அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -நல்ல
மணவாள மா முனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான் –
தணவா -மிகவும் பொருந்தின
—————————————————————
மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளால் உட்பொருள்கள் தம்முடனே -சொன்ன
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை
ஒருவாது அருந்து நெஞ்சே உற்று-
——————————————————————
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் -திருமாலால் அருளப் பெற்ற சடகோபன் -என்னும்படி
ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருள
இப்படி நிர்ஹேதுக கடாஷ பூதரான ஆழ்வாரும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -என்னும்படி திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை
பண்ணார் பாடலாம் படி பாடி அருளி
அநந்தரம்
தம்முடைய நிரவதிக கிருபையாலே ஸ்ரீ மதுரகவி பிரப்ருதி ச ஜனங்களுக்கு
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்னும்படி உபதேசித்து
அவ்வளவும் அன்றிக்கே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆம்படி செயல் நன்றாகத் திருத்தி பணி கொண்டு அருளி நடத்திப் போந்த
அநந்தரம்
நெடும் காலம் சென்றவாறே
இத் திவ்ய பிரபந்தங்கள் சங்குசிதமாய் போனபடியைத் திரு உள்ளம் பற்றி
இதுக்காவார் ஆர் -என்று பார்த்து ஸ்ரீ மந் நாதமுனிகளை -அருள் பெற்ற நாதமுனி -என்னும்படி
தம்முடைய கடாஷ விசேஷத்தாலே கடாஷித்து அருளி இவருக்கு
திவ்ய ஜ்ஞானத்தையும் யுண்டாக்கி அந்த திவ்ய சஷூர் மூலமாகவே
சரணாகதி புரசரமாக தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களையும் பிரகாசிப்பித்தது அருளினார் –
இப்படி ஆழ்வார் உடைய திவ்ய கடாஷத்துக்கு விஷய பூதரான ஸ்ரீ மன் நாத முனிகளும்
அழித்தலுற்றவன்றிசைகள் ஆக்கினான் -என்னும்படி
இத் தமிழ் மறைகளை இயலிசை யாக்கி நடத்தியும்
அதுக்கு மேலே ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்ரீ உய்யக் கொண்டார் துடக்கமான ஆஸ்திகரைக் குறித்து
பிரபர்த்தி யாரத சஹிதமாக இத்தை பிரகாசிக்க
அவர்களும் அப்படியே அவர் திருப் பேரனார்க்கு ஸ்ரீ மணக்கால் நம்பி முகேன் பிரசாதிப்பிக்க
பின்பு ஸ்ரீ ஆளவந்தார் அவை வளர்த்தோன் -என்னும்படி அவரும் அத்தை வர்த்திப்பிக்க
அவர் கடாஷ லஷ்ய பூதராய்
மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானாரும் -வளர்த்த இதத் தாய் -என்னும்படி வர்த்திப்பித்து கொண்டு போன பின்பு
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண் சாலிகளான
ஸ்ரீ கோவிந்த ஸ்ரீ கூராதி ஸ்ரீ பட்டார்யா ஸ்ரீ நிகமாந்த முனி பர்யந்தமாய்
உபதேச பரம்பரையா சங்குசித வ்யாக்யானமாக நடந்து சென்ற இது
திருமால் சீர்க்கடலை உள் பொதிந்து
இன்பத் திரு வெள்ளம் மூழ்கின
ஸ்ரீ நம் ஆழ்வார் அவதாரமாய் ஸ்ரீ நம்பிள்ளை என்று பேர் பெற்ற ஸ்ரீ லோகாச்சார்யாராலே
லோகம் எங்கும் வெள்ளம் இடும்படி தீர்த்தங்கள் ஆயிரமான திருவாய்மொழி
விசத வியாக்யான ரூபமாக பிரவகிக்க அது
ஆங்கு அவர் பால் -என்று துடங்கி மேலோர் அளவும் விஸ்த்ருதம் ஆயிற்று-
இப்படி தீர்க்க சரணாகதியான திருவாய்மொழி ஸ்ரீமந் நாத யாமுன ஸ்ரீ யதி வராதிகளால் வர்த்திப்பித்துக் கொண்டு போந்தமை பற்ற
திருவருள் மால் -என்றும்
நாதம் பங்கஜ நேத்ரம் -என்றும்
இத் தனியன்களாலே வந்த இந்த சம்ப்ரதாய க்ரமம் தேவாதிபரளவும் தர்சிக்கப் பட்டது
இப்படி பரம்பரையா நடந்து வந்த திருவாய்மொழியின் ஈட்டின் சம்ப்ரதாய க்ரமம் தான்
அதுக்கு தேசிகரான ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் அடியாக இறே
காந்தோ பயந்த்ருயமிக கருணைக சிந்தோ -என்னும் படியான ஸ்ரீ ஜீயர் இடத்திலே
ஸ்ரீ மணவாள மா முனியான வேரி தேங்கி -என்னும்படி தங்கிற்று
அத்தைப் பற்றி இறே
ஆர்யா ஸ்ரீ சைல நாதா ததிக தசட சித் ஸூ கதி பாஷயோ மஹிம் நாயோ கீந்த்ரச் யாவதாரோ சயமிதிஹிகதித்த -என்றும்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருத் தாள் சேர்ந்து அங்கு உரை கொள் தமிழ் மறைக்கும்
மறை வெள்ளத்துக்கும் ஓடமாய் ஆரியர்கள் இட்ட நூலை யுள்ளு உணர்ந்து என்றும்
தமிழ் வேதமாகிய வோத வெள்ளம் கரைகண்ட கோயில் ஸ்ரீ மணவாள மா முனி -என்றும் சொன்னார்கள் –
இப்படி முப்பத்தாறாயிரப் பெருக்கர் ஆகையாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் -என்னும்படி
தம் விஷயமான திருவாய்மொழியின் அர்த்தத்தை இவர் இடத்தில் கேட்க வேணும் என்று
ஸ்ரீ பெருமாள் தாமும் திரு உள்ளமாய் -ஸ்ருத்வாகூடம் சடரி புதிராத்தத்வம் த்வதுக்தம் -என்னும்படி
ஆழம் கால் பட்டு கேட்டு அருளினார் இறே-
அதன் பின்பு ஸ்ரீ பட்ட நாத முனி வான மகாத்ரியோகி துடக்கமான ஆச்சார்யர்கள் ஆகிற கால்களாலே புறப்பட்டுக்
காடும் கரம்பும் எங்கும் ஏறி பாய்ந்து பலித்தது
இப்படி ஈசேசிதவ்ய விபாகமற
ஸ்வ ஸூ கத்தியாலே வசீகரிக்க வல்ல வைபவமானது –
ஸ்ரீ மணவாள மா முனி தோன்றிய பின் அல்லவோ தமிழ் வேதம் துலங்கியது -என்றும்
ஸ்ரீ மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே -என்றும்
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் சொல்லப் பட்டது –
இவர் தாமும் -எந்தை ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கம் -என்றும்
அத்தாலே ஸ்ரீ மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்றும்
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதாசனம் -என்றும்–தாமும் அருளிச் செய்தார் –
ஏவம் வித மாஹாத்ம்யம் இவர் தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாகவும்
திருவாய்மொழி யினுடைய துர்க்ரஹமான அர்த்தங்களை எல்லாம் எல்லாரும் அறியும்படி
ஸூ கரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும் -சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான் -என்னும்படி சங்கதியாக
இப் பிரபந்தத்திலே அருளிச் செய்கிறார்
ஈட்டில் சங்கதியே யாயிற்று இவர் தாம் இப்படி சங்க்ரஹித்து அருளிச் செய்கிறது –
இப் பிரபந்தங்களுக்கு அநேக நிர்பந்தங்கள் உண்டாய் இறே இருப்பது -அது எங்கனே என்னில் –
1-வெண்பா -என்கிற சந்தஸ் -ஆகையும்
2-இப்படியான இப் பாட்டில் முற்பகுதியில் ஓரோர் திருவாய்மொழியின் தாத்பரியமும் தத் சங்கதிகள் அடைகையும்
3-பாட்டுக்கள் தோறும் ஆழ்வார் திருநாமங்கள் வருகையும்
4-அதில் தாத்பர்யங்களை தத் பர்யந்தமாக பேசுகையும்
5-அந்தாதியாய் நடக்குகையும் ஆகிற
இவ் வைந்து நிர்பந்தம் உண்டாய் இருக்குமாயிற்று-
இது தான் பாலோடு அமுதம் அன்ன ஆயிரமான திருவாய் மொழியின் சாரம் ஆகையாலே
திருவாய் மொழி நூற்றந்தாதி யாம் தேனை -என்னும்படி
சரசமான நிரூபகமாய்
ஆயிரத்தின் சங்க்ரஹம் ஆகையாலே ஓரோர் திருவாய் மொழியின் அர்த்தத்தை
ஓரோர் பாட்டாலே அருளிச் செய்கையாலே நூறு பாட்டாய்
அல்லும் பகலும் அனுபவிப்பார்க்கு நிரதிசய போக்யமாய்
அவ்வளவும் அன்றிக்கே
ஸ்ரீ உடையவர் நூற்றந்தாதியோபாதி ஸ்ரீ ஆழ்வார் நூற்றந்தாதியும் உத்தேச்யம் ஆகையாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே பிரேமம் யுடையார்க்கு அனவரத அனுசந்தேயமுமாய் இருப்பதும் ஆயிற்று –
இதில் சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளை இறே பிராப்ய பிராபகங்களாக நிஷ்கரிஷிக்கிறது –
அது தான் பராங்குச பாத பக்தராய் –
சடகோபர் தே மலர் தாட்கேய்ந்து இனிய பாதுகமாம் எந்தை ராமானுசன் அளவும் வந்து இருக்கும் இறே
ஸ்ரீ ஆழ்வார் தாம்
ஸ்ரீ திவ்ய மகிஷிகள் யுடையவும்
ஸ்ரீ திவ்ய ஸூரிகள் யுடையவும்
ஸ்ரீ முக்தருடையவும்
ஸ்ரீ முமுஷூக்கள் யுடையவும்–படிகளை யுடையவராய் இருக்கையாலே
ஸ்ரீ உடையவரும் இவர் விஷயத்திலே யாயிற்று ஈடு பட்டு இருப்பது-
——————————————————
அவதாரிகை –
இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-
—————————————————–
உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1
——————————————————-
வியாக்யானம் –
உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது
ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது
உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –
உயர்வே -என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைப் போலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இறே
அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
ஏ -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-
உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிறவிக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்-
ஆனந்த மய
ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்
பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
நேஹானா நாஸ்தி கிஞ்சன –
ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும்
சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்
நாமவன் –
அவரிவர் –
என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்
தேன வினாத்ருணா க்ரமபி நசலதி –
யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா –
என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்
திட விசும்பு -என்ற பாட்டாலே காட்டியும்
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் –
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து
திர மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை
பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது
அத்தை பற்றி இறே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இ றே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –
மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூக்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –
மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி யடியாக
ஆ பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
திவ்ய ஸூக்தி மூலமாக இறே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே
ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –
—————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply