காலத்திலும்
ருஷபங்களை ஒரு காலத்திலேயும் வென்றாலும்
பிராதிகூல்யம் துல்யம் ஆகையாலே சேர அருளிச் செய்கிறார் –
சாது ஜனங்களுக்கும்
அபிமத விஷயத்துக்கும்
பிரதிகூல்ய பிரதிபந்தகங்களை வென்றது
தம் பேறு ஆகையாலே –
அம்ம -என்கிறார்
அம்ம வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே —
அன்றிக்கே
இவன் ஜெயித்து வந்தது
இவனை இன்னும் ஒன்றிலே மூட்டும் என்று பயப்பட்டு
அம்ம -என்கிறார் ஆதல் –
—————————————————————–
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது யுண்டவனே
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற வென் கன்றே
தேனுகனும் முரனும் திண் திரள் வென் நரகன்
என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லும்
ஆனை-எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுகவாடுகவே –1-5-4-
பதவுரை
வானவர் தாம்–தேவர்கள்
மகிழ– மகிழும்படியாகவும்
வல் சகடம்–வலியுள்ள சகடாஸுரன்
உருள–உருண்டு உரு மாய்ந்து போம்படி யாகவும்
வஞ்சம்-வஞ்சனையை உடையளான
பேயின்–பூதனையினுடைய
முலை–முலை மேல் தடவிக் கிடந்த
நஞ்சு–விஷத்தை
அமுது உண்டவனே–அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே!
(நஞ்சு அம்ருதமாகும் முஹூர்த்தத்தில் திரு அவதரித்து அமுது செய் தருளினவனே! )
கானகம்–காட்டிலுள்ளதான
வல்–வலிமை பொருந்திய
விளவின்–விளா மரத்தினுடைய
காய்–காய்களானவை
உதிர–உதிரும்படி
கருதி–திருவுள்ளத்திற் கொண்டு
கன்று அது கொண்டு–கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்–(விளவின் மேல்) எறிந்தவனாய்
கரு நிறம்–கறுத்த நிறத்தை யுடையனாய்
என் கன்றே–என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்–தேனுகாஸுரனும்
முரனும்–முராஸுரனும்
திண் திறல்–திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்–கொடுமை யுடையனான
நரகன்–நரகாஸுரனும்
என்பவர் தாம்–என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய–மாளும்படியாக
செரு–யுத்தத்திலே
அதிர–மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்–எழுந்தருளுமவனான
ஆனை–ஆனை போன்ற கண்ணனே!
எனக்கு . . . ஆடுக-.
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது யுண்டவனே-
தேவர்கள் பிரியப்ப்படும்படி சகடாசூரனை நிரசித்து
தாய் போலே வஞ்சித்து வந்த பூதனையின் முலையிலே கொடியதான அந்த நஞ்சை யுண்டவனே
அன்றியிலே
நஞ்சமுது -என்ற சமஸ்த பதமான போது
என் பாக்யத்தால் நஞ்சு அமுதாயிற்றே -என்னுதல்
ஜாதமான முஹூர்த்தத்தாலே யாதல் -என்னுதல்
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற வென் கன்றே –
காட்டிலே கன்று மேய்க்கிற இடத்திலே பெருத்த விளாவாய் காய்ந்து நின்றும்
கன்றாய் கன்றுகளோடு கலந்து மேய்க்கிற அளவிலே
இவை அசுர மயங்களாய் இருக்கும் -என்று திரு உள்ளம் பற்றி
அந்த கன்றான அசுரனை எடுத்து விளாவின் காயும் கொம்பும் உதிர எறிந்து முடிந்து போகையாலே
திரு மேனி புகர் பெற்றபடி –
என் கன்று இறே கன்றை எடுத்து எறிந்தது –
தேனுகனும் முரனும் திண் திரள் வென் நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் ஆனை-
தேனுகன் முதலாக
சமர்த்தரும் கொடியருமாய் இருக்கிற அசுர வர்க்கம் அடைய
நசிக்கும் படி யுத்தத்திலே ஒரு மத்த கஜம் போலே அதிரச் சென்றபடி –
ஆனை நடையிலே அதிர்ச்சி கூடுமோ என்னில் –
நடந்த கடுமையாலே -அதிர -என்கிறது
ஆனை போலே என்னாதே -ஆனை -என்றது முற்றுவமை –
————————————————————————–
மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார்
வைத்தன நெள் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த விணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன்
முன்ன முகத் தணியார் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-5-
பதவுரை
வார் குழல்–நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார்–நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்ரீகள்
வைத்தன–சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து–மத்தாலே
அளவும்–அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்–தயிரையும்
நெய்–நெய்யையும்
களவால்–திருட்டு வழியாலே
வாரி–கைகளால் அள்ளி
விழுங்கி–வயிறார உண்டு
உன்னிய–உன்னை நலிய வேணும் என்னும் நினைவை யுடையராய்
ஒருங்கு–ஒருபடிப்பட
ஒத்த–மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்–இரட்டை மருத மரமாய்க் கொண்டு
வந்தவரை–வந்து நின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்–துடைகளாலும் கைகளாலும் (ஊரு கரம் -வடமொழி சொற்கள் )
உந்திய–இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்–வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த–அப்பனே!
முத்து–திரு முத்துக்கள் தோன்றும்படி
இன்–இனிதான
இள முறுவல்–மந்தஹாஸமானது
முற்ற–பூர்ணமாக
வருவதன் முன்–வெளி வருவதற்கு முன்னே
முன்னம் முகத்து–முன் முகத்திலே
அணி ஆர்–அழகு மிகப் பெற்று
மொய்–நெருங்கி யிரா நின்ற
குழல்கள்–திருக் குழல்களானவை
அலைய–தாழ்ந்து அசையும்படி
எனக்கு . . . . ஆடுக-.
வார் குழல் –
தாழ்ந்த குழல் என்னுதல்
ஒப்பம் செய்த குழல் என்னுதல் –
கடைகைக்கு யோக்யமாக பல பாத்ரங்களில் வைத்த தயிரும் நெய்யையும்
க்ருத்ரிமத்தாலே திருக் கைகளால் ஆர வாரி யமுது செய்து –
ஒருங்க ஒத்த -இத்யாதி
இணை -என்று இரண்டாய்
தன்னில் ஒத்து உன்னிய மருதமாய் வந்தவரை
ஒருங்கே சேர மறிந்து விழும்படி
திருத் துடையாலும் திருத் தோள்களாலும் தள்ளின கடிய சாமர்த்தியத்தை யுடையவனே –
முத்து -இத்யாதி
திரு முத்துக்கள் தோன்றும்படி முறுவல் முதிர வருவதற்கு முன்பே
திரு முக மண்டலத்துக்கு மேலாக திரு நெற்றியிலே கவியும்படி
நெருங்கி அழகியதான திருக் குழல்கள் அலைய
அத்த
அப்பனே –
———————————————————————-
காயா மலர் நிறவா கரு முகில் போல் உருவா
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே
ஆயமறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை
அந்தரமின்றி யழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-6-
பதவுரை
காய மலர்–காயாம் பூப் போன்ற
நிறவா–நிறத்தை யுடையவனே!
கரு முகில் போல்–காள மேகம் போன்ற
உருவா–ரூபத்தை யுடையவனே
கானகம்–காட்டில்
மா மடுவில்–பெரிய மடுவினுள்ளே கிடந்த
காளியன்–காளிய நாகத்தினுடைய
உச்சியிலே–தலையின் மீது
தூய–மனோஹரமான
நடம்–நர்த்தநத்தை
பயிலும்–செய்தருளின
சுந்தர–அழகை யுடையவனே!
என் சிறுவா–எனக்குப் பிள்ளை யானவனே!
துங்கம்–உன்னதமாய்
மதம்–மதத்தை யுடைத்தான
கரியின்–குவலயாபீடமென்னும் யானையினது
கொம்பு–தந்தங்களை
பறித்தவனே–முறித்தருளினவனே!
ஆயம் அறிந்து–(மல்ல யுத்தம்) செய்யும் வகை யறிந்து
பொருவான்–யுத்தம் செய்வதற்காக
எதிர் வந்த–எதிர்த்து வந்த
மல்லை–மல்லர்களை
அந்தரம் இன்றி–(உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி
அழித்து–த்வம்ஸம்செய்து
ஆடிய–(இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த
தாள் இணையாய்–திருவடிகளை யுடையவனே!
ஆய–ஆயனே!
எனக்கு. . . ஆடுக-.
காயா மலர் நிறவா கருமுகில் போல் உருவா –
அப்போது அலர்ந்த செவ்விக் காயம் பூ போலே
இருக்கிற திரு நிறத்தையும்
கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலே இருக்கிற
திரு மேனியையும் யுடையவனே –
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும்
யமுனா தீரச் சோலை நடுவில் பெரிய மடுவிலே கிடக்கிற காளியன் பணம் விரித்தாட
அதனுடைய உச்சியிலே பரத சாஸ்த்ரத்திலே சொல்லுகிற படி தூய நடம் என்னுதல்
பரத சாஸ்தரத்துக்கு ஹேதுவாம் என்னுதல் இறே ந்ருத்தத்துக்கு தூய்மை யாவது
இப்படி இருக்கும் ந்ருத்தத்தை இறே பண்ணிற்று –
(பிருந்தாவன பண்டிதன் -தயிர் கடையும் ஓசையால் கற்ற நாட்டிய சாஸ்திரம் )
சுந்தர வென் சிறுவா –
அழகு விளங்கா நிற்பானாய்
என்னுடையவன் -என்று நான் அபிமாநிக்கும்படி
எனக்கு சிறு பிள்ளை யானவனே –
உனக்கு சிறுக்கனான எனக்கு சிறுக்கனானவனே –
(உனக்கு பரதந்த்ரனான அடியேனுக்கு நீ பரதந்த்ரனாகிறாயே )
துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே –
மிக்க மதத்தை யுடைத்தான கரி என்னுதல்
ஒக்கத்தையும் மதத்தையும் யுடைத்தான கரி என்னுதல்
இப்படி இருக்கிற குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன பிடுங்கினவனே –
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
மல் பொரும் விகல்பங்களை சாதித்து
அறிந்த பிரகாரம் தோன்ற எதிரே பொருவதாக வந்து அணிந்து நின்ற மல்லரை –
அந்தரமின்றி யழித்து-
அவர்கள் அணிந்து நின்றால்
தானும் எதிரே சென்று நின்று பாஷை கூறி பொருகை அன்றிக்கே
இடைவெளி தோன்றாத படி சீக்கிரமாகச் சென்று
மல் பொரும் கிரமத்திலே திருவடிகளாலே கூட்டி
அவர்களுடைய எலும்புகள் முறிந்து வெண் கலப்பை போல் தூக்கி எடுக்கும் படி நெரித்து
ஆயம் -மல்லில் கூறுபாடு (ஸூஷ்மம் )
அந்தரம் -அவகாசம்
அன்றிக்கே
அந்தரமின்றி யாவது -உடலும் உடலும் இடை வெளி அறப் பொருந்தினபடி
அன்றிக்கே
அந்தரமாவது -பொல்லாங்காய்-தனக்கு பொல்லாங்கு இன்றியிலே என்னவுமாம் –
ஆடிய தாள் இணையாய் –
இன்னும் ஆரேனும் வருவார் உண்டோ -என்று
சஞ்சரித்த படி –
ஆய –
உனக்காய எனக்கு-என்னுதல்
ஆயனே -என்னுதல் –
————————————————————-
துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கரும் குழல் நல் தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை ஏழவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிக சோதி புகத்
தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய வென்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-7-
பதவுரை
துப்பு உடை–நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான
ஆயர்கள் தம்–இடையர்களுடைய
சொல்–வார்த்தையை
வழுவாது–தப்பாமல்
ஒரு கால்–ஒரு காலத்திலே
தூய–அழகியதாய்
கரு–கறுத்திரா நின்றுள்ள
குழல்–கூந்தலை யுடையளாய்,
நல் தோகை–நல்ல தோகையை யுடைய
மயில் அனைய–மயில் போன்ற சாயலை யுடையளான
நப்பின்னை தன் திறமா–நப்பின்னைப் பிராட்டிக்காக
நல்–(கொடுமையில்) நன்றான
விடைஏழ்–ரிஷபங்களேழும்
அவிய–முடியும்படியாக
நல்ல திறல் உடைய–நன்றான மிடுக்கை யுடையனாய்
நாதன் ஆனவனே–அவ் விடையர்களுக்கு ஸ்வாமி யானவனே!
தன்–தன்னுடைய
மிகு சோதி–நிரவதிக தேஜோ ரூபமான் பரம பதத்திலே
புக–செல்லும் படியாக
தனி-தனியே
ஒரு-ஒப்பற்ற
தேர்–தேரை
கடலி–கடத்தி
தப்பின–கை தப்பிப் போன
பிள்ளைகளை–வைதிகன் பிள்ளைகளை
தாயொடு கூட்டிய–தாயோடு கூட்டின
என் அப்ப-என் அப்பனே!
எனக்கு. . . . ஆடுக-.
துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
துப்பு -மிடுக்கு
தூய கரும் குழல் நல் தோகை மயிலனைய நப்பினை தன் திறமா நல்விடை ஏழவிய
குழலுக்கு தூய்மை யாவது -கிருஷ்ணன் விரும்புகை
நன்றான தோகையை யுடைய மயில் போன்ற
சாயலை யுடைய நப்பின்னை பிராட்டி ஹேதுவாக
இவளோடு சேரலாமாகில்
ஆர் சொல்லிற்றுச் செய்தால் நல்லது என்று இறே
துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவ ஒண்ணாது -என்று ஒரு கால விசேஷத்திலே
கொடிய ரிஷபங்கள் ஏழையும் விளக்குப் பிணம் போலே உருக் காண ஒண்ணாத படி
அவித்த சாமர்த்யத்தைக் கண்டு
இடையர்-எங்கள் குல நாதன் -என்று கொண்டாடும்படி
அவர்களுக்கு நாதனும் ஆனவனே
துப்பு -என்று நெஞ்சில் வலி யாகவுமாம்-உடலில் வலி யாகவுமாம்– அதாவது
ருஷபங்களின் வன்மையும் இவனுடைய திரு மேனியில் மென்மையையும்
பார்க்க அறியாத மிடுக்கு இறே –
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே –
திறலுக்கு நன்மையாவது -பரார்த்தமாகை இறே –
இவ் வளவேயோ –
உபய விபூதிக்கு நாதனான படியை அருளிச் செய்கிறார் –
தப்பின பிள்ளைகளைத் தன மிக சோதி புகத் தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய வென் –
பிரசவசம் அநந்தரம் மாதா எடுப்பதற்கு முன்னம் காணாமல் போன வைதிகர் பிள்ளைகளை
தன்னதாய் இருக்கிற தன்னுடைச் சோதியிலே செல்லத்
தானே
அத்விதீயமான தேரை நடாத்தி
அங்கே சென்று புக்கு –
பிள்ளைகளைக் கொண்டு வந்து
மாதா வானவள் -என் பிள்ளைகள் -என்று உச்சி மோந்து
அணைக்கும் படி அவளோடு கூட்டின இம் மகா உபகாரத்தை
தமக்குச் செய்ததாகக் கொண்டு
அப்ப –
என்னப்பா -என்கிறார் –
——————————————————————–
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக் கரசே கண்ணபுரத் தமுதே
என் னவலம் களைவாய் ஆடுக செங்கீரை
ஏழுலகம் யுடையாய் யாடுக வாடுகவே –1-5-8-
பதவுரை
மன்னு–(ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ
குறுங்குடியாய்–திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே!
வெள்ளறையாய்–திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்–மதிளாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு–திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே–அதிபதி யானவனே!
கண்ணபுரத்து–திருக் கண்ண புரத்திலே நிற்கிற
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் அவலம்–என் துன்பங்களை
களைவாய்–நீக்குபவனே!
உன்னை–(மகோ உதாரனான ) உன்னை
ஒக்கலையில்–இடுப்பிலே
கொண்டு–எடுத்துக் கொண்டு
தம் இல்–தங்கள் அகங்களிலே
மருவி–சேர்ந்து
உன்னொடு–உன்னோடு
தங்கள்–தங்களுடைய
கருத்து ஆயின செய்து–நினைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்–மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற
கன்னியரும்-இளம் பெண்களும்
மகிழ–(இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும் படியாகவும்
கண்டவர்–(மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்–கண்களானவை
குளிர–குளிரும் படியாகவும்
கற்றவர்–(கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றி வர–பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படி யாகவும்
பெற்ற–உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு–என் விஷயத்திலே
அருளி–கிருபை செய்து
செங்கீரை ஆடுக-;
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவளே!
ஆடுக ஆடுக-.
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
தர்சன மாத்ரத்திலே
திருஷ்டி சித்த அபஹாரம் பண்ண வல்ல உன்னையும் –
இது என்ன அருமை தான் –
இவன் மத்யம அங்கத்திலே இருக்க
தம் தாம் க்ருஹங்கள் அறிந்த படி என் –
உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் –
ஏவம் பிரகாரனான உன்னோடு
தங்கள் நினைவின் படியே பரிமாறி
மீண்டும் மாதாவின் பக்கலிலே கொண்டு வருகைக்கு உள்ள அருமை
தம் தாம் க்ருஹங்களில் கொண்டு போனதிலும் அரிது இறே
கன்னியரும் மகிழக் –
மாதா மகிழும் அளவன்றிக்கே
அபிமதைகள் ஆனவர்களும் உகக்க –
விட்டுப் போகிறவர்கள் மகிழ்கிறது -விட்டுப் போனால் வரும் வ்யசனம் அறியாத மௌக்த்யம் இறே –
கண்டவர் கண் குளிரக் –
போக்கு வரத்தில் பாவ பந்தம் இன்றியே
கண்டவர்களுக்கும் இள நீர் குழம்பு போலே கண் குளிரும் போலே காணும் –
கற்றவர் தெற்றி வரப் –
நாலு சப்தம் தொடுக்க கற்றவர்கள்
பிள்ளையுடைய ஸ்திதி கமான சயநாதிகளை கண்டு
தங்கள் ப்ரீதியாலே பிள்ளைக் கவி பாடுவார் –
பெற்ற வெனக்கருளி-
இது மேலே அன்வயிக்கக் கடவது –
மன்னு குறுங்குடியாய் –
திருக் குருங்குடியிலே நித்ய வாசம் பண்ணுகிறவனே –
நப்லாவயதி சாகர -என்னா நின்றது இறே –
(கடல் வசுதேவர் திருமாளிகையை அழிக்க வில்லை -புராண ஸ்லோகம் )
வெள்ளறையாய் –
இவர் விசேஷித்து மங்களா சாசனம் பண்ணும் தேசம் இறே திரு வெள்ளறை-
மதிள் சூழ் சோலை மலைக்கரசே –
இவர் நிர்பரராம் படி திரு மதிள் யுண்டாவதே-அத்தேசத்துக்கு
திரு மதிளாலே சூழப் பட்ட திருமலையிலே நித்ய வாசம் செய்து
ஈரரசு தவிர்த்து நின்றவனே –
கண்ணபுரத்தமுதே –
மங்களா சாசனம் பண்ண -கற்றவர்கள் தாம் வாழும் கண்ணபுரம் -இறே –பெருமாள் திருமொழி -8-4-
அமுதே என்னவலம் களைவாய் –
ஜ்ஞான சங்கோசம் பிறவாமல் ரஷகத்வத்தை மாறாடி நடத்துகையாலே
அமுதே -என்னவலம் களைவாய் -என்கிறார்
இவருக்கு அவலம் யுண்டாவது
அவன் நியாமகன் ஆகாது ஒழியில் இறே
இவர் அவனை நியமித்து
இவை முதலான திவ்ய தேசங்களிலே நித்ய சந்நிதி பண்ண வேணும் -என்று
நிறுத்தினார் போலே காணும்
(நான்கு திவ்ய தேசங்களிலும் நின்ற திருக்கோலம் இவர் நியமித்தபடியே )
பெற்ற வெனக்கு அருளி –
பெற்றாரும் தாமே போலே காணும் –
ஆடுக செங்கீரை -ஏழுலகம் யுடையாய் யாடுக வாடுகவே —
இவன் இவருக்கு நியாம்யன் ஆனால் இறே ஏழு யுலகும் யுடையவனாவது
உன் உடைமையை நோக்கிக் கொள்ளாய் -என்கிறார்-
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ணபுரத்தமுதே
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகம் யுடையாய்
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற வெனக்கருளியாடுகவாடுகவே —
என்று அந்வயம் –
——————————————————————
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும்
பங்கயம் நல்ல கற்பூரமும் நாறிவரக்
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைச்
கோமள வெள்ளி முளைப் போல் சில பல்லிலக
நீல நிறத்தழகார் ஐம் படையின் நடுவே
நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ
ஏலு மறைப் பொருளே யாடுக செங்கீரை
ஏழு யுலகம் யுடையாய் யாடுக யாடுகவே –1-5-9-
பதவுரை
மறை–வேதத்தினுடைய
ஏலும்–தகுதியான
பொருளே–அர்த்தமானவனே!
பாலொடு–பாலோடே கூட
நெய்–நெய்யும்
தயிர்–தயிரும்
ஒண் சாந்தொடு–அழகிய சந்தநமும்
செண்பகமும்–செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்–தாமரைப் பூவும்
நல்ல–உத்தமமான
கருப்பூரமும்–பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர–கலந்து பரிமளிக்க
கோலம்–அழகிய
நறு பவளம்–நற் பவளம் போல்
செம்–அழகியதாய்
துவர்–சிவந்திருக்கிற
வாயின் இடை–திருவதரத்தினுள்ளே
கோமளம்–இளையதான
வெள்ளி முளை போல்–வெள்ளி முளை போலே
சில பல்–சில திரு முத்துக்கள்
இலக–விளங்க
நீலம் நிறத்து–நீல நிறத்தை யுடைத்தாய்
அழகு ஆர்–அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே–பஞ்சாயுதத்தின் நடுவே
நின்–உன்னுடைய
கனி–கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்–அம்ருத ஜலமானது
இற்று முறிந்து விழ–இற்றிற்று விழ
ஆடுக-.
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும் பங்கயம் நல்ல கற்பூரமும் நாறிவரக்
பால் நெய் தயிர் முதலானவைகளை
களவிலும் வெளியிலும் பல கால் அமுத செய்த முட நாற்றமும்
உகந்தார் உகந்த படி சாத்தின நிறம் அழகியதான சாந்து செண்பகம் முதலானவையும்
குணுங்கு உடன் கலந்து
பரிமளிதமாய் எங்கும் பரந்து தோற்ற –
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைச் கோமள வெள்ளி முளைப் போல் சில பல்லிலக –
தர்ச நீயமாய்
பரிமளிதமான செம் பவளம் போலே
துவர்ந்த திருப் பவளத்து இடையிலே வெள்ளி அரும்பினால் போலே
நன்றான திரு முத்துக்கள் ஒளி விட –
நீல நிறத் தழகார் ஐம் படையின் நடுவே நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ –
அழகார்ந்த நீல நிறத் திரு மார்பிலே
ஸ்ரீ பஞ்சாயுதத்தின் நடுவே பக்வ பலம் போலே கனிந்த
உன்னுடைய திருப்பவளத்தில் அமிர்தமானது
இற்று இற்று விழ –
ஏலு மறைப் பொருளே யாடுக செங்கீரை ஏழு யுலகம் யுடையாய் யாடுக யாடுகவே —
மறை ஏலும் பொருளே -வேதைஸ் ஸ -விறே
ஏல்-பொருத்தம்
மறைக்கு பொருந்தின பொருள் யாதொன்று
அது இறே
ஏழு வுலக்குக்கும் ஸ்வாமி யாவது –
———————————————————————
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே யாடுக செங்கீரை
ஏழு வுலகு முடையாய் யாடுக வாடுகவே –1-5-10-
பதவுரை
எங்கள் குடிக்கு–எங்கள் வம்சத்துக்கு
அரசே–ராஜாவானவனே!
செம் கமலம்–செந்தாமரைப் பூப் போன்ற
கழலில்–திருவடிகளில்
சிறு இதழ் போல்–(அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
விரலில்–திரு விரல்களில்
சேர் திகழ்–சேர்ந்து விளங்கா நின்ற
ஆழிகளும்–திருவாழி மோதிரங்களும்
கிண் கிணியும்–திருவடி சதங்கைகளும்
அரையில் தங்கிய–அரையில் சாத்தி யிருந்த
பொன் வடமும்–பொன் அரை நாணும்
(பொன்) தாள–பொன்னால் செய்த காம்பையுடைய
நல்–நல்லதான
மாதுளையின் பூவொடு–மாதுளம் பூக் கோவையும்
பொன் மணியும்–(நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும்
மோதிரமும்–திருக்கை மோதிரங்களும்
சிறியும்–(மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும்
மங்கலம்–மங்களாவஹமான
ஐம்படையும்–பஞ்சாயுதமும்-ஐம்படைத் தாலி
தோள் வளையும்–திருத் தோள் வளைகளும்
குழையும்–காதணிகளும்
மகரமும்–மகர குண்டலங்களும்
வாளிகளும்–(திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்–திரு நெற்றிச் சுட்டியும்
ஒத்து–அமைந்து
இலக–விளங்கும்படி
ஆடுக. . . ஆடுக. –.
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் –
சிவந்த தாமரை போலே இருக்கிற திருவடிகளில்
பூவின் உள்ளிதழ் போலே இருக்கிற திருவிரல்களிலே
சஹஜம் என்னும்படி சேர்ந்து ஒளி விடா நின்ற அங்குளீயங்களும்
கிண்கிணியும் அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதளையின் பூவொடு பொன்மணியும் –
திருவரையில் கிண்கிணியும்
தங்கிய பொன் திரு வரை நாணும்
கோவை யிட்ட தாளை யுடைத்தாய்
நன்றான மாதளையின் பூவோடு கோக்கப் பட்ட பொன் மணிகளும்
மோதிரமும்
திரு விரல்களிலே சாத்தின மோதிரமும் –
கிறியும் –
திருக் கையில் சாத்தி
திரு மஞ்சனத்திலும் கழற்ற ஒண்ணாத சிறுப் பவள வடமாதல்
பிறை முகப் பணி யாதல் –
மங்கல வைம் படையும் தோள் வளையும் –
திரு மார்விலே பிள்ளைக்கு ரஷகமாக சாத்தின ஸ்ரீ பஞ்சாயுதமும்
தோள் வளையும் –
குழையும்-
திருக் காதுப் பணிகளும் –
மகரமும் –
திரு மகரக் குழையும் –
வாளிகளும் –
திருச் செவி மடல் மேலே சாத்தின வாளிகளும்
சுட்டியும் –
திருக் குழலில் சாத்தின சுட்டியும் –
ஒத்திலக –
பிள்ளைக்குத் தகுதியாக பிரகாசிக்க
எங்கள் குடிக்கரசே யாடுக செங்கீரை ஏழு வுலகுமுடையாய் யாடுக வாடுகவே –
திரு ஆய்க் குலத்துக்கு அரசான அளவன்றிக்கே
விசேஷித்து எங்கள் குடிக்கு அரசானவனே –
(யது குலத்துக்கு அரசாக பிறந்தாலும் உகந்து வந்து வளர்ந்தது இங்கே தானே )
————————————————————-
நிகமத்தில்
இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்னவலம் களைவாய் யாடுக செங்கீரை
ஏழுலகம் யுடையாய் ஆடுகவாடுக வென்று
அன்ன நடை மடவாள் யசோதை யுகந்த பரிசு
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லாருலகில்
எண்டிசையும் புகழ் மிக்கு இன்பம் எய்துவரே –1-5-11-
பதவுரை
அன்னமும்–ஹம்ஸ ரூபியாயும்
மீன் உருவும்–மத்ஸ்ய ரூபியாயும்
ஆள் அரியும்–நர ஸிம்ஹ ரூபியாயும்
குறளும்–வாமந ரூபியாயும்
ஆமையும்–கூர்ம ரூபியாயும்
ஆனவனே–அவதரித்தவனே!
ஆயர்கள்–இடையர்களுக்கு
நாயகனே–தலைவனானவனே!
என் அவலம்–என் துன்பத்தை
களைவாய்–நீக்கினவனே!
செங்கீரை ஆடுக–செங்கீரை ஆட வேணும்
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவனே!
ஆடுக ஆடுக என்று–பலகாலுமாட வேணும் என்று
அன்னம் நடை–ஹம்ஸ கதியை யுடையனாய்
மடவாள்–நற்குணமுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
உகந்த–உகந்த சொல்லப் பட்ட
பரிசு–ப்ரகாரத்தை
ஆன-பொருந்திய
புகழ்–புகழை யுடையரான
புதுவை பட்டன்–பெரியாழ்வார்
உரைத்த–அருளிச் செய்த
இன் இசை–இனிய இசையை யுடைய
தமிழ் மாலைகள்–தமிழ்த் தொடைகளான
இ பத்து–இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
உலகில்–இந்த லோகத்தில்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலும் (பரந்த)
புகழ்–கீர்த்தியையும்
மிகு இன்பமது–மிக்க இன்பத்தையும்
எய்துவர்–பெறுவார்கள்.
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்ஆமையும் ஆனவனே
அருமறை பயந்து-(அன்னமாய் அரு மறை பயந்து -வேத பிரதானமே நோக்கம் )
மலைகளை மீது கொண்டு-
அங்கோர் ஆளரியாய்
அறியாமைக் குறளாய் (நிலம் மாவலி மூவடி )
கிடந்தது துயிலும் ஆமையும் ஆனவனே –
(ஐந்து அவதாரங்களும் ஆழ்வார்கள் அருளிச் செயல் களைக் கொண்டே வியாக்யானம் )
ஆயர்கள் நாயகனே –
இடையருக்கு ஸ்வாமி யுமானவனே –
என்னவலம் களைவாய் யாடுக செங்கீரை –
இவ் வவதார பரம்பரைகளுக்கு என் வருகிறதோ -என்று இருக்கிற என் கிலேசத்தை
உன்னை நோக்கித் தந்து போக்கினவனே-
ஆடுக செங்கீரை என்று பெரு நிருத்த விசேஷம் –
ஏழுலகம் யுடையாய் ஆடுகவாடுக வென்று
ஏழு என்று சொல்லப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமி யானவனே –
ஆடுக ஆடுக -என்னுதல்
ஆடுக -ஆடுக என்று இளையாமைக்காக -அத்தை அமைக்கவுமாம் –
அன்ன நடை மடவாள் யசோதை யுகந்த பரிசு
அன்னம் போலே நடை அழகையும்
பௌயதையும் யுடைய யசோதை
ஆட வேணும் -என்னா
ஆடக் கண்டு உகந்த பிரகாரத்தை –
(உகந்த -சப்த பிரயோகம் -அவன் ஆடி இருக்க வேண்டுமே )
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும் -வல்லார்
யசோதையிலும் விஞ்சிய புகழை யுடையராய்
புதுவைக்கு ஸ்வாமியான ஆழ்வார் அருளிச் செய்த
இனிய இசையோடு கூடின தமிழ் மாலை இப் பத்தும் வல்லார் –
உலகில் எண்டிசையும் புகழ் மிக்கு இன்பம் எய்துவரே —
இந்த தேகத்தோடு
இந்த லோகத்திலே இருக்கச் செய்தேயும்
எட்டுத் திக்கிலும் அடங்காத புகழை யுடையராய்
உரையா வெந்நோய் -திருவாய் -8-3-11-என்கிற துக்கம் தீர்ந்து
பரம ஸூகிகளாயுமாகப் பெறுவார்கள்
இன்பம் அது எய்துவரே -என்கையாலே –
சூழ்ந்து இருந்து ஏத்துகையும் காட்டும் இறே-
புகழை எய்து அது இன்பம் பெறுவரே என்றபடி –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply